Tuesday, August 8, 2006

கண்டனங்கள்

"ஒரு இளைஞன் ஒரு இளைஞி கையைப் பிடிச்சு இழுப்பது ஜகஜம்.. ஏன்னா இது வாலிப வயசு. "
- வாலிப சுனாமி கைப்புள்ள

அந்த மாணிக்கம் வாழும் மண்ணில் நடந்த நிகழ்வைப் பாருங்கள் வாலிபர்களே


ஆனால் ஒரு வாலிபனின் கையை இத்த்னை இளைஞிகள் பிடித்து இழுப்பது மாபெரும் கொடுஞ்செயல்.. இந்த நிகழ்ச்சியை வாலிபர்களின் இதய் வேந்தன் தலக் கைப்புள்ள தலைமையில் தோன்றி அவர் வழியில் நடக்கும் வ.வா.சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அனைத்துலக வருத்தப்படாத வாலிபர்களையும் இந்தக் கொடுஞ்செயலைக் கண்டிக்குமாறு அழைப்பு விடுக்கிறோம்.

18 comments:

நாகை சிவா said...

இந்த கொடுமையை நான் கன்னா பின்னானு வன்மையாக கண்டிக்கிறேன்

ILA (a) இளா said...

அடடே அடடே?
பாண்டி -தலை மறைவு? காரணம் என்ன? வாங்கிவிட்டீர்களா "நமது கைப்பு"?

ILA (a) இளா said...

இதை வன்மையாக கண்டிக்கிறோம்
- இவண்
டிராக்டர் கழகம்.
கொங்கு மண்டலம்

உங்கள் நண்பன்(சரா) said...

//ஆனால் ஒரு வாலிபனின் கையை இத்த்னை இளைஞிகள் பிடித்து இழுப்பது மாபெரும் கொடுஞ்செயல்.. //

நானும் இந்தக் கொடுஞ்செயலை தாருமாரா கண்டிக்கின்றேன்...

//பாண்டி -தலை மறைவு? காரணம் என்ன? //

ஏலே பாண்டி... இவுக சொல்லுரது
உண்மையாலே...?

//கொடுஞ்செயலைக் கண்டிக்குமாறு அழைப்பு விடுக்கிறோம்//

உன் அழைப்பு கண்டு விழுந்தடிச்சி ஓடோடி வந்தேன் நண்பனே...


அன்புடன்...
சரவணன்.

நன்மனம் said...

இதை வண்மையாக "கண்ணடிக்கிறேன்"

(நன்றி சிபி)

:-)

கப்பி | Kappi said...

இதைக் கண்மூடித்தனமாக கண்டிக்கிறேன்..

-மாண்டிவிடியோ 22-வது 'வட்ட' 'குடி'யிருப்போர் நல்வாழ்வு சங்கம் சார்பாக
கப்பி பய.

இராம்/Raam said...

ஹாய்'ன்னு கைய குடுத்தா ஏதோ ஒன்னே கட்டி விட்டுபோட்டு "கிவ் மீ கிப்ட் பய்யா"ன்னு போன வருசம் சொன்னுச்சுங்க இங்கனே.... நாளைக்கு ஆபிஸ் பக்கமே வரமாட்டோமிலே...
:-)

துபாய் ராஜா said...

வ.வா.ச.வளைகுடா கிளை சார்பில்
வல்லடியாக, வம்புக்கிழுத்து கண்டிக்கிறோம்.

இவ்வாறு கைநீட்டி மாட்டிக்கொண்டு மனதுடையாமல் இருக்க இனி இது போன்ற தினங்களில் சங்க சிங்கங்கள் கூண்டோடு,குகையிலே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Syam said...

நாகை சிவா,இளா மற்றும் யார் யார் எல்லாம் இதை கண்டிக்கிறார்களோ நானும் அவர்களை வழிமொழிகிறேன்...
(எந்த ஊர்லப்பா இருக்காங்க இந்த மாதிரி பிகருங்க எல்லாம்...நம்ம கண்னுல ஒன்னும் மாட்ட மாட்டேங்குதே)

Santhosh said...

//இவ்வாறு கைநீட்டி மாட்டிக்கொண்டு மனதுடையாமல் இருக்க இனி இது போன்ற தினங்களில் சங்க சிங்கங்கள் கூண்டோடு,குகையிலே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். //

ஆமாம்பா வீட்டோடவே இருங்கப்பா.

சிபி,
கட்டம் கட்டி எண்ணெய் ஊத்தி கலக்கறீங்க. கலக்குங்க.

ALIF AHAMED said...

இது என்ன சின்ன புள்ளதனமா அவுங்க நம்ம கையில கட்டுவது.

கழுத்துல கட்டுனாலும் போவுதுனு இருந்துடலாம்.நன்றியோட....

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்

நாமக்கல் சிபி said...

நானும் கண்ணடிக்கிறேன். ச்சே, கண்டிக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

டாக்டர் நமது கைப்பு..லேட்டஸ்ட் செய்தி.

ஜொள்ளுப் பாண்டி தலைமறைவு

மனதின் ஓசை said...

என்ன கொடுமை சார் இது?

ILA (a) இளா said...

இதைக் நான் கண்மூடித்தனமாக கண்ணடிக்கிறேன்.. பாண்டி வா..லே வெளியே.
நாமெல்லாம் இன்னைக்கு தகிரியமா தோப்பு பக்கம் வந்துட்டம். ராக்கியோட வந்த புள்ளைங்க எல்லாம் ஏமாந்து போயிருச்சுங்க, பாவம். பின்னே நாம இன்னைக்கு அபூர்வ ராகங்கள் ரஜினி மாதிரி இல்லே வந்து இருக்கோம்.(அதாம்பூ சட்டைக்குள்ள முழுக்கையையும் மறைச்சுகிட்டு).

நாகை சிவா said...

ஆகா மொத்தம் இன்னிக்கு எல்லா பய புள்ளகளுக்கும் வெளியே தலை காட்டுவது இல்லனு ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல. :)
ஆமாம் தல எங்க அவர நேத்தியில் இருந்தே ஆள காணாம்.

ILA (a) இளா said...

//தலை காட்டுவது இல்லனு ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல. :)//
திருத்திகொள்ளவும். கையை காட்டுவது இல்லைன்னு

நாகை சிவா said...

//திருத்திகொள்ளவும். கையை காட்டுவது இல்லைன்னு //
ஹய்யோ, திருத்திகிட்டாச்சு.

நாராயணன், வர வர இந்த கொசு தொல்ல தாங்கலப்பா, நம்ம விவ் கிட்ட சொல்லி எதாச்சும் மருந்து வாங்கி அடிக்கனும்.