Friday, August 29, 2008

கேளீர்!

ரொம்ப நாளா கேக்கணும் கேக்கணும்னு கிடந்து தவியா தவிச்சுக்கிட்டி இருக்கோம்!

எல்லாருக்கும் மனசுக்குள்ளயே இருக்கு ஆனா யாரும் எக்ஸ்பிரஸ் பண்ணமுடியாத அளவுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்துல வந்துட்டு போயிக்கிட்டும் இருக்காங்க!

ஸோ...! நான் அவுங்க சார்பா நான் கேள்வி கேட்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்!

பட் யாருக்கிட்ட கேட்கறதுன்னு ஒரு கொயப்பம்! நம்ம மனசுகுள்ள இருக்கறத வெளியே பொதுவா சொல்லிவைப்போம் எத்தினியோ நல்ல மனுசங்க இருக்காங்க

யாராவது நம்ம கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி நம்ம ஃபீலிங்க்ஸ கொறைப்பாங்களேன்னு ஒரு தைரியத்தில் களம் இறங்கியாச்சு!

நீங்க தமிழ்மணத்துல அதிகம் உலாவும் போது யாரும் அதிகம் பார்க்காத பேஜ் ஒண்ணு இருக்குன்னா அது கேளீர் பக்கமாத்தான் இருக்கும்! (கரீக்டா புடிச்சான்ய்யா!)

பட் என்ன பிரச்சனைன்னை அதுல போய் பார்த்தா எனக்கு முகப்புல தெரியற புரியற மாதிரி எதுவுமே புரியமாட்டிக்கிது!!! (என்னது அது படிக்க அந்தந்த மொழி தெரிஞ்சுருக்கணுமா?)

அங்க எல்லா மொழியும் மிக்ஸ்ர் காரபூந்தி மாதிரி கலந்து கிடக்குது எது நகைச்சுவை இனிப்புன்னு தெரியல? எது அரசியல் காரம் அப்படின்னும் விளங்கிக்க முடியலை !

ஒரு பொதுவான வகைப்படுத்தல் இருந்தாக்கா ஏதோ இங்கீலிசு பேப்பரை பார்த்து பார்த்து சிரிக்கறமாதிரி இந்த பக்கங்களுக்குள்ளயும் போய்வரலாம்ல?!

இதையெல்லாம் விட அங்கன பதிவுகள் எழுதுறது யாரு ஆணா பொண்ணான்னு தெரியல ! (நொம்ப முக்கியம் நானெல்லாம் மலையாளப்பக்கம் நிறைய ரசிகர் ரசிகைக்ள்

லைன் கட்டி நிக்க வைச்சிருக்கேனாக்கும்!)

அவுங்கெல்லாம் யாரு?

எந்த ஊரு?

ஏன் இப்படி இருக்காங்க?

அட்லீஸ்ட்

நான் சாட் இன்வைட் அனுப்பினா ஏத்துக்குவாங்களா? மாட்டாங்களா?

அல்லது ஹாய்ன்னு சொல்லியாச்சும் மெயில் அனுப்புவாங்களா?

இப்படியான விசயங்கள் எல்லாம் இன்னும் 24 மணி நேரத்துக்குள்ள யாராச்சும் நல்ல உள்ளங்கள் பதிவாகவோ அல்லது தனிப்பட்ட முறையில் மெயிலாகவோ எங்க

இன்பாக்ஸ் கதவினை தட்ட வேண்டும்!

இது கோரிக்கை! அம்புட்டுதான்!

9 comments:

Thamiz Priyan said...

ஆமா நான் நீங்க சொன்ன பிறகுதான் முதன் முதலா பார்க்கிறேன்..
ஆனா தெரிந்த மொழி எதுமில்லை.. :( இந்தின்னா கூட படிச்சு பார்க்கலாம்..:)

Thamiz Priyan said...

கேரளா தான் உங்களுக்கு மாமியார் வீடாச்சே? அப்புறம் என்ன... மெயிலடிச்சா பதில் வரும்... மின்னஞ்சல் முகவரிகள் வேணுமா?...;)

நிஜமா நல்லவன் said...

அட ஆமா...நீங்க சொல்லித்தான் நானும் பார்க்கிறேன்...:)

சென்ஷி said...

:))

தமிழன்-கறுப்பி... said...

நானும் நானும்...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆமா எதுவும் புரியல..

தமிழன்-கறுப்பி... said...

\
(நொம்ப முக்கியம் நானெல்லாம் மலையாளப்பக்கம் நிறைய ரசிகர் ரசிகைக்ள்

லைன் கட்டி நிக்க வைச்சிருக்கேனாக்கும்!)
\
அதுதான் தெரியுமே உங்களுக்கும் கேரளத்துக்கும் நெருங்கின தொடர்பிருக்கிறது...:)

கானா பிரபா said...

//கேரளா தான் உங்களுக்கு மாமியார் வீடாச்சே? அப்புறம் என்ன... மெயிலடிச்சா பதில் வரும்... மின்னஞ்சல் முகவரிகள் வேணுமா?...;)//

;-)))

கப்பி | Kappi said...

:)))

அண்ணே..இது ரத்த பூமி..பார்த்து சூதானமா இருங்க :)))