Thursday, June 19, 2008

கேனையனைக் காதலிக்கிற அப்பாவிப் பெண்களுக்கு மட்டும்..!


பசங்களா இன்னிக்கும் எட்டிப்பார்க்காதீங்க..
நம்ம பொண்ணுங்க எல்லாம் கராத்தே,குங்பூ கத்துட்டிருக்காங்க.
அப்புறம் 'தசாவதாரம்' சிட்டி பாபு மாதிரி சீன்ல சும்மா எட்டிப் பார்த்தே நொந்துடுவீங்க..

பொண்ணுங்களா வரிசையா வாங்க..காதலனையும் கூட்டிட்டே வந்துருக்கீங்களா?
அப்போ அவனுங்களையெல்லாம் வாசலோட செருப்பைப் போலக் கழட்டிட்டு வாத்தியார் நடத்துற கிளாஸுக்கு வாங்க.

இன்னிக்கு நம்ம பாடம் என்னன்னா காதல்ல மாட்டிக்கிட்டுத் தவிக்குற பொண்ணுங்களுக்கு அவங்க காதலன் உண்மையானவனான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னும் நட்டுக் கழண்ட கேஸ்னா எப்படிக் கழட்டி விடுறதுன்னும் பார்க்கலாம்.

1.
அன்னிக்கு சொன்னதையெல்லாம் தாண்டி அவன் காதல்ல நீங்க விழுந்துட்டீங்கன்னு வைங்க..உங்க நாலாவது சந்திப்பிலேயே ஒரு துளிக் கண்ணீரை கண்ல காட்டுவான்..அவனைக் கேட்டா ரகசியமா காதல் அஸ்திவாரக் கொங்க்றீட்டை பலப்படுத்துறேன்பான்..உங்கக்கிட்ட காரணம் சொல்ல மாட்டான்..அப்பவாவது சூதானமா இருந்துக்க தாயி..

2..தாடி,மீசைல ஆயிரம் அலங்காரம் பண்ணிப்பான்..யாராவது கேட்டா லேட்டஸ்ட்ம்பான்..நம்பிடாதீங்க..அதுல போடுற ஒவ்வொரு அலங்காரமும் உங்க மனசைக் கலைக்கத்தான்.

3.உங்கக் கூட ரோட்ல,பீச்ல கடலை போட்டுட்டு இருக்குறப்ப எவனாவது ஒட்டடைக்குச்சிக்கு ட்ரஸ் போட்டுவிட்ட மாதிரி நோஞ்சானா ஒருத்தன் மாட்டிட்டான்னு வச்சிக்குங்க..தொலைஞ்சது அவன் கதி...ஏதோ நாலஞ்சு 'குருவி' விஜய்யும்,ஒரே ஒரு விஜயக்காந்தும் அவனுக்குள்ள படுத்துட்டிருந்த மாதிரியும் அந்த நோஞ்சான் பையன் அதை உசுப்பி எழுப்பிவிட்ட மாதிரியும் வலிய சண்டைக்குப் போவான் பாருங்க..அது அவன் வீரத்தை உங்கக்கிட்டக் காட்டத்தான்..பார்த்து மயங்கிடாதீங்க..

4.பையன் ரெண்டு,மூணு செல்போன் வச்சுப்பான்..ரிங்க் டோனா ஏதாவது காதல் பாடல் வச்சிட்டிருப்பான்.. தன்னோட சுத்துவட்டாரத்துக்குக் காசு செலவழிச்சு உங்ககூட இருக்குற நேரமாப் பார்த்து ஏதாவது லவ் மேசேஜ் அனுப்பச் சொல்லுவான்..உங்ககிட்ட அதைக் காட்டி பக்கத்து வீட்டுப் பரிமளா லயிருந்து பூ விக்குற மல்லிகா வரை அவனை காதலிக்கச் சொல்லிக் கெஞ்சுறதாவும் ஆனா அவன் மனசு உங்களையே சுத்திட்டு வர்றதாவும் கதை விடுவான்..நீங்களும் உண்மையின்னு நம்பித் தொலைச்சீங்கன்னு வச்சிக்குங்க..அப்புறம் பாலக்காட்டுப் பக்கத்துல அப்பாவி ராணி நீங்க தான்.

5.அப்புறம் தூரத்துல இருந்து பார்த்தா உங்க பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து கூடிக் கும்மியடிச்சிட்டிருக்காங்க...அதுல அந்தப் பையனும் இருக்கான்..'என்னடா நம்ம பின்னால அலையுற ஆளு இந்தக் கருமாந்திரம் புடிச்சவளுக கூட இம்புட்டுக் கடலை போடுது'ன்னு நீங்க பக்கத்துல போனா பையன் பட இடைவேளை ரஜினி மாதிரி சைலண்ட் ஆகிட்டான்னு வச்சிக்குங்க..அப்ப உங்க மூளைல அலாரம் அடிக்கணும்..உடனே முழிச்சுக்கணும்...

6.அப்புறம் சின்னச் சின்ன நோய்நொடியெல்லாம் சொல்லுவான்..ஒருநாளைக்கு கால்வலிம்பான்..இன்னொரு நாளைக்கு கண் வலிம்பான்..நீங்களும் பரிதாபப்பட்டு அவசர மருத்துவராகி 'அச்சச்சோ'ன்னு அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு வச்சிக்குங்க..அவன் மனசுக்குள்ள 1000 பிரபுதேவாக்கள் டான்ஸ் ஆட ஆரம்பிப்பாங்க..நீங்கதான் ஏமாறாம இருக்கனும்.

7.ஆபிஸ் விட்டு வர்ரப்போ ஏதோ எவரெஸ்டையே சரிச்சிட்டு வர்ற மாதிரி டயர்ட் ஷோ காட்டுவான்.பரிதாபப்படாதிங்க..அந்த ஆபிஸ்ல எந்த ஆணியும் பிடுங்கல..சும்மா உங்களை பீல் பண்ண வைக்கத்தான்.

8.ஒரு நாள் திடீர்னு பார்த்தீங்கன்னா அவன் கையில ஒரு தாயத்து நூல் இருக்கும்..நீங்க உடனே உலக அழகிப்பட்டம் ஜெயிச்ச ரேஞ்சுக்கு ஆச்சரியமாகி என்னன்னு கேட்டீங்கன்னா நம்ம காதல் நிறைவேறணும்னு கருப்பசாமி குத்தகைதாரருக்கு நேந்துக்கிட்டு கட்டினேன்னு கதை கதையா விடுவான்..நீங்களும் ராமராஜன் பட ஹீரோயின் மாதிரி செண்டிமெண்டா அப்செட் ஆகிடுவீங்க..சாக்கிரதை..

9.நீங்களும் லவ் பண்ண ஆரம்பிச்சுக் கொஞ்சநாள் தான் ஆகியிருக்கும்.அதுக்குள்ள 'காதல்'பரத்,சந்தியா மாதிரி எங்காவது தூர ஒரு இடத்திற்கு பயணம் போகக் கூப்பிடுறான்னு வைங்க..உடனே அவனைக் கழட்டி விட்டுடுங்க..அவன் மோசமான ஆளு..இல்லேன்னா 'காதல்' கிளைமேக்ஸ் பரத் மாதிரி நீங்கதான் 'ஞே ஞே' சொல்லிட்டுத் திரிய வேண்டி வரும்..

10.பையன் ரொம்ப நல்லவனாயிருக்கானே..கோயில்,குளத்துக்கெல்லாம் கூப்பிடுறானேன்னு உடனே போயிடாதீங்க..சாமி முன்னாடி நிக்க வச்சு ஏதாவது செண்டிமெண்டாப் போட்டுத்தாக்கி தாலி கட்டிடுவான்..கவனமாயிருங்க.

11.புது மொபைல்,கேமரா வாங்கியிருக்கேன்,பாருடா செல்லம்னு நீட்டினான்னா உடனே வாங்கி முதல்ல சுவிட்ச் ஆப் பண்ணிடுங்க..ஏதாச்சும் வீடியோ பண்ணிட்டு அப்புறம் வில்லங்கம் பண்ணிடுவான்.

12.ஏதோ தாய்க்குலத்தை மதிக்கிறேன்,குழந்தைகளை நேசிக்குறேன்,காத்துல பறக்குறேன்,வௌவாலா மெதக்குறேன்னு ரொம்பத்தான் கதையள்ளி விடுவான் பாருங்க.எதையுமே கண்டுக்காதீங்க..அத்தனையும் உங்களை ஒப்பேத்தத்தான்..மனசுக்குள்ள அப்படியொண்ணும் கிடையாது..

13.சாப்பாட்டு விஷயத்துல நீங்க எப்படின்னு கேட்டுட்டான்னு வைங்க..நீங்க சைவம்னா அவனும் சைவம்பான்.ஏமாந்துடாதீங்க..கல்யாணத்துக்கப்புறம் நண்டுக்கறி கேட்டு உங்களை சீன ஹோட்டல் ரேன்ஜுக்கு நடத்துவான்..

14.நீங்க நாலஞ்சு இன்சுக்கு மேக்கப் பண்ணிக்கிறதோ,ஸ்டூல்ல நிக்குற மாதிரி செருப்புப் போட்டுக்குறதோ அவனுக்குப் பிடிக்காத மாதிரி காட்டிக்குவான்.எல்லாம் 'ஒரு சூப்பர் பிகரு,சப்பைப் பயலுக்கு விழுந்துட்டானே'ன்னு எவனாவது சொல்லிடக்கூடாதுங்குற பயத்துலயும்,கல்யாணத்துக்கப்புறம் அந்த செலவெல்லாம் அவனோட தலையில விழுமுங்குற பயத்துலயும் தான்.
நீங்க கண்டுக்காமக் கழட்டி விட்டுடுங்க ஜூலியா ராபர்ட்ஸ்களா.

15.நுனி நாக்குல இங்கிலீஷ்ல பேசுவான்..'ஆக்சுவலி..யூ சீ'ன்னு ஏதோ பி.பி.சி செய்தி வாசிக்கிற மாதிரி பிலிம் காட்டுவான்.கண்டுக்காதீங்க..அப்புறம் உங்க காதலைத்தான் செய்தியாக்கிடுவான்.

16.சமயம் பார்த்து உங்களை ரொம்ப வர்ணிப்பான்..'ஏய்..உனக்கு மாடலிங் பண்ணலாம்'ல..''நீ மட்டும் பாலிவுட்டுக்குப் போயிட்டே தீபிகா படுகோனேயெல்லாம் ஓடிடுவாங்க'ன்னு உங்க தலையில திருமதி.அபிஷேக் பச்சனைக் குடம் குடமா வைப்பான்..நீங்க உடனே உச்சி குளிர்ந்து ஏமாந்துடாதீங்க.

17.அப்புறம் உங்களைக் கைக்குழந்தையா நெனச்சு ரொம்ப அதிகமாச் செல்லம் கொஞ்சுறவனையோ,யாராச்சும் அழகான சின்னக் குழந்தையோட போட்டோ காட்டி அது


அவன் தான்னு சொல்றவனையோ விரட்டியடிச்சிடுங்க..அவன் மனசுல வில்லங்கமிருக்கு கண்ணுகளா.

18.சாதாரணமா ஹோட்டல்லயோ,பஸ்ல உங்க கூட உக்காந்திட்டிருக்கும் போதோ ஏதோ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்த இசையமைப்பாளர் இவர்தாங்குற நெனப்புல தாளம் தட்டிட்டே இருந்தான்னு வச்சிக்குங்க..உடனே விலகிடுங்க..இல்லேன்னா பின்னாடி உங்களை பஞ்சப்பாட்டுப் பாட வச்சிருவான்.

19.அவனை விட்டு நீங்க பிரிஞ்சு போயிட்டீங்கன்னா விஷம் குடிச்சிடுவேன்னு பையில போத்தலோட அலையிறவனை உடனே கை விட்டுடுங்க..அது சும்மா உங்களை பயங்காட்டுறதுக்கு.போத்தலுக்குள்ள தண்ணி தான் இருக்கும்.

20.நீங்க கொடுக்குற மிஸ்ட் கோலுக்கு உடனே அவன் கோல் பண்ணலைன்னாலோ,அவன் செலவுல ஷாப்பிங் கூட்டிட்டுப் போகலைன்னாலோ,உங்க நாய்க்குட்டி பேர்த் டே க்கு ஞாபகமா அவன் வாழ்த்துச் சொல்லலைன்னாலோ,புது சினிமாவுக்கு டிக்கட் ரிஸர்வ் பண்ணலைன்னாலோ உடனே கழட்டிவிட்டுடுங்க..இப்படிப்பட்ட கஞ்சப் பையன் உங்களுக்கு எதுக்கு?

அட ...எதுக்குங்க இப்படியெல்லோரும் வந்து என் கால்ல விழுறீங்க..எங்கிட்டாவது என்னை மாதிரி ஒரு அப்பாவிப்பையனப் பார்த்துக் கட்டிக்கிட்டு,சீரியல் பார்க்காமச் சந்தோஷமா இருங்க பொண்ணுங்களா.. :)













(அப்புறம் நான் இன்னிக்கு ஒரு உதாரணத்துக்காக இங்கே காட்டியிருக்குற நம்ம பதிவுலக ஹீரோக்களை மனசுல சுமந்துட்டுத் திரியாதீங்க..அவிங்களுக்கு ஏற்கெனவே கால்கட்டுப் போட்டாச்சு )

77 comments:

M.Rishan Shareef said...

:P

Thamiz Priyan said...

அம்புட்டு ரகசியத்தையும் சொல்லிப்புட்டா நாங்க என்னத்த சைட் அடிக்க....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((((((((

தமிழன்-கறுப்பி... said...

ஹஹஹாஹாஹாஹ:))

தமிழன்-கறுப்பி... said...

அப்பாடா இந்தப்பதிவுல நமீதாவோட பெயர் வரலை...

தமிழன்-கறுப்பி... said...

ஏகப்பட்ட உள்குத்துகள் பதிவுல இருக்கு... பசங்களா உஷார்...

மங்களூர் சிவா said...

/

பசங்களா இன்னிக்கும் எட்டிப்பார்க்காதீங்க..
/

அப்ப டைரக்டா பாக்கலாமா????

மங்களூர் சிவா said...

/

இன்னிக்கு நம்ம பாடம் என்னன்னா காதல்ல மாட்டிக்கிட்டுத் தவிக்குற பொண்ணுங்களுக்கு அவங்க காதலன் உண்மையானவனான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னும் நட்டுக் கழண்ட கேஸ்னா எப்படிக் கழட்டி விடுறதுன்னும் பார்க்கலாம்.
/

கழட்டி விடறது எப்படின்னு சொல்லி வேற குடுக்கணுமா????

பொறக்கறப்பவே ஜீன்லயே எழுதி இருக்கும்யா அதெல்லாம்

:))

தமிழன்-கறுப்பி... said...

எலே அப்பு நீ எம்புட்டுத்தான் பதிவு போட்டு படம் காட்டினாலும் பொண்ணுங்க உஷாராத்தான் இருக்குதுக-
அதுக முதல்லல கழட்டி விடுறதே... இந்த மாதிரி பயலுகளைத்தானப்பு :))

மங்களூர் சிவா said...

/
தாடி,மீசைல ஆயிரம் அலங்காரம் பண்ணிப்பான்.
/

தாடி மீசைல வெறும் ஆயிரம் அலங்காரமா??????

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பையன் ரொம்ப நல்லவனாயிருக்கானே..கோயில்,குளத்துக்கெல்லாம் கூப்பிடுறானேன்னு உடனே போயிடாதீங்க..சாமி முன்னாடி நிக்க வச்சு ஏதாவது செண்டிமெண்டாப் போட்டுத்தாக்கி தாலி கட்டிடுவான்..கவனமாயிருங்க//

ஐ வான்டு டு நோ ஹூ இஸ் திஸ்?
:-)

மங்களூர் சிவா said...

/
ஏதோ நாலஞ்சு 'குருவி' விஜய்யும்,ஒரே ஒரு விஜயக்காந்தும் அவனுக்குள்ள படுத்துட்டிருந்த மாதிரியும
/

நாலஞ்சு குருவி விஜய்யாஆஆஆ?? அத பாத்தா தாங்குமா அந்த பிகரு!?!?

மங்களூர் சிவா said...

/
ஆபிஸ் விட்டு வர்ரப்போ ஏதோ எவரெஸ்டையே சரிச்சிட்டு வர்ற மாதிரி டயர்ட் ஷோ காட்டுவான்.பரிதாபப்படாதிங்க..அந்த ஆபிஸ்ல எந்த ஆணியும் பிடுங்கல..சும்மா உங்களை பீல் பண்ண வைக்கத்தான்.
/

உனக்கென்னப்பா தெரியும் 6000 லைன் சாட் பண்ணி, 100 ஸ்க்ராப் போட்டு, 100 கமெண்ட் , அந்த கமெண்ட்டுக்கு பாலோ அப் கமெண்ட் எல்லாம் போட்டுப்பாரு அப்ப தெரியும் எவ்ளொ டயர்ட் ஆகுறோம்னு
:)

thamizhparavai said...

/என்னை மாதிரி ஒரு அப்பாவிப்பையனப் பார்த்துக் கட்டிக்கிட்டு,சீரியல் பார்க்காமச் சந்தோஷமா இருங்க பொண்ணுங்களா.. :)/
மாப்பு.. கடைசில உன்கிட்ட படிக்க வந்த தாய்க்குலங்களுக்கு வைச்சிட்டியே ஆப்பு...

சரி.. என்னோட பதிவை தமிழ்மணத்துல சேர்க்கறதுல ரொம்ப கஷ்ட பட்டிட்டிருக்கேன் (பதிவுபட்டை பிரச்சினை)..
அப்புறம்தான் நினைச்சேன்..அங்க சேர்க்கிறதும் ஒண்ணுதான்.. சங்க சிங்கங்கள்கிட்ட சேர்க்கிறதும் ஒண்ணுதான்னு..
புது பதிவர் நானு..குறைகள் இருப்பின் சுட்டியோ அல்லது குட்டியோ காட்டவும்...
முகவரி: www.thamizhparavai.blogspot.com

மங்களூர் சிவா said...

/
'காதல்'பரத்,சந்தியா மாதிரி எங்காவது தூர ஒரு இடத்திற்கு பயணம் போகக் கூப்பிடுறான்னு வைங்க..உடனே அவனைக் கழட்டி விட்டுடுங்க..அவன் மோசமான ஆளு..இல்லேன்னா 'காதல்' கிளைமேக்ஸ் பரத் மாதிரி நீங்கதான் 'ஞே ஞே' சொல்லிட்டுத் திரிய வேண்டி வரும்..

/

அடப்பாவி மெயின் மேட்டர்லயே கை வெச்சிட்டியேய்யா அப்படின்னு தமிழ் கூறும் நல்லுலகம் உன்னை வைய்யும்.

நல்லா இருப்பா ராசா!!

:)))

மங்களூர் சிவா said...

/
யாராச்சும் அழகான சின்னக் குழந்தையோட போட்டோ காட்டி அது

அவன் தான்னு சொல்றவனையோ விரட்டியடிச்சிடுங்க..அவன் மனசுல வில்லங்கமிருக்கு கண்ணுகளா.
/

ஏகப்பட்ட உள், வெளி நடுகுத்தெல்லாம் இருக்கு போல இருக்கே இதுல!!!!
:)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சாதாரணமா ஹோட்டல்லயோ,பஸ்ல உங்க கூட உக்காந்திட்டிருக்கும் போதோ ஏதோ ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்த இசையமைப்பாளர் இவர்தாங்குற நெனப்புல தாளம் தட்டிட்டே இருந்தான்னு வச்சிக்குங்க..உடனே விலகிடுங்க..இல்லேன்னா பின்னாடி உங்களை பஞ்சப்பாட்டுப் பாட வச்சிருவான்.//

அடப்பாவி மக்கா!
எங்க காபி அண்ணாச்சி ரேஞ்சு தெரியாம பேசாத! அவர்
வியன்னாவின் விஸ்வநாதன்
இங்கிலாந்தின் இளையராஜா
ரஷ்யாவின் ரகுமான்
ஹாலந்தின் ஹாரிஸ்
யூகோஸ்லாவியாவின் யுவன்
யுவனுக்கு யுவன்
எமனுக்கு எமன்!
கானாவை அறிஞ்சிக்கோ, தெரிஞ்சிக்கோ, புரிஞ்சிக்கோ! :-)

இதனால் சகலவிதமான அப்பாவி மாணவிகளுக்கும் வகுப்பில் சொல்வது என்னவென்றால்
கானாவைத் தாராளமாகக் காதலியுங்கள்! காதலியுங்கள்! காதலியுங்கள்! :-)

மங்களூர் சிவா said...

/
நீங்க கொடுக்குற மிஸ்ட் கோலுக்கு உடனே அவன் கோல் பண்ணலைன்னாலோ,
/
:))))))))))

/
அவன் செலவுல ஷாப்பிங் கூட்டிட்டுப் போகலைன்னாலோ,
/

/
உங்க நாய்க்குட்டி பேர்த் டே க்கு ஞாபகமா அவன் வாழ்த்துச் சொல்லலைன்னாலோ,
/
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
/

புது சினிமாவுக்கு டிக்கட் ரிஸர்வ் பண்ணலைன்னாலோ உடனே கழட்டிவிட்டுடுங்க..இப்படிப்பட்ட கஞ்சப் பையன் உங்களுக்கு எதுக்கு?

/
:))))))))))))

மொத்தமா ஆப்பு வெச்சிட்டியே பொண்ணுங்களுக்கு ரிசானு!!!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சாப்பாட்டு விஷயத்துல நீங்க எப்படின்னு கேட்டுட்டான்னு வைங்க..நீங்க சைவம்னா அவனும் சைவம்பான்.ஏமாந்துடாதீங்க..கல்யாணத்துக்கப்புறம் நண்டுக்கறி கேட்டு உங்களை சீன ஹோட்டல் ரேன்ஜுக்கு நடத்துவான்//

அம்பி!
இங்கன ஒரு ப்ளேட் நண்டு கறி பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்!

thamizhparavai said...

எப்போ கேயாரெஸ் ,கானா ப்ரபாவுக்கு கொ.ப.செ. ஆனாரு..?!இதில ஏதோ உள்குத்து இருக்குன்னு நினைக்கிறேன்..
ப்ரபா... எச்சரிக்கையாக இருக்கவும்...

இவண்..
பாவனா பண்பாட்டுக்கழக தோழருக்காக பரிந்துரைக்கும் பறவை...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அட ...எதுக்குங்க இப்படியெல்லோரும் வந்து என் கால்ல விழுறீங்க//

கால்-ல எதுக்கு விழுவாங்க?
கால்-ல கட்டு போடத் தான்!:-)

//நம்ம பதிவுலக ஹீரோக்களை மனசுல சுமந்துட்டுத் திரியாதீங்க..அவிங்களுக்கு ஏற்கெனவே கால்கட்டுப் போட்டாச்சு//

அப்போ ரிசானுக்குக் கைகட்டு போட்டுற வேண்டியது தான்! :-)
கையில என்னப்பா கட்டு-ன்னு நாளைக்கு ரிசானை மறக்காம அன்பா விசாரிங்க மக்கா!

மீதி விசாரிப்பை அன்பே உருவான நம்ம மங்களூர் சிவா பாத்துக்கிடுவாரு! வர்ட்ட்ட்ட்டா?

Sanjai Gandhi said...

//யாராச்சும் அழகான சின்னக் குழந்தையோட போட்டோ காட்டி//

ஐ லை இட் மா :P.. பெரிய அண்ணன் ரிஷான் சொன்னாலும் சொல்லாட்டியும் அது நான் தான் மக்களே.. சின்ன வயசுல :P...

Sanjai Gandhi said...

//அப்புறம் நான் இன்னிக்கு ஒரு உதாரணத்துக்காக இங்கே காட்டியிருக்குற நம்ம பதிவுலக ஹீரோக்களை மனசுல சுமந்துட்டுத் திரியாதீங்க..அவிங்களுக்கு ஏற்கெனவே கால்கட்டுப் போட்டாச்சு//

அடப்பாவி.. ஏற்கனவே ஊர்ல ஒரு பயலும் பொண்ணு குடுக்க மாட்டேன்றாங்க.. இதுல இப்படி வேற புரளிய கெலப்பி மொத்த வாழ்க்கையும் வீணாக்க பாக்கறியே.. ஹ்ம்ம்ம். நல்லா இருங்கண்ணா :(

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா...said...
/////
இன்னிக்கு நம்ம பாடம் என்னன்னா காதல்ல மாட்டிக்கிட்டுத் தவிக்குற பொண்ணுங்களுக்கு அவங்க காதலன் உண்மையானவனான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னும் நட்டுக் கழண்ட கேஸ்னா எப்படிக் கழட்டி விடுறதுன்னும் பார்க்கலாம்.
/

கழட்டி விடறது எப்படின்னு சொல்லி வேற குடுக்கணுமா????

பொறக்கறப்பவே ஜீன்லயே எழுதி இருக்கும்யா அதெல்லாம்

:))////


என்னுடைய வன்மையான கண்டனங்கள்...

தமிழன்-கறுப்பி... said...

மங்களூர் சிவா...said..

///யாராச்சும் அழகான சின்னக் குழந்தையோட போட்டோ காட்டி அது

அவன் தான்னு சொல்றவனையோ விரட்டியடிச்சிடுங்க..அவன் மனசுல வில்லங்கமிருக்கு கண்ணுகளா.
/

ஏகப்பட்ட உள், வெளி நடுகுத்தெல்லாம் இருக்கு போல இருக்கே இதுல!!!!
:)))///

ரிப்பீட்டு...

Anonymous said...

///நீங்க கொடுக்குற மிஸ்ட் கோலுக்கு உடனே அவன் கோல் பண்ணலைன்னாலோ,அவன் செலவுல ஷாப்பிங் கூட்டிட்டுப் போகலைன்னாலோ,உங்க நாய்க்குட்டி பேர்த் டே க்கு ஞாபகமா அவன் வாழ்த்துச் சொல்லலைன்னாலோ,புது சினிமாவுக்கு டிக்கட் ரிஸர்வ் பண்ணலைன்னாலோ உடனே கழட்டிவிட்டுடுங்க..இப்படிப்பட்ட கஞ்சப் பையன் உங்களுக்கு எதுக்கு?///

ஹேய் ரிச்சு யு நோட்டி...நீ நம்ப பொண்ணுங்களை கிண்டல் பண்ணுது..

தமிழன்-கறுப்பி... said...

///நீங்க கொடுக்குற மிஸ்ட் கோலுக்கு உடனே அவன் கோல் பண்ணலைன்னாலோ,அவன் செலவுல ஷாப்பிங் கூட்டிட்டுப் போகலைன்னாலோ,உங்க நாய்க்குட்டி பேர்த் டே க்கு ஞாபகமா அவன் வாழ்த்துச் சொல்லலைன்னாலோ,புது சினிமாவுக்கு டிக்கட் ரிஸர்வ் பண்ணலைன்னாலோ உடனே கழட்டிவிட்டுடுங்க..இப்படிப்பட்ட கஞ்சப் பையன் உங்களுக்கு எதுக்கு?///

இது தான் டாப்பு...:))

எப்படிண்ணா இவ்வளவு தைரியமா சொந்த செலவுல சூடு போட்டுக்கறிங்க...

rapp said...

ஆஹா நெம்ப விவரமான வாத்தியாராத்தாங்க இருக்கீங்க!
//தாடி,மீசைல ஆயிரம் அலங்காரம் பண்ணிப்பான்..யாராவது கேட்டா லேட்டஸ்ட்ம்பான்..நம்பிடாதீங்க.அதல போடுற ஒவ்வொரு அலங்காரமும் உங்க மனசைக் கலைக்கத்தான்//
அப்போ விஜய.டி.ராஜேந்தரும் அதுக்காகவா வெச்சிருக்காரு?
//அப்புறம் சின்னச் சின்ன நோய்நொடியெல்லாம் சொல்லுவான்..ஒருநாளைக்கு கால்வலிம்பான்..இன்னொரு நாளைக்கு கண் வலிம்பான்..நீங்களும் பரிதாபப்பட்டு அவசர மருத்துவராகி 'அச்சச்சோ'ன்னு அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு [Photo]வச்சிக்குங்க//
நீங்க வேறங்க, எனக்குத் தெரிஞ்ச பொண்ணுங்கல்லாம் இப்டி சொன்னா என்னமோ aids இருக்குமோன்னு சந்தேகப்பட ஆரம்பிச்சிடுவாங்க.

Kavinaya said...

ரிச்சு! யாருக்கு ஆப்பு வைக்கிறீங்கன்னே தெரியல. பசங்களுக்கா, பொண்ணுங்களுக்கா, இல்ல உங்களுக்கேவா!

//உனக்கென்னப்பா தெரியும் 6000 லைன் சாட் பண்ணி, 100 ஸ்க்ராப் போட்டு, 100 கமெண்ட் , அந்த கமெண்ட்டுக்கு பாலோ அப் கமெண்ட் எல்லாம் போட்டுப்பாரு அப்ப தெரியும் எவ்ளொ டயர்ட் ஆகுறோம்னு
:)//

ஹாஹா :D

நாதஸ் said...

//எங்கிட்டாவது என்னை மாதிரி ஒரு அப்பாவிப்பையனப் பார்த்துக் கட்டிக்கிட்டு,சீரியல் பார்க்காமச் சந்தோஷமா இருங்க பொண்ணுங்களா.. :)//

அண்ணாத்தே, இவ்ளோ பில்டப்பும், பதிவுகளும் இதுக்குத்தானா ? :P
உங்க போட்டோவோட ஒரு பதிவு போட்டிங்கன்னா பொண்ணுங்க உங்களை அள்ளிகிட்டு போய்டுவாங்க... :)
இதுக்கு எதுக்கு எங்க மேல அபாண்டமா பழிய போடறீங்க :(

கானா பிரபா said...

அவ்வ்வ்

சாச்சுப்புட்டியே மக்கா

Sen22 said...

//உனக்கென்னப்பா தெரியும் 6000 லைன் சாட் பண்ணி, 100 ஸ்க்ராப் போட்டு, 100 கமெண்ட் , அந்த கமெண்ட்டுக்கு பாலோ அப் கமெண்ட் எல்லாம் போட்டுப்பாரு அப்ப தெரியும் எவ்ளொ டயர்ட் ஆகுறோம்னு//



Repeattaiiiiiiiiiii...

M.Rishan Shareef said...

//தமிழ் பிரியன் said...
அம்புட்டு ரகசியத்தையும் சொல்லிப்புட்டா நாங்க என்னத்த சைட் அடிக்க....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((((((((//

எதுக்குங்க சைட் அடிக்கிறீங்க தமிழ்ப்பிரியன்...?வீட்டுல அம்மா,அப்பா பார்க்குற ஒரு பெண்ணை உடனே ஊரையெல்லாம் கூப்பிட்டு கல்யாணம் பண்ணிக்குற வழியப் பாருங்க :P
அப்புறம் சைட் அடிக்க விடுவாங்களா என்ன? :P

M.Rishan Shareef said...

//தமிழன்... said...
அப்பாடா இந்தப்பதிவுல நமீதாவோட பெயர் வரலை...//

வாங்க தமிழன் :)
அதான் நீங்களே கையோட எடுத்துட்டு வந்திருக்கீங்களே.. :P

M.Rishan Shareef said...

// தமிழன்... said...
ஏகப்பட்ட உள்குத்துகள் பதிவுல இருக்கு... பசங்களா உஷார்...//

ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்காங்க போலிருக்கு..
பொண்ணுங்களா உஷார் :)

M.Rishan Shareef said...

// மங்களூர் சிவா said...
/

பசங்களா இன்னிக்கும் எட்டிப்பார்க்காதீங்க..
/

அப்ப டைரக்டா பாக்கலாமா????///

அட..இங்க பாருங்கப்பா எல்லோரும்..
அவரு வழமையா செய்யுறதை இப்போ என்கிட்ட அனுமதி கேட்டு செய்யப்போறார் :P
ஹலோ சிவா சார்..நான் பொண்ணுங்களுக்கு மட்டும்தான் வாத்தியார்..தாத்தாக்களுக்கு இல்ல :P

M.Rishan Shareef said...

//கழட்டி விடறது எப்படின்னு சொல்லி வேற குடுக்கணுமா????

பொறக்கறப்பவே ஜீன்லயே எழுதி இருக்கும்யா அதெல்லாம்

:)) //

பொண்ணுங்களா..இதுக்கு நீங்கதான் சிவாவுக்கு பதில் சொல்லணும்..என்னை மாதிரி சின்னப்பையன்களுக்கு ஜீன்னா என்னன்னு தெரியாது..ஆகவே வாத்தியாரையா எஸ்கேப் :P

M.Rishan Shareef said...

// தமிழன்... said...
எலே அப்பு நீ எம்புட்டுத்தான் பதிவு போட்டு படம் காட்டினாலும் பொண்ணுங்க உஷாராத்தான் இருக்குதுக-
அதுக முதல்லல கழட்டி விடுறதே... இந்த மாதிரி பயலுகளைத்தானப்பு :)//

சரி அண்ணாச்சி..
உங்களை எத்தனை பேர் இப்படிக் கழட்டி விட்டிருக்காக? :P

M.Rishan Shareef said...

// மங்களூர் சிவா said...
/
தாடி,மீசைல ஆயிரம் அலங்காரம் பண்ணிப்பான்.
/

தாடி மீசைல வெறும் ஆயிரம் அலங்காரமா??????//

அதெல்லாம் இருக்குறவனுங்க ஆயிரம் பண்ணிப்பாங்க..நீங்க அதுக்கெல்லாம் வருத்தப்படக்கூடாது சிவா :P

கானா பிரபா said...

//எங்க காபி அண்ணாச்சி ரேஞ்சு தெரியாம பேசாத! அவர்
வியன்னாவின் விஸ்வநாதன்
இங்கிலாந்தின் இளையராஜா
ரஷ்யாவின் ரகுமான்
ஹாலந்தின் ஹாரிஸ்
யூகோஸ்லாவியாவின் யுவன்
யுவனுக்கு யுவன்
எமனுக்கு எமன்!//

romba nanri thala, ungalukku specialaa music poduren

M.Rishan Shareef said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//பையன் ரொம்ப நல்லவனாயிருக்கானே..கோயில்,குளத்துக்கெல்லாம் கூப்பிடுறானேன்னு உடனே போயிடாதீங்க..சாமி முன்னாடி நிக்க வச்சு ஏதாவது செண்டிமெண்டாப் போட்டுத்தாக்கி தாலி கட்டிடுவான்..கவனமாயிருங்க//

ஐ வான்டு டு நோ ஹூ இஸ் திஸ்?
:-)
//

அங்கிள்,அதெப்படி கரெக்டா உங்களைத்தான் சொல்றேன்னு கண்டுபிடிச்சீங்க? :P

Jackiesekar said...

நன்றி ரிஷான்,படங்களோடு மிக அழகான வார்த்தை ஜோடனைகள்.

Jackiesekar said...

/அப்புறம் நான் இன்னிக்கு ஒரு உதாரணத்துக்காக இங்கே காட்டியிருக்குற நம்ம பதிவுலக ஹீரோக்களை மனசுல சுமந்துட்டுத் திரியாதீங்க..அவிங்களுக்கு ஏற்கெனவே கால்கட்டுப் போட்டாச்சு//
சரி, ரிஷான் எனக்கு கால் கட்டு போட்டதாக யார் சொன்னது ,தமிழ் நாட்டில் பொதுவாக இந்தியாவில் நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக இருப்பவர்களுக்கு இள வயது திருமணம் என்பது எட்டா கனிதான்.

thamizhparavai said...

ரிஷான் அண்ணாச்சி போறபோக்குல ஜாக்கி வாழ்க்கையில‌ ,கொளுத்திப்போட்டுட்டு போயிட்டிங்களே.....
ஜாக்கி சேகர்..:-( நோ.. நோ.. இதுக்கெல்லாம் அழக்கூடாது.. நம்ம ரிஷான் அண்ணாச்சியே இதுக்கு பிராயசித்தமா ,தன்னோட கிளாஸூக்கு வர்றதிலேயே ஒரு சுமாரான பொண்ணாப் பார்த்து (பின்ன அவரோட கிளாஸூக்கு வேற யாரு வருவாங்க)
உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாராம்...

கண்ண தொடச்சிக்க ராசா...

தமிழன்-கறுப்பி... said...

அந்த நமிதா பெயர்ல வந்த "கமன்ட்ட" நான்தான் போட்டேன்னு ரிஷான் சொல்லச்சொன்னாரு(நம்புங்கப்பா)
:))

மஹாராஜா said...

//உனக்கென்னப்பா தெரியும் 6000 லைன் சாட் பண்ணி, 100 ஸ்க்ராப் போட்டு, 100 கமெண்ட் , அந்த கமெண்ட்டுக்கு பாலோ அப் கமெண்ட் எல்லாம் போட்டுப்பாரு அப்ப தெரியும் எவ்ளொ டயர்ட் ஆகுறோம்னு//


Innoru.. Murai sollunga..
repeeetuuuuuuuu.........naina..

M.Rishan Shareef said...

//நாலஞ்சு குருவி விஜய்யாஆஆஆ?? அத பாத்தா தாங்குமா அந்த பிகரு!?!?//

சிவா சார்,முதல்ல உங்க செலவுல கூட்டிப் போய்ப் பாருங்க.தாங்குமா இல்லையான்னு அப்புறம் பார்க்கலாம்.. :P

M.Rishan Shareef said...

//உனக்கென்னப்பா தெரியும் 6000 லைன் சாட் பண்ணி, 100 ஸ்க்ராப் போட்டு, 100 கமெண்ட் , அந்த கமெண்ட்டுக்கு பாலோ அப் கமெண்ட் எல்லாம் போட்டுப்பாரு அப்ப தெரியும் எவ்ளொ டயர்ட் ஆகுறோம்னு
:)//

அடாடா சிவா...
நீங்களும் அங்க அப்படித்தானா?
பார்த்துக்குங்க கேர்ள்ஸ்..
கண்ட கண்ட பிகருக கூட எல்லாம் சாட்ல கடலை போட்டுட்டுத்தான் பையன் உங்க பின்னாடி சுத்துறார்...கவனமா இருங்க.. :P

M.Rishan Shareef said...

வாங்க தமிழ்ப்பறவை :)

//சரி.. என்னோட பதிவை தமிழ்மணத்துல சேர்க்கறதுல ரொம்ப கஷ்ட பட்டிட்டிருக்கேன் (பதிவுபட்டை பிரச்சினை)..
அப்புறம்தான் நினைச்சேன்..அங்க சேர்க்கிறதும் ஒண்ணுதான்.. சங்க சிங்கங்கள்கிட்ட சேர்க்கிறதும் ஒண்ணுதான்னு..//

இப்படி ஒட்டுமொத்தமா சிங்கங்களுக்கு ஐஸ் வைக்குறதுக்காகன்னே ஊர்லிருந்து கிளம்பி வந்தீங்களா?

//புது பதிவர் நானு..குறைகள் இருப்பின் சுட்டியோ அல்லது குட்டியோ காட்டவும்...
//

சுட்டிக் காட்டிட்டோம்..இப்போ குட்டிக் காட்டணும்..
உங்க தலையை இப்போ சிங்கங்கள்ட காட்டுங்க பார்க்கலாம் :P

M.Rishan Shareef said...

//அடப்பாவி மெயின் மேட்டர்லயே கை வெச்சிட்டியேய்யா அப்படின்னு தமிழ் கூறும் நல்லுலகம் உன்னை வைய்யும்.//

சிவாண்ணே..
தமிழ் கூறும் நல்லுலகம் வையாட்டிலும் நீங்க வையுறது உலகம் பூராக் கேட்குது அதுவும் காதுல புகையோட... :P

M.Rishan Shareef said...

//மங்களூர் சிவா said...
/
யாராச்சும் அழகான சின்னக் குழந்தையோட போட்டோ காட்டி அது

அவன் தான்னு சொல்றவனையோ விரட்டியடிச்சிடுங்க..அவன் மனசுல வில்லங்கமிருக்கு கண்ணுகளா.
/

ஏகப்பட்ட உள், வெளி நடுகுத்தெல்லாம் இருக்கு போல இருக்கே இதுல!!!!
:))) //

ஒன்றா? ரெண்டா குத்துக்கள்?
எல்லாம் சொல்லவே ஓர் பதிவு போதுமா? :P

FunScribbler said...

//அவிங்களுக்கு ஏற்கெனவே கால்கட்டுப் போட்டாச்சு//

இவங்க இங்க modelling பண்றது அண்ணிகளுக்கு தெரியுமா? :))

M.Rishan Shareef said...

//அடப்பாவி மக்கா!
எங்க காபி அண்ணாச்சி ரேஞ்சு தெரியாம பேசாத! அவர்
வியன்னாவின் விஸ்வநாதன்
இங்கிலாந்தின் இளையராஜா
ரஷ்யாவின் ரகுமான்
ஹாலந்தின் ஹாரிஸ்
யூகோஸ்லாவியாவின் யுவன்
யுவனுக்கு யுவன்
எமனுக்கு எமன்!
கானாவை அறிஞ்சிக்கோ, தெரிஞ்சிக்கோ, புரிஞ்சிக்கோ! :-)//

இம்புட்டு இருக்கா அவருக்குள்ள?
ஆமா அங்கிள்..இப்படியெல்லாம் சொல்லச் சொல்லி எவ்ளோ கொடுத்தார் கானா அண்ணாச்சி...?

//இதனால் சகலவிதமான அப்பாவி மாணவிகளுக்கும் வகுப்பில் சொல்வது என்னவென்றால்
கானாவைத் தாராளமாகக் காதலியுங்கள்! காதலியுங்கள்! காதலியுங்கள்! :-)//

கேயாரெஸ் அங்கிள்..
கானா அண்ணாச்சி வீட்டுல வில்லங்கம் உண்டுபண்ணிடுவீங்க போலிருக்கே?
அவையளுக்கு கல்யாணம் ஆகி ஆறு மாசமாகுது.ஆருமே சொல்லலியா உங்கக்கிட்ட? :)

M.Rishan Shareef said...

//மொத்தமா ஆப்பு வெச்சிட்டியே பொண்ணுங்களுக்கு ரிசானு!!!!//

பசங்களுக்குத்தாம்லே வச்சேன் சிவா.. :P

ஃபஹீமாஜஹான் said...

அடடடடா..............
இவ்வளவும் சொந்த அனுபவமா ரிஷான்?

"அப்புறம் நான் இன்னிக்கு ஒரு உதாரணத்துக்காக இங்கே காட்டியிருக்குற நம்ம பதிவுலக ஹீரோக்களை மனசுல சுமந்துட்டுத் திரியாதீங்க..அவிங்களுக்கு ஏற்கெனவே கால்கட்டுப் போட்டாச்சு "

கானாவுக்கு எப்போ கால்கட்டுப் போட்டது?

முன்னைய பதிவில் போட்டிருந்த பதிவுலக ஹீரோக்களின் படங்களில் பிரபா படத்தைச் சேர்க்கவில்லையே என கவலையுடன் இருந்தேன்.இப்ப தான் விளங்குது போடாததற்கு இந்த கால் கட்டுத் தான் காரணமென்று :(

Anonymous said...

வலைப்பதிவு உலக அண்ணன் மங்களூர் சிவா அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை கூறி இந்த பதிவின் மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால்...

உள்ளூரைவிட்டு உலக அளவில் சிந்தித்தால் கூட கழட்டிவிடுவதில் பெண்களே முதலிடம் என்று சொல்ல கடமைபட்டுள்ளேன்...

அதை அவர்கள் பெருமையாகவே எடுத்துக்கொ(ல்)ள்கிறார்கள்...

Anonymous said...

ரிஷான் சாகேப்,

நீங்க மௌனம் பேசியதே சுர்யாவ விட மோசமானவரா இருப்பீங்க போல இருக்கே.

M.Rishan Shareef said...

//அம்பி!
இங்கன ஒரு ப்ளேட் நண்டு கறி பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்//

கேயாரெஸ் அங்கிள்..இங்கிட்டு என்ன ஹோட்டலா நடத்திட்டிருக்கேன்..நான் வாத்தியாருப்பா..பாடம் நடத்திட்டிருக்கேன்..

M.Rishan Shareef said...

// தமிழ்ப்பறவை said...
எப்போ கேயாரெஸ் ,கானா ப்ரபாவுக்கு கொ.ப.செ. ஆனாரு..?!இதில ஏதோ உள்குத்து இருக்குன்னு நினைக்கிறேன்..
ப்ரபா... எச்சரிக்கையாக இருக்கவும்...//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

//இவண்..
பாவனா பண்பாட்டுக்கழக தோழருக்காக பரிந்துரைக்கும் பறவை...//

உங்களுக்குத் தெரியாதா தமிழ்ப்பறவை? கானா அண்ணாச்சி பாவனாலிருந்து மீரா நந்தனுக்கு கட்சி மாறிட்டாரு :(

M.Rishan Shareef said...

//அப்போ ரிசானுக்குக் கைகட்டு போட்டுற வேண்டியது தான்! :-)
கையில என்னப்பா கட்டு-ன்னு நாளைக்கு ரிசானை மறக்காம அன்பா விசாரிங்க மக்கா! //

கேயாரெஸ் அங்கிள்க்கு என் மேல தான் எம்புட்டு அன்பு?
போடுற கட்டை தங்கத்துல போடச் சொல்லுங்க அங்கிள் :)

//மீதி விசாரிப்பை அன்பே உருவான நம்ம மங்களூர் சிவா பாத்துக்கிடுவாரு! வர்ட்ட்ட்ட்டா? //

அவுரா? எல்லோரும் ஒரு குரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க போலிருக்கு :)

M.Rishan Shareef said...

//SanJai said...
//யாராச்சும் அழகான சின்னக் குழந்தையோட போட்டோ காட்டி//

ஐ லை இட் மா :P.. பெரிய அண்ணன் ரிஷான் சொன்னாலும் சொல்லாட்டியும் அது நான் தான் மக்களே.. சின்ன வயசுல :P...//

இதையே சொல்லி எம்புட்டு நாளைக்கு ஏமாத்துவீங்க சஞ்சய் அங்கிள் ? :P

M.Rishan Shareef said...

//அடப்பாவி.. ஏற்கனவே ஊர்ல ஒரு பயலும் பொண்ணு குடுக்க மாட்டேன்றாங்க.. இதுல இப்படி வேற புரளிய கெலப்பி மொத்த வாழ்க்கையும் வீணாக்க பாக்கறியே.. ஹ்ம்ம்ம். நல்லா இருங்கண்ணா :( //

அதான் உங்களுக்கு ஒரு முறை கல்யாணம் ஆயிடுச்சே சஞ்சய் அங்கிள்..
திரும்பவும் யாரு பொண்ணு கொடுப்பாங்க?

M.Rishan Shareef said...

//கழட்டி விடறது எப்படின்னு சொல்லி வேற குடுக்கணுமா????

பொறக்கறப்பவே ஜீன்லயே எழுதி இருக்கும்யா அதெல்லாம்

:))////


என்னுடைய வன்மையான கண்டனங்கள்... //

பொண்ணுங்களா...இந்தத் தமிழனைக் கொஞ்சம் கவனிங்க..

M.Rishan Shareef said...

//ஹேய் ரிச்சு யு நோட்டி...நீ நம்ப பொண்ணுங்களை கிண்டல் பண்ணுது..//

நோ நமீதா அக்கா..கிண்டல் பண்ணலை..பொண்ணுங்களை யாராவது கிண்டல் பண்ணுவாங்களா?

M.Rishan Shareef said...

//இது தான் டாப்பு...:))

எப்படிண்ணா இவ்வளவு தைரியமா சொந்த செலவுல சூடு போட்டுக்கறிங்க...//

ஆஹா..தமிழன் அண்ணா..வாத்தியார்க்கிட்டேயே கேள்வியா? :P

M.Rishan Shareef said...

// rapp said...
ஆஹா நெம்ப விவரமான வாத்தியாராத்தாங்க இருக்கீங்க!
//தாடி,மீசைல ஆயிரம் அலங்காரம் பண்ணிப்பான்..யாராவது கேட்டா லேட்டஸ்ட்ம்பான்..நம்பிடாதீங்க.அதல போடுற ஒவ்வொரு அலங்காரமும் உங்க மனசைக் கலைக்கத்தான்//
அப்போ விஜய.டி.ராஜேந்தரும் அதுக்காகவா வெச்சிருக்காரு?
//அப்புறம் சின்னச் சின்ன நோய்நொடியெல்லாம் சொல்லுவான்..ஒருநாளைக்கு கால்வலிம்பான்..இன்னொரு நாளைக்கு கண் வலிம்பான்..நீங்களும் பரிதாபப்பட்டு அவசர மருத்துவராகி 'அச்சச்சோ'ன்னு அன்பா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கன்னு [Photo]வச்சிக்குங்க//
நீங்க வேறங்க, எனக்குத் தெரிஞ்ச பொண்ணுங்கல்லாம் இப்டி சொன்னா என்னமோ aids இருக்குமோன்னு சந்தேகப்பட ஆரம்பிச்சிடுவாங்க //

வாங்க வெட்டி ஆபிஸர் :)

என்னங்க இப்படியெல்லாம் சொல்லி இல்லாத போதையை ஏத்திவிடறீங்களே..

பொண்ணுங்களா,சூதானமா இருந்துக்குங்க :)

M.Rishan Shareef said...

//கவிநயா said...
ரிச்சு! யாருக்கு ஆப்பு வைக்கிறீங்கன்னே தெரியல. பசங்களுக்கா, பொண்ணுங்களுக்கா, இல்ல உங்களுக்கேவா //

என்னங்க தாயி,வாத்தியாரப் பார்த்து இப்படிச் சொல்லிட்டீங்களே..?

M.Rishan Shareef said...

வாங்க நாதாஸ் அண்ணா :)

//அண்ணாத்தே, இவ்ளோ பில்டப்பும், பதிவுகளும் இதுக்குத்தானா ? :P
உங்க போட்டோவோட ஒரு பதிவு போட்டிங்கன்னா பொண்ணுங்க உங்களை அள்ளிகிட்டு போய்டுவாங்க... :)
இதுக்கு எதுக்கு எங்க மேல அபாண்டமா பழிய போடறீங்க :( //

கட் அவுட்டே வைக்கச் சொல்லியிருக்கேங்க..
நம்ம பசங்க தான் கேட்க மாட்டேங்குறாங்க..
அவங்களுக்கு எல்லாம் ஒரு பயம்தான் காரணம்..அதான் கண்ணை மட்டும் போட சொல்லிட்டாங்க :(

M.Rishan Shareef said...

// கானா பிரபா said...
அவ்வ்வ்

சாச்சுப்புட்டியே மக்கா //

இதுக்கெல்லாம் அழலாமா அண்ணாச்சி..
அம்புட்டுப் புள்ளகளும் பார்க்குற பதிவுல அழகா உங்க போட்டோ போட்டிருக்கேன்.(திருஷ்டிக்கான்னு கேட்காம) பார்த்து சந்தோஷப்படுங்க கானா அண்ணாச்சி :)

M.Rishan Shareef said...

// jackiesekar said...
நன்றி ரிஷான்,படங்களோடு மிக அழகான வார்த்தை ஜோடனைகள் //

நன்றிங்க அண்ணாச்சி :)

M.Rishan Shareef said...

//சரி, ரிஷான் எனக்கு கால் கட்டு போட்டதாக யார் சொன்னது ,தமிழ் நாட்டில் பொதுவாக இந்தியாவில் நான்கு தங்கைகளுக்கு அண்ணனாக இருப்பவர்களுக்கு இள வயது திருமணம் என்பது எட்டா கனிதான்.//

சேகர் அண்ணாச்சி,
காமெடி சீன்ல செண்டிமெண்டாப் பேசி சிங்கத்தை வருத்தப்பட வச்சுட்டீங்களே தல :(

M.Rishan Shareef said...

வாருங்கள் மகாராஜா :)

//Innoru.. Murai sollunga..
repeeetuuuuuuuu.........naina..//

உத்தரவு மகாராஜா :P

M.Rishan Shareef said...

//பஹீமாஜஹான் said...
அடடடடா..............
இவ்வளவும் சொந்த அனுபவமா ரிஷான்? //

ஆஹா..வராதவங்க வந்து இப்படியெல்லாம் ஆப்பு வைக்கிறீங்களே :(

//கானாவுக்கு எப்போ கால்கட்டுப் போட்டது? //

அது ஒரு ஆறுமாசத்துக்கு முன்னாடியே நடந்தாச்சு..
யாருக்குமே சொல்லலியா அவரு?

//முன்னைய பதிவில் போட்டிருந்த பதிவுலக ஹீரோக்களின் படங்களில் பிரபா படத்தைச் சேர்க்கவில்லையே என கவலையுடன் இருந்தேன்.இப்ப தான் விளங்குது போடாததற்கு இந்த கால் கட்டுத் தான் காரணமென்று :(//

கானா அண்ணாச்சி..
உடனே எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அறிவிச்சிடுங்க..
அப்புறம் எல்லோரும் இப்படித்தான் கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க :)

M.Rishan Shareef said...

//J J Reegan said...
வலைப்பதிவு உலக அண்ணன் மங்களூர் சிவா அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை கூறி இந்த பதிவின் மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால்...

உள்ளூரைவிட்டு உலக அளவில் சிந்தித்தால் கூட கழட்டிவிடுவதில் பெண்களே முதலிடம் என்று சொல்ல கடமைபட்டுள்ளேன்...

அதை அவர்கள் பெருமையாகவே எடுத்துக்கொ(ல்)ள்கிறார்கள்...//


வாங்க ரீகன்
ரொம்ப அனுபவம் போல இருக்கு :P

M.Rishan Shareef said...

//vijaygopalswami said...
ரிஷான் சாகேப்,

நீங்க மௌனம் பேசியதே சுர்யாவ விட மோசமானவரா இருப்பீங்க போல இருக்கே //


அவருக்காச்சும் த்ரிஷா போய் ஒரு லைலா கிடைச்சாங்க அதுல..
ம்ஹ்ம்ம்

லதானந்த் said...

இதிலே நான் இருக்கேனா?

M.Rishan Shareef said...

//லதானந்த் said...
இதிலே நான் இருக்கேனா? //

இது பொண்ணுங்களுக்கான வகுப்பு அங்கிள் :P

M.Rishan Shareef said...

இங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க