Saturday, December 30, 2006

வாலிபமே வா... வா...

"வருத்தமில்லா வாலிபர் சங்கம்" - இந்த வார்த்தையைக் கேட்டாலே ஏதோ உருப்படாதவர்களின் சங்கம் என்று முகம் சுளிக்கும் வயோதிகர்கள் நிறைந்த உலகம் இது. வருத்தப்பட்டு என்ன ஆவப்போகுது என்று முடிவு கட்டி சங்கம் அமைப்பது ஒரு பெரிய குற்றமா என்ன? "வருத்தப்பட்ட வயோதிகர் சங்கம்" இதுவரை நமது சங்கத்தை விட பெரியதாக என்னத்தை சாதித்தது என்று சவால் விட்டு என் அட்லஸ் வாலிபர் மாதத்தை ஆரம்பிக்கிறேன். என்னையும் ஒரு வாலிபனாக மதித்து 2007 ஆண்டின் முதல் அட்லஸ் வாலிபராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி!

வால் முளைத்ததால் தான் "வாலி" என்று இராமாயண வாலிக்கு ஒரு பெயர் வந்ததோ என்று சில சமயம் நினைப்பேன். வால் இல்லாவிட்டாலும் வாலிக்கான குணநலன்கள் கைவரப்பெற்றவர்கள் வாலிபர்கள் என்பதாலோ என்னவோ நம்மை "வாலி"பர்கள் என்று அழைக்கிறார்கள். வாலிபப் பருவத்தில் வருத்தமில்லாமல் இருந்தவர்களைக் காட்டிலும் நாட்டுக்காக, வீட்டுக்காக வருத்தப்பட்ட வாலிபர்களையே அதிகமாக சரித்திரம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.

"வாலிபம்" என்ற சொல்லினைக் கேட்கும் போது பலருக்கு பல விதமான எண்ணங்கள் தோன்றும். "கெயிட்டி", "ஜோதி" தியேட்டர் ரசிகர்கள் இந்த வார்த்தையைக் கேட்டதும் புரிந்துகொள்வது வேறு மாதிரி. இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் இந்த சொல்லை கேட்கும்போது மாவீரர் பகத்சிங்கையும், ஜனநாயக வாலிபர் சங்கத்தையும் நினைவுகொள்வார்கள். சிலபேருக்கு பாரதியும், இயேசுபிரானும் கூட நினைவுக்கு வருவார்கள். ஆத்திகர்கள் சிலருக்கு கிருஷ்ணபகவானின் வாலிபவயது குறும்புகள் நினைவுக்கு வரும். மொத்தத்தில் "வாலிபம்" என்பது ஒவ்வொருவரும் கடந்து வரும் ஒரு பருவம். கவலைகளின்றி வண்ணத்துப் பூச்சிகளாய் உலாவரும் ஒரு பருவம். சில பேருக்கு தங்கள் கொள்கை, குறிக்கோள் எதுவென்று இனங்காணும் பருவம். வளமான அல்லது மோசமான எதிர்காலத்துக்கான வாசலே வாலிபம் தான்.

வாலிப வயது நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்து வாழ்க்கை முழுவதுக்கும் சுவையாக அசைப்போடும்படியான நிகழ்வுகளாக அமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் மறக்கமுடியாத ஒரு சம்பவம் அவன் வாலிபப் பருவத்தில் கட்டாயம் நிகழ்ந்திருக்கக் கூடும். அது முதல் காதலாகவோ, நட்புவட்டமாகவோ, மறக்கமுடியாத அனுபவமாகவோ அல்லது வேறு ஏதாவது கந்தாயமாகவோ இருக்கக் கூடும். அதுமாதிரியான மறக்க முடியாத சம்பவம் ஒன்றினை நினைவுகூர்கிறேன்.

நம்ம ஹீரோவுக்கு அப்ப இருபது வயசு. கட்டிளம் காளை என்று சொல்லமுடியாத டொக்கான, ரொம்ப ஒல்லியான உருவம் (கிட்டத்தட்ட துள்ளுவதோ இளமை தனுஷ் மாதிரி). ஹீரோ தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் ஒரு சின்ன கம்பெனியில் வேலை பார்க்கிறார். தினமும் காலை 8.30 மணிக்கு மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் 45E பேருந்துக்காக காத்திருப்பார். 45E பேருந்துக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. அந்தப் பேருந்து குருநானக் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரி, ராணிமேரிக் கல்லூரி ஆகியவற்றைக் கடந்து மாநிலக்கல்லூரி வரை செல்லும். எட்டரை மணிக்கு பேருந்தில் வரும் பயணிகள் எந்த ஏஜ்குரூப்பில் இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சில நாட்களுக்கு சுவாரஸ்யமில்லாமல் பேருந்தில் சென்று கொண்டிருந்தவருக்கு திடீரென வாழ்க்கையில் பேருந்து வாயிலாக வசந்தம் தோன்றியது. அந்த வசந்தமும் அதே பேருந்து நிறுத்தத்தில் நம்ம ஹீரோவோடு பயணித்து எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரிக்கு சென்று வந்தது. சிம்ரனைப் போல பிடித்தால் ஒடிந்துவிடுமோ என்ற இடை. ரோஜா மலருக்கு சவால் விடும் நிறம். குயில் குரலையும் விட இனிதான குரல். சொல்லவும் வேணுமா? ஹீரோவுக்கு ஆட்டோமேட்டிக்காக காதல் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

சரியாக இன் செய்யாத கசங்கிய சட்டை, பிய்ந்துப் போன ஷூ என்று இருந்தவர் சில நாட்களில் ஆளே மாறிவிட்டார். ஏதோ கலெக்டர் உத்யோகத்துக்குப் போவது கணக்காக பீட்டர் இங்கிலாந்து சட்டை, உட்லேண்ட்ஸ் ஷூ, செண்ட் என்று அமர்க்களப்படுத்தத் தொடங்கினார். தினமும் காலையில் ஹீரோயினைப் பார்த்ததுமே வேண்டுமென்றே கையில் வைத்திருக்கும் தம்மை கீழே போட்டு மிதித்து விட்டு லைட்டாக ஒரு ரொமாண்டிக் ஸ்மைல் செய்வார் (இன்ஸ்பிரஸ் பண்ணுகிறாராம்). ஹீரோயினும் வேறுவழியில்லாமல் நம்மைப் பார்த்து ஒருத்தன் சிரித்துத் தொலைக்கிறானே என்று போனால் போகிறதென்று ஒரு ஸ்மைல் விடுவார். இதுபோதாதா ஹீரோவுக்கு கனவில் தொடர்ந்து டூயட் பாட ஆரம்பித்துவிட்டார்.

இப்படியாக மெல்லிய காதல்(?) அவர்களுக்குள் அரும்பிக் கொண்டிருந்தது. ஹீரோவைப் பார்த்துக் கொண்டே இருக்க வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹீரோயின் பேருந்தின் பின்வாசலுக்கு அருகில் இருக்கும் சீட்டில் அமரத் தொடங்கினார். அவரைப் போலவே நிறைய ஜூலியட்கள் அந்த ஏரியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தார்கள். வேறு வழியில்லாத ரோமியோக்கள் பேருந்து காலியாக இருந்தாலும் கூட புட்போர்டில் தொங்கியப் படியே பயணம் செய்யும் நிலை.

அன்று சூரியன் விரைவாக மலர்ந்த காலைப் பொழுது. அவசர அவசரமாக நம் ஹீரோ எழுந்து ஒரு வெள்ளைச் சட்டையை அயர்ன் செய்து, ஷூவுக்கு பாலிஸ் போட்டு பேக்கை எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு ஓடுகிறார். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! அன்று ஹீரோயின் ஹீரோவுக்கு மிகப்பிடித்தமான கறுப்புக் கலர் புடவையை சற்று லோ-ஹிப்பில் அணிந்து வந்திருந்தார். ஹீரோயினை சேலையில் பார்த்தது ஹீரோவுக்கு அதுவே முதல் முறை. Half அடித்தது போல ஒருமாதிரியான போதை ஹீரோவுக்கு வந்து தொலைத்தது.

தன் கடமையில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனின் வேதாளம் மாதிரி 45E பேருந்து வந்தது. ஹீரோயின் மேலே ஏறுகிறார். வழக்கமான சீட்டில் யாரோ அமர்ந்திருக்க சீட்டுக்கு முன் இருந்த கேப்பில் ஹீரோயின் நின்றுக் கொள்கிறார். வழக்கம்போல ஹீரோ புட்போர்டில் தொங்கியவாறே ஹீரோயினை லுக்விட்டு வருகிறார். ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் அரை அடி இடைவெளி கூட இல்லை. பேருந்திலோ அன்று செம கூட்டம். அல்லக்கைகள் ஹீரோவையும், ஹீரோயினையும் இணைத்து ஜோக்கடிக்க இருவரும் நாணத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து அவ்வப்போது சிரித்துக் கொள்கிறார்கள்.

பேருந்து சுமார் 40 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. வேளச்சேரியைப் பேருந்து தாண்டிய நிலையில் ஹீரோவுக்குப் பிடித்தது சனி. சன்னலில் தொங்கிக் கொண்டுவந்தவரின் கையை மேலே இருந்தவன் எவனோ லைட்டாக தட்டி விட ஒத்தைக் கையில் பயணிக்கிறார். காலைநேரத்து கசகசப்பு வியர்வையில் அந்தக் கையும் பிடியை விட்டு மெதுவாக நழுவுகிறது. மேலே இருந்தவன் கொஞ்சம் பேலன்ஸ் தவறி ஹீரோவின் மீது சாய... அய்யோ?

மேலே சாய்ந்தவனும், ஹீரோவும் நடுரோட்டில் விழுகிறார்கள். மல்லாந்து விழுந்த ஹீரோ அந்த நொடியில் ஹீரோயினின் கண்ணில் தெரிந்த கலவரத்தைப் பதிவு செய்துக் கொண்டே மண்டை உடைந்து மயக்க நிலைக்குப் போகிறார். மல்லாந்து விழுந்ததில் மண்டையில் கூரான கல் ஒன்று தேய்க்க லைட்டாக தலையை ஆட்டியதால் காயம் மின்னல் வடிவத்தில் வேறு விழுந்து தொலைத்து விட்டது. ஸ்டிச் செய்தும் இரத்தம் நிற்காத நிலை.

அடுத்த ஒருவாரத்துக்கு மண்டையில் கட்டுடன் சோகமாக வளராத தாடியை வருடிக்கொண்டு வருத்தமாக ஹீரோ காட்சியளித்தார். மண்டையில் அடிபட்டவுடன் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உதவுவதற்கு பதிலாக "அப்பன் ஆத்தா கஷ்டப்பட்டு படிக்கவெச்சா, இதுங்க பாட்டுக்கு புட்போர்டுல தொங்கி உசுரை விடுதுங்க" என்று திட்டித் தீர்த்தது கூட அவருக்கு கவலையில்லை. அடிபட்டு வீட்டுக்கு வந்தவுடன் அப்பா சுளுக்கெடுத்தது கூட அவருக்கு கவலை அளிக்கவில்லை. ஊசி போட வரும்போது வீரமாக ஆர்ம்ஸை காட்டும்போது பட்டக்ஸில் தான் போடுவேன் என்று நர்ஸ் கேவலப்படுத்தியது கூட அவருக்கு கவலை அளிக்கவில்லை. பிகர்கள் எதிரில் கீழே விழுந்துவிட்டோமே என்ற அதிமுக்கிய கவலை தான் அவரை வாட்டி எடுத்தது. எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு 45E பக்கம் போவோம் என்று மனதுக்குள் அழுது புலம்பினார்.

ஒரு வாரத்தில் நிலைமை சகஜமாகிவிட்டாலும் கூட மானம் போய்விட்டதே (ஹீரோ கவரிமான் ஜாதியாக்கும்) என்பதால் 45Eயை விட்டு விட்டு F51க்கு மாறிவிட்டார். புது பஸ், புது ஹீரோயின் என்று அவர் வாழ்க்கை திசை திரும்பிவிட்டது. ரோமியோ, ஜூலியட்டின் அமரத்துவ லெவலுக்கு வளரவேண்டிய அவர்களது காதல் பஸ் புட்போர்டினால் காமெடியாகி விட்டது.

ஹீரோ தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் 2007 ஜனவரிமாத அட்லஸ் வாலிபர். ஹீரோயின் எங்கிருக்கிறாரோ எப்படியிருக்கிறாரோ தெரியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பின் ஹீரோயினை அவர் பார்த்தது கூட இல்லை. நினைவுகள் மட்டுமே மிச்சம் :-(

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Tuesday, December 26, 2006

புத்தம் புதுசாய்....

"ஆப்புகள் ஆயிரம் கோடி வாங்கி... வேட்டிகளை வெளிநாடுகள் என்றும் பாராமல் பறக்க விட்டு... குப்புற விழுந்து கொமாட்டுல்ல கும்மாங்குத்து வாங்கி... இடுப்பிலே இடியை விட பலமான மிதிகளை வாங்கி...மூஞ்சி மொகரையில் புயல் வேகத்தில் லெப்ட் ரைட் என அறை வாங்கி அஞ்சாறு ஊருக்கு கேட்கிறமாதிரி மைக் இல்லாமலே அலறல் விட்டு... ஓடம்புல்ல ஒரு லட்சம இடத்துல்ல டிசைன் டிசைனா அடியை வாங்கி...டப்பா டான்ஸ் ஆடுற அளவுக்கு அல்லோலப்பட்டு.. டன் கணக்கல்ல டின் கட்டப்பட்டு... அங்கிட்டு இங்கிட்டு என எங்கிட்டும் அசிங்கப்பட்டு அவமானப்பட்டு கெத்து குலையாம எங்க தல கட்டுன வீர விவசாயப் பூமி எங்க சங்கம்...

அதே பிளாக்ல பீடாப் போட்டோம்.. பதிவுலே வெத்தலப் போட்டோம்... அப்படின்னு விளக்கம் சொன்னா.. விட்டுருவோமாய்யா.. வீதிக்கு வீதி விளம்பரப் படுத்தி வித்தைக் காட்டி எங்க தல பவர் என்னன்னு ப்ருவ் பண்ண மாட்டோம் நாங்க..."

"ஏலேய், போர்வாளு நிப்பாட்டு! என்ன உன்னோட பிரச்சினை எதுக்கு இப்போ சந்தையிலே வித்தை காட்டுறவன் மாதிரி சவுண்ட் விட்டுக்கிருக்கே...??"

"தல! சங்கம் பீட்டா, பாட்டா'ன்னு என்னோமோ ஆகிப்போச்சு! அதுதான் இப்பிடி சவுண்ட் விட்டேன்!"

"என்னாலே சொல்லுறே? பீட்டா'வா?"

"ஆமா நம்மளை கூடி கும்மியடிக்கிறே கோஷ்டிகளுக்கு பூராப் பேத்துக்கும் வெத்தலை பாக்கு வைச்சு கூப்பிட்டு பீட்டாவுக்கு மாத்த சொல்லிறாங்க!"

"சரிதான் இழுந்து வைச்சு கலகம் பண்ணுறாய்ங்களா??? சரி விட்டுதள்ளு! தானமா கிடைச்ச மாட்டே எதுக்கு பல்லை பிடிச்சு பார்க்கணும்???"

"சரி தல! நானு என்னோட அறிவிப்பை தொடர்ந்துக்கிறேன்..!"



மக்களே,

மேலே இருக்கிறமாதிரி அட்டவணை போட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கும் போது நமக்குன்னு ஒரு ரிலாக்ஸ் செஞ்சுக்கிற இடமா இருந்த சங்கம் இப்போ சின்ன பிரச்சினைலே இருக்கு.

ஆமாம் நம் தலையின் இனிய எதிரிகள் கட்டதுரையும், பார்த்திபனும் இணைந்து நம்முடைய வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை கந்தகோலம் ஆக்கிவிட்டனர். அதுக்கா நாம் அசரப்போகிறோம்...

இந்தா மறுபடியும் எங்க சிங்கத்தைச் சீவி சிங்காரிச்சி கூட்டிட்டு வந்துருக்கோம்ய்யா.. கூடவே தலக்கு சப்போர்ட்டா அண்ணன் பஞ்ச் பாலாவும் வந்து இருக்காகாக...



விரைவில் சங்கம் முற்றிலும் புதுப் பொலிவுடன் புத்தம் புதுசாய் மலர இருக்கிறது!!!

லோக்கல் ஆப்பு ரிஜக்டட்.. கலக்கல் ஆப்பு அக்சப்ட்ட...

அப்புறம் என்ன தாரைத் தப்பட்டைகள் எல்லாம் கிழிந்துத் தொங்க வேண்டாமா.. கிளப்புங்கள் பீதியை...

வழக்கம்போல் உங்களை சிரிக்கவைக்க இதோ கிளம்பிட்டோம்... மக்கா கிளம்பிட்டோம்மய்யா.....

Tuesday, December 19, 2006

சங்கம் ஸ்டார் நைட்

தல மூக்குலே மூணு அங்குல நீளத்துக்கு வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகாரன் விளம்பரத்துக்குக் கொடுத்த பேண்டேஜ் போட்டு உக்காந்து இருக்க.. சுத்திலும் சங்கத்துச் செல்லங்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

பாண்டி பக்காவா ஜீன்ஸ் போட்டு ரேபான் கிளாஸ் அப்புறம் டிக் மார்க் போட்ட டீ ஷர்ட் எல்லாம் போட்டுகிட்டு சங்கத்துக்குள்ளே நுழைந்தான்.

சங்கத்து வாசல்லே சீசனுக்கு ஏத்தாப்புல்ல ஸ்டார் கட்டித் தொங்கவிட்டுகிட்டு இருந்த வெட்டி டக்கென்னு பாண்டியப் பார்த்து ஷாக் ஆகி நின்னான். பாண்டி கையிலிருந்த கௌபாய் ஹேட் எடுத்து படு ஸ்டைலா சுழற்றி தலையில் மாட்டவும் ராயல்,பாண்டி புதுசா எதோ கரகம் ஆடப் போறான்னு அடுத்தப் பதிவுப் போட கையிலே நோட் பேட் எல்லாம் எடுத்து வச்சிகிட்டான்.

"ஹாய் கைஸ்.. என்னது இது நியூ இயர் ரவுண்ட் த கார்னர்.. இப்படி சோகமா உக்காந்து சுவத்தைப் பாத்துகிட்டு இருக்கீங்க...பாண்டி பாதி இங்கிலீஸ்ல்லயும் மீதி எத்திராஜ் காலேஜ் பொண்ணுங்கப் பேசும் தமிழிலும் கேட்க..

சங்கத்துச் செல்லங்கள்.. லைட்டாக் கண்கலங்கி விட்டனர். ரேபான் கிளாஸைத் தல கைப்புள்ளயின் மூக்குக்கு நேராச் சுழட்டி மீண்டும் மாட்டிய பாண்டி
"ஆர் மேன் இது பெக்கர் பெல்லோ தல சீட்லே உக்காந்து இருக்கான்..."அப்படின்னு ஒரு நக்கல் கேள்வி கேட்க....

தலயின் கோபம் உச்சிக்குச் சென்று மூக்கு வழியாகக் கொப்பளித்த கொப்பளிப்பில் பேண்டேஜ் சங்கத்துக் கூரையைப் பிச்சிகிட்டு எங்கியோ போய் விழுந்துச்சு...

"ஏலேஏஏஏஏஏஏஏய் பாண்டி.... நானாடா பெக்கர் பாய்... படுக்க பாய் இல்லன்னு நீ வந்தப்ப... எதிர்த்த வீட்டு ஆயாகிட்ட எவர்சில்வர் கரண்டியால அடி வாங்கிட்டு ஆயா படுத்திருந்தப் பாயை உருவுகிட்டு ஓடி வந்து கொடுத்த இந்தக் கைப்புள்ளயை உனக்குத் தெரியல்லயா....
பேகி பேண்ட் போட்டாத் தான் நாலு பிகராவது என்னையப் பாக்கும் தலன்னு நீ பிலீங் விட்டப்போ.. நம்ம தெரு மளிகைக் கடை சாக்குத் துணி களவாண்டு உனக்குப் பேகி போட்டு அழகு பார்த்த இந்த அண்ணன் கைப்புள்ளய உனக்குத் தெரியல்லயா?"

"ஏய் நிப்பாட்டு.. இப்படி வாய்ஸ் மாடுலேஷன் பண்ணி உன் பாடி லேங்குவஜைக் கண்ட படி யூஸ் பண்ணி இந்த யூத்தை இன்னும் எத்தனை நாளைக்கு கன்ப்யூஸ் பண்ண முடியுமின்னு நினைக்குற கைப்புள்ள?"

சொல்லி அடிப்பார்... சொல்லி சொல்லி அடிப்பார்... அப்படின்னு சங்கக் கூரை எல்லாம் அதிர பேக் கிரவுண்ட் மியூசிக் ஒலிக்க...

ரிபோக் ஷூ, சவுண்ட் கேக்க.. கையிலே 5 பவுன் பிரெஸ்லட் டாலடிக்க... லீ வைஸ் ஜீன் தோய்ச்சு வருச கணக்கான எபெக்ட் கொடுக்க...வலை பனியனும் அதுக்கு மேல புல் ஓவரும் போட்டுகிட்டு செம ஸ்டைலா கைப்புள்ளயை நோக்கி அந்த ஆள் வந்தான்.

வந்து நின்னு கைப்பு மூக்க ஒரு உரசு உரச... சட்டுன்னு புடிச்ச தீயை அப்படியே நாக்குல்ல வச்சு....

தீ டா.... என்னப் பார்த்தா ஊருக்கே பீதீடா...ன்னு சொல்ல.... பாண்டி பலமாக் கையத் தட்டுகிறான்.

பின்னாடியே ராயலும் வெட்டியும் சேர்ந்து விசிலடிச்சு பே'தனமா சவுண்டே கிளப்புறாங்க....

ண்ணா சூப்பர்ங்கண்ணா... அப்படின்னு கூரைக் கேப்பல்லருந்து கட்டத்துரை அன்ட் பார்த்தி குரூப் கொரலு விடுது...

மூக்கு மீண்டும் காயப்பட்ட நிலையில் கைப்பு கோவமாய் பாண்டி, வெட்டி, ராயலை முறைக்க... மூவரும் புது ஆள் பின்னாடி பதுங்குறாங்க...

"ஆமா நீ யார்?.. ஓனக்கு ஏன் இந்தக் கொலைவெறி.. வேணும்ன்னா வந்து நாலு அப்பு அப்பிட்டுப் போயிகிட்டே இரு..அத விட்டுபுட்டு மூக்குல்ல முக்காடு போடற மாதிரி சின்னப்பிள்ள தனமா விளையாட்டு எல்லாம் வேணாம்...".

"நான் யார்ங்கறது அப்புறம் இருக்கட்டும்... இக்கடச் சூடு.... விஸ்க்க்...விஸ்க்க்ன்னு அந்த ஆள் கையைச் சுழற்ற... புது கார்கோ பேண்டுகளும்.. லேட்டஸ்ட் பேஷன் ஆடை ஆபரணஙக்ளும் சங்கத்து மக்கள் மீது வந்து சேருகிறது..."

"ஆத்தாடி... சரியான பொரளி வித்தக்காரனா இருப்பான் போலிருக்கு.... உசார் ஆயிரணும்..." "எங்களுக்கும் இந்த மாதிரி வித்தை எல்லாம் தெரியும்.. நாங்களும் காட்டுவோம் இல்ல..." என்று கண்ணை மூடி ம்ம்ம்ம்னு மந்திரம் ஜெபிக்கிறார் கைப்பு...

கண்ணைத் திறந்துப் பார்த்தால்... எதிரே அந்த ஆள் அப்பிடியே சிரிச்சிகிட்டு நிக்குறான்.. சங்கத்துச் சிங்கங்களில் புதிதாய் புலிக்குட்டியும் இணைந்திருந்தான்.. அவனும் அதே கார்கோ ஸ்டைல் டிரேசில்..

"என்னது நம்ம மந்திரம் வேலைச் செய்யல்ல போலிருக்கேன்னு" கைப்புள்ள தனக்குள் கலங்கிக் கொண்டிருக்க....

"என்ன தல வித்தக் காட்டுறேன்னுச் சொல்லிட்டு வித் அவுட்ல்லே நிக்குறீங்கன்னு" ராயல் பழைய பாசத்தில் பதற...

"ஆகா... கழட்டிட்டான்ய்யா... கழட்டிட்டான்ய்யா... வித்த வில்லங்கமா ஒர்க் அவுட் ஆகி வித் அவுட் ஆகிறுச்சேன்னு தல கதற.." பாண்டி பழைய பிலீங்க்கில் தன் தொப்பியைத் தானம் கொடுத்து தலயின் மானம் காக்கிறான்.

"எங்கேடா என் தளபதி..? போர் வாள்...?அப்புறம் என் பாசக் கண்மணி விவசாயி...? எங்கேடாப் போயீட்டீங்க...?? ஓங்க தலயின் அவல நிலையை தட்டிக் கேக்க கிளம்பி வாங்கப்பா"

"ஏய் கைப்பு...! மூடு உன் மவுத் பைப்பு...." டக்கென்ன்று அந்த ஆள் கையை நீட்ட கைப்பு வாயிலும் பிலாஸ்டர் ஓட்டுகிறது...

"தளபதி..... அவர் தசாவதாரம் படத்துல்ல கமலுக்கு இன்னும் அஞ்சு ஆறு கெட்டப் போட ஐடியா கொடுக்க அமெரிக்காப் போறதா ஏர்போர்ட்ல்ல வெயிட்டிங்கல்ல இருக்கார்... கமலை எப்படியாவது ரஜினி வேஷத்துல்ல நடிக்க வச்சி கலாய்ச்சுட்டுத் தான் தாய் நாடு திரும்புவேன்னு பூமி ஆத்தா மேல சவுண்டு விட்டு சரியா நயன் 10க்கு சத்தியம் பண்ணியிருக்கார்"

"போர்வாள் மொட்டைப் போட்ட ரஜினி படத்தை மட்டும் பார்த்தே விசில் அடிச்சு வாய் வலிச்சுப் போய் கச்சேரி கிரவுண்ட்ல்ல உக்காந்து இருக்கார்.. அவரும் வர மாட்டார்..."

"விவசாயி... ஆகா.. ஆகா.. அவர் வருவார்.. ஆனா வர மாட்டார்.. வந்தாலும் எதுவும் செய்ய மாட்டார்.. செஞ்சாலும் சொல்ல மாட்டார்.. சொன்னாலும் உனக்குப் புரியாது... ஏன்னா அவர் இப்போ லீவுல்ல... ஹாங்காக் போய் ஹாலிடேவை ஜாலி டேவாக் கொண்டாடிகிட்டு இருக்கார்..."

பிலாஸ்டரை பிச்சுகிட்டு பிளிறினார் தல...

"ஆய்யோகோ என்னடா கொடுமை இது.. ஒரு எட்டு பத்து மாசமா உங்களுக்காக எல்லாம் பக்கம் பக்கமா பிளாக் போட்டு.. கண்டபடி படமெல்லாம் புடிச்சு.. காடு மேடுன்னு பாக்காம... எந்தப் பாஷயா இருந்தாலும் புரிஞ்சமாதிரியே நடிச்சு.... உங்களுக்காக... உங்க நலம் மட்டுமே என் நலன்... என வாழ்ந்த வாழும் உங்கள் நண்பன்.. உங்கள் அன்பன் உங்க தல கைப்புள்ளய இப்படி பாடா படுத்துறாங்களே என்னிய காப்பாத்த ஆஆஆருமே இல்லயா.......... நான் இப்படியே நோபடியாக நொந்துத் தான் போகணுமாஆஆஆஆஆ...."

"ஏஏஏய் என்ன மேன் ஓவராப் பேசுற?"

கைப்பு டக்குன்னு ஆப் ஆகிறார்.

"என்னது இவங்களுக்காக உழைச்சியா... போன வருசம் இவிங்களுக்குப் புது வருசத்துக்கு என்ன வாங்கிக் கொடுத்த?"

"குச்சி முட்டாயும் குருவி உருண்டையும்" மெல்ல முணுமுணுக்கிறார்.

"ஆமாங்க.. அதுல்ல கூட ஆப்பிரிக்கால்ல இருக்க அவரு கேர்ள் பிரண்டுக்கும் அந்தப் பொண்ணு அம்மாவுக்கும் கொடுக்கணுமின்னு சென்டிமென்டாப் பேசி எனக்குக் கொடுத்ததைத் திருப்பி வாங்கிட்டார்ங்க"பாண்டி கோபத்தில் கொதிக்க..

"அது மட்டுமா... விவசாயிக்குப் போன புது வருசத்துக்கு கொடுத்த நாலு கடலையையும் கெஞ்சிக் கதறி திருப்பி வாங்கியாட்டியாமே.. போர்வாள்க்கு கொடுத்த தேன் மிட்டாயை கூட அவர் அசந்த நேரம் அடிச்சிட்டுப் போய் பாண்டி பிகருக்குக் கொடுத்து சைட்ல்ல டிராக் ஓட்டியிருக்கே நீ.. உன்னியப் பத்தி ஊருக்குள்ளே... ஊருக்கு வெளியே எல்லாம் விசாரிச்சிட்டுத் தான் வந்துருக்கேன் "
புது ஆள் தன் லேப் டாப்ல்ல இருந்து புள்ளி விவரஙக்ளை எடுத்துச் சொல்ல.. கைப்பு மெல்ல அம்ம்ம்மா சவுண்ட் கொடுக்குறார்.

"ஒரு குரூப்ப்பாத் தான் கிளம்பியிருக்கான்வ போல... இனி குனிய வச்சு கும்மி அடிச்சு குத்த வச்சு குல தெயவத்துக்கு நம்மளைப் பொங்கிப் போட்டுட்டுத் தான் விடுவாயங்கப் போலிருக்கே"

"அது போன வருசமின்னு சொல்லி நீ தப்பிக்க நினைப்பே... அதுனாலக் கேக்குறேன் இந்த வருசம்.. இந்தப் புள்ளங்களுக்கு என்னத் தர்ற போறதா உன் திட்டம்"

"அது வந்து கேப்பக் கஞ்சியும் குழாபுட்டும்.." கைப்பு சொல்லி முடிக்கவும்...

"கைப்பு இந்த பச்சிளம் பாலகன் பாண்டி முகத்தைப் பார்... பீர் விட்டு கழுவி அழகு பாக்க வேண்டிய மொகத்துக்கு குழாபுட்டுன்னு குண்டு போடுறீயே.. அவ மனசு என்ன பாடு படும்..

இங்கிட்டு பார்.. ரம்மியமா இருக்க இந்த ராயல் முகத்தைப் பார்... ரம் கொடுத்து கம் சொல்ல வேண்டிய இந்த புள்ளக்கு கேப்பக் கஞ்சியா.. என்ன கொடுமை இது சரவணா..."

"பச்சிளம் பாலகனா.. பாண்டியா.. ரம்மியமான புள்ள ராயலா.. விட்டா தவழும் தம்பி தளபதி.. மழலை மொட்டு போர்வாள்.. தத்தும் மழலை விவசாயி..ன்னு வில்லங்கமாவே எபெக்ட் கொடுத்தேப் பேசுறானே அய்யோ நான் என்னப் பண்ணுவேன்.. இருக்க ஒரு ட்ரை சைக்கிளுக்கும் லாக் போட்டுட்டு போயிருவான் போலிருக்கே.... பரிதாபமாக கைப்பு கதற...

பதிலுக்கு சங்கத்தினர் கோபப் பார்வை பொங்க அனலாய் சவுண்டை அள்ளிவிட...
என்ன இம்புட்டு சவுண்டு'ன்னு கைப்பு மிரள...

"லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலமா இங்கே நடக்குறது மொத்தத்ததையும் லைவ் ரிலேவா பிசாபர்கர் டெலிவிசன் உலகம் முழுக்க காட்டிட்டு இருக்கு கைப்பு"
அதுக்காக நம்ம உதய் வேற டால்பி டிஜிட்டல் சவுண்ட் ஏற்பாடு பண்ணி கொடுத்த விசயம் தனிக் கதை...

"ஏன்டா எடுபட்ட பயலுவேளா வித் அவுட்ல்ல என்னிய வீடியோ எடுத்து ஓலகம் முழுக்கவாடா காட்டுறீங்க விளங்குமாடா? ஓனக்கு நான் என்னடா துரோகம் பண்ணேன்.. நான் பாட்டுக்கு ஒரு ரூட் போட்டு அதுல்ல குதூகாலமாத் தானேப் போயிகிட்டு இருந்தேன் இப்படி வீதிக்கு இழுத்து விட்டு என் கதைக்கு இன்டர்வெல் விடுறியே நீ யார் ராசா.....நீ யார் அய்யா... சொல்லிருப்பு.. முடியல்ல மூக்கு முட்டுது.. கண்ணு கட்டுது...

பயங்கர சிரிப்பு.. பின்னால் லைட்டைப் பாண்டி ஆப் பண்ணி ஆன் பண்ணி எபெக்ட் கொடுக்க..

விஸ்க் விஸ்க்ன்னு உதய் வால்யூம் ஏத்தி பில் டப்பு கொடுக்க...

"நேனேரா... உர்ரேஏஏஏஏஎ ஸ்டீவ் வாக்கு... இப்புடு தெலுசா... ஸ்வைங் இன் த ரெயின் பாட்டுலு பாடிலு நா லைப்ப்ல்லு கில்லி ப்ளே ச்சேசுன்ன வாடு நீயே ரா.... உன்னியே ரேப் சூடுதானுவுறா...

"ரேப்பா அது வேறய்யா.. அய்யா வேணாம்.. ஆம்பளை ஆம்பளைய டிச் பண்ணலாம் கண்டபடி டச் பண்ண்பிடாது தப்பு" கைப்பு அழ ஆரம்பிக்க..

"ச்சீ நாஸ்ட்டி பெல்லோ.. ரேப்ன்னா தெலுங்குல்ல நாளைக்குன்னு அர்த்தம்.. உன்ன நாளைக்குப் பார்த்துக்குறேன்னு சொன்னேன் மேன்.."

இப்போதைக்கு என் பேரை மட்டும் சொல்லுறேன் வாயைப் பொளக்காமக் கேளூ


பா....லா.....PUNCH பாலா.... என் ட்ரெஸ்க்கு நான் போட மாட்டேன் உஜாலா....

அவனாஆஆ நீயி...... கைப்பு அலற.... சங்கத்தில் கரண்ட் கட் ஆகிறது..!


அப்படியே எல்லோர் பார்வையும் வெட்டிப்பயல் இருக்கும் பக்கம் திரும்புகிறது..

பின்னே டைட்டில் சங்கம் நட்சத்திர இரவுன்னு வச்சாச்சு.. அதுக்கு காரணம் வேண்டாமா..

அதான் சங்கம்... பாலாஜி...(இந்த வார ஸ்டார்) இரவுன்னு முடிச்சாசு...

சேட்டன்



சேட்டன் அப்படின்னா எதோ வயசானா டீக்கடை நாயர் இல்லைங்க. என்ன மாதிரி இளவட்டந்தான் (சைடுல நின்னு இளவட்டத்துக்கு அர்த்தம் தெரியுமான்னு கேக்கறது எனக்கு கேக்கலை, புரிஞ்சுதா?). தமிழராயிருந்தாலும் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்தவர். என்ட கடவுள் குருவாயுரப்பன், என்ட சீப் மினிஸ்டர் ஈ.கே.நாயனார், என்ட நாதம் தண்டை, என்ட நடனம் கதகளி, என்ட பீடி மலபார் பீடி, என்ட சாப்பாடு மீன் கறி, என்ட தேவி ஷகீலான்னு ஒரு குருப்பையே சொல்ல வைச்சவரு. அவரு இருந்தா அந்த இடமே கலகலன்னு இருக்கும்.

அவரோட பார்வையே கொஞ்ச வித்தியாசமானது. ஃபிகர் கரெக்ட் பண்ணனும்னா யமஹாவிலயோ பல்சாரிலோ வீலிங் பண்ணின பசங்களை பார்த்திருப்பீங்க. ஆனா, அரை மூடி தேங்காயை மளிகை கடையிருந்து ஆட்டைய போட்டுடு வந்து பக்கது சந்து முக்கு மாரியம்மன் கோவிலில் சுவத்தில் இருக்கும் திருநீறு, குங்குமத்தை எடுத்து தேய்ச்சுட்டு ஆன்ட்டி இன்னைக்கு சஷ்டி, கந்த கோட்டம் போயிட்டு வந்தேன். இந்தாங்க பிரசாதம் அப்படின்னு பதவிசா நீட்டுனார். அப்புறமென்ன எந்த ஃபிகருக்காக குட்டிக் கரணம் போட்டுட்டு இருந்தீங்களோ அதே பொண்ணு அம்மா குடுத்தாங்கன்னு வடை கொண்டு வருவதும், இல்லாத காய்ச்சலுக்கு கசாயம் வைச்சுக் குடுத்த அளும்பும் நடந்தது.

சேட்டா, எப்படி இந்த மாதிரி எல்லாம் உங்களால யோசிக்க முடிங்சதுன்னு கேட்டா எப்பவுமே கண்ணு காதெல்லாம் தொறந்து வைச்சு உஷாரா இருக்கணும். ஒரு வாரம் அவங்க என்ன பேசறாங்கன்னு கேட்டா அவங்களுக்கு என்ன புடிக்கும்ன்னு தெரிஞ்சுடும். உங்களுக்கெல்லாம் அதெலாம் வாரதுடா என அவிழாத வேட்டியை முட்டிக்கு மேல் மடித்துக் கட்டுவார். இவ்வளவு தெளிவா இருந்த நீங்க அப்புறம் ஏன் ஆறு அரியர் கிளியர் பண்ண ரெண்டு வருஷம் ஆச்சுன்னு கேட்டா அதுக்கும் ஒரு கதை ரெடியா வச்சிருந்தாரு.

காலேஜ் முதல் வருஷத்துல இஞ்ஜினியரிங் டிராயிங்ல சிவில் டிராயிங்கும் சேர்ந்து இருந்திருக்கு. தலைவர் ஷகீலா மேல் இருந்த ஆர்வத்துல மதியம் இருந்த சிவில் டிராயிங் கிளாஸ் ஒன்னு கூட போகலை. செமெஸ்டர்க்கு முத நாள் வீட்டு படம் போடறது எப்படின்னு ஒருத்தன் கிட்ட கேட்டுருக்காரு. அவனுக்கு என்ன கோவமோ தெரியலை அதெல்லாம் ஒன்னும் இல்லை, சாதாரணமான மேட்டர். உங்க வீட்டை மனசுல வைச்சுட்டு வரைஞ்சுடுன்னு சொல்லிட்டு போயிட்டான். இவங்க வீட்டுக்கு பின்னாடி ரெண்டு தென்னை மரமும், சைடுல ஒரு வாழை மரமும் இருந்துதாம். அதெல்லாம் வரைஞ்சுட்டு காக்கா ரெண்டு மூணு பறந்தா நல்லா இருக்கும்ன்னு அதையும் போட்டாராம். சிவில் புரபொசர் கூப்பிட்டு சொன்னாராம் நீ 7 வருஷத்துக்கு முன்னாடி இஞ்சினியரிங் முடிச்சா என் பேரை மாத்திக்கறேன்னு சொன்னாராம். அதுக்கப்புறம் எவனையும் நம்பற மாதிரி இல்லை என் வழி தனி வழின்னாரு.

அவரு கண்ணாடி ஒடைஞ்சு மூணு நாள் ஆச்சு. மாத்துங்க சேட்டா, ஏதாவது ஏடாகூடமா ஆயிடப் போகுதுன்னு சொன்னா, இப்போத்தான் நான் அஜீத் மாதிரி இருக்கேன். உங்களுக்கெல்லாம் பொறாமைன்னு சொல்லிட்டே திரிஞ்சுட்டு இருந்தார். வெள்ளிக் கிழமை நைட் ரொம்ப நேரம் ஆகியும் காணோம், ஒரு கை குறையுதேன்னு எல்லாம் வெளிய உக்கார்ந்துட்டு இருந்தோம். சேட்டனை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருப்பாதாக தகவல் வர அடிச்சு புடிச்சு போய் சேர்ந்தோம். முதல்ல வெளிய நிக்கறவர் கிட்ட 3000 ரூபாய் குடுத்து அனுப்புங்கன்னு சொன்னார்.

யாரையோ ICU ல சேர்க்கற அளவுக்கு அடிச்சு நொறுக்கிட்டு வெறும் 3000 ரூபாயில படுத்துட்டே முடிச்சுட்டாரேன்னு நினைச்சுட்டு பணத்தை குடுத்தா "அவருக்கு நல்லா கண்ணாடியா வாங்கி குடுங்க. நடு ரோட்டுல படுத்திருந்த எருமை மேல வண்டி ஏத்தி கொன்னுட்டாரு. எனக்கு இன்னும் 3 எருமை இருக்கு. தினமும் அந்த ஏரியாவுலதான் மேயும்"ன்னு சொல்லிட்டு நகர்ந்தாரு எருமையோட ஓனர். "நான் என்ன பண்னறது? ஸ்பீட் பிரேக்ன்னு நினைச்சுட்டு மேல விட்டுட்டேன். அந்த எருமைக்கு ஆயுசு அவ்வளவுதான்" காலை ஆட்டிட்டே சொன்னார்.

Thursday, December 14, 2006

ஸ்கீயிங் ஸ்கீயிங் ஸ்கீயிங்...


ESPN , Star sports -ல எல்லாம் சும்மா சர்சர்ன்னு சறுக்கிட்டு வருவாங்களே அதே மாதிரி ஒரு நாள் நானும் சறுக்கனும்ன்னு நினைச்சுட்டே இருந்தது போன வாரம் நடந்தே நடந்துருச்சு.

பொறுப்பா ஒரு பெரியவர் பாடம் சொல்லிக் குடுத்தார். அதெயெல்லாம் பார்த்து தெரிஞ்சுக்காமா பொட்டு, பொடுசு, ஜிகிடி, ஜாங்கிரின்னு சும்மா பறந்து பறந்து வந்ததை பார்த்துட்டே நின்னுட்டு இருந்தேன். எங்க சறுக்கு பார்க்கலாம்ன்னு அந்த பெரியவர் சொல்லிட்டு இருந்தபோது நான் ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரி இந்த பக்கம், அந்த பக்கம்ன்னு சாய்ஞ்சு சாய்ஞ்சு போட்டோ எடுக்க சொல்லிட்டு இருந்தேன். அப்பவே எனக்கு ஸ்கீயிங் போன திருப்தி வந்துடுச்சு.

மலை மேல போறதுக்கு கயிறை மெசின் மூலமா சுத்த விட்டுருந்தாங்க. மாடு தாம்புக்கயிறை அத்துட்டு ஓடுனா எப்படி கயிறை புடிச்சு நிறுத்துவுமோ அதே மாதிரி கயித்தை புடிச்சுட்டு மேல போயாச்சு. காலை எடுத்து அப்படியே சரிவுல வைச்சவுடனே புடிங்க, புடிங்கன்னு கத்தறேன் ஒரு பய உதவிக்கு இல்லை. மேல போன வேகத்துல கீழே வந்தாச்சு. மேல போனப்பா ஸ்கீ மேல நான் நின்னுட்டு இருந்தேன். கீழே ரிட்ட்ர்ன் வந்தப்போ ஸ்கீ ரெண்டும் என் மேல இருந்தது.

இதுக்கெல்லாம் பயந்தா ஆகிறதான்னு திரும்பவும் மேல போயி கீழ வந்து மேல போயி கீழ வந்து ரெண்டு சைடும் கொஞ்சம் கொஞ்சமா வீங்க ஆரம்பிடுச்சு (மீசைல மண் ஒட்டக்கூடாதுன்னு விழுகறப்போ எல்லாம் சைடு வாக்குல விழுந்தேன், ஹிஹிஹி...). ஒவ்வொரு தடவையும் ஸ்கீ, கண்ணாடின்னு எல்லாத்தையும் தேடி புடிச்சிதான் கண்டுபுடிக்க வேண்டி இருந்தது.

கடைசியா ஒரு தடவையாது முழுசா மேல இருந்து கிழே வரணும்னு மேல போனதுக்கு அப்புறம் கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. அதையெல்லாம் வெளிய காட்டிக்காம சும்மா ஸ்கீ ரெண்டையும் நேராத்தான் வைச்சேன். அந்த பெரியவர் டைனமிக்ஸ், பிசிக்ஸ்ன்னு சொன்னப்ப வேடிக்கை பார்த்ததுக்கு நல்லா அனுபவிச்சேன். எனக்கு 15 அடிக்கு கீழே 4 பேரு உக்காந்து வம்பு பேசிட்டு இருந்தாங்க. சறுக்கறதுக்குன்னு வந்துட்டு என்ன வெட்டி பேச்சுன்னு நேரா அவங்க மேல என்னை பார்க் பண்ண முயற்சி பண்ணினேன். என் பலம் தாங்க முடியாமா திசைக்கு ஒருத்தரா தெரிச்சுட்டாங்க.

அதுல ஒரு பொண்ணு கீழ போயிடுவியா? இல்லை லிப்ட் வேணுமான்னு கேட்டாங்க. ஆத்தா, நீங்க நல்லா இருப்பீங்க. அப்படியே உங்க டிக்கில என்னை கட்டி கீழ இழுத்துட்டு போயிடுன்ங்கன்னு கதறினேன். அப்படியெல்லாம் போக முடியாது, நான் பின் பக்கமா சறுக்கிட்டு கீழ வரேன், என் கையை புடுச்சிட்டு அப்படியே நீயும் என் பின்னாடி கீழே வந்துடுன்னு சொல்லிட்டு ஸ்கீயோட பிசிக்ஸ், டைனமிக்ஸ் எல்லாம் சொல்லிக் குடுத்தா அப்படியே மண்டைல கும்மு கும்முன்னு ஏறுது. பத்து பதினைஞ்சு நிமிஷம் அப்படியே என் கையை புடிச்சு சொல்லிக் குடுத்துதல கீழ வந்ததே தெரியலை.

அப்புறம்... அப்படினு நான் சொன்னத்துக்கு அப்புறம் நான் சொன்ன விசயங்களும் அவங்க சொன்னதும் சந்தூர் சோப்பு விளம்பரத்துல 10 வருஷத்துக்கு முன்னாடியே காட்டிட்டாங்க. எனக்கு விதிச்சது அவ்வளவுதான். சும்மா சொல்லக் கூடாதூங்க, ஸ்கீயிங் சூப்பருங்கோவ்...

Sunday, December 10, 2006

களை கட்டும் "தல" கச்சேரி

தலயின் தீர்க்கமான முடிவினில் சங்கம் மொத்தமும் நடுங்கி நிற்க...

"போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.." பாடலைத் தல சங்கராபரணம் ஹீரோ ரேஞ்சுக்கு ராகமாய் முணுமுணுத்தப் படி தன் அறைக்குப் போனார்.


அதுக்கப்புறம் தல பலவாறு யோசிச்சி யோசிச்சி நம்ம பயலுவே என்னமோ பெரிய பெரிய பேரா சொல்லுறானுவே. நமக்கு தமிழே விட்டா வேறே பாசை எதுவும் தெரியாது. நமக்கு தெரிஞ்ச தமிழில்லாத ஒரு பாட்டு சிங் இன் த ரெயின்'தான். இப்போ வேறே என்ன பண்ணுறது, என் இனிய எதிரி வேறே ஒன்னோட கொரலு நல்லாயிருக்குன்னு வேறே சொல்லிட்டாப்பலே..! அதுக்காக இந்த சீசன்லே கச்சேரியும் பண்ணிரலாமின்னு சபா ஒன்னுலே வேறே துண்டை போட்டு இடத்தே வேறே பிடிச்சி குடுத்துருக்காரு. நமக்கு நல்லாதான் பாடவருமின்னு உலகத்துக்கே தெரியும். ஆனா இது ஒரு சத்தியச்சோதனையா ஆகிறுமே. நல்லா பாடலேன்னா மொதல்லா கல் கொண்டு எறியறப் பயலுவே நம்ம சங்கத்து சிங்ககள்தான், அதுவே நல்லா இருந்தா போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டுறது பத்தாதுன்னு வெள்ளைமாளிகையிலிருந்து ஐநா சபை வாசல் வரைக்கும் ஒட்டி அமர்க்களப்படுத்துவானுக.!

அடபாவி அடபாவி என்னை இப்பிடி தனியா புலம்ப வச்சிட்டானுவேலே!! சரி அவிங்ககிட்டே கேப்போம் ஏதாவது ஐடியா இருக்கான்னு??

தல தன் அறையிலிருந்து மின்னலென வெளிவருகிறார். அங்கு வெட்டி கணக்கு லெட்சரில் ஏதோ எழுதி கொண்டிருப்பதை பார்க்கிறார்.

"ஏலேய் கட்டரு, என்னா எழுதுறே?"

"தல, அ.வா'வுக்கு வரவேறப்புக்கு ஆன செலவே பற்று வைக்கிறேன்!"

"ஓ எம்பூட்டு"

"கொஞ்சம்தான் எவ்வளவு அதிலே பணமின்னு இருந்துச்சோ அதே விட 15000 ருபா கூட "

"அடபாவிகளா, சங்கத்து கணக்கிலே இருந்த பணத்தே தீர்த்ததும் பத்தமே அதிலே நஷ்ட கணக்கு வேறே எழுதுறீங்களா? அப்பிடியென்னா செலவு பண்ணீங்க??"

"சவுண்ட்பார்ட்டிக்கு ஒரு ஆளு உசரத்துக்கு ஸ்பீக்கரு கட்டினோம்."

"என்னாது? ஸ்பீக்கரு பெட்டியா? வெளியே ரெண்டு கொழா ரேடியாதானாய்யா கெடக்கு? அதிலே ஒன்னுலே கொண்டையே வேறே காணோம்? ஆனா உங்களே மாதிரி புரட்டு கதையை சொல்லுறதுக்கு அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா!"

"ஏன் தல உள்ளேதானே இருந்தீங்க? இப்போ எதுக்கு வெளியே வந்து சவுண்ட்?" ன்னு போர்வாள் எகிற

"கேட்டியா ஒரு கேள்வி.. ரைட்டுதான் அந்த கேள்வி! செவனேனு தானய்யா இருந்தேன். நான் எந்த வம்பு தும்புக்காவது போயிருக்கேனா..சொல்லு ? இது டிசம்பரு மாசம் நாமெல்லும் கச்சேரி வச்சிருவோமின்னு எனக்குள்ளே இருந்த சங்கீத ஆசையே தூண்டிவிட்டிங்க.. இப்போ அது அனலா தகிச்சு தீயா கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சிருச்சு."

சட்டென்னு ஏதோ ஞாபகம் வந்ததாய் தேவ்.. தலையே கோணலா திருப்பி விட்டத்தே வெறிக்கிறார்.

"ஆமா தல.. அந்த கச்சேரிலே விளம்பரம் செய்யினுமின்னா சென்னை கச்சேரியே அணுகவுமின்னு நோட்டிஸ் பண்ணினேன், ஆனா இப்போ அதிலே மா மன்னாரு சாப்ட்வேர் கம்பெனி வேறே போயிட்டிருக்கு!"

"ராஸ்கல்! சங்கம் டெக்னாலாஜிஸ்'க்கு போட்டி கம்பெனி ஆரம்பிக்கிறீயா நீயி?"

"அதெல்லாம் இல்லே தல... சங்கத்து டெக்னாலாஜிஸோட இணைந்தே இதுவும் நடக்கும்."

"என்னோமோ போ ஒன்னை மாதிரியே அதுவும் பிராடுத்தனம் பண்ணமே இருந்தா சரி!"

"தல ஒனக்கு இப்போ என்னா வேணும்?"ன்னு கோபமாய் தேவ் கேட்க

"எனக்கு குச்சி மிட்டாயி வேணும்! ஏலேய் அப்போயிருந்து என்னா சொல்லிக்கிட்டு இருக்கேன்னு தெரியலேயா? நான் கச்சேரிலே பாட்டு பாடணும் அதுக்கு நீங்கெல்லாம் ஒரு ஐடியா கொடுப்பீங்கன்னு வந்தேன்."

"தல ஒன்னோட குலப்பெருமையே சொல்லுற Sing the Rain பாட்டே தமிழிலிலே முழிபெயர்ந்து அதே அப்பிடியே பாடிருவோமா." ன்னு சிபி கேட்க, தல சட்டென்னு டென்சனாகி, சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க, இப்பிடியே முறை வச்சு முறைப்பு படலமா இருக்கிறப்போ தீடீரென்னு ஒரு கொரல், குடுத்தது கட்டரு..

"தல, தள நீங்க ரெண்டு பேரும் முறைச்சத யாராவது சினிமாகாரன் பார்த்திருந்தா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டி சாங் போட்டுறுப்பான்! பாட்டுக்குள்ளே ரெண்டு பேரும் சண்டை, வாக்குவாத போருன்னு கொண்டு வந்திருப்பாங்க"

"அயோக்கிய அப்ரெண்டிஸ்! இங்கே என்ன நடக்கிதுன்னு தெரியமே என்னா பேச்சு பேசுறே? இதுக்குதான் ஓவரா தெலுங்கு படம் பார்க்காதேன்னு சொல்லுறது, இது ஒரு பார்வை பரிமாற்ற போர்முறை, இதே நீ சீக்கிரமே கத்துக்குவே!"

"தல ஒன்னு பண்ணுவோமோ! நீங்க மேடையிலெ ஒட்கார்ந்து பாடுறமாதிரி ஆக்ட் கொடுங்க, நான் பின்னாடி இருந்து டேப்ரிக்கடருலே பாட்டு போட்டு விடுறேன்."ன்னு பாண்டி சொல்ல

"ஏலேய்! தெரியுமில்லெய் ஒன்னோட வேலை என்க்கிட்டே ஆவாதிடி, யாரவது அங்கிட்டு ஒரு பொண்ணு போச்சின்னா அது பின்னாடியே நீப்பாட்டுக்கு போயிட்டேனா நான் இங்கிட்டு ஒரெ பாட்டே திரும்ப திரும்ப பாடறமாதிரி அவிங்ககிட்டே மாட்டிக்கிட்டு ஒதை'தான் வாங்கணும்."

"தல ஒன்னு பண்ணலாம்! ஏதாவது ஒரு பாட்டு வாத்தியாருக்கிட்டே போயி செவனெனு பாட்டு கத்துக்கிட்டு வந்திரு, அப்பிடியே ஃபிரஷ்'ஆ நாலு பாட்டு பாடி அப்ளாஸ் வாங்கிரலாம்"

"யாருப்பா இது விவ்'ஆ., ம்ஹீம் நான் கும்பக்கோணத்துக்கு வழிக் கேட்டா கொட்டைப் பாக்கு ரூபாய்க்கு அஞ்சுன்னு ஏத்தமா பதிலே சொல்லுறே! ஏலேய் அப்ரெண்டிஸ்களா நீங்களாவது ஒரு ஐடியா சொல்லுங்க சாமீகளா"

"தல எம்.ஜீ.ஆரோட நாலு பாட்டு, சிவாஜியோட நாலு பாட்டு அதெய்யலாம் மேடையிலே பாடிரு, அதெல்லாம் இப்போ இருக்கிற ஆளுகளுக்கு சரியா தெரியாது, அதெல்லாம் ஒன்னோட பாட்டுன்னு நினைச்சிருவாங்க! என்னா சொல்லுறே" இது கட்டர்

"இது நல்ல ஐடியாதான், ஆனா சிலப்பேருக்கு அந்த பாட்டெல்லாம் தெரியும், ராயல் நீ என்ன சொல்லுறே??"

"தல, பழைய பாட்டுன்னா யாருக்குமே தெரியமே இருக்கிறது மகாலிங்கம்,தியாகராஜர் பாகவதர் பாட்டெல்லாம்தான். நீ அதேவே பாடிறலாம்!"

"ரைட்டேய், இதெல்லாம் மைண்ட்'லே வச்சிருக்கேன்.சரி நான் கச்சேரிக்கு போட்டுக்கிறதுக்கு டிரெஸ் வாங்கிட்டு வந்திய்யா ராயலு?"

"ம் இருக்கு தல! இந்த மஞ்சபையிலே சுருட்டி வைச்சிருக்கேன், இந்தா பாருங்க!"

"அடபாவி அப்ரெண்டிஸ், இது கலராய்யா? ஓரத்திலே படுத்து கிடக்கிற நொண்டி மாடுகூட என்னை தேடி வந்து நச்சுன்னு முட்டிட்டு போகுமிடா? ஏண்டா சட்டைன்னா மஞ்சகலரும்,உள்சட்டை கருஞ்செவப்பு கலரு, பச்சை கலருலே வேட்டியும்தான் கிடைச்சதா?"

"தல நீதானே சொன்னே? எதுவுமே ஒரு அட்ராக்டா செய்யினுமின்னு? அதுதான் போடுற டிரெஸிலே அட்ராக்டிவான கலரா தேடி கண்டுப்பிடிச்சேன்.!"

"சரி அதெல்லாம் ஓகே! யாராவது ஐடியா சொல்லுங்கய்யா?? எப்பிடி மேடையிலே பாடுறதுன்னு??"

"தல மேடையிலே ஏறி ஒனக்குன்னு இருக்கிற இடத்திலே உட்கார்ந்து, மைக்கே எடுத்து வாயை திறந்து பாடணும்!!"

"டேய் ராஸ்கல், ஒனக்கு வரவர ரொம்ப ஏத்தமா போச்சுலே பாண்டி! நான் என்ன கேட்டா நீ என்ன பதிலே சொல்லுறே? சுருதி சுத்தமா எப்பிடிய்யா பாடுறது? யாராவது சொல்லித் தொலைங்கய்யா சாமிகளா... சும்மா இருக்கிறவனே சொறிச்சு விட்டு வேடிக்கை பார்க்கிறதே உங்களுக்கெல்லாம் பொழப்பா போச்சுலே???"

"தல நான் ஒரு ஐடியா சொல்லுறேன்"ன்னு சிபி முன்னுக்கு வருக்கிறார்.

"ம் சொல்லு என்னருமை தளபதியே?"

"தல ஒரு வரியே நாலு அஞ்சு தடவை சும்மா திரும்ப திரும்ப பாடிக்கிட்டே இரு, அது போதும், அப்பிடியே கேட்கிறவங்களுக்கு ஒரு கச்சேரி கேட்கிற எபக்ட் வந்திரும். இதேமாதிரி செஞ்சேன்னு வை, ஒரு பாட்டே பாடி முடிக்க 15லிருந்து 20 நிமிசம் ஆகிறும், அப்பிடியே நாலுப்பாட்டுக்கு ரெண்டு மணிநேரமா இழுந்திரலாம். என்னா சொல்லுறே??"

"அதெல்லாம் சரிதான்! இப்போ என்ன பாட்டே பாடுறது? எனக்கு நல்ல குரல்வளம் இருக்கான்னு தெரியலே?"

"தல நீ பார்க்கதான் பென்சில்லே கோடு வரைஞ்சமாதிரி சரிரம்! ஆனா நீ பாடினா அது கட்டை சாரீரம்!"

"என்னாமோ தள! ஒன்னோட பேச்சே மலை மாதிரி நம்புறேன். இந்த ராகம்,தாளம்,பல்லவியோட பாடணுமே? அதுக்கு என்னா பண்ணுறது?"

"இப்பிடி பண்ணலாம்! கோவைக்கு ஒன்னோட ஹெலிக்காப்டருலே வந்துரு! நீயும் நானும் ராகம்,தாளம்,பல்லவிக்கு போயி ஒவ்வோரு ஷோ'வா பார்த்துட்டு படத்திலே இருக்குற நல்ல பாட்டெல்லாம் கச்சேரிலே வந்து சேர்த்து வச்சு பாடிரு! ஒவ்வொரு பாட்டுக்கு முன்னாடியும் ஒரு போர்டு'லே இது ராகமிலே பார்த்தது, தாளத்திலே பார்த்தின்னு சொல்லிறலாம்!!!"

"ஆனா ஒன்னே ஒன்னு தெரிஞ்சு போச்சு! உங்களளே எனக்கு ஒன்னத்துக்கும் சல்லிக்காசு'க்கு பிரயோசனமில்லன்னு நல்லவே தெரிஞ்சு போய்யா சாமிகளா??? போங்க போய் எனக்கு எப்பிடி ஆப்பு வைக்கலாமின்னு அமெரிக்காகாரன் அடுத்த நாட்டு மேலே குண்டு போடுறதுக்கு யோசிக்கிறமாதிரி பெரிய விஞ்ஞானிகளாட்டம் திங் பண்ணுங்க..."

தல இம்மாதிரி மனசொடிந்து பேசும் பேச்சைக் கேட்டு சங்கத்து சிங்கம்கள் அனைவரும் கவலையுறுகின்றனர்.

"தல நாமே ஒன்னு பண்ணலாம்! நமக்குதானே தெரியலே? வேறே யாராவது அதேபத்தி தெரிஞ்சவங்ககிட்டே கேட்டுப்பார்போமா?"

"ஆங்..பரவாயில்லேயே விவ், இம்பூட்டு நேரமா அமைதியா இருந்தாலும் நல்ல வாசகமா அதுவும் திருவாசகமாதான் சொல்லிருக்கே! இப்போதாய்யா எனக்கு நல்ல ஐடியா'வே வருது! நம்ம சங்கத்து தீரா தலைவி(வலி)யே காண்டக்ட் பண்ணுங்க.. இல்லேன்னோ அந்த விக்கிபசங்களே உசுப்பி விடுங்கய்யா?? அவங்க வந்து என்ன கர்ஜிக்கிறாங்கன்னு பார்ப்போம்... எனக்கு எப்பிடியாவது கச்சேரி பண்ணியே ஆவணும். ஐ வாண்ட் டூ இட் நவ்...

"தல இன்னோன்னு பண்ணலாம்? எனக்கு தெரிஞ்சு பெரிய பெரிய தலைங்கயெல்லாம் பாட்டு பாடி குழந்தைகளை கவர் பண்ணுவாங்க.. நீயும் குழந்தை குழந்தையா இருந்தாதான் பிடிக்குமின்னு சொல்லிறுக்கே?? அதுனாலே மொதல்லே குழந்தைகளை கவர் பண்ணு! அதுக்கப்புறம் கைப்பு அங்கிள்! கைப்பு அங்கிள்! உன் பின்னாடியே எல்லாரும் வந்திருவாங்க.."

"வேணாம் கட்டரு! நானெல்லாம் ஏற்கெனவே பெரிய தலையா ஆகிட்டேன். எனக்கு தெரியவேண்டியது ராகம்,தாளம்,பல்லவி'தான்... பார்ப்போம் அந்த விக்கிபசங்க எம்பூட்டு நாளைக்குள்ளே சொல்லிதாரங்கன்னு?? அவங்கதான் என்னா சந்தேகம் கேட்டாலும் தீர்ந்து வைக்கப்பாலேமே?? எனக்கு இப்போ மீஜீக்'லே பேசிக் நாலெச் வேணும்??"

தலயோட இந்த அறிவிப்பை கேட்டு சங்கத்து சிங்கக்கள் எல்லாரும் அமைதியாகிறார்கள். விக்கிப்பசங்கதான் பாவம் நம்ம தல கேட்கிறகேள்விக்கெல்லாம் எப்பிடிதான் சமாளிக்க போறாங்களா..!! அய்யோ.. அய்யோ!!!!

Wednesday, December 6, 2006

ஒரு டைரி குறிப்பு -1

ஜூலை 18, 2006
johnny_walker
எங்க குடும்பம் கொஞ்சம் பெருசுங்க. தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா ந்னு ஒரு 100, 150 பேரு எங்க ஊருல இருப்பாங்க எனக்கு வயாசாகிட்டு இருக்குன்னு ஊரு முழுக்க கவலை. பாசக்காரனுகன்னு நினைச்சேன், அவனவன் அவனவனுடைய ஆசைய நிறைவேத்திக்க என்னைய பலிகடாவா நிக்க வைச்சிருக்கானுகங்க அப்படிங்கறது ரொம்ப லேட்டா எனக்கு இப்போத்தான் தெரிஞ்சுது...

எனக்கு இப்போத்தான் ஏழரை சனி ஜாதகக் கட்டம் முழுசுமா ஒரு சுத்து சுத்தி கபடி ஆடிட்டு போயிருக்கிறாரு... அவரு ஆடுன ஆட்டத்துல செவ்வாய், புதன், வெள்ளி எல்லாம் எடம் மாறி அவங்க வீட்டையெல்லாம் வாடகைக்கு விட்டுட்டு தெறிச்சு ஓடி போயிட்டாங்க. கல்யாணத்துக்கு நான் ரெடின்னு சொன்னா பத்தாது, குருவாம்... அவர் வீட்டை இப்போ யாரோ பார்த்துட்டு இருக்காங்களாம், அவர் அவர் வீட்டுல காலடி எடுத்து வைச்சாத்தான் கல்யாணம்ன்னு சொல்லீட்டாங்க... ஏங்க, நான் தெரியாமத்தான் கேக்கிறேன், அவரு வீட்டுக்கு அவரு வரட்டும் போகட்டும். அதுக்கு ஏன் என் வாழ்க்கையில் விளையாடணும்?

சரி, விசயத்துக்கு வருவோம். தம்பிக்கு குரு பலன் மட்டும் வரட்டும், கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடுன்னு பல ஊருல இருந்து பொண்ணுக ஜாதகத்தை இறக்கிற மாட்டோம்னு வீட்டுக்கு வந்தா வாய் ஓயாம பேசிட்டே இருப்பாங்க.

அவங்க பாச மழையில் நனைஞ்சு போய் ஒரு நாள் என் பாங்காளிகிட்ட என் மேல உனக்கு அவ்வளவு பாசமாடான்னு கேட்டா, "பங்கு, ஜான் வாக்கர்ன்னு ஒருத்தர் கருப்பு லேபிள், சிவப்பு லேபிள்ன்னுட்டு 1820 லிருந்து காய்ச்சிட்டு இருக்காராம். அதெல்லாம் நாங்க எப்ப கண்ணுல பாக்கறது? உனக்கு கல்யாணம்ங்கற சாக்குலதானே இதெல்லாம் நினைச்சுக்கூட பார்க்க முடியும். அது மட்டுமில்லாம டாஸ்மாக் சரக்கு குடிச்சி குடிச்சி உடம்பு பழகிடுச்சி. அது ஒசத்தி சரக்கு, ஒத்துக்காம போயிடுச்சின்னு ரெண்டு நாள் வீட்டு பக்கம் போகலைன்னா கூட யாரும் கண்டுக்க மாட்டாங்கள்ல???" ன்னு அவன் கனவை நினைவாக்க நாள் பாத்துட்டு இருக்கான்.

சரி இவன் சின்ன பையன், நம்ம கிட்ட காமெடி பண்ணறான்னு நினைச்சுட்டு ஒரு பெருசு கிட்ட எனக்கு கல்யாணம் பண்ணி பார்க்க உங்களுக்கு அவ்வளவு ஆசையான்னு கேட்டேன். "நாம தட்டை கையில கொண்டு போய் வரிசையா நின்னு வாங்கி சாப்பிடுவோமே அதுக்கு பேரென்ன பஃபே தானே?" ன்னு கேட்டார். ஆமா தாத்தா, அதுக்கென்ன இப்போ??? என நான் திருப்பி கேட்டேன். காங்கிரசம்புதூர்காரர் பையன் கல்யாணத்துல சீட்டு விளையாண்டுட்டு இருந்தோம். அந்த கல்யாணத்துல சாப்பாடு அது மாதிரிதான். பேச்சு வாக்குல இதே மாதிரி எங்க ஊரு பசங்க கல்யாணத்துலையும் போடணும்னு சொல்லிட்டு இருந்தேன். உடனே இந்த ஆயிக்கவுண்டன் பாளையத்துக்காரங்க "எச்சை கையில காக்கைய கூட துரத்தாதவங்க சாப்பாடு போடறாங்களாம்ன்னு கிண்டல் பண்ணுனாங்க. அன்னைக்கு என் துண்டை உதறி சபதம் போட்டிருக்கேன்னு அவரு ஒரு கொசுவர்த்தியை சுத்தி முடிச்சாரு.

பிச்சைக்காரங்க மாதிரி "கையில ஏந்தி சாப்பிடறது, ஜெயில களி வாங்க லைன்ல நிக்கறது மாதிரியான சாப்பாடெல்லாம் தேவையில்லை, வந்தவங்களுக்கு உக்கார வைச்சு தலை வாழையில் வடை பாயசத்தோட சாப்பாடு போடறதுதான் மரியாதைன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு ரம்மியை கன்டினியூ பண்ணிருக்கலாம். எதுக்கு வயசான காலத்துல இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு??" ந்னு அவரை சமாதானம் பண்ணலாம்னு பார்த்தா "உன்னோட ஒரு கல்யாணந்தான் பாக்கி, அதுல இதை பண்ணியே ஆகணும்ன்னு திரும்பவும் துண்டை உதறி தோளில் போட்டார்.

தாத்தா, இதெல்லாம் நீங்க பார்த்து கல்யாணம் பன்னினா? நான் பெங்களூரிலிருந்து ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்து நான் இவளை கல்யாணம் பண்ணிட்டேன், ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு சொன்னா என்ன பண்ணுவீங்கன்னு அப்பாவியாய் அவங்களோட ரெஸ்பான்ஸ் எப்படி இருக்குன்னு பார்க்கறதுக்காக கேட்டேன்.

உன்னை வெட்டி போட்டுற மாட்டோம், நம்ம சாதியென்ன, சனமென்ன?? கனவுலகூட நீ இதை நினைச்சிறக்கூடாது என கட்டளை போட்டார். தாத்தா, எனக்காக சபதம் எல்லாம் போட்டிருக்கிறீங்க, இப்போ என்னை வெட்டிடுவீங்கன்னு அசோகன், நம்பியார், பி.எஸ்.வீரப்பா மாதிரி பேசறீங்க, என்ன தாத்தா இதெல்லாம்ன்னு கேட்டேன். ஆமா, நீ பாட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு பெங்களூருக்கு போயிடுவ, இங்க டீக்கடை, ஆலமரம்ன்னு எங்க போனாலும் எங்களை எளக்காரமாத்தான் பார்ப்பாங்க. உன்னைய வெட்டுனும்ன்ன வைச்சுக்க, எங்க பார்த்தாலும் எந்திரிச்சு நிப்பாங்க என மீசையை முறுக்கினார்.

சிம்ரன் கடுங்கோபக்காரின்னு தினமலரில் போட்டிருக்கிறதை 10 தடவை படிக்கறதுக்கு டீக்கடைக்கு போவீங்க... தாயம் ஆடுவதுக்கு ஆலமரத்துக்கு போவீங்க. அங்க இருக்கறவங்க எல்லாரும் ஐநா சபையில நிரந்தர உறுப்பினர்கள். அவங்ககிட்ட மரியாதை வாங்கறதுக்கு ஆடு வெட்டுவேன் கோழி வெட்டுவேன்னு சொல்லற மாதிரி என்னைய வெட்டுறன்னு சொல்லறீங்கன்னு சொல்லிட்டு (எல்லாம் மனசுக்குள்ளதான்) சொல்லிட்டு எஸ்ஸாகி அமெரிக்கா வந்தாச்சு.

Johnny sitting_1

"இனி மேல் இந்த மாதிரி யாருகிட்டையும் கேக்க மாட்டேன்" அப்படின்னு 100 தடவை எழுதிருந்தது. (இம்போசிசன் போலிருக்கு!!!).
இது ஒரு வருத்தமுள்ள வாலிபனின் டைரிக் குறிப்பு. டைரி அதுக்கப்புறம் காலியா இருந்தது. ஒரு வேளை பயலுக்கு டைரி எழுதறக்கெல்லாம் நேரம் இல்லை போலிருக்கு... படிச்சது தப்புத்தான், ஆனா அடுத்தவன் வகையா ஆப்பு வாங்குறப்போ மட்டும் பல்லு மொத்தமும் வெளிய குதிக்குதே... அதுக்காகவே திரும்பவும் அவனோட பழைய டைரிய படிக்கலாம்ன்னு இருக்கேன், படிக்கட்டுமா?

Monday, December 4, 2006

வ(லி)ழி தெரியாத வாலிபன்


உதய்: யப்பா... அந்த ஃபேனை போடுங்கப்பா. இப்போத்தான் தமிழ்மணம், தேன்கூடு எல்லாம் சுத்திட்டு வந்திருக்கேன். எந்த சந்துல இருந்து யாரு அடிப்பாங்கன்னே தெரியல. தாகமாவும் இருக்கு, கொஞ்சம் ஐஸ் வாட்டர் இருந்தா குடுங்க.

வெட்டிப்பயல்: சங்கத்து சிங்கங்களே, நம்ம அட்லாஸ் வாலிபர் வந்திருக்காரு. விசிறியும், பானைத் தண்ணியும் கொண்டு வாங்க.

உதய்:என்னது அட்லஸா ? அதெல்லாம் ஸ்கூல் படிச்சப்போ பார்த்ததோட சரி. என்னைய வைச்சு காமெடி பண்ணறேன்னு தெரியுது. அதென்ன விசிறியும், பானைத் தண்ணியும்? கரண்ட் இல்லையா?

வெட்டிப்பயல்: சங்கமே கடன்லதான் போவுதுன்னு தெரியாதா உங்களுக்கு? தலை கைப்பு கட்ட வேண்டிய 10 அபராதம் பாக்கி இருக்கு. இதுல சித்தூர்கட் செலவு, அப்புறம் பஸ்ல கண்டக்டர்ன்னு சொல்லிட்டு ஓசி ட்ரிப் வேற அடிச்சிருக்காரு, அதுக்கு எவ்வளவு கேப்பாங்கன்னு தெரியலை.... அட விடுங்க, அதெல்லாம்கூட எதிர்பார்த்ததுதான்...

இந்த தேவ் இருக்காப்புல இல்ல, வல்லவன் படம் பார்த்துட்டு விமர்சனம் எல்லாம் எழுதராரு. அதை பாக்காலாம் வாங்கடா கூட்டிட்டு போன ரெண்டு பேரு தூக்குல தொங்கிட்டாங்க. அதுக்கு பாடி எடுக்கறது சம்பந்தமா பஞ்சாயத்து பண்ணத்தான் தலயும் போயிருக்கறாரு. அங்க என்ன ரணகளம் ஆயிட்டு இருக்குன்னு தெரியலை. தல எப்படியும் பத்து சட்டை மாத்த வேண்டியிருக்கும்.

உதய்: பஞ்சாயத்துக்குதானே போயிருக்காங்க, அதுக்கு எதுக்கு பத்து சட்டை?

வெட்டிப்பயல்: சும்மா விளையாடாதீங்க... அடி வாங்கி சட்டை கிழிஞ்சு போனா தல திரும்ப புது சட்டை போட்டுட்டுத்தான் அடிக்க விடுவாரு.

உதய்: சங்கத்து சிங்கங்களேன்னு கூப்பிட்டு ரொம்ப நேரம் ஆகுது, யாரையும் வரக் காணோம். சரி வா, நாமளே போயி விசிறியும் பானையும் எடுத்து வந்துரலாம்.

வெட்டிப்பயல்: அய்யோ உதய், விசிறியும் காணோம்,பானையும் காணோம். ஒரு நிமிசம் இருங்க...இப்போத்தான் சுவாமி பித்தானந்தா கெட்டப்புக்கு விசிறி இருந்தா நல்லா இருக்கும்னு சிபி சொல்லிட்டு இருந்த மாதிரி இருந்தது. அதை அவரு எடுத்துட்டு போயிட்டாரு போல இருக்கு.

உதய்: அதான் சிம்புவுக்கும் நயன் தாராவுக்கும் லடாய்ன்னு வந்துடுச்சுல்ல, அப்புறம் எதுக்கு இன்னமும் அந்த வேஷம்? கோர்ட் ஜெயிலில் எல்லாம் அவங்கள மாதிரி 420 ஆளுகளாக நிறைஞ்சு இருக்காங்கன்னு ஈ படத்துல ஜீவா சொன்னாரு. இவரு சாமியாரா கோர்ட்டுக்கு போயி அவங்க மனக்குறைய தீர்த்து வைக்கட்டும். அப்புறம் அந்த பானை என்ன ஆச்சு? அதையும் அடகு வைக்க கொண்டு போயிட்டிங்களா? சேட்டு செவுள்ளையே அறைவான்.

வெட்டிப்பயல்: எங்க ஆளுக அதெல்லாம் ஏற்கனவே சேட்டுகிட்ட வாங்கிட்டாங்க. நம்ம இளா இல்ல, ஊரெல்லாம் நல்ல மழை, ஆர்யம் நல்லா விளைஞ்சிருக்கு, அதை போட்டு வைக்க பானை வாங்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தாரு. இங்க இருந்தே ஆட்டையை போட்டுட்டாரு போல இருக்கு.

(யாரோ சங்கத்து முன்னால் நின்று சுந்தர தெலுங்கில் சத்தமாக ஏதோ சொல்லுகிறார்கள்)

உதய்: லகலகலக... எவருதி? சங்கத்து வாசல்ல சாணி தெளிக்கிறது...

வெட்டிப்பயல்: அய்யோ உதய், பேசாம உக்காருங்க. அவன் பாட்டுக்கு கத்திட்டு போயிடுவான். அப்புறம் நாம வெளிய போலாம். இதுதான் சாக்குன்னு ஜோதிகா மாதிரியே குடுத்த காசுக்கு மேலயே நடிக்கறீங்க.

உதய்: ஹிஹிஹி...அவன் மொத்த பரம்பரையவே திட்டுனா மாதிரி இருந்தது, அதான் கொஞ்சம் உணர்ச்சிவசபட்டுட்டேன்.

வெட்டிப்பயல்: சங்கத்து வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணம். தெலுங்கு பட விமர்சனம் எழுதலாம்ன்னு 3 டிவிடி வாங்கிட்டு வந்தேன். சார்மி, இலியானா, ஜெனிலியாவையெல்லாம் பார்த்ததுக்கு அப்புறம் டிவிடி ரிட்ட்ர்ன் பண்ண மனசு வரலை. இன்னமும் 1 மாசத்துல குடுத்துருவேன். அதுக்கபுறம் அவன் வர மாட்டான்.

உதய்: என்ன நடக்குது இங்க? கொல்ட்டி கதை, பட விமர்சனம், அப்புறம் தெலுங்கு மக்களோட சுந்தர தெலுங்கில் மாட்லாடறது... அம்மாயி தெலுகா? நாக்கு தெலுசுந்தி...

வெட்டிப்பயல்: பேசறதுக்கு எவ்வளவு மேட்டர் இருக்கு? அதைவிட்டுட்டு எதையோ நோண்டிட்டு இருக்கீங்க. ஜொள்ளுப்பாண்டியும் நீங்களும் எதோ ஆராய்ச்சிக் கட்டுரை எழுதறதா ஒரு பேச்சு இருந்துச்சே என்ன ஆச்சு?

உதய்: எனக்கு கைடா இருக்கறதுக்கு முதல்ல ஒத்துக்கிட்டாரு. இப்போத்தான் அடிபட்டு ICU வில இருந்து வெளிய வந்திருக்காரு. காயம் எல்லாம் ஆறட்டும்னு பார்க்கிறேன். பின்னாடி பட்ட காலிலே படும்னு பழமொழி எல்லாம் சொல்லக் கூடாதுல்ல... சரி வரட்டா? நான் வேறெங்காவது போயி தண்ணி குடிச்சிக்கிறேன்.

என்னது, வேறெங்காவது போயா? இன்னும் ஒரு மாசத்துக்கு இங்கதான். எல்லோருக்கும் சொல்லி விட்டாச்சு. சங்கு, சேவுண்டி கூட ரெடி அட்லாஸ் வாலிபரே!!! என கோரஸாக சொல்லியபடி சங்கத்து சிங்கங்கள் கைப்பு தலைமையில் உள்ளே வருகிறார்கள்.

உதய்: மக்கா, நீங்க எல்லோரும் இங்கதான் இருக்கீங்களா??? சொல்லவே இல்லை. இப்ப வரைக்கும் நாங்க ஒன்னுமே பேசவே இல்லை. யாரோ டப்பிங் குடுத்துருக்காங்கா, டப்பிங். சினிமால குடுக்கற மாதிரியே, ஆமாம்... ஒன்னும் மனசுல வைச்சுக்காதீங்க...வரட்டா????

கைப்பு: எனக்கேவா, இல்லை எனக்கேவான்னு கேக்கறேன். சட்டையெல்லாம் கிழிஞ்சு குத்துயிரும் குலை உயிருமா நின்னாக் கூடா பத்து பேர அடிச்சா சட்டை கிழியத்தான் செய்யும்ன்னு சொன்ன எனக்கேவா??? ஒரு மாசத்துக்கு அந்த பக்கம் இந்த பக்கம் நகரக் கூடாது. உக்கார்ந்த இடத்துலயே உனக்கு எல்லோரும் ஆப்பு வெப்பாங்க. சத்தமே வரப்படாது, சரியா?

தேவ்: செம ஆப்புல்ல...தோ பாரும்மா இப்பெல்லாம் யாரும் யாருக்கு ஆப்பு வைக்கிறதே இல்லை. எல்லா ஆப்பும் அங்க அங்கதான் இருக்கு. நாமதான் அதை தேடி ஓடி போயி சும்மா ஜம்ப் பண்ணி உக்கார்றோம்.

உதய்: நானும் வல்லவன் படம் பார்த்தேன். அதுக்காக இப்படியா டைமிங் வச்சு ஜோக் அடிக்கறது. தண்னி குடிக்க உள்ள வந்தவனை தலை தனியா, கால் தனியா பிரிக்கணும்னு முடிவு பண்ணீட்டீங்க, இதெல்லாம் வேண்டாம்ன்னா விடவா போறீங்க. யப்பா ராயல் ராம், திண்டுக்கல் தலைப்பா கட்டு பிரியாணியும் உங்கூரு ஜிகர்தண்டாவும் வாங்கிட்டு வாப்பா... அப்படியே சூடான் புலியை பாத்தீங்கன்னா ஏதாவது புதுசா அயிட்டம் சுட்டு பழகிட்டு இருப்பாரு, அதையும் ஒரு எட்டு பார்த்து வாங்கிட்டு வந்துடுங்க.

தெம்பா இருக்கணும்ல, என்ன நான் சொல்லறது???

Thursday, November 30, 2006

மாதா பிதா குரு பிகரு

2001 ம் ஆண்டு ஜான்ஸ் கல்லூரி சாலையில் இருக்கும் ரிதம் கேண்டீன் அருகே
அந்த வெட்டி காம்ப்ளக்ஸில் இருந்துகொண்டு உடன் இருக்கும் ஜான்ஸ் கல்லூரி
மாணவர்களை குஷிபடுத்துவதற்காக வருகின்ற போகின்ற பிகர்களைப் பார்த்து
எழுதிய கவிதை இது.

நான் எழுதிய பிறகு அதனை ஏதாவது பிகர் வரும்பொழுது அந்த வரிகளை சத்தம்
போட்டுப் படிக்கும் சாக்கில் நண்பர்கள் உற்சாகமாக கத்துவார்கள். மிகவும்
ஜாலியாக இருக்கும்.

இதோ இன்று அந்த காம்ப்ளக்ஸைக் கடந்து செல்லும்போது அந்த ஞாபகம் வந்ததால்
உடனே வீட்டிற்கு வந்து பழைய டைரியைப் புரட்டி எடுத்து புதுப்பிக்கிறேன்.

*




என் இனிய கல்லூரி பிகர்களே
நீங்கள்
பிரம்மாவால் படைக்கப்பட்டீர்களா?
இல்லை
பிரம்மாவையே படைத்தீர்களா?

எங்கிருந்ததடி வந்தது உங்களுக்கு? - இந்த
ஏகாதிபத்திய அழகு

பிகர்களே! உங்களையெல்லாம்
பிரம்மா எங்கேயோ
அடைத்து வைத்திருக்கிறான் போல!

ஆம்
குற்றால சீசனுக்குக் கொஞ்சம்
பொருட்காட்சிக்குக் கொஞ்சம்
பஸ்ஸ்டாண்டுக்குக் கொஞ்சம்
கல்லூரி விழாவிற்கு கொஞ்சம்
ஊட்டிக்குக் கொஞ்சம்
இப்படிக்
கொஞ்சம் கொஞ்சமாய்
அனுப்புகிறான் போல!

- பிகர்
வேலைதேடி
வெயிலில் சுற்றும்
இளைஞர்களுக்கெல்லாம் இந்த
ஒற்றை வார்த்தைதான்
உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறது!

- பிகர்
ரிதம் கேண்டீனில்
டீ குடிக்காமலேயே
இதம் கொடுக்கின்ற
இன்பமான வார்த்தை!

- பிகர்
சுவாசிப்பது போல
இமைப்பது போல
கடலை போடுவது போல
ஜான்ஸ் கல்லூரி ஸ்டிரைக் போல
இந்த வார்த்தை
அடிப்படை தேவைகளுக்கு
அடுத்தபடியாகிவிட்டது!

- பிகர்
ஒற்றை வார்த்தையில்
ஒரு ஹைக்கூ




8 மணிக்கு ஸ்கூல் பிகர்
9 மணிக்கு காலேஜ் பிகர்
9.30 மணிக்கு வொர்க்கிங் பிகர்
9.45 மணிக்கு போலிஸ் பிகர்
ஏனோ தெரியவில்லை இதில்
கடைசிவகை
பிகர் வந்தால் மட்டும்
எமது இளைஞர்கள்
வெட்கப்பட்டு ஓடிவிடுகிறார்கள்!

ஹாய் பிகர்களே
உங்கள்
கண்கள் என்ன
கம்னியூஸ்ட்டா ?
இப்படியா போராட வைப்பது
இதயத்தை?

போங்கடி
உங்களைப்
பார்க்காமலிருக்கவும் முடியவில்லை
பார்த்துவிட்டும் செல்லமுடியவில்லை

ஏமாளியாய் இருக்கும் எங்கள்
இந்திய இளைஞர்களையெல்லாம்
உங்கள்
இதயத்தில் மட்டுமல்ல
பஸ்ஸில் படிக்கட்டிலும்
தொங்கவிடுவதிலும்
உங்களுக்கென்னடி ஒரு
தூரத்து சந்தோஷம்?

நாங்கள் என்னடி
பாவம் செய்தோம்?
கல்லூரிக்கு அப்பாவியாய்
கிளம்புகின்ற அந்த நேரத்தில்தான்
நீங்கள்
மொட்டைமாடியில் துணியுலர்த்தி எங்களை
மொட்டையடிக்க வேண்டுமா?

நீங்கள்
கம்ப்யூட்டர் படித்திருக்கலாம்.
அதற்காக நாங்கள்
வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில்தான் உங்கள்
ஜன்னல்கள் திறந்துவிடட்டுமென்று
ஜாவா புரோகிராம் எழுதியிருக்கிறீர்களோ?

எந்தப்பட்டறையில்
தீட்டிக்கொள்கிறீர்களோ
தெரியவில்லை?
உங்கள்
விழி ஆயுதத்தை!

ஜன்னலுக்கு பின்னால்
ஜெயில்கைதிகளைப்போலவே
பயந்து கொண்டிருக்கும்
அந்த
இரட்டைவிழிகள்..
யப்பப்பபா

பாரதியின்
கவிதையை விடவும்
பயங்கரமாயிருக்கிறது!

இந்த டீக்கடையின்
டீயை விடவும்
கொடுமையாயிருக்கிறது!

பஸ்ஸடாண்டில் நிற்கும்போது
தோழிகளோடு
அப்படி என்னதான் பேசுவீர்களோ?
ராஜாவையா...
ஞானியாரையா...
ரூபனையா...
எவனை இன்று
வழுக்கி விடலாமென்று தோள்களைக்
குலுக்கிக் குலுக்கி பேசுகிறீர்கள்?

எங்கள்
எதிரில் வரும் பொழுதுதான்
தோழிகளோடு
சிரித்துச் சிரித்துப் பேச வேண்டுமா?

நாங்கள்
பார்க்கவேண்டுமென்றே யாரும்
ஜோக்கே சொல்லாமல்
சம்பந்தமே இல்லாமல்
சிரிக்கிறீர்கள் என்ற சேதி
சேரியில் இருப்பவனுக்கு கூட தெரியும்!
தயவுசெய்து
சிரிப்பதை நிறுத்துங்கள்
அன்று இரவு
நாங்கள் தூங்க வேண்டும்!

இளைஞர்கள்
நாங்களும் ஒரு
பி.சி. சர்க்கார்தான்!
ஒரு
மாபெரும் மைதானத்தில்
ஒரே ஒரு பிகரை மட்டும்
ஒளித்து வைத்தாலும்
கண்டுபிடித்துவிடுவோம்!
ஆனால்
அவளுக்கு பின்னால்
அண்ணன்கள் இருப்பது
அடிவாங்கிய பிறகுதான் தெரிகிறது!

இன்றைய
இந்திய இளைஞர்களெல்லாம்
நாளொன்றிற்கு ஒரு பிகரைப்
பார்க்காவிட்டால் கூடப்
பைத்தியம் பிடித்துவிடுவார்கள்!

அது ஏன்டி?
ஒரு
வெளுத்துப்போன கைக்குட்டையால்
அடிக்கடி
இதழை சுத்தமாக்குகிறீர்கள் - எங்கள்
இதயத்தை அசுத்தமாக்குகிறீர்கள்!

எந்தட் டெய்லரிடம்
உங்கள்
சுடிதாரைத் தைக்கிறீர்களோ?
ஒருவேளை
எலிசபெத் டெய்லராக இருக்குமோ?

அது எப்படியடி?
அழுக்கு சுடிதார் அணிந்தாலும்
அழகாகவே இருக்கிறீர்கள்!

குளிக்காமல் வந்தாலும் எங்களைக்
குப்புறவிழச் செய்கிறீர்கள்!

குற்றாலத்திற்கு வருகிறீர்களே
குளித்துவிட்டுப் போகவேண்டியதுதானே ஏன்டி
இடித்துவிட்டு போகிறீர்கள்?

பொருட்காட்சிக்கு வந்திருக்கும்
அனைத்து இளைஞர்களையும்
அழைத்து வாருங்கள்!
பிகர்காட்சிதானே நடக்கிறது என
பிதற்றிக்கொண்டிருப்பார்கள்

- பிகர்
விடுதியில் இருக்கும்
ரூபனின் வாழ்வை
ரூட் மாறச்செய்கிறது!

- பிகர்
மூர்த்தியோடு தங்கியிருக்கும்
ராஜாவை
ராட்சஷனாக்குகிறது!

-பிகர்
பைக்கில் சுற்றும்
ஞானியின் வாழ்வை
நாசமாக்கிச் செல்கிறது!

-பிகர்
கேண்டீனில் இருக்கும்
ஜோதியின் மனசை
வீதியிலே எறிகிறது

-பிகர்
கடலையோடு திரியும்
சுடலையின் வாழ்வை
சுட்டுவிட்டுப் போகிறது!

இறைவா
சுகர் தவிர்த்து வாழக்
கற்றுக்கொடுத்தாய்!
அதுபோல
பிகர் தவிர்த்தும் வாழக்
கற்றுக்கொடுப்பா!
எங்களால்
ஏமாந்து கொண்டிருக்கமுடியவில்லை

"எந்த பஸ்ஸும் வரவில்லை
பஸ் வந்தால் பிகரில்லை
பிகரிருந்தால் அழகில்லை


பாளை பஸ்ஸ்டாண்ட்"

இப்படிப்
புரு விளம்பரத்ததையெல்லாம்
காப்பியடித்துக்கொண்டிருக்க முடியாது!

தினம் ஒரு
ஜீன்ஸ் பேண்ட்
அணிந்து வர முடியவில்லை

சேமித்த பணத்தையெல்லாம்
ஷேவிங் கிரீமுக்கே
செலவிட முடியவில்லை

பட்டதரிகள் எல்லாம்
பவுடர்தாரிகளாக முடியவில்லை

பிச்சையெடுத்துப்
போன் செய்ய முடியவில்லை


ஒருநாளைக்கு
32453 முறை
தலையை சீவிக்கொண்டிருக்க முடியாது


இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கும் நேரம்கூட
எதிர்வீட்டு பிகர் ஒன்று
மொட்டைமாடியில் டீ குடிப்பது போல
என்னை
பார்த்துக்கொண்டிருக்கிறது
போங்கடி நீங்களும்
உங்க லுக்கும்!...

பிகரைப் பார்த்துக்கொண்டே


- ரசிகவ் ஞானியார்

டிசம்பர் மாத அட்லாஸ் வாலிபர்

"எலேய் தேதி முப்பதாச்சி சங்கத்து கூட்டுங்கப்பு" சவுண்ட் விட்டுக்கொண்டே தல கைப்பு உள்ள வர...கூடவே புதுசா சேர்ந்த ராயலும் சங்கத்துக்குள் வர...

உள்ளே இருக்கும் சங்கத்து சிங்கங்களெல்லாம் தலய ஒரு லுக் உட்டவுடனே ஜெர்க் ஆகிறார்...

"எல்லாம் இங்கனத்தான் இருக்கீங்கனு தெரியாம ஓவராத்தான் சவுண்ட் விட்டுட்டனோ" என்று மனதிற்குள் நினைத்தவாரு ஒரு கர்ஜனையோட ஆரம்பிக்கிறார்!!!

"எலேய் வெட்டி உங்கிட்ட என்ன சொன்னேன்?"

"என்ன சொன்னீங்க?"

"போன வாரம் உங்கிட்ட என்ன சொன்னேன்?"

"போன வாரம் எங்கிட்ட என்ன சொன்னீங்க?"

ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா!!!

"ராயலு இதுக்கு மேல நான் பேசினேனா ரணகளமாயிடும்... நீயே அவன்கிட்ட கேளு"

"வெட்டி, அதான்யா நம்ம தலைக்கு ஆப்பு வாங்கறதுக்கு துணையா ஒருத்தர பிடிப்போமேயா. அவர் பேரு என்ன?
ஹா...அதான் அட்லாஸ் வாலிபரு. இந்த மாசத்துக்கு அட்லாஸ் வாலிபரு ரெடியா?"

"அதெல்லாம் எப்பவோ ரெடி... பதிவோட வெயிட்டீங்ல இருக்காரு!"

"ஆஹா! யாருப்பா அது? நம்ம ரேஞ்சுக்கு ஆப்பெல்லாம் தாங்குவாறா?"

"ராயலு என்ன இப்படி கேட்டுட்ட? ஒரு பொண்ணு ஓட்டனதுக்கே நீ போட்டோவ மாத்திட்ட... நாலு தமிழ் பொண்ணுங்க கூட்டமா சேர்ந்து ஓட்டனத பெருமையா பதிவு போட்டு இன்னும் போட்டோ போட்டுருக்க சிங்கமுங்க!!!"

"அது சரி.. நம்ம ரேஞ்சுக்கு கவிதை எழுதுவாரா?" தளபதி பெருமை பொங்க கேட்கிறார்!!!

"தள!!! கடைசி ரெண்டு பதிவும் கவிதைனு ஏதோ எழுதி வெச்சிருக்கிறார். அதுல அவருக்கு ஏன் தூக்கம் வரலைனு ஒரு கவிதை பல பேர சிந்திக்க வெச்சிருக்கு"

"ஓ! நம்ம ரேஞ்சிக்கு ஏதாவது ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்காறா?" ஜொள்ளு தவிப்போட கேட்கிறார்.

"ஜொள்ளு! உனக்கு முன்னாடியே ஏன் எதற்கு எப்படினு ஒரு ஆராய்ச்சி பதிவ போட்டுட்டாரு! அவரு கேட்ட கேள்விகளை பார்த்துதான் நம்ம ஜொள்ளு பேச்சியக்காவே பல பதிவுகள போட ஆரம்பிச்சாங்க!!! நிஜமல்ல கதைனு நிஜத்துல அவரு விட்ட ஜொள்ள பத்தி ஒரு தொடரே போட்டாருப்பா"

"சரி, நம்ம ரேஞ்சுக்கு நக்கல் நையாண்டி எல்லாம் வருமா?" புலி நக்கலாக கேட்க

"தீபாவளி அன்னைக்கு பொங்கல் பதிவு போட்டாருப்பா! இது போதுமில்ல"

"யாரடா அது நமக்கு தெரியாம இவ்வளவு பெரிய தில்லாலங்கடி?" விவசாயி ஆர்வமாக கேட்க

"விவா, வெடக்கோழிய எப்படி பிடிக்கிறதுனு நம்ம வாசுக்கு சொல்லி கொடுத்தாரே!!! இதுக்கு மேலையும் சொல்லனுமா?"

எல்லாரும் புரிந்துகொண்டு "வாவ் கலக்கல்" என்று சொல்ல...

தலை ஜெர்க்காகிறார்...

"ராஸ்கல்ஸ் என்னது இது சின்ன புள்ளத்தனமா? பேர சொல்லாம என்னதிது விளையாட்டு?"

"தல நீ மட்டும் கேள்வி மேல கேள்வி கேட்டு மனுசன கொல்லுவ... நாங்க பண்ணக்கூடாதா?"

"அதெல்லாம் சொல்லப்படாது!!! நான் கேள்வி கேப்பேன் நீ பதில் சொல்லனும். நீ கேள்வியெல்லாம் கேக்கப்படாது"

"சரி தல... ரொம்ப சவுண்ட் விடாத! நான் பார்ட்டிக்கு போறேன்... போயிட்டு வந்து சொல்றேன்" சொல்லிவிட்டு வெட்டி வெளியே போகிறார்.

"டேய் அப்பரண்டீசுகளா!!! யாராவது சொல்லுங்களேன்டா. யார்டா அந்த அட்லாஸு?"

"தல இன்னுமா தெரியல? நம்ம மில்வாக்கி நாயகன்தான்" சொல்லிவிட்டு இடத்தை காலி செய்கிறார் போர்வாள் தேவ்!!!

இதுக்கு மேலயும் கேட்டா நமக்கு விவரம் பத்தாதுலனு நெனச்சிக்குவானுங்க இந்த அப்பரண்டீசுங்க. எப்படியும் நாளைக்கு பதிவ போடும் போது
பார்த்துக்கலாம். அது வரைக்கும் தெரிஞ்ச மாதிரியே எஃபக்ட்ட கொடுத்துடுவோம் ...

"சரி சரி!!! எல்லாம் பார்ட்டிக்கு ரெடி பண்ணுங்க. நான் போய் நம்ம கட்டதுரைய சந்திச்சிட்டு வரேன்" சவுண்ட்விட்டு எஸ்ஸாகிறார் கைப்பு!!!

Wednesday, November 29, 2006

இது ஒரு நகைச்சுவை நாள்

*

தப்பு செய்றது எப்பவுமே தப்புதான்.

யார் செஞ்சாலும் தப்பு தப்புதான்.

தப்புங்கறது சில சமயம் தப்பு இல்லைன்னு நினச்சு நாம செய்ற சில காரியங்களால தப்பா போயிடும். எதுக்கு இத இப்போ சொல்றேன்னா..

வ.வா.ச. அப்டிங்கிற பேர்ல உள்ள 'வா'வ இன்னைக்கி ஒரு நாளைக்கு மட்டும் கடாசிடறது அப்டின்ற முடிவை வாலிபர்களெல்லாம் எடுத்துட்டாங்களாம். அது தப்பில்ல...

அவங்க சங்கம்; அவங்க பேரு. அதனால அது தப்பில்ல...

அதோடு, அந்தக் காலத்து ஆள் ஒருத்தரைப் பத்தி எழுதணும்னா,இன்னொரு அந்த காலத்து ஆள்தான் வேணும்னு அவங்க நினைச்சிருக்காங்க; அதுவும் தப்பில்லைதான்.

ஆனால் இப்படி தப்பே செய்யாத அவங்க பண்ணுன ஒரே தப்பு என்னன்னா,
என்னை இங்க ஒரு நாள் டேரா அடிக்கச் சொல்றதுதான்.

'ஆனாலும் இந்த ஆண்டவன் இந்தச் சின்னூண்டு நெத்தியில எவ்வளவு எழுதியிருக்கான்,பாத்தீங்களா?" (காதலிக்க நேரமில்லை)
என் தலைவிதி எனக்குத் தொடர்பில்லாத ஒரு சங்கத்தில, அதுவும் நகைச்சுவைக்கு முதலிடம் - இல்ல..இல்ல - முழு இடமே கொடுக்கும் வ.வா.ச. ஆட்கள் என்ன இப்படி பிடிச்சி மாட்டுவாங்களா? உங்க தலைவிதி அவங்க செஞ்ச தப்புனால இப்போ பாருங்க நீங்க இத வாசிக்க ஆரம்பிச்சிருக்கீங்க. (எங்க கடைசிவரை வாசிக்கப் போறீங்க? எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியே வாசிச்சிங்கன்னா, அது உங்க தப்பு! )

இன்னைக்கி எழுத நினச்சதை ஒரு வாரத்துக்கு முந்தியே எழுதியிருந்தா நல்லா இருந்திருக்கும். இன்னைக்கி நம்ம கலைவாணர் பிறந்த நாள். இதப் பத்தி ஒரு வாரத்துக்கு முந்தியே நினச்சி, இந்த நாளை ஒரு 'நகைச்சுவை நாள்' அப்டின்னு நாம பதிவர்கள் எல்லோரும் ஒரு விழாவா கொண்டாடியிருக்கலாம். இன்றைய பதிவுகள் எல்லாமே நகைச்சுவையை மட்டும் அடிப்படையாக வைத்து எழுதி இந்த நாளைக் கொண்டாடியிருக்கலாம். அடுத்த வருஷமாவது இந்த நாளை அப்படி கொண்டாடலாம் - தமிழ்மணத்தில் மட்டுமாவது. இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல விஷயமாவது செய்யலாம்ல..? காதலுக்கு நாளிருக்கு;நன்றி சொல்ல நாளிருக்கு.எல்லோருமா சேர்ந்து சிரிக்கிறதுக்கு ஒரு நகைச்சுவை நாளுன்னு ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்ல..அடுத்த வருஷம் பதிவர்கள் சேர்ந்து திட்டமிடுங்க.. வருத்தப்படாதவங்களுக்கு இதில ஒரு முக்கிய ரோல் இருக்கு; பாத்து செய்யுங்க. சரியா?



எல்லா நகைச்சுவை நடிகர்களின் நடிப்பிலும் நான் ஒரு விஷயம் பார்த்திருக்கிறேன். அவங்க காமெடி செஞ்சு முடிச்சதும் ஆடியன்ஸ் ரீயாக்ஷனுக்காக ஒரு சின்ன இடைவெளி தெரியும். ஒரு சில நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகள்ல தான் இந்த gap இல்லாதமாதிரி தெரியும். பேசும்போது ஆற்றொழுக்கு நடை அப்டின்னு சொல்லுவாங்களே அதே மாதிரி இவங்க நடிப்பும் ஒரே சீராகச் செல்லும். நம்ம ஊர் ஆள்களில் கலைவாணர், எம்.ஆர்.ராதா இந்த இருவரின் நடிப்பில் இதைக் கண்டதுண்டு. அதனாலே அதில் ஒரு இயல்புத் தன்மை இருக்கும்.

கலைவாணர் வில்லுப்பாட்டில் ஆரம்பித்து, நாடகங்களில் வளர்ந்து சினிமாவுக்குள் வந்தவர். இப்படி வருபவர்களின் நடிப்பில் ஒரு செயற்கைத் தனமும் ஒட்டிக் கொண்டு விடும். ஆனா எப்படின்னே தெரியவில்லை. கலைவாணருக்கிருந்த body language அந்த செயற்கைத்தனம் இல்லாமல் இருந்தது - அதுவும் சினிமாக்களின் ஆரம்ப காலத்திலேயே அவர் அதைப் புரிந்து நடித்தது - உண்மையில் ஒரு பெரிய விஷயம்தான்.

இப்போ வர்ர படங்களில் நம்ம இயக்குனர்கள் "கோனார் நோட்ஸ்" போடுவார்கள் தெரியுமா? அதாவது ஒரு கதாபாத்திரம் ஏதாவது ஒன்று செய்யும் முன் அதைப்பற்றி அந்த பாத்திரமே ஒரு soliloquy-ல் அது எதற்கு ஏன் என்று ஒரு detailed lecture கொடுக்கும்; அதாவது படம் பார்ப்பவர்கள் மடையர்கள்; அவர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் இது போல் விளக்கம் கொடுத்தால் தான் அவர்களுக்குப் புரியும் என்று நம் இயக்குனர்களுக்கு ஒரு புத்திசாலித்தனமான நினைப்பு. இப்படி இல்லாத தமிழ்ப்படம் கொஞ்சம் அரிது. கடைசியில் கதாநாயகனுக்குப் பைத்தியம் தெளிந்தும் அவன் பைத்தியங்களோடு போனானா; இல்லை பைத்தியமாகவே திரும்பி போனானா என்று ஒரு கேள்வியோடு படம் பார்த்தவர்களைத் தியேட்டரைவிட்டு வெளியே அனுப்பியதே 'சேது'படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக எனக்குத் தெரியும். இப்படி ஒரு கேள்விக்குறியோடு ஒரு படத்தையே முடித்த பாலாவுக்கு நல்ல தைரியம்தான்.ஆனால் மற்ற படங்களைப் பாருங்கள்; சீனுக்கு சீன் விளக்கவுரை இருக்கும்.

ரொம்ப பழைய படம் (அப்புறம் கலைவாணர் நடித்திருந்தா புதுப்படமாகவா இருக்கும்; வந்திட்டாய்ங்க கத சொல்றதுக்கு) - பணம்னு நினைக்கிறேன். சிவாஜி - பத்மினி..? வரதட்சணைப் பிரச்சனையால் பெண்ணை பிறந்த வீட்டுக்கு விரட்டியிருப்பார்கள். கலைவாணர் மாப்பிள்ளை பையனின் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பார். மாப்பிள்ளைப் பையனுக்கு மறைமுகமாக புத்தி சொல்ல நினைப்பார். கையில் ஒரு புறாவுடன் இன்னொரு வேலைக்காரனைத் திட்டிக் கொண்டிருப்பார். கதாநாயகனிடம் நியாயம் கேட்பார்.'பாருங்க, ஒருத்தர் இவனுக்கு இந்த அழகான மணிப்புறாவை இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அதற்கு அவரிடம் நன்றியோடு இருப்பதைவிட்டு அதை வளர்க்கவும் காசு கேட்கிறான்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். பத்த வைக்கிறதுதான். நல்லா பத்திக்கும். ஆனா இந்த இடத்தில் புறாவையும் புதுப்பெண்ணையும் ஒப்பிட்டோ அல்லது வேறு மாதிரி கதாநாயகனுக்கு அறிவுரை சொல்றது மாதிரி வசனங்கள் ஏதுமிருக்காது. அதாவது நோட்ஸ் ஏதும் கிடையாது.

சிரிப்பைப் பத்தியே ஒரு பாட்டு - எந்தப் படமென்று நினைவில்லை. அந்தப் பாட்டைக் கேட்டுட்டு ஒரு சின்ன புன்முறுவலாவது வரலைன்னா அவங்கள் என்ன மனுசங்களோன்னுதான் சொல்லணும். பலவகை மனிதர்களின் விநோதச் சிரிப்பை பாட்டாகப் பாடி, சிரித்துக் காண்பிப்பார். நடிப்புக்கு நடிப்பு; சிரிப்புக்கு சிரிப்பு.

நடிகர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் தாங்கள் நடிக்கும்போது சொல்பவைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமா என்பது அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி. பெரியார் படத்திற்கு ராஜா இசை அமைக்க மறுத்ததாக வந்த செய்தியை வைத்து நாம் எல்லோரும் அலசினோமே அதுவும் இதைச் சார்ந்த கேள்விதான். இரண்டுக்கும் தொடர்பு தேவை என்பது கட்டாயம் இல்லை. ஆனாலும் இரண்டும் ஒரே கோட்டில் சென்றால் அதன் மவுசே தனிதான். அந்த வகையில் கலைவாணர் ஒரு நல்ல முன்னோடி.அவர் படத்தில் பொதுவுடமைக் கருத்துக்கள், சமூக நல கருத்துக்கள், அப்போதைய தி,க.வின் கருத்துக்கள், சமய எதிர்ப்பு, மூட நம்பிக்கைகளின் மேல் சாடல் - இப்படிப் பல சேதிகளைச் சொல்லுவதாக வரும். அவைகளை தன் வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். மனிதனும், நடிகனும் ஒன்றிணைந்த இந்த பிணைப்பு அவர் புகழுக்கு அச்சாணி.

புரட்சிக் கருத்துக்களைப் படங்களில் பேசிவிட்டு, 'அது நடிப்பு; நடிப்பு வேறு; வாழ்க்கை வேறு' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அது ஒரு நடிகனுக்குப் பெரிய சறுக்குதான் என்பதை இந்த நாளில் பார்த்தோமே. சொல்லப்போனால் நாம நடிகரா திரையுலகில் பார்த்த நிழல் மனிதரை விடவும் அந்த நிஜ மனிதரின் குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. கடைசி நாட்களில் மருத்துவமனையில் இருந்தவரை உதவி வேண்டி பார்க்கப் போனவருக்கு, கொடுக்க ஒன்றுமில்லாத நிலையில் அருகில் இருந்த அவரது வெள்ளிக் கூஜாவைக் கொடுத்தனுப்பினார் என்று வாசித்த நினைவு அந்த மனிதரின் மேல் ஒரு பெரும் மரியாதையை அளிக்கிறது.

நம்ம தமிழ் மக்கள்ட்ட ஒரு "நல்ல" குணம் உண்டு. செத்துட்டா எல்லோரையும் ஓஹோன்னுருவோம். அதனாலேயே 'அவர் ஒரு சகாப்தம்' அப்டின்றதில எனக்கு மரியாதை இல்லாம போச்சு. நமக்குப் பிடிச்சிட்டா செத்தவங்களை சகாப்தமாக்கிடுவோம் - அரசியல்வாதிகள் இன்னொரு அரசியல்வாதி இறந்ததும் 'யாராலும் நிரப்பப்பட முடியாத வெற்றிடம் ஏற்பட்டுரிச்சி' அப்டின்னு சொல்ற ஒரு வார்த்தை ஜாலம் மாதிரி. அதனால கலைவாணர் கிருஷ்ணன் ஒரு சகாப்தம்னு சொல்லி அவரை சீப் ஆக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்த் திரையுலகில் அவரது பெயர் எப்பவுமே மறையாது.

அவர் பிறந்த இந்த நாளில் அவரைப் பற்றிய ஒரு பதிவின் மூலம் அவரை நினைவுகூற நினைத்த வ.வா.ச. வாலிப, வயோதிக - (இன்னைக்கு மட்டும் நானும் இதிலே இருக்கேனே; அதுக்காக வயோதிக அப்டின்னு சேர்த்திருக்கேன்) உறுப்பினர்களுக்கு என் வாழ்த்து.




என்னை இப்படி இழுத்துவிட்ட தப்பை செய்தவர்களுக்கு நன்றி சொன்னாலும் அது தப்புதானே!?

பதிவர்களே, இப்படி என்னை இழுத்துவிட்டவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இந்தத் தப்பைச் செய்துவிட்டார்கள். அவர்களை மன்னியுங்கள்.


*

Tuesday, November 28, 2006

தொடர் கொள்ளை-தொடர் மழை

நெல்லையில் சமீப காலமாக தொடர்ந்து கொள்ளையும் தொடர்ந்து மழையும் மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது. அவை இரண்டிற்கும் இடையே உள்ள சுவையான வித்தியாசங்கள்.

எண் - தொடர் கொள்ளை - தொடர் மழை
1 ஆள் இல்லாத வீட்டில்தான் நுழைவான் -

ஆள் இருக்கின்ற வீட்டிலும் நுழைந்துவிடும்

2 பெரும்பாலும் இரவில்தான் -

பகல் இரவு என்று நேரகாலம் பார்க்காமல் வரும்

3 விலையுயர்ந்த பொருள் - பணம் என்று தேடிப்பிடித்து சுருட்டுவான் -

கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓடும்

4 மக்கள் கூடி நின்று எதிர்த்தால் ஓடிவிடுவான் -

எவ்வளவு மக்கள் கூடி நின்று எதிர்த்தாலும் தகர்த்துவிட்டு நுழையும்

5 காவல்துறைக்கு பயப்படுவான் - காவல்துறையே பயப்படும்

6 தனிப்படை அமைத்தால் ஒருவேளை பிடிபடலாம் -

தனிப்படை அமைத்தால் தனிப்படையும் தண்ணியில்தான்.

7 மக்களின் மனநிலை அறிக்கையால்தான் கண்டுபிடிக்கமுடியும் -

வரும்முன் வானிலை அறிக்கையில் சொல்லிவிடுவார்கள்

8 வீட்டைவிட்டு வெளியே சென்றால் பயம். -

வீட்டுக்குள் இருக்கும்போதும் பயம்

9 நகைகளைத் திருடுவான் - புன்னகையைத் திருடிவிடும்

10 வீட்டுக்குள் சதி - வீட்டுக்குள் நதி

11 வரப்போவது தெரிந்தால் வாசலில் அல்லது

வீட்டைச் சுற்றி காவல் இருக்க வேண்டும் -
வரப்போவது தெரிந்தால் மாடிக்கு செல்ல வேண்டும்

12 வந்தால் பொருட்கள் சுத்தமாகிவிடும் -

வந்தால் இடம் சுத்தமாகிவிடும்

13 பாதுகாப்பு கோரி காவலரிடம் புகார் கொடுக்கலாம் -

பாதுகாப்பு கோரி கடவுளிடம் பிரார்த்திக்கலாம்


-ரசிகவ் ஞானியார்

Monday, November 27, 2006

கன்னிப்பதிவு (புது வ.வா)

இடம்: பெங்களூரூ நேரம்: அதிகாலை 11.00

வெள்ளிக்கிழமை அதிகாலையிலே தீடீரென்னு நம்பரை இல்லாமே ஒரு அனானி போன கால்வந்திச்சுங்க... பயந்துதான் போனையே எடுத்தேன்.

"ஹலோ யாருங்க பேசுறது?"

"நான் தல கைப்புள்ள செகரட்டரி பேசுறேன்!"

"ஆகா அப்பிடியா! என்னா விஷயம்?"

"தல உங்களை பார்க்கிறதுக்காக இன்னிக்கு பெங்களூரு வர்றாரு!"

"என்னை எதுக்காக பார்க்க வர்றாரு?"

"அதே அவரு நேரா வந்து சொல்லுவாரு! சரி உங்க வீட்டுக்கிட்டே பெரிய கிரவுண்ட் இருக்கா??"

"எதுக்கு??? தல வந்ததும் அங்கே போய் ஏதாவது விளையாட்டு விளையாடுவாரா??"

"ஹலோ! நம்ம தல சாதாரணமான தலைவரா ??? அவரு பெரிய தலைவர்! அதுனாலே ஹெலிக்காப்படருலே வருவாருய்யா!! அதுக்குதான் மைதானம் இருக்கானு கேட்கிறோம்??? இருக்கா இல்லேய்யா? அது மட்டும் சொன்னா போதும்!"

"இருக்கும்மா! தாயே வரச்சொல்லு! இன்னிக்கு வெள்ளிக்கிழமை அதுனாலே நிறைய வேலை இருக்குங்க! சீக்கிரமா வந்து வேலையை முடிச்சிட்டு போயிட்டாருன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்!"

"சரி இன்னும் ஒன்றரை மணி நேரத்திலே அதாவது மதியம் 12.30 மணிக்கு வந்துருவார்... அவரு வர்றது ரொம்ப ரகசியமா இருக்கனும்! யாருக்கிட்டேயும் சொல்லிறாதே!!!"

"ஏங்க அவ்வளவு புரெடக்சன் தல'க்கு?"

"அதெல்லாம் அவரே வந்து சொல்லுவாரு!!! சரி போன் வைச்சிரு! தல கிளம்பிட்டாரு!!!"

"என்னா சொன்னீங்க? சரியா கேட்கலை?"

"கிளம்பிட்டாருய்யா..!! கிளம்பிட்டாருய்யா!!!"

போன் வைக்கப்பட்டதும் எனக்கு பரபரப்பு பத்திக்கிச்சு! எம்பூட்டு பெரிய தலைவரு வர்றாரு? அதுவும் என்னை பார்க்க வேறே வர்றாரு? வர்றதில்லாம் சரி அதுக்கு ஏன் அதிலே ரகசியம். இப்பிடியே சிந்திச்சுக்கிட்டே இருந்தேனா மறுக்கா இன்னொரு போன்! ஆனா அதுவும் வேறே நம்பர்.

"ஹலோ யாரு பேசுறது"

"சினனச்சாமி ஸ்டேடியத்திலே இன்னிக்கு மதியம் 12.20க்கெல்லாம் வந்திரு!!"

போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது! ஆகா மணி இப்பொ பதினொண்ணு! இங்கெயிருந்து கிளம்பி ஸ்டேடியத்துக்கு போறதுக்குள்ளே பாதி உசுரை போயிருமே! தல ஆகாயமார்க்கமா வந்து இறங்கிறதுக்குள்ளே, நாமே சாலை மார்க்கமா போய் சேர்றதுக்குள்ளே பாதி செத்து சுண்ணாம்பை ஆயிருவோம், ஊரா இது பக்கத்து தெருவுக்கு போறதுக்கு எழுபதிரண்டு சிக்னலு, ஒன்வேயி, ஸ்பிட்லிமிட்'ன்னு சட்டத்திட்டங்க.

இடம்: சின்னச்சாமி ஸ்டேடியம் நேரம்: அதிகாலை 12.20

அகில உலக வருத்தப்படாத வாலிபர்களின் ஒப்பில்லா,எல்லையில்லா,தங்க தலைவன் ஆகாயமார்க்கமாய் வரும் கண்கொள்ளா காட்சியே காண என்தவம் செய்தேன் என் இறைவா??? இம்மாதிரி கப்பித்தனமா நினைச்சிக்கிட்டு இருந்தோப்பா சடாரன்னு நிக்கிற நிலத்துலே அப்பிடியே ஒரு ஆரம் பிடிச்சு வட்டம் சுத்த ஆரம்பிச்சிதது. நாமெல்லாம் ஆறடி அறுபது கிலோ சிங்கமில்லே அப்பிடியே பக்கத்திலே இருந்த ஒரு கம்பத்தை பிடிச்சிக்கிட்டே வானத்தே பார்த்தேன்.

சங்கத்து வாகனம்



நம்ம தல மஞ்ச சொக்கா அதுக்கு மேலே ஒரு செக்க்செவ்வன்னு ஒரு செவப்பு கலருலே கிழிச்சே கோட்டு ஒன்னே போட்டுக்கிட்டு கையிலே பைனாகுலரே வேறே பிடிச்சிக்கிட்டு "ஹாய் ராயலு"ன்னு சவுண்ட் விட்டாருப்பா!! அப்பிடியே சோத்துக்குள்ளே குழம்பை ஊத்துனா டக்குன்னு நடுவிலே ஊடுருவி உள்ளே போறேமாதிரியே ஹெலிக்காப்படரு நடுமையமா ஸ்டேடியத்திலே இறங்கிச்சு.. அதிலே இருந்து இறங்கி ஒரு சிங்கம் கணக்கா தல நடந்து வந்தாரு பார்க்கணுமே! பின்னாடி ரெண்டு பாடிக்கார்ட்ஸ் ஏகே45 பிடிச்சிக்கிட்டு வந்தாங்க..

ராஜ நடை




"வாங்க அகில உலக வருத்தப்படாத வாலிபர் தலைவரே! எதுக்காக நீ வர்றதே இவ்வளவு ரகசியமா வைச்சிருக்கிமின்னு சொன்னீங்க?"

"எனக்கு எங்கேயிருந்து எப்படி, எந்த ரூபத்திலே ஆப்பு வர்ருமின்னு தெரியாது! அதுவும் இந்த ஊருக்குள்ளே ஒரு ஆளு என்னை ஓப்பேத்தினிமின்னே டிராக்டருலே திரியறார்! அவருக்காவே தாய்யா இம்பூட்டு புரெடக்சன்! பார்த்திய்யா பின்னாடி ரெண்டு பயலுவேல்லே? நமக்கு வாகனமும் ஓட்டிக்கிட்டு போலிஸ் மாதிரி துப்பாக்கியே தூக்கிட்டு பாதுக்காப்புக்கும் வர்றாயங்கே! இப்போ பார்ப்போம் யார் நம்மக்கிட்டே மோதறதின்னு??"

"ஆமா தல! உங்களுக்கு இம்பூட்டு பாதுக்காப்பு தேவைதான்!"

"நான் எதுக்கு வந்திருக்கேன் தெரியுமா? உன்னை சங்கத்திலே சேர்க்கலாமின்னு நேர்காணல் நடத்த வந்திருக்கேன்! ம் சொல்லு உனக்கு என்ன வ.வா'க்கான தகுதி இருக்கு???"

"ஓ அப்பிடியா!! அதெல்லாம் எனக்கு நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்!"

"சரி வரிசையா சொல்லு பார்ப்போம்!!"

"1)ரெண்டு ஸ்டாப்ன்னாலும் பஸ்ஸிலே போயிரலாமின்னு வெயிட் பண்ணி பண்ணி வெறுப்பாகி கடைசிலே நடக்க ஆரம்பிச்சா நாலு பஸ் சர்புர்ன்னு என்னை கடந்து போகும்????

2)பத்தாவது படிக்கிறொப்பா ரெண்டு தடவை கோட்டு அடிச்சு மூனாவது தடவையா பாஸ் பண்ணுறதுக்குள்ளே ஊருஉலகத்தோட ஏச்சுபேச்சுக்களுக்கெல்லாம் அசரதாதது!!!!???

3)ரெண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து மறுநா எங்கப்பாருக்கிட்டே வெளு வாங்கி விழுப்புண் விழுந்தாலும் கொஞ்சநேரத்துக்கு அழுது முடிச்சிட்டு அவருக்கிட்டே காசு வாங்கிட்டு மார்னிங்ஷோ சினிமாவுக்கு போனது!!!

4)இவ்வளவு காலமா இங்கிலிபிசே தெரியமே அதே என்னமோ கரைச்சு குடிச்சே கணக்கா வவ்வால்,கிராம்மாருன்னு எல்லாமே தெரிஞ்சமாதிரியே வெள்ளைக்கார தொரைக்கிட்டெய்ல்லாம் இங்கிலிபிசுலேயே பேசுறது!!"

"ஓகே! நெருங்கி வந்திட்டே! இன்னும் வேறே இருந்தா சொல்லு! இந்த பிளாக், ஒயிட்'ன்னு வேறே ஏதாவது இருக்கா???"

"ஓ இருக்கே தல! ஒரு மேட்டருமில்லாம ஒரு வருசமா ப்ளாக் எழுதறது??

எந்த பதிவுல யார் ஆப்படிச்சாலும் வலிக்காத மாதிரியே நல்லவனா ஆக்ட் வுடறது??

கட்டதுரைய பார்த்தா எங்க தலக்கிட்ட முடிஞ்சா மோதி பாருடானு சவுண்ட் விடறது??"

"சரி நான் நினைக்கிற எல்லாதகுதியும் உன்க்கிட்டே இருக்கு! யூ ஆர் அப்பாயிண்டெட்"

ஆப்பு ஆயிண்மெண்ட்



"உனக்கு இன்னிலிருந்து அப்போ ஆயிண்மெண்ட்'தான் தடவணும்"

"வொய்"

"நான் என்ன உனக்கு ஜால்ரா அடிக்கவா வர்றேன்! ஆப்படிக்க வர்றேன்!!!!"

"ஹி ஹி நாங்கெல்லாம் எதுக்கும் அஞ்சாத சிங்கமெல்லே! சேர்ந்து போகதே கருஞ்சிறுத்தயப்பு!! நீ இன்னிலிருந்து சங்கத்து டெக்னால்ஜிலே ஆப்ரைண்டிஸா ஜாயின் பண்ணிக்கோ! உனக்கு என்னோட செகரட்டரி ஆப்பர் லெட்டர் அனுப்புவாங்க! ஒரே கண்டிசன் நீ ஒழுங்கா இருந்தேனா எந்த பிரச்சினையிலும் காப்பாத்த வருவேன்! அதிகபிரசங்கிதனம் பண்ணனு வை!! எந்த கம்பத்திலே யாரு கட்டி வச்சு அடிச்சாலும் நாப்பாட்டுக்கு போயிக்கிட்டே இருப்பேன்! என்னா சொல்லுறே???"

"இல்லெ தல! நான் நல்லவந்தான்!"

"எல்லா பயலுவெல்லும் வர்றப்போ சொல்லுறதுதானே!!"

"நான் ஒன்னே ஒன்னு இந்த மக்களுக்கிட்டே சொல்லிக்கலாமா"

"ம் சொல்லு!"

"மக்களை நானும் இன்னிலிருந்து சங்கத்து ஆளு! யாராவது எனக்கிட்டே வம்பிழுத்தா எங்க தலை வருவாரு! `யாருடா என்சங்கத்து ஆளே அடிச்சதுன்னு???` கேட்பாரு! ஆமா சொல்லிட்டேன்!"

Friday, November 24, 2006

ராயலோ ராயல்


இன்றைய வருத்தப்படாத வாலிபனுக்கு என்ன வேணும், முதல்ல ஸ்டைல்லா ஓட்ட ஒரு வண்டி, அதுவும் பழைய ராயல் என்ஃபீல்ட் வண்டி வாங்கி ஹேண்டில் பாரை வளைச்சு, நெளிச்சு, நல்லா இருக்கிற வண்டிய கேனத்தனமா மாத்திட்டா "வாவ் சூப்பர்"ன்னு சொல்லுவாங்க மக்கள்.

அப்புறம் என்ன,

சொகமா ஒரு ராயல் சேலஞ்ச் பீர ஏத்திக்க வேண்டியது தான்.

ராயலா ஒரு டின்னர்.

எதுக்கு இதெல்லாம், வாலிபப் பசங்க வெளங்காம போவதான் இத்தனை ராயல் மேட்டரு.

என்னா இத்தனை ராயல் மேட்டருன்னு பார்க்குறீங்களா? அதாங்க வெளங்காம போக எத்தனை வழிங்க ராயலா இருக்கு, அதே மாதிரி "ராயல்" ராம் கைப்புவை வெளங்காம பண்ண வ.வா.சங்கத்துல சேர்ந்துட்டாரு. அவர வரவேற்கத்தான் இப்படி ஒரு வெளங்காத ராயல் பதிவு.

அப்படியே சோத்தாங்கை பக்கம் மேல் மூலையில் "Contributors" ல "ராயல்" ராம் பேர் இருக்குதான்னு பார்த்துக்கங்க.

Thursday, November 23, 2006

உங்க மனசுல யாருங்கோ



விஜய் தொலைக்காட்சியில் நான் ரசித்து பார்க்கின்ற நிகழ்ச்சிகளில் கிராண்ட் மாஸ்டரும் ( யார் மனசுல யாரு) ஒன்று.

நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படுகின்றது..

யார் மனசுல யாரு ..? உங்க மனசுல யாரு. இப்போ பார்ப்போமா ?கிராண்ட் மாஸ்டர் ஆரம்பிக்கின்றார்.


அவங்க இப்ப உயிரோட இருக்காங்களா..?

ஆமாம் ஆனால் நிகழ்ச்சி முடியும் பொழுது உறுதியா சொல்லமுடியாது


இப்ப எங்க இருக்காங்க?

என் மனசுல

அரசியல், கலை, இலக்கியம் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா..?

இது சம்பந்தமான அறிவு இல்லை


இயற்பியல், கணிதம், கணிப்பொறி, இவற்றில் ஏதாவது?

ஆமாம் எல்லாப்பாடமும் உண்டு


அவங்க படிக்கிற கல்லூரி காயிதே மில்லத், ஸ்டெல்லா மேரீஸ்..?

ஆமாம்..


காயிதே மில்லத்..?

ஆமாம்


அவங்க விரும்பி அணியுற உடை சுடிதார்?

ஆம்


அவங்களுக்கு பிடிச்ச கலர் பச்சை கருநீலம் கறுப்பு?

ஆம்


கருநீலம்?

ஆம்

உங்களுக்கு பிடிச்ச கலர் அவங்கதானே?

ஆம்


தினமும் காலேஜ்க்கு அவங்க கொண்டுபோற மதிய உணவு தயிர்சாதம் - தோசை - முட்டை சோறு இவற்றில் ஒன்றா?

ஆமாம்


தயிர்சாதம்?


ஆம்

அவங்களுக்கு பிடிச்ச பூ ரோஜா - மல்லிகை - பிச்சுப்பூ?

ஆம்


ரோஜா..?

ஆம்


ரோஜாப்பூவை வித்தியாசமா இடப்பக்கம் வச்சிட்டு வருவாங்களா..?

ஆம்

உங்கள அடிச்சதனால அவங்க செருப்பு சமீபத்துல அறுந்து போச்சா?

ஆம்

இப்ப புதுசா கறுப்பு கலர் பாட்டா செருப்பு வாங்கியிருக்காங்களா?

ஆம்

தினமும் வெள்ளை நிற கைனடிக் வண்டியில வருவாங்களா..?

ஆம்

அவங்க வண்டி நம்பர் டி என் 72 பி 1717 தானே..?

ஆம்..

"அடப்பாவி நம்மகிட்டேயே கள்ளம் பறைஞ்சிட்டியேடா மவனே..அது என் பொண்ணுடா.."
அலறுகிறார் கிராண்ட் மாஸ்டர்..

நீங்களும் இந்த நிகழ்ச்சியில பங்கு பெறனும்னா ஏதாவது பெண்கள் கல்லூரி முன்னால நின்னுக்கிட்டு ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிங்க..உங்க லவ் உண்மையா இருந்துச்சுன்னா..நீங்க தான் அடுத்த போட்டியாளர்..யார்..மனசுல யாரு..? பை..

- ரசிகவ் ஞானியார்

Wednesday, November 22, 2006

பாண்டி- அவசரக் கச்சேரி

Image Hosted by ImageShack.us




கிழக்கப் பார்த்த கம்பத்துல்ல நம்ம பாண்டியை பாட்சா படத்து ரஜினிகாந்து மாதிரி கட்டிப் போட்டிருந்தாங்க...

சங்கத்துல்ல அடிச்ச போனை எடுத்தப்போத் தான் விவரம் தெரிஞ்சுது..
ஆஹா சிக்கிட்டான்ய்யா பாண்டி... இனி சிதறு தேங்காத் தான்டீயோன்னு சங்கத்து சிங்கம் ஒண்ணு டைனமைட்டை மிதிச்ச எபெக்ட்ல்லக் கர்ஜிச்சுட்டு ஒதுங்கிருச்சு.

எங்கேப்பா நம்ம சங்கத்து வாகனம்... எடுங்கப்பான்னு ஆளுக்காளு கொரலு விட.. போன மாதம் பேரீச்சபழ ஆசையில் பாண்டி செய்த பழைய ஊழல் வெளியே வந்தது. வாகனம் விலைக்குப் போடப்பட்ட விவகாரம் பாண்டி மீது இருந்த குற்றங்களின் எண்ணிக்கையை கணிசமாய் உயர்த்தியது.

சங்கத்து சபையின் முன் வாசலில் தளபதியும், இளைய தளபதியும் கம்பத்துப் பக்கம் பாண்டிக்குப் பக்கா காவலாய் நின்றுகொண்டிருந்தனர். தல அகமதாபாளையத்துகாரர்க்ளோடு அண்டாவுக்கு அளவெடுத்து அல்ட்ரா டிஸ்டம்பர் அடிப்பது எப்படி என்று அடிக்கடி மீட்டீங் போட்டு பேசவேண்டி இருப்பதாலும் விவசாயியாரின் டிராக்டர் பாகிஸ்தான் பார்டரில் பஞ்ச்ர் ஆகி நிற்பதால் அவரும் சங்கத்தில் மிஸ்ஸிங்.

கச்சேரிக்கான மைக்செட், சவுண்ட் சர்வீஸ் எல்லாம் பக்காவா செட் பண்ணிட்டு திருப்பதியா.. ச்சே திருப்தியான்னு நான் தளபதியைப் பார்த்துக் கேட்டுட்டு ஓரமா ஓதுங்கி நின்னுட்டேன். சிவா கையிலே சாட்டை எடுத்து தளபதி கையிலேக் கொடுக்க.. ராசுக்குட்டி என்ன நடக்கப் போவுதோன்னு பயத்துல்ல என் கையை எடுத்து அவர் கண்ணை அரையும் கொரையுமாப் பொத்திகிட்டு வேடிக்கைப் பார்த்தார்.

அப்போ நிறுத்துடா....என்று சவுண்ட்

வெள்ளைக் குருதப் பூட்டுன்ன சாரியட்ல்ல இருந்து ட்ரிம் பண்ண மீசையோட புலிக்கேசி மன்னர் இறங்குறாரு...

"ஏ...பாண்டி.. என்ன இது?"

"என்ன என்னாது?"

"என்னச் செய்தாய்?"

"என்ன என்ன செய்தாய்?"

"ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?"

"என்ன..ம்ம்ம்ம்கும்..நான் கேட்பதை என்னிடமே திருப்பிக் கேட்கிறானே?"

"பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?"

"என்ன பாண்டி தம்பி எல்லாத்துல்லயும் விலாட்டுத் தனம் இருக்கப் பிடாது?"
"அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?"

"என்ன அய்யோ அய்யோ.. இன்னும் சின்னப் பில்லயாவே இருக்க நீயு?"

"டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது....?"

"என்ன டேய் பாண்டி வேணாம் எனக்கு கோவம் வராது....?"

"ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?"

"என்ன ஸ்ப்பப்பபா இப்போவே கண்ணைக் கட்டுதே?"

"வேணாம் எனக்கு கோவம் வராது"

"என்ன வேணாம் எனக்கு கோவம் வராது"

"ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?"

"என்ன ஒழுங்காச் சொல்லு.. இட்லி வடை சாப்பிட்டியா?"

"டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?"

"என்ன டேய் ரகசியமா இட்லி வடைச் சாப்பிட்டியா?"

"மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?"

"என்ன மரியாதையாச் சொல்லு யாராவது இட்லி வடைச் சாப்பிடறதை ஒழிஞ்சு இருந்துப் பார்த்தீயா?"

"டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?"

"என்ன டேய் நீ பண்ணுனது ரைட்டாத் தப்பா?"

"சொல்லிருடா தப்பா ரைட்டா?"

"என்ன சொல்லிருடா தப்பா ரைட்டா?"

நீ அவன் ஆளுதானே.. அவன் பிட்ட எனக்கேப் போடுறீயா.. இனி வாய் பேசி பிரயோஜனம் இல்லை...

புலிக்கேசி கையில் இருந்து கிளம்பிய சாட்டை சரியாகக் குறி தவறி பாண்டியின் இடமும் வலமும் மாறி மாறி அடிக்க.. புலிக்கேசி மன்னர் களைத்துக் கன்னத்தில் கை வைத்து உட்கார்கிறார். டேய் மன்னருக்கு எதாவது புத்துணர்ச்சிக்கு வழி பண்ணுங்கடான்னு மிகவும் பரிதாபமானக் குரலில் மன்னர் கெஞ்சுகிறார்...

அவ்வளவுத் தான் பாண்டி கைக் கட்டுக்களை நொடியினில் அறுத்தெறிந்து விட்டு மின்னலெனப் போய் தலக் கொடியில் காயப்போட்டிருந்த வேட்டியை அவிழ்த்து கம்பங்களுக்கு நடுவினில் கட்டி.. டிஜிட்டல் டால்பி டிஸ்க் பிளேயரில் ஜெசிக்கா சிம்சனின் லோ ஹிப் நடனக் காட்சியினை ஓட விடுகிறான்.

மன்னர் மெய்மறந்து குத்துப் போடுகிறார். கூடவே கச்சேரியும் களைக் கட்டுகிறது..

"ஆடி வா.. ஆடி வா.. ஆணழகைத் தேடிவா.. பாடல் ஸ்பீக்கரில் அலறுகிறது..."

ஆடலின் உச்சத்தில் புலிக்கேசியின் மீசை மண்ணில் விழுகிறது...

"ஆ..தல.. நீயா?" பாண்டி வாய் பிளக்க...

சத்தம் போடாதே... உன்னிய விசாரிக்கத் தான் இந்த வேசம்... இந்தா அந்த பில்ல இடுப்பு மட்டும் தனியாக் கழண்டு விழற மாதிரி என்ன அழகா ஆடுது.. அதை எம்புட்டு அழகா நீயும் ரசிச்சு எங்களையும் ரசிக்க வைக்கற மாதிரி பண்ணியிருக்க்.. இதுல்ல உன்னிய மாதிரி திறமைசாலி நாட்டுல்ல காட்டுல்ல் ஏன் நெட்டுல்ல கூட உண்டாச் சொல்லு?

பாண்டி தல்யைப் பெருமையாய் பாக்குறான்.

"அதை செய் ராசா..அதைச் செஞ்சு மக்களைச் சந்தோசப்படுத்து.. அதை விட்டுட்டு இட்லி சுடுறேன்.. வடைத் திங்குறேன்னு என்ன இது சின்னப்பில்லத் தனமா இல்ல இருக்கு..அதுக்குன்னு இருக்கவங்க அதைச் செய்வாங்க.. நீ வேணாம்.. என்ன?"

விவசாயின் டிராக்டரின் சத்தம் கேட்க எல்லாரும் வாசலைப் பார்க்க...

விவசாயிக்கு ஸ்பெஷலா... ஜெனிபர் லோபஸ் பாடல் 1000 வாட் ஸ்பீக்கரில் அலறியது....

"நல்லது யார் செய்தாலும் சங்கம் கண்டிப்பாப் பாராட்டும்ய்யா.... நல்லதைச் செய்ங்கய்யா...செய்ங்கன்னு " தல சவுண்ட்டா சொல்லிகிட்டே அகமதாபாளையத்து அடுத்த மீட்டிங்க்கு விவசாயி டிராக்டரில் கிளம்பிப் போனார்.

வாழ்க வளமுடன்.

Monday, November 20, 2006

சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்...

உலகெங்கிலும் இருக்கும் சோமபானப் பிரியர்களே! பெக் அடிச்சா கிக்கு வரும்னு தீர்த்தம் சாப்பிடாதவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் சரக்கு உள்ளே போனதுக்கு அப்புறம் என்னவெல்லாம் நடக்கும், என்னவெல்லாம் எப்படியெல்லாம் தெரியும்னு ஒரு புண்ணியவான் எழுதி வச்சிருக்காரு. இக்கட கொஞ்சம் ச்சூடண்டி...

மராட்டிய நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்திய ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை கீழே. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Peg after Peg
I never take risk while drinking
When I come from office in the evening, wife is cooking
I can hear the noise of utensils in the kitchen
I stealthily enter the house

Take out the bottle from my black cupboard
Shivaji Maharaj is looking at me from the photo frame
But still no one is aware of it
Becoz I never take a risk

I take out the glass from the rack above the old sink
Quickly enjoy one peg
Wash the glass and again keep it on the rack
Of course I also keep the bottle inside my cupboard
Shivaji Maharaj is giving a smile

I peep into the kitchen
Wife is cutting potatoes
No one is aware of what I did
Becoz I never take a risk

I: Any news on Chopra’s daughter’s marriage
Wife: Nope, she doesn’t seem to be that lucky. Still they are looking out for her

I again come out; there is a small noise of the black cupboard
But I don’t make any sound while taking out the bottle
I take out the glass from the old rack above sink
Quickly enjoy one peg

Wash the bottle and keep it in the sink
Also keep the Black Glass in the cupboard
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: But still I think chopra’s daughter’s age is not that much
Wife: What are you saying? She is 28 yrs old… like an aged horse
I: (I forgot her age is 28) Oh Oh…

I again take out potatoes out from my black cupboard
But the cupboard’s place has automatically changed
I take out the bottle from the rack and quickly enjoy one peg in the sink

Shivaji Maharaj laughs loudly
I keep the rack in the potatoes and wash Shivaji Maharaj’s photo and keep it in the black cupboard

Wife is keeping the sink on the stove
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (getting angry) you call Mr. chopra a horse? If you say that again, I will cut your tongue…!
Wife: Don’t just blabber something, go out and sit quietly…

I take out the bottle from the potatoes
Go in the black cupboard and enjoy a peg
Wash the sink and keep it over the rack
Wife is giving a smile

Shivaji Maharaj is still cooking
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (laughing) So Chopra is marrying a horse!!
Wife: Hey go and sprinkle some water on your face…

I again go to the kitchen, and quietly sit on the rack
Stove is also on the rack
There is a small noise of bottles from the room outside

I peep and see that wife is enjoying a peg in the sink
But none of the horses are aware of what I did
Becoz Shivaji Maharaj never takes a risk

Chopra is still cooking
And I am looking at my wife from the photo and laughing
Becoz I never take what???

மராட்டிய மூலக் கவிதையை மராட்டிய மொழியில் படிக்கனும்னா(!!???) இங்கு சுட்டுங்கள். சரி...இதை அப்படியே தமிழ்ல நம்மால பேக்க முடியமான்னு பாத்தேன். உஹும்...ஒன்னும் முடியலை. LOL, ROTFL சமாச்சாரத்தை எல்லாம் கெடுத்த பாவம் நமக்கெதுக்குன்னு அப்படியே இங்லிபீசுலேயே போட்டுட்டேன்.

Friday, November 17, 2006

எம் சி ஏ - ஆட்டோகிராப்

[எம் சி ஏ படித்துக்கொண்டிருக்கும்போது கல்லூரி இறுதி ஆண்டில் நண்பர்களுக்கு சும்மா தமாஷாக எழுதிய ஆட்டோகிராப்..டைரியை புரட்டி எடுத்து வந்தது]


என் இனிய கிராமத்து
மாணவர்களே!

ஒரு
ஆர்ப்பாட்டத்தோடு
கல்லூரிக்குள் நுழைந்த
என் இதயம்
இந்த
ஆட்டோகிராப் டைரிக்குள்
அமைதியோடு நுழைகின்றது
(நம்ப முடியலையே)

மீண்டும் எந்தஇடத்தில்
சந்தித்துக் கொள்வோமோ?
தெரியாது,
ஆனால்
இபபொழுது பிரியப்போகிறோம்

நம்பவேமுடியவில்லை
நேற்றுதான்
சேவியர் கல்லூரியில்
தயங்கி தயங்கி
நுழைவுத்தேர்வு எழுத வந்தது போலிருக்கிறது
ஆனால் அதற்குள்
பேர்வெல்(Farewell)....
ஆட்டோகிராப்...
ச்சே ரொம்ப வலிக்குதுப்பா
(என்ன காலில் முள் குத்திடுச்சா)

நாம்
Week-End ல் சந்தித்துக்கொண்டாலும் இது
Strong ஆன நட்பஜதான்
(ஏன் லைட்டான நட்பில்லையா
நீயென்ன டீக்கடையிலையாடா
வேலை பார்க்கிற)


ஒவ்வொரு வாரமும் நமக்கு ரம்சான்
ஒவ்வொரு வாரமும் நமக்கு தீபாவளி
ஒவ்வொரு வாரமும் நமக்கு கிறிஸ்துமஸ்
இப்படி
வருஷப்பண்டிகை அல்ல
வாரப்பண்டிகைதான் நமக்கு

எதை நினைத்துப்பார்ப்பது,
கடைசி பெஞ்சு கலாட்டக்கள்...
விதைக்காமலையே முளைத்த கடலைகள்...
கிண்டலுடனே கடந்த பீரியடு...
சில காதலின் வளர்ச்சிகள்...
பள்ளி வராண்டாவில் தேங்காய் உடைத்தது...

Photobucket - Video and Image Hosting

ஜோசப்புக்கு பெண் பார்த்தது..
ஜன்னலொரம் கடப்பவர்களை கிண்டலடித்தது...
டீக்கடை பெஞ்ச்...
யாருடைய திருமணத்திலும் அழைப்பிதழ் இல்லாமல்
வி எம் எஸ் சாப்பிட்ட சாப்பாடு..
ப்ராக்டிகல் ருமில் செய்த லூட்டி..
ரவுண்டானாவில் அடித்த ரவுண்ட்..
செமினார்கிளாசில் சேட்டைகள் ..
கல்லூரி விழாவில் தோப்புக்கரணம்..
ஜெராக்ஸ் வாங்கிவிட்டு
ஏமாற்றியவர்கள்...
டூர் செல்லும் இரவில் சீட்டுவிளையாட்டு...
பாரீனரோடு எடுத்த Photo..

Photobucket - Video and Image Hosting
பாத்ரூமூக்குள் ஆடிய டான்ஸ்..
கிழிந்தாலு போட்டுவந்த ஜீன்ஸ்..
டூரில் யார் யாரோ ஜோடியோடு
நான் மட்டும் தனியே...(?)
இப்படி
எல்லாமே கனவாகப்போகிறது
(நினைச்சுடாதீங்கப்பா,)

இனிமேல்
குடும்பம- குழந்தை
வேலை-பணம்
என்று
சாதாரண மனிதவாழ்க்கைக்குள்
நுழையப்போகிறோம்
(கவலைப்படாத நைனா)

மீண்டும் சந்திப்போம் என்று
நம்பிக்கையோடு கூறினாலும்
சூழ்நிலைகள் எப்படியிருக்குமோ,


என்றாவது ஒருநாள்
இந்த டைரியை
படிக்கும்பொழுது
என் ஞாபகம் இருக்குமா,
(கண்டிப்பா இருக்காது)

என் பெயர் சொல்லி
யாராவது அழைத்தால்
என் ஞாபகம் இருக்குமா,
(ரொம்ப அலட்டாதடா)

பத்திரிக்கையில் வரும்; என்
கவிதையைக் கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,

குரங்குசேட்டை செய்யும்
யாரையாவது கண்டால்
என் ஞாபகம் இருக்குமா,
(குரங்குன்னு ஒத்துகிட்டா சரி)

ஆனால்
நான் உங்களையெல்லாம்
ஞாபகப்படுத்தியே
பார்க்கமாட்டேன்
ஏனெனில் என்னையே
நான் எப்படி ஞாபகப்படுத்துவது,
(ஹைய்யா ஐஸ் ஐஸ் ))

அயர்ன் செய்த சட்டை
கூட்ட நெரிசலில் கசங்கிப்போவதைப்போல

இந்த
கடைசிநேரப்பிரிவில் இதயம்
கசங்கிவிட்டது
(யப்பா என்ன சென்டிமென்ட்)

கூட்டம்கூட்டமாய் பழகிவிட்டு
தனித்தனியே பிரியப்போகிறோம்
(சிலபேர் ஜோடியா பிரியறாங்க)

எங்கையோ பிறந்து
பள்ளிவாழ்க்கை எங்கையோ படித்து
கல்லூரி வாழ்க்கையில்
நம்மை நண்பர்களாக்கிய
இறைவனுக்கு நன்றி
(இறைவா மாட்டிவிட்டுட்டியே)

இஙகே நாம்
சந்தித்துக்கொள்ளவேண்டுமென
இறைவன் கட்டளை
சந்தித்துவிட்டோம்
(அரியர்ஸ் வச்சதும்
அவனோட கட்டளையா,)

இப்பொழுது இந்தநேரம்
பிரியவேண்டுமென
இறைவன் கட்டளை
பிரியப்போகிறோம்
(யப்பா சனியன் ஒழிஞ்சது)


உன்னுடைய திருமணத்திற்கு
எல்லோருக்கும்
அழைப்பிதழ் அனுப்பு
மீண்டும்
அனைவரும் சந்தித்துக்கொள்வோம்
(யப்பா வந்துடாதீங்கடா)

இனிமெல்
எந்த வீதிகளில்
எந்த இரயில்வேஸ்டேஷனில்
எந்த பிளாட்பாரத்தில்
எந்த பஸ்டாண்டில்
எந்த ஊரில்
எந்த நாட்டில்
எந்த சாப்ட்வேர் கம்பெனியில்
எந்த சூழ்நிலையில்
மீண்டும் சந்திப்போமோ?

அந்தச் சூழ்நிலையில்
நீ பணக்காரனாகவோ..
நீ தொழிpலதிபராகவோ..
நீ அதிகாரியாகவோ..
எப்படியிருந்தாலும்
பதவிகளை எறிந்துவிட்டு முதலில்
பழைய நண்பனாய் வா!
(வரமாட்டேன் போடா)

நாளைக்கும் நிலவு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(ஆமா பெரிய தத்துவம்)

நாளைக்கும் சனி ஞாயிறு வரும்
ஆனால்
நாமிருக்கமாட்டோம்
(சரியான லுசுப்பா)

இனியொரு ஜென்மமிருந்தால்
இதே கல்லூரியில்
இதே நண்பர்களாய்
சந்திப்போம் என்று
சங்கடத்தோடு பிரிகிறேன்
(யப்பா முடிஞ்சுது)



- ரசிகவ் ஞானியார்

Thursday, November 16, 2006

கச்சேரிங்கோ தல கச்சேரிங்கோ

100 பதிவுப் போட்டாச்சு.. படமெல்லாம் எடுத்தாச்சு.. எதித்து வந்த பார்த்தீபன், சரளாக்கா கட்டத்துரை குரூப்பை எல்லாம் ஓரம் கட்டியாச்சு... ப.ம.கன்னு ஒரு குரூப் அதைக் கூட அரசியல் ரீதியா சமாளிச்சாச்சு...

ஒரு மனுஷனுக்கு எவ்வளவு புகழ் வரணுமோ அதுக்கும் மேல வந்தாச்சு... கோடிக் கணக்குல்ல ரசிகர்கள் அதுக்கும் சில் கோடிகள் அதிகமான ரசிகைகள்.. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் எதோ மிஸ்ஸிங் ஆகுதோன்னு பீலிங்...

சங்கம் பில்டிங்கை பளிங்குல்ல கட்டி ஐரோப்பா ஸ்டைல் பாத் டப் கட்டி அதுல்ல குளிக்கலாமா....

ம்ம்ஹும் அது சரி பிடாது... காசினோ ராயல் படத்த தமிழ்ல்ல எடுக்கச் சொல்லி குழாய் கோர்ட் போட்டு அசினையும் திரிஷாவையும் சோடியாக்கி டூயட் பாடலாமா..... எதாவது செய்டா கைப்புள்ளன்னு கிரகம் தலக் காதுல்ல ஓதிகிட்டே இருக்க...


"நீ பாக்க காக்கா மாதிரி கருப்பா இருந்தாலும் ஓன் கொரலு குயில் மாதிரி ஸ்வீட்டா இருக்குன்னு முன்னொரு காலத்திலே அந்த பார்த்தி பையச் சொன்னது இப்போ எக்கோ எபெக்ட்ல்ல தலக் காதுல்ல மறுபடியும் ரிப்பீட்டாக ஆரம்பிச்சுருச்சு"

"எட்டணா இருந்தா எட்டூரு எம் பாட்டக் கேக்கும்...அட பத்தணா இருந்தா பத்தூரு என் பாட்டைப் பாடும்..." அப்படின்னு லைட்டா கொரலு விட ஆரம்பிச்சார்...

தல ஆஹா என்னமாப் பாடுறீங்கன்னு சங்கத்து இளைய தளபதி வெட்டி வெடுக்குன்னு எடுத்துக் கொடுக்க தலக்குப் பிடிச்சிருச்சு கிறுக்கு.

ராயல் ராமுக்கு போனைப் போட்டு பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையும் மருத ஹாஜி மூசாவில்ல இருந்து எடுத்தாரச் சொல்லு.. இனி நான் ஒரு சங்கீத வித்துவான்ன்னு சொல்லிட்டார்.

பாட்டுக்கு கொரலு முக்கியம் ட்ரெஸ் எல்லாம் எதுக்குன்னு சைட்ல்ல பம்மி நின்னு கேட்ட பாசக்கார பாண்டியைப் படக்கென்னு கோவமாப் பார்த்தார் தல..

"ட்ரெஸ் இல்லாம என்னிய அம்மணக்கட்டையாப் பாடச் சொல்லுறீயா நீ.. தெரிஞ்சிப் போச்சுறா எனக்கு தெரிஞ்சுப் போச்சு.. நான் ஒரு மேஜர் சுந்தர்ராஜ பாகவதரா ஆகறது ஓனக்குப் பிடிக்கல்ல எங்கே எல்லா பிள்ளைகளும் ஒன்னிய விட்டுட்டு என் பின்னால என் கொரலுக்கு மயங்கி வந்துருவாங்களோன்னு ஓனக்கு பயம்டா.. "

தல அது மேஜர் சுந்தர்ராஜ பாகவதர் இல்ல.. தியாகராஜ பாகவதர்... பவ்யமாய் வாசல் பக்கம் நின்ற நமது புலிக்குட்டி சிவா எடுத்துக் கொடுக்க...அவன் மீது டென்சன் ஆனார் தல்.

நான் என்ன பரீட்சைக்காப் போயிட்டு இருக்கேன்ய்ன்.. கரெக்ட் பண்ணுற.. ஒரு கலைஞன் பீலிங்க்ல்ல வார்த்தையை அப்படி இப்படி தான் சொல்லுவான்.. நீ தான் புரிஞ்சிக்கணும்...

அதே கோவத்தோடு இளைய தளபதி வெட்டியைத் தல முறைக்க...



"தல நீங்க பாடலாம் தல,... நம்ம எளையராசா கூட உங்க மருதக்காரரு தானே அவர் அமைக்காத இசையா தல.. நீங்க நினைச்சா ஒரு லயனல் ரிச்சி, எரிக் கிளப்டன், ப்ங்க் பிளாயிட், எல்டன் ஜான், எல்விஸ் பிரிஸ்லி.. இவிங்க மாதிரி நீங்களும் வரலாம் தல"

"ஒரு பய பேர் கூட நம்மூர் காரன் மாதிரி இல்லையேடா.. அம்புட்டும் அசலூர் கார பேரா இல்ல இருக்கு என்று சந்தேகத்தோடு மறுபடியும் பாண்டியைப் பார்த்தார் தல..."

"அவ்ங்க எல்லாம் பாப் ஸ்டார்ங்க தல.."

" ஆகா.. இம்புட்டு நாளும் ஆப் வச்சிங்க.. நான் பாடப் போறது தெரிஞ்சது பாப் வைக்கப் போறீங்களா? விட மாட்டான்டா இந்தக் கைப்புள்ள"

"தல பாப்ங்க்றது ஒரு வகை பாட்டு தல... அதாவது.." என்று ஆரம்பித்த ராசுக்குட்டியைப் பார்த்து

"போது நிப்பாடிக்கா.. நீயும் அந்த விக்கிபீடியா குருப்ல்ல சிக்கிட்டியா.. அவிங்க தான் என்னக் கேள்வி கேட்டாலும் பதிவாப் போட்டு பல் இடுக்கு வரைக்கும் தகவல் சொல்லி நிரப்பி விட்டுருவாயங்க... எனக்கு அது வேணாம்.."

"அது இருக்கட்டும்.. ஒரு நல்ல வித்துவானுக்கு நல்ல ஆடை வேணும்.. அதை நம்ம ராயல் ராம் செஞ்சுருவான்... ஆங் வாகனம் வேணுமே" அப்படின்னு தல யோசிக்க..

தளபதி சிபியின் செல் போனில் கரகாட்டக்காரன் ரிங் டோன் அலறியது.

சிபி தலயைப் பாக்க.. தல சிபியை மொறைக்க...
தல சிபியை மொறைக்க..சிபி தலயைப் பாக்க..
சிபி தலயைப் பாக்க தல சிபியை மொறைக்க...
தல சிபியை மொறைக்க..சிபி தலயைப் பாக்க...

"இங்கேப் பார் இது டூ மச் ஆமா...கிரகம் புடிச்ச அந்தச் செல் போனை ஆப் பண்ணுப்பா இல்ல..." என தல எந்திரிச்சி நிக்க

"தல தல.. விவசாயி லைன்ல்ல இருக்காரு" என சிபி பதற...

"ஆரியம்... காரியம்.. வீரியம்ன்னு எதாவது வம்பு பிடிக்கப் போயிருப்பார்.. என்னான்னு கேளூ"

"தல சங்கம் நடத்துன போட்டியில்ல செயிச்சவங்க எல்லாருக்கும் கொடுக்கறதுக்குப் பரிசு வாங்கறதுக்கு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் போயிருக்காராமா.. அதுன்னால சங்கத்துக்கு ஒரு மூணு மாசம் லீவு சொல்லச் சொல்லுறார்"

தல லீவ் பத்தி யோசிக்கும் கேப்பில்

"தல விவசாயி ஊர்ல்ல இல்ல அவர் டிராக்டர் சும்மா தான் இருக்கும் வாகனமா அதையே வச்சுக்கலாமா.." பாண்டி பக்தி சிரத்தையாய் ஐடியா கொடுக்க

தல பாண்டியைக் கடிக்கும் பார்வை பார்க்கிறார்.

"வேணாம் வலிக்குது.. அழுதுருவேன்..ஆமா.. என்னிய நீ ரொம்பக் கேவலப் படுத்துற..."

தல மீண்டும் சிந்தனைக்குப் போகிறார்.. அப்படியே SWING IN THE RAIN பாடலை அலறலாய் பாடுகிறார்... பாட்டை நிறுத்திட்டு

"நான் முடிவு பண்ணிட்டேன்.. இந்த சங்கீத சீசன்ல்ல நான் கச்சேரி பண்ணப் போறேன்... எனக்குள்ளே ஒளிஞ்சு குப்புற படுத்து குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்க அந்த இசை ஜீவனை தட்டி எழுப்பி எதாவது சபா மேடையிலே உக்கார வச்சு பாட வைக்கத் தான் போறேன்..."

"தல ராகம் தாளம் பல்லவி இதெல்லாம் தெரியாம எப்படி தல நீங்க?" என்று பாண்டி மிகப் பணிவாய் கேட்க..

"தல அதெல்லாம் நம்ம ஊர்ல்ல தான் இருக்கு... நானும் தளபதியும் ஓங்களைக் கூட்டிட்டு போய ராகத்துல்ல 4 ஷோ பல்லவியில்ல 4 ஷோ... அனுபல்லவியில 4 ஷோன்னு பாக்க வச்சு தெரிய வச்சிடுறோம் தல"
என்று ராசுக்குட்டி உதவிக்கு வர....தல பெருமிதத்தில் ராசுக்குட்டியைக் கட்டிபிடித்து கதறுகிறார்.

தலயின் தீர்க்கமான முடிவினில் சங்கம் மொத்தமும் நடுங்கி நிற்க...

"போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.." பாடலைத் தல சங்கராபரணம் ஹீரோ ரேஞ்சுக்கு ராகமாய் முணுமுணுத்தப் படி தன் அறைக்குப் போனார்.

பி.கு: தலயின் கச்சேரியில் விளம்பரம் செய்ய விரும்புவோர்கள் அணுகவும்
தேவ் - சென்னைக் கச்சேரி.

Wednesday, November 15, 2006

இடம் கிடைத்துவிட்டது

"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

பாரதச்சிறுவன் ஒருவன்
சந்தோஷத்தில்
சப்தமிட்டுக் கொண்டிருக்கிறான்

Photobucket - Video and Image Hosting

இதைக்கேட்டு
விண்ணிலிருந்து
விரைந்து வந்த நேரு - ஒரு
ரோஜாவைப் பரிசளித்துவிட்டு
மெலிந்துபோன புறாவோடு
மீண்டும் மேலோகம் சென்றார்


"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

இவனுடைய
சப்தம் கேட்டதால்
சிலிர்ந்துக் கொண்டெழுந்தான் பாரதி!
"காலை எழுந்ததும் படிப்பு
கனிவு தரும் நல்ல பாட்டு "

கவிதையை
மீண்டுமொருமுறை
அச்சேற்றிவிட்டு அடங்கிப்போனான்

"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

காந்தி அவசரமாய்
கண்விழித்து
"இந்தியனை
இந்தியனிடமிருந்து காப்பாற்ற
நன்றாகப் படி"
என
வாழ்த்திவிட்டு - யாரும்
கட்சி ஆரம்பிப்பதற்குள்
கரைந்தோடிப்போனார்

"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

அன்னை தெரசாவின் தூக்கமும்
அவசரமாய்க் கலைக்கப்பட்டது

அவனை அருகிலழைத்து
ஆசீர்வதித்துவிட்டு
அரசியல்வாதிகள் வரக்கூடுமோ என்ற
அச்சத்தில் மீண்டும் உறங்கிப்போனாள்.
"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது"

- சிறுவன் தொடர்ந்தான்

கன்னியாகுமரியில்
குளித்துக்கொண்டிருந்த திருவள்ளுவர்
"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

பழைய குறளைப்
புதுப்பித்துவிட்டு
பாறை மீதேறி
படுத்துக்கொண்டார்

அனைவரின் ஆசீர்வாதமும்
சிறுவனை உற்சாகப்படுத்தியது
அப்படியே உறங்கிப்போனான்
மறுநாள் சீக்கிரம்
போகவேண்டுமல்லவா..?

ஆனால் அவனுடைய
விதவைத்தாய் மட்டும்
விடிய விடிய
அழுதுகொண்டிருந்தாள்

காதல் தோல்வியடைந்த
கம்ப்யூட்டர் இளைஞனொருவன்
தனக்குத் தூக்கம் வராததால்
கோபப்பட்டு
இரவை இழுத்துக்கொண்டு
எங்கோ ஓடிவிட்டான்?

ஆகவே
சீக்கிரமாய் விடிந்தது

விடிவதற்குள்
விழித்துக்கொண்டான் சிறுவன்
கசங்கிப்போன சட்டை உடுக்க...
கட்டுச்சாதம் கையில் எடுக்க...
விதவைத்தாய் முத்தம் கொடுக்க...
"இடம் கிடைத்துவிட்டது
இடம் கிடைத்துவிட்டது
தீப்பெட்டித் தொழிற்சாலையில்
இடம் கிடைத்துவிட்டது"

சிறுவன் சப்தமிட்டுக்கொண்டே
சென்றுகொண்டிருக்கிறான்

எனக்கு மட்டும் கேட்கிறது
வாழ்த்திய தலைவர்களின்
விசும்பல் ஒலி


- ரசிகவ் ஞானியார்