Wednesday, June 27, 2007

நம்ம கிட்ட வாலாட்ட முடியுமா?

நம்ம கட்டதுரையும் மற்றும் இரண்டு குடிகார கூட்டாளிப் பசங்களும் டீக்கடையில் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க ரெண்டு பேரும் தத்தம் பொண்டாட்டிகளள எப்படி எப்படியோ ஆட்டி படைப்போமுன்னு கதைகதையா அள்ளி விட்டானுங்க. நம்ம கட்டத்துரை மட்டும் ஒன்னும் சொல்லாம கமுக்கமா இருந்தாரு.

ரவுசுக்கார பய புள்ளைங்க நம்ம கட்டத்துரையவும் கேட்டானுங்க.. அதுக்கு நம்ம கட்டத்துரை சொன்னாரு, "போங்கடா பொச கெட்ட பயலுவளா.. எம்பொண்டாட்டி நேத்தைக்கு கூட தலை குனிஞ்சு என்ன சொன்னா தெரியுமாலே?"

மத்த ரெண்டு பசங்களும் அசந்து போயி, "என்னலே சொன்னா?" ன்னு ஆர்வமா கேட்டாங்க.

அதுக்கு நம்ம கட்டத்துரை சொன்னாரு, "ஏன்யா... கட்டிலுக்கு கீழே போய் ஒளிஞ்சுக்கிட்டீரு.? நீ உண்மையிலயே ஆம்பளயா இருந்தா வெளியே வந்து சண்ட போடும்யா" ன்னு சொன்னா. நானும் விடல்லியே.. பயப்படாம விடியற வரைக்கும் அப்பிடியே அவள கத்த விட்டேனாக்கும்!"