Wednesday, August 8, 2007

டெவில் ஷோ: கவுண்டர்-ஆன்மீகப் பதிவர்கள்-ஒண்டிக்கு ஒண்டி! - 2

நரகத்தில் மாட்டுப்பட்ட ஆன்மீகப் பதிவர்களை நோக்கி, நம்ம கவுண்டர் ஒரு ராஜ நடை நடந்து வருகிறார். சேவகர்கள் வழி விடுகிறார்கள். அங்கே முதல் அண்டாவில் தளதள என்று மிதக்கும் கண்ணபிரான் ரவிசங்கர்! முந்தைய பாகம் இங்கே!

கவுண்டர்: ஹே மேன்...வாட் இஸ் யுவர் நேம்?
ரவி: அடியேன் Kannabiran Ravi Shankar (krs)
கவுண்டர்: டேய், இதுல எதுடா உன் பேரு? அடியேனா? கண்ணபிரானா? ரவியா? சங்கரா? krsஆ?
ரவி: யார் யார் என்னை எப்படி எப்படி அழைக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் நான் அப்படி அப்படித் தெரிவேன்!
கவுண்டர்: டேய் பள்ளி கொண்ட மண்டையா, இது தானே வேணாங்கறது! அப்படி அப்படி தெரியறதுக்கு நீ என்னா சீரியல் செட் லைட்டா?

சரி...அது இன்னாடா அது மாதவிப் பந்தல்? ஒனக்கு வேற பேரே கெடைக்கலியா?
கலைஞர் கண்ணகிக்கு சிலை வச்சாரு சரி!....நீ இன்னா அவருக்குப் போட்டியா, மாதவிக்கு பதிவு வைக்கறியா?
டான்ஸ் ஆடுற பொண்ணு பேர எல்லாம் எதுக்கு மேன் பதிவுக்கு வைக்கறீங்க?

ரவி: ஐயோ கவுண்டரே! அது சிலப்பதிகார மாதவி இல்லை....
கவுண்டர்: பின்னே ராஜ பார்வையில் கமல் கூட ஜோடி போட்டுச்சே, அந்த மாதவியா?
டேய் திருப்பதி லட்டு மண்டையா...வைக்கறது தான் வைக்கற!
ஒரு சிம்ரன் பந்தல், த்ரிஷா பந்தல், அசின் பந்தல், ஷ்ரேயா பந்தல்-னு வச்சா என்ன கொறைஞ்சா போயிடுவ?
வந்துட்டானுங்க மாதவிப் பந்தல், தண்ணீர்ப் பந்தல், மோர் பந்தல்-ன்னு...பந்தல் போடறதுக்கு!

ரவி: ஐயோ, என்னைப் பேச விடுறீங்களா! இது அந்த மாதவி எல்லாம் கிடையாது!
கண்ணன் வீட்டில் ஒரு பந்தல் இருக்கும்; அதில் செண்பகப்பூ கொடிகள் படர்ந்து இருக்கும்; அதுக்கு மாதவிப் பந்தல்-ன்னு பேரு.
கவுண்டர்: டேய், நீ இன்னா கண்ணன் வூட்டு கேர் டேக்கரா? இல்ல ட்ரவுசர் போட்ட தோட்டக்காரனா?
என்னமோ செடி வளருதாம், கொடி வளருதாம்! கதை வுடறானுங்கப்பா....
ரவி: அச்சோ அச்சோ, "மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் கூவின காண்" ன்னு திருப்பாவையில் வருமே! நீங்க படிச்சதில்லையா கவுண்டர் ஐயா?

கவுண்டர்: ஐயோ! கொல்லுறானே, கொல்லுறானே! அடேய், அடேய், எதுக்குடா ஆன்னா ஊன்னா ஒரு பாட்ட எடுத்து வுடறீங்க?
பாடாதீங்கடா...பேசுங்கடா...அதுவும் புரியறாப் போல தமிழ்-லலலலல பேசுங்கடா.....
நான் எப்படிப் பேசுறன்? பாக்கற இல்ல? அது போல பேசுடா!

ரவி: அது எப்படிங்க ஐயா, உங்களால் மட்டும் இப்படி எல்லாம் "அடித்துப்" பேச முடிகிறது?
கவுண்டர்: டேய்! அதுக்கெல்லாம் அறிவு வேணும்டா! எனக்கு ஒடம்பு பூரா மூளை டா!
ரவி: ஒடம்பு பூரா இருந்தா அதுக்குப் பேரு கொழுப்புண்ணே. மூளை மண்டையில் மட்டும் தான் இருக்கணும். மண்டையா மண்டையா-ன்னு அடுத்தவங்களை எப்ப பார்த்தாலும் கூப்படறீங்க...ஆனா இது தெரியலயே ஒங்களுக்கு?

(கவுண்டர் செம டென்சன் ஆகிறார்...)
கவுண்டர்: டேய், என்னையே எதிர்த்துப் பேசுறியா நீயி! Guards...இவன் நெத்தியில நாமத்தைப் போட்டு, இன்னும் நல்லா வதக்கி எடுங்க! அப்ப தான் அடங்குவானுங்க!
(கோபமே வராது என்று சொல்லிக் கொள்ளும் ரவிக்குக் கூடக் கோபம் வந்து விடுகிறது...கவுண்டரை நெற்றிக்கண் ரேஞ்சுக்கு முறைக்கிறாரு ரவி)...

கவுண்டர்: ட்ட்ட்டேய்...இன்னா லுக்கு வுடறே?
மாதவி-ன்னு பேரு வச்சிக்கினு...
கண்ணகி கசின் பிரதர் ரேஞ்சுக்கு முறைக்கிற? நோண்டிடுவேன் ஜாக்கிரதை!.....
(அன்பு நண்பர் ரவியைக் காப்பாற்ற எண்ணுகிறார் ஜிரா.
கவுண்டரைத் திசை திருப்ப, உரத்த குரலில், சுசீலாம்மா பாட்டை எடுத்து விடுகிறார்...யார் யார் யார் அவர் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ??...)


கவுண்டர்: யாரு மேன் அது காட்டுக் கூச்சல் போடறது? ஓ நீயா! உன் பேரு என்னடா? krsஆ இல்லை grsஆ?
ஜிரா: நான் பக்தியுடன், ஜி ராகவன்
கவுண்டர்: அப்ப நாங்க என்னா, சக்தியுடன், ஜி. மணியா?
இந்த நக்கல் தானே வேணாங்கறது! சரி, அது இன்னாடா அது ஜிரா?....
ஸ்நேகா ஸ்வீட் ஸ்டால்ல, ரசகுல்லா, குலாப் ஜாமூன் போட்டுக்கினு இருந்தியா நீயி? - ஜிரா, ஜீரா-ன்னுகிட்டு! ஒரே பிசு பிசுன்னு!

ஜிரா:அவலா கொன்றோ மிசையா கொன்றோ...அவ்வழி நல்லை வாழிய நலனே!
கவுண்டர்: டேய்...மவனே யாரப் பாத்து கொன்றோ கொன்றோ -ன்னு மிரட்டுற நீயி? என்னைக் கொன்னுடுவியா நீ? பிச்சிப்புடுவேன் பிச்சி!
ஜிரா: ஆகா! பிச்சி!.... என்ன ஒரு சொல்! சொல் ஒரு சொல்!
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியாள்!
விச்சியாள், அவள் பிச்சியாள்! தலை உச்சியாள். தமிழ்க் கட்சியாள். வெற்றி வெட்சியாள்!

கவுண்டர்: ஆமாண்டா, மச்சியாள், நம்ம மச்சியோட ஆள்.
டேய் டேய், அடங்குங்கடா! அடங்குங்க!.....இன்னோரு தபா இப்படி தாறு மாறாத் தமிழ் பேசின, ஒனக்கு மட்டும் அண்டாவைத் தூக்கிவிட்டு குண்டாவுல காய்ச்ச சொல்லிடுவேன்! நமக்குன்னு வரானுங்கு பாரு! பிச்சி,மச்சி,குச்சி-ன்னு! ச்சே.....

(கவுண்டரின் செல் போன் அடிக்கிறது....)
கவுண்டர்: அலோ, ஐ ஆம் ஆல்-இன்-ஆல் அழகுராஜ், கவுண்டர் ஸ்பீக்கிங்...யாரு மேன் லைன்-ல?
கவுண்டரே வணக்கம், நான் கந்த வெற்பில் இருந்து, முருகப்பெருமான் பேசறேன்...இருங்க என் மனைவி உங்ககிட்ட பேசணுமாம்...(லைனில் தெய்வயானை அம்மையார்....! @$%‍">@#$%‍&*())

கவுண்டர்: அப்படீங்களா மேடம். ஆல்ரைட் மேடம். ஓக்கே மேடம். கவலைப்படாதீங்க மேடம். நான் பாத்துக்குறேன் மேடம். வைச்சிடறேன் மேடம்!
(ஜிராவைப் பார்த்து...) வாடி ரங்கநாயகி...வாயக் கொடுத்து மாட்டிக்கினியா நீயி? Guards...இவனுக்குச் சாப்பிட என்ன கொடுக்கறீங்க?
Guards: உப்புக் கருவாடும்..ஊற வைச்ச சோறும், மோரில் துவைத்த வெங்காயமும், கார அடையும்......
கவுண்டர்: ஸ்டாப்..ஸ்டாப்...ஸ்டாப்! இது என்ன நரகலோகமா? இல்லை நளந்தா பேலஸா?

இனிமே இவனுக்கு வெறும் ஓட்ஸ் உப்புமா கொடுங்க, போதும்.
மேலிடத்தில் இருந்து ஸ்ட்ராங்கான உத்தரவு!
குடிக்கத் தண்ணி எல்லாம் கொடுக்காதீங்க....வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க! அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்!


அடுத்து யாரு மேன் லைன்ல?
குமரன்: அடியேன் சிறிய ஞானத்தன். கூடல் குமரன்.
கவுண்டர்: ஓ நீயும் அடியேன் தானா? இப்பல்லாம் அடியேன், என்னை இன்னொரு தபா அடியேன்-ன்னு, அடியைக் கேட்டு கேட்டு வாங்கறானுங்கப்பா.
சரி...அது இன்னா மேன் அது, பின்னூட்டக் கோனார் நோட்ஸ்?
இந்த வேண்டாத வேலை எல்லாம் ஒனக்கு எதுக்கு மேன்?
குமரன்: யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!

கவுண்டர்: ஐ..ஐ...ஐ....
இவரு பெற்ற இன்பம், பெறுக இவ்வையகமாம்!
ஏன்...யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லேன் பார்ப்போம்! ஏதோ, இவனுங்க பேங்க் அக்கவுண்ட்ல இருந்து எடுத்து, அள்ளி வுடறா மாதிரி இல்ல, அள்ளி அள்ளி வுடறானுங்க!
இன்னா தப்பு செஞ்சிட்டு மேன் இங்க வந்த நீயி?

குமரன்: ஐயகோ! என்னடி மீனாட்சி! சொன்னது என்னாச்சி? நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சி!
கவுண்டர்: ஏய், இன்னா, மீனாட்சி-ன்னு சத்தமாக் கூவினா, மதுரைக்காரங்க எல்லாம் செட்டு சேந்துக்கலாம்-னு திட்டம் போடறியா நீயி?
அது எல்லாம் என் கிட்ட நடக்காது! ஐ ஆம் கவுண்டர் ப்ரம் கோயம்புத்தூர்! யூ நோ?

அது இன்னா மேன் அது? ஒரு தும்மல் தும்மினா, ஒடனே ஒரு வலைப்பூ தொடங்கிடுவியா நீயி?
இப்பல்லாம் பூலோகத்துல, பசங்களுக்கு ஒன்-டு-த்ரீ எண்ணறதுக்கு, உன் ப்ளாக்-கைத் தான் முன்னாடி வைக்கறாங்களாம்!
பசங்களுக்கு கணக்கு சொல்லிக் குடுக்குற கணக்கு டீச்சர் கனகாவே, உன் கணக்குல கன்ப்யூஸ் ஆயிட்டான்னா பாத்துக்கோ! - இது எல்லாம் தேவையா மேன் உனக்கு?
குமரன்: :-)
கவுண்டர்: இந்தச் சிரிப்புக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல! அடுத்து யாரு மேன்?


VSK: நாதவிந்து கலாதீ நமோ நம! மயிலை மன்னாரு டீயோ கமோ கம!
கவுண்டர்: உன் பேர் என்ன மேன்?
VSK: என்னை SKன்னு கூப்பிடுங்க.
கவுண்டர்: நீ சொல்லி நான் என்ன மேன் கூப்பிடறது? நான் VSKன்னே கூப்டுக்கறேன். எதுக்கு மேன் மெட்ராஸ் பாஷையில திருக்குறள் நோட்ஸ் போடற நீயி?

அதப் படிச்சிட்டு, பசங்க எல்லாம் எக்ஸாம் ஹாலுக்குப் போயி, மெட்ராஸ் பாஷைல திருக்குறள் எழுதி ஃபெயிலாயிட்டு வருதுங்களாம்.
இப்படி எல்லாம் டகால்டி வேலை பண்ணறியே! இதுக்கு மொதல்ல திருவள்ளுவர் கிட்ட பர்மிஷன் வாங்கினியா மேன் நீயி?

VSK: லப் டப்...லப் டப்...லப் டப்...
கவுண்டர்: ஓ...நீங்க மருத்துவர் வேற இல்லை? (மனசுக்குள்: சரி...ரொம்ப நோண்ட வேண்டாம்...நமக்கும் ஹார்ட்டு வீக்கு...நரகத்துல சிகிச்சைக்கு இந்த ஆளு உதவி தேவைப் பட்டாலும் படலாம்)
யார் அங்கே? இந்த ஆளுக்கு தினமும் ஒரு கப் கூழு எக்ஸ்ட்றா ஊத்துங்க! என்ஜாய் மேன் VSK!


கவுண்டர் அப்படியே நகர்ந்து, ஞானவெட்டியான் ஐயாவைப் பார்க்கிறார்...(மனசுக்குள்: ஐயோ மிலிட்டிரி ஆளு போலத் தெரியுதே...வம்பே வேணாம்)
ஹாய் மேன், ஹவ் ஆர் யூ என்று கை குலுக்குகிறார். இருந்தாலும் இயற்கையா இருக்கும் லொள்ளு அவருக்குத் தானாத் தலை தூக்குகிறது!

முனைவர் நா.கண்ணனைக் காண்கிறார்...
ஹாய் மேன், இது இன்னா நரகத்துல வந்து தொப்பியும் கூலிங் க்ளாஸும்? இதெல்லாம் ஒங்களுக்கே ஓவராத் தெரியலை?
தானா வாயக் கொடுத்து மாட்டிக்கின மேன் நீயி. அது இன்னா கிகா பைட்டும், பாவ புண்ணியம்-னு உன் பதிவு?
இந்த ஐடியாவை பிக்-அப் பண்ணி நரகலோகம் ஃபுல்லா கிகா பைட் ஆக்கிட்டாங்க!
டோட்டலா கம்ப்யூட்டர் பண்ணிட்டாங்க மேன்! இனிமே பாவக் கணக்க முன்ன பின்ன மாத்திக் கூட எழுத முடியாது... இது தேவையா மேன் ஒனக்கு?


வல்லி சிம்ஹனைக் காண்கிறார்...
கவுண்டர்: நீங்க தான் வல்லியம்மா-வா?
வல்லியம்மா: ஆமாண்டா குழந்தே! நல்லா இருக்கியா நீ?
கவுண்டர்: ஏய் ஏய்...நோ சென்டி ஓக்கே! நல்லாப் பாட்டு பாடுவிங்க போலக் கீதே!....இனிமே டெய்லி நான் காபி குடிக்கும் போது வந்து ஒரு பாட்டு பாடணும்...இன்னா சரியா?

வல்லியம்மா: பாடிட்டாப் போச்சு; காபி குடிக்கறச்சே காபி ராகத்துல பாடட்டுமா?
கவுண்டர்: அடங்கொக்க மக்கா...காபி குடிக்க கூட ஒரு ராகம் கண்டுபுடிச்சிட்டானுங்களா? இசை இன்பம்னு வலைப்பூ தொடங்கி இம்சை இன்பம் பண்ணுறானுங்கடா சாமீ!


கவுண்டர்: நெக்ஸ்ட்...
கார்ட்ஸ்...எங்கே அந்த ட்வின் பசங்க? என்றென்றும் ஆப்புடன் பாலா and தேசி தேசிகன்?
Guards:
சார்....அவிங்க ரெண்டு பேரும் சுஜாதாவோட கிரிக்கெட் ஆட ஸ்ரீரங்கம் போயிருக்காங்க சார்!

அப்படியே அவரு கிட்ட நைசாப் பேசி, சிவாஜி படத்துல சிவாஜியா நடிக்கற ஹீரோ பேரு ரஜினி-ன்னு, ரொம்பவும் கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சிக்குனு வருவாங்க சார்....
கவுண்டர் தலையில் அடித்துக் கொண்டு நகர்கிறார்...கீதா சாம்பசிவம் அவர்களை நோக்கி...



கவுண்டர்: ஹாய் மேன்! ஹவ் ஆர் யூ?
கீ.சா: ஐ ஆம் நாட் மேன்! ஐ ஆம் வுமன்!
பர்ஷ்டு அண்டர்ஸ்டாண்ட் தட்! அண்டு ஆல்சோ கால் மீ...தலைவி!
கவுண்டர்: சொறிங்க தலைவி....சாரி...சாரீங்க தலைவலி!
இன்னா, எனக்கே ஆர்டர் போடுற அளவுக்கு திமிரா? தலைவிங்கிற தலைக்கனமா?

சரி சரி...அந்த அம்பிப் பையனை எதுக்கு ஆனா ஊன்னா பின்னிப் பெடல் எடுக்கற நீயி? நல்லவங்க நாலு பேரை சும்மா வுடலீன்னா தூக்கமே வராதா?
கீ.சா: நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு....எல்லாம் சிதம்பர நாதனைப் பற்றிப் பதிவு எழுதும் எனக்குத் தான் தெரியும்.
கவுண்டர்: உக்கும்...எல்லாம் தெரிஞ்ச மகராசி...இதையும் தெரிஞ்சுக்கோ...அந்த அம்பி தான் ஒன் மேல பெட்டிஷனாத் தட்டி வுட்டு, இப்ப இங்க வந்து நிக்கறீங்கோ! - இனி மேலாச்சும் சைக்கிள் கேப்புல சாண்ட்ரோ ஓட்டறத நிறுத்திக்கோங் கங்கோ!


நெக்ஸ்ட்...
பித்தானந்தா நாமக்கல் சிபி....
கவுண்டர்: டேய் நீ நம்ம ஆளுல்ல...நீ எங்கடா இங்க?.........அது சரி, நீயும் நம்ம இனம் தானே! வேறெங்க வருவ? சரி, வந்தது வந்துட்ட! வா, ஜாலியா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வருவோம்!
சிபி: அண்ணே, முக்கியமான ஒரு ஆள நீங்க வுட்டுட்டீங்கண்ணே!
போட்டுக் கொடுக்கறதா நெனைச்சுக்காதீங்க! நான் போடாமத் தான்-ணே கொடுக்கறேன்!
கவுண்டர்: யாருடா அவன்?
சிபி: வெட்டி-ண்ணே!

கவுண்டர்: ஓ...அந்த கொல்ட்டி மண்டையனா!
சிபி: அவனே தான்! லவ் ஸ்டோரி லபக்குதாஸ் அவன் தான்ணே!
கவுண்ட்ர்: சரியான குசும்பு புடிச்சவன்-பா அவன்! அவன் எப்படி இவனுங்க ஆன்மீக லிஸ்ட்-ல வந்து சேந்தான்?
சிபி: அதாண்ணே ஒண்ணும் புரியாம, அண்டாவுல ஆறு மாசமாத் தவிச்சிகிட்டு இருக்கேன்!
கவுண்டர்: கொதிக்கற அண்டாவோட சூடு தெரியல உனக்கு? அவனெல்லாம் எப்பிடி ஆன்மீகப் பதிவரானான்-ங்கிறது தான் பெருசா தெரியுது, இல்ல? - நல்ல ஷிப்புடா இந்த பிரெண்டுஷிப்பு!

சரி வா, உன் ஆசைக்கு அவனைப் போயி ஒரு நொங்கு நொங்கிட்டு வரலாம்! அது சரி, இவனுங்க எல்லாம், எப்படி இங்க வந்து மாட்டுனானுங்க-ன்னு கேட்டு, எமனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வச்சேன்....
எருமை மாட்டு வேகத்துல பதில் வந்துக்குனு இருக்கு போல!

(தொடரும்....அடுத்த பகுதியில் நிறையும்!)

77 comments:

CVR said...

:-))))))))))
வெட்டியின் டெவில் ஷோ பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து!! :-P

துளசி கோபால் said...

ஹைய்யோ..........:-))))))


எனக்கு இப்ப காபி குடிக்கணும். எங்கே அந்த வல்லியம்மா? :-)))

VSK said...

செமக் காமெடி!

இது இது இது காமெடி!

அப்படியே கவுண்டமனி வந்தாமாரி இருக்கு!

2, 3 பதிவா எழூஹ சமாச்சாரம் வெச்சுகிட்டு, போனாப் போவுதுன்னு குறைச்ச மாரி இருக்கு!

சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!

தெய்வானை ஃபோன் போடறது, எல்கேஜிக்கு பூவை வெச்சு சொல்லித் தர்றதும், பசங்க மன்னார் நோட்ஸைப் படிச்சு ஃபெயில் ஆவறதும், வல்லியம்மா காப்பியும், அம்பி போட்ட பெட்டிஷனாலத்தன் தலைவி அண்டாவுல குந்தியிருக்காங்கண்றதும், சூப்பர் கற்பனை!

குட் ஜாப், ரவி!
:)))))))))))

கோவி.கண்ணன் said...

//மாதவி-ன்னு பேரு வச்சிக்கினு...
கண்ணகி கசின் பிரதர் ரேஞ்சுக்கு முறைக்கிற? நோண்டிடுவேன் ஜாக்கிரதை!.....//

முழுவதுமே கலக்கலாக இருக்கு கேஆர்எஸ்.

சிரித்து சிரித்து வயறு புண்ணாச்சு

"யாம் பெற்ற சம்பளம் பெருக இவ்வையகம்"

எப்படிங்க ?

சூப்பர் ! பாராட்டுக்கள் !

ILA (a) இளா said...

//அப்படி அப்படி தெரியறதுக்கு நீ என்னா சீரியல் செட் லைட்டா?//
இப்படி மார்க் பண்ணி ரசிச்சதை சொல்லனும்னா எல்லாத்தையுமே சொல்லனும். சார்,அடியேன்,கண்ணபிரான், ரவி, சங்கர், KRS, ஏதோ ஒன்னு இன்னும் நிறைய பகுதி வரட்டும்.

சாப்பிடும் போது மட்டும் உங்க பதிவ படிக்கக்கூடாது, புரை யேறிக்குச்சுங்க :((

ILA (a) இளா said...

வெட்டிக்கு வேறயா? கும்மறதுக்குன்கே ஒரு லாரி வழியா ஆளை ஏற்பாடு பண்ணிட்டு வரேன்.

Dr.N.Kannan said...

வாஷிங்டன் திருமணம் போல ஒரே கலக்கல். நம்மை இன்னும் காய்ச்சுவீர்ன்னு நினைச்சேன். இன்னும் என்னோட controversial எழுத்தையெல்லாம் படிக்கவில்லை என்று தெரிகிறது :-) நல்லவேளை யாரும் போட்டுக் கொடுக்கலை போல...:-))

கப்பி | Kappi said...

:)))))

வெற்றி said...

ரவி,
எப்ப உங்களின் அடுத்த பதிவு வருமென ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பதிவு.

அருமை. அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறேன்.

வெட்டிப்பயல் said...

post super...

வெட்டிப்பயல் said...

//Collapse comments

CVR said...

:-))))))))))
வெட்டியின் டெவில் ஷோ பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து!! :-P //

உனக்கு இருக்குடி பெரிய ஆப்பு...

வெட்டிப்பயல் said...

//ஒரு சிம்ரன் பந்தல், த்ரிஷா பந்தல், அசின் பந்தல், ஷ்ரேயா பந்தல்-னு வச்சா என்ன கொறைஞ்சா போயிடுவ?//

ஏன் ஒரு ஜெனிலியா பந்தல், இலியானா பந்தல் அப்படினு வைக்கறது

வெங்கட்ராமன் said...

சூப்பரு. . . . .
கலக்கீட்டிங்க. . . . .

G.Ragavan said...

கலக்கல். நல்ல சிரிப்பூ பூந்தி தூவுன தயிர்வட களக்குகளக்குன்னு தீந்து போற மாதிரி..பதிவும் படக்குன்னு தீந்து போச்சு. :)

பள்ளிகொண்ட மண்டையால தொடங்கி, பிசுபிசு பிச்சி ஓட்ஸ் வழியா, கணக்குப் பாடம் படிச்சிச் சம்பளம் பாத்து, லப்டப்புல பயந்து போயி, நரகலோகம் பாவபுண்ணியம் கணக்கையும் பாத்து, காபி ராகத்தோடு காபியையும் குடித்து, அம்பி பெட்டிஷன் படிச்சிட்டு, ஒன்னுமே புரியாம ஆறுமாசம் தவிக்கிறதும்...வெட்டியைப் பார்க்கப் போறதும்...அடடா!!!!!!

Anonymous said...

RAVI SIR,
VANAKKAM, it is really from u, unbelivable,anyhow i liked it,very nice.vazhga,vazhga.
ARANGAN ARULVANAGA.
Anbudan
k.srinivasan.

கைப்புள்ள said...

சூப்பர் பதிவு கேஆர்எஸ். கலக்கிட்டீங்க. படிச்சி முடிக்கிற வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தேன்.

மாதவி பந்தல் விளக்கம், மயிலை மன்னாரு, ஒன்னு ரெண்டு எண்ணிக்கைக்கு குமரன் வலைப்பதிவு, தலைவியைக் கலாய்ச்சது எல்லாமே சூப்பர். நல்லா நோட் பண்ணிருக்கீங்க மேன்.

//இனி மேலாச்சும் சைக்கிள் கேப்புல சாண்ட்ரோ ஓட்டறத நிறுத்திக்கோங் கங்கோ!//

கவுண்டர் உங்க நாவில் குடி கொண்டிருக்காருங்கங்கோ. வாழ்த்துகள். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

:))

Sridhar V said...

அட... இத்தனை நகைச்சுவை அதுவும் யார் மனமும் கோனாமல் இயல்பாக எழுதியிருக்கிறீர்கள். :-))

நீங்கல் ஆன்மீக பதிவர் மட்டும் அல்ல. 'ஆல் இன் ஆல்' பதிவர். :-)

மாதவி பந்தலுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன். நன்றி!

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர் கேஆரெஸ்....கலக்கறீங்க....

மெளலி (மதுரையம்பதி) said...

மாதவிப்பந்தல்ன்னு ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில்ல ஒரு மண்டபம்/பிரகாரம் இருக்கே, அதனால் தான் நீங்க அந்த பெயர் வைத்ததாக நினைத்தேன்....நகைச்சுவயுடன் புது விஷயமும் தெரிந்தது...நன்றி.

குமரன் (Kumaran) said...

First Impression:

கவுண்டர் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்காரோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
First Impression:

கவுண்டர் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருக்காரோ?//

உமக்கும் எமக்கும் ராகவனுக்கும்
=இல்லை!!!!

மற்ற எல்லார்க்கும் ஆமாம்!!! :-))

என்ன குமரன் நீங்க
போன பதிவுல பாகவத அபசாரம்-ன்னு பயமுறுத்திட்டு...
இந்தப் பதிவுல பாகவத உபசாரம் பண்ணச் சொல்றீங்களே? :-))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//CVR said...
:-))))))))))
வெட்டியின் டெவில் ஷோ பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து!! :-P//

நல்ல ஷிப்பு! வாழ்க!!
நீங்க ஆண்மீகப் பதிவரு இல்லையா CVR? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துளசி கோபால் said...
ஹைய்யோ..........:-))))))//

எதுக்கு டீச்சர் இந்த ஹைய்யோ?
நீங்க எஸ்கேப்! அதுக்கா? :-)

//எனக்கு இப்ப காபி குடிக்கணும். எங்கே அந்த வல்லியம்மா? :-)))//

ஒன்லி பார் கவுண்டர் வல்லியம்மா வில் கிவ் காபி + காபி! :-))

அபி அப்பா said...

இதுல வல்லியம்மா காபி குடுக்கும் போது காபிராகத்துல பாடவான்னு கேட்பது, கீதாம்மா சைக்கிள் கேப்ல சாண்ரோ ஓட்டுவது, சிபி வெட்டியை காட்டி கொடுப்பது, கேஆரெஸ் பத்தின எல்லாமே, ஜி.ரா பத்தின எல்லாம் என்னத்தன்னு சொல்வேன் என்னத்தன்னு சொல்வேன் எல்லாமே கிளாசிக்!

ஆனா எங்க தலை(வ)லிக்கு 6 மாசம் கொஞ்சம் குறைவோன்னு தோணுது கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க கவுந்தர் சார்!:-)))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//VSK said...
2, 3 பதிவா எழூஹ சமாச்சாரம் வெச்சுகிட்டு, போனாப் போவுதுன்னு குறைச்ச மாரி இருக்கு!//

கரெக்டா Diagnose பண்ணீங்க டாக்டர்! :-)

//சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது!//

டாக்டருக்கே வயிறு வலியா? :-))

//குட் ஜாப், ரவி!//

நன்றி SK!
உங்களுக்குப் பிடிக்கும்-னு எனக்குத் தெரியும்! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவி.கண்ணன் said...
முழுவதுமே கலக்கலாக இருக்கு கேஆர்எஸ்.//

நன்றி GK!

//சிரித்து சிரித்து வயறு புண்ணாச்சு//

ஒங்க டாக்டர் நண்பர் கிட்ட மருந்து வாங்கிக்குங்க! :-))
அவருக்கு இன்னும் நிறைய வைச்சிருக்கணும்! மிஸ்ஸாயிடிச்சி! :-)

//"யாம் பெற்ற சம்பளம் பெருக இவ்வையகம்"
எப்படிங்க ?//

எல்லாம் கவுண்டர் குடி கொண்டார்! அதான்! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// ILA(a)இளா said...
இப்படி மார்க் பண்ணி ரசிச்சதை சொல்லனும்னா எல்லாத்தையுமே சொல்லனும்//

ஹிஹி...நன்றி இளா!

//இன்னும் நிறைய பகுதி வரட்டும்//

டெவில் ஷோ...லாஸ்டு பார்ட் அடுத்த பார்ட்..

//சாப்பிடும் போது மட்டும் உங்க பதிவ படிக்கக்கூடாது, புரை யேறிக்குச்சுங்க :(( //

அச்சோ....
பாத்து இளா...
நல்லாத் தண்ணி அடிங்க!
சாரி...நல்லாத் தண்ணி குடிங்க!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ILA(a)இளா said...
வெட்டிக்கு வேறயா? கும்மறதுக்குன்கே ஒரு லாரி வழியா ஆளை ஏற்பாடு பண்ணிட்டு வரேன்//

சூப்பரு! ஆன்மீகம் பரப்பும் இளா வாழ்க வாழ்க!!
வில் வெயிட் பார் த லாரி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// நா.கண்ணன் said...
நம்மை இன்னும் காய்ச்சுவீர்ன்னு நினைச்சேன்//

பாகவதாபசாரம்! :-)))

//இன்னும் என்னோட controversial எழுத்தையெல்லாம் படிக்கவில்லை என்று தெரிகிறது :-) //

படிச்சிட்டேன் கண்ணன் சார்...
மேற்சொன்ன காரணம் தான்! அதான் நீங்க எஸ்கேப்பு ! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கப்பி பய said...
:)))))//

வெட்டி...நம்ம கப்பி என்ன பண்ணுறாரு?
சிரிப்பான்-ல குச்சியை முழுங்கிட்டாருப்பா :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெற்றி said...
ரவி,
எப்ப உங்களின் அடுத்த பதிவு வருமென ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பதிவு//

வெற்றி
அந்தக் கூத்தை ஏன் கேக்குறீங்க?
நேத்து தெரியாத்தனமா பப்ளிஷ் செய்து, தமிழ்மணத்தில் வேலை செய்யாமல்....
ஒரு டகால்டி வேலை செய்து,
அப்பறம் இன்னிக்கி இதொ வந்திருச்சு! :-))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
post super...//

தலைவா
டெவில் ஷோவின் டெவிலே!
கவுண்டரே சொன்னாப் போல இருக்கு! நன்றி!!

வல்லிசிம்ஹன் said...

pakkaththila rendu aNdaa niraiya kaappi redi. varavanga ellaam kudicchuttu, Alukku rendu
naarayanaa solllittup pokavum.

Sumathi. said...

ஹாய் ரவி,

சூப்ப்ப்ப்ப்ப்பர் காமடி போங்க..
இத இப்படியே அடுத்ததிலும் தொடருங்க... யாரையும் விட்டுடாதீங்க..முக்கியமா இந்த டிடி யப் பத்தியும் கொஞ்சம் போடுங்க....

Sumathi. said...

ஹாய் ரவி,

//காபி குடிக்கறச்சே காபி ராகத்துல பாடட்டுமா?//

காபி குடிக்கும் போது காபி ராகம் னா
அப்போ டீ குடிக்கும் போது என்ன ராகம்?

அம்பி காபி, டீ எதுவுமே குடிக்க மாட்டாராமே, பால் மட்டும் தானாம் அப்போ எந்த ராகம்? விளக்கம் ப்ளீஸ்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
//CVR said...//
உனக்கு இருக்குடி பெரிய ஆப்பு...//

CVR
எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க!
சொல்லறத சொல்லிப்புட்டேன்!

Chinna BOSS said...

கொஞ்சம் லேட்டு தாண்ணே நான்.. இருந்தாலும் வெல் கம் டூ சங்கம்ங்க .. அப்புறம் ஹேப்பி பர்த் டேங்கண்ணா..:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வெட்டிப்பயல் said...
ஏன் ஒரு ஜெனிலியா பந்தல், இலியானா பந்தல் அப்படினு வைக்கறது//

பாலாஜி
நீங்க இன்னும் ஜெனிலியாவை மறக்கலையா?
ஜெனிலியா, வெயிலில் மழை பெய்யுதுன்னு, ஜீ(z)யோட இல்ல ஐக்கியம் ஆயிட்டாங்கன்னு சேதி வந்துச்சு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//G.Ragavan said...
கலக்கல். நல்ல சிரிப்பூ பூந்தி தூவுன தயிர்வட களக்குகளக்குன்னு தீந்து போற மாதிரி..பதிவும் படக்குன்னு தீந்து போச்சு. :)//

ஜிரா, இன்னும் தீரலை ஜிரா
ஒன் மோர் ப்ளேட் தயிர் வடை பாக்கி இருக்கு!

அது சரி...
பதிவைப் படிச்சதில் இருந்து ஒங்கள ஜிரான்னு கூப்பிடலாமா இல்லை கொஞ்சம் கால் வாங்கி...
ஜீரா ன்னு கூப்புடலாமா-ன்னு யோசிச்சிக்குனு இருக்கேன்!

சிங்கம்ஸ், ஹெல்ப் ப்ளீஸ்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// வெங்கட்ராமன் said...
சூப்பரு. . . . .
கலக்கீட்டிங்க. . . . .//

நன்றி வெங்கட்ராமன்

//Anonymous said...
RAVI SIR,
VANAKKAM, it is really from u, unbelivable//

வாங்க ஸ்ரீனிவாசன் சார்!
நானே இப்பத் தான்,
நான் தான் இந்தப் பதிவை எழுதினேன்-னு நம்பத் தொடங்கி உள்ளேன் :-)

//anyhow i liked it,very nice.vazhga,vazhga.
ARANGAN ARULVANAGA.
Anbudan
k.srinivasan//

சங்கமே! கேட்டுக்கோங்க!
சங்கத்துக்கு அரங்கன் அருள்வானாக!

இராம்/Raam said...

KRS,

இதை படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சேன்.....:))


கலக்கீட்டிங்க... :)

நம்ம இளையதளபதிக்கு இன்னொரு டெவில் ஷோ'வா??? :))


போனதடவை கேட்க மறந்த கேள்விகளை இப்போ கவுண்டர கேட்க சொல்லுங்க.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கைப்புள்ள said...
சூப்பர் பதிவு கேஆர்எஸ். கலக்கிட்டீங்க. படிச்சி முடிக்கிற வரைக்கும் சிரிச்சிட்டே இருந்தேன்//

ஆகா...நன்றி தல!
அனைவரையும் சிரிக்க வைக்கும் தல-யே சிரிக்க வைக்கறது-ன்னு சும்மாவா :-)

//கவுண்டர் உங்க நாவில் குடி கொண்டிருக்காருங்கங்கோ. வாழ்த்துகள். அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்//

கொஞ்ச நாள் முன்னாடி வரை பெருமாள் குடி கொண்டிருந்ததா-ல்ல நினைச்சுக் கிட்டு இருந்தேன் :-)))
சும்மா...

கவுண்டர் குடி இருக்கார்னா, அவரிடம் வாடகை கேட்கணுமே! நீங்க கேக்க சொன்னதாச் சொல்லி கேக்கட்டுமா? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sridhar Venkat said...
அட... இத்தனை நகைச்சுவை அதுவும் யார் மனமும் கோனாமல் இயல்பாக எழுதியிருக்கிறீர்கள். :-))//

நன்றி ஸ்ரீதர்.
இந்தக் கலாய்த்தல்-னாலே முன்பெல்லாம் எனக்கு ரொம்ப பயமுங்க! நீங்க சொன்ன காரணம் தான் - "யார் மனமும் கோணாமல்"!

//மாதவி பந்தலுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன். நன்றி!//

ரொம்ப நாளா நானே சொல்லணும் நினைச்சேன்.
கவுண்டர் புண்ணியம் கட்டிக் கொண்டாரு! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
சூப்பர் கேஆரெஸ்....கலக்கறீங்க....//

நன்றி மெளலி சார்

//மதுரையம்பதி said...
மாதவிப்பந்தல்ன்னு ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில்ல ஒரு மண்டபம்/பிரகாரம் இருக்கே//

ஆமாம் இருக்குங்க.
மிகவும் அழகான வேலைப்பாடுகள், அதுவும் மேல் கூரை!

கண்ணன் வீடு போலவே தன் வீடும் அமைத்துக் கொண்ட கோதையின் காதல் அது! அதுவும் சேர்த்து தான் பதிவின் பெயருக்கு விளக்கம்!
(உந்து மத களிற்றன் - 18ஆம் திருப்பாவைப் பாடல்)

Geetha Sambasivam said...

நேத்துப் பூராக் காத்திருந்துட்டுப் பார்த்தா இன்னிக்கு வந்து அதுக்குள்ளே இவ்வளவு கமென்ட்ஸும் வந்திருக்கு, கலக்கிட்டீங்க போலே! இதிலெ அபி அப்பாவுக்குக் குறை, கைப்புள்ளைக்குக் குறை, நான் அண்டாவிலே உட்கார்ந்தது போதாதுன்னு இரண்டு பேரும் வேறே பெட்டிஷன் அனுப்பறாங்க! என்னத்தைச் சொல்லுவேன்? நேரிலே தலைவி, தலைவினு சொல்லிட்டு, இப்படி மறைவிலே வந்து ஏத்தி விடறாங்களே? :P

அப்புறம், நா.கண்ண்ணன் ரொம்பக் குறைப்படறாரே, அதையும் நிறைவேத்தி வைக்கலாமே? :))))))) இது என்னோட பெட்டிஷன், கவுண்டர் கிட்டேச் சொல்லுங்க, வேணும்னா அவர் எழுத்திலே இருந்து நிறைய உதாரணம் எடுத்து வச்சிருக்கேன், தரேன்! :))))))))

ஜெயஸ்ரீ said...

//டேய் பள்ளி கொண்ட மண்டையா,//

//அடேய், அடேய், எதுக்குடா ஆன்னா ஊன்னா ஒரு பாட்ட எடுத்து வுடறீங்க? //

//குடிக்கத் தண்ணி எல்லாம் கொடுக்காதீங்க ....வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க! அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்//

யப்பா, நக்கல் கொஞ்சம் நஞ்சம் இல்ல )))
Hilarious !
சிரிச்சு சிரிச்சு வயத்துவலி வந்தாச்சு.

முக்கியமாக

மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

அடுத்த பாகத்த சீக்கிரம் போடுங்க

இலவசக்கொத்தனார் said...

தல,

பதிவு சும்மா நச்சுன்னு இருந்தது. ஆனா அடிக்கடி ஏனோ அளவுக்கு மீறினா அழகுராஜாவும் அறுவைதான் அப்படின்னு மனசுக்குள்ள ஒரு பட்சி கூவிக்கிட்டே இருந்தது அதான் ஏன்னு தெரியலை.

உண்மையைச் சொல்லிட்டேம்பா. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோ.

enRenRum-anbudan.BALA said...

அன்பின் கண்ணபிரான்,
இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட சூப்பர் :)) எல்லாரையும் காய்ச்சி விட்டீர்கள், கவுண்டர்
வாயிலாக,
என்னை மட்டும் "ஆப்படித்து" விட்டீர்கள் போலும் ;-) வாழ்க, வளர்க !
எ.அ.பாலா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அபி அப்பா said...
என்னத்தன்னு சொல்வேன் என்னத்தன்னு சொல்வேன் எல்லாமே கிளாசிக்!

ஆனா எங்க தலை(வ)லிக்கு 6 மாசம் கொஞ்சம் குறைவோன்னு தோணுது//

அபி அப்பா, வாங்க!
உங்க வருத்தம் நல்லாப் புரியுதுங்க!
தலைவி கஷ்டப்பட்டாலும்
தொண்டர்கள் கஷ்டப்படக் கூடாது என்பது தானே கவுண்டர் கட்சியின் கொள்கை! :-)))
6 months - 66 months ஆ ஆக்கிடலாமா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
pakkaththila rendu aNdaa niraiya kaappi redi. varavanga ellaam kudicchuttu, Alukku rendu
naarayanaa solllittup pokavum.//

காபி ஊத்தி வல்லியம்மா புண்ணியம் தேடிக்கப் பாக்குறாங்க! கவுண்டரே உஷார்! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Sumathi. said...
ஹாய் ரவி,
விட்டுடாதீங்க..முக்கியமா இந்த டிடி யப் பத்தியும் கொஞ்சம் போடுங்க....//

சுதாக்கா? எனி ப்ராப்ளம்? கடன் ஏதாச்சும் வாங்கிட்டீங்களா சுமதி கிட்ட?? :-))

//காபி குடிக்கும் போது காபி ராகம் னா
அப்போ டீ குடிக்கும் போது என்ன ராகம்?//

நல்ல கேள்வி!
இசை இன்பம் guys...esp CVR...Come here please!

//அம்பி காபி, டீ எதுவுமே குடிக்க மாட்டாராமே, பால் மட்டும் தானாம் அப்போ எந்த ராகம்? விளக்கம் ப்ளீஸ்..//

ஓ அம்பி...வாட் இஸ் திஸ்! எங்க போனீங்க? ஒங்க மேல அவதூறு சொல்லறாங்களே! :-)
பாலுக்கு என்ன ராகம்? வாலி பால் ராகம்-னு ஏதாச்சும் இருக்கா?:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சின்னப் பொடியன் said...
கொஞ்சம் லேட்டு தாண்ணே நான்.. இருந்தாலும் வெல் கம் டூ சங்கம்ங்க .. அப்புறம் ஹேப்பி பர்த் டேங்கண்ணா..:) //

விவாஜி அண்ணே...
வாழ்த்துக்கு நன்றிண்ணே!

சிபிக்கு நயன்தராவோட சான்ஸ் கொடுக்கறீங்க!
எங்களுக்கு எல்லாம் இலியானா, ஜெனிலியா கூடப் போதும்ங்க! பாவனா கூட ஓக்கே தான்! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இராம் said...
KRS,
இதை படிச்சிட்டு சத்தம் போட்டு சிரிச்சேன்.....:))//

ராயலு
சத்தம் கேட்டுச்சே...சாட் வின்டோல! :-))

//நம்ம இளையதளபதிக்கு இன்னொரு டெவில் ஷோ'வா??? :))//

பதிவுலகிலேயே முதல் முறையாக ஒரே டெவிலுக்கு ரெண்டு டெவில் ஷோ! :-)))

//போனதடவை கேட்க மறந்த கேள்விகளை இப்போ கவுண்டர கேட்க சொல்லுங்க//

ஒங்க ஷோவை இதுக்காகவே நாலு மொறை படிச்சாச்சு :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கீதா சாம்பசிவம் said...
இதிலெ அபி அப்பாவுக்குக் குறை, கைப்புள்ளைக்குக் குறை, நான் அண்டாவிலே உட்கார்ந்தது போதாதுன்னு இரண்டு பேரும் வேறே பெட்டிஷன் அனுப்பறாங்க! //

ஒங்க நெலமைய நெனச்சா கொஞ்சம் பாவம் தான் கீதாம்மா! ஆல் பிக்காஸ் ஆப் திஸ் அம்பி, யூ நோ!

//அப்புறம், நா.கண்ண்ணன் ரொம்பக் குறைப்படறாரே, அதையும் நிறைவேத்தி வைக்கலாமே? :))))))) //

ஆகா...தலவி ஃபுல் பார்ம்ல இருக்காங்க போல! கண்ணன் சாரைக் கார்னர் பண்ணிற வேண்டியது தான்! நீங்க பிட்ட எடுத்துக் கொடுங்க கீதாம்மா! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜெயஸ்ரீ said...
யப்பா, நக்கல் கொஞ்சம் நஞ்சம் இல்ல )))//

நன்றி ஜெயஸ்ரீ!
கண் மூடி கவுண்டர் ஜபம் பண்ணா நக்கல் சித்திக்குது! நான் என்னத்த சொல்ல! :-))

//முக்கியமாக
மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
அடுத்த பாகத்த சீக்கிரம் போடுங்க//

நன்றி ஜெயஸ்ரீ. ஞாயிறு அன்று இறுதிப்பாகம் போட்டுடறேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
தல,
பதிவு சும்மா நச்சுன்னு இருந்தது//

நன்றி தல!

//ஆனா அடிக்கடி ஏனோ அளவுக்கு மீறினா அழகுராஜாவும் அறுவைதான் அப்படின்னு மனசுக்குள்ள ஒரு பட்சி கூவிக்கிட்டே இருந்தது அதான் ஏன்னு தெரியலை//

ஆகா...நீங்க கவுண்டர் எப்ப பாத்தாலும் டிவியல தெரியறதைப் பத்தி சொல்லுறீங்க! ஆனா இது ஆன்மீகக் கவுண்டர். ஆன்மீகக் கண்ணு கொண்டு தான் பாக்கோணும்! :-))

//உண்மையைச் சொல்லிட்டேம்பா. தப்பா இருந்தா மன்னிச்சுக்கோ//

ஹை...இது என்ன புதுக் கதை?
எப்போத்துல இருந்து எங்க கொத்தனார் உண்மை பேச ஆரம் பிச்சாரு! :-))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//enRenRum-anbudan.BALA said...
அன்பின் கண்ணபிரான்,
இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட சூப்பர் :)) எல்லாரையும் காய்ச்சி விட்டீர்கள், கவுண்டர்
வாயிலாக//

காய்ச்சின வேந்தன் ஒரு பெருமாள் இருக்காருல்ல பாலா? :-)))

//என்னை மட்டும் "ஆப்படித்து" விட்டீர்கள் போலும் ;-) //

ஆகா...நீங்க தானே கேட்டு வாங்கினீங்கா...தேசிகனையும் என்னையும் வுட்டுட்டீங்களே-ன்னு நேத்து தானே குறைப்பட்டுக்கினீங்க...அதான்! :-))))

குமரன் (Kumaran) said...

//காய்ச்சின வேந்தன் ஒரு பெருமாள் இருக்காருல்ல பாலா? :-)))
//

அவர் காய்ச்சின வேந்தன் இல்லை. காய்சின வேந்தன். :-)

குமரன் (Kumaran) said...

//கவுண்டர்: டேய், இதுல எதுடா உன் பேரு? அடியேனா? கண்ணபிரானா? ரவியா? சங்கரா? krsஆ?
//

ஆமாம் இரவிசங்கர். கவுண்டருக்கு மட்டுமில்லை எனக்கும் அதே ஐயம். உங்க பேரு என்ன?

//இன்னோரு தபா இப்படி தாறு மாறாத் தமிழ் பேசின, //

இராகவன், நானும் சில நேரம் இப்படி நெனைச்சுக்குவேன் . ;-)

//நான் கந்த வெற்பில் இருந்து, முருகப்பெருமான் பேசறேன்...இருங்க என் மனைவி உங்ககிட்ட பேசணுமாம்...(லைனில் தெய்வயானை அம்மையார்....! //

வள்ளி இல்லீங்களா? ஆகா. பாவம் இராகவன். கோவி, கண்ணன் - நீங்க கோவிச்சுக்காட்டி - பாவம் கோவி.கண்ணன். :-(

//வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க! அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்!
//

இதுக்கு மறுப்பே சொல்லலையே? உண்மையா இராகவன்? :-(

குமரன் (Kumaran) said...

//ஏன்...யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லேன் பார்ப்போம்! ஏதோ, இவனுங்க பேங்க் அக்கவுண்ட்ல இருந்து எடுத்து, அள்ளி வுடறா மாதிரி இல்ல, அள்ளி அள்ளி வுடறானுங்க!
//

ஐயா கவுண்டரே. சம்பளத்துல ஒரு பங்கு வையகத்துக்குன்னு ஒரு தனி பாங்க் அக்கவுண்டே இருக்குங்க சாமி. மாசா மாசம் நேரா அதுல சம்பளத்துல இருந்து பங்கு போயிடும். இந்தத் தப்பெல்லாம் செய்யுறதால தான் நரகத்துக்கு வந்து உங்களையெல்லாம் பாக்கவேண்டியிருக்கு போல! :-(

//ஒரு தும்மல் தும்மினா, ஒடனே ஒரு வலைப்பூ தொடங்கிடுவியா நீயி?
//

யாரு தும்முனாங்க? நீங்களா நானா? :-)

எனக்கு முன்னாடி தாறுமாறா தமிழ்ல பேசினாரே அவரு நான் தும்மக்கூடாதுன்னு சொல்லிட்டாருங்க. அதனால பாருங்க கணக்கு டீச்சரு கனகா எம்புட்டு குழம்பிப்போயிட்டாங்க. கனகா டீச்சர் கனகா டீச்சர். நீங்க அந்த 'ஜீ....ரா...'கிட்ட சொல்லி நான் தும்முறதுக்கு வழி செய்யுங்க. அப்பத் தானே உங்க கணக்கு பாடம் ஒழுங்கா நடத்த முடியும்.

//இதுக்கு மொதல்ல திருவள்ளுவர் கிட்ட பர்மிஷன் வாங்கினியா மேன் நீயி?
//

அது சரி! கவுண்டரே. நீங்க மட்டும் என்ன கலைவாணர்கிட்ட பெர்மிஷன் வாங்கித் தான் மத்தவய்ங்களை கலாய்க்கிறீங்களா?

//சிபி: அதாண்ணே ஒண்ணும் புரியாம, அண்டாவுல ஆறு மாசமாத் தவிச்சிகிட்டு இருக்கேன்!
//

:-)))

Anonymous said...

அனைவருக்கும் ஆப்பு வைக்கும் அண்ணா,உங்களிடம் frozen இட்லியைக் காண்பித்து மோசம் செய்த அந்த தம்பிக்கு ஆப்பு எப்பொழுது?
ஆப்பை வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அன்பு தங்கை
துர்கா :)

Anonymous said...

அனைவருக்கும் ஆப்பு வைக்கும் அண்ணா,உங்களிடம் frozen இட்லியைக் காண்பித்து மோசம் செய்த அந்த தம்பிக்கு ஆப்பு எப்பொழுது?
ஆப்பை வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அன்பு தங்கை
துர்கா :)

Anonymous said...

//:-))))))))))
வெட்டியின் டெவில் ஷோ பகுதியை ஆவலுடன் எதிர்நோக்கி
அன்புடன் ஆன் ஆர்பரிலிருந்து!! :-P //

உனக்கு இருக்குடி பெரிய ஆப்பு...
//


சிவிஆர் சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுத்த அண்ணா நீங்கள்தானா?ஆப்பு ரொம்ப பெரியதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.வெட்டி அண்ணாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் ;)அப்புறம் இன்னும் பெரியதாக ஆப்பு கிடைக்க வாய்ப்புக்கள் உண்டு :))

dubukudisciple said...

ravi sir!!!
kalakiteenga.. super ponga.. super comedy

ப்ரசன்னா said...

கலக்கல் KRS சூப்பரு.... நீங்க ஒரு ஆல் இன் ஆல் தான்.

சிவமுருகன் said...

தலைவா part-2 சூப்பர். அடுத்து எப்போ?

அதென்னெங்க கவுண்டர் தன்னோட லெவல் விட்டு கீழே வர்ர மாதிரி தெரியுது?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துர்கா|thurgah said...
உங்களிடம் frozen இட்லியைக் காண்பித்து மோசம் செய்த அந்த தம்பிக்கு ஆப்பு எப்பொழுது?//

பாவம் துர்கா...தம்பி ஒரு குழந்தை மாதிரி...விட்டுறலாமா? :-)

//ஆப்பை வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் அன்பு தங்கை
துர்கா :)//

சரி...தங்கையைக் காக்க வைக்கக்கூடாது! தம்பியா தங்கையான்னு பாத்தா தங்கை தான்! :-)))
அடுத்த வாரம் வைச்சிக்கலாம் கச்சேரி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// dubukudisciple said...
ravi sir!!!
kalakiteenga.. super ponga.. super comedy//

அச்சோ சுதாக்கா
என்ன இது சார் மோர் நீர் மோர் எல்லாம்! :-)
ரவின்னு தான்னே கூப்பிடுவீங்க....
ஒங்கள ஆன்மீகப் பதிவர் லிஸ்டுல சேக்கலைன்னு கோபமா? :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ப்ரசன்னா said...
கலக்கல் KRS சூப்பரு.... நீங்க ஒரு ஆல் இன் ஆல் தான்//

ப்ரசன்னா...ஆல் இன் ஆலா...ஆளு வச்சி அடிக்கப் போறாங்க என்னைய! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிவமுருகன் said...
தலைவா part-2 சூப்பர். அடுத்து எப்போ?//

இறுதிப் பாகம் சிவா...உங்க டயம் திங்கள் காலையில் போட்டுடறேன்

//அதென்னெங்க கவுண்டர் தன்னோட லெவல் விட்டு கீழே வர்ர மாதிரி தெரியுது?//

ஆமாங்க...தொடரின் முடிவுக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு சிவா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்

டெவில் ஷோவுக்குள் ஒரு டெவில் ஷோவா? சூப்பர்!

//அவர் காய்ச்சின வேந்தன் இல்லை. காய்சின வேந்தன். :-)//

:-)) சும்மா டமாஷுக்கு ஒர் இச் கொடுத்துட்டேன்...பெருமாளுக்கு!

//வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க! அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்!
//
இதுக்கு மறுப்பே சொல்லலையே? உண்மையா இராகவன்? :-( //

சேச்சே...நம்ம ஜிரா அப்படியா? துளசி தீர்த்தம்-னா அவருக்கு உயிராச்சே...கவுண்டர் தான் கலாய்ப்புக்கு க்ளைமாக்ஸ் மாதிரி ஒரு டயலாக் வுட்டுட்டாரு...அப்ப்ய்றம் ரொம்ப ஃபீல் பண்ணாரு!

//ஐயா கவுண்டரே. சம்பளத்துல ஒரு பங்கு வையகத்துக்குன்னு ஒரு தனி பாங்க் அக்கவுண்டே இருக்குங்க சாமி//

மிகவும் நல்ல பணி குமரன்! வாழ்க!!!

//கனகா டீச்சர் கனகா டீச்சர். நீங்க அந்த 'ஜீ....ரா...'கிட்ட சொல்லி நான் தும்முறதுக்கு வழி செய்யுங்க//

அச்சோ...குமரன் கூட பாருங்க தெரிஞ்சி வைச்சிருக்காரு...யார் சொன்னா ஜிரா தட்டாம செய்வாருன்னு! கனகா சொன்னா ஜிரா ஓடனே செய்ய மாட்டாரா என்ன! :-)))

அரை பிளேடு said...

ஆமா தலீவா... ஆன்மிக பணியை ஆத்தியவர்கள் நரகம் ஏன்பா போறாங்க. ஆன்மிகம்ன்ற பேர்ல மொக்க போட்டதுக்கு தண்டனையா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அரை பிளேடு said...
ஆமா தலீவா... ஆன்மிக பணியை ஆத்தியவர்கள் நரகம் ஏன்பா போறாங்க. ஆன்மிகம்ன்ற பேர்ல மொக்க போட்டதுக்கு தண்டனையா.//

அரை பிளேடு...எங்கப்பா போன நீயி! ஒன்னைக் காணாம தமிழ்மணமே தவிச்சு தான் போச்சி.
மீள் நல் வரவுப்பா...
ஆன்மீக டீ ஆத்தியவங்க நரகம் போன சீக்ரெட்டு இறுதிப் பாகத்துல தெரிஞ்சிடும் பா! :-)

Sud Gopal said...

படித்தேன்..ரசித்தேன் :)

ஷைலஜா said...

ரவி கொஞ்சம் தாமதமாத்தான் இதைபடிச்சேன் ச்சே முதல்லயே படிச்சிருக்கணும்..ஆமா ஆன்மீகம்தான் அமக்களமா எழுதுவீங்கன்னா காமெடியுமா இப்படிக் கலக்குவீங்க!!கவுண்டர் உங்க மாதவிப்பந்தலைக்கிண்டல் செய்வதிலிருந்து கடைசிவரைக்கும் காமெடி செமகலக்கல்! சிரிச்சி ரசிச்சிப்படிச்சேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சுதர்சன்.கோபால் said...
படித்தேன்..ரசித்தேன் :)//

நன்றி சுதர்சன்.கோபால்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
ஆன்மீகம்தான் அமக்களமா எழுதுவீங்கன்னா காமெடியுமா இப்படிக் கலக்குவீங்க!!//

எல்லாம் சங்கத்தின் மகிமை தான் ஷைலஜா!

//கவுண்டர் உங்க மாதவிப்பந்தலைக்கிண்டல் செய்வதிலிருந்து கடைசிவரைக்கும் காமெடி செமகலக்கல்! சிரிச்சி ரசிச்சிப் படிச்சேன்.//

உங்களையும் ஆட்டத்துல சேத்திருக்கணும்!
எஸ்கேப் ஆயிட்டீங்க :-))