Sunday, January 23, 2011

அகடன் அவசர மீட்டிங்

”என்னா வெயிலு என்னா வெயிலு.”..புலம்பியபடி கூடியது. அகடன் நிருபர்குழு. வெசாலக்கிழமை வரவேண்டிய புக்குக்கு இன்னும் மேட்டர் சிக்கலை, திங்கக்கிழமையாயிபோச்சுன்னு ஒரு ஃபீலிங்தான். சினிமா சின்னி, அரசியல் கோட்டான், எலக்கிய எசக்கி, பீட்டரு எல்லாரும் வெயிட்டிங்...ஆங் எதுக்கா, ஜூசுக்கு தான், அதை குடிச்சுத்தொலைஞ்சாத்தான் கெரகம் பேசவே வருதாம்.

ஏய்யா எசக்கி,  உன்னோட பார்ட் ரெடியா?ன்னி சின்னி கேக்க, எசக்கி ஒரு பெரிய கொட்டாவியை ரிலிஸ் பண்ணிட்டே..ஆங்க்க்க் என்னா கேட்டே, இன்னும் இல்லைப்பா, எடிட்டரு வேற புதுசா எதாவது படிச்சு வெமர்சனம் எழுது உயிரை எடுக்கறாரு, யாரு எழுதறதும் புரிஞ்சு தொலையலை, என்னா பண்றதுன்னு பேஜாராக்கீது. பாரு ஒரு புக், சுமோ ஒரு புக்குன்னு இஷ்டத்துக்கு மாசம் ஒன்னு எழுதுறாங்க, அத்தப்படிச்சு புரியறதுக்குள்ள நாக்குத்தள்ளுதுப்பா...உன் கதை என்ன?

அரசியல் கோட்டான், அதே தான் இங்கயும் இந்த தலீவரு இப்படி சொன்னாரு, அந்ததலீவரு அப்படி சொன்னாருன்னு எதாவது ஒரு வார்த்தையை போல்ட் பண்ணிபோட்டாப்போதும், நம்ம மேட்டர் ஓவரு..ஏப்பா சின்னி நீ என்னா பண்றே?

அட 6 படாவதி படம் ரிலீஸ் ஆவுது, அத்தனையும் பார்க்கனுமாம், இதுக்கு நான் 4 எருமையை மேய்ச்சுட்டு ஊரிலேயே இருந்திருப்பேன். எந்த டைரடக்கரு,ஹீரோ எவனைப்பார்த்தாலும் அவிங்க படம்தான் உலகத்திலே சொல்லாத கதையும் எல்லாப்படமும் 100 நாள் ஓடற மாதிரியுமே பில்டப்பு விடறாங்க, கடுப்பா இருக்குது...இந்த வேகாத வெயிலுல எங்க சுத்தி யாரைப்பார்த்து என்னா செய்யறது...


எசக்கி ஒரு மார்க்கமா சிரிச்சுட்டெ, ம்ம்க்கும் இதுக்கு ஏன் நீ டென்சன் ஆவுறே, நமக்குன்னே இருக்காங்க ப்ளாக்கர்ஸ், கைக்காசைபோட்டோ, ஆபிசிலேயோ டைமை செலவு பண்ணி புக்கை படிச்சு, சினிமாவைப்பார்த்து, அரசியலை அலாசி புழிஞ்சு காய வச்சு, ஒலக படம் முதக்கொண்டு ஊறுகாய் வரைக்கும் அவிங்களுக்கு தெரியாத மேட்டரே இல்லை. என்னா எழவு, அவிங்களுக்கு நம்ம பொஸ்தகம்  மேல ஒரு தனி கிக்கு, அவிங்க பேரை நம்ம பொஸதகத்திலே எங்காவது ஒரு ஓரத்திலே பார்த்தாக்கூட மேடு மேயற அளவுக்கு புல்லரிச்சுடுவானுக, அவங்கள்ல யாரையாவது பிடிச்சு ஃப்ரெண்ட் வச்சுக்க, நம்ம புக்குல 120 பக்கத்துல 40 பக்கம் ஃபுல் பண்ணிடலாம், மீதிக்கு இருக்கவே இருக்கு வெளம்பரம்.


சின்னி, அட ஆமால்ல, எப்பேர்ப்பட்ட டூபாக்கூர் படமா இருந்தாலும் அதையும் அக்குவேற ஆணிவேறையா பிரிச்சு மேய்வாங்க, எந்தப்படம் எதோட காப்பின்னு லின்க் கொடுத்து காட்டிக்கொடுக்கிறாங்க. எப்படித்தான் முடியுதோ? நாலு பேர் எழுதின விமர்சனத்தை படிச்சு அங்கங்க போட்டா போட்டு கவருக்கு தக்கன மார்க் போட்டா ஓவரு. ஏண்டா கோட் போட்டு உக்கார்ந்து மார்க்கா போடறேன்னு ஒரு பய நம்மளை கேள்விகேக்க மாட்டான்.

அது மட்டுமா? பாருவே மறந்துபோன கதையெல்லாம் கட்டம் கட்டி காட்டுவாங்க. ஒரு கவிதை, கதை விடாம படிச்சு சொல்லிடறாங்க, அதை நாம அப்படியே கொஞ்சம் உருவி அந்த எழுத்தாளன் போட்டாவை போட்டுட்டா.. அடடா..அகடனுக்கு இம்புட்டு அறிவான்னு மெச்சிக்கலாம், இதையே தொகுத்து ஒரு பொஸ்தவமா போட்டு கல்லா கட்டிடலாம்.

கூகுள்காரன் இலவசமா ப்ளாக் எழுத கொடுக்கிறான், இவிங்களும் எழுதறாங்க, இவங்க படிப்பாங்கன்னு தானே நாமளும் நல்ல ப்ளாக் கெட்ட ப்ளாக்குன்னு ஒரு பக்கத்தை வச்சு ஹிட்ஸ் வாங்கி வெளம்பரத்தில அள்ளறோம்..

 
ப்ளாக்கர் யாரையாவது ப்ரெண்ட் புடிச்சா அகடனுக்கு நல்லது, வலைமேயுதுன்னு ரெண்டு பக்கம், கல்காடுன்னு ரெண்டு பக்கம் கவிதையை நிரப்பிடலாம்.. அவங்க பேரு வருதுன்னு புக்கும் விக்கும். ப்ளாக்கர்ஸ் இல்லனா நாமல்லாம் நெசமாவே வேலை செய்யவேண்டியிருக்கும்டி, இப்படி நோகாம நோம்பிகும்பிட முடியாது. அவங்களும் இதெல்லாம் வெளியிட காப்பிரைட்ஸ் போட்டான்ங்கன்னு வைய்யி, நம்ம வேலைக்கு சங்குதான், நெச ரிப்போர்ட்டர்ஸ் ப்ளாக்கர்ஸ் தான், ப்ளாக்கர்ஸ்ஸை நம்பித்தாண்டா ஸோ கால்ட் எழுத்தாளர்கள் இருக்காங்க. இவங்க புக் போட்டா சங்கம் வச்சு நட்பு வளர்த்தும் பாசத்துக்காகவாவது 4 பேர் படிப்பாங்க, நாமளே நம்ம புக் விக்க இதை முதல்ல மைண்ட்ல செட் பண்ணி அப்புறமா வாய்ஸ்ல கேளுங்கப்பு. எவனோ ப்ளாக்கர்ஸை கிண்டல் பண்ணிக்கொடுத்தா உடனே பூரிக்கவேண்டாம், அவனே அவன் ப்ளாக்க்ல அகடனுக்கு வச்சிருப்பான் ஆப்பு. சாக்ரதை மாப்பு..

இப்படியே புலம்பிட்டு நெட் ஓப்பன் பண்ணி ஒவ்வொரு ப்ளாக்கா பார்த்து திருட ஆரம்பிச்சு அந்த வார இஷ்யூக்கு மேட்டர் தேத்த ரெடியாயிட்டான்ங்க......


டிஸ்கி.:இன்னும் வரும்