Saturday, June 16, 2007

சிவாஜியின் மாமனார்!

இக்கால இளையர்கள் வானத்தையே வில்லாக வளைப்பவர்கள். ஆண்கள் மட்டும் இல்லை. பெண்களும்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் பஞ்சை இல்லை. நகைச்சுவை உணர்வு சர்வ சாதாரணமாக வருகிறது தற்போது அனைவருக்கும்! அதிலும் இந்த கடி என்று ஒரு வகை இருக்கிறதே... யப்பா!

என்னடா தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையேன்னு பாக்காதீங்க. இப்படி கவர்ச்சியா வெச்சாதான் பதிவருங்க எட்டிப் பாக்குறாங்க.. அதோட சிவாஜி படத்துக்கும் இந்த பதிவுக்கும் லேசா சம்பந்தம் இருக்கு!

சிவாஜி படத்தில் ரஜினிக்கு மாமனாரா ஷ்ரேயாவுக்கு அப்பாவா நடிச்சவர் பேர் ராஜா. சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் கலக்கு கலக்குன்னு கலக்குவார்! பார்க்கத்தான் ராஜா ஒல்லி. ஆனால் "அணுகுண்டு' ஸ்டைலில் காமெடியை வீசுவதில் ஆள் பலே கில்லாடி. ராஜாவின் ஒரு காமெடி கலாட்டா இதோ...

ஒரு பட்டிமன்றத்துல "ஆண் பெண் நட்பு தேவையா, இல்லையா?'னு தலைப்பு. ராஜா தேவையில்லைனு பேசறார். "பெண்கள், தங்கள் கணவர்மேல ரொம்ப பொஸஸிவ்வா இருப்பாங்க. அவங்களால இதுமாதிரியான நட்பைச் சரியா எடுத்துக்க முடியாது. நான் எதிர்வீட்ல இருக்கிற குழந்தை படிக்கட்டுல இருந்து கீழே விழுந்திடப் போகுதுன்னு பிடிக்க ஓடினேன். அந்தக் குழந்தையோட அம்மாவும் ஓடி வந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் இடிச்சுக்கிட்டோம். என் மனைவி "என்ன அடி பலமா?'னு கேட்டாங்க. நான் குழந்தையைத்தான் கேட்கிறானு நினைச்சு, "இல்ல, காப்பாத்திட்டோம்'னு சொன்னேன். "நான் கேட்டது குழந்தைக்கு இல்ல, உங்களுக்கு..? ஸ்லோமோஷன்ல போய் இடிச்சீங்களே!'னு சொன்னாங்க. இப்படி இருந்தா ஆண் பெண் நட்பு எப்படி வளரும் சொல்லுங்க' என்று போட்டாரே ஒரு போடு! கூட்டம் "அனுபவித்து' சிரித்தது.

5 comments:

Anonymous said...

சிவாஜி ஜோதியில் நீயும் ஐக்கியம் ஆயிட்டியா கருப்பு?

Anonymous said...

ஒருமுறை ராஜாவே கூட்டத்தில் சொன்னது, "யப்போவ்... இந்த வாட்டியாவது பட்டிமன்றத்தில் ஒழுங்கா பேசு.. இல்லாட்டி என் கூட்டாளிங்க கிட்ட என் மானம் போயிரும்!" என்று அவரது மகன் சொல்லி அனுப்பினானாம்!

Anonymous said...

இப்படி அடுத்தது எல்லாரும் பதிவு போட்டா எப்படி படிக்கிரது எப்ப கும்மி அடிக்கிரது

Anonymous said...

வந்தியத்தேவன் என்ற பெயரில் வலைப்பூ எழுதும் திரு.ஞானசம்பந்தன் அவர்களும் பட்டிமன்றத்தில் அருமையாகப் பேசுவார்!

குமார். குமரப்பன்.

MyFriend said...

எல்லாருக்கும் விஜய், ஜோதிகான்னு நெனப்புதான்.. அப்படிதான் அவரு ஓடியிருக்காரு போல.. ஹீஹீஹீ..