Tuesday, July 31, 2007

கவுண்டர்'ஸ் Devil Show - கப்பி பய

"அண்ணே!! அண்ணே!! நீங்க ரொம்ப நாளா டெவில் ஷோ நடத்தாமே இந்த சங்கத்துக்காரய்ங்கே ஓவரா ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கானுக! எவனையாவது கூப்பிட்டு ஆப்பு வையிங்க! அப்போதான் சும்மா இருப்பானுக!" ன்னு கோமுட்டி தலையன் கவுண்டர்கிட்டே சொன்னதும் படு சீரியசாக யோசிச்சிட்டு இருந்த கவுண்டர் டக்'குன்னு திரும்பி மேட்டுக்குடி காளிங்கன் ஸ்டைலில் லவ் லுக்கை ஒன்றை காட்டுக்கிறார்.

கோமுட்டி தலையன்:- "அண்ணே? ஏனிந்த கொலைவெறி? எதுக்கு இப்பிடியொரு லுக்?"

கவுண்டர்:- "ஏண்டா, அரைமண்டையா? சங்கத்துக்காராய்ங்கே'கிட்டேயிருந்து ஒனக்கு வரவேண்டியது வரலயா? நீயா கூப்பிட்டு அவியங்களுக்கு டெவில்ஷோ நடத்த சொல்லுறே? நான் இப்போ அடுத்த படத்திலே நமிதா'வே லவ் பண்ணுறமாதிரி சிட்டிவேசனுக்கு யோசிச்சுட்டு இருந்தேன், தேங்காமண்டயா என்னோட மூடு'ஐ கெடுத்துட்டியே?"

கோ:- "அண்ணே! ஒங்க ரொமண்டிக் மூடுக்கு சரியான ஆளு சங்கத்திலே ஒருத்தன் இருக்காண்ணே, அவனை கூப்பிட்டு டெவில் ஷோ நடத்துங்க! அவனுக்கு ஸ்பானிஷ் பேசுற பொண்ணுக பூராவும் சேர்ந்து ரசிகையர் மன்றம் வைச்சிருக்காங்க! "

கவுண்டர்:- "யாருடா? அந்த அரைமண்டயன்?"

கோ:- "ஹைய்யோ, அவரு அரைமண்டயன் இல்லண்ணே! நம்ம அழகுபுயல் கப்பிநிலவர்."

கவுண்டர்:- "ஓ அந்த அழகு மண்டயனே கூப்பிடுறா! இந்த டெவில் ஷோ நடத்தி ரொம்ப நாளாச்சு..."

கூகுள் சேட்'ல் 50 சேட் விண்டோக்களுக்கும், யாகூ'வில் 100 சேட் விண்டோக்களையும், ஓர்குட்' ல் 100 ஸ்கிரப்பிங் ரிப்ளை செய்து கொண்டிருந்த கப்பிபய வேகமாக சங்கத்து கட்டிடத்துக்குள் ஓடி வருகிறார்.

கோ:- "பூவையர் மனங்கவர் கள்வன், உருகுவே இளவரசன்,ஸ்பானிஷ் அரசன், சங்கத்தின் லிட்டில் சூப்பர் ஸ்டார் கப்பி நிலவர் வருகிறார்.... வருகிறார்."

கவுண்டர்:- "அடேய், கோமுட்டி, இப்போதானாடா அவனைப் பத்தி என்னோமோ சொல்லிட்டு இருந்தே? அதுக்குள்ளே பாராட்ட ஆரம்பிச்சிட்டே?"

கோ:- "அண்ணே, அவரு என்னோட அக்கவுண்ட்'க்கு மணி டிரான்ஸ்பர் பண்ணிட்டார், அப்புறமென்னா கூவ வேண்டியதுதானே?"

கவுண்டர்:- "ஹிம், அரைமூடி தேங்கா கிடைச்சாலே நீ எம்புட்டு பேசுவே? ஒனக்கு பணம் வேற அனுப்புறானுக அந்த நான்சென்ஸ் பிலோ? எங்கடா அந்த ஆப்பாயில் மண்டயனை?"

கப்பி:- "கவுண்டர் சார், நாந்தான் கப்பி பய... வந்துட்டேன்.."

கவுண்டர்:- "வாடா, வா... எதுக்குடா மண்டயா, கப்பிபய'னு பேரு வைச்சிக்கிட்டே? நீ எதுவும் கொத்தனார் வேலை எதுவும் பார்த்தியா?"

கப்பி:- "அய்யோ... இல்லிங்க சார், நானு கொஞ்சம் அட்வான்ஸாடு பெர்சன், இப்போ எதிர்காலத்திலே நான் ஒரு காப்பி கடை வைச்சா இந்த பேரு சூட் ஆகனும், நீங்க சொன்னமாதிரி படிச்ச ஆஞ்சுனேயர் வேலைக்கு வீடு கட்டி தர போனாலும் இதை சம்பந்தப்படுத்தி இருக்கனுமின்னு தான் அப்பிடி 'கப்பி'ன்னு வைச்சேன்... அதாவது என்னோட பேரு வரலாறு'லே வரனுமின்னு தலைகனத்திலே செய்யலை! இப்பிடியெல்லாம் நாமே இருந்தா அது வரலாற்று பொன் ஏட்டுக்களிலே வந்தே தீரும்கிறது காலத்தின் கட்டாயம்."

கவுண்டர்:- "அட அரை டவுசர் மண்டயா? பேருக்கு காரணம் சொல்லுடா'ன்னா கஜினி படத்திலே வர்ற வசனத்தையே சொல்லிட்டு இருக்கே? மவனே அப்புறம் அவனை மாதிரி இரும்பு ராடு'லே அடி வாங்கி உண்மையிலே அரைகிறுக்கனா போயிறாதே? கப்பி'ன்ன குருட்டு அழுக்குன்னு அர்த்தமிடா அட்லாஸ் மண்டயா! அது ஏண்டா ஒன்னோட புரோப்பலிலே குதிரை குனிஞ்சிட்டு நிக்கிது?"



கப்பி:- "ஆமாங்க ஆபிஸர்.. நான் குதுரையிலே பிகர்வலம் போனப்போ எல்லாரும் அந்த குதுரையேதான் பார்க்கிறாய்ங்கே! என்னை பார்க்கமாட்டேக்கிறாய்ங்கே? அதுதான் நான் குதுரையிலே ஒடகார்ந்து இருக்கிறபோ அதை தலையே குனிஞ்சிக்கிற சொல்லிட்டேன்..."

கவுண்டர்:- "அட ஆட்டுக்கல மண்டயா! சரித்திர சாதனையை சொன்னமாதிரி சொல்லுறே? ஏண்டா ஒரு இடத்துக்கு வாடா'ன்னு சொன்னா வரமாட்டியா நீயி? மறுநாள் நீ ஏன் வரலைன்னு ஒரு லீவுலெட்டர் வேற கொடுக்கிறே? இன்னும் அரைடவுசர் மாட்டிக்கிட்டு ஸ்கூல் போறே பச்சப்புள்ளயா நீ?"

கப்பி:- "ஆபிசர் சார்... நான் எப்பவும் பச்சப்புள்ளதான், நாமே ஒரு இடத்திலே இல்லாட்டியும் அந்த வேலை நடந்துரும், ஆனா நாமே ஏன் இல்லாமே போனோமின்னு காரணக்காரியத்தை சொல்லி ஒரு மொக்கை போடனும்மின்னு எங்க தல' கைப்புள்ள'தான் சொல்லிருக்காரு, அவரு சொல்பேச்சை நான் எப்பிடி மீறமுடியும் சொல்லுங்க?"

கவுண்டர்:- "கீ போர்ட் மண்டயா, ஒனக்கில்லாமே ஒங்க தல'க்கிற அந்த அரைடவுசர் மண்டயனுக்கும் இருக்குடா சீக்கிரமே? ஏனுங்க வெள்ளக்கார தொர வெறும் இங்கிலிஸ் படங்க மட்டுந்தான் பார்ப்பீங்களா? அதுலே வர்ற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமாடா புரொஜக்டர் மண்டயா?"

கப்பி:- "ஸ்டாப் த நான்ஸென்ஸ் கொஸ்டின்ஸ்... அது தெரியாமே எப்பிடி நான் விமர்சனம் எழுதமுடியும்? அந்த படம் போடுற தீயேட்டரிலே போயி அந்த படத்தோட பேரு என்னான்னு தமிழிலே போட்டுருப்பாங்க, அதை மொதல்ல நோட் பண்ணிக்குவேன், அப்புறம் நாலஞ்சு பேரு சேர்ந்ததும் உள்ளே போயி ஒட்கார்ந்துட்டு படத்தை பார்ப்பேன், பக்கத்திலே ஒட்கார்ந்துருவங்க சிரிச்சா நானும் சிரிப்பேன், அவங்க கைத்தட்டினா நானும் தட்டுவேன், எப்பிடியாவது அவங்க பக்கத்திலே இருக்கிறவன்கிட்டே கதையோ, இல்ல வசனத்தையோ பத்தி பேசுவாங்க! அதை அப்பிடியே நோட் பண்ணிக்கிட்டு வந்துருவேன்... எப்பிடி என்னோட தெறமை?"

கவுண்டர்:- "ஒன்னயெல்லாம் தூக்கிப் போட்டு பந்தாடுனா'ன்னு என்னாகும், பாப்கார்ன் பாக்கெட் தலையா! அப்போ நீ வசனமெல்லாம் வெளங்கமாட்டாமேதான் இங்கிலிஸ் படமெல்லாம் பார்த்தியா?"

கப்பி:- "ஆபிசர் சார் இங்கிலிசு படம் மட்டும் இல்ல, ஸ்பெனிஸ் படமெல்லாம் பார்த்துருக்கேன், அதை பத்தி விமர்சனமெல்லாம் எழுதி என்னோட எழுத்துதிறனை இங்கே நிருபிச்சு இருக்கேன்."

கவுண்டர்:- "என்னாலே ஒன்னும் முடியலை'டா! இது வரைக்கும் கோமுட்டி தலையன் மட்டுந்தான் இந்த கிரகத்திலே விசித்திரபிராணி'ன்னு நினைச்சேன், இப்போ நீயும் அந்த லிஸ்ட்'லே சேர்ந்துட்டே?"

கப்பி:- "என்னா ஆபிசர் இதுக்கெல்லாம் இப்பிடி அசந்து போறீங்க.. போனவருசமே துள்ளல்'ன்னுகிற காவியதிரைப்படம் எப்போ ரிலிஸாகமின்னு பதிவு போட்டு அந்த படத்தோட புரொடிஸர்'க்கு போன் மேலே போனை போட்டு போன மாசம் ரிலிஸ் பண்ண வைச்சிடோமில்ல.. அப்போ பார்த்துகோங்க, என்னோட தணியாத கலை தாகத்தே"

கவுண்டர்:- "நீ தானா அந்த கொடும்பாதகன், அந்த படம் ரிலிஸ் ஆனப்போ எவனுக்கோ கொடும்பாவி எரிச்சாங்களே அந்த பாவி நீதானா? ஒன்னெயல்லாம் ஏண்டா நாடு கடத்தமாட்டேன்கிறாங்க இந்த சமுதாயம்"

கப்பி:- "ஆபிசர் இவ்வளோ காலமும் நாங்க வெளிநாட்டிலே தான் இருந்தோம், அங்க கிடைச்ச வாழ்க்கை இங்க கொஞ்சம் கூட கிடைக்கலன்னு ரொம்ப வருத்ததிலே இருக்கேன்."

கவுண்டர்:- "என்ன வருத்தத்திலே இருக்கியா? அப்பிடியே பக்கத்திலே வந்து ஏறி மிதிச்சிருவேண்டா கோழிகாலு மண்டயா! ஒன்னோட ரசிகையர் மன்றத்துக்கு இங்க கிளைகள் இல்லியா? இருந்துச்சுன்னா போயி ஒரு கிளையை பிடிச்சி கொள்ளிவாய் பிசாசு மாதிரி தொங்குடா"

கப்பி:- "ஹி ஹி... இப்பிடியெல்லாம் என்னை சொல்லி இன்சல்ட் பண்ணக்கூடாது, அப்புறம் நீங்க வெளிநாட்டிலே இருக்கிற நீதிமன்றத்திலே வழக்குக்களை சந்திக்க வேண்டியதா வரும்?"

கவுண்டர்:- "வழக்கா? எங்கவீட்டிலே இருக்கிற ஒலக்கையிலெ ரெண்டு அடி போட்டுறுவேண்டா ஆம்லெட் மண்டயா? இந்தமாதிரி விதண்டவாதம் பேசுறனுவனுக எல்லாத்தையும் நான் தூக்கி போட்டு மிதிக்கிறதுதான் என்னோட பழக்கமான வழக்கம்..."

கப்பி:- "அய்யோ வேணாங்க ஆபிசர், என்னோட பவர் ஒங்களுக்கு தெரியட்டுமின்னு தான் அப்பிடி சொன்னேன். ஒங்க பவர் என்னான்னு எனக்கு கோமுட்டியே பார்த்ததிலே தெரிஞ்சுக்கிட்டேன், என்னை விட்டுருங்க நான் அப்பாவி"

கவுண்டர்:- "அடேய் கொலைக்கார பாவி, நீயும் இந்த தலைக்காணி உறையே முழங்கால் வரைக்கும் போட்டுக்கிட்டு திரியுற எழுத்தாள கோஷ்டியா? கதையெல்லாம் எழுதுறீயே? என்னாடா காரணம்?"

கப்பி:- "ஹிம் அந்த கோஷ்டியிலேயும் இருக்கலாம், இல்லான்னா இல்லாமேயும் இருக்கலாம், அந்த கோஷ்டியிலே நான் இல்லாதுனாலே நான் எழுத்தாளன் இல்லைன்னு இல்லை, நான் அந்த கோஷ்டியிலே இருக்கிறதுனாலே அங்க இருக்கிற மத்தவங்க எல்லாம் எழுத்தாளருக இல்லைன்னு இல்லை. ஆனா நாங்க எல்லாம் எழுத்தாளர்'ன்னு தான் ஊருக்குள்ளே எல்லாரும் சொல்லுறாங்க, அவங்கெல்லாம் சொன்னதுனாலேதான் நாங்க எழுத்தாளர் இல்லை. ஆனா அவங்கெல்லாம் அதை சொல்லட்டியும் நாங்க எழுத்தாளர்தான்! நீங்க இதைப் பத்தி என்ன சொல்லுறீங்க?"

கவுண்டர்:- "ஹிம் என்ன சொல்லவா? ஒன்கிட்டே இவ்வளோ நேரம் பேசினதே தப்பு'டா லாப்டாப் மண்டயா? சரி பிர்த்டே பேபி பொழைச்சிட்டு போ'ன்னு விட்டா விசு டயலாக்'ஐ என்க்கிட்டே பேசி காட்டுறீயா?"

கப்பி:- "ஆபிசர் சார், நீங்க கூப்பிடதுக்காக தான் என்னோட 25 மொபலையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு வந்தேன், இல்லன்னா இந்நேரம் இந்த ஒலகத்திலே இருக்கிற என்னோட மன்றத்து உறுப்பினர்களுக்கிட்டே இருந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை வாங்கிட்டு இருந்துருப்பேன்."

கவுண்டர்:- "பொண்ணுக கூட கடலை போடுறதுக்கு 25 மொபைல்'டா! விளங்கிருமடா இந்த ஒலகம்.. ஒனக்கு இருக்குடா இன்னிக்கு பிர்த்-டே பம்ப்ஸ்... ஓடாதா அரைடவுசர், நில், இல்ல டிக்கிலோனா'க்கு கோமுட்டி வாங்கினமாதிரியே நீயும் வாங்கிருவே"ன்னு கப்பியை விரட்டுகிறார் கவுண்டர்.

Saturday, July 28, 2007

விண்வெளியே 'அதிருதில்ல' பதிவர் சந்திப்பில்

அட்[த்]லாண்டிஸில் பாசக்காரகுடும்பம்--பாகம்-1

முன் கதை:

அட்[த்]லாண்டிஸ் மேலே மேலே போய்க் கொண்டிருந்தது.

'ஆடி வா...பாடி வா...ஆனந்தம் காணலாம் வா..'என பாட்டுச் சத்தம் கேட்க

ஓடம் அந்தத் திசையில் போகப் பார்த்தால்,

தேவலோகத்தில் இந்திரன் ரம்பா ,ஊர்வசியோடு குஜாலாக ஆடிக் கொண்டிருந்தார்.

சரி இங்கேயே இறங்கி சந்திப்பை நடத்துவோம் என முடிவு செய்ய ஓடம் ஒருவழியாக
தேவலோகத்தில் லேண்ட் ஆனது.[தொடரும்]

அட்[த்]லாண்டிஸில் பாசக்கார குடும்பம்-பாகம்--2

இனி:

தேவலோகத்தில் இறங்க ஒவ்வொருவரா வெளியே வந்தார்கள்.புவி ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் காரணத்தால் ஒவ்வொருவரும் லேசாக மிதந்தபடியே [பறந்தபடியே] வர
'கன பாடிகளான' அபி அப்பா ,ஷென்ஷி க்கு மட்டும் சோதனை.

பூமியில நடக்கும் போதே லேசா காத்தடிச்சா பறக்கற பார்ட்டிங்க.இங்க அவிங்களால எறங்கவே முடியலை.
எல்லோரும் பறந்தபடியே இறங்கிட்டாங்க இந்த ரெண்டு பேரைத் தவிர.

குசும்பன்,'பேசாமா இங்கனேயே இருந்து ஏதாச்சும் சமைச்சு வைங்க நாங்க ரம்பா ஊர்வசியெல்லாம் பாத்துட்டு வர்ரோம்'

'அப்பக்கூட உப்பில்லாத உப்புமாதான் கிண்டுவோம்' என ஷென்ஷி முறைக்க

'முடியாது நாங்க இல்லாம நீங்க மட்டும் ரம்பா,ஊர்வசி பாக்க போகக்கூடாது' என அபிஅப்பா அழ

மின்னலுக்கு ஒரு ஐடியா.அபிஅப்பாவையும் ஷென்ஷியையும் சேத்து ஒன்னாக் கட்டிவிட்டுட்டு

'அபி அப்பா ஆக்ஸிடெண்ட் ஆன லாரிய இன்னொரு லாரி இழுக்கற மாதிரி ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் இழுத்துக்கிட்டு வாங்க' என

ஒரு வழியா ஓகே ஆகி ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிறவி மாதிரி வந்தனர்.

மை பிரண்ட்,'ஆம ரம்பா,ஊர்வசி ன்னு சொல்றீங்களே ஏதாச்சும் ஷூட்டிங்கா அப்ப என் சித்தூ வருமா'என

'சித்தும் வராது பத்தும் வராது வாயைப் பொத்து.இவங்க தேவலோக டேன்சர்ஸ்.
நம்ப கோலிவுட் ஊர்வசியும் ரம்பாவும் இப்பவே முக்கா கிழம்
அதுகளை அக்கா ரோலுக்குக் கூட கூப்பிடுவது இல்லை
இங்க கூட்டீயார்ராங்களா' என இம்சை அரசி முறைத்தது.

'என்ன கோபி வாயே திறக்கலை'--காயத்ரி.

' கிடேசன் பார்க் போகாமயே இப்படி காத்துல மெதக்கிற மாதிரி இருக்கே பேசாம எங்க ஆபிஸ இங்கயே வச்சிருந்தா என்ன?--கோபி

அதற்குள் ஒரு காவலாளி வந்து அனைவரையும் உள்ளே அழைத்துப் போக
டான்ஸ் ஆடி முடிச்ச களைப்பில் ரம்பையும் ஊர்வசியும் வியர்வையைத் துடைத்தபடியே அமர்ந்திருக்க

மின்னல் ஓடிப் போய் 'மே ஐ ஹெல்ப் யூ '

குட்டி பிசாசு மின்னல் காலை மிதித்து,'இங்கல்லாம் துபாயை விட மோசமான தண்டனையாம் வேணுமா'

'யார் நீங்கல்லாம்?இங்கு ஏன் வந்தீர்கள்? கேட்ட தேவேந்திரன் வடிவேலு மாதிரி இருந்தார்.

'நாங்கல்லாம் பாசக்கார குடும்பம் ஒரு மீட்டிங் போட இங்கிட்டு வந்திருக்கோம்'

'யார்கிட்ட பர்மிஷன் வாங்கினீங்க.நாடுவிட்டு நாடு போனாவே பாஸ்போர்ட் விசா வேணும்.
நீங்க கிரகம் விட்டு கிரகம் வந்திருக்கீங்க.'

'ச்சும்மா மீட்டிங் போட்டுட்டு போயிடுவோம்.கண்மணி டீச்சர்தான் ஆர்கனைசர்.இதோ இவிங்கதான்'

'தமிழ்ல எனக்குப் புடிக்காத ஒரே வார்த்தை 'டீச்சர்' தான்.
டீச்சருங்க தொல்லைக்குப் பயந்துதான் நான் படிக்காம எப்படியே தேவலோகத்துல கட்சி ஆரம்பிச்சு தலைவனாயிட்டேன்'

'இங்கெல்லாம் கட்சி இருக்கா .புதுசா ஆரம்பிச்சா ஜெயிக்க முடியுமா'

'நானே இந்த ரம்பா ஊர்வசிய கொ.ப.செ ஆக்கித்தான் மீட்டிங் போட்டு பேசி ஜெயிச்சேன்'

கோபி உடனே,'அபிஅப்பா நாமும் ஒரு கட்சி தொடங்குவோம்.நீங்க தலைவர் நான் பொதுச் செயலாளர்.மின்னல் பொருளாளர்.குட்டிக்கும்,குசும்பனுக்கும் வாரியம் குடுத்துடுவோம்.

'அப்ப நாங்க'என காயத்ரி அலைய
'அய்யனார் ஆண்கள் இலக்கிய அணிக்கும் காயத்ரி பெண்கள் இலக்கிய அணிக்கும் தலைவர்கள்'

'ஏன் கட்சி இருக்கனுமா வேனாமா?இவிங்க கவுஜயக் கேட்டே எல்லாம் எதிர் கட்சிக்குத் தாவிடுவாங்க 'என சென்ஷி பயம்காட்ட

'மை பிரண்ட் தான் மகளிர் அணி செயலாளர் இம்சையரசி துணைச் செயலாளர்'

'அப்ப கண்மணியக்கா?'என குட்டி பிசாசு கேக்க

'அவங்க லொல்லு தாங்கலைன்னு தானே புதுக்கட்சி இப்படி கேள்வி கேட்டா
உன்னைய பொறுப்புலேர்ந்து தூக்கிடுவோம்'....குசுகுசுப்பாக --- குசும்பன்.

இதற்குள் எப்படியோ பூலோகத்தில் இருக்கும் சிபிக்கு விஷயம் லீக்காகி ,
வாழ்த்துக்கள் னு மெசேஜ் அனுப்ப,

முத்துலட்சுமி,'இவரு என்னா தமிழ் மணத்துலதான் பதிவு போட்ட செகண்டே சுடச்சுட பின்னூட்டம் போட்றாருன்னா விண்வெளி சந்திப்பிலுமா' என வியக்க

'ஹலோ நாங்க இங்கன இருக்கமில்ல.என்ன சின்னப் புள்ளத்தனமாயிருக்கு.நீங்க பாட்டுக்குப் பேசுறீங்க டரியலாயிடுவீங்க 'என தேவேந்திரன் முறைத்தார்.

'இதெல்லாம் பேசி என்னை திசை திருப்பாதீங்க.அது சரி நீங்கெல்லாம் யாரு?முதல்ல உங்களைப் பத்திச் சொல்லுங்க'

குட்டி பிசாசு,'அதுக்குத்தான் டீச்சர்கிட்ட அப்பவே சொன்னேன் எங்க CV யெல்லாம் ரெடி பண்ணி ஃபார்வேர்டு பண்ணிடுங்கன்னு'

மை பிரண்ட்,'நோ பிராப்ளம் சார் ஐ வில் ஹெல்ப் யூ'என்றபடி ஒவ்வொருத்தரைப் பற்றிச் சொல்ல

அபிஅப்பா: இவரு இப்ப ஆல்ரவுண்டர்.'தல' மாதிரி.
காமெடி,ஆன்மிகம் ன்னு அப்பப்ப டிராக் மாத்துவாரு.படிக்காமயே பின்னூட்டம் போடுவதில் கில்லாடி.

ஷென்ஷி: இவரு அடிக்கடி அரசியல்வாதி மாதிரி காணமப் போயிடுவாரு

கோபி:அமைதியானவர்.ஆனா எல்லோருக்கும் எல்லாத்துக்கும் கம்பெனி குடுப்பார்

மின்னுது மின்னல்:ஆளு இருக்கிறத பார்த்து பயந்துடாதீங்க.கொழந்த மாதிரி

அய்யனார்:இவரு ப்ப்பெர்ர்ர்ரிய கவுஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.[அவருக்கு நெனப்பு]

குட்டி பிசாசு:சின்னபுள்ளை.ந்நல்ல புள்ளை.டீச்சர் அக்காகிட்ட பயம்+பாசம்

காயத்ரி:இவ கவிதாயினி...நாலு லைன் எழுதிட்டு நானூறு பின்னூட்டம் வாங்குவா ;))

முத்துலட்சுமி: இவங்க ஆல் இன் ஆல் அழகு ராணீ.வாயைத்திறந்தா மூடமாட்டாங்க :))

இம்சை அரசி:ஹீ...ஹீ..நல்ல அக்கா வாயே திறக்க மாட்டாங்க.திறந்துட்டா பாய்பிரண்டு கேப்பாங்க ;)

நான்:மலாய் மயிலு.மீ த பர்ஸ்ட்டு ன்னு கூவும் குயிலு....[நல்ல பொண்ணுங்க]=D

கண்மணி:இவிங்கதான் எங்க கொள்ளைக் கூட்டத் தலைவலி சாரி...டீச்சர்...அக்கா

பொறுமையாக் கேட்டுக் கொண்டிருந்த தேவேந்திரன் ஒட்டு மீசையைத் தடவியபடியே,

'ஆமா நீங்கெல்லாம் எங்கிருக்கீங்க எப்படி ஒன்னா சேர்ந்து எல்லோரையும் சாவடிக்கிறீங்க'

எல்லோரும் கோரஸாக,'தமிழ்மணத்துல இருந்து வாரோம்'

'தமிழ்மணமா அது எங்கிட்டு இருக்கு.அங்கன யாரு ஆட்சி செய்யறா'

'அங்கன எல்லோருமே நானே ராஜா நானே மந்திரி டைப்புங்கோ'

'ஓகோ மொத்தத்துல தமில் தமில் ன்னு சொல்லி கூட்டமா கும்மியடிக்கிற கூட்டமா?'

'அப்பாடா நாங்க கும்மி பார்ட்டின்னு இப்பவாச்சும் தெரிஞ்சிக்கிட்டீங்களே'

'என்ன மீட்டிங் போடப் போறீங்க'

'எங்க மீட்டிங்குக்கு டாபிக் கிடையாது.எதுனாலும் பேசுவோம்.
நல்லா சாப்பிடுவோம்.போயிடுவோம்'

'அப்பால'

'போய் ஆளுக்கொரு பதிவாப் போடுவோம்'

'ஒன்னுமே உருப்படியாப் பேசாம என்னன்னு போடுவீங்க'

'உருப்படியாப் போட்ட யாரும் படிக்க மாட்டாங்க.இங்கன வந்து உங்களை, ரம்பா,ஊர்வசியப் பாத்தத போட்டோவோடு போட்டமின்னா சும்மா தமிழ்மண்மே 'அதிருமில்ல''

தனித்தனியாக அபிஅப்பா,மின்னல்,கோபி,குட்டிபிசாசு,அய்யனார்,ஷென்ஷி என எல்லோரும் ரம்ஸ் ஊர்வசியோடு போஸ் குடுத்தனர்.
எப்பவும் போல தாய்க்குலம் எஸ்கேப்.

அடங்க மக்கா இதுக்கா இந்த அலம்பலு அரசியல்வாதிங்ககூட உங்க 'கும்மி'கூட்டத்துக்கிட்ட தோத்துடுவான் போல.
உடனே கெளம்புங்க.நம்மளுக்கே ஆப்பு வச்சிராதீங்கப்பூ'னு வடிவேலு சாரி தேவேந்திரன் விரட்டையடிக்க

எப்படியோ ஒருவழியாக பாசக்கார குடும்பம் அட்[த்]லாண்டிஸில் போய்
'விண்வெளி சந்திப்பை 'முடித்துக் கொண்டு திரும்பியது.

[முற்றும்]

Friday, July 27, 2007

இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை

சிபி இருக்காறே அவரு ஒரு கலாய்ச்சல் பார்ட்டி, எப்பவாவது ஒரு நல்ல பதிவு போடுவாரு, அதுவும் ஏதாவது ஒரு ஆடி அம்மாவாசையிலதான் நடக்கும். மத்த நாள்ல எல்லாம் "ஆல் மொக்கை போஸ்ட்ஸ்"தான். இதுல என்ன கொடுமைன்னா சிபிக்கு வெவ்வேற பேர்ல 10 பதிவுகள் இருக்கும்.

புதுசா யாராவது பேர் சொல்லாம பதிவுலகத்துக்கு வந்தா, சிங்கங்க எல்லாம் சேர்ந்த்து "அது சிபிதான்"னு கைப்புள்ள தலை மேல அடிச்சு, அடிச்சு சத்தியம் பண்ணுவோம். அவ்ளோ பதிவுகள் இருக்கும்.
"என்ன, டெய்லி ஒரு டொண்டி அவர்ஸ் தமிழ்மணம் பார்பேன்"னு சொல்லி எங்களுக்கு எல்லாம் பேதி புடுங்க வெச்சு இருக்காரு. அப்படியாப்பட்ட மனுஷன் எழுதுன ஒரு பதிவு பூங்காவுல வந்துருச்சு. ஹ்ம்ம் இந்த கொடுமைய என்ன சொல்றது.


இந்த சேதி கேட்டவுடனே பேதி வந்து, "உள்ளே" போன ராம் இன்னும் வெளியவே வரலே. கவுண்டர் மாதிரி வெளியே வந்துட்டு அட்டெண்டென்ஸ் குடுத்துட்டு போனாலும் கூட பரவாயில்லை.

இன்னைக்குதான் மொக்கை போஸ்ட் லாஸ்ட் டேட்Yaar(27-7-2007). அதான் மீண்டும் ஒரு மொக்கை போஸ்ட் போட்டு சொல்றோம், மறக்காம் எண்ட்ரீ குடுங்க.

சரி இருங்க, ராம் என்ன ஆனாருன்னு பார்ப்போம், ____ கதவைத் தட்டி "ராம் இருக்கீங்களா"

"ஆமாய்யா, இருக்கேன், இருந்துட்டே இருக்கேன். போய்த்தொலைங்கய்யா. இங்கே கூட ஃப்ரீயா "இருக்க" விடமாட்டீங்களா?"

நோ டிஸ்டர்ப் ப்ளீஸ் உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

Tuesday, July 24, 2007

சங்கம் டெக்னாலஜீஸில் சின்னக் கலைவாணர்

சங்கம் டெக்னாலஜீஸின் லெட்ஜர் கணக்கைப் பார்த்த தல கைப்பு கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்திருக்கிறார். டீக்கடை கடனைக்கூட அடைக்கமுடியாத அளவுக்கு கம்பெனியின் கிராஃப் அதளபாதாளத்திற்கு இறங்கிக்கிடக்க அடுத்த கட்ட நடவடிக்கைக் குறித்து தீவிர யோசனையில் இருக்கிறார். அப்போது தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் கன்சல்டன்ட்,கருத்து கந்தசாமி, சின்னக் கலைவாணர் விவேக் கைப்புவை சந்திக்க ஆப்பீசுக்கு வருகிறார்.

"எவ்ளோ ஆப்பு வாங்கினாலும் ரியாக்சன் காட்டாம இருப்பியே..இப்ப என்னடான்னா கன்னத்துல கைவச்சுகிட்டு ஏதோ ராக்கெட் விடப்போற மாதிரி யோசிச்சிட்டிருக்கியே..என்னடா ஆச்சு?"

"கம்பெனி கூடிய சீக்கிரம் திவாலாகப் போவுது விவேக்கு. நானும் எவ்வளவு நேரம் தான் வேலை பாக்கற மாதிரியே நடிக்கறது. பஞ்சாயத்து பஞ்சாயத்தா போய் உதைவாங்கி உடம்பு பஞ்சராயிப்போச்சு. ஊருக்குள்ள தல காட்டமுடியல. பசங்க என்னடான்னா விவரம்புரியாம வெளாட்டுக்காரப் பயலுகளாவே இருக்கானுங்க. இவனுங்கள வச்சு எப்படி மாரடிக்கறதுன்னு புரியாம உக்காந்திருக்கேன்"

"அது கரெக்ட்தான் கைப்பு. இப்பல்லாம் டாவடிக்கறதுல இருந்து ஒரு கட்சி ஆரம்பிக்கறதுவரைக்கும் எல்லாமே காஸ்ட்லியாகிப்போச்சு. ஆனா நம்ம நெலம தான் அப்படியே இருக்கு. மின்னலே மாதவன் சாப்ட்வேர் சொல்லிக்குடுத்து ஆறாயிரம் சம்பளம் வாங்கும்போதும் அதே பிரான்ட் சரக்குதான் வாங்கித்தர்றான். சிவாஜி இருநூத்தம்பது கோடி சம்பாதிச்சாலும் அதே பிரான்ட் சரக்குதான் வாங்கித்தர்றான்"

"நான் சங்கத்து ஆபிசைப் பத்தி புலம்பினா நீ உன் சொந்த புலம்பலை ஆரம்பிச்சுட்டயா..எனக்கு ஒரு வழி சொல்லப்பு"

"ஆமா இவரு பில் கேட்ஸ் கம்பெனி நடத்தறாரு..நாங்க அட்வைஸ் கொடுக்கறோம்.சரி உன் கம்பெனிக்கு வரேன். என்னதான் பண்றீங்கன்னு பார்த்து என் கருத்தை சொல்றேன்" என்றபடி கைப்புவும் விவேக்கும் சங்க ஆப்பீசுக்கு வருகிறார்கள்.

அலுவலகத்துக்குள் நுழையும்போதே முன்னால் விவ்ஸ் இளா சேர் மேல் ஏறி நின்றுகொண்டு எல்லோருடைய மானிட்டரையும் வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

விவேக்: டேய், ஆபீஸ் நேரத்துல சேர் மேல ஏறி நின்னு என்னடா செய்யற?

கைப்பு: நான் தான் அவனை சேர் மேல ஏறி நிக்க சொன்னேன்

விவேக்: ஏன் சுவத்துக்கு ஒட்டடை அடிக்கவா?

இளா: அது இல்லீங்க..நான் ஜி-டாக்ல ரொம்ப நேரம் சாட் பண்றேன்னு தல பனிஷ்மெண்ட் கொடுத்துட்டாரு. இப்ப வேற யாராவது சாட் பண்ணாங்கன்னா அவங்களை கண்டுபுடிச்சு சேர் மேல நிக்க வச்சுட்டுத்தான் நான் உட்காரனும். அதான் யார் சிக்கறாங்கன்னு பார்க்கறேன்

விவேக்: இன்னும் நீங்க வளரவே இல்லையாடா

கைப்பு: யப்பா இது நான் ஸ்ட்ரிக்டா கொடுத்திருக்க பனிஷ்மெண்ட். அப்பத்தான் சிங்கங்க பேசாம வேலை பார்க்கும்

விவேக்: இது பனிஷ்மெண்ட் இல்லடா...ஃபன்னிஷ்மெண்ட். அங்க யாருடா தனக்குத்தானே சிரிச்ச்ட்டு உக்காந்திருக்கவன்? டேய் நீ யாரு? என்ன பண்ற?

தேவ்: நான் பத்து மணிக்கு ஆபிஸுக்கு வருவேன். மக்கள்ஸ் எல்லாருக்கும் சாட்டில குட் மார்னிங் சொல்லுவேன். அப்புறம் டீ குடிக்க போவேன். டீ குடிச்சதால வாய் கசக்கும். அதனால ஒரு ஆப்பிள் ஜூஸும் குடிப்பேன். 12 மணிக்கு வந்து மறுபடியும் சாட் பண்ணுவேன். ஒரு மணிக்கு சாப்பிடப் போய் 3 மணிக்கு திரும்ப வருவேன். ஒரு அரைமணி நேரம் சீட்டுல சாஞ்சு குட்டித்தூக்கம். அப்புறம் ஒரு மணி நேரம் சாட். அப்புறம் கீழே டீக்கடைக்கு போய் டீ அடிச்சுட்டு அஞ்சு மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடுவேன்.

விவேக்: நீ சங்கத்து ப்ராஜெக்ட் மேனேஜர்னு சுத்தி வளைச்சு சொல்றியா? வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேல பாக்கக்கூடாதா ராசா?

தேவ்: தல கம்பெனில யாராவது வேலை பார்த்தா அது தலக்குதான் அசிங்கம். போய்யா அந்த பக்கம்

விவேக்: அது சரி..உங்களை 1000 பில் கேட்ஸ் வந்தாலும் திருத்த முடியாதுடா..அங்க யாருடா ரொம்ப சீரியசா கீபோர்டை உடைச்சுட்டிருக்கறது?

சிபி: நான் தான் தளபதி. HR டீம். எங்கே, எந்த நேரத்துல ஆள் வேணும்னாலும் வோல் சேல்ல அனுப்புவேன்.

விவேக்: உன்னைத்தான்யா ரொம்ப நாளாத் தேடிட்டிருந்தேன். அவனவன் ஒரு பொண்டாட்டி, ஒரு பதிவு, ஒரு பாஸ்வேர்ட் வச்சே மெயின்டெயின் பண்ண முடியாம நாட்டுல பல கலவரங்கள் உருவாகுது. நீ எப்படி இத்தனையும் சமாளிக்கற?

சிபி: எனக்கு பிரச்சனை வந்துச்சுன்னா ஆவி உலகத்துல இருந்து நண்பர்களைக் கூப்பிட்டுப்பேன்.

விவேக்: ஆவியா...என்னடா ரோட்டு கடை இட்லிலருந்து வர ஆவி மாதிரி அசால்டா சொல்றீங்க...உங்க கிட்டயெல்லாம் பார்த்து பக்குவமா இருக்கனும்போலிருக்கேடா..கைப்பு என்ன அப்படியே கைத்தாங்கலா அடுத்த ஆளுகிட்டே கூட்டிட்டுப்போய்யா

அங்கு ஜொ.பா ஃபிகர்களுக்கு கொலைவெறியோடு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

விவேக்: டெக்னாலஜியை எவன் யூஸ் பண்றானோ இல்லையோ..உங்களை மாதிரி ஆளுங்க தான்டா நல்லா யூஸ் பண்றீங்க..அந்த செங்கல்லு செல்போனை வச்சு எந்த ஆண்ட்டியடா கரெக்ட் பண்ற?

ஜொ.பா: தல..எனக்குத் தேவை தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொன்னு.

விவேக்: அடப்பாவிகளா..போன வாரம் சிட்டி சென்டர் வாசல்ல கண்ணு தெரியாத பிச்சைக்காரன் போஸ்ல உட்கார்ந்துகிட்டு குட்டைப் பாவாடைகளை சைட் அடிச்சுட்டு வந்துட்டு இப்ப "தமிழ் கலாசாரம் ஆந்திரா மிளகா காரம்"னு டயலாக் விடறியேடா

ஜொ.பா: அதெல்லாம் ச்சும்மாச்சுக்கு..ஆனா எனக்குத் தேவை தமிழ் கலாசாரத்தோட ஒரு பொண்ணு

விவேக்: டேய்...சும்மா சும்மா தமிழ் கலாசாரப் பொண்ணுங்கறியே..எங்க "கண்ணே கனியமுதே கார்முகிலே"ன்னு தமிழ்ல ஒரு லவ் லெட்டர் எழுது பார்க்கலாம்

ஜொ.பா: அட விடுங்க தல..நமக்கு பொண்ணுங்க தான் முக்கியம்..தமிழ்ல கவுஜ எழுதறதுக்குத்தான் எங்க சின்ன தல இருக்காருல்ல

விவேக்: அது யாருடா உங்க சின்ன தல

கைப்பு: இராயலைப் பார்த்து யாருன்னு கேட்டுட்டியா? ராயல் என் செல்லம்.

விவேக்: செல்லம்னா மடில வச்சு கொஞ்ச வேண்டியதுதானே..இங்க பாரு இறக்கிவிட்டதும் ரஞ்சனி மகான்னு ஊருல ஒரு பொண்ணு விடாம சாட் பண்ணுது உன் செல்லம்

ராயல்: எனக்கான வெளியில்
குருட்டுப் புலியில்
மொட்டை வெயிலில்
ஓட்டை குடையில்
இன்னொரு இரவிலும் பயணத்தை தொடர
முடிவெடுத்தது.

விவேக்: என்னாங்கடா இது..புலின்றான் வெளின்றான்...சரி சூடான் புலி மேல உனக்கென்ன கோபம்? குருட்டுப்புலின்னு திட்டற?

ராயல்: அது படிமம்ண்ணே

விவேக்:"படிமம் அடி ரம்"னு ஏதேதோ சொல்றானுங்க..நல்லாத்தானேடா இருந்தீங்க?

எனும்போதே "சப்ஜெக்ட் கிடைச்சுடுச்சு" என கத்தியபடியே இராயல் ஃபிகர்களை படமெடுக்கிறார். பின்னால் உட்கார்ந்திருந்த ஜி ஓடி வருகிறார்.

ஜி: இளந்தல, அபெர்ச்சர் சரியா இருக்கா..லைட்டிங் ஏத்தி எடுங்க..மேக்ரோ எஃபெக்ட் போடுங்க..நைட் மோட் மாத்திட்டீங்களா...ஜூம் கரெக்டா பண்ணுங்க

விவேக்: டேய் டேய் டேய்..போதும்டா...உனக்கு தெரிஞ்ச எல்லா டெக்னிகல் வார்த்தையையும் சொல்லிட்ட..கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ

ஜி: நாங்களும் போட்டொகிராபர் தெரியும்ல?

விவேக்: உங்களச் சொல்லி குத்தமில்லடா...உங்களப் பத்தி தெரியாம உங்களுக்கு சொல்லிக்குடுத்தாங்களே ரெண்டு பேரு..அவங்களச் சொல்லனும்

ஜி: அண்ணே..பாத்து இருந்துக்கோங்க...இங்கல்லாம் அருவா வீச்சுதான்...வாளும் வேலும் என் கண்கள்..

விவேக்: டேய் கிரீடம் 'தல'யே பேஸ் வாய்ஸ்ல பஞ்ச் அடிக்கறத விட்டுட்டாரு..நீங்க இன்னும் விடலயாடா? அங்க ரொம்ப நேரமா ஒருத்தன் மானிட்டரை வெறிச்சிட்டிருக்கானே..புலி ராசா சிவா..என்னய்யா ஆச்சு?ரொம்ப நேரமா சும்மாவே உட்கார்ந்திருக்க?

சிவா: என் மவுஸ் பேடைக் காணோம்.

விவேக்: அதுக்கு?

சிவா: யோவ் மண்டையில ஏதாவது இருக்கா? மவுஸ் பேட் இல்லைனா எப்படிய்யா வேலை செய்யறது? அதான் சும்மா உட்கார்ந்திருக்கேன்.

விவேக்: அடப்பாவிகளா உள்ளுக்குள்ள எழுநூத்தம்பது ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத கம்ப்யூட்டர் மவுஸ் பேடால தான் ஓடுதாடா? உங்களைத் திருத்தவே முடியாதுடா

சிவா: திருத்தறதுக்கு நாங்க என்ன எக்ஸாம் ஆன்சர் ஷீட்டா?

விவேக்:(மனதுக்குள்) ஆகா..வில்லங்கம் புடிச்ச ஆளா இருக்கானே...வாயக்கொடுத்து மாட்டிக்க கூடாது..கைப்பு நெலம ரொம்ப பாவம்தான்

விவேக்: கப்பி, ரொம்ப நேரமா விட்டத்தை பார்த்து யோசிச்சுட்டிருக்கியே?

கப்பி: நம்ம சங்கத்துக்கு எப்படி லாபம் சம்பாதிக்கலாம்னு யோசிக்கறேன்

கைப்பு: ஜாவா பாவலா! உண்மையாவா ராசா? நீ தான் டா சிங்கம்..

விவேக்: ஜாவா பாவலனா...ஏன்டா?

கைப்பு: இவன் ஜாவா கோட் அடிக்கும்போதே வரிக்கு ஒரு வார்த்தை தான் அடிப்பான்..ஆச்சரிய குறிலாம் போடுவான்

விவேக்: அடப்பாவிகளா..இப்படிலாம் அடிச்சா புரோகிராம் வேலையே செய்யாதே? எரர் வருமே? க்ளையன்டு காசு கொடுக்க மாட்டானே? அப்புறம் எப்படிடா லாபம் சம்பாதிப்பீங்க?

கப்பி: ஊர்ல இருக்க எல்லா கம்பெனியும் சைட் பிசினஸா பஸ் விட்டு சம்பாதிக்கறாங்க. ரோட்டுல பார்த்தா ஃபுல்லா இவங்க பஸ்ஸாதான் இருக்கு. அதே மாதிரி நாமளும் நெறய பஸ் வாங்கிவிட்டு பாதி ரேட்டுக்கு டிக்கெட் வித்து சங்கத்துக்கு பணம் சேர்க்கலாம்

விவேக்: ஏன் ஒரு டிரெயின் வாங்கி விட்டா இன்னும் நல்ல லாபம் வருமே..நீ உண்மைலயே படிச்சுத்தான் வேலைக்கு வந்தயா? அதெல்லாம் அந்தந்த கம்பெனில வேலை செய்யறவங்களை ஏத்திட்டு போறதுக்குடா..போற போக்குல என்னைய கைப்பு ஆக்கி காமெடி பண்ணிடுவீங்க போலிருக்கேடா

வெட்டி: விவேக் நீங்க இஙக் வாங்க. நீங்க எங்க ஆபீசுக்கு வந்ததும் எனக்கு ஒரு லவ் ஸ்டோரிக்கு கரு கிடைச்சுடுச்சு

விவேக்: சொல்லவேணாம்னு சொன்னா விடவா போற? சொல்லு

வெட்டி: நீங்க ஒரு கம்பெனிக்கு இது மாதிரி கன்சல்டிங்கு போறீங்க. அங்க ஒரு தெலுகு பொண்ணு மேல உங்களுக்கு பார்த்த உடனே காதல. ஆனா அவ ஃப்ரென்ட்லியா பழகுறா. அதே கம்பெனில மில்காஜின்னு ஒரு பையன் வேல பார்க்கறான். அவன் அந்த தெலுகு பொண்ணை ஒன்சைடா லவ் பண்றான். அது உங்களுக்குத் தெரிஞ்சுடுது. நீங்க ஆபிசை விட்டு போற கடைசி நாள் பிரியற நேரத்துல அந்த பொண்ணு ஃபீலாகி உங்க கிட்ட 'ஐ லவ் யூ' சொல்றா.

விவேக்: ஏ தெலுகுமொழியேஏஏஏஎ

என 'முதல்வன்' பாட்டை அடித்தொண்டையிலிருந்து பாடுகிறார்.

வெட்டி: ஆனா நீங்க மில்காஜிகூட அந்த பொண்ணை சேர்த்துவச்சுட்டு பாலகிருஷ்ணா படம் பார்க்க போயிடறீங்க

விவேக்: அடப்பாவி..இங்கயும் எனக்கு காதலை சேர்த்துவைக்கிற அல்லக்கை வேலை தானா? கடைசி வரைக்கும் ஜோடி சேர விடமாட்டீங்களாடா?

வெட்டி: மில்காஜி பாவம்ல

விவேக்: பாவமாவது கூவமாவது..போடாடேய் போடா..ஆ...ஆஅ....

என கமல் வாய்ஸில் ஃபீலாகுகிறார்.

அப்போது தம்பி சோடா எடுத்துக்கொண்டு வர

விவேக்: இந்த ஏரியாவுலயே நீ ஒருத்தன் தான் கைகட்டி பவ்யமா இருக்க? என்ன லாங்குவேஜ்ல புரோகிராம் எழுதுவ? சியா? வி.பியா? ஜாவாவா?

தம்பி: மலையாளம் சேட்டா

விவேக்: என்னடா சோடா குடுத்துட்டு சேட்டாங்கறா? நான் சேட்டெல்லாம் இல்லடா...மறத்தமிழன்டா

தம்பி: அண்ணே..எனக்கு தெரிஞ்ச மொழி மலையாளம்னு சொன்னேண்ணே

விவேக்: மலையாளமா? ஏன்டா கேரளாவுல ஏதாவது க்ளையன்ட் புடிக்கப்போறியா?

தம்பி: க்ளையன்ட் இல்லண்ணே..கிளி புடிக்கப்போறேன்

கைப்பு: கிளியா? ஏற்கனவே உள்ளூருல அடிவாங்க வைக்கறது பத்தாதுன்னு என்னைக் கேரளாவுக்கு பார்சல் பண்ண ப்ளான் போட்டுட்டீங்களாய்யா?

தம்பி: அதெல்லாம் இல்ல தல..எல்லாம் பாவனாவுக்காகத்தான்

விவேக்: பாவனாவா...ஊருக்கு ஒரு பிகரைப் பிடிக்கறியேடா..நாடு தாங்காதுடா..மஞ்சுளா பாவம்டா..

எனும்போதே "கும்மி கும்மி, ரிப்பீட்டு ரிப்பீட்டு" என பாசக்கார குடும்பத்தினர் அட்லாஸ் கண்மணி டீச்சர் தலைமையில் அலுவலகத்தில் நுழைகின்றனர். "மொக்கை! மொக்கைக்கு மொக்கை!! மொக்கையோ மொக்கை!! மொக்கையை வச்சு மொக்கை" எனக் கொலைவெறி கும்பலோடு செந்தழல் வருகிறார்.

"கிளம்பிட்டாங்கய்யா....ஆப்பெல்லாம் ரெடியா எடுத்துட்டு வந்துட்டீங்களா..அவ்வ்வ்வ்" என தல சேரில் சாய்ந்து மயக்கமாகிறார்.

"இவங்ககிட்ட சிக்கினா சிக்குன்குனியாவே வந்துரும்போலயே...தப்பிச்சிருடா விவேக்கு" என கைப்பு டோனில் சவுண்ட் விட்டு ஜன்னலேறி தப்பியோடுகிறார் விவேக்.

Friday, July 20, 2007

மாபெரும் மொக்கைப் போட்டி


மொக்கை போடுறது எப்படி? மொக்கைன்னா என்ன?


இப்படி எல்லாம் சந்தேகம் கேட்டு மொக்கை போடுறதே வேலையா போயிருச்சு. அவரு என்னைய ஆட்டத்துக்கு சேத்துக்கலே அப்படின்னு ஒரு மொக்கை, அது ரொம்ப சூடா மூனு நாளா மேலேயே நிக்குது.

அப்போ வாட் இஸ் மொக்கை?


மொக்கைன்னா மொக்கைதான். அஜக்குன்னா அஜக்குத்தான். குமுக்குன்னா குமுக்குதான். இதுக்கு எல்லாம் என்ன லிப்கோ டிக்சனிரியா போட முடியும்? அதா வரனும்.



அதுக்குதான் வ..வா.சங்கம் நடத்தும் வலையுலக முதலாம் மொக்கை போட்டி.



என்ன ரூல்?


நோ ரூல்ஸ். ரூல்ஸ் இருந்தாவா மொக்கை?.


அப்போ பிரைசு என்னா?


சொல்ல மாட்டோம்ல, அதையும் ஒரு மொக்க போஸ்ட் போட்டுதான் சொல்லுவோம்.



ஒருத்தர் ஒரே ஒரு லின்க் மட்டும் இங்கே தந்துட்டு போங்க. மீதிய நாங்க பார்த்துக்கிறோம். ஒன் மொக்கை பெர் ஒன் பெர்சன் ஒன்லி


வாட் இஸ் த லாஸ்ட் டேட்yaar?


நெக்ஸ்ட் பிரைடேyaar.(27-July-2007)

Tuesday, July 17, 2007

கண்மணி [யும்] குரங்கு [ம்] அனுபவங்கள்

மனம் ஒரு குரங்கு என்பது உண்மையோ பொய்யோ ஆனா எங்க 'தாமரை இல்லத்து'[ஹாஸ்டல்] மரம் பூராவும் இலைகளால் இல்லைங்க குரங்குகளால் தான் சூழப் பட்டிருக்கும்.

ரெண்டு வருஷத்தை அரியர்ஸ் இல்லாமக் கூட ஒப்பேத்திடலாம்.ஆனா குரங்கு அனுபவம் இல்லாம ஒப்பேத்த முடியாது.

மணியடிச்சா எங்களுக்கு கேக்குதோ இல்லையோ அதுங்களுக்குக் கேட்டு 'டைனிங் ரூம்' பக்கம் டான்னு ஆஜராயிடுங்க.

ரூமுக்குள்ள வந்துடிச்சிங்கன்னா,கண்ணாடியப் பாக்கறதும்,

பௌடர் டப்பாவ கொட்டிக் கவுக்கிறதும்,பேஸ்ட் பூராவும் பிதுக்கி எடுப்பதும் ,துணி காயப் போடும் கம்பியில தொங்கிகிட்டு ஊஞ்சல் ஆடும் அழகும் சொல்லி மாளாது.

அதிலேயும் இந்த குட்டிக் குரங்குங்க அடிக்கிற லூட்டி அதிகம்.

இப்படித்தான் ஒருமுறை என் பிரண்டு எக்ஸாமுக்குப் போவதற்குமுன் டைனிங் ஹால் போனாள்.
சாப்பிட்டு வந்து ஹால் டிக்கெட் எடுக்க ரூமுக்குள்ளேயே போக முடியலை.நாலஞ்சு குரங்குங்க அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தது. உள்ளே நுழையவிடாம உர்ர்ர்ர்ர்ர்ர் னு முறைக்க இவ பயந்து போய் அலற ,வாட்ச் மேன் பெரிய தடியோடு வந்து விரட்டியடிச்சி ஹெல்ப் பண்ணார்.

இன்னொருமுறை ஒரு கேரளத்துப் 'பேன் குட்டி' ஒருத்தி
[ஞான் சரியாயிட்டுத்தான் பறஞ்ஞது.தலை முழுக்கப் பேன் வச்சிருந்தா பின்ன எப்படி விளிக்கின்னுது?]
தலைக்குக் குளித்துவிட்டு கூந்தலை விரித்துப் போட்டபடி கார்டனில் படித்துக் கொண்டிருக்க விடுவாங்களா நம்ம வானரப் படை.

வசமா அவள் தலையைத் தன் பக்கம் பிடித்துக் கொண்டு பேன் பார்க்கத் தொடங்கி விட்டது.
அவள் பயத்தில் அலற கடுப்பான குரங்கார் குர்ர்ர்ர்ர்ர்ர்ர் என முறைக்க கத்தக் கூட முடியாமல் கண்ணீர் வழிய நின்றுகொண்டிருந்தாள்.

'அப்பாடி இன்னையிலிருந்து பேன் தொல்லை விட்டது.
இவளால் ரூம்ல எல்லோருக்கும் 'கை வேலை'தான் என்று அவ ரூம்மேட்கள் கிண்டலடித்தாலும் மறுபடியும் வாட்ச்மேன் உதவி நாடினர்.

வாட்ச் மேனின் அதட்டலுக்கும்,தடிக்கும் கூட அசைந்து கொடுக்காமல் குரங்கார் 'கருமமே'கண்ணாயினாராக இருந்தார்.

அதற்குள் கேட்கீப்பர் வந்து ஒரு வாழைப் பழத்தை குரங்கார் முன்னால் காட்டியபடியே
சற்று தொலைவில் தூக்கி எறிய ,கொஞ்ச நேரம் யோசித்த குரங்கார்
தாவிப் போய் பழத்தை எடுப்பதற்குள்

'பெண் குட்டியை' [இப்பத்தான் பேனெல்லாம் போயிடுச்சே] மீட்டுவிட்டோம்.

அதுக்கப்புறம் அவ ரொம்ப நாள் பயம் தெளியாம தலையில 'கேப்' போடதான் இருந்தாள்.

அடுத்தவங்க மாட்டுன கதையைப் புட்டு வக்கிறீயே ஆச்சி உன் கதை என்னன்னு கேக்கறீங்களா? நான் மாட்டுனதையும் சொல்லித்தான் ஆகனும்.

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை.காலேஜ் இல்லையென்பதால் 9 மணிக்குத்தான் நமக்கு திருப் பள்ளியெழுச்சி.
நல்லாத் தூங்கிக் கிட்டிருந்தவ காதுல ஏதோ கச முசான்னு சத்தம்.

'ஏய் கண்ணை தொறக்காதடி.'

கத்தாதடி.அப்படியே படுத்துக்கிட்டிருடி'

'பயப்படாதடி'

என்ன ஏதாவது கனவு காண்கிறோமா இல்லை யாராச்சும் பேசறாங்களான்னு கண்ணைத் திறந்தா, அம்மாடி என் போர்வைக்கு மேலே என் காலருகே கிட்டத்தட்ட வயத்துக்கு மேலே ஒரு குட்டிக் குரங்கு உட்கார்ந்திருந்தது.

மெதுவாகத் திரும்பினால் ரூம் கதவு சாத்தியே இருந்தது.பின்ன எப்படி?
ஜன்னலருகில் இருந்ததால் ஜன்னல் கம்பி வழியே இந்த குட்டி வந்திருக்கு.

மொத்தம் ஐந்து பேர் உள்ள ரூமில் ஒருத்தி குளிக்க பாத்ரூம் போனவ குரங்கப் பாத்துட்டு மறுபடியும் பாத்ரூமுக்கே போயிட்டாள்.

இன்னொருத்தி காலை நான்கு மணிக்கே எழுந்து சோடா புட்டியப் போட்டுக்கிட்டு புஸ்தகத்தை தலை கீழா பொரட்டும்.அப்பிடியும் அது ஜஸ்ட் பாஸ்தான் வாங்கும்.இப்பவும் அந்த மூதேவி ரூமில் நடப்பதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்பது போல புஸ்தகத்தை உருட்டிக் கொண்டிருந்தது.

மிச்சமிருந்த ரெண்டு பேரும் கதவ திறக்கப் போனாலே குரங்கு குட்டி குர்ர்ர்ர் என்பதால் பயந்து உட்கார்ந்த இடத்தை விட்டு நகரலை.

எனக்கு பயத்தில் உதறல் எடுத்தாலும் கால் ஆடினால் கோபப் பட்டு ஏதாச்சும் செஞ்சிடுமோன்னு பயந்து தம் பிடித்தேன்.

இதற்குள் கு.கு [குட்டிக்குரங்கு] நான் முழிச்சிக்கிட்டதுக்காவே காத்திருந்தது போல
என்னைப் பார்த்து கிர்ர்கிர்ர்ர் என்றது.

'ஏய் நீயும் ஏதாவது செய் அப்பத்தான் அது போகும்' என ரூம் மேட்கள் சொல்ல

பாத்ரூமிலிருந்தவள்,'பேசு கண்மணி பேசு, உன் பேச்சைக் கேட்க ஓடி வந்திருக்கும் குட்டிக் குரங்கை ஏமாற்றாதே பெரிய குரங்கே, என்றாள்.

'வாடி வெளியே அப்புறம் சொல்றேன் பெரிய குரங்கு நீயா நானான்னு' நான் கத்த
கு.கு கடுப்பாகி முறைத்தது.

'ஏய் ஃப்ளீஸ் கத்தாதேடி அது பாஷையிலே பேசுடி.இல்ல கடுப்பாகுது பார்'

அடிப்பாவிகளா? நான் ஏதோ குரங்கு பாஷை கத்துக்கிட்டது மாதிரி அது பாஷையிலே பேசனுமாம்.

வேற வழி?

கு.கு குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என நானும் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கு.கு க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானும் க்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்படியாக எங்கள் சம்பாஷனை கொஞ்ச நேரம் தொடர, ஒரு கட்டத்தில் கு.கு கையைத் தூக்கி தலையில் வைக்க,

சல்யூட் அடிக்கிறதுன்னு நெனைச்சி நானும் கையைத் தூக்கி தலைகிட்ட வச்சி சல்யூட் அடிக்க,
கிகீகிகீகிகீ....ன்னு சிரித்தபடியே ஜன்னல் வழியே ஓட,
அட ராமா இது தெரிஞ்சிருந்தா முன்னாடியே ஒரு வணக்கம் சொல்லியிருக்கலாமேன்னு தோனுச்சு.

பிறகு? பிறகென்ன?

கொஞ்ச நாள் 'குரங்கு குசலா' ரேஞ்சுக்கு நாமதான் ஹாட் டாபிக்.


டிஸ்கி: இப்படி குரங்கிடம் மாடியவர்களின் கதை நிறைய.
சமீபத்தில் என் தோழியின் பெண்ணொருத்தி வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்த போது மரத்தருகே சண்டை போட்டுக் கொண்டிருந்த குரங்குகள் இவளைப் பிடுங்க,ஊசி போட்டுக் கொண்டதோடு மூணு மாதமே ஆன தன் குழந்தைக்கும் மதர் ஃபீட் நிறுத்தி விட்டாள்.
கிரிவல புகழ் அருணையில் அருண்கிரி நாதர் மண்டபம் அருகே கிளி கோபுரம்னு ஒன்னு உண்டு.சிலர் அதைப் பார்த்து கண்ணத்தில் போட்டுக் கொள்வர்.அப்படி ஒருவர் செய்து கொண்டிருந்த போது கோபுரத்தீன் மீதிருந்து குரங்கு உருட்டி விட்ட ஒரு கல் இவர் தலையில் விழுந்து கபால மோட்சம் அடைந்தார்.

Monday, July 16, 2007

அட்[த்]லாண்டிஸில் பாசக்கார குடும்பம்....பாகம்-1

இப்பல்லாம் எங்க திரும்பினாலும் வலைப் பதிவர் சந்திப்புதான்.

மூனு பேர் ஒன்னா சேர்ந்துட்டாலே சந்திப்புன்னு மக்கா பதிவு போட்டுடுது.

சென்னை வலைப் பதிவர் சந்திப்புகள் தான் முறைப்படி அறிவிப்போட தொடங்கப் பட்டது.

அப்புறம் பார்த்தா 'தலைநகரத்தில் சந்திப்பு' மாயவரத்தில் சந்திப்பு'
மதுரையில் சந்திப்பு' 'பெங்களூரில் சந்திப்பு' ன்னு அடுத்து அடுத்து போட்றாங்க.

அபி அப்பாவுக்கு செம கடுப்பு. நம்மள விட சூப்பரா பதிவு பட்டறை,அனாதை இல்லம் னு லிங்க் பண்ணி போடறாங்களேன்னு.

பாசக்கார குடும்பம் செயற்குழுவைக் கூட்டி ஆலோசனை பண்ணாங்க.

இவிங்களையெல்லாம் பீட் பண்ரா மாதிரி செய்யனும் என முடிவு செய்யப் பட்டது.

மை பிரண்ட் உடனே 'நயாகரா' வுல வச்சுக்கலாமா' என

அய்யனார் 'ஆப்பிரிக்க காட்டுல வச்சுக்கலாம்' என்றார்.

குட்டிபிசாசு,'பூமியிலயே வேண்டாம் எங்க நடத்தினாலும் காப்பியடிச்சிடுவாங்க அதனால எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் தான் சரி'என

அபி அப்பா ,'பிசாசு சொல்றதுதான் சரி நான் ஒரு அட்லாண்டிஸ் வாடகைக்கு எடுத்துட்டு வர்ரேன்'
'யோவ் நாசா க்காரன் நாசவேலைன்னு நம்மள புடிச்சி உள்ள போட ஐடியாவா' என கோபி அலற,

'நீ ஒரிஜினல் காட்ரெஜ் பீரோவுக்கும் டூப்ளிகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் பார்த்திருக்கியா?
ஒரிஜினல் 'godrej' ன்னு பேர் இருக்கும் டூப்ளிகேட்ல 'godhrej' ன்னு ஒரு H சேர்த்திருக்கும்.
அதுமாதிரி athlandis ன்னு H சேர்த்துட்டா நாசா கேஸ் போட முடியாது 'என விளக்க ஒருவழியா ஓகே ஆனது.

ஆரம்ப கட்ட வேலைகள்லாம் நடந்து முடிய [எப்படி என்னா ன்னு கேக்கப் படாது .அது குடும்ப இரகசியம் சொல்ல மாட்டோம்]

அட்[த்]லாண்ண்டிஸில் ஏறும் நாள் வந்தது.மெடிக்கல் டெஸ்ட்டுகள் ,காற்றுக் குளியல் சோதனைகள் எல்லாம் முடிந்து அனைவருக்கும் விண்வெளி கவச உடை அணிவிக்கப் பட்டது

திடீரென அபி அப்பா கண்கலங்க,'என்னாச்சு அனைவரும் பதற,
'என் தங்கமணி நேரா நேரம் வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டும் தேறாத உடம்பு இந்த கவச உடை போட்டதும் சும்மா 'பம்முனு' பெர்சனாலிட்டிய தூக்கிடுச்சே' என்றதும் கோபி கட கட வென சிரிக்க ,மறுபடியும் என்னாச்சு என
'ஒல்லி குச்சானுங்க அபி அப்பாவுக்கும் சென்ஷிக்கும் ஓகே நம்ம ஆல்ரெடி பீம் பாய் 'தம்பிக்கு' என்றதும் ,
'அட அது கூட தேவலாம் நம்ம 'சொர்ணாக்கா கண்மணி' டீச்சரப் பாருங்க' என முத்துலஷ்மி கும்மாளமிட,
'உஷ்...உங்களுக்குள்ளேயே இப்படி நோ கமெண்ட்ஸ்' என் டெல்பின் அதட்டினார்.
சொல்ல மறாந்துட்டேன்.தருமிம் சாரும் டெல்பினும் தான் ஃபைலட்ஸ்.

வழக்கம் போல மை பிரண்ட் 'ம்மீ த ஃபர்ஸ்ட்' ன்னு கிட்டே ஓடிப் போய் ஏறுச்சி.

எல்லோரும் ஏறியதும் ஓடம் மேலே பறக்கத் தொடங்க,
இம்சையரசி,'கோவிந்தா கோவிந்தா' என

'அடிப்பாவி கெளம்பும் போதே அபசகுனமா கோவிந்தாவா இனி எனக்கு கோழிக்கால் கெடச்ச மாதிரிதான் என்று காயத்ரி அழ

'ரொம்பத்தான் ஆசை கண்ணு மேல போனப்புறம் நோ ஃபுட். ஒன்லி வைட்டமின் காப்ஸ்யூல்ஸ்தான் 'என்று G3 சொன்னாள்.

சோறு வேண்டாம் 'தண்ணியாவது' கிடைக்குமா என குசும்பன் கவலைப் பட
'கவலைப் படாத பங்காளி தேவர்கள் அங்கங்கே ஆகய மார்க்கமா வருவாங்க அவங்க கிட்ட தேத்திடுவோம் 'மின்னல் ஆறுதல் தந்தது.

'இப்படியே ஆடாம அசையாம இருந்தா போர் அடிக்குது.கொஞ்ச நேரம் விளையாடாலாம்' என மை பிரண்ட் சொல்ல
'இதோ ஏதோ சங்கிலி மாதிரி இருக்கு இதை வச்சி டக் ஆப் வார் இழுப்போம் .லேடிஸ்தான் ஜெயிப்போம் 'இம்சை சவால் விட,
ஆண்கள் ஒரு பக்கமும் மகளிர் ஒரு பக்கமும் இழுத்தனர்.

திடீரென அட்[த்]லாண்டிஸ் ரெண்டாப் பிரிஞ்சி ஒரு பாதி தருமி சார் கண்ட்ரோலிலும்,
மறு பாதி டெல்பின் கண்ட்ரோலிலும் வர
ஃபுட் போர்டில் தொங்குவதுபோல் தொங்கத் தொடங்கினர்.

ஒழுங்கா வாங்கன்னு சொன்னாக் கேக்கனும் இப்படி 'ஷண்ட்டிங்' கம்பியப் புடிச்சி இழுத்து ஓடத்தக் கூறு போட்டுட்டீங்களேடா யாரைத்தான் நொந்து கொள்வது' என தருமி சார்
இதுங்க கூப்பிட்டு வந்தது தப்புன்னு தன்னையே நொந்து கொண்டார்.

மேலே இருந்தத ஏதோ ஒரு வளையத்தைப் பிடித்த படி ஒருபக்கம் குசும்பனும்,
இன்னொரு பாதியில் குட்டி பிசாசும் சர்க்கஸில் அந்தரத்தில் ஊஞ்சலாடுவதுபோல ஆடி 'ஷண்ட்டிங்கை' இணைக்க முயன்றனர்.
'ஹய் எம்.ஜி.ஆர் அரச கட்டளையில் ஆலம்விழுது புடிச்சி ஆடிகிட்டே பாட்டுப் பாடற மாதிரியில்ல இருக்கு'என மை பிராண்ட் கெமெண்ட் அடித்தாள்.

ஒரு வழியா குசும்பனும்,குட்டிபிசாசும் ஓடத்தை ஒன்றாக்க டெல்பின் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

இனி விண்வெளி வரும்வரை எல்லோரும் ஒழுங்கா வாலை சுரிட்டிக் கிட்டிருக்கனும் என டீச்சர் அதட்ட கப்சிப்.
அட்[த்]லாண்டிஸ் மேலே மேலே போய்க் கொண்டிருந்தது.

'ஆடி வா...பாடி வா...ஆனந்தம் காணலாம் வா..'என பாட்டுச் சத்தம் கேட்க

ஓடம் அந்தத் திசையில் போகப் பார்த்தால்,

தேவலோகத்தில் இந்திரன் ரம்பா ,ஊர்வசியோடு குஜாலாக ஆடிக் கொண்டிருந்தார்.

சரி இங்கேயே இறங்கி சந்திப்பை நடத்துவோம் என முடிவு செய்ய ஓடம் ஒருவழியாக
தேவலோகத்தில் லேண்ட் ஆனது.

[தொடரும்]

Sunday, July 15, 2007

சரோஜ்ஜாஆஆஆ சாமான் நிக்காலாவ்

'சார் உங்கள எம்.டி கூப்பிடறார்னு' பியூன் வந்து சொன்னா நீங்க என்ன நெனைப்பீங்க?
ஏதோ ஆபீஸ் மேட்டர்னுதானே.அதான் இல்லை.

அவருடைய தங்கமணிக்கு சினிமா பாட்டுலேயோ இல்லை டி.வி புரோகிராம்லேயோ ஏதோ டவுட்டுன்னு அர்த்தம்.

இன்னைக்கு நேத்து இல்லீங்க.இந்த கம்பெனியில வேலைக்கு சேர்ந்த நாள் முதலா இதுதான் கூத்து.

எங்க எம்.டி. மனைவிக்கு ஒரு சந்தேகம் வந்துடுச்சின்னா அதுக்கு பலி கெடா நான்தேன்.
இப்படித்தான் ஒரு நாள் எம்.டி என்னையக் கூப்பிட்டு ,'மிஸ்டர் சரவணன் என் வொய்ப்புக்கு ஒரு சந்தேகம் நீங்கதான் தீர்த்து வைக்கனும்'னார்.

இவரு ஏதோபாண்டிய மன்னன் மாதிரியும் இவரு பட்டத்து ராணிக்கு வந்த சந்தேகத்தை தீர்க்க நான் என்ன தருமியா?

'சொல்லுங்க சார்'

'டோலாக்கு டோல் டப்பிம்மா...ன்னா என்ன?'

தெரியாதுன்னு சொல்லியிருந்தா இன்னைக்கு என் மண்டையில நாலு முடியாவது மிஞ்சியிருக்கும்.

பெரிய டுபுக்கு மாதிரி ஆராய்ச்சி பண்ணி எம்.டி மனைவி ஏத்துக்கிற மாதிரி அர்த்தம் கண்டு புடிச்சிச் சொல்லப் போக,

லக லக லக ன்னா என்ன?

நேத்து வந்த சிவாஜியில வர்ர

பலேலக்கா பல்லேலக்கா ன்னா என்ன

என்பது வரை ஆராய வேண்டியதாப் போயி இந்த 30 வயசுல மண்டை ஃபுட்பால் கிரவுண்டு மாதிரி ஆயிடுச்சி.

[இன்னம் கல்யாணம் வேற ஆகலைங்கானும்]

இதுக்கு ஒன்னும் எம்.டி பிரமோஷன் லாம் குடுக்கலை.ஆனா அவர் வீட்டுக்குப் போனா ஒரு வாய் காப்பி நிச்சயம் உண்டு.

முந்தா நாள் தான் பல்லேலக்கா ஆராய்ச்சி.

பேப்பர்ல பல்+லேக்கா பல்+அல்லேக்கா பல்+அல்+லேகா ன்னுஎழுதி எழுதிப் பாத்து ஏதோ கிராஸ்வேர்டு பஜுல் மாதிரி ஆராய ,

படிக்கிற காலத்துல தமிழ் இலக்கணத்தக் கூட இந்தளவுக்கு பதம் பிரிச்சி படிச்சதில்லை]

'உனக்குத் தேவையா இது' பக்கத்து சீட்காரன் அற்பமாகப் பார்க்க
ஒரு வழியா அர்த்தம் கண்டு புடிச்சிட்டேன்.

'பல்லை அலேக்காப் பேத்துடுவேன்னு' சூப்பர் ஸ்டார் ஸ்டைலா சொல்றாருன்னு விளக்கியதும் எம்.டி.யோட தங்கமணி மொகத்துல அத்தனை சந்தோஷம்.

சரி அடுத்த புது படமோ,பாடலோ வரும்வரை மண்டை தப்பிச்சதுன்னு பார்த்தா எம்.டி. கூப்பிட்டு அனுப்பறார்.

'சரவணா இந்த விஜய் டி.வி.ல கலக்கப் போவுது யாரு பாக்கறீயா?'

'சார் அது ஆரம்பிச்சு வருஷக் கணக்காயி இப்ப 20ந்தேதி கலக்கல் மன்னன் ஃபைனல்ஸ் இருக்கு.ஜெயிக்கிறவங்களுக்கு 5,00,000 ரூபாய் பரிசு சார்.'

'அதேதான் அதுல அடிக்கடி சரோஜா சாமான் நிக்காலாவ் னு சொல்றாங்கில்ல அது என்னன்னு தெரியனும்'

'இப்ப என்னா சார் புரோகிராமே முடியப் போவுது'

'இல்லப்பா நேத்திக்குத்தான் என் வொய்ப்புக்கு அந்த வார்த்தைங்க தெளிவா கேட்டுச்சாம்.உடனே சரவணன் கிட்ட கேளுங்கன்னு சொல்றா'

'என்ன கொடுமையிது சரவணா?'ன்னு வெளியில சொல்லாம
மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டே
'ஓகே சார்' என்றேன்.

ஆனா மத்த மேட்டரப் போல இது அவ்ளோ ஈஸியா இல்லை.சரியா அர்த்தம் வரல.
உதவிக்கு என் நணபனிடம் போனேன்.

'இதப் பாரு சரவணா இப்படில்லாம் கேட்டு நம்மள பேஜார் பண்ணாதே டாக்டர் 'செந்தமிழரசு' ன்னு ஒரு பண்டித்ர் அட்ரஸ் தர்ரேன் .அவர்கிட்ட கேளு'

'யாரு நம்ம 'நன்னன்' அய்யா மாதிரி தமிழ் பாடம் சொல்லித் தருவாரா?'

'இல்லப்பா சினிமாக்காரங்க செந்தமிழ்ல எழுதறத மொழி பெயர்க்க ன்னே லண்டன் போயி படிச்சிட்டு வந்து ,'இங்கு சகலவிதமான தமிழ்க் கடிகளுக்கும்[விஷக்கடிகள் இல்ல]
அர்த்தம் பார்த்து ஆராயப் படும் னு போர்டு போட்டிருக்கார்'.

'இதுக்கெல்லாமா டாக்டர் படிப்பு'

'என்ன நீயி இவ்வளோ வெளக்கெண்ணையா இருக்க. லண்டன் ரிட்டர்ன், டாக்டர் பட்டம்லாம் அவரா போட்டுக்கிட்டது '

ஒரு வழியா 'செந்தமிழரசு' கண்டு புடிச்சிப் போனபோது வாசலில்
திரைப் பாடல் ஆசிரியர்கள் பா.விஜய்யும்,கபிலனும் அமர்ந்திருந்தனர்.

'இவங்கள்ளாம் ஏன் இங்கேன்னு'கேட்டதும் டாக்டரின் உதவியாளன் [15 வயசு பையன்],
'ஏ.ஆர். ரஹ்மான் மியூஸிக்கு ஏத்த மாதிரி பாட்டு எழுதிட்டாங்களாம்.

ஆனாலும் அவிங்களுக்கே அர்த்தம் புரியலையாம்.அதான் டாக்டராண்டை வந்திருக்காங்க' என்றான்.

எங்க டேர்ன் வந்து உள்ளே போனோம்.

டைரக்டர் கம் நடிகர் மனோபாலா ரேஞ்சில் இருந்தார் டாக்டர்.

மேட்டரச் சொன்னதும் பேப்பரில் எழுதிப் பார்த்து சரோஜா சரோஜா என மந்திரம் போல் சொல்லிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கியபடியே,

'இதுக்கு எப்படியும் 10,15 நாள் ஆகும்.நிறைய ஆராய்ச்சி பண்ணனும்.
அத்தோட ஃபீஸும் கொஞ்சம் அதிகமாகும்' என்றார்.

20 ந்தேதிக்குள் சொல்லனும்னு எம்.டி. சொன்னதால இது சரி வராதுன்னு வெளியே கிளம்ப உதவிப் பையன்,

'சார் நம்ம வட சென்னைப் பக்கம் இத்தாம் மாதிரி நெற்ரிய்ய சொல்லிக்குவாங்க.நான் எங்க காசி அண்ணாத்தயக் கூட்டியாரேன்.ஒரு 200 ரூபா செலவாகும் ஓகேயா'என்றான்.

மறு நாள் அவனோடு காசியப் பாக்கப் போனோம்.

200 ரூபாயை வாங்கிக் கொண்டு இன்னா சார் இதுமட்டும்தானா வேற ஒன்னும் இல்லியான்னு தலையை சொறிய
பக்கத்துல இருந்த டாஸ்மாக்கில் விஷயமும் வாங்கிக் கிட்டான்.

'அது வந்து சார் இங்க நெரிய பேருக்கு சரோஜான்னு பேரு.
அவன் அவன் வேலைக்குப் போச்சொல்ல அடி சரோசா சாமான எடுத்துக்கிட்டு பொறப்படும்பான்.

'நிகல் ஆவோ'ன்னு சௌகார் பேட்டை சேட்டு சொல்லி கேட்டதில்ல.அதான் சார் பொறப்பட்டு வாம்மே ன்னு பொஞ்சாதிய அன்பாக் கூப்பிடுவான்.

அதான் விசய் டிவிலயும்,
'சரோசா ஆ சாமான் நிக்கலாவ் 'ன்னு கூப்பிடறா மாதிரி வச்சிட்டாங்க'

ஒருவழியா எம்.டி.யோட தங்கமணிக்கு விளக்கம் சொல்லிடலாம்.

ஆனா அடுத்து ஏதாவது சினிமா பாட்டோ டி.வி .சீரியலோ இப்படி புரியாத அர்த்தத்தில வந்தா
தயவு செஞ்சு அதன் அர்த்தத்தையும் கூடவே போடனும்னு வேண்டிக் கேட்டுக்கிறேன்.

பணம் செலவாறது கவலையில்லைங்க.இப்படி மண்டயப் பிச்சிக்க வச்சா இருக்கிற நாலு முடியும் போச்சின்னா அப்புறம் யார் நம்மளக் கட்டுவா?

என்ன சிவாஜி வந்த பிறகு 'மொட்டை பாஸு' க்குத்தான் பொண்ணுங்க மத்தியில கிராக்கியா?

ஓகே டன்.

எம்.டி வீட்டுக்குத்தான் போறேன்.அடுத்த ஆராய்ச்சிக்கு மேட்டர் இருக்கான்னு கேக்கத்தான். வந்து அப்பால உங்களப் பாக்குறேன்.பை.

Sunday, July 8, 2007

ச்சுப்பிரமணியின் சினிமா என்ட்ரி

அதிர்ஷ்டம் யாருக்கு எப்போ வரும்னு சொல்ல முடியாது.

சினிமாவுல ஒரு சான்ஸ் கிடைக்குமான்னு பலபேர் ஏங்கும் போது எங்க ச்சுப்பிரமணிக்கு அடிச்சது பாருங்க அதிர்ஷ்டம்.

இப்ப நான் சொல்றத கேட்டு சூடான் புலி கதை வுடாதீங்க அக்கா பெட்டரா திங்க் பண்ணுங்கன்னு சொல்லும்.

வவ்வால் இந்த 'உட்டாலக்கடி வேலை' வேண்டாம் நிஜமாவே ச்சுப்பிரமணியக் கூப்பிட்டாங்களான்னு கேக்கும்.


ஏன்னா ச்சுப்பிரமணியக் கூப்பிட்டது ஏப்பை சாப்பையான ஆளு இல்லீங்கோ.
நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிங்கோ....கேட்டாலே ச்சும்மா அதிருதில்ல....

ச்சுப்பிரமணிக்கும் அப்படித்தான் அதிர்ந்தது.ஒரு இடத்துல நிக்காம ஓடுறான் ஆடுறான்.

மேட்டர் இதாங்க.ஒரு 15 வருஷத்துக்கு முன்னால ரஜினி ,ராதா,நதியா நடிச்ச 'ராஜாதி ராஜா' பாத்திருக்கீங்களா?அதுல தலைவர் டபுள் ரோல்.

ஒன்னுல பயந்தாங்குள்ளியா நதியாக்கு ஜோடி.அவரு பயத்தப் போக்க நதியா தாயத்து கட்டி உடுவாங்க.

அப்ப ரஜினி கேப்பாரு,'இதைக் கட்டிக்கிட்டா காளையனை [வில்லன்] அடிக்க முடியுமா?சுப்பிரமணிய அடிக்க முடியுமா?'[அவரை துரத்திய நாய்]

இப்ப சிவாஜி க்கப்புறம் கே.எஸ்.ரவிக்குமாரோட ஒரு படம் பண்ணப் போறாராம்.
காமெடி கலந்த ஆக்ஷன்.

15 வருஷத்துக்கு முன்னால தன்னை ஓட ஓட விரட்டிய சுப்பிரமணிய வச்சி கதை பண்ணச் சொன்னாராம்.

அந்த நாய் செத்துப் போயிருக்குமேன்னு சொல்ல பரவாயில்லை அதே போல வேற நாய நடிக்க வைக்கலாம்னு பல நாய்களை அழைச்சிவர,ரஜினி நிஜம்மாவே சுப்பிரமணின்னு பேர் வச்ச நாய்தான் வேணும் தேடுங்கன்னு சொன்னாராம்.

ரவிக்குமாரோட அசோசியேட் டைரக்டர் ஒருத்தர் எதேச்சையா...

[எதேச்சையாத்தான்....லஞ்சம்லாம் குடுக்கலீங்க] நம்ம ச்சுப்பிரமணியப் பத்திக் கேள்விப்பட்டு,வந்து பார்த்து இப்ப ஓகே ஆயிடுச்சு.

மனுஷனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடை பிடிப்பான்னு சொல்லுவாங்க .

பாருங்க என்னா ஸ்டைலா குடை பிடிச்சிக்கிட்டிருக்கான்.வாழ்வுதான்.

எங்க ச்சுப்பிரமணிக்கு வந்த வாழ்வப் பாருங்க.

சினிமால நடிக்கப் போவது உறுதியானதும் ச்சுப்பிரமணி ரொம்ப அலட்ட ஆரம்பிச்சிட்டான்.எந்நேரமும் கண்ணாடியும் கையுமா அழகு பாக்கறதும்,
ஆப்பிள் ஜூஸ் கேக்கறதும் டி.வி.டி.யில இங்கிலீஷ் படம் அதுவும் ஜாக்கிஜான் படம்னா தான் பாக்கறது.ஏன்னா சூப்பர் ஸ்டார் கூட ஃபைட் பண்ணனுமாம்.

ஒரு நாள் அசோஸியேட் டைரக்டர் வந்து ச்சுப்பிரமணிக்கு ஃபோட்டோ ஷெஷன் இருக்கு. எடுத்துட்டு அப்படியே டயலாக் டெலிவரியும் பார்த்துடுவோம் என்று சொல்லி கூப்பிட்டார்.

[லொள்ளுவது கூட சினிமா ஸ்டைல்ல இருக்கனுமாம். இல்லாட்டி டப்பிங் போடனுமாம்.]

நான் ஒரு ஆட்டோவில் அழைத்து வர்ரேன் என்றதும் [கார் சர்வீஸ் போயிருந்தது] நோ நோ நான் இவரோட டயோட்டா இன்னோவாவில் போறேன். நீங்க பிச்சு கிச்சைக் கூப்பிட்டுக் கிட்டு ஆட்டோவுல வாங்கன்னு சொல்லிட்டு கார்ல ஏறிடுச்சு.

உனக்கு ரொம்ப ஏத்தம் தான்னு நெனைச்சிக்கிட்டு ஆட்டோவில் நாங்க மட்டும் போனோம்.விதவிதமான,காஸ்ட்யூம்ல [!!!!!!] ச்சுப்பிரமணி போஸ் குடுக்க கேமெராமேன் எடுத்துத் தள்ளினார.



போட்டோவெல்லாம் பார்த்து ரஜினி சார் ரொம்ப சந்தோஷப் பட்டு,கொஞ்சமா இருந்த ச்சுப்பிரமணி ரோலை கிளை மேக்ஸ்வரை வக்கச் சொல்லிட்டார்.

அப்படியே தன் தம்பி டஃப்பிக்கும் ஒரு சான்ஸ் கேக்க ,ரஜினி சிரிச்சிக்கிட்டே ஓகே ரிஸ்க்கான சீன்ல உன் தம்பிய டூப்பா போட்டுக்கன்னு சொல்லிட்டார்.

ஷூட்டிங் எல்லாம் மலேஷியா,நியூஸிலாந்து லயாம்.மை பிரண்ட் ,துளசியக்கா கிட்ட சொல்லி ச்சுப்பிரமணியப் பார்த்துக்கச் சொல்லனும்.

கிச்சுவுக்கும்,பிச்சுக்கும் ஸ்கூல்ல இதே பேச்சுதானாம்.இதக் கேட்டுட்டு அவங்க மிஸ்,பிரண்ட்ஸ் னு டெய்லி சுப்புவ பாக்க வர்ர கூட்டம் வேற.

மாமி இப்பல்லாம் என்னைக் கண்டுக்கிறதில்லை.எது செஞ்சாலும் ச்சுப்பிரமணிக்குத்தான் ஃப்ர்ஸ்ட் குடுக்கிறாள்.

அவனோ படு உஷார்.எதுவானாலும் நாங்க முதல்ல தின்னு பார்த்து வயத்துக்கு ஒன்னும் ஆகலைன்னாதான் தொடறான்.

இதுக்கு நடுவுல இராம நாராயணன் யூனிட்டுக்கு விஷயம் தெரிஞ்சி அவங்க அடுத்தப் படத்துக்கு கால்ஷீட் கேக்க,'சாரி நான் கமிட் ஆயிட்டேன்.
சூப்பர் ஸ்டார் படம் முடியும் வரை நோ நோ கால்ஷீட்.
வேணும்னா அபி அப்பாவோட 'டைகர்' இருக்கு கூப்பிட்டுக்கோங்க.
என் ரேஞ்சுக்கு இல்லைன்ன்னாலும் ஏதோ உங்க யூனிட்டுக்கு அது போதும்னு சொல்லிடுச்சி.

சரி படம் எப்போ ரிலீஸ்னு கேக்கறீங்களா? ஆகஸ்ட்ல தாங்க..[அட அடுத்த ஆகஸ்ட்டுங்க]

ஒரு சூப்பர் ஸ்டார் நடிச்சாலே டிக்கெட் கிடைக்கிறது கஷ்டம்.ரெண்டு சூப்பர் ஸ்டாருங்க நடிக்கிறாங்க.அதனால இப்பவே டிக்கெட் ரிசர்வ் பண்ணிடுங்க.

Friday, July 6, 2007

ஏழு...ஏழு....ஏழு..... ங்கோ

ஏழு.....ஏழு....ஏழு..ங்கோ

இதென்ன ஆறு எழுதச் சொன்னாங்க அப்பால எட்டு போட்டு லைசன்ஸ் குடுத்தாங்க,இது ரெண்டுக்கும் நடுவுல விட்டுப் போன ஏழான்னு கேக்கறீங்களா?

இல்லையே.

இது ஒரு முக்கியமான எண்ணுங்க...நெம்பருங்க..

1. என்ன ஒன்பது கோள்களும் ஒரே நேர்க் கோட்டுல வந்து வரிசை கட்டி நிக்க, உலகையே அழிக்கிற சக்தியுடன் ஏதாவது அரக்கக் குழந்த பிறக்கப் போவுதா? >:)

சத்தியமா இல்லீங்க பயப்படாதீங்க.

2. பின்ன தமிழ் மணத்துல எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாம ஒற்றுமையா பதிவு போட்டு கண்ணியமா பின்னூட்டம் போடப் போகும் நாளா? =))

அய்யே...ரொம்பத்தான் ஆசை...நடக்கறத பேசுங்க

3. வேற என்ன அபி அப்பா திருந்தி [?!] காமெடியில்லாம சீரியஸ் பதிவுப் போடப் போறாரா?:))

உம்ம நக்கலுக்கு அளவேயில்லையா?

4. இல்ல கண்மணியக்கா கும்மியடிக்கிறத விட்டுட்டு சமையல்,தையல்னு நல்ல[?!!]உபயோகமான பதிவாப் போடப் போறாங்களா?:(

ஹுக்கும் இருக்கிற சரக்குதானே வரும்

5.வ.வா.சங்கமும் ப.பா.சங்கமும் இணைந்து ஒரே சங்கமா செயல்படப் போறாங்களா?

இந்த நாரதர் வேலைதானே வேணாங்கிறது.இப்ப என்ன அடிச்சிக்கிட்டா நிக்கறாங்க?போட்டின்னு இருந்தாத்தான் தெறமை வளரும்;)=D>

6. இல்லைன்னா இனிமேயாச்சும் அய்யனார் புரியற பாஷையில கவுஜ எழுதப் போறாரா?:-/

இப்பவே பாதிபேர் மண்டையப் பிச்சிக்கிறாங்க இது வேறயா?

7. ரஜினி அடுத்தப் படத்துல தன் வயசுக்கு ஏத்த மாதிரி மறுபடியும் ராதிகா ஸ்ரீபிரியான்னு ஜோடி போடப்போறாரா?;)

அய்யா உமக்கு கோடி நமஸ்காரம்.இப்படி வம்புல இழுத்துவிட்டு நம்மள தூக்கிடாதீங்க.

சரி ஏழு...ஏழு....ஏழு..ன்னா என்னன்னு சொல்லுங்க.ஏன் இந்த பில்டப்பு?

கரீட்டாச் சொல்லிட்டீங்க..பில்டிங் பத்துனதுதான்:))

ஆயிரம் வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய சாத்தியமான தேதிகள்ல ஒன்னுதான் இந்த 07-07-07.அதாவது வரும் ஜூலை ஏழாம் தேதி.

அன்னைக்குத்தான் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உலக அதிசயங்கள் ஏழு
பட்டியலை வெளியிடறாங்களாம்.

07-07-07 அதிசயங்கள் 7.
எல்லாம் ஏழு மயம்
.

தாஜ்மஹால் இடம் பெறுமா என்பதை வெயிட் அண்டு சீ மக்கள்ஸ்.

டிஸ்கி:ஆயிரம் ஆண்டு என்பது தவறுதலாக நூறுன்னு எழுதப்பட்டது.திருத்தி விட்டேன்.

சங்கத்துல்லயும் பஞ்ச் வச்சாச்சுப்பா

"...பன்னிங்க தான் கூட்டமா வரும்
சிங்கம் சிங்கிளாத் தான் வரும்..."



யார் சொன்னா.....

"சங்கம்ன்னா சிங்கம்ஸ் எல்லாம் கூட்டமாத் தான் வரும்

பன்னி தான் தனியா வரும்... "




சொன்னா நம்பணும் அப்பு....
சங்கத்துக்குத் திரும்பும் 'தல'க்கு சங்கம் சார்பாக சிங்கம்ஸ் அடிச்சு ஓட்டப் போகும் மேட்டர் இது

எப்படி மேட்டரைப் படிச்ச ஓடனே சும்மா அதிருதுல்லா....

சங்கத்து சிங்கம்ஸ்ன்னா சும்மாவா.... சிவாஜி பேச்சுக்கே பதில் பேச்சு பேசிட்டோம்ல்ல...

எப்படி... சிங்கம்ஸ்லே

Thursday, July 5, 2007

கமிட் ....வித் நிமிட்ஸ்...

இந்த நிமிட்ஸ் வந்தாலும் வந்துச்சி அம்புஜம் மாமி அலம்பல் தாங்கலை.

'தங்கமணி மாமாவுக்கு கெய்டு போஸ்ட் கெடச்சிருக்குடி'

ஏதோ பிரதீபா பாட்டிலுக்கு பதிலா இவரப் பிரசிடெண்ட் ஆக்கிட்டா மாதி பீத்திக்கிட்டா.
'என்ன விஷயம் மாமி'

நிமிட்ஸ் வந்து நம்ம ஹார்பர்ல தங்குது இல்ல.அதுல வர்ரவா எல்லோரையும் அழைச்சிப் போய் தமிழ் நாட்டுல முக்கியமான எடத்தை எல்லாம் சுத்திக் காட்டனுமாம்.அதுக்கு ஒரு குரூப்புக்கு மாமா கெய்டாம் வேண்டாம்னாக்கூட மாமா வந்தே ஆகனும்னு சொன்னாளாம்'

அந்த ஃபாரினர்ஸோட சுத்தனும்னு ஒரு புரோக்கர் கால்ல விழாத குறையா நாலு குவார்ட்டர் வாங்கிக் குடுத்தார்னு அப்புறமா பால்கார கோயிந்து சொன்னான்.

'தங்கமணி பிச்சுவோட சட்டை ரெண்டு குடு.மாமா திரீ ஃபோர்த் [3/4] பேண்ட்டும் ஷார்ட் சட்டையும்தான் போட்டுப் போனம்னு சொன்னார்.'

'மாமி இது ஓவராயில்ல .மாமாவோட டிரஸ்ஸே போட்டா என்ன?'

'அதப் போட்டுட்டு அம்மாஞ்சி மாதிரி போனா நல்லாயிருக்காதுடி.மாமா பேசற இங்கிலீஸ்ல வெள்ளக்காரனே மிரளுவான் [;(??????].டிரஸ்ஸும் அப்படி இருக்கனும்' என்றாள்.

மாமி சொன்ன காஸ்ட்யூம்ல மாமாவப் பாத்தபோது எனக்கே பாவமாயிருந்தது.
அந்த காலத்து சந்திரபாபு பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருந்தார்.

மாமி ஆரத்தி எல்லாம் எடுத்து பொட்டெல்லாம் வச்சி விட்டாள்.

'மாமி 'நிமிட்ஸ் 'போர்க் கப்பல்தான் ஒத்துக்கிறேன்.அதுக்காக மாமா ஏதோ போருக்குப் போற மாதிரி வீரத்திலகம் வச்சி அனுப்பறீங்க.அவர் ஊரைச் சுத்திக் காட்டத்தானே போறார்.'

'இருக்கட்டுமேடி.வெளி நாட்டிலேர்ந்து வந்தவங்களுக்கு நல்லபடியா வில்லங்கம் இல்லாம ஹெல்ப் பண்ணனுமில்ல'

மாமா கிளம்பினதுக்குப் பிறகு மாமி மணிக்கு ஒருதரம் ஃபோன் போட்டு மாமா எங்கயிருக்கார் என்ன பண்றாருன்னு கேட்டு எல்லோருக்கும் லைவா ஒலி பரப்பிக்கிட்டிருந்தாள்.

மறுநாள் மாமி கொஞ்சம் கலவரமாயிருந்தாள்.

'என்ன மாமி நேத்து இருந்த சந்தோசத்தைக் காணோம்'

'தங்கமணி மாமா அழைச்சிண்டு போற குரூப்புல எல்லாம் பொம்மனாட்டியாம்டி'

அதனாலென்ன மாமி.யாராயிருந்தா என்ன அவங்க நம்ம நாட்டு கெஸ்ட்டுங்க'

'இல்லடி மேல் நாட்டுப் பொண்ணுங்கல்லாம் ரொம்ப சோஷியல் டைப்பு'

'சோ வாட்?மாமி அவங்க நாட்டுல எப்படியிருந்தாலும் வந்த இடத்துல மரியாதையா இருப்பாங்க.நாமே இப்படிச் சொல்றது தப்பு'

'என்னமோடி நீ சொல்றது சமாதானம் ஆகலை எனக்கு'

'சரி அவங்க எப்படியிருந்தா என்ன மாமா மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கில்ல' என்றதும் அடங்கினாள்.

அடுத்த நாள் மாமி அரக்கப் பறக்க வந்தாள்.

மாமா அவங்களுக்கெல்லாம் ஒரு விருந்து ஏற்பாடு செய்யலாம்னு சொன்னாராம்.
'ரொம்ப நல்ல விஷயம் மாமி.அவங்களும் நம்ம சாப்பாடு சாப்பிட்டுப் பார்க்கட்டும்.ஆனா தயவு செஞ்சி அல்வா மட்டும் நீங்க செஞ்சிடாதீங்க'

'ஏண்டி நான் 'நிமிஷத்துல' அல்வா கிண்டிடுவேன்'

'ஆனா சாப்பிட்டப் புறம் அவங்க 'நிமிட்ஸ்'ல திரும்பிப் போக முடியாது.ஆஸ்பத்திரிக்கில்ல போகனும்'
'ஆனாலும் நீ ரொம்பத்தான் கலாய்க்கிறடி'

நானும் மாமிக்கு சமயலில் உதவ மாமா மதியம் லஞ்ச்க்கு அவருடைய டீமை அழைத்து வந்தார்.

மொத்தம் ஆறு பொண்ணுங்க மூனு பேர் ஒல்லியாகவும்,இரண்டு பேர் நடுத்தரமாகவும்,ஒரே ஒரு பெண் ரொம்பக் குண்டாகவும் இருந்தனர்.அவ பேரு காத்தரீனாம்.

கிட்டாஸ் கிட்டாஸ் னு மாமாவோடயே பேசிக்கிட்டிருந்தாள்.
'தங்கமணி பாருடி அவதான் இப்படி ஈஷிக்கிட்டிருக்கான்னா இந்த மனுஷனுக்கு புத்தி எங்க போச்சு'
'மாமி நீங்க பேசறதூ சரியில்லை.அவ பார்க்கத்தான் ஆளு அப்படீ வயசென்னமோ சின்னப் பொண்ணுதான்.அவங்க அப்படித்தான் விகல்பமில்லாமா பழகுவாங்க'

நான் சொன்னதை மாமி காது குடுத்தே கேட்கலை.

மாமாவுக்கும் போறாத நேரம் போலும்.
அவரோட டி.வி.எஸ்50 [ஞாபகம் இருக்கா கம்பெனியின் முதல் தயாரிப்பு] பார்த்த குண்டுப் பெண் காத்தரீன் அதுல ஒரு ரைடு போக ஆசைப் படனுமா?

மாமாவும் உதைத்து ஸ்டார்ட் பண்ண 25 வது உதைக்கு அப்புறம் அது உறும காத்தரீன் குதித்து ஏறி உட்கார்ந்ததும் வண்டி பேலன்ஸ் இழந்து சாய்ந்தது.

மாமா ஓடிப் போய் காத்தரீனைத் தாங்க மாமி கோபத்துடன் மாமாவை முறைக்க சட்டென்று மாமா கையை எடுத்து விட்டார்.

வண்டி கீழேயும் காத்தரீன் மேலேயும் விழுந்தனர்.
அப்புறமென்ன காத்தரீன் வெயிட் தாங்காம வண்டி நொறுங்க மாமா கோணி சாக்கு எடுத்து வந்து வண்டியைப் பொட்டலமாக் கட்டினார்.

ஓ சாரி வெரி சாரி என காத்தரீன் மாமாக் கையைப் பிடித்தபடி சொல்ல,

'போதும்டி எம்மா பரவாயில்லை வண்டி போனாப் போறது அவர் கையை விடு' என் மாமி சொன்னது புரியாமல் 'வாட்'என்றாள்.

நான் நிலையை சமாளித்து அவர்களை சாப்பிட அழைத்தேன்.

'இது என்ன' 'வாட் ஈஸ் திஸ்' 'சோ டேஸ்டி' என்றபடி ருசித்துச் சாப்பிட்டனர்.

விருந்து முடிந்ததும் ஒவ்வொருவராக மாமிக்கும் எனக்கும் கை கொடுத்து 'சோ நைஸ்' சோ டெலிஷியஸ்' தேங்க்யூ' என்று நன்றி கூற

காத்தரீன் மாமா கன்னத்தில் முத்தமிட்டு 'யூ ஆர் ய நைஸ் மேன் கிட்டாஸ் ஐ லைக் யூ வெரி மச் தேங்க்யூ ஃபார் யுவர் கம்பெனி 'என்றாள்.

மாமி முறைத்த முறைப்பின் உஷ்ணம் அணு உலைக் கதிர் வீச்சைவிட அதிகமாயிருந்தது.

அவர்கள் போனதும் 'மாமி இது அவங்களுக்கு சகஜம் நீங்க தப்பாக நினைக்காதீங்கன்னு' நான் சொல்லியும் கேட்கவில்லை.

ஒரு வழியா இன்னைக்கு[ 5ந்தேதி] 'நிமிட்ஸ்' ஹார்பரை விட்டிக் கிளம்பிடுச்சி.

மக்கள் நிமிட்ஸ மறந்துட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி அடுத்த பிரச்சனைக்கு ரெடியாகிட்டாங்க.

ஆனா மாமி வீட்டுல மட்டும் இன்னமும் நிலமை சகஜ நிலைக்குத் திரும்பலைன்னு கேள்வி.

சோடி போடுவோமா சோடி...

திருவாளர் திருமதி, சில்லுனு ஒரு சேலஞ்ச் அப்டி இப்டினு சன் டிவி, ஸ்டார் டிவி, விஜய் டிவின்னு எக்கசக்கமா போட்டிகள நடத்திட்டு வர்றாங்க. சங்கத்துச் சிங்கங்கள் பல பேர் இப்ப ஜோடி ஜோடியா சுத்துறதுனால அவிங்களுக்கும் அதே மாதிரி ஒரு போட்டிய நடத்தலாம்னு பிரபல நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 'ஜி'க்கிட்ட அவரோட டைட் ஸெடிவ்ல்ல ஒரு டைம ஃபிக்ஸ் பண்ணியாச்சு. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவர்களுக்கு பிரபல குருவி உருண்டை நிறுவனம் கண்ணம்மாபேட்டை பண்ணாடை அண்ட் கோ நிறுவனம் ரெண்டு குச்சி மிட்டாயும் ஒரு குருவி உருண்டையும் பரிசாகத் தரப் போகிறார்கள் என்பதையும் இங்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஓவர் டூ த ப்ரோகிராம்...

பக்கப்பட்டி பல்குத்தி குழுவினர் சும்மா கும்மு கும்முன்னு குத்துப்பாட்ட பேக் ரவுண்ட்ல போட்டு விட ஒவ்வொரு ஜோடியா அரங்கத்துக்குள்ள வர்றாங்க.

முதலில் சங்கத்தின் இளைய தளபதி சு(ம்)மா ஆரஞ்சு கலர் சட்டை, ஊதாவும், பச்சையும் மிக்ஸ் பண்ணின பேண்டும் போட்டுக்கிட்டு, கிளிப்பச்சை கலரு, அதுல கலர் கலரா பூப்போட்ட சேலை உடுத்தி அண்ணி சுமாவோட உள்ள நுழையிறாரு.

"என்ன வெட்டி. ராமராஜன் ஸ்டைல்ல வந்திருக்கீங்க?"

"இது ராமராஜன் காது. இளைய கேப்டன்காரு பால்யா ஸ்டைலு", படக்குன்னு சுமா அண்ணி எடுத்துவிட

'என்னது ராமராஜன் காதா? ஐயய்யோ.. அத இப்ப நளினிக்கிட்டகூட கேக்க முடியாதே..'

அடுத்தப்படியாக புது சிங்கம் தம்பியும் மஞ்சுளாவும் கை கோர்த்து நடந்து வர்றாங்க. பின்னாலையே ரெண்டு மூனு தவளையும் துள்ளித் துள்ளி வருது.

"எங்களுக்கு தவளையெல்லாம் சுத்தி நின்னாதான் லவ் மூடே வரும்", அப்படியே சேலை நுனியை கடிச்சிக்கிட்டே சொன்னாங்க மஞ்சு. வெட்கமாம். அதுக்குத்தான் அந்த ஆக்ஷன்.

எல்லாரும் ஜோடியா வந்தாங்க. ஆனா ராம் மட்டும் ஒரு பக்கம் ரஞ்சனி, இன்னொரு பக்கம் மஹாவோட உள்ள நுழைஞ்சார்.

"என்ன ராம். ரஞ்சனி அண்ணியும் மஹா அண்ணியும் உங்க வாழ்க்கைல வர்றதுக்கு முன்னாடி ஓமக்குச்சி மாதிரி இருந்தீங்க. இப்ப உசுலமணி மாதிரி ஆயிட்டீங்க?"

"யோவ் நீ வேற. ஆப்பரேஷன் கில்மான்னு எனக்கு ஆப்பு அடிச்சதால இவளுங்க ரெண்டு பேரும் ரெண்டு பக்கமும் நின்னு சாத்து சாத்துன்னு சாத்துறாளுங்க. அதுல வீங்கிப் போன ஒடம்புய்யா"னு அழாத குறையா ராம் சொன்னார். இனிமே அவர அப்படியெல்லாம் ஓட்டாதீங்கப்பா. சொல்லிட்டேன் ராம்.

அடுத்தது புலி, சூடான் கறுப்பு ஃபிகர் ஒருத்தியோட உள்ளே நுளைகிறார்.

"ஹூ இஸ் திஸ் ப்லேக் பியுட்டீ?"

"புலிக்கு ஜோடி பூனையாகுமா? அதுக்குத்தான் இந்த கறுஞ்சிறுத்தை. இவ பேரு கேத்தரின் லைட்"

'லைட்டுன்னு சொன்னீங்க. ஒரே இருட்டா இருக்கு??'

அடுத்து எண்ட்ரீ கொடுத்தார் ஜொள்ளுப் பாண்டி. பின்னால கிட்டத்தட்ட ஒரு நூறு பொண்ணுங்க.

"சார். இது ஜோடிகளுக்கான நிகழ்ச்சி"

"செல்லுகூட இல்லாம இருப்பான் மனுசன். ஆனா ஜொள்ளு இல்லாம இருக்க மாட்டான். அப்படிப்பட்ட ஜொள்ளுக்காக பேட்டையே வச்சிருக்கும் என்னைய 'ஒருத்தி'ங்ற அடைமொழில அடைக்க பாக்குறீங்களா? நெவெர்"னு சிவாஜி ஸ்டைல கற்ஜித்து,

"இன்னும் ரெண்டு லாரி ஃபிகர்ஸ் பின்னால வர்றாங்க"னு சொல்லிட்டு போனார்.

முதல் சுற்று. பாட்டுப் பாடணும்.

சொன்ன உடனே சுமா மைக்க எடுத்து "உதறவா? உதறவா?"ன்னு சொல்ல

"மைக்க உதறுனா எப்படி பாடுவ?"ன்னு கேட்க, அப்புறந்தான் தெரிஞ்சுது சந்திரமுகி ஜோவாட்டம் தெலுங்குல பாடப் போறாங்களாம். அதுக்குத்தான் அந்த அக்கப்போரு. சுமாவும் அந்தப் பாட்டுக்கு அதே காஸ்ட்யும்ல ஆடி முடிச்சவுடனே வெட்டிக்கிட்ட அவர் வாழ்க்கைல நடந்த சுவாரஷ்யமான சம்பவத்தக் கேக்க அப்படியே அழ ஆரம்பிச்சிட்டாரு.

"அல்வா பண்ணிறுக்காளேன்னு ஆசையா சாப்பிட போனாக்கூட அதுலையும் மொளவத்தல அள்ளிப் போட்டுருக்கா."னு கதர குடும்ப சண்டைல நாம எதுக்கு மூக்க நுழைக்கனும்னு அடுத்த ஆட்டக்காரர் ராமுக்குத் தாவிட்டேன்.

"ஆட்டத்த ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சந்தேகம். ரெண்டு பேரு வந்தா ஜோடி. மூனு பேரா வந்தா என்ன சொல்வீங்க?"னு அறிவியல் கேள்வியெல்லாம் கேக்க, நாமத்தான் க்விஸ்ல வீக்காச்சே. எப்படி சமாளிக்கலாம்?னு யோசிச்சப்ப ஐடியா அழகுராஜா நமக்குக் காட்சித் தந்து ஒரு ஐடியாவ அருளினார்.

"மூனு பேருனா அது 'த்ரி'டி"

"ஓ. மூனு பேருங்கறதால த்ரியா?"

"இல்ல. ஜோதிகால ஜோ பக்கத்துல..."

"சூர்யா"

"யோவ். குறுக்கால பேசினா எனக்கு மறந்திடும். கம்னு இரு. ஜோ பக்கத்துல டி போட்டு ஜோடி ஆக்குனாங்க. அது மாதிரி த்ரிசால 'த்ரி' பக்கத்துல 'டி' போட்டா த்ரிடி"

"அப்போ கூட்டமா இருந்தா கூடியா?", ஓரமா கடலப் போட்டுக்கிட்டு இருந்த ஜொள்ளுப் பாண்டி எகிற

"பிரபு தேவா, சரத் குமார், கங்குலி ன்னு நக்மாக்குத்தான் ஒரு சரித்திரமே இருக்குது. அதனால கூட்டமா வந்த அதுக்குப் பேர் நக்டி"

"ஐ.. நக்டி.. நக்டி.."னு பார்வையாளர் ஒருத்தர் குஷில சவுண்டு விட, பக்கத்துல ஐஸ்க்ரீம் சாப்டுக்கிட்டு இருந்த அவரோட தங்கமணி, "யாரப் பாத்து 'டி' போட்டு பேசுற?"ன்னு பொலேர்னு அவர் மண்டைல தட்டிட்டாங்க.

"சரி. உங்கப் பாட்டு?"னு ராம் த்ரிடியக் கேக்க

"புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ரஞ்சனிக்காக"னு ரஞ்சனிப் பாட, வேகமா மைக்கப் புடிங்கி "இல்ல மஹாவிற்க்காக"ன்னு மஹாப் பாட, இதெல்லாத்தையும் கவனிக்காம ஸைட்ல போய்க்கிட்டு இருந்த ஒரு ஃபிகர்க்கிட்ட இளந்தல ASL கேக்க, ஹேண்ட் பேக்ல ரெடியா வச்சிருந்த பூரிக்கட்டைய எடுத்து ரஞ்சனியும் மஹாவும் கரெக்ட்டா ராமோட நடுமண்டைலையே தூக்கி வீசுனாங்க. பக்கத்துல அட்ரஸ் தெரியாம முழிச்சிட்டு இருந்த பொண்ணுக்கிட்ட அட்ரஸ் சொல்லிக்கிட்டு இருந்த என் மேல பூரிக்கட்டை விழுந்திடக் கூடாதுன்னு அங்க இருந்து நானும் எஸ்கேப். :))

அடுத்தது தம்பிப் பக்கம் வந்தா, தம்பியும் மஞ்சுளாவும் "என் சயின்ஸ் லேப்பில் நீ தவளையா? கரப்பான் பூச்சியா?"னு தில் பாட்ட ரீமேக் பண்ணி டைட்டானிக் ஜேக் அண்ட் ரோஸ் ரேஞ்சுக்கு டான்ஸ் ஆட,

"எவன்டா என்ற பொண்டாட்டி இழுத்துட்டு வந்தது?"னு விஜயக்குமார் வாசல்ல இருந்து கத்த, தம்பி எஸ்கேப்.

அடுத்தது புலிப் பாடணும்.

"கருவாப் பொண்ணு கருவாப் பொண்ணு"னு சிவா அந்த கறுப்பிய சுத்தி சுத்தி வர,"வாட் இஸ் திஸ்?"னு அந்தப் பொண்ணு ஜெர்க் ஆக, "தொரச்சி இங்கிலிபிஸெல்லாம் பேசுது"னு கோவை சரளா வாய்ஸ்ல பார்வையாளர்கள் சவுண்டு விட அப்படியே புலி இங்கிலிஸ்காரன் ரேஞ்சுக்கு மின்சாரக் கனவு வெண்ணிலவேப் பாட்ட ஆங்கிலத்துலப் பாடுனார்.

"White Moone, white moone, do you come by jump the sky? we want pair for playing..", அவரு பாடி முடுக்கும்போது விசிலும் கைத்தட்டலுமா அரங்கமே அதிரும்னு பாத்தா, பொண்ணுங்கக்கூட தம்மடிக்க அரங்கத்த விட்டு வெளில போயிட்டாங்க.

சரி. அடுத்தது ஜொள்ளுப் பாண்டி முறைனு திரும்பிப் பாத்தா, பாண்டியக் காணோம். விசாரிச்சுப் பாத்தாதான் தெரிஞ்சுது அது காலேஜ் விட்டு பொண்ணுங்கெல்லாம் வர்ற ஜொள்ளுற டைம். அதனால தலைவர் எஸ்கேப்.

எல்லாரும் போனதுக்கப்புறம் எதுக்கு ஜோடி விளையாட்டெல்லாம். அதான் ஆட்டத்தக் கலச்சாச்சு. :))

ராஸ்கோலு-கும்மி ஸ்பெஷல்


கும்மி அடிக்க போவியா? கும்மி அடிக்க போவியா?
வர வர உனக்கு இதே வேலையாப் போச்சு, ராஸ்கோலு. இப்படி பண்ணினே முட்டிங்காலு போட்டு கிரவுண்ட சுத்த வுட்டுருவேன். கும்மி அடிக்க போவியா? கும்மி அடிக்க போவியா? அதுவும் பொம்பளப் புள்ளைங்களோட? ராத்திரியானா வீடு வந்து சேரனும். நேரங்கெட்ட நேரத்துல ஊர் சுத்த வேண்டியது அப்புறம் அவன் "பே"ன்னு சொல்லி பயமுறுத்திட்டான்னு காலையில பாத்ரூமில பொளம்புறது.

வேலைய விட்டுட்டா கும்மி அடிக்க போறது?

எச்சரிக்கை: இது எல்லாம் கும்மி அடிக்கிற மக்களுக்கு எதிரான ஒரு பதிவு. எங்களையும் கத்தி எடுக்க விடாதீங்க. அப்புறம் காய்கறி எல்லாத்தையும் நாங்களே வெட்டி போட்டுருவோம். சீவிருவொம் தலைய.

Monday, July 2, 2007

மனசை விட்டு வாழ்த்தலாம் வாங்க!


அன்பு மக்களே,

இதுநாள் வரை சங்கத்துக்கு நீங்கள் குடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி. வ.வா.சங்கத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, நாங்கள் உருவாக்கியுள்ள அடுத்த தளம் வாழ்த்துக்கள் சங்கம்!. நம் வாழ்வின் எத்தனையோ மகிழ்வுறும் தருணங்கள் வருகின்றன. அப்பொழுதெல்லாம் உறவுகளுக்கிடையேயும், நட்புகளுக்கிடையேயும் பகிர்ந்து கொள்ள, அவர்கள் மனதார வாழ்த்துக்களைத் தெரிவிக்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையேது! வாழ்த்து பெற்பவர்களின் மகிழ்ச்சிக்கு மதிப்பேது!

நினைக்கும்போதெல்லாம் உள்ளத்தில் மகிழ்ச்சியின் ஊற்றெடுக்க வைப்பது உறவுகளின் வாழ்த்துக்களும், உற்சாகப் படுத்தும் வார்த்தைகளும்தானே! அவ்வகையில் நம் பதிவுலக நண்பர்களின் மகிழ்ச்சிக்குரிய தருணங்களை நம்முடனே பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதே இவ்வலைப்பூவின் நோக்கம்!

பிறந்தநாள், திருமணநாள், ஜனனம், புது வாகனம், இடமாற்றம், பதவி உயர்வு இப்படி எதுக்கு வேண்டுமென்றாலும் வாழ்த்தலாம். உங்கள் ஆதரவு இதற்கு கண்டிப்பாக எங்களுக்கு வேண்டும். இதுவும் சங்கத்தின் ஒரு அங்கமே!

வாருங்கள்! வாழ்த்துவோம்! இனிதே வாழ்ந்திடுவோம்!

வாழ்த்தும் எண்ணங்கள் - நம்மை வலுவாக்கும்! வளமாக்கும்!

நானும் பார்த்துட்டேனே.......

அப்பாடா ஒரு வழியா எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைச்சிடுச்சி.

அதாங்க நானும் பார்த்துட்டேன்.

வாஜி...வாஜி...என் ஜீவன் நீ சிவாஜி...தானுங்கோ

முதல்ல சினிமா விமர்சனமெல்லாம் தேவையான்னு யோசிச்சேன்.
இதுவரை ஆண்களோட கண்ணோட்டத்துலதான் எல்லோரும் சிவாஜியப் பார்த்தீங்க.
இந்த அக்கா கண்ணோட்டத்துல கொஞ்சம் பாருங்க.

அதிர வைக்கும் dts சவுண்டு இரைச்சலான சத்தம்,பக்கத்து சீட்டு விடலைகளின்
ஊஉய்....உ..ஊஊய்...சீழ்க்கைக்கு இடையிலே முகம் காட்டாத ரஜினி வர ஃபிளாஷ் பேக் சொல்லத் திரும்பும் போது...எனக்குக் காதிக்குள் ங்கொய்ய்ன்னு...சத்தம்.

ஸ்பீக்கர் அவுட்டோன்னு சந்தேகமாயிருக்கு.டாக்டர் கிட்டப் போகனும்.
என்னங்க மக்க முழுக் கதையும் சொல்லப் போறேன்னு பயப் படாதீங்க.

பிடிச்சது....பிடிக்காதது ...மட்டும்

முத்து வீராவுல செந்தில் வடிவேலு காமெடிக் கம்பேனியன்.இதுல 'ய்ய்..ஹாய்' விவேக்.
அது சரி இப்படியொரு கம்ப்யூட்டர் டெக்னாலஜியோட வர்ர இன்டலெக்சுவல் காமெடிக்கு விவேக்தான் சூட்டாகும்.ஆனா காமெடிதான் செகண்ட் கிளாஸ்.

தம்பிக்கு எந்த ஊரு,பாண்டியன்,குரு சிஷ்யன் காலத்துலயே ரஜ்னி ஒரு சூப்பர் காமெடியன்னு ஒத்துக்கிட்டோமே.
ஆனா சாலமன் பாப்பையாவையும்,ராஜாவையும் சேர்த்திருக்க வேண்டாம்.

அதிலும்,எனக்கு ரெண்டு பொண்ணிருக்கு.பழகுங்க.புடிக்கலைன்னா ஃபிரண்ட்ஸா இருங்க ன்னு ரெட்டை இலை மாதிரி கையக் காட்டறதும்,தீபாவளிக்கு பொம்மைத் துப்பாக்கி வச்சு சுடறதும்...ஹ்ம்ம்ம்...பாப்பைய்யா..உமக்கு இது தேவையா?

மத்தபடி ரஜ்னி.விவேக் கூட்டணி களை கட்டுகிறது.

அதென்ன 'ரிச் கெட் ரிச்சர்...புவர் கெட் புவரர் னு கூவக்கரையைக் காட்டிட்டு வில்லேஜ் தேடி சிவாஜி தர்மபுரிக்கும்,மதுரைக்கும் பறக்கிறார்?சென்னைவாழ் ஏழைகள் தெரியலையா?

கள்ளப் பணம் யார் கிட்ட இருக்குன்னு கண்டு புடிக்கும் யுக்தியும் அதை அவ்வ்ளோ ஈஸியா வெள்ளையா மாத்தறதும்...என் காதோரம் அதுக்குள்ள நாலு முழ்ழம் பூ....கூல்.

அமெரிக்க ரிட்டண்டு ரஜினி கூல்...கூல்...சொல்லும் போது அழகு.

ஆனா நெறைய்ய ஆங்கிலக் கலப்பு வசனம் பேசுவது சி செண்டருக்கு ஒரு ஏமாற்றம்தான்.
பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த பைய்யன் சொன்னான்'தலைவர்ர் இங்கிலீஸ்ல பொளந்து கட்டறார்னு'

விவேக் காதலி நம்பனும்னா சாகிற மாதிரி நடின்னு ஐடியாக் குடுக்க ரஜினி
'என்னை வச்சிக் காமெடி கீமெடி பண்ணலையேன்னு 'சொல்லும் போது எனக்கு நம்ம பதிவுகள்தான் ஞாபகம் வந்தது.சோ பாப்புலர் .

ஃபியூஷன் மூலம் வெள்ளை வெளேர் ரஜினி நெஜம்மாவே கொள்ளை அழகு.
அழகு தேவதை ஸ்ரேயா அழகா டேன்ஸ் ஆடுறார்.

ப்பிரம்ம்மாண்ட செட்டிங்ஸ்,கிராஃபிக்ஸ்,வாய்ஸ் சின்க்ரனைஸ்டு பாஸ்வேர்டு,பியூஷன் அப்படின்னு நிறைய்ய ஜாலங்கள் ரசிக்கும்படி இருந்தாலும் 80 கோடி செலவிடாமலே எடுத்திருந்தாலும் இந்தப் படம் ஓடியிருக்கும்.

அதுவும் சஹானா பாடல் காட்சிக்கு மட்டும் 15 கோடியாம்.ஹூம்....

இன்னமும் ஒரே ஹீரோ நூறு வில்லன்களைப் பின்னிப் பெடல் எடுக்கிறது,எத்தனை கார்கள் மோதினாலும் ஹீரோ கார் சேதமடையாமல் இருப்பது,நம்ப முடியாத பல லாஜிக் இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

CPR ன்னு சொல்லி ஷாக் அடித்தப் பையனுக்கு உடனடி ஃபர்ஸ்ட் எய்டு குடுக்கிறார் ரகுவரன்.ஓகே.ஆனா ரஜினிக்கு ஷாக் அடித்து பல மணி நேரம் வேனில் கடத்தப்பட்டு டிராவல் செஞ்ச பிறகு CPR பலனளிக்குமா?சுஜாதாக் கிட்டதான் கேக்கனும்.கூல்...

குறைன்னு சொன்னா அடுக்கிக்கிட்டே போகலாம்.ஆனால்

ரஜினியின் இளமையாக்கப் பட்ட தோற்றம், துறு துறுப்பு,ஸ்டைல்,வேகம் இருக்கும்வரை ரஜினியை எல்லோருக்கும் [எனக்கும்] பிடிச்சிருக்கே.கூல்...கூல்

Sunday, July 1, 2007

மெசேஜ்னாலே..ச்சும்மா அதிருதில்ல

விதி வலியதுன்னு சொல்லுவாங்க.

அது 100/100 உண்மைங்கிறது இப்ப உங்க எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும்.
தம்பிங்களா உங்க பாசத்துக்கு ஒரு அளவேயில்லையா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

இல்லாட்டி வ.வா. சங்கத்துல இந்த [பாப்பா!!!!!!!]அக்கா வ அட்லஸ் 'வாலிபி' யா சேர்த்திருப்பாங்களா?

அது சரி ஆயிரம் ஸ்பேர் பார்ட்ஸ்ஸ நம்பி ஓடற வண்டின்னாலும் 'திருஷ்டி' கழிக்க ஒரு பூசணிக்கா ஓடைக்கறது சகஜம்.

அட தம்மாத்தூண்டு எலுமிச்சம் பழம் நசுக்கறதில்லயா?

அப்படி 'திருஷ்டி' கழிக்க நம்ம பதிவுகள்னு படிங்க.

என்ன கொடுமையிது சரவணா?[வாஜி?]

என்னோட சொந்தக்கார பசங்க ஒரு கூட்டமேயிருக்கு. சித்தப்பா பெரியப்பா,புள்ளைங்கன்னு
அவனுங்கல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு சொந்தம்தான்.

அதுல ஒரே ஒருத்தன் மட்டும் பத்தாப்புக்கு மேல படிப்பு ஏறாம பிசினஸ் பண்ண மத்தவங்க எல்லாம் பி.ஈ ..எம்.ஈ தான்.

இவனுங்களுக்கெல்லாம் காலேஜ்ல கேர்ள் பிரண்ட்ஸ் எக்கச் சக்கம்.

ஒரு ஃபங்ஷன் அது இதுன்னு ஒன்னா சேர்ந்தாங்கன்னா செம ரகளை.

அதுலயும் எந்நேரமும் 'பீப் பீப்'னு மொபைல்ல மெஸேஜ் வர ஒரே பீட்டர்தான்.

நம்ம பத்தாப்பூ தம்பிக்கு செம கடுப்பாயிடும்.

அவன் கையில செல்போனைப் பாத்தாலே இவனுங்க கலாய்ப்பானுங்க.

'உனக்கு ஏண்டா மொபைல்.மிஸ்டு கால் கூட நீயே குத்துக்கிட்டாத்தான்' அப்படின்னா கூட
'அது எப்படிடா குடுக்கிறது' ன்னு அப்பாவியாக் கேப்பான்.

போனவாரம் ஒரு ஃபங்ஷனுக்கு எல்லோரும் கூடியிருக்க நம்ம ஹீரோ முகத்துல ஒரே பல்பு.

ஒரு கூடை சன்லைட்...ஒரு கூடை மூன் லைட்....ஒன்றாகச் சேர்த்து..
ஜெக்ஜ்ஜோதி...ஜோதி தான்.

அடிக்கடி அவன் மொபைலுக்கு மெசேஜ் வேறு.

இவனுங்கல்லாம் விசாரிக்க ரெண்டு நாளா யார்க்கிட்டேயிருந்தோ எஸ் எம் எஸ் வந்துட்டேயிருக்குன்னான்.

இவனுங்க வாங்கிப் பார்க்க

ஹாய்

ஹௌ ஆர் யூ

ஐ மிஸ் யூ

இப்படி ஆரம்பிச்சு அவன் காலையில என்ன டிரஸ் போடணும் என்ன சாப்பிடனும் என்ன எல்லாம் பண்ணனும் என்ன பண்ணக் கூடாதுன்னு ஆர்டர் வேறு.

முக்கியமா 'தண்ணி 'அடிக்கக் கூடாதுன்னு.

பத்து நிமிஷத்துக்கொரு மேசேஜ். இவன் படிச்சிட்டு பதில் போட்றதுக்குள்ள அடுத்தது.

'யாருடா இது'

'தெரியாது'

'பேர் என்ன'

'தெரியாது'

'எத்தனை நாளா எஸ்.எம்.எஸ் வருது'

'நேத்துலேர்ந்து'

'அடப்பாவி அதனாலதான் நேத்து நைட்டு 'ரெட் லேபிள் 'இருக்குன்னு சொல்லியும் வேண்டாம்னுட்டியா'

'ஆமாம் ஆளு யாருன்னு தெரியலைன்னாலும் மெஸேஜ் வந்தா 'சும்மா அதிருதில்ல'.
அதான் அவ சொல்றத கேக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்'.

'போன்ல பேசியிருக்கியா'

'இல்லை.மெசேஜ் மட்டும்தான்'

'ஏய் இது ரொம்ப ஓவரு.இது ஆணா பொண்ணானு கூட தெரியாது.வேண்டாம் விட்டுடு

'வேலையப் பாருங்கடா' ன்னுட்டு அடுத்த மெசேஜுக்காக போனையே பார்க்க ஆரம்பிச்சான்.

'சரி ஓகே இது உண்மையான்னு பார்ப்போம் .நீ அவளைப் பார்க்கனும்னு சொல்லி மெசேஜ் குடு'
இவனுக்கும் சரின்னு பட்டது.

முதல்ல பேர் என்னன்னு கேட்க,.......என்று பதில் வந்தது.[இவனுங்ககிட்ட சொல்லலை]

பார்க்கனும் முடியுமான்னு கேட்க
என்னைக்குன்னு கேட்டு பதில் வந்தது.

ரொம்பக் குஷியாகி நாளைக்குன்னு சொன்னதும்
ஓகே ஆனால் ஒரு கண்டிஷன்னு ரிப்ளை வர்ர
எதுனாலும் சரி ன்னு பதிலினான்.

அதுக்கு வந்த ரிப்ளையைப் பார்த்ததும் முகத்தில ஈ ஆடலை.

என்னடான்னு இவனுங்கக் கேட்டும் சொல்லலை.

மறுநாள் பங்ஷனுக்கு இவன் எம்.ஜி.ஆர் மாதிரி [எம்.ஜி.ரவிச்சந்திரன்] வந்ததைப் பார்த்து உறவுக்காரங்க முகம் சுளித்தனர்.

'ஏண்டா என்னாச்சு உனக்கு நல்ல நாளும் அதுவுமா இப்படி மொட்டையோட வந்திருக்கே'
இவனுங்க பதறிப் போய் என்னாச்சுடா ன்னு கேட்க

நம்ம ஹீரோ,'cool...cool [கூல்] அவளுக்கு இந்த கெட்டப்னா ரொம்பப் பிடிக்குதாம்.அதான் நாளைக்கு மீட் பண்ணும்போது இப்படி வாங்கன்னா' என்றான் கூலாக.

நாங்களும் வர்ரோம்னு இவனுங்க சொல்ல' நோ கண்ணா பன்னிங்கதான் கூட்டமாப் போகும் சிங்கம் சிங்கிலாத்தான் போகும்' னுட்டான்.

ஃப்ங்ஷன் முடிந்து அவள் வரச் சொன்ன இடத்துக்கு இவன் போய் காத்திருக்க நேரம் போச்சு ஆள் வந்தபாடில்லை.

இவன் உடனே அவள் நெம்பரைக் கூப்பிட்டு தான் காத்திருப்பதாகச் சொல்ல,

இதோ நாங்களும் அதைத்தான் ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டிருக்கமே என போன் பேசியபடியே ஒளிந்திருந்த இவனுங்க வர

அப்பத்தான் புரிந்தது நம்ம ஹீரோவுக்கு ரெண்டு நாளா போன்ல தன்னை வச்சி காமெடி பண்ணது இவனுங்கதான்னு.இவனுக்காகவே ஒரு புது நெம்பர் வாங்கி பிளே பண்ணியிருக்கானுங்க.

ஏமாற்றத்தோடு கோபமும் சேர்ந்து கொள்ள [முடி வேறு போச்சே]மொபைலைத் தூக்கி எறிந்து விட்டுப் போனவன் இன்னைவரைக்கும் மொபைலை கையாலகூட தொடுவதில்லை.

எங்கயாச்சும் மேசேஜ் சவுண்டு கேட்டாக் கூட நம்ம ஆளுக்கு 'அதிருது'

டிஸ்கி: புலி உடனே அக்கா காதுல முழம் பூ சுத்தாதீங்கன்னு சொல்லும்.'சிவாஜியில' சுத்தறத விடக் கம்பிதான் தம்பி.இது 100% உண்மைச் சம்பவம்தான்.கொஞ்சூண்டு 'சிவாஜி மொட்டைய' மட்டும் லிங்க் பண்ணிட்டேன்.