Thursday, November 30, 2006

மாதா பிதா குரு பிகரு

2001 ம் ஆண்டு ஜான்ஸ் கல்லூரி சாலையில் இருக்கும் ரிதம் கேண்டீன் அருகே
அந்த வெட்டி காம்ப்ளக்ஸில் இருந்துகொண்டு உடன் இருக்கும் ஜான்ஸ் கல்லூரி
மாணவர்களை குஷிபடுத்துவதற்காக வருகின்ற போகின்ற பிகர்களைப் பார்த்து
எழுதிய கவிதை இது.

நான் எழுதிய பிறகு அதனை ஏதாவது பிகர் வரும்பொழுது அந்த வரிகளை சத்தம்
போட்டுப் படிக்கும் சாக்கில் நண்பர்கள் உற்சாகமாக கத்துவார்கள். மிகவும்
ஜாலியாக இருக்கும்.

இதோ இன்று அந்த காம்ப்ளக்ஸைக் கடந்து செல்லும்போது அந்த ஞாபகம் வந்ததால்
உடனே வீட்டிற்கு வந்து பழைய டைரியைப் புரட்டி எடுத்து புதுப்பிக்கிறேன்.

*




என் இனிய கல்லூரி பிகர்களே
நீங்கள்
பிரம்மாவால் படைக்கப்பட்டீர்களா?
இல்லை
பிரம்மாவையே படைத்தீர்களா?

எங்கிருந்ததடி வந்தது உங்களுக்கு? - இந்த
ஏகாதிபத்திய அழகு

பிகர்களே! உங்களையெல்லாம்
பிரம்மா எங்கேயோ
அடைத்து வைத்திருக்கிறான் போல!

ஆம்
குற்றால சீசனுக்குக் கொஞ்சம்
பொருட்காட்சிக்குக் கொஞ்சம்
பஸ்ஸ்டாண்டுக்குக் கொஞ்சம்
கல்லூரி விழாவிற்கு கொஞ்சம்
ஊட்டிக்குக் கொஞ்சம்
இப்படிக்
கொஞ்சம் கொஞ்சமாய்
அனுப்புகிறான் போல!

- பிகர்
வேலைதேடி
வெயிலில் சுற்றும்
இளைஞர்களுக்கெல்லாம் இந்த
ஒற்றை வார்த்தைதான்
உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறது!

- பிகர்
ரிதம் கேண்டீனில்
டீ குடிக்காமலேயே
இதம் கொடுக்கின்ற
இன்பமான வார்த்தை!

- பிகர்
சுவாசிப்பது போல
இமைப்பது போல
கடலை போடுவது போல
ஜான்ஸ் கல்லூரி ஸ்டிரைக் போல
இந்த வார்த்தை
அடிப்படை தேவைகளுக்கு
அடுத்தபடியாகிவிட்டது!

- பிகர்
ஒற்றை வார்த்தையில்
ஒரு ஹைக்கூ




8 மணிக்கு ஸ்கூல் பிகர்
9 மணிக்கு காலேஜ் பிகர்
9.30 மணிக்கு வொர்க்கிங் பிகர்
9.45 மணிக்கு போலிஸ் பிகர்
ஏனோ தெரியவில்லை இதில்
கடைசிவகை
பிகர் வந்தால் மட்டும்
எமது இளைஞர்கள்
வெட்கப்பட்டு ஓடிவிடுகிறார்கள்!

ஹாய் பிகர்களே
உங்கள்
கண்கள் என்ன
கம்னியூஸ்ட்டா ?
இப்படியா போராட வைப்பது
இதயத்தை?

போங்கடி
உங்களைப்
பார்க்காமலிருக்கவும் முடியவில்லை
பார்த்துவிட்டும் செல்லமுடியவில்லை

ஏமாளியாய் இருக்கும் எங்கள்
இந்திய இளைஞர்களையெல்லாம்
உங்கள்
இதயத்தில் மட்டுமல்ல
பஸ்ஸில் படிக்கட்டிலும்
தொங்கவிடுவதிலும்
உங்களுக்கென்னடி ஒரு
தூரத்து சந்தோஷம்?

நாங்கள் என்னடி
பாவம் செய்தோம்?
கல்லூரிக்கு அப்பாவியாய்
கிளம்புகின்ற அந்த நேரத்தில்தான்
நீங்கள்
மொட்டைமாடியில் துணியுலர்த்தி எங்களை
மொட்டையடிக்க வேண்டுமா?

நீங்கள்
கம்ப்யூட்டர் படித்திருக்கலாம்.
அதற்காக நாங்கள்
வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தில்தான் உங்கள்
ஜன்னல்கள் திறந்துவிடட்டுமென்று
ஜாவா புரோகிராம் எழுதியிருக்கிறீர்களோ?

எந்தப்பட்டறையில்
தீட்டிக்கொள்கிறீர்களோ
தெரியவில்லை?
உங்கள்
விழி ஆயுதத்தை!

ஜன்னலுக்கு பின்னால்
ஜெயில்கைதிகளைப்போலவே
பயந்து கொண்டிருக்கும்
அந்த
இரட்டைவிழிகள்..
யப்பப்பபா

பாரதியின்
கவிதையை விடவும்
பயங்கரமாயிருக்கிறது!

இந்த டீக்கடையின்
டீயை விடவும்
கொடுமையாயிருக்கிறது!

பஸ்ஸடாண்டில் நிற்கும்போது
தோழிகளோடு
அப்படி என்னதான் பேசுவீர்களோ?
ராஜாவையா...
ஞானியாரையா...
ரூபனையா...
எவனை இன்று
வழுக்கி விடலாமென்று தோள்களைக்
குலுக்கிக் குலுக்கி பேசுகிறீர்கள்?

எங்கள்
எதிரில் வரும் பொழுதுதான்
தோழிகளோடு
சிரித்துச் சிரித்துப் பேச வேண்டுமா?

நாங்கள்
பார்க்கவேண்டுமென்றே யாரும்
ஜோக்கே சொல்லாமல்
சம்பந்தமே இல்லாமல்
சிரிக்கிறீர்கள் என்ற சேதி
சேரியில் இருப்பவனுக்கு கூட தெரியும்!
தயவுசெய்து
சிரிப்பதை நிறுத்துங்கள்
அன்று இரவு
நாங்கள் தூங்க வேண்டும்!

இளைஞர்கள்
நாங்களும் ஒரு
பி.சி. சர்க்கார்தான்!
ஒரு
மாபெரும் மைதானத்தில்
ஒரே ஒரு பிகரை மட்டும்
ஒளித்து வைத்தாலும்
கண்டுபிடித்துவிடுவோம்!
ஆனால்
அவளுக்கு பின்னால்
அண்ணன்கள் இருப்பது
அடிவாங்கிய பிறகுதான் தெரிகிறது!

இன்றைய
இந்திய இளைஞர்களெல்லாம்
நாளொன்றிற்கு ஒரு பிகரைப்
பார்க்காவிட்டால் கூடப்
பைத்தியம் பிடித்துவிடுவார்கள்!

அது ஏன்டி?
ஒரு
வெளுத்துப்போன கைக்குட்டையால்
அடிக்கடி
இதழை சுத்தமாக்குகிறீர்கள் - எங்கள்
இதயத்தை அசுத்தமாக்குகிறீர்கள்!

எந்தட் டெய்லரிடம்
உங்கள்
சுடிதாரைத் தைக்கிறீர்களோ?
ஒருவேளை
எலிசபெத் டெய்லராக இருக்குமோ?

அது எப்படியடி?
அழுக்கு சுடிதார் அணிந்தாலும்
அழகாகவே இருக்கிறீர்கள்!

குளிக்காமல் வந்தாலும் எங்களைக்
குப்புறவிழச் செய்கிறீர்கள்!

குற்றாலத்திற்கு வருகிறீர்களே
குளித்துவிட்டுப் போகவேண்டியதுதானே ஏன்டி
இடித்துவிட்டு போகிறீர்கள்?

பொருட்காட்சிக்கு வந்திருக்கும்
அனைத்து இளைஞர்களையும்
அழைத்து வாருங்கள்!
பிகர்காட்சிதானே நடக்கிறது என
பிதற்றிக்கொண்டிருப்பார்கள்

- பிகர்
விடுதியில் இருக்கும்
ரூபனின் வாழ்வை
ரூட் மாறச்செய்கிறது!

- பிகர்
மூர்த்தியோடு தங்கியிருக்கும்
ராஜாவை
ராட்சஷனாக்குகிறது!

-பிகர்
பைக்கில் சுற்றும்
ஞானியின் வாழ்வை
நாசமாக்கிச் செல்கிறது!

-பிகர்
கேண்டீனில் இருக்கும்
ஜோதியின் மனசை
வீதியிலே எறிகிறது

-பிகர்
கடலையோடு திரியும்
சுடலையின் வாழ்வை
சுட்டுவிட்டுப் போகிறது!

இறைவா
சுகர் தவிர்த்து வாழக்
கற்றுக்கொடுத்தாய்!
அதுபோல
பிகர் தவிர்த்தும் வாழக்
கற்றுக்கொடுப்பா!
எங்களால்
ஏமாந்து கொண்டிருக்கமுடியவில்லை

"எந்த பஸ்ஸும் வரவில்லை
பஸ் வந்தால் பிகரில்லை
பிகரிருந்தால் அழகில்லை


பாளை பஸ்ஸ்டாண்ட்"

இப்படிப்
புரு விளம்பரத்ததையெல்லாம்
காப்பியடித்துக்கொண்டிருக்க முடியாது!

தினம் ஒரு
ஜீன்ஸ் பேண்ட்
அணிந்து வர முடியவில்லை

சேமித்த பணத்தையெல்லாம்
ஷேவிங் கிரீமுக்கே
செலவிட முடியவில்லை

பட்டதரிகள் எல்லாம்
பவுடர்தாரிகளாக முடியவில்லை

பிச்சையெடுத்துப்
போன் செய்ய முடியவில்லை


ஒருநாளைக்கு
32453 முறை
தலையை சீவிக்கொண்டிருக்க முடியாது


இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கும் நேரம்கூட
எதிர்வீட்டு பிகர் ஒன்று
மொட்டைமாடியில் டீ குடிப்பது போல
என்னை
பார்த்துக்கொண்டிருக்கிறது
போங்கடி நீங்களும்
உங்க லுக்கும்!...

பிகரைப் பார்த்துக்கொண்டே


- ரசிகவ் ஞானியார்

17 comments:

ILA (a) இளா said...

//எந்தப்பட்டறையில்
தீட்டிக்கொள்கிறீர்களோ
தெரியவில்லை?
உங்கள்
விழி ஆயுதத்தை!//
அட்டகாசங்க நண்பரே. இன்னும் நிறைய வரிகளை நல்லா இருக்குன்னு சொன்னா நீங்க எழுதின பதிவை விட பெரிய பின்னூட்டம் போட வேண்டி வரும் போல இருக்குங்க.

ILA (a) இளா said...

அந்த வயசுல அதெல்லாம் தெரியாதுங்க ஹரிஹரன்

Anonymous said...

pengal ellam pengalagave irukkiraargal. Avargal azhagaga theriya ungalathu hoamon thaan kaaranaam.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//ILA(a)இளா said...
//எந்தப்பட்டறையில்
தீட்டிக்கொள்கிறீர்களோ
தெரியவில்லை?
உங்கள்
விழி ஆயுதத்தை!//
அட்டகாசங்க நண்பரே. இன்னும் நிறைய வரிகளை நல்லா இருக்குன்னு சொன்னா நீங்க எழுதின பதிவை விட பெரிய பின்னூட்டம் போட வேண்டி வரும் போல இருக்குங்க. //



நன்றி இளா...பிகர் உங்க உடம்புல நிறைய சுகர் ஏத்திடுச்சு போல..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
padippavan said...
pengal ellam pengalagave irukkiraargal. Avargal azhagaga theriya ungalathu hoamon thaan kaaranaam. //

படித்து ஆலோசனை வழங்கியதற்கு நன்றி படையப்பா.. :)

Anonymous said...

Super, super. Enjoyed it.

Very good post.

பெத்தராயுடு said...

//மாபெரும் மைதானத்தில்
ஒரே ஒரு பிகரை மட்டும்
ஒளித்து வைத்தாலும்
கண்டுபிடித்துவிடுவோம்!
ஆனால்
அவளுக்கு பின்னால்
அண்ணன்கள் இருப்பது
அடிவாங்கிய பிறகுதான் தெரிகிறது!//

கலக்கீட்டபா..

இளைஞர்களின் கவனம் அர்ஜுனனின் பார்வைப்போல பிகர் மேல் மட்டுமே இருப்பதால் அண்ணன்களின் இருப்பு அறியப்படுவதில்லை, அடிவாங்கும் வரை...

Unknown said...

//இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கும் நேரம்கூட
எதிர்வீட்டு பிகர் ஒன்று
மொட்டைமாடியில் டீ குடிப்பது போல
என்னை
பார்த்துக்கொண்டிருக்கிறது
போங்கடி நீங்களும்
உங்க லுக்கும்!...//

:))))

ரவி said...

///- பிகர்
ஒற்றை வார்த்தையில்
ஒரு ஹைக்கூ..//

கலக்கல்...!!! உக்காந்து யோசிப்பீங்களோ !!!

கார்மேகராஜா said...

படிச்சு முடிக்கறதுக்குள்ள கழுத்து சுழுக்கிடுச்சுங்க!

உங்க ஊர்ல மொக்க பிகர் இல்லையா?
இருந்திருந்தா இப்படி எழுதிருப்பீங்க.

http://karmegarajas.blogspot.com/2006/11/blog-post_21.html

கார்மேகராஜா said...

படிச்சு முடிக்கறதுக்குள்ள கழுத்து சுழுக்கிடுச்சுங்க!

உங்க ஊர்ல மொக்க பிகர் இல்லையா?
இருந்திருந்தா இப்படி எழுதிருப்பீங்க.

http://karmegarajas.blogspot.com/2006/11/blog-post_21.html

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
Super, super. Enjoyed it.

Very good post. //


நன்றி..உங்க ஊர் பிகர் அண்ணன் கிட்ட நிறைய அடி வாங்கியிருப்பீங்க போல

//
பெத்த ராயுடு said...
கலக்கீட்டபா..

இளைஞர்களின் கவனம் அர்ஜுனனின் பார்வைப்போல பிகர் மேல் மட்டுமே இருப்பதால் அண்ணன்களின் இருப்பு அறியப்படுவதில்லை, அடிவாங்கும் வரை... //


நிறைய அனுபவம் பேசுது :)


//தேவ் | Dev said...
:)))) //

:)


//செந்தழல் ரவி said...
கலக்கல்...!!! உக்காந்து யோசிப்பீங்களோ !!! //

கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்க...


//கார்மேகராஜா said...
படிச்சு முடிக்கறதுக்குள்ள கழுத்து சுழுக்கிடுச்சுங்க!

உங்க ஊர்ல மொக்க பிகர் இல்லையா?
இருந்திருந்தா இப்படி எழுதிருப்பீங்க.

http://karmegarajas.blogspot.com/2006/11/blog-post_21.html//

ஏன் எதிர்வீட்டுல யாரையும் பார்த்துட்டு இருந்தீங்களா? :)

Anonymous said...

Oray figuril,sorry vaartaiyil sollalumna super ;)

நளாயினி said...

இண்டைக்கு தான் இதை பாத்தன். இப்பிடி சிரிப்பன் எண்டு தெரிஞ்சிருந்தா வந்தே இருக்கமாட்டன். நிலவு நண்பனைத்தான் எனக்கு பரீட்சயம். இனி மற்றவர்களையும் படிக்கும் படி தொல்லை செய்கிறீர்கள் நிலவு. நிலவு இப்படியும் கவிதை எழுதுவாரா...! ஆச்சரியம் தான் பட்டையை கிளப்புங்க.

Anonymous said...

அப்பா செமை கலக்கல்....

இப்படியா உண்மையெல்லாம் புட்டு புட்டு வெக்கறது.....

selventhiran said...

வாத்யாரே பாளையங்கோட்டை ஜான்ஸ்லயா படிச்சீங்க? எது உங்க சொந்த ஊரு? தனிமடலில் செப்புங்கள்

சின்ன சாத்தான்குளத்தான்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// நளாயினி said...
இண்டைக்கு தான் இதை பாத்தன். இப்பிடி சிரிப்பன் எண்டு தெரிஞ்சிருந்தா வந்தே இருக்கமாட்டன். நிலவு நண்பனைத்தான் எனக்கு பரீட்சயம். இனி மற்றவர்களையும் படிக்கும் படி தொல்லை செய்கிறீர்கள் நிலவு. நிலவு இப்படியும் கவிதை எழுதுவாரா...! ஆச்சரியம் தான் பட்டையை கிளப்புங்க. //



நன்றி நளாயினி....நலமா இனி?