Monday, June 18, 2007

பெண்ணின் மனதைத் தொட்டு!

பெண்களுக்கு எப்போதும் ஒரே வகையான மனநிலைதான் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட ஆண் வேண்டும் என்பது அவளுடைய வயதைப் பொருத்து வெகுவாக மாறும். எப்படி?

22 வயது: வெள்ளைக் குதிரையில் அழகான ராஜகுமாரன் வரவேண்டும்! அது சாத்தியமில்லை என்று தெரிந்தும், அப்படி ஒருவனை கற்பனையிலும் கனவிலும் சந்திக்க முயல்வதை அவளால் தடுக்க முடியாது. ஆணழகனாக, புத்திசாலியாக, வசதியானவனாக, நகைச்சுவை உணர்வுள்ளவனாக, அவளை பூக்களாலும் பரிசு பொருட்களாலும் திக்கு முக்காடச் செய்யும் காதலனாக இருக்க வேண்டும்.

32 வயது: அவன் நல்லவனாக இருந்தால் போதும். காதலும் கவர்ச்சியும் இல்லா விட்டாலும், நல்ல பழக்க வழக்கங்கள், நிரந்தரமான வேலை இவை அவசியம். இது இல்லாமல், சூப்பர் மார்க்கெட்டுக்கு தன்னுடன் கூடை தூக்கிக்கொண்டு வரவேண்டும், தான் வீட்டில் சமைத்த உணவில் முழு திருப்தியடைய வேண்டும், வீட்டு வேலைகள் அவ்வப்போது செய்ய வேண்டும். ஒட்டு மொத்தத்தில் ஒரு குடும்பப் பாங்கான ஆண் தேவைப்படுகிறான்.

42 வயது: ஏதோ ஒருவன் இருந்தால் போதும். சற்று தொப்பை இருந்தாலும் பரவாயில்லை. தலையில் கொஞ்சம் முடி இல்லா விட்டாலும் பரவாயில்லை, பார்க்க கொஞ்சம் சுமாரா இருந்தால் போதும். வாரம் ஒரு முறை தன் முகத்தை சவரம் செய்தால் போதும். மாதம் ஒரு முறை அவளை வெளியில் அழைத்துச் சென்றால் போதும். அவள் பேசும் போது அவ்வப்போது புன்னகையும், அவ்வப்போது தலை அசைத்தலும் போதும்.

52 வயது: குறைந்த பட்சம் அவளுடன் அவன் ஒரே வீட்டில் இருந்தாலே போதும். அவள் பெயரை அவன் ஞாபகம் வைத்திருந்தால் மகிழ்ச்சியே. அவள் பேசும் போது தூங்கி விழாமல் இருந்தால் பரவாயில்லை. வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் படுக்கையிலிருந்து எழுந்து நடந்தால் நன்றாக இருக்கும்.

62 வயது: அவளை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் அவன் பாட்டுக்கு ஒரு ஓரமாக இருந்தால் நன்றாக இருக்கும். தன் பேரக்குழந்தைகளை பயந்து அழவைக்காமல், பாத்ரூம் எங்கிருக்கிறது, அவனுடைய பல் செட் எங்கிருக்கிறது என்று நினைவிருந்தால் போதும். அவளுடைய உதவியில்லாமல் அவனே எழுந்து உடை மாற்றிக்கொண்டால் நலம். அவனுடைய கொரட்டைச் சத்தம் கேட்காத ஒரு இடமாவது அந்த வீட்டில் இருப்பது மிகவும் அவசியம்.

72 வயது: இத்தனை வயது வரை அவள் உயிருடன் இருந்தால் அதுவே பெரிய ஆச்சரியம். அப்படியே இருந்து விட்டால், அவன் சுவாசித்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்தாலே போதும்.

5 comments:

Anonymous said...

எல்லாம் அனுபவமா?

நாமக்கல் சிபி said...

பெண் மனசு ஆழமின்னு ஆம்பளைக்குத் தெரியும். அது பொம்பளைக்கும் தெரியும்.

அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்!

- ராஜ்கிரண்

ILA (a) இளா said...

கருப்பு-பெண்களும் ஆண்களும் உருப்படவும், உருப்படாம போவறதும் 20க்குள்ளேதான் அதிகம். அதைப்பத்தி நீங்க சொல்லோனும் சாமி

ILA (a) இளா said...

பெண்களின் மனசை சத்தியமா ஒரு மனுஷனாலும் உணர முடியாது. நல்லவை ஆவதும், தீயவை அழிவது பெண்ணாலேதானே.

நாகை சிவா said...

ஆறு கூட அழம் இல்லை
அது சேரும் கடலும் கூட ஆழம் இல்லை

அழம் அய்யா அழம் அது பொம்பளை மனசு தான்ய்யா...

அழம் அய்யா அழம் அது பொம்பளை மனசு தான்ய்யா...