Friday, August 14, 2009

ஆரப்பாளையம் போலீசார் Vs டவுசர் பாண்டிகள்

In certain situations, there is a classical function and responsibility there that must not be avoided, even if it is just to appeal to good sense.
- Jacques Derrida



தலித் கலை விழாக்கு மதுரை இறையிறல் கல்லூரிக்கு போய் கலந்துகிட்டு திரும்பும் போது நடந்த மேட்டரு இது.

" டேய் இருக்குறது வெறும் முன்னூரு ரூபாதாண்டா, அளவா குடிங்கடா" சுகுணா பொலம்பிக்கொண்டிருந்தான். உட்காந்து குடித்து கொண்டிருந்தது "கபடி கருப்பையா ஒயின்ஸ்" ஆரப்பாளையம் பஸ்ஸாடண்டுக்கு பக்கத்துல. நானும் ,கண்ணீர் புகை இருவரும் "டெரித்தா"வின் டவுசரை நார் நாராய் கிழித்துகொண்டிருந்தோம் , அவன் குரலை காதுல வாங்காம. பொறுமை தாங்காம எந்துரிச்சு நிக்கறது, பெருமுச்சு விடுறதுன்னு டிராஹன் எபெக்ட் கொடுத்தவனை பார்த்து எரிச்சலாகி கன்ணீர் புகை எழுந்து போலாம் வரவனை என்றார். சரி என்று கிளம்பி வெளியே வந்தோம். வைகை இங்க தானே ஓடுது, பக்கத்துல என்றார் க.பு. ஆமாம் அதோ தெரியுது பாருங்க என்றேன். அப்போது மழை பெய்து தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அருகில் போய் பார்க்க ஆசைப்பட்டார். சரி வாங்க போகலாம் என்று அருகில் போனோம். நான் வாய் சும்மா இருக்க மாட்டாம, " அங்க தெரியுது பாருங்க ஒரு குடிசை, அங்கதான் இஞ்சி விப்பாங்க " நம்ம அடிக்கிறதுலாம் என்ன சரக்கு அது ஒரு லார்ஜ் அடிச்சா ஆஃப் அடிச்ச மப்பிருக்கும்"( பொட்"டீ"க்கடை note the point) அப்படின்னு சொல்லிப்புட்டேன். அத புடிச்சுகிட்டாரு க.பு, சரி வாங்க போலாம் நானும் ஸ்கூல்ல படிக்கும்போது அடிச்சதுன்னு சொல்லி நடையகட்டுனோம். டேய் காசில்லடான்னு சுகுணா பொலம்பல ஆரம்பிக்க." ராசா அங்க உட்கார்ந்த்து குடிச்சாலும் ஆளுக்கு 30 ரூவாய்க்கு மேல் குடிக்க முடியாது' பேசாம வா ன்னு சொல்லி போய் உட்காந்தோம்.

மல்லிகா அக்கா கிழவியாகி போயிருந்துச்சு, அப்பலாம் பாத்தா அவ்வளவு அலம்பல கொடுக்கும், மாமூல் வாங்க வர போலீசு கூட உடுப்பில் வரக்கூடாதுன்னு கண்டிசன் போட்டுரூக்குன்னு கோசிப் சொல்லுவாய்ங்க. சிங்காரவேலன் படம் மிட்லேண்ட் தியேட்டரில் ரீலிஸ் ஆனப்ப இது கடைக்கு சாராயம் , இஞ்சி, குடிக்க வந்தவங்கலாம் லைன்ல நின்னுதான் வாங்கிட்டு போகனும் சொல்லிடிச்சு. அப்ப ரெண்டு லைன் நிக்கும் ஒன்னுபடம் பாக்க , ஒன்னு இஞ்சி குடிக்க. நான் இஞ்சி குடிக்க லைன்ல நின்னு வீட்டுல யாரோ போட்டு குடுத்துட்டாய்ங்க. வீட்டுக்குபோனா செம பரைடு , படம் பாக்க போனேன் வரிசை மாறி நின்னுட்டேன்னு சொல்லி தப்பிச்சது தனிக்கதை.

ஆளுக்கு ரெண்டு கிளாஸ் அடிச்சோம் , சரி போலாம் மணீ 11 என்றான் சுகுணா , என் டிரசும் அவன் டிரசும் மழையில் நனைந்து பார்த்தவுடன் சந்தேக கேசுல கூட்டிட்டு போய் உக்கார வைக்கிற மாதிரி இருந்தோம். க.பு குறுந்தாடி, சங்கிலியுடன் கூடிய கண்ணாடி ,இன்ஷர்ட், பார்மல் ஷு என்று "விஞ்ஞானி முருகன்" கெட்டப்பில் இருந்தார். பொறமையாக அவரை பார்த்தபடி பஸ்ஸடாண்ட் வந்தோம். கூட இருந்த இன்னொரு நண்பர் டைட்டாகி படுக்க இடம் தேடினார். அவரை தாங்கிபிடித்த படி பேருந்துக்குள் ஏறினால் நடத்துனர் ஏற்றவில்லை. அவரிடம் பயணிகளுக்கான உரிமைகள் குறித்து பொங்கியெழுந்து கொண்டிருந்தார் க.பு , அப்போது அங்கு வந்த ரோந்து போலிசாரிடம் புகார் சொன்னார் நடத்துனர். எங்களுக்கு லேசா டர்ரு கிளம்பிச்சு. போலிசுகாரய்ங்க எங்கள பாத்து இங்க வாங்கடான்னு கூப்பிட்டாய்ங்க. நானும் சுகுணாவும் பக்கத்துல போயி என்ன சார்னோம்.
அந்த நடத்துனர் வந்து இவைங்க நல்லவனங்க சார் ! அங்க நிக்கிறானே கண்னாடி அவந்தான் ரூல்ஸ் பேசுறான். ரூல்ஸ் பேசுனானா " எவேய்ன் அவேன் " என்று லத்தியை வாகாய் எடுத்து க.பு'வின் கு***யில் நாலு இழுப்பு வைத்தார். தன் பேண்ட்'ன் பின்புறத்தை தடவி விட்டவாறே உட்டாரு ஒரு டயலாக்கு, ஊருக்கு வந்து ஒரு வாரம் சிரிச்சோம் நானும் சுகுணா திவாகரும்.

" இப்ப நீங்க யாரை அடிச்சிங்க தெரியுமா' தமிழ்நாட்டோட மிகமுக்கியமான எழுத்தாளர" என்றபடியே நீவிக்கொண்டிருந்தார் பின்புறத்தை. அந்த போலீஸ்காரன் பாவம் பயந்து போயி ஸாரி சார் ! உங்களை பார்க்கறப்பவே நினைச்சேன், இவர பாத்துதான் தப்ப கணக்கு போட்டுடேன் என்றான் எங்களைப்பார்த்து. அதைக்கேட்டு க.பு மேலும் டென்சனானார். சார் வாங்க ஒ.பி(புறக்காவல் நிலையம்) ஸ்டேசன் போயி முகத்த கழுவிட்டு போலாம் என்றபடி அழைத்து போனார். அங்கு சென்று லெமன் ஜூஸ் அந்நேரத்துக்கு எங்கிருந்தோ வாங்கி வந்து குடிக்கச்சொல்லி உபசரித்துக்கொண்டிருந்த போது உள் நுழைந்தார் அக்காவல் நிலையத்தின் சார்பு ஆய்வாளர். எங்க நேரம் அன்னைக்கு சாயுங்காலந்தான் அந்த எஸ்.ஐ பொண்டாட்டியை எவனோ தண்ணியைப்போட்டு லந்த(கிண்டல்) கொடுத்துருக்கான். உள்ள வந்தவரு எங்கள ஒரு மாதிரியா பாத்துட்டு அந்த போலீச்காரன் பக்கம் திரும்பி என்ன கேசு, இது ? உக்கார வச்சு கொஞ்சிகிட்டு இருக்கேன்னு எரிச்சலா கேட்டான். அதுக்கு அந்த போலீசு' எழுத்தாளர்களாம் சார், அரசரடி மாநாட்டுக்கு வந்துருக்காங்க கொஞ்சம் ஓவராச்சு போல அதான் உங்காந்துட்டு போங்கய்யான்னு உக்காரா வச்சுருக்கேன் என்றான்.





யோவ் பஸ்ல ஏத்தி வெரட்டி விடுயா, சாயுங்காலத்துல இருந்து குடிச்சவுனங்களை கண்டாலே வெறி வருது என்றபடி , க.பு'வை அழைத்து எந்த ஊருயா நீ ! என்றார் . சென்னை என்றார், சுகுணாவும் சென்னை என்றே சொல்ல நான் எனது ஊரைச்சொன்னேன்.

சென்னைல எங்க ? என்றார் . நம்பர் 117 , பெருமாள்கோவில் தெரு, சூளை என்று கண்ணீர்புகை சொல்ல. சுகுணாவும் தனது முகவரியாக , நம்பர் 118 , பெருமாள்கோவில் தெரு , சூளை என்று சொல்லி அந்த எஸ்.ஐ யிடமும் க.பு'க்கு கு***யில் மேலும் இரண்டு வாங்கித்தர முயற்சித்தார்.

சரி என்னா பொஸ்தகம்யா எழுதிருக்கே என்றார்? உழைப்பை ஒழிப்போம் என்கிற புத்தகத்தை ஜெர்மன் லருந்து மொழி பெயர்த்திருக்கேன் சார் என்றார் க.பு'

புத்தக தலைப்பைகேட்டு பொறுமையிழந்த எஸ்.ஐ. சுகுணா திவாகரை நீ என்ன எழுதிருக்கே என்றார். நான் கவிஞன் சார் என்றார். அப்போ ஒரு கவிதை சொல்லியிட்டு போ என்றார்.

*பறக்க இயலா சிறகுகளின் ஓலத்தை
மேலும் கேட்டபடி தொடர்கிறது பயணம்
மாட்டுவண்டிகளின் தடம் நம் வாழ்க்கை
போல் காய்ந்த தரையில் இருக்காது
விழிகள் மூடு செவிகள் திற...

அவரு அவனையே பாத்துகிட்டு இருந்தாரு. புரிஞ்சுச்சா புரியலையான்னே தெரியல. சரி ஒழுங்க ஊரு போயி சேருங்க என்றபடி அனுப்பி வைத்தார்.

என்ன ரொம்ப போரடிச்சிட்டேனா, இனிமேதான் இருக்கு நம்ம "பஞ்ச்"

நாங்க போயி அடுத்த பஸுக்கு காத்துகிட்டு இருந்தோமா, அப்போ ஒரு நாலு பேரு கடலைவண்டி காரனுடன் போதையில் வம்பிழுத்துக்கொண்டிருந்தனர். நம்ம எஸ்.ஐ அங்க வந்தவர் அவனுங்களை கூப்பிடு விசாரித்து கொண்டிருந்தார். எதோ ஓவியர் மாநாடுக்கு கோவில்பட்டி போயிட்டு ரிட்டர்ன் ஆயிருக்கானுங்க போல


எஸ்.ஐ நம்மள பாத்து சிரித்துக்கொண்டே என்னய்ய இன்னைக்கு பூராம் கலைஞர்களா வந்து நம்ம தாலிய அறுக்குறிங்க என்றபடி அவனுங்களை அழைத்து எச்சரித்து ஒழுங்காய் ஊர் போய் சேரும் படி சொல்லிவிட்டு அவனுங்களை ஒருத்தன கூப்பிட்டு ஓவியம் வரைஞ்சுகாமிச்சுட்டு போ என்று உத்தரவிட்டார்.

நான் சிகரட் வாங்க போயிட்டு வந்து பாக்கறேன் , அவன போட்டு வெளுத்துகிட்டு இருக்காரு. 'ஏது அம்மன படம் வரஞ்சிட்டான் போலன்னு பக்கத்துல போனா, " யாருகிட்டடா பொய் சொல்ற பிராடுகாரா என்றபடி திரும்பவும் அடிக்கிறாரு. அப்படி என்னாதான் வரஞ்சானு பாத்தா

பாவம்யா அவனுங்க நவீன ஓவியர்கள். அவனுக்கு தெரிஞ்சத வரைஞ்சுருக்கான். அதுக்கு இந்த எஸ்.ஐ அவனிடம் "ஏண்டா சாயத்தை பூராம் கரச்சு ஊத்திட்டு ஓவியம்னா சொல்றன்னு அடி பின்னிருக்காரு.

-வரவனையான்

Friday, August 7, 2009

டவுசர்பாண்டிகளின் " அந்த" - பாகம் 2


டிரை சைக்கிள்காரன் நம்ம டவுசர்பாண்டியின் முப்பாட்டியின் அம்மாவின் கற்பையெல்லாம் கேள்விக்குள்ளாக்கி கொண்டிருந்தான். ஒரு வழியா அவன தாக்காட்டி மண்டபத்துக்கு போனோம். கருத்தரங்கம் நடத்துன டிரஸ்ட்காராரு தெரிஞ்சவன் சொந்தகாரய்ங்க, எதுத்தவீட்டுகாரய்ங்கனு அல்லாத்தையும் அள்ளி போட்டு வந்திருந்தாரு.

கருத்தரங்கம் துவங்கி பேசின மென்டல் டாக்டர் ஒருத்தர், இத எழுதறவைங்க எல்லாம் லூசுப்பயலுகங்கற மாறியே பேசி முடிச்சாரு. நம்மாளு கையை ஓங்கி முன்னாடி இருக்குறவேய்ங் சேருல குத்தி அந்த டாக்டர கொலைவெறியா பாத்துகிட்டே "வாடா தம் போட்டுட்டு வரலாம்ன்னு சொல்லி கிளம்ப நானும் பின்னடியே போனேன். நம்மாளு டென்சனாகிட்டா மட்டும் தான் தம் அடிக்க போயிடுவாரு. ஒரு நாளைக்கு இருவது தடவ டென்சனாவாரு. கக்குசு வரலைனா, அவங்கப்ப பாக்கெட்ல காசு ஆட்டைய போட கையவிட்டு அங்க காசில்லைனா, காது கொடைய எதுத்த கடை நாடாரு கடனுக்கு இயர் பட்ஸ் தரலைனா இப்படி அவரு டென்சனாக நிறைய காரணம் இருக்கும். இப்ப இந்த மென்டல் டாக்டரு காரணமாகிட்டாரு.

இவரு சாணிப்பேப்பரு ஒரு கட்டை கைல வச்சுகிட்டு என்னமோ The Brief History of Timeமை உலகத்துக்கு வாசிச்சு காட்டபோற மாதிரி தம்மடிக்கவும் , உள்ள வந்து உக்காரவும்னு பயங்கர படம் போட்டுட்டு இருந்தாரு. நான் அப்பன்னு பாத்து "ஆம்பளை கக்குசுலாதன் இப்படி எழுதி வைப்பானுகளா இல்ல பொம்பளைகளூம் எழுதுவாகலான்னு அசமம் தெரியாம கேட்டுவைக்க, டவுசரு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு. கொஞ்ச நேரம் கழிச்சு நாயகன் கமல் மாதிரி "தெரியலைப்பா"ன்னு உணர்ச்சிவசப்பட இவர கட்டுரை வாசிக்க கூப்பிட்டானுங்க. சரி "சனியன் சடைபோட்டு பூ வச்சு போகுதுன்னு" நிம்மதியா டீ குடிக்க போயிட்டு 10 நிமிசம் கழிச்சு வந்து பாத்தா அப்பவும் பேச ஆரம்பிக்காம மைக்க சரி பண்ணிட்டு இருந்தவரு ஒரு செருமல் செருமி வாசிக்க துவங்கினார்,

" முதலில் கழிவறை எழுத்துகளென்பதை கழிவறை இலக்கியம் என்று உலகம் ஏற்றுக்கொண்டது. ஆகவே அதை ஒரு இலக்கியமாக பார்க்கவேண்டும். நாம் கிழக்கில் உறைந்து போயுள்ளோம். மேற்கின் அறிவே நமது திறவுகோல், அதைப்பற்றி பார்த்துவிட்டு கழிவறைக்குப்போவோம். ( இதுக்கே கடைசி ஒரு வரிசை காலி) தோழர்களே ! இலக்கியம் - தத்துவம் அல்லது தத்துவார்த்த இலக்கியம் அல்லது இலக்கியபூர்வமான தத்துவம் இப்படித்தான் அவைகளை பார்க்கவேண்டும். அதற்கு முன் ஹெய்டேக்கரை நீங்கள் படிக்கவேண்டும். ஹெய்டேக்கரை படிக்கவேண்டுமானால் அதற்கு முன் ஹெகலிடம் இருந்து துவங்கவேண்டும். ( இன்னைக்கு இவன் பேச்ச கேட்டா எப்படியும் ஒரு 5 பேரு மென்டாலாகிடுவானுக - நமக்கு பேஷன்டுக்கு பேஷென்டாச்சுன்னு ' மென்டல் டாக்டர் சந்தோஷமான மாதிரி தெரிஞ்சுது என் கண்ணுக்கு )

அந்த என்.ஜி.ஓ க்காரரு பின்னாடி வந்து சட்டைய புடுச்சு இழுத்தாரு என்னை, சொல்லுங்க அங்கிள், ( புது ஸ்கூட்டி ஓட்டித்திரியும் வினோதா அவரு மகள் என்று தெரிந்த பின் அவரை அண்ணேன்னா கூப்பிட முடியும் ) இங்க பாருப்பா, டிரஸ்ட் ஆரம்பிச்சவுடனே ஒரு ரத்ததான முகாம், அப்புறம் ஒரு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் , அதுக்கு பிறகு ஒரு கருத்தரங்கம் நடத்துனாத்தான் பண்டு அலாட் பண்ணுவேய்ன்னு கலக்டரு சொல்லிட்டாரு அந்த கருமத்துகாகத்தான் இந்த எழவெல்லாம் நடத்துறேன். தெரிஞ்ச பயலாச்சேன்னு கூப்பிட்டா இப்படியா கொல்லுறதுன்னு கண்ணீர் மல்க டவுசர்பாண்டி மேல புகார் வாசிச்சார். "ஒன்னும் பிரச்சினையில்ல நான் கொடுக்கிற துண்டு சீட்ட அவருட்ட கொடுங்க டக்க்ன்னு முடிச்சிட்டு வந்திடுவாருன்னு" சொல்லி ஒரு சீட்ல " ஜானி ஒயின்ஸ் மாடி , ஓல்டு டிராவன் ஃபுல் ரெண்டே பேர்"ன்னு எழுதி கொடுத்துவிட்டேன்.

அதுவரைக்கும் அவரு படிச்ச எல்லா கழிவறை எழுத்துகளுக்கு பூராம் தத்துவார்த்த விளக்கம் கொடுத்து அரங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி கொண்டிருந்தார் டவுசரு.

"இதோ சமீபத்தில் திருச்சியில் ஒரு இலவச கழிவறையில் பார்த்த பாலியல் கலப்பில்லாத வாசகம் " எரிக்காத சக்தியும் ' செரிக்காத உணவும் சுடுகாட்டு தேரின் சக்கரங்கள்" இத எதுக்கு எழுதிருக்கான் அவனுக்கு அஜிரனம், கூடவே மலச்சிக்கல் சோ தன் துயரை அங்கு வெளிக்காட்டியுள்ளான். இதைத்தாண்டி "இன்செஸ்ட்" என்கிற வகையில் உள்ள எழுத்தகளை பற்றியும் கண்டிப்பாக இங்கு சொல்லவேண்டும் என்று ஆரம்பிக்க .அய்யயோ இவன் கூட வந்த கொடுமைக்கு நம்மளையும்ல அடி வாஙவைப்பான் போலருக்குன்னு மேடைக்கு சீட்ட கொடுக்க அதை இடக்கையால் "இசுடைலாக" ( சுத்த தமிழாம், ஸ் வடமொழியென்பதால் ஸ்டைல் , இசுடைலாக மருவிகிறது ) வாங்கியவரின் முழி நட்டுகிட்டது. அடுத்த வார்த்தையே "ஆகவே கழிவறை எழுத்தக்கள் நம் சமுகத்தை பிரதிபலிக்கிற கண்ணாடி என்று சொல்லி முடிக்கிறேன் என்றார். பேசி முடித்தபின் டிரஸ்டுக்கார அங்கிள் வந்து ஒரு 500ரூவாய் நோட்ட இவரு பாக்கட்டுல சொருவி விட்டாரு "வேணாங்க வேணாங்க ந்னு சொல்லிட்டே எடுத்து உள்பாக்கட்டுல வச்சுகிட்டாரு. நான் எஸ்கேப்பு.

மறு நாள் காலையில பாஸ்கர் இட்லிக்கடைல டவுசர பாத்து ஒரு 50 குடுங்க தோழர் ரெண்டு நாளையில தாரேன்னு நான் கடன் கேக்க "காசு இருந்தா ஒரு வில்ஸ் வாங்கி பத்தவச்சு அடிச்சிட்டு பாதி கொடுன்னாரு" சரி ரவுண்டா 500 வச்சுருக்காரு 1.75 ( அப்போதைய விலை ) வில்ஸுக்கு போயி அத முறிக்க சங்கட படுறாறோன்னு தம்மை வாங்கி கொடுத்தேன்.

நேத்து கோரிப்பாளையம் கலா லாட்ஜுக்கு போனேன்னு சொன்னாரு. எனக்கு கொஞ்சம் எரொடிக் கதை கேக்கபோறோம்ன்னு உள்ளுக்குள்ள தோணவே ஹார்வி நகர் மொத தெருவுக்கு கூட்டிட்டு போயி யாருமில்ல இங்க , இப்ப சொல்லுங்கன்னு கேட்டேன்.

அவரும் அவரு கூட ஒரு வீணாப்போன கவிஞரும் கலா லாட்ஜுகு போயிருக்கானுங்க. கலா லாட்ஜு "அந்த" மாதிரி லாட்ஜு. டவுசருக்கும் அவர் நண்பருக்கும் பெண்வாசணை என்பது 7அ பஸுல காலேஜுக்கு போகும் பட்டதுதான் அதுக்குபிறகு வெறும் "வறட்டிழுப்பு"தான். கையில 500ரூவாய் இருக்கவும் பல பத்தாண்டுகளின் பேராவலை போக்க போயிருக்கிறார்கள். அங்க போனதும் தலைக்கு 200 வாங்கிட்டானுக, அப்புறம் "உள்ளபோகும் " போது 50 ரூவாய் டிப்சு கொடுங்க இல்ல கம்பெனி கிடைக்காதுன்னு "புத்தி" சொல்லி அனுப்பிருக்கானுங்க. மொதல்ல கவிஞரு போயிருக்காரு, அடுத்து டவுசர் உள்ளே போயிருக்காரு. கால் லேசாக நடுங்குகிறது. முதன் முதலில் ஒரு பெண்ணுடன் தனியே என்று இவரின் நடுக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. விட்டால் தன் கால்சட்டையிலேயே ஒன்னுக்கு அடிக்கிற கண்டிசன்ல இவரு அந்த பெண் பாலியல் தொழிலாளியிடம் கேட்டிருக்கிறார் " டென்சனாய் இருக்கு ஒரு தம் அடிச்சிக்கவான்னு" அதுக்கு அந்த பெண் சொல்லியிருக்கா "ஏன்ய்யா நாங்க என்ன டீக்கடையா வச்சிருக்கோம்' இப்பத்தான் உனக்கு முன்னாடி வந்தவன் தம்மடிச்சிட்டு போன்னான்னு"

அன்னைல இருந்து தோழர் என்னை தம்மடிக்க கூப்பிடுறதே இல்லை

Thursday, August 6, 2009

டவுசர் பாண்டிகளின் கதை பாகம் 1



" கழிவறை எழுத்துக்கள் தவிர்க்கலாமா ? இல்லை, தலையெழுத்தா? " என்கிற தலைப்பில் ஞானஒளிபுரம் ( சின்னப்பிள்ளையில் ஒகாராத்தை ஓகாரமாய் சொல்லியும் சிறப்பு "ழ"கரம் போட்டும் முதுகில் அடிக்கடி வாங்கிக்கட்டிக்கொள்வேன் ) சமூகபணி மன்றத்தில் ஒரு வீணாய்ப்போன NGO கருத்தரங்கம் நடத்திக்கொண்டிருந்தது. நம்ம டவுசர்பாண்டிக்கும் கட்டுரை வாசிக்கும் வாய்ப்பு. சோலமலை தியேட்டரில் மட்ட மத்தியானம் வேகாத வெயிலில் எஸ்.ஜே. சூர்யாவின் "நியு"("ட்" சைலன்ஸ் போல ) எங்கிற புளுபிலிம் பார்க்க வரிசையில் நின்னுகிட்டு இருந்தவனை கூப்பிட, ஏஸ் வென்சுரா'வில் நெருப்புக்கோழியில் வந்திறங்கும் ஜிம் கேரி போல் ஒரு 350 CC யமகாவை கியர் மாத்துகிறேன் பேர்வழியென்று வதை செய்தவாரே வந்தான் "டேஞ்சர்" கிருட்டிணன். இவனும் ஒரு டவுசருபாண்டிதான், வயசு 40யை தொடப்போதுன்னு பேசிகிறாய்ங்க. கேட்டா "இளமையாய் சிந்திக்கும் இடத்தில் உறைந்து போனது வயது"ன்னு எதையாவது புரியாத மாறி சொல்லி கிறுக்குசுத்தி விட்டுடுவான். என்னய்யா கிருஷ்ணா ! படத்துக்கா இவ்வளவு மேக்கப்பு போட்டு வந்திருக்க.

சரி வண்டியை ஸ்டாண்டுல விட்டுட்டு வா'ன்னு சொன்னேன்.

ஸ்ஸ்ஸ்... பேர மாத்தாதட என் பேரு கிருட்டிணன்'ன்னான்.

அட தமிழ்க்கிறுக்கா, அப்படின்னா உன் பேர கண்ணன்னு மாத்திக்க வேண்டியதுதானே . கிருட்டினன் உருட்டினன் மிரட்டினன் அப்படின்னு இருக்கவனுக்கு நாக்க சுளுக்கு விழ வைக்கிறிங்கடா'ன்னு டென்சன் ஆனேன். இந்த படம் பார்த்துதான் ஆகனுமான்னு கேட்டான், ஆமாம்டா "சிவனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை - சிம்ரனுக்கு மிஞ்சிய பிகருமில்லை" மிஸ் பண்ண முடியுமா அப்படின்னு சொன்னேன்.



டேய் நான் கட்டுரை வாசிக்கபோறேன் வாடா'ன்னான்.எங்கடான்னு கேட்டா எங்க தெருவுக்கு எதித்தாப்ல இருக்கிற மண்டபம். வேணாம்ட அரியர் எக்ஸாம் பீஸ் கட்ட போறேன்னு சொல்லிட்டுதான் வந்திருக்கேன். என் ஜென்ம விரோதி எங்க அண்ணன் பார்த்தா நான் அவ்வளவுதான்.

வீட்ல தோடு ( பெந்தே கோஸ்தே) இல்லாதவைங்க கூட்டத்துல போய் உக்காந்துருக்கான்னு போட்டு கொடுத்திருவான், நான் வரலை தோழர்ன்னு சொன்னேன். இல்லட பின்னாடி வழியா ஏறிக்குதிச்சி போலாம்டான்னு சொல்ல தலையெழுத்தேன்னு கூட வண்டில ஏறி உக்காந்தேன். ஸ்டார்ட் பண்ணிட்டு கேட்டான். இந்த வண்டிக்கு விசை( கியராம்) எப்படி போடுறதுன்னு. இந்த வண்டி யாருது தோழர்ன்னு கேட்டேன்.

நம்ம ரெட்டை மண்டை அப்பா இருக்காரலுல அவருதுதான்னான். "ரெட்டை மண்டை" செல்வி டவுசர்பாண்டியின் தங்கை முறை. இவருக்கும் அந்த பேரு வச்சு கூப்பிடுறது தெரியாது என்று நினைதிருந்தேன் . பரவாயில்ல தோழர் நெருங்கிட்டார்ன்னு நினைச்சு. தோழர் அவங்க அப்பாதான் இறந்திட்டாருல்ல அதுமில்லாம அவங்கப்பன் சாகுகிறவரைக்கும் டயர உருட்டிகூட பார்த்ததில்லையே அப்புறம் எப்படி 350 CC யமகா வந்ததுன்னு கேட்டேன்.
நீ யார சொல்லுற' நான் சொன்னது ரெட்டை மண்டை ஃபாதரைத்தான் தமிழில் ரெட்டை மண்டை அப்பான்னு சொன்னேன்னான்.
அட ஒந்தமிழ்ல தீயை வாரிக்கொட்டன்னு நான் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நேரா போய் ஒரு டிரை சைக்கிள்காரனை தூக்கிட்டாரு.
( நாளை முடிக்கிறேன்)



முல, கப சுட்டி : http://kuttapusky.blogspot.com/2007/04/blog-post_27.html

Wednesday, August 5, 2009

கோழித்திருடன் Updated

புதிய வாசகர்களும் ரசிக்க, என்னுடைய பழைய சிறுகதையொன்று மீள்பதிவாக !!!

தங்கத்தமிழகத்து திருக்கோவிலூர் என்னோட சொந்த ஊருங்க...அதான் இந்த குறிஞ்சி கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த, அதாங்க, சாப்புடாம உண்ணாவிரதம் இருந்து செத்துப்போன கபிலர் குன்று இருக்குதே, அந்த ஊரு...

மூவேந்தர் முற்றுகை படையெடுப்புல செத்துப்போன கடையெழு வள்ளள்கள்ள ஒருத்தர் பாரி, அவரோட மகளுங்க அங்கவை, சங்கவைய திருக்கோவிலூர் ராஜா திருமுடிக் காரிக்கு கட்டிகொடுத்துட்டு, நன்பனுக்கு செய்துகொடுத்த கடமை முடிஞ்சுதுன்னு அந்தமாதிரி செத்துப்போனாராம் கபிலர்..இந்த காரியும் கடையெழு வள்ளல் தானே, ஏழாவது வகுப்புல படிச்ச நியாபகம் இருக்குதுங்களா ?

அங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர் மினிபஸ்ஸில் போனா நெடுங்கம்பட்டு என்ற கிராமம் வருமுங்க...அந்த காலத்துல திருக்கோவிலூரு ராஜா புலவருங்களை ஊருகளுக்கு பேரு வெக்கச்சொல்லி அனுப்புவாங்களாம்...நெடு நெடுன்னு நடந்து வந்ததால இந்த ஊரு நெடுங்கம்பட்டு, ஆடு மேஞ்சு கொழுந்து இல்லாத செடிங்களை பார்த்த ஊரு கொழுந்திராம்பட்டு, சடையை கட்டிக்கிட்டு ஒரு பொண்ணு நடந்து போன ஊரு சடகட்டி, அத்திமரம் இருந்ததால அத்திப்பாக்கம், ஆத்தோரம் மணல் அள்ளிக்கிட்டு மக்கள் இருந்த எடம் மணலூர்பேட்டை, அப்படீன்னு புலவருங்க பேரு வச்சாங்க அந்த காலத்துல...

இந்த கதை அதை பத்தி இல்லைங்க...ஒரு சம்பவத்தை பத்தி..இந்த சம்பவம் நடந்து ஒரு 8 வருடம் இருக்கும்...

எங்க தாத்தா போய் சேர்ந்த பிறது - நெடுங்கம்பட்டு கிராமத்தில எங்க கிழவி மட்டும் தனியா இருந்தது...நிலத்தை பார்க்கனும் இல்லையா...

நாம அப்பப்போ விசிட் அடிக்கிறது...காரணம் இரண்டு - ஒன்று - சுருட்டு மிலிட்டரி தாத்தாவோட சீட்டாட்டம்...

பத்து ரூவாயை வைத்து - கிழவனார் ஏமாந்தா - சுத்தி போதையில் ஆடுறவனுங்க கண்ணுலே மண்ணை தூவி - 50 ரூபாயை ஜெயிச்சிடலாம்...எல்லாம் திருட்டு ஆட்டம்தான்...கார்டுகளை ஒளித்து - மறைத்து - எப்படியாவது ஜெயிக்கிறது...

மற்ற காரணம் - நல்ல வெடக்கோழிகளை பங்காளிங்க உதவியோட அமுக்கி - காட்டுல கொண்டுபோய் வறுத்து திங்கறது.

இந்தமாதிரி தான் ஒருநாள்...கிளம்பி போறேன் கிராமத்துக்கு...

கிழவி வீட்டுலே பையை போட்டுட்டு - பத்துரூவாயை பாக்கெட்டுல சொருவிக்கிட்டு சுருட்டு கிழவனார் வீட்டுப்பக்கம் போறேன்.

தெரு முக்குல - என்னோட கண்ணு நெலை குத்துது.ஆகா.!!!



நல்ல எளஞ் செவப்பு கலர்ல - நல்ல வெடச்சாவல் ஒன்னு மேயுது.

அட இன்னாடா இது...போனவாரம் கண்ணுல படல..சந்தையில எவனோ புதுசா வாங்கிட்டு வந்திருக்காண்டோய்.

ஆவறதில்லையே இது...என்று சீட்டாட்ட கிளப்புக்குள் ( நம்ம கிழவனார் வீடுதான்) நுழைகிறேன்.

ஆட்டத்துல மனசே போவல...எப்படி அந்த கோழியை பிடிச்சு மொக்கறது (திங்கறது) என்பதுலேயே சுத்துதுடோய்.

ஆச்சு...சுருட்டை இழுத்துக்கிட்டே கிழவனார் - ரம்மி ஆட்டத்துல என்னை ரெண்டு புல்லு தூக்கினார். பிறவு கடைசியா ஒரு ஸ்கூட் அடிச்சார். பத்துரூவா போச்சு.

கிழவணார் கிட்ட திருடுன ஒரு அரை சுருட்டை பத்தவச்சிக்கிட்டே - யோசனையா வரேன்.

நம்ம பங்காளி கோபு - திருக்கோவிலூர்ல இருக்கான்.

ஒம்போது மணி மினி பஸ் டிரைவர் அண்ணாச்சிக்கிட்ட தகவல் சொல்லிவிடுறேன்.

போன் எல்லாம் ஏது எங்கூருல..அதுலயும் கோடு வேர்டு தான்.

அண்ணாச்சி.நாளைக்கு முனியப்பசாமிக்கு படையல் போடனும்.என் பங்காளி கோபு இல்லைன்னா கோபி - பஸ்டாண்டுல திரியுவானுங்க.கொஞ்சம் சொல்லிவிட்டுடுங்க..காலையில வெரசா வந்துடச்சொல்லுங்கப்பு.

என்றேன்.

கிழவி வீட்டுக்கு போய் - அது வைத்திருந்த காரக்குழம்பை ஒரு வெட்டு வெட்டிட்டு - அந்தி சாயும் நேரத்தில் குடிசை வீட்டு முற்றத்தில் கட்டையை சாய்த்தேன்..

டேய்.டேய்.ஏந்திருடா என்று கோபுவும் ( இப்போது ஊரில் விவசாயம் பார்க்கிறார்)- கோபியும் ( இப்போது இவர் போலிசாக இருக்கிறார்) எழுப்பினாங்க..

காலையில் ஏழு மணிக்கு முதல் பஸ்ஸை பிடித்து வந்துட்டானுங்க...

டேய்..எந்திரிடா..பொட்டையா இல்ல சாவலா, உடம்பு எத்தனை கிலோ தேறும், தொடை நல்லா இருக்கா ?

என்னம்மோ உலக அழகி போட்டியில கலந்துக்கப்போற கோழி மாதிரி ஆர்வமா விசாரிக்கானுங்க.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....கிழவி இன்னும் கொல்லிக்கு போவல...கொஞ்சம் இருங்க டோய்.என்றேன்..

கிழவி கிளம்பியது.

தூம்பாவுல இருந்து கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறேன்...காலையில் பல்லு விளக்கவில்லை.

அவ் அவ் அவ் அவ் என்று அரிசியை மெல்லாமல் குதப்புகிறேன்.

மெல்ல கிளம்பி போகிறோம் மூன்று பேரும்.

கோபி - பொட்டிக்கடைக்கு போயி எண்ணையை ஒரு கவரில் கட்டிக்கோ - மொளகாத்தூள் ஒரு கவரில் வாங்கிக்கோ - அப்படியே காட்டு கொல்லிக்கு வந்திடு...நம்ம இடத்துக்கு...என்றேன்.

உப்பு - மஞ்ச தூள் ??? என்றான் கோபி.

அது ஏற்க்கனவே பாலித்தீன் கவரில சுத்தி வைச்சிருக்கோம்.என்றான் கோபு.

டேய் கோழியக்காட்டுங்கடா...கோபு அவசரப்படுறான்.

இரு ராசா.கொஞ்சம் பொறு.இது நான்.

ஆங்...அதோ மேயுறான் பாரு.

சிவப்பு நிறத்தில் கும்முனு இருக்கு சாவல்.

அப்படியே வாயில் குதப்பிக்கிட்டிருந்த அரிசியை துப்புறேன்.கோழிக்கு வெகு அருகில்..

பொ..பொ...பொ...பா.

அரிசி கிட்ட வருது சாவல்.

லபக்..லபக் னு பொறுக்குது.

அஞ்சே நிமிஷம்..நாங்க அப்படியே பெறாக்கு பாத்துக்கிட்டு நிக்குறோம். ஏதோ எங்களுக்கும் இந்த கோழிக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி..

கோழி இப்ப லைட்டா தள்ளாடுது...பல்லு விளக்காத வாயில் புழுங்கல் அரிசியை போட்டு கொஞ்சம் குதப்பி, வாயிலேயே அந்த அரிசியை வைத்திருந்து அதை கோழி தின்றால், கோழிக்கு மயக்கம் வந்து விழுந்துவிடும். என்ன ஆசிட் இருக்கோ அதில் ? கோழிக்கு அதுதான் சயனைடு..

டேய் கோபு...தெருவுல யாரும் இல்லை..கோழிய அமுக்குடா..என்றேன்.

கையோடு கொண்டுபோயிருந்த சிமெண்ட் சாக்கில் அய்ட்டத்தை - கொஞ்சம் கழுத்தை திருகி - உள்ளே அனுப்புறோம்.

அப்புறம் - பரபரன்னு எங்க ரெகுலர் இடத்தில் சந்திப்பு...அந்தோனியார் காட்டுக்கோயில் அருகே.

எங்க ஆப்பரேஷன்களுக்காக தயாராக - ஒரு புதரில் ஒளியவைத்திருக்கும் - வாணல் - கரண்டி வெளியே வருகிறது...உப்பு, மஞ்சள் தூள், எண்ணை ஆகிய துணைவர்களும் தயாராகிறார்கள்.

காட்டில் திரிந்து, கொஞ்சம் நன்றாக காய்ந்த சுள்ளிகளை கொண்டுவருகிறான் - கோபி.

கோழியை உரித்து - மஞ்சள் தடவி லைட்டாக தீயில் காட்டி - பிறகு பீஸ் போட்டு - மிளகாய்தூள் - உப்பு போட்டு - எண்ணை சட்டியை வத்து - வேலை ஜரூராக நடக்குது.

இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கட்டையை எடுக்கிறான் கோபு....ஏற்க்கனவே குடித்து மீதி வைத்திருந்த வாத்தை - புதரில் இருந்து எடுத்து வருகிறான் - கோபி.

(கட்டை : விஸ்கி குவார்ட்டர் - காரணம் குள்ளமா இருக்கில்ல... வாத்து - புல் பாட்டில் சரக்கு - காரணம், ஓப்பன் செய்யும்போது - வாத்து கழுத்தை திருகுவது மாதிரி திருகனும் இல்லையா, இது சகாய விலைக்கு மிலிட்டரி மாமாவிடம் வாங்கிய ரம்.)

வேலை முடிஞ்சது...ஏப்ப்ப்.

பெருத்த ஏப்பம் ஒன்றை விட்டுவிட்டு, பதினோரு மணிவாக்கில் வீட்டுக்கு வந்து, கிணற்று தண்ணீர் ஒரு சொம்பு குடித்துவிட்டு, கட்டையை மீண்டும் சாய்க்கிறேன்...ஜில்லென வேப்ப மரத்து காத்து சலசலக்க, அரை மயக்க போதையில் எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது...

சாயங்காலம் - கிழவி லபோதிபோ என்று அலறும் சத்தம் கேட்டு எழுந்துகொள்கிறோம்.

பாடையில போவ...கட்டையில போவ என்று சென்சார் செய்யாத வார்த்தைகளை அள்ளி தெளித்துக்கொண்டிருக்குது எங்க ஆயா.

மண்ணை வாரி விட்டு சாபம் கொடுத்துக்கிட்டுருக்கு.

ஓ..ஆயா...நிறுத்து...இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி கூவுற...என்றேன் சிவந்த கண்களுடன்.

கம்முனாட்டி..எடுபட்ட பய..படுபாவி - சாண்டாக்குடிச்சவன் - கட்டையில போவ என்று மீண்டும் ஆரம்பிக்குது.

தே, என்னா ஆச்சு மொதல்ல சொல்லு அத்த.என்றேன்.

போனவாரம் சந்தையில ஒரு கோழி வாங்கி வச்சிருந்தேன் டா..பாவிப்பய எவனோ அத்தை திருடி தின்னுப்புட்டான்...எடுபட்ட பய...கட்டிய திண்ணவன்., முனீஸ்வரனுக்கு படையல் போட்டு அவன் கையு காலு வெளங்காம பண்ணனும்.

ஆடு மேய்க்கிற பசங்க - செவப்பு சாவல் ரெக்கை காட்டு கோயில் பக்கம் கிடக்குன்னு சொல்லுறானுங்க.

பாடையில போவ..கட்டையில போவ..என்று மீண்டும் ஆரம்பிக்குது.

அடக்கொடுமையே, நம்ம வீட்டு சேவலை நாமே மாஸ்டர் ப்ளான் போட்டு திருடி தின்னுருக்கோம்.

சரி சரி சாவனை விடாத ஆயா.

எந்த நெலமையில நம்ம வீட்டு சேவல்னு தெரியாம திருடி திருடினானுங்களோ.என்றேன்.

Tuesday, August 4, 2009

அண்ணா நகர் ரவுண்டானாவும் நைக்கி ஷூவும்


ஹல்லோ..ஏ.எஸ்.எல் ப்ளீஸ்..

நாகா, என்னாது அது ஏ.எஸ்.எல் அப்படீன்னா ?

நாகா என்னுடைய அலுவலக நன்பர். கண்ட மொக்கை படங்களையும் 2002ல் இருந்து 2004 வரை என்னுடன் இணைந்து பார்த்தவர்..முந்தின நாள் இயற்கை என்ற ஷாம் நடித்த மொக்கை படம். க்ளைமாக்ஸ் மட்டும் மாற்றியிருந்தால் ஷாம் தமிழின் முன்னனி ஹீரோவாக மாறியிருந்திருக்கக்கூடும். லீவ் தட் அஸைட். கணிப்பொறியும் சாட்டும் அப்போதுதான் எனக்கு அறிமுகமான காலகட்டம். காரணம், அலுவலகத்தில் கிடைத்த இலவச இண்டர்நெட்.

கல்லூரி காலத்தில் ஒருமுறை மணிக்கு 100 ரூபாய் கொடுத்து யாகூ டாட் காமில் மின்னஞ்சல் முகவரி உருவாக்க முயன்று தோற்றபின், இணையத்தை காசு கொடுத்து எந்த ப்ரவுசிங் செண்டரிலும் பார்ப்பதில்லை என்ற கொள்கை முடிவால், அலுவலகத்தில் நிரந்தர வேலை கிடைத்தபின், வேலை நேரம் முடிந்து ஓஞ்ச வாழப்பழம் கிடைக்கும் மொக்கையான மத்தியான நேரங்களில் இண்டநெட்டும் சேட்டும்.



டேய். ஏ எஸ் எல் அப்படீன்னா, ஏஜ், செக்ஸ், லொக்கேஷன்.

ஐ..செக்ஸா ?

முண்டம். செக்ஸ்னா ஜெண்டர். ஆம்பளையா, பொம்பளையான்னு கேக்குறது.

சரி. இந்த சாட்டிங் ரூம்ல எப்படி போறதுன்னு கொஞ்சம் சொல்லிக்குடு மாமா...

உன்னோட யாகூ ஐடியை வெச்சு உள்ளாற போகனும்டா. அப்புறம் சாட் ரூம் அப்படீங்கறதை க்ளிக் பண்ணினா, சென்னை ரூம், மும்பை ரூம், இண்டியா ரூம் அப்படீங்கறமாதிரி வரும்.

அதில் ஒன்னை க்ளிக் பண்ணிட்டேன்னு வை. உன்னுடைய ஐடி ரூம் உள்ளாற எண்டர் ஆகிரும். அதுக்கு அப்புறம் நீ பேசுறது எல்லாருக்கும் தெரியும்.

அப்படியே ஓரத்துல பார்த்தியா. பேரு எல்லாம் வருது. அதுல ஒரு நல்ல பிகர் பேரா எடுத்து, சேட்டிங் பண்ணவேண்டியது தான்...

மாமா, உன்னோட மூஞ்சி அதுல தெரியுமா ?

நாகா, மேட்டுக்குடி கவுண்டர் ரொமாண்டிக் லுக்கோட என்னைய பாக்குறார்.

இல்லைடா. போட்டோ போட்டாதான் தெரியும்.

அதான், உன்னோட மூஞ்சிய மட்டும் பாத்தாளுங்க, கம்ப்யூட்டர ஷட்டவுன் இல்ல பண்ணிட்டு ஓடுவாளுங்க.

கு.ரங்கா. ஒழுங்கா பாருடா...எப்படி பிகரை மடக்கி காட்டுறேன்...

அதில் ஓரத்தில் இருந்த gayathiri2000 என்ற ஐடியை ஒரு க்ளிக் செய்கிறார் நாகா.

Naga -> hello. asl please.

gayathiri2000 -> 'male here'

என்று உடனே பதில் வருகிறது...

மாமா. ஹி ஹி. ஆம்பளையாம்ல. இருந்தாலும் பரவால்ல, பேசு மாமா.

டேய். என்ன என்னா 'அவன்' னு நினைச்சியா ? பிகரை மட்டும்தான் மடிப்பான் இந்த மகாதேவன். ஆம்பிளைன்னா பேசக்கூட மாட்டேன். அவனும் பேசமாட்டாண்டா..எதிர்முனையில் ஒரு மொக்கை ஸ்மைலி வந்தவுடன் அந்த விண்டோவையே க்ளோஸ் செய்கிறார் நாகா..

நாகாவை பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லனும்னா, நாகா பேஸிக்கலி ஒரு கொலுட்டி. தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தவர், கொஞ்சம் ஆந்திரா கருப்பு. டி நகர் ரேணுகா ஹோட்டலில் அவர் தின்ற பருப்பு பொடியை மட்டும் மூட்டை கட்டினால் ரெண்டு ஊரு ஒரு வாரத்துக்கு திங்கலாம்...அவர் அப்பாகாரு, தெலுங்குதேசத்தில் தீவிர பொண்ணு வேட்டையில் இருந்தாலும், நாகா காருவுக்கு சிங்கார வேலன் கமல் மாதிரி, ஒரு பொண்ணை பார்க்கனும், அப்புறம் லவ் பண்ணனும், அப்புறம் கல்யாணம் கட்டனும், என்ற கொலைவெறி.

தினமும் நாகாகாரு கண்ணாடி பார்த்து தலை வாறுவதால், நேரடியாக சென்று ஐ லவ் யூ என்று ப்ரப்போஸ் செய்தால் பிகர்கள் வெளக்குமாறு, ஹை ஹீல்ஸ், கருங்கல் என்று கையில் கிடைப்பதை கொண்டு அடிப்பார்கள் என்ற உண்மை தெரிந்ததாலோ என்னமோ, கடந்த ஒருவருடமாக asl asl asl என்று யாகூவிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்...

அப்படித்தான் திடீர்னு ஒரு நாள்...

டேய் டேய் டேய்...சிக்கிருச்சு, சிக்கிருச்சு..என்று கிசுகிசுப்பாக அலறுகிறார் நாகா...

அது ஒரு வெள்ளிக்கிழமை மதியம்..

ஏதோ ஒரு ப்ராஜக்டில் ஏதோ ஒரு பைல் ஒர்க் ஆகவில்லை என்று நான் மண்டை காய்ந்துகொண்டிருக்க. நாகாவோ, ஏதோ பழமும் பாலும் நழுவி வாயில் விழுந்தது போல சந்தோஷத்தில் துள்ளுகிறார்.

அவருடைய இடத்தில் இருவரும் ஐக்கியமானோம்.

annanagar80 என்பது ஐடி. நாகா குஜாலாக பேச பேச, எதிர்முனையும் பேச, உற்சாகமாக சேட்டுகிறார் நாகா...

ஞாயிற்றுக்கிழமை அண்ணா நகர் ரவுண்டானாவில் வந்து காத்திருப்பதாக எதிர்முனை குயில் கூவுகிறது...

அலைபேசி எண்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஞாயிறு காலைதான் அந்த அலைபேசி எண் தன் கையில் இருக்கும் என்றும், அப்போது மட்டுமே அழைக்குமாறும் டைப்புகிறார் சாட் அழகி...

அன்றைக்கு இரவு பார்ப்பதாக இருந்த மொக்கை படத்தை ஸ்கிப் செய்துவிட்டு, பிகர் கிடைத்த குஜாலில் சரக்கை போட்டுவிட்டு, மல்லாந்துவிட்டார் நாகா...

ஆயிற்று ஞாயிற்றுக்கிழமை...

திருவான்மியூரில் சோம்பலாக விடிகிறது என்னுடையது...ஊருப்பட்ட துணிகள் துவைக்க..அப்படியே பல்லு கூட விளக்காமல் அண்ணன் கொண்டுவந்த் இட்லி பார்சலை உள்ளே தள்ளிக்கொண்டிருக்கும்போது, ரிங் ரிங்.

எதிமுனையில் நாகா..

யோவ் என்ன ஆச்சு அண்ணா நகர் ?

இன்னும் போகல டா..

நாகா, என்ன நேரக்கொடுமை இது ? இன்னுமா போகல ?

என்னொட அப்பா நேத்து நைட்டு ஏதோ வேலையா கெளம்பி சென்னை வந்துட்டார். அவரோட அம்பத்தூர் போறேண்டா. உனக்கு அவளோட நம்பர மெசேஜ் அனுப்பியிருக்கேன். நீ போயி பாருடா..வெக்கட்டா ?

நாகா, நாகா, என்ன பேரு அவளுக்கு ?

எவனுக்கு தெரியும் ? நீ ரவுண்டானா போய் அவளை கால் பண்ணு. அவள்ட்டே கேட்டு தெரிஞ்சுக்கடா. கிங். துண்டித்துவிடுகிறார் நாகா...





திடீரென இதயத்துடிப்பு அதிகமாகிவிட்டது எனக்கு. மேற்கொண்டு இட்லி இறங்கவில்லை. அண்ணனோட யமஹா சாவியை எடுத்துக்கொண்டு, எவ்வளவு வேகமாக ட்ரஸ் பண்ண முடியுமோ, அவ்வளவு வேகமாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு, பைக்கை ஸ்டார்ட் செய்கிறேன் நான்..

தொடரும்...!!!

Monday, August 3, 2009

I am Back- சாம் ஆண்டர்சன்

சாம் ஆண்டர்சனின் முதல் படத்தை இயக்கிய ஸ்டான்லி, தனது ரெண்டாவது படத்திலும் சாம் ஆண்டர்சனை கதாநாயனகாக தேர்வு செய்திருக்கிறார். படத்திற்கான தலைப்பை தேர்ந்தெடுக்கும் உரிமையை பதிவுலகத்திற்கு விட்டுக்கொடுத்திருக்கார். இந்த முறை இசையமைப்பது அவர் இல்லையாம். தேவா அ வித்யாசாகராக இருக்கலாம் என அறிவித்திருக்கிறார்.

ஆதலால் அடுத்தப் படத்திற்கான தலைப்பை நீங்களே சொல்லுங்க.