Friday, June 15, 2007

சிவாஜி - ஸ்பேஷல் ஷோ - முடிவுகள்

சிவாஜி - தி பாஸ் படத்திற்கு வ.வா.ச ஸ்பேஷல் ஏற்பாடு செய்து இருப்பதை பற்றிய பதிவை நீங்கள் எல்லாம் கண்டு இருப்பீர்கள். ஒரு திரையரங்கம் என்பதை மாற்றி பல திரையரங்களின் டிக்கெட் என்பதையும் நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

"நாங்க சொல்லுறதையும் செய்வோம்
சொல்லாதையும் செய்வோம்" என்ற ரஜினி வாக்கின்படி

சொன்ன மாதிரி டிக்கெட் அரெஞ்ச் பண்ணியாச்சா.... இதுல இந்த சொல்லாத மேட்டரு என்னா வாங்கி இருந்த டிக்கெட்ட சங்கத்தின் சிங்கங்களே எடுத்துட்டு ஒடிடுச்சுங்க... ஆளுக்கு ஒன்னுனா கூட பரவாயில்லை வெள்ளிக்கிழமையும் பாப்போம், சனிக்கிழமையும் பாப்போம் சொல்லி நாள் கணக்குல அள்ளிட்டு போயிட்டாங்க... மிஞ்சினது இரண்டு தான். அதையாச்சும் கமெண்ட் போட்ட மக்களுக்கு கொடுப்போம் என்று கமெண்ட்டியவர்களில் இருவரை குலுக்கி எடுத்து தேர்வு செய்தால்

அதில் ஒருத்தர் நான் நேத்து ராத்திரியே பாத்தாச்சுனு சொல்லிட்டார்...(இன்னிக்கு பதிவு வேற போடுவார், படத்தை வெற்றியில் பார்த்த வெற்றி வீரன்... முருகனின் அண்ணனின் வேறு பெயர் கொண்டவர்)

இன்னொருவர் பெண்மணி (நல்ல வேளை பாதிக்கு பாதி வந்துச்சு, இல்லானா தேவையில்லா சலசலப்பு வரும்) "வேதமான" இவர் தஞ்சைக்கு அவர் தம்பி செல்வதால் எனக்கு வேணாம், வேற யாருக்கும் கொடுத்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்( என்ன லாஜிக்கோ)

என்னடா இரண்டு பேரும் இப்படி சொல்லிட்டாங்களேனு யோசிச்சுக்கிட்டு இருக்கும் போது டிக்கெட் டெலிவரி இன்சார்ஜ் சிபி, அவங்க தான் வேண்டாம் சொல்லிட்டாங்களே நான் எடுத்துக்குறேன் என்று அந்த இரண்டு டிக்கெட்டையும் லவுட்டிக்கிட்டு போயிட்டார். சரி டிக்கெட் போகட்டும். வெற்றி பெற்றவர்களை விட்டு விடுவோம். பின்ன மேட்டரு இருக்கே...

போட்டியில் கலந்து கொண்ட மற்றவர்களுர்களின் ஒரே மனோ தைரியத்தை பாராட்டி, அவர்களை தெம்பூட்டும் விதத்தில் நம்ம சங்கம் தர போற அதிரடி அற்புத பரிசு ............

சிவாஜி படப்பிடிப்பின் இடைவேளையில் தேராடூன் தேக்கு, கதக் ஆட்ட காரிகை நம்ம ஸ்ரேயா சாப்பிட்டுட்டு மிச்சம் வச்ச லாலிபாப்கள்...



சந்தோசமா வாங்கிகோங்க... சே... பாத்துக்கோங்க... பீல் பண்ணி பாருங்க ஸ்ரேயா வாசம் அடிச்சாலும் அடிக்கலாம்.

10 comments:

இராம்/Raam said...

புலி,

நம்ம தல'யோட இந்த டயலாக்'கே மிஸ் பண்ணீட்டியே???


இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது????

நாமக்கல் சிபி said...

சூடானுக்கு விமான டிக்கெட்டுக்கள் டெலிவரி செய்யப்படும்!

புலியைக் குதற விரும்புவோர் குதறலாம்!

-டெலிவரி இன்சார்ஜ்!

நாமக்கல் சிபி said...

//இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது????
//

என்ன கொடுமைங்க இது சிவா!

தலயோட டயலாக்கை தலயே வந்து ஞாபகப் படுத்த வேண்டியிருக்கு!

இம்சை said...

இம்சைஇம்சைஇம்சைஇம்சைஇம்சை

உண்மைத்தமிழன் said...

சிபிக்கு ரெண்டு டிக்கெட்டா? அவருக்கு அரை டிக்கெட்டே போதுமே..? மிச்சம் ஒன்றரை டிக்கெட் யாருக்கு? பார்ட்டி இங்கன வந்து பில்டப்பு போடுதா? பார்த்துக்கச் சொல்லுங்கப்பூ..

ALIF AHAMED said...

இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது????

//
thalayee vawthu sonnathaala utureen

இம்சை அரசி said...

நல்ல வேளை குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரல ;)

நாகை சிவா said...

//நல்ல வேளை குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தரல ;) //

வேணும்னா சொல்லுங்க.. அதையும் வாங்கி தரோம்.. உங்க சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்....

Santhosh said...

// இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது????//
ஆகா அவங்களாடா நீங்க.. இன்னும் மாறலையா?
புலி உன்னைய ஊர் பக்கம் பாத்தேன் நீ பலி..

கப்பி | Kappi said...

ஹைய்யோஓஓ ஹைய்யோ :))))