Monday, February 26, 2007

சென்சஸ் எடுக்கப் போறாங்க.. 4

(பயில்வான் தலையிலடித்துக்கொண்டு தன் மகளைப் பார்க்கிறார். அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு தன் தந்தையைப் பார்த்து கண்ணடிக்கிறார். திரும்பி செந்திலிடம்) இருங்க.. வாரன்.. (வீட்டிற்குள் சென்று அடுத்த சில நொடிகளில் ஒரு பழைய உள்ளூர் பஸ் டிக்கட்டைக் கொண்டு வந்து காட்டுகிறார்) இந்தாங்க.. நீங்க கேட்ட டிக்கெட்டு..

(செந்தில் அதை வாங்கி சோதித்துவிட்டு திருப்தியுடன் கவுண்டரிடம் கொடுக்கிறார்.)

கவு: டேய்.. இது பழைய பல்லவன் பஸ் டிக்கெட்டுடா.. இங்க பார் பாரீஸ் கார்னர்னு போட்டுருக்கு..

செந்: சரி விடுங்கண்ணே.. ஒருவேளை பாரீசுக்கு பக்கத்துலதான் போயிருக்கோ என்னமோ.. ஊருக்கு போயிருக்குன்னு இவங்க சொல்றது சரியாத்தான் இருக்கும்.. என்ன மேடம்? (சற்று நெருக்கமாக செல்ல பயில்வான் தன் பெரீஈஈய கைகளால் செந்திலைப் பிடித்து பின்னுக்கு தள்ளுகிறார்)

செந்: (சமாளித்துக்கொண்டு) சரி.. டிக் பண்ணிருவோம்.. அடுத்தது மாணிக்கம். வயசு 90!

கோவை2: தாத்தா இப்ப உசிரோட இல்லை.. (கண் கலங்குகிறார். பயில்வான் மகளை பாசத்துடன் அணைத்துக்கொள்கிறார்)

செந்: ( கோவை2வை அணைத்துக்கொண்டிருக்கும் பயில்வானின் கரங்களைப் பார்த்தவாறு பெருமூச்சுடன்) நீங்க குடுத்து வச்சவர் சார்..

பயில்: (கோபத்துடன் பற்களைக் கடிக்கிறார்) டேய்.. நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கி உயிரோட போறதில்லேங்கற முடிவோடத்தான் வந்துருக்கீங்க போலருக்கு.. எம் பொண்ணுக்கு எங்கப்பான்னா உயிர்டா.. அவர் உசிரோட இல்லேங்கறா.. நா குடுத்து வச்சவனா?

கவு: அதானே.. ஏண்டா சார் எவ்வளவு ஃபீலிங்கோட சொல்றார்.. நீ பாட்டுக்கு குடுத்து வச்சவர்ங்கறே..

செந்: (கவுண்டரை நெருங்கி ரகசியக் குரலில்) ஐயோ.. அண்ணே நீங்க வேற போட்டு குடுக்காதீங்க.. அவர் அந்த ஃபிகர கட்டிப்புடிச்சத பார்த்துட்டு சொல்லிட்டேண்ணே.. (முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பயில்வானிடம்) மன்னிச்சிருங்க சார்.. அப்போ தாத்தா இல்லை? பேர அடிச்சிரட்டுங்களா..பேனாவால் மாணிக்கம் என்ற பெயரை அடிப்பதற்கு பதில் மாணிக்கம்மாள் என்ற பெயரை அடித்துவிடுகிறார்.

கோவை2 (அதைப் பார்த்து பதறி..)ஐயையோ.. அது பாட்டி பேருங்க.. அத ஏன் வெட்றீங்க.. (மாணிக்கம் பெயரை சுட்டிக்காட்டி) இதான் தாத்தா பேரு.. (மீண்டும் கண்கலங்க பயில்வான் பொறுக்க முடியாமல் செந்திலை நோக்கி கையை ஓங்கியவாறு நெருங்குகிறார்)

செந்: (வீம்புடன்) யோவ்.. என்ன ரொம்பத்தான் துள்றே.. கைய வச்சிருவியா.. எங்க வைய்யா பாப்போம்.. நா ஒரு கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்.. ஞாபகம் வச்சிக்க.. ஏதோ பேர் கொளப்பம்.. ரெண்டு பேருக்கு ஒரே பேர் வச்சா கொளம்பத்தான்யா செய்யும்.. அதுக்கு பேர் வைக்கறப்பவே யோசிச்சிருக்கணும்.. என்னடா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே பேர் வைக்கறமேன்னு.. அப்போ கோட்டை விட்டுப்போட்டு.. இப்ப துள்ளுன்னா என்னய்யா அர்த்தம்.. (கவுண்டரைப் பார்க்கிறார்) என்னண்ணே பாத்துக்கிட்டு நிக்கறீங்க? சொல்லுங்கண்ணே.. நா கேட்டதுல தப்புருக்கா..

கவு: (தலையில் அடித்துக்கொண்டு தனக்குள்) இவன் நம்ம முதுகுல டின் கட்டாம விடமாட்டான் போலருக்கே.. (செந்திலிடம்) டேய் என்னடா சொல்றே.. ஒங்கப்பனுக்கு நீயா பேர வச்சே.. இங்க பாத்தது போறும்.. வாடா போலாம்.. (திரும்புகிறார்)

செந்: (லிஸ்ட்டைப் பார்க்கிறார்) இருங்கண்ணே.. இன்னொரு ஐட்டம் இருக்கே இந்த அட்றஸ்லே..

கவு: ஐட்டமா.. என்னடா சொல்றே (ஓரக்கண்ணால் பயில்வானைப் பார்க்கிறார்) அது ஒரு ஆளோட பேர்டா..

செந்: (அலட்சியத்துடன்) சரி ஏதோ ஒன்னு.. (கோவை2வை மீண்டும் நெருங்கி) மேடம்.. இது யாருன்னு சொல்லலையே.. (அதிலிருந்த சிங்காரம்மாள் என்ற பெயரை தவறாக சிங்காரியா ஒய்யாரியா என்று கிண்டலுடன் படிக்க பயில்வான் கோபத்துடன் வீட்டிற்குள் செல்கிறார்.. செந்தில் கோவை2வை நெருங்கி) என்ன மேடம்.. அவங்கள கூட்டிக்கிட்டு வரப் போயிருக்காரா?

(பயில்வான் கையில் நீண்ட துப்பாக்கியுடன் வருவதைப் பார்த்துவிட்டு கோவை2)ஐயோ அது எங்கம்மா பேருங்க.. அவங்க பேரப் போயி.. ஓடிருங்க.. எங்கப்ப துப்பாக்கிய எடுத்துட்டா அதுலருந்து புகை வராம வைக்கமாட்டார்..

(அதுவரை நடப்பதை கண்டுக்கொள்ளாமல் படுத்துக்கிடந்த நாயார் எழுந்து செந்திலை நோக்கி உறும செந்தில் கவுண்டரை தள்ளிக்கொண்டு படிகளில் தாவி இறங்க கீழே முகங்குப்புற விழப்போன கவுண்டர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார். துப்பாக்கியுடன் வந்த பயில்வான் சாலையில் தலை தெறிக்க ஓடும் இருவரையும் நோக்கி குறிவைக்க கோவை2 அதைப் பிடித்து இழுக்க ஒரு கூட்டமே நின்று வேடிக்கை பார்க்கிறது.)

நிறைவு..

9 comments:

dubukudisciple said...

hi joseph!!
super comedy... innum konjam ezhuthi irukalamonu thonuthu!!
en ivalavu seekiram mudichiteenga???
viraivil inonru podavum

Anonymous said...

super'aa irukku....

Anonymous said...

:)

இராம்/Raam said...

ஜோசப் சார் இந்த பதிவு நல்லா இருத்துச்சு..... :)

Anonymous said...

:-))))))))))))))

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க டுபுக்கு,

en ivalavu seekiram mudichiteenga???//

அப்புறம் என்ன சார் முடிக்க மாட்டேங்கறீங்கன்னு கேப்பீங்களோன்னு பயந்துதான் short & sweeta முடிச்சிட்டேன் :)

டிபிஆர்.ஜோசப் said...

ஒரு ஸ்மைலை போட்ட அனானிக்கும் நீளமா ஸ்மிலி போட்ட அனானிக்கும் நன்றி:)))

டிபிஆர்.ஜோசப் said...

அப்படியே உண்மைக்கும் நன்றி:)

டிபிஆர்.ஜோசப் said...

இராமுக்கும் நன்றி..