Thursday, July 7, 2011

மரணம் : லதானந்த்


கோவையைச் சேர்ந்தவரும், முன்னாள் பதிவருமான லதானந்த் என்கிற ரத்தினவேலு அவர்கள் நேற்று உக்கடத்திற்கு அருகில் தனது மகிழுந்தில் சென்றுகொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் பல வார பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறார் என்பது அறிந்த செய்தி. அரசு பணியில் இருக்கும் இவர் காட்டதிகாரியாக பல்லாண்டுகள் பணிபுரிந்தவர். இவருக்கு இரு மகன்கள் உண்டு.

அன்னாரது ஈமக்கிரிகைகள் உடனடியாக செய்யப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனை நண்பர் கொல்லான் அவர்கள் பதிவர்களிடம் தெரிவித்தார்.

அன்னாருக்கு சங்கம் சார்பாக அஞ்சலிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம். குடும்பத்தாருக்கு மன உறுதியை அளிக்குமாறு ஆண்டவனிம் வேண்டிக்கொள்கிறோம்.

அன்னாரது செல்பேசி இணைப்பில் இருக்கிறதாம்: 94424-17689

(பிகு:இந்தப் பதிவு முன்பதிவாகவும் பிற்காலத்துக்கு உபயோகப்படும் விதத்திலும் பதியப்பட்டிருக்கலாம் )