Friday, July 7, 2006

மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு

வெண்பா எழுதறதுனால நம்மளையும் இலக்கியவியாதி லிஸ்டுல சேர்த்துடறாங்க. அப்படியே இந்த கவுஜ எல்லாம் பிடிக்கும் அப்படின்னு ஒரு முடிவு கட்டிடறாங்க. இல்லைங்க எனக்கு கவுஜ எல்லாம் புரியாதுன்னு சொன்னாலும் விடாம சுட்டிகள் கொடுத்து, இதைப்பாரு அதைப்பாருன்னு ரொம்ப அன்பா அழைப்பாங்க நம்ம ஆளுங்க. நாமளும் சில சமயங்களில் அங்க போயி பார்த்தா, அந்த கவுஜையை விட அதுக்கு படிக்கறவங்க குடுக்குற விளக்கங்கள் இருக்கே. ரொம்ப தமாஷா இருக்கும். இந்த மாதிரி விளக்கங்களுக்கு நாம வெச்ச பேருதான் பின்நவீனத்துவ திறனாய்வு! நம்ம கமலஹாசன் கூட காதலா காதலா படத்தில் இதையே மாடர்ன் ஆர்ட்டுக்கு சொல்லி சிரிப்பு மூட்டுவாரு. சரி விஷயத்திற்கு வருவோம்.

நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு பெரிய கவிஞருங்க. அவரும் நமக்கு இந்த கவுஜ எழவைக் கத்துக் குடுக்கணுமுன்னு தலைகீழா நின்னு பாக்கறாரு. இப்படித்தான் அன்னிக்கு ஒரு நாள் நான் அவருகிட்ட எதோ பேசும் போது எனக்கு கவுஜன்னா என்ன ஏதுன்னே புரிய மாட்டேங்குது. உடனே நம்ம வாத்தியாரு அதெல்லாம் கஷ்டமே இல்லை. ரொம்ப ஈசியா எழுதலாம் பாருங்க அப்படின்னு சொல்லிட்டு

என்னமோ
ஏதோவாகத்தான்
தோன்றுகின்றன
எனக்கு
கவிதைகள்

அப்படின்னு நான் சொன்னதையே உடைச்சிப் போட்டு இதுதான்யா கவுஜ அப்படின்னாரு. அப்புறம் கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பனை, விதிகள் மீறிய கட்டமைப்புன்ன்னு என்னன்னவோ சொன்னாரு.

உடனே நானும் சும்மா இருக்காம, இப்போ இது கவுஜ கிடையாது. ஆனா ஒருத்தன் வந்து இதுக்கு பின்நவீனத்துவ விளக்கம் ஒண்ணு குடுத்துட்டு உம்மை ஒரு ரேஞ்சா கொண்டு போவான். அப்போதான்யா இது கவுஜ அப்படின்னேன். சும்மா இருக்காம நானே ஒரு விளக்கம் வேற குடுத்தேன்.

"அந்த கவிஞனை பாருங்க. அவன் தன் காதலியைப் பிரிஞ்சு இருக்கான். அதனால அவன் எண்ணங்கள் முழுசும் அவன் காதலியை பத்தியே இருக்கு. அவளை அவன் நினைத்த மாத்திரத்தில் அவன் மனசுல கவிதை பொங்கி வருது. எழுதறான். எழுதின கவிதையை படிக்கிறான். கவிதையை படிக்கும் போதே அவன் மனசில் காதலியின் உருவமும் நிழலாடுது. அந்த சமயத்தில் அவனுக்கு, தன் காதலியின் அழகின் முன் தான் எழுதிய கவிதை ரொம்ப சாதாரணமா தெரியுது.

அதைத்தான் ரொம்ப அழகா இப்படி சொல்லறான். காதலி, அவளைப் பற்றிய நினைப்பு, தன் பிரிவுத் துயரம் எதுவுமே சொல்லாம வெறும் கவிதையை மட்டும் பேசி இந்த உணர்வை உண்டாக்கினான் பாருங்க. அங்கதான் இவன் நிக்கறான். அவன் வாழ்வை உணர்ந்தவன். அவன் உண்மையில் ஒரு மெய்ஞானி."

இப்படி சொல்லிட்டு இவனுக்கு நீங்க இதை எனக்கு கவுஜ கிளாஸ் எடுக்கும் போது சொன்னதுன்னு தெரியவா போகுது அப்படின்னேன். அவரும் அட நல்ல விளக்கமா இருக்கே. எனக்கே இது தோணலையேன்னாரு. அதுதானே நல்ல கவிதைக்கு அடையாளம்.

இதையே பின்நவீனத்துவ நடையில் சொன்னால் - படைப்பாளியின் எண்ணச் சிதறல்கள் என்ற சிறு வட்டத்திற்குள் சிக்காமல், படிப்பவனின் ஆழ்மன தூண்டுதல்களின் வெளிப்பாடாக அமைந்து, படிக்கும் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் கவிதையே சிறந்த கவிதை. (யப்பா, கண்ணைக் கட்டுதப்பா...)

இந்த மாதிரி நம்ம பதிவுல ஜிரா எழுதின சில பின்னூட்டங்களுக்கு திறனாய்வு செய்யப் போக, அவரு என்னடான்னா குமரன் எழுதினதுக்கும் நம்மளை திறனாய சொல்லிட்டாரு. சரி, இதுக்கு இவ்வளவு மவுசு (அட இங்க அந்த எலிக்குட்டி சோதனையெல்லாம் சொல்லலைப்பா) இருக்குன்னு அப்போதான் தெரிஞ்சது. சரி, மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு ன்னு ஒரு புது கிளாஸ் ஒண்ணு ஆரம்பிக்க வேண்டியதுதான் என்ற ஐடியாவும் வந்தது. விருப்பப் படுபவர்கள் தனி மடல் அனுப்புங்க. மேலதிக விவரங்கள் தரப்படும்.

"அதான் எனக்குத் தெரியுமே" பார்ட்டிங்க எல்லாம் கீழ்வரும் கவுஜயை திறனாயுங்க பார்க்கலாம்.

பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!

164 comments:

இராம்/Raam said...

என்னண்ணே ஒன்னும் புரியலை.முதல அந்த அட்லாஸ்'னா என்னா அதச்சொல்லப்பே.... மண்டக்காய்ச்சு போயிருக்கோம் நாங்க...

லதா said...

// **பார்த்தி***ரு.***காத்தி***ரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்! //

இது நம்ப பார்த்திபனுக்காகவும், பேராசிரியர் கார்த்தி அவர்களுக்காகவும் எழுதப்பட்டதா ?
:-)))

VSK said...

வ.வா.ச.வின் முதல் "அட்லாஸ்" வாலிபருக்கு வாழ்த்துகள்!

உங்க fஓட்டோ[photo] கலக்கல்!

என் பி,ந.தி.ஆ பின்னால் வரும்!!

rv said...

யோவ் கொத்ஸூ,
நீர் என்னய்யா இங்கல்லாம் வந்து பதிவு போடுறீரு? கேக்க ஆளில்லேன்னு டபுள்ஸ் ஓட்டுறீரா? :))

Thekkikattan|தெகா said...

வட்டத்தின் மையத்தில்

நின்று

வம்புக்கு அழைக்கும்

இலவசம்...!

.... இதுவும் ஒரு கவுஜா :-))

ILA (a) இளா said...

வணக்கங்க கொத்ஸ் (பொன்ஸ்க்கு போட்டியா இருக்கட்டும்), மண்டூகங்களுக்கு - முதல் வார்த்தையே செம கலாய்ச்சல்.

ஜொள்ளுப்பாண்டி said...
This comment has been removed by a blog administrator.
ஜொள்ளுப்பாண்டி said...

வார்ரே வாவ் ! கொத்ஸ்சு இதுதான் நீங்க திறனாய்வு செய்யற டெக்னிக்கா?? நம்ம பொன்ஸக்கா உங்களுக்கு கொடுத்த பில்டப்புல ஏதோ உங்களி 'சீத்தலை சாத்தனார்' ரேஞ்சு போலன்னு நெனச்சு நமக்கேல்லாம் என்னடா வெண்பான்னு ஒரு ஓரமா பதுங்கிக் கெடந்தேன்.

சொல்லீட்டீகல்ல? பிரிச்சு மேஞ்சுடறேன்:)))) கலக்கிறீங்கப்பூ !!

ஆமா உங்களுக்கு வெண்பொங்கல் வடிக்கத்தெரியும்னு பொன்ஸக்காகிட்டே கீது அளந்து வுட்டீங்களா என்ன? அவங்க காதுல அது வெண்பான்னு வுழுந்துடுச்சோ?? :))))))))))))))

Unknown said...

ஆகா..ஆகா..அ.உ.பி.சூ.இ.இ.அ.த அண்ணம் கொத்ஸ் வ.வா.சவுக்கு வந்துருக்கார்...
வரவேற்பு எல்லாம் ஓ.கேவா தலைவா....

ம்ம்ம் ஒரு தல ஆப்பு வாங்கவே பொறந்தவர்.. இப்போ நம்ம ஒன்னொரு தலைவரும் அந்த வழியா வந்து இருக்காரு... அவரை வாழ்த்தி வரவேற்கிறேன்....

இது ஜஸ்ட் வெல்கம் நோய்ஸ் தான். மறுபடியும் வருவோம்...

இலவசக்கொத்தனார் said...

ஆமா, நான் சொன்ன கவிஞர் யாருன்னு கண்டு பிடிங்க பாருங்க பார்க்கலாம்.

கப்பி | Kappi said...

அட்லாஸ் கொத்ஸு ஆரம்பிச்சாச்சா..

//பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!
//

பார்த்திரு--அப்டின்னா பொழுது விடிஞ்ச வுடனே டாஸ்மாக்ல போய் குந்திக்கோ...

காத்திரு -- அப்புடி பார் தொறக்கலைனா கதவாண்டையே வெயிட் பண்ணு...

ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்! -- இன்னாடா இவன் மப்பேத்திக்கினு டெய்லி ஆப் பாயில் மட்டும் போடறானேனு பாக்காதா...என்னிக்குனா ஒரு நாள் எனக்கும் தண்ணி அடிச்சு கவுஜ வரும்...ஓகேயாப்பா..

பொன்ஸ்~~Poorna said...

ஆசிப் ஊருக்குப் போனாலும் போனாரு, எல்லாரும் ரொம்பத் தான் துள்றாங்கன்னு சுரேஷ் வந்து சொல்லப் போறாரு.. இருக்கட்டும்..

சரி,
//இதைப்பாரு அதைப்பாருன்னு ரொம்ப அன்பா அழைப்பாங்க நம்ம ஆளுங்க.//
இதுவரை சங்கப் பலகைல 'உள்'குத்தினதே இல்லைய்யா.. நாங்க எல்லாம் வெளிக் குத்து தான்.. சும்மா அன்பா பிகிலு ஊதுவாங்கன்னு பேர் போட்டே எழுதுங்கப்பு.. :))

பொன்ஸ்~~Poorna said...

//பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்! //

இது வந்து,

//பார்த்திரு...
காத்திரு...
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்! //
இப்படி இருக்க வேணாம்?!! படி கட்டும்போது தவறின அந்தக் கவுஜர் யாரு?

பொன்ஸ்~~Poorna said...

என்னை மாதிரி ஒரு கவிஞர் (கவிதாயினி ?) , இந்த மாதிரி கவிதைக்குப் பொருள் சொல்லக் கூடாதுன்னு கவுஜ மடத்தின் தலைமைச் சீடன் பினாத்தலார் அன்புக் கட்டளை போட்டிருக்காரு..

இன்னும் நாலு பேர் வந்து பதில் சொல்லட்டும்.. அப்பால, நானும் வந்து பார்த்து எது ஓக்கேன்னு சொல்றேன்.. வர்டா!!

ILA (a) இளா said...

கவுணடரு ஒரு படத்துல செந்திலுக்கு தமிழ் சொல்லித்தருவாரு.
க: புஷ்பம்
செ: புய்ப்பம்
க: அடே மாங்கா மண்டையா அது புய்ப்பம் இல்லேடா, புஷ்பம்
செ: அண்ணே, பூவா, பூன்னு சொல்லலாம், புய்ப்பம்ன்னு சொல்லலாம், நீங்க சொல்றமாதிரிகூட சொல்லலாம்.
க: அடங்கொக்க மக்கா உனக்கு தமிழ் சொல்லி தர வந்தேண் பாரு....என்ன சோ
கவுண்டரு பட்ட கஷ்டம் எனக்கும் தெரியும்.

பினாத்தல் சுரேஷ் said...

//பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!//

அருமையான கவிதை!மிகச்சரியாக கட்டப்பட்ட படிகள் (சிறுமி பொன்ஸுக்கு இதெல்லாம் தெரியாது)

சமுதாய அவலங்களின் மீது நார்சிஸப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகளுக்கும், இருத்தலியலே இல்லாமல் போன மௌனப்பெரும்பான்மையினரின் குரலை நேர்மையாய்ப்பதிவு செய்ய முயற்சிக்கவும் இல்லாத போலிகளையும் ஒரே வரியில் அற்புதமாகச் சாடி இருக்கிறார் கவிஞர்.

பார்த்திரு - காத்திரு - இக்கவிஞன் துயிலெழுந்துவிட்டான். இனி கவிமழை கொட்டும் - ஆனால் என்று என்பதைச் சொல்லிவிட்டால் போலி இலக்கியவாதிகள் விழித்துக்கொண்டு ஊடகத்திரிப்பு செய்ய முயல்வர் என்பதனால் அதை சஸ்பென்ஸாக வைத்திருப்பதில் கவிஞர் தான் ஒரு சிறந்த திட்டமிடலாளர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

எப்படியும், தமிழ்மொழிக்கு இன்னொரு அணிகலன் இந்தக்கவிதை என்பதில் சந்தேகம் இருப்பவர்கள் ஊரை ஏமாற்றவென்றே உருவாகிய ஊடவியலாளர்களாகத்தான் இருக்க இயலும்.

கொத்தனார் - இந்தக்கவிதைக்கு நன்றி.

ஆனால், கட்சி மாறியதற்குக் கண்டனம்.

பொன்ஸ்~~Poorna said...

//அருமையான கவிதை!மிகச்சரியாக கட்டப்பட்ட படிகள் (சிறுமி பொன்ஸுக்கு இதெல்லாம் தெரியாது)
//
குரு சொன்னா, தலை தாழ்ந்து ஏற்றுக் கொள்ளப் படுகிறது :))))

கைப்புள்ள said...

//கொத்தனார் - இந்தக்கவிதைக்கு நன்றி.

ஆனால், கட்சி மாறியதற்குக் கண்டனம்.//

அட்லாஸ் வாலிபர் ஆக்குன்னா கட்சி மாறிடுவீங்களா கொத்ஸ்? வ.வா.ச தங்களை இருகரம் நீட்டி அன்புடன் வரவேற்கிறது.

கைப்புள்ள said...

//ஆனால், கட்சி மாறியதற்குக் கண்டனம்.//

பாண்டி ! யார் யாரை நம்ம பக்கம் இழுக்கனும்னு சீக்கிரம் ஒரு லிஸ்ட் எடுப்பா!

கைப்புள்ள said...

முதல்ல மண்டூகம் ஃபார் டம்மீஸ்லேருந்து ஆரம்பிங்க. எங்களுக்கு மண்டோதரி தான் தெரியும். மண்டூகம் என்னமோ புச்சா இருக்குதே.

ramachandranusha(உஷா) said...

பினாத்தலாரே! தலையிருக்க வால் ஆடலாமா? கவிமடத்து சட்டங்களை மதிக்காது, நீங்கள் தாந்தோன்றிதனமாய் வெளியிட்ட அறிக்கைக்கு தலைவர் வந்ததும், நீங்கள் பதில் அளித்தே ஆகவேண்டும். அதுவரை, மடத்தினுள் நீங்கள் நுழைய அனுமதியில்லை.
இம்மடலை கண்டவுடன், உங்கள் வசம் இருக்கும் அனைத்து மடசாவிகளையும் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வண்,
கவி மடத்து சிஷ்யை

ILA (a) இளா said...

ஒருத்தர்: கவித சொல்லி கொடுங்க.
மற்றொருவர்: அது ரொம்ப கஷ்டம்டா, உனக்கு அதெல்லாம் வராது.
ஒருத்தர்: பரவாயில்லப்பு, கத்துகிறதுல நாம கில்லி.
ஒருத்தர்: சரிடா, மழை பெய்ஞ்சா என்ன பண்ணுவே?
மற்றொருவர்: ஓடி போய் ஒளிஞ்சுக்குவேன்.
ஒருத்தர்: அடே, முக்கா மண்டையா உனக்கு எல்லாம் கவிதை சத்தியமா வராது
யாருன்னு புரிஞ்சா சொல்லுங்க கொத்ஸ்.
புரியாதவங்களுக்கு இங்கே போய் பாருங்க

கைப்புள்ள said...

//பார்த்திரு - காத்திரு - இக்கவிஞன் துயிலெழுந்துவிட்டான். இனி கவிமழை கொட்டும் - ஆனால் என்று என்பதைச் சொல்லிவிட்டால் போலி இலக்கியவாதிகள் விழித்துக்கொண்டு ஊடகத்திரிப்பு செய்ய முயல்வர் என்பதனால் அதை சஸ்பென்ஸாக வைத்திருப்பதில் கவிஞர் தான் ஒரு சிறந்த திட்டமிடலாளர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.//

ஆகா! இதெல்லாம் ப்ளட்லியே வரணும் இல்லியா பெனாத்தலாரே? சோக்கா சொன்னீங்கய்யா "இலக்கியவாதிகள் விழித்துக்கொண்டு ஊடகத்திரிப்பு செய்ய முயல்வர் என்பதனால் அதை சஸ்பென்ஸாக வைத்திருப்பதில் கவிஞர் தான் ஒரு சிறந்த திட்டமிடலாளர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்" - நாங்களும் இதெல்லாம் அங்கங்கே இனிமே யூஸ் பண்ணறோம்.

ILA (a) இளா said...

//மண்டூகம் ஃபார் டம்மீஸ்லேருந்து ஆரம்பிங்க. எங்களுக்கு மண்டோதரி தான் தெரியும். மண்டூகம் என்னமோ புச்சா இருக்குதே//
சும்மா இருக்கனும், அதென்ன எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கிறது மாதிரி

பொன்ஸ்~~Poorna said...

//ஊடகத்திரிப்பு செய்ய முயல்வர் என்பதனால் அதை சஸ்பென்ஸாக வைத்திருப்பதில் //
அதை மறைபொருளாக வைத்திருப்பார்கள்னு சொன்னா, இன்னும் எளக்கியத் தரமா இருக்காது?!!!

ILA (a) இளா said...

//குரு சொன்னா, தலை தாழ்ந்து ஏற்றுக் கொள்ளப் படுகிறது//
எங்க பொன்ஸ், நல்ல பொண்ணு வல்ல பொண்ணு, சபை அடக்கம் தெரிஞ்ச பொன்ஸ்

இலவசக்கொத்தனார் said...

//என்னண்ணே ஒன்னும் புரியலை.//

முதல் தடவை படிச்சாலே புரிய, இது என்ன சிறுகதையா? கவுஜ பத்தின விஷயமப்பா. நல்லா நாலுதடவை படியுங்க. புரியும்.

புரிஞ்சா எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க.

இலவசக்கொத்தனார் said...

//இது நம்ப பார்த்திபனுக்காகவும், பேராசிரியர் கார்த்தி அவர்களுக்காகவும் எழுதப்பட்டதா ?
:-))) //

ஒரு முதற்கட்ட திறனாய்வாளருக்கு நீங்க நல்லா முயற்சி பண்ணறீங்க. ஆனா கேள்வி எல்லாம் கேட்க கூடாது. நீங்க முழு ஆய்வையும் போடுங்க. அப்புறம் பார்க்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

//வ.வா.ச.வின் முதல் "அட்லாஸ்" வாலிபருக்கு வாழ்த்துகள்!//

நன்றிங்க. நீங்க மட்டும்தான் வாழ்த்து சொல்லறீங்க.

//உங்க fஓட்டோ[photo] கலக்கல்!//

எல்லாம் சங்கமாருங்க கை வண்ணம்.

//என் பி,ந.தி.ஆ பின்னால் வரும்!!//

ஆ.எ.பா.

இலவசக்கொத்தனார் said...

//யோவ் கொத்ஸூ,
நீர் என்னய்யா இங்கல்லாம் வந்து பதிவு போடுறீரு? கேக்க ஆளில்லேன்னு டபுள்ஸ் ஓட்டுறீரா? :)) //

என் வலைப்பூவில போட்டா வந்து பாக்கறீரு? அதான் இப்படி. :)

எதோ அட்லாஸ், மேப்பு, ஆப்புன்னு நம்மளை இழுக்கறாங்க. எங்க போயி முடியப்போகுதோ பார்க்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

//.... இதுவும் ஒரு கவுஜா :-)) //

தெகி,
ஆய்வுக் கட்டுரை எழுதச் சொன்னா பதில் கவுஜயா? நல்லா இருமய்யா.

இலவசக்கொத்தனார் said...

//வணக்கங்க கொத்ஸ் (பொன்ஸ்க்கு போட்டியா இருக்கட்டும்), //

என்ன போட்டி? இது புரியலையே. சரியா சொல்லுங்கப்பா.

//மண்டூகங்களுக்கு - முதல் வார்த்தையே செம கலாய்ச்சல். //

நான் தமிழ்படுத்தினேன். மத்தபடி புழக்கத்தில் உள்ள வார்த்தைதானே!

இலவசக்கொத்தனார் said...

//வார்ரே வாவ் ! கொத்ஸ்சு இதுதான் நீங்க திறனாய்வு செய்யற டெக்னிக்கா??//

அதே. அதே.

// நம்ம பொன்ஸக்கா உங்களுக்கு கொடுத்த பில்டப்புல ஏதோ உங்களி 'சீத்தலை சாத்தனார்' ரேஞ்சு போலன்னு நெனச்சு நமக்கேல்லாம் என்னடா வெண்பான்னு ஒரு ஓரமா பதுங்கிக் கெடந்தேன். //

அந்தம்மா என்னைப் பத்தி நல்லதா சொல்லாதே. இது என்ன கதை. பாத்தீங்களா. நான் நாலு பேரு வெண்பா விளையாட்டுக்கு வரணுமுன்னு பார்த்தா இவங்க இப்படி சதி செஞ்சு உங்களை வர விடாம பண்ணறாங்களே. சும்மா விடக்கூடாது.

//சொல்லீட்டீகல்ல? பிரிச்சு மேஞ்சுடறேன்:)))) கலக்கிறீங்கப்பூ !! //

வெயிட்டிங்.

//ஆமா உங்களுக்கு வெண்பொங்கல் வடிக்கத்தெரியும்னு பொன்ஸக்காகிட்டே கீது அளந்து வுட்டீங்களா என்ன? அவங்க காதுல அது வெண்பான்னு வுழுந்துடுச்சோ?? :)))))))))))))) //

வெண்பொங்கலும் வெண்பாவும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக்கிட்டு வாங்க. அதான் உங்க ஹோம்வொர்க்.

இலவசக்கொத்தனார் said...

ஆகா..ஆகா..அ.உ.பி.சூ.இ.இ.அ.த அண்ணம் கொத்ஸ் வ.வா.சவுக்கு வந்துருக்கார்...
வரவேற்பு எல்லாம் ஓ.கேவா தலைவா....//

இப்போ வரை ஓக்கேதான். கடைசியில் எவ்வளவு அடி, எவ்வளவு வலி என்பதை வைத்து கடைசியில் சொல்கிறேன்.

//ம்ம்ம் ஒரு தல ஆப்பு வாங்கவே பொறந்தவர்.. இப்போ நம்ம ஒன்னொரு தலைவரும் அந்த வழியா வந்து இருக்காரு... அவரை வாழ்த்தி வரவேற்கிறேன்....//

நன்றி. நன்றி.

//இது ஜஸ்ட் வெல்கம் நோய்ஸ் தான். மறுபடியும் வருவோம்... //

நாய்ஸ்ன்னு போட்டா வேற மீனிங் வருதுன்னு நோய்ஸ்? இதுவும் நல்லாத்தான் இருக்கு.

இலவசக்கொத்தனார் said...

//இன்னாடா இவன் மப்பேத்திக்கினு டெய்லி ஆப் பாயில் மட்டும் போடறானேனு பாக்காதா...என்னிக்குனா ஒரு நாள் எனக்கும் தண்ணி அடிச்சு கவுஜ வரும்...ஓகேயாப்பா.. //

கப்பி,

சமுதாயத்தின் அடிமட்ட வருக்கத்தின் சராசரி வாழ்க்கைப் போராட்டத்தின் அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்ட முயன்றிருக்கிறீர்கள். நல்ல முயற்சி. இன்னும் விளக்கமாக எழுத வேண்டும். லதாவுக்கு சொன்னது போல் கேள்விகள் கூடாது.

கால்கரி சிவா said...

மண்டூகம் என்றால் கொக்கு (பறவைகளைப் பற்றி அடிக்கடி படிப்பதாலும் அவைகளை சாப்பிடவதாலும் வந்த நினைப்பு)

மீனுக்காக காத்திருக்கும் கொக்குபோல் உன் வாய்ப்பிற்கு காத்திரு என்று சொல்வது போல் எனக்கு தெரிகிறது.

ஆஹா இதுவல்லவோ காவியம். ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு அர்த்தம் வருதே.

ramachandranusha(உஷா) said...

மண்டூகம் என்றால் தவளை

இலவசக்கொத்தனார் said...

//ஆசிப் ஊருக்குப் போனாலும் போனாரு, எல்லாரும் ரொம்பத் தான் துள்றாங்கன்னு சுரேஷ் வந்து சொல்லப் போறாரு.. இருக்கட்டும்..//

அவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.

//இதுவரை சங்கப் பலகைல 'உள்'குத்தினதே இல்லைய்யா.. நாங்க எல்லாம் வெளிக் குத்து தான்.. சும்மா அன்பா பிகிலு ஊதுவாங்கன்னு பேர் போட்டே எழுதுங்கப்பு.. :)) //

உலகமே உங்களைச் சுத்திதான் ஓடுதா? உங்களையும் சேர்த்து உங்க சங்க மெம்பர்ஸே நிறையா பேரு இந்த வேலையில் இறங்கி இருக்காங்க தெரியுமா? சும்மா பிகிலு டகிலுன்னுகிட்டு.

இலவசக்கொத்தனார் said...

//இப்படி இருக்க வேணாம்?!! படி கட்டும்போது தவறின அந்தக் கவுஜர் யாரு? //

தயவு கூர்ந்து பெனாத்தலாரின் பதிலைப் பார்க்கவும்.

சின்னவன் said...

கொத்ஸ் வாலிபரா(னா ) , கலி முத்திடுத்துண்ணா.. முத்திடுத்து !!!

உறக்கம் வரா
நட்சத்திரங்கள் அற்ற
ஒரு இரவின்
காற்றை கண்டுப்
பிடிக்க முடியாமல்
புழுக்கத்தில் புழுவாய் நெளிந்துக் கொண்டு
வேறு வேலை எதுவும் இன்றி
பாயைப் பிராண்டிக் கொண்டு
பார்த்திரு !
கரண்ட் கட்டாகுமே என்று
காத்திரு !
"ஏனடா தூங்காமல்
பினாத்திக் கொண்டு

உயிரை வாங்குறே "

என்று ஒரு நாள்
உனக்கும் கவிதை யாய் திட்டு வரும் !

ஜொள்ளுப்பாண்டி said...

//பார்த்திரு...
காத்திரு...
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!//

கொத்ஸ் கொடுத்த தைரியத்துல நானும் கொஞ்சம் தெறன ஆஞ்சுபாக்குறேன்:))

கவிஞர் ஒரு பெண்கள் கல்லூரி முன் நின்று இந்தக்கவிதையை ஜொள்ளுடன் வடித்துள்ளார் என்பது புலனாகிறது! !

நீ பல பெண்களை சைட் அடித்தாலும் உன்னை எவளாவது சைட் அடிகிறாளா என "பார்த்திரு". அவளுக்கு எவனாச்சும் பாய் ப்ரெண்டு இல்லை காவல் படையாம் உடன்பிறப்புகள் யாரவது கூடவராமல் இருக்கும் நாளுக்காக "காத்திரு"

இப்படியெல்லாம் காத்துகிட்டு இருகறப்போ கவலைப்படாமல் போற வர்றதுகளைப் பார்த்துட்டு காலத்தை கழி. உனக்கும் ஒரு நாள் வராமலா பூடும்??

அன்னிக்கு உனக்கு வர்றது தான் கவிஜ !

ஹாஆஆஆ கொத்ஸ் நான் சின்னப்பையன்.இது வரைக்கும் கீரை கூட ஆஞ்சதில்லைஞ்கோ! உங்க கவிஜய ஆஞ்சுபோட்டுருகேன்! பாத்து சொல்லுங்கப்பு !

இலவசக்கொத்தனார் said...

//என்னை மாதிரி ஒரு கவிஞர் (கவிதாயினி ?) , இந்த மாதிரி கவிதைக்குப் பொருள் சொல்லக் கூடாதுன்னு கவுஜ மடத்தின் தலைமைச் சீடன் பினாத்தலார் அன்புக் கட்டளை போட்டிருக்காரு.. //

ஆனா அவரு வந்து விளக்கம் சொல்லிட்டாரு. அப்போ உங்களை மாதிரி கவிஞர்ன்னு சொல்லறது என்ன விஷயம்? :D

இலவசக்கொத்தனார் said...

//என்ன சோ
கவுண்டரு பட்ட கஷ்டம் எனக்கும் தெரியும். //

என்ன சொல்லவறீங்க இளா? நம்ம ஜனதுக்கு திறனாய சொல்லித் தரது அவ்வளவு கஷ்டமா? இங்க வர பின்னூட்டமெல்லாம் பார்த்தா அப்படி தெரியலையே.

ஜொள்ளுப்பாண்டி said...

//பாண்டி ! யார் யாரை நம்ம பக்கம் இழுக்கனும்னு சீக்கிரம் ஒரு லிஸ்ட் எடுப்பா! //

சரி தல !!!

குமரன் (Kumaran) said...

கவிதை வாழ்க. கவிஞர் வாழ்க. வாழ்க வாழ்க.

எங்கள் அருமை அண்ணன் மாண்புமிகு இலவசக் கொத்தனாரை இந்த மாதத்து சிறப்பு விருந்தினராக அழைத்துப் பெருமைப்படுத்திய வ.வா.சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் எங்கள் அருமை அண்ணன் இளைஞரும் இல்லை முதியவரும் இல்லை வயது வேறுபாடுகளையெல்லாம் தாண்டிய பெருமகனார் என்பதனைப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அதே நேரத்தில் அவருடைய வயதினைக் கேள்வி கேட்காதீர்கல் என்று நண்பர்களை எச்சரிக்கும் அதே நேரத்தில் என் பதிவிற்கும் அண்ணன் பிஞ்சிலே பழுத்த சைவப்பழம் ஜிராவின் பதிவிற்கும் சுட்டிகளைக் கொடுத்த அண்ணன் கொத்தனாருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் வ.வா.சங்கத்தினரால் ஜூலை மாத வருத்தப்படாத அட்லாஸ் வாலிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி இந்த மலர்மாலையை மாணிக்கமாலையாகக் கருதி அணிவிக்கிறேன்.

கொத்ஸ் அண்ணா நாமம் வாழ்க. புரட்சித் தலைவர் கைப்புள்ள நாமம் வாழ்க. புரட்சித் தலைவி பொன்ஸ் நாமம் வாழ்க. புரட்சித் தளபதி சிபி நாமம் வாழ்க. இளைய தளபதி தேவ் நாமம் வாழ்க. சொல்லுவதையே ஜொள்ளும் பாண்டியனார் வாரிசு வாழ்க. ஆங்கிலத்திலும் தமிழிலும் என்னைப் போல் தன் பெயரைக் கூறிக் கொள்ளும் இளா வாழ்க. மற்றும் உள்ள அனைத்து வ.வா.சங்கத்தினரும் வாழ்க. வாழ்க.

குமரன் (Kumaran) said...

பார்த்திரு...காத்திரு... - இலவசக் கொத்தனார் நம் வீட்டுப் பக்கம் வருகிறாரா என்று பார்த்திரு. எப்போது வருவார் என்று காத்திரு. சொல்லாமல் விட்டது - வருகிறார் என்று தெரிந்தவுடன் வெளியூருக்கு 'ஐ ம் தி எஸ்கேப்' என்று ஓடிவிடு.

ஒரு நாள் - அவர் வரப்போவது ஒரு நாள் என்று தான் சொல்வார். ஆனால் வந்தார் என்றால் ஒரு மாதமாவது தங்காமல் போக மாட்டார். ஒரு நாள் என்று சொன்னாலே ஒரு மாதம் தங்குபவர். இங்கே ஒரு மாதத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள்.... வ.வா.சங்கத்தினர்கள் அறியாத பிள்ளைகள். பாவம்.

எனக்கும் - ஜிரா, பொன்ஸ், கொத்ஸ் போன்ற கவிஜர்கள் எழுதுவதை எல்லாம் மீண்டும் மீண்டும் படித்ததால் கருமம்..எனக்கும்..

கவிதை வரும் - இதுக்கு விளக்கம் தேவையில்லை. கவிதை வந்து தொலைக்கும்.

ALIF AHAMED said...

$$
"மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு"
$$

அப்ப நான் கலந்துக்க முடியாது ஹும்

நமக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்

இலவசக்கொத்தனார் said...

பெனாத்தலாரே,
வருகைக்கு நன்றி. அதைவிட உங்க விளக்கத்துக்கு.

//அருமையான கவிதை!மிகச்சரியாக கட்டப்பட்ட படிகள் (சிறுமி பொன்ஸுக்கு இதெல்லாம் தெரியாது)//

சரியாச் சொன்னீங்க.

//ஒரே வரியில் அற்புதமாகச் சாடி இருக்கிறார் கவிஞர்.//

//கவிஞர் தான் ஒரு சிறந்த திட்டமிடலாளர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.//

ஹிஹி...


//எப்படியும், தமிழ்மொழிக்கு இன்னொரு அணிகலன் இந்தக்கவிதை என்பதில் சந்தேகம் இருப்பவர்கள் ஊரை ஏமாற்றவென்றே உருவாகிய ஊடவியலாளர்களாகத்தான் இருக்க இயலும்.//

அதே அதே.

இலவசக்கொத்தனார் said...

//ஆனால், கட்சி மாறியதற்குக் கண்டனம்///

பெனாத்தலாரே,

நாம எல்லாம் வட நாட்டு அரசியல்வியாதிங்க மாதிரி. கட்சி பத்தி பேச்சு வரும் போது மேடை போட்டு திட்டிக்கணும். ஆனா கல்யாணம் காட்சின்னு வந்தா கூடி குலாவி குல்ஃபி சாப்பிடணும்.

அது மாதிரி இவங்க தொடங்கற இந்த விழாவில் கலந்து வாழ்த்தறதுதானே முறை? அது மட்டுமல்லாது தமிழ் என வரும் பொழுது நாம் எல்லாம் ஒன்று கூடுவது போல் கலாய்ப்பு என வந்தாலும் ஒன்று கூட வேண்டுமல்லவா? அதற்காகத்தான் இது.

இந்த மாதிரி வந்து, நம்ம கொள்கையைப் பரப்பி, இதை அப்படியே கூண்டோட சாப்பிட்டலாம் விடுங்க.

இலவசக்கொத்தனார் said...

//குரு சொன்னா, தலை தாழ்ந்து ஏற்றுக் கொள்ளப் படுகிறது :)))) //

அன்றே சொன்னார்
நன்றே சொன்னார்
ஆத்திரக்காரனுக்கு
புத்தி மட்டு.

ஒண்ணு மட்டும் புரிஞ்சுக்கோங்க. என்னதான் கவிஜன்னு வந்தாலும் கட்சிக்காரனுங்க நாங்க விட்டுக் கொடுத்துக்க மாட்டோமில்ல. :)

Ram.K said...

//இதையே பின்நவீனத்துவ நடையில் சொன்னால் - படைப்பாளியின் எண்ணச் சிதறல்கள் என்ற சிறு வட்டத்திற்குள் சிக்காமல், படிப்பவனின் ஆழ்மன தூண்டுதல்களின் வெளிப்பாடாக அமைந்து, படிக்கும் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் கவிதையே சிறந்த கவிதை. (யப்பா, கண்ணைக் கட்டுதப்பா...) //

ஆஹா. பின் நவீனத்துவம் புரிஞ்சு போச்சு. கடைசியிலே கண்ணக் கட்டினா அது பின்நவீனத்துவம்.

:)))

புதிர்க் கதையெல்லாம் ஏறக்கட்டிவிட்டு இப்பிடி இறங்கியாச்சா ?

ம். நடத்துங்க நடத்துங்க. நல்லாத்தான் இருக்கு

:)


அன்புடன்
பச்சோந்தி

பொன்ஸ்~~Poorna said...

//வந்தாலும் கட்சிக்காரனுங்க நாங்க விட்டுக் கொடுத்துக்க மாட்டோமில்ல. :) //
ஓ.. அப்போ இத்தினி நேரம் நீங்க, ராமனாதன், சுரேஷ் எல்லாம் பேசினது இந்த ப.ம.கன்னு ஒரு பழைய கட்சி இருந்திச்சே அது பத்தி தானா?!! நான் கூட என்னவோ ஏதோன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்..

சரி சரி.. எங்க கட்சி மாதிரி நாளொரு வெண்பா, பொழுதொரு சமையல்னு ஏதாச்சும் செஞ்சிகிட்டு இருந்தா கட்சி இருக்குன்னாவது தெரியும்.. இப்படி அப்பப்போ சொல்லும் போது பேரைச் சொல்லுங்கப்பு.. என்ன ஏதுன்னு புரியாம போய்டுதுல்லா!!!

இலவசக்கொத்தனார் said...

//அட்லாஸ் வாலிபர் ஆக்குன்னா கட்சி மாறிடுவீங்களா கொத்ஸ்? வ.வா.ச தங்களை இருகரம் நீட்டி அன்புடன் வரவேற்கிறது. //

நட்பை அரசியலாக்கி கொச்சைப் படுத்தாதீர்கள். பாருங்கள் பினாத்தலாருக்கு என் பதில்.

இலவசக்கொத்தனார் said...

//அட்லாஸ் வாலிபர் ஆக்குன்னா கட்சி மாறிடுவீங்களா கொத்ஸ்? வ.வா.ச தங்களை இருகரம் நீட்டி அன்புடன் வரவேற்கிறது. //

நட்பை அரசியலாக்கி கொச்சைப் படுத்தாதீர்கள். பாருங்கள் பினாத்தலாருக்கு என் பதில்.

வெட்டிப்பயல் said...

//இந்த மாதிரி வந்து, நம்ம கொள்கையைப் பரப்பி, இதை அப்படியே கூண்டோட சாப்பிட்டலாம் விடுங்க.
//

பார்த்துகிட்டே இருங்க தளவதி சிபி வந்து பின்னியெடுக்கப் போறார். தூக்கிச் சாப்பிடுவாங்களாம்ல!

கைப்புக்கு நாங்க எதிரிதான். ஆனா சமயத்துல கூட இருந்து கை கொடுப்போம்.

(ம்க்கும்.. ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிசிங்க் சரி இல்லையேப்பான்னு கைப்புள்ள பொலம்புறார் பாருங்க)

இலவசக்கொத்தனார் said...

//முதல்ல மண்டூகம் ஃபார் டம்மீஸ்லேருந்து ஆரம்பிங்க. எங்களுக்கு மண்டோதரி தான் தெரியும். மண்டூகம் என்னமோ புச்சா இருக்குதே. //

அட மண்டே. (ஆங்கிலத்தில் adamant என்ற வார்த்தை வர இதுதான் காரணமா?) மண்டூகம் அப்படின்னா தவளை. ஒரு கிணற்று தவளை போல் தனது குறுகிய வாழ்வைத் தவிர வேறேதும் அறியாதவன் ஒரு மண்டு அதாவது நம்ம தாய் மொழியில் சொல்லணுமானா dummy.

நான் என்ன சொல்ல வரேன்னா, போடப்பட்ட பதிவே - பின்நவீனத்துவ திறனாய்வு ஃபார் டம்மீஸ் தான். புரியுதா?

இலவசக்கொத்தனார் said...

//பினாத்தலாரே! தலையிருக்க வால் ஆடலாமா? கவிமடத்து சட்டங்களை மதிக்காது, நீங்கள் தாந்தோன்றிதனமாய் வெளியிட்ட அறிக்கைக்கு தலைவர் வந்ததும், நீங்கள் பதில் அளித்தே ஆகவேண்டும். அதுவரை, மடத்தினுள் நீங்கள் நுழைய அனுமதியில்லை.
இம்மடலை கண்டவுடன், உங்கள் வசம் இருக்கும் அனைத்து மடசாவிகளையும் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வண்,
கவி மடத்து சிஷ்யை//

இது என்ன மடத்தனமா இருக்கு? :)

சரி. சரி. நாம போட்ட பதிவுக்கு முதல் முறையா வந்திருக்காங்க உஷாக்கா. அது மட்டுமில்லாம பதிவைப் பத்தி ஒண்ணுமே (தப்பா) சொல்லலை. அதனால கம்முன்னு இருக்கலாம். என்ன?

இலவசக்கொத்தனார் said...

//யாருன்னு புரிஞ்சா சொல்லுங்க கொத்ஸ்.//

மழை பெய்யும் போது நனைஞ்சுக்கிட்டே ஐஸ்கிரீம் சாப்பிட்டு அதனால வீரம் வந்து சண்டை போட்டா அது ஆதி.

அதில்லாம ஜலதோஷம் வந்து அவஸ்தைப் பட்டா அது மீதி.

ஆனா மழையில் நனையாம உள்ள உக்காந்துகிட்டு மழையில் தன் காதலி நனைந்தா எப்படி இருக்குமுன்னு கவுஜ எழுதறான் பாருங்க, அவன் புத்திசாலி.

இலவசக்கொத்தனார் said...

//ஆகா! இதெல்லாம் ப்ளட்லியே வரணும் இல்லியா பெனாத்தலாரே?//

வெறும் ரத்ததில் இல்லை. அதெல்லாம் ஜீன்ஸ்ல இருக்கணும்.

------------------------
செந்தில்: அப்போ அவரு வேட்டி கட்டும்போது இப்படி எல்லாம் யோசிக்க மாட்டாராண்ணே?

க.மணி: தூ. உங்கிட்டையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு பாருடா. என்னை....

இலவசக்கொத்தனார் said...

//சும்மா இருக்கனும், அதென்ன எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கிறது மாதிரி //

சரி. சரி. விடுங்க. எதோ தெரியாம கேட்டுட்டாரு.
-------------------
செந்தில்: அப்போ தெரிஞ்சாலும் இவரு கேட்பாராண்ணே?

க.மணி: டேய்ய்ய். வேணாண்டா...

இலவசக்கொத்தனார் said...

//அதை மறைபொருளாக வைத்திருப்பார்கள்னு சொன்னா, இன்னும் எளக்கியத் தரமா இருக்காது?!!! //

இதெல்லாம் சொன்னா,

"மறை பொருளா வைக்கறது தமிழ் பண்பாடு இல்லை. அதனால அதுக்கு தமிழில் நாங்கள் யோசிப்பது இல்லை. இப்படி நீங்கள் யோசித்தது, அதை குலத் தொழிலாகக் கொண்ட வந்தேறி கூட்டத்தில் இருப்பவரோ என எண்ணத் தோன்றுகிறது. "

அப்படின்னு எல்லாம் பதில் வந்தா நான் பொறுப்பல்ல.

இலவசக்கொத்தனார் said...

//எங்க பொன்ஸ், நல்ல பொண்ணு வல்ல பொண்ணு, சபை அடக்கம் தெரிஞ்ச பொன்ஸ் //

கரெக்ட்டு. ஆனா நாவடக்கம்தான் உதைக்குது. என்ன செய்ய? :)

இலவசக்கொத்தனார் said...

//மண்டூகம் என்றால் கொக்கு (பறவைகளைப் பற்றி அடிக்கடி படிப்பதாலும் அவைகளை சாப்பிடவதாலும் வந்த நினைப்பு)//

அண்ணா, நீங்க ஆக்சுவலா ஃபெரென்சுக்காரரா பிறந்து இருக்கணும். ஏன்னா மண்டூகம் அப்படின்னா தவளை. அங்க இருந்தா, தவளைக் காலெல்லாம் சாப்பிட்டு அந்த ஞாபகம் வந்திருக்கும்.

//மீனுக்காக காத்திருக்கும் கொக்குபோல் உன் வாய்ப்பிற்கு காத்திரு என்று சொல்வது போல் எனக்கு தெரிகிறது.//

தெரியும் தெரியும்...

//ஆஹா இதுவல்லவோ காவியம். ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு அர்த்தம் வருதே.//

அதானே....

இலவசக்கொத்தனார் said...

//மண்டூகம் என்றால் தவளை //

நல்ல வேளை. நான் சரியாத்தான் சொல்லியிருக்கேன். ரொம்ப டாங்க்ஸ் உஷாக்கா.

இலவசக்கொத்தனார் said...

//என்று ஒரு நாள்
உனக்கும் கவிதை யாய் திட்டு வரும் !//

சின்னவரே வாங்க. என்ன இப்போ எல்லாம் தூக்கம் சரியா இல்லையா?

"உனக்கும் கவிதை ஆய்.."

உங்களுக்குமா? எனக்கும்தான். சரிசரி. இனிமே இப்படி எல்லாம் பிரிக்காதீங்க.

அது என்ன பார்த்திருக்கு அவ்வளவு விளக்கம், காத்திருக்கு வெறும் ஒரே ஒரு வரி?

இலவசக்கொத்தனார் said...

அப்பா பாண்டி,

இப்படி ஜொள்ளி என்னை நனைச்சுட்டியேப்பா (அட ஆனந்தக் கண்ணீரில்). வெரி குட். வெரி குட்.

ஆனால் என் படைப்பை யாரோ ஒரு சின்னப் பெண் சொன்னதைக் கேட்டு இப்படி சிதைச்சுட்டீங்களே. அதுதான் என்னால தாங்க முடியலை!

இலவசக்கொத்தனார் said...

குமரன் வாழ்க. (யப்பா எப்படியப்பா இப்படி...)

//என் பதிவிற்கும் அண்ணன் பிஞ்சிலே பழுத்த சைவப்பழம் ஜிராவின் பதிவிற்கும் சுட்டிகளைக் கொடுத்த அண்ணன் கொத்தனாருக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில்//

ஆனா பதிவை சரியாப் படிக்கலை போல இருக்கே. ஜிரா பதிவு எதுக்கும் நான் சுட்டி குடுக்கலையே. :)

இலவசக்கொத்தனார் said...

//வெளியூருக்கு 'ஐ ம் தி எஸ்கேப்' என்று ஓடிவிடு. //

அதாவது குமரன் பச்சைக் கண்ணாடி போட்டா பாக்கறது எல்லாம் பச்சையாவே தெரியுமாம். அதான் உமக்கு இவ்வளவு குற்ற உணர்ச்சி. பரவாயில்லை. மன்னித்தேன். இனி மறப்போம். என்ன? :)

//எனக்கும் - ஜிரா, பொன்ஸ், கொத்ஸ் போன்ற கவிஜர்கள் எழுதுவதை எல்லாம் மீண்டும் மீண்டும் படித்ததால் கருமம்..எனக்கும்.. //

லிஸ்டில் கவிஜ பார்ட்டிங்களா பார்த்தா பொன்ஸைத் தவிர யாரும் இல்லையே. சரியான கவிஜங்க படிக்காததுதாலதான் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுது.

இலவசக்கொத்தனார் said...

//"மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு" //

வாம்மா மின்னல். நீங்களும் சரியாப் படிக்கலையா? திறனாயத் தெரியலைன்னாதான் அது. உங்களுக்குத் தெரிஞ்சா திறனாயத்தான் கவுஜ போட்டாச்சே....

வந்து ஆட்டத்தைப் போடுங்க.

இலவசக்கொத்தனார் said...

//ஆஹா. பின் நவீனத்துவம் புரிஞ்சு போச்சு. கடைசியிலே கண்ணக் கட்டினா அது பின்நவீனத்துவம்.//

பச்சோந்தியாரா, கொக்கா? (சரியா வரலையோ?). பாயிண்டைப் பிடிச்சுட்டீரே.

//புதிர்க் கதையெல்லாம் ஏறக்கட்டிவிட்டு இப்பிடி இறங்கியாச்சா ?//

என்ன பண்ணறது? இடத்துக்கேத்த மாதிரிதானே நடந்துக்கணும். இந்த சங்கத்துல போயி புதிரெல்லாம் போட்டா எப்படி? பசங்க கண்ணுல தண்ணி வந்தா என் மனசுல்ல நோவும்.

//ம். நடத்துங்க நடத்துங்க. நல்லாத்தான் இருக்கு//

நன்றிங்கோ.

இலவசக்கொத்தனார் said...

//எங்க கட்சி மாதிரி நாளொரு வெண்பா, பொழுதொரு சமையல்னு ஏதாச்சும் செஞ்சிகிட்டு இருந்தா கட்சி இருக்குன்னாவது தெரியும்.. //

என்ன ஒரே புகை வாசமா இருக்கு? நாங்க எல்லாம் ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தாச்சு. இனி மக்கள் நலம் மட்டும்தான் நமக்கு. உங்களுக்கு வேலை இல்லையா இப்படி வெம்பா, வம்பான்னு எதாவது செய்யலாம். ஆமா விருந்து சமயல் எல்லாம் பேசறீங்களே, என்னிக்காவது ஒரு நாள் செய்வீங்களா?

ALIF AHAMED said...

தெரியலனுதனே எதாவது சொல்லி சமாளிச்சி ஓடி போயிடுலானு பாத்தேன் இப்படி வம்புக்கு இழுத்தா என்ன பன்னுறது அவ்வ்வ்வ்வ்

( நாளைக்கு வர்றேன் சார் க்ளாஸுக்கு )

Iyappan Krishnan said...

ஹ்ம்ம்.... உலகத்தை விட அதிகமா சுமைய சுமக்கிறீர்.. வாழ்த்துகள்.

இலவசக்கொத்தனார் said...

//பார்த்துகிட்டே இருங்க தளவதி சிபி வந்து பின்னியெடுக்கப் போறார். தூக்கிச் சாப்பிடுவாங்களாம்ல! //

ஆமாம் அவரு எங்க ஆளைக்காணும்?


//ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா ஃபினிசிங்க் சரி இல்லையேப்பான்னு //

இது என்ன புரியலையே..

இலவசக்கொத்தனார் said...

//இப்படி வம்புக்கு இழுத்தா என்ன பன்னுறது அவ்வ்வ்வ்வ்

( நாளைக்கு வர்றேன் சார் க்ளாஸுக்கு ) //

மின்னல் அழாதீங்க. மின்னல் வந்தா மழைதான் வரணும் கண்ணீர் எல்லாம் வரக் கூடாது.

அப்புறம் அந்த பெருசு (அவரையும் காணுமே. பாருங்க இந்த சங்க லட்சணத்தை) மாதிரி கிளாஸுக்கு வராம இருக்காதீங்க.

இலவசக்கொத்தனார் said...

யோவ் வாத்தி,

இப்படி வந்து வாழ்த்து சொல்லிட்டுப் போனா எப்படி? வந்து நீங்களும் திறனாயுங்க. வாங்க.

ALIF AHAMED said...

அப்பவே வாராதிங்க வராதிங்கனு சொன்னாங்க கேட்டனா இல்லையே !!

கவுஜ போட்டு வெளக்கம் சொல்லுனு உயிரை எடுக்குறாங்க

(மின்னலின் மனசாட்சி : பேசாம க்ளாஸ கட்டடிச்சுட்டு 9தாராவை ஜொள்ளுயிட சிபியோட போயிருக்கலாம்..:::))) )

கால்கரி சிவா said...

கொக்கின் காலடியில் தவளை. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து க் கொள்ளூங்கள்.

தவளைக்காலையும் சாப்ப்டிருக்கேன்.

Unknown said...

"கவிதை, திறனாய்வு" என பயமுறுத்தினால் என்னை மாதிரி ஞான சூனியங்கள் பயந்துடாதா?

வந்தாச்சு.ஒரு + குத்தியாச்சு.அடுத்து எஸ்கேப்பு

இலவசக்கொத்தனார் said...

//சிபியோட போயிருக்கலாம்..//

ஏம்மா மின்னலு, அவரு நாளைக்கு வந்து பதிவைப் படிக்காமலேயே 50 பின்னூட்டம் போடுவாரு (அப்பா, டார்கெட் குடுத்தாச்சு). அதனால அவரு கிளாஸுக்கெல்லாம் வரலைன்னாக் கூட பரவாயில்லை. ஆனா நீங்க?

இலவசக்கொத்தனார் said...

//தவளைக்காலையும் சாப்ப்டிருக்கேன். //

நல்ல வேளை உங்க வீட்டுக்கு நான் வந்த நாள் சைவ வெள்ளியா இருந்ததோ தப்பிச்சேன். இல்லைன்னா என் கால் கதி....

இலவசக்கொத்தனார் said...

//"கவிதை, திறனாய்வு" என பயமுறுத்தினால் என்னை மாதிரி ஞான சூனியங்கள் பயந்துடாதா?//

போடப்பட்ட பதிவே - பின்நவீனத்துவ திறனாய்வு ஃபார் டம்மீஸ் தானே. அப்புறம் என்ன பயம்?

//வந்தாச்சு.ஒரு + குத்தியாச்சு.அடுத்து எஸ்கேப்பு//

அதோட போச்சா? வந்து விளையாடுங்க சாமி. இல்லைன்னா அந்த கொரிய பிக்கு கிட்ட பிடிச்சு குடுத்துடுவேன்.

கைப்புள்ள said...

//அட மண்டே. (ஆங்கிலத்தில் adamant என்ற வார்த்தை வர இதுதான் காரணமா?) மண்டூகம் அப்படின்னா தவளை. ஒரு கிணற்று தவளை போல் தனது குறுகிய வாழ்வைத் தவிர வேறேதும் அறியாதவன் ஒரு மண்டு அதாவது நம்ம தாய் மொழியில் சொல்லணுமானா dummy.

நான் என்ன சொல்ல வரேன்னா, போடப்பட்ட பதிவே - பின்நவீனத்துவ திறனாய்வு ஃபார் டம்மீஸ் தான். புரியுதா?//

இதுக்கு என்னோட ரிப்ளையா வ.வா.ச. தலைப்புல(header)வலது பக்கம் இருக்குற படத்தைப் பாத்துக்கங்க.

Unknown said...

//மழை பெய்யும் போது நனைஞ்சுக்கிட்டே ஐஸ்கிரீம் சாப்பிட்டு அதனால வீரம் வந்து சண்டை போட்டா அது ஆதி.

அதில்லாம ஜலதோஷம் வந்து அவஸ்தைப் பட்டா அது மீதி.

ஆனா மழையில் நனையாம உள்ள உக்காந்துகிட்டு மழையில் தன் காதலி நனைந்தா எப்படி இருக்குமுன்னு கவுஜ எழுதறான் பாருங்க, அவன் புத்திசாலி.//

ஆஹா கொட்டுது ஞானம் கொட்டுது...

Unknown said...

எங்கள் அ.உ.பி.சூ.இ.இ.அ.த இன்றைய அட்லாஸ் வாலிபர் அண்ணன் கொத்தனாரின் ஞான மழையில் நனைந்து ஞானச் சுமையேற்ற வந்திருக்கும் கோடிக்கணக்கான வலைப்பதிவர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்.

பின்னூட்டக் கேப்பில் போஸ்ட்டர் ஓட்டிக் கலாய்ப்பது

அ.உ.பி.சூ.இ.இ.அ.த அண்ணன் கொத்தனார் தலைமை மன்றம்
திருவான்மியூர்
சென்னை.

Unknown said...

அண்ணன் கொத்தனாரின் வார்த்தைகளை நன்கு உணர்ந்து அதற்கு விளக்கம் கொடுத்த எங்கள் அன்பு பங்காளி வெற்றி தமிழன் பினாத்தலாருக்கு அ.உ.பி.சூ.இ.இ.அ.த கொத்தனார் தலைமை மன்றம் சார்பில் இந்தப் பின்னூட்ட மாலையைப் பாசத்தோடு அணிவித்து ஆனந்தப் படுகிறோம்.

Unknown said...

சங்கத்தின் மக்கள் அனைவரையும் பாசத்தோடு வாழ்த்திய பேரன்பின் இமயம் எங்கள் ஆன்மீக சூப்பர் ஸ்டார் குமரனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வரு.வா.ச தலைமை நிலையம்.
சென்னை

ramachandranusha(உஷா) said...

"கொன்னுட்ட்டீங்க போங்க" - கவிதையைப் பற்றிய என் ஒற்றை வரி திறனாய்வு

G.Ragavan said...

கவிதையா? கழுதையா? அப்படீன்னு நாலு பேரு கேக்குறதுக்கு முன்னாடியே கவித எழுதுறத நிப்பாட்டீட்டேன். ஆனா உங்களப் போல பின்நவீனத்துவ பிரம்மாக்களின் ஊறும் மண்டையிலிருந்து செறித்தெழும் உணர்ச்சிகளைச் சொற்களாக்கிக் கவிதை வடித்து வாழ்க்கையை விடித்து முடித்துத் தருகையில் அதன் பாய்ச்சல் எத்தனையடி என்பதைக் கேட்டால் செருப்பைக் காட்டுகிறார்களே! ஏன்?

கைப்புள்ள said...

//ஆமா, நான் சொன்ன கவிஞர் யாருன்னு கண்டு பிடிங்க பாருங்க பார்க்கலாம்//

யாருங்க...அந்த பெரிய மனுஷன்?

நாமக்கல் சிபி said...

//யாருங்க...அந்த பெரிய மனுஷன்?
//

தலைவரு கைப்புள்ள தானுங்கோவ்.

நாமக்கல் சிபி said...

என் கவிதையை
அவள் படித்து
நன்று என்றாள்!

ஆம்!
ஒரு கவிதை
இன்னொரு
கவிதையை
(பின் நவீனத்துவ !?)
திறனாய்வு
செய்கிறது!

பொன்ஸ்~~Poorna said...

//
ஆம்!
ஒரு கவிதை
இன்னொரு
கவிதையை
(பின் நவீனத்துவ !?)
திறனாய்வு
செய்கிறது! //

பார்த்தி.. பாருய்யா.. உம்ம கவிதையை சிபி சுட்டுட்டாரு..

( ஒரு
ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட்
சாப்பிடுகிறதே!)

நாமக்கல் சிபி said...

//பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்//

அதாவது எங்க தலை இருக்காரே!

அவருக்கு முதல்ல கவுஜையெல்லாம் வராது. அந்த காலத்துலே பார்த்திபன் வேற கவுஜ, வெண்பானெல்லாம் சொல்லி உசுப்பேதிக்கினு இருந்தானாம்.

அதுக்கு பதிலடி கொடுக்க நம்ம பேராசிரியரை எழுதி கொடுக்க சொல்லி சமாளிச்சிகிட்டிருந்தார்.

எத்தினி நாளைக்குதான் பார்த்தியை
இப்படியே சமாளிக்குறது. நோம்ப நேரம் சிந்திக்குற தலைக்கு திடீர்னு பொறி தட்டினாற்போல தோணுது பாருங்க ஒரு கவிதை.

பார்த்திபா பர்த்துகிட்டே இரு...
(பேராசிரியரே அது வரை நீயும் கூட இரும்..) ஒரு நாள் இல்லாங்காட்டி ஒரு நாள் நானும் கவுஜைன்னு (ஏதாவது) சொல்லிகிட்டு வருவேன்ன்னு எச்சரிக்கை விடுறார்.

கோவி.கண்ணன் said...

//பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!//
அப்படி கவிதை
வந்தபோது நீவருகிறாயோ
இல்லையோ,
அந்த காகிதத்தை
தின்பதற்கு நிச்சயமாக
கழுதைகள் வரும்

ALIF AHAMED said...

உள்ளேன் ஐயா !!!

சொன்ன மாதிரியே க்ளாஸ கட் பண்னாம வந்துட்டேன்

சரியான விளக்கம் தா

நாகை சிவா said...

நான் ரொம்ப தான் லேட்டா வந்து விட்டேன். அதனால என்ன,

இந்த மாதத்தின் "அட்லாஸ் வாலிபர்", தமிழ் இணையத்தின் பின்னூட்ட புயல், வெண்பா வேங்கை, புரோட்டா பாவலரு திரு. இலவச கொத்தானார் அவர்களை வாழ்த்தி, வணங்கி வரவேற்கின்றேன்.

இலவசக்கொத்தனார் said...

மத்தவங்களுக்கெல்லாம் அப்புறம் பதில் சொல்லறேன். முதலில் கிளாசுக்கு சரியா வந்துருக்கிற மின்னலை கவனிப்போம்.

//சரியான விளக்கம் தா //

முதலில் ஒண்ணு புரிஞ்சுக்கோங்க. சரியான விளக்கம் என எதுவுமே கிடையாது. ரோஜான்னு சொன்னா ஒருத்தனுக்கு பூ ஞாபகம் வரும், இன்னொருத்தனுக்கு நம்ம செல்வமணி வீட்டு ரோஜா. கொஞ்சம் அந்தக் கால ஆளுங்களுக்கு நேருதாத்தா (பின்ன இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் மாமான்னு சொல்லறது?) ஞாபகம் கூட வரும். இதுல யாரு சரி? யாரு தப்பு?
என்ன புரியுதா?

அதனால விளக்கம் என்பதை அடுத்தவர்கள் தர முடியாது. அப்படித் தரேன்னு சொல்லறவங்க வெறும் போலிங்க. அவங்க கருத்தை உங்க மேல திணிக்கப் பாக்கறாங்க.

அதனால உங்க மனசுக்கு என்ன படுது பாருங்க. உங்களுக்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட் இருக்கும். அப்போ அதே கவிதை வேற வேற உணர்ச்சிகளைக் கொடுக்கும்.

இப்போ நீங்க மறுபடி அந்த கவிதையைப் படித்து என்ன தோணுதுன்னு சொல்லுங்க. பார்க்கலாம்.

(அப்பாடா, முதல் கிளாஸ் ஒப்பேத்தியாச்சு!)

நாகை சிவா said...

//ஆம்!
ஒரு கவிதை
இன்னொரு
கவிதையை
(பின் நவீனத்துவ !?)
திறனாய்வு
செய்கிறது! //

//ஒரு
ஸ்வீட் ஸ்டாலே
ஸ்வீட்
சாப்பிடுகிறதே!) //

ஹம், இப்படியே தொடர வேண்டியது தானே!

ஒரு
ரோஜா
இன்னொரு
ரோஜாவை
சூடிவுள்ளது!

மொட்டைமாடியில்
அமர்ந்து
ஒரு நிலா
இன்னொரு
நிலாவை
ரசிக்கின்றது!

நாகை சிவா said...

சரி, நம்மளும் திறனாய்வு செய்து பார்க்கலாம் என்று யோசித்தில் வந்த விளைவு கீழே!

//பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்! //

"பார்த்திரு"க்கேன் சந்தோஷின் கவிதையை,
"காத்திரு"க்கேன் இங்கே,
அந்த நாள் போல் "ஒரு நாள்"
"எனக்கும்" வரும் என்று,
ஆனால் அந்த "கவிதை"யை விட
நல்ல கவிதையாக "வரும்".

நாகை சிவா said...

மொய் எழுதுவது போல் 101வது பின்னூட்டத்தை எழுதி விட்டு, இப்ப ஜுட் விடுகின்றேன். மிச்சத்தை நாளைக்கு பார்க்கலாம்.

Iyappan Krishnan said...

அய்யா சாமி.. இந்த பின் நவீனத்துவம்... முன் நவீனத்துவம் .. மேல் நவீனத்துவம்.. பக்கவாட்டு நவீனத்துவம் இதெல்லாம் ரொம்ப அலர்ஜி.. கவிதையா?? ரெண்டு வரி கிருக்கி தள்ளிட்டு போய்ட்டே இருக்கணும்... அம்புட்டுதேன்

என்னங்கறீரு ?

இலவசக்கொத்தனார் said...

//இதுக்கு என்னோட ரிப்ளையா வ.வா.ச. தலைப்புல(header)வலது பக்கம் இருக்குற படத்தைப் பாத்துக்கங்க.//

பாத்துட்டேன். ஒரு பரிதாப பார்வை பாக்கறீரு. அதுக்கு இப்போ என்ன?

இலவசக்கொத்தனார் said...

//ஆஹா கொட்டுது ஞானம் கொட்டுது... //

தேவுத்தம்பி, மழையில நனையாத வரைத்தான் ஞானமெல்லாம் கொட்டும். நனைஞ்சு ஜல்ப்பு புடிச்சா மூக்கிலதான் கொட்டும். ஜாக்கிரதை!

இலவசக்கொத்தனார் said...

தேவுத் தம்பி,

போஸ்டரெல்லாம் போட்டதுக்கு ரொம்ப நன்றி. ஆனாப் பாருங்க அடுத்த தடவை நாலு பேர் பாக்கறா மாதிரி ஒட்டுங்க. பாருங்க. யாருமே படிச்சா மாதிரி தெரியலை.

இலவசக்கொத்தனார் said...

//"கொன்னுட்ட்டீங்க போங்க" - கவிதையைப் பற்றிய என் ஒற்றை வரி திறனாய்வு //

யப்பா சாமி. ஒரே பதிவுக்கு உங்க கிட்டயிருந்து மூணு பின்னூட்டமா? அடுத்த முறை இன்னும் நல்லா எழுதணும் போல இருக்கே. டென்சன். டென்சன்.

ரொம்ப நன்றிங்கக்கோவ்.

இலவசக்கொத்தனார் said...

//அதன் பாய்ச்சல் எத்தனையடி என்பதைக் கேட்டால் செருப்பைக் காட்டுகிறார்களே! ஏன்? //

உங்களைப் பார்த்து செருப்பை காட்டறாங்களா? யாரு அது? நீங்க யாருன்னு தெரிஞ்சா செஞ்சாங்க?

அட ராமநாதா, பெனாத்தலு, நம்ம ஆளைப் பார்த்து ராங் கட்டறாங்களாம். கொஞ்சம் என்னான்னு பாருங்க.

நீங்க அதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க ஜிரா. நாங்க பாத்துக்கறோம். (ஒரு சின்ன மேட்டர். அடுத்த முறை செருப்பு வீசினா, நல்ல ஜோடியா பார்த்து ஒண்ணு எடுத்து வையுங்கோ.ஹிஹி)

இலவசக்கொத்தனார் said...

//யாருங்க...அந்த பெரிய மனுஷன்? //

தெரியலையா? ஒரு க்ளூ தரேன். எல்லாம் உங்க சங்க பொருப்பாளி ஒருத்தர்தான்!

இலவசக்கொத்தனார் said...

//தலைவரு கைப்புள்ள தானுங்கோவ். //

அடடா! என்ன பாசம். என்ன பாசம். மேட்டரே தெரியாம உமக்கு சர்டிபிகேட் குடுக்கறான் பாருங்க. நல்லா தொண்டனுங்க வச்சிகினுக்கீறப்பா.

இலவசக்கொத்தனார் said...

//ஆம்!
ஒரு கவிதை
இன்னொரு
கவிதையை
(பின் நவீனத்துவ !?)
திறனாய்வு
செய்கிறது! //

யோவ் சிபி,

என்ன நக்கலா? நான் எழுதின கவுஜையை திறனாயச் சொன்னா என்னமோ நீரே கவுஜ எழுதி திறனாயறீரு? என்ன மேட்டர்? அதுவும் திறனாயறதக் கூட உடைச்சு உடைச்சு எழுதறீரு? ஒண்ணியும் சரியில்ல. அவ்ளோதான் சொல்வேன்.

இலவசக்கொத்தனார் said...

//பார்த்தி.. பாருய்யா.. உம்ம கவிதையை சிபி சுட்டுட்டாரு..//

அடப்பாவி சிபி, அதுவும் திருட்டாய்யா? அதுல உங்க எதிர்சங்கக் காரன் கிட்டயிருந்து. கொஞ்சம் கூட நல்லால்லய்யா.

ஆமாம் பொன்ஸ், இதெல்லாமா பப்ளிக்கா சொல்லறது? ஒரு சங்கமுன்னா ஒத்துமை வேணாம்?

இலவசக்கொத்தனார் said...

//பார்த்திபா பர்த்துகிட்டே இரு...
(பேராசிரியரே அது வரை நீயும் கூட இரும்..) ஒரு நாள் இல்லாங்காட்டி ஒரு நாள் நானும் கவுஜைன்னு (ஏதாவது) சொல்லிகிட்டு வருவேன்ன்னு எச்சரிக்கை விடுறார். //

உம்ம ஸ்டாண்டேர்டுக்கு இதெல்லாம் ஒரு திறனாய்வா சிபி? சரியா செய்யுங்க. இல்லைன்னா உம்ம பேரை சபின்னு மாத்தி வெச்சுருவேன். அப்புறம் உம்மை கூப்பிடறதுக்குப் பதிலா எல்லாரும் சபிப்பாங்க.

இலவசக்கொத்தனார் said...

// நிச்சயமாக
கழுதைகள் வரும் //

கோவியாரே, கொஞ்சம் லேட்டா வந்தாலும் கரெக்டா வந்துட்டீரே. என்னது? உங்களை கழுதையின்னு சொன்னேனா? அதெல்லாமில்லை வாத்தியாரே. :)

சரி, நம்ம கவுஜக்கு கூட நாலு லைன் போட்டுட்டீரு ஆனா திறனாயலையே. அதுக்கு எப்ப வரப்போறீங்க?

இலவசக்கொத்தனார் said...

//வாழ்த்தி, வணங்கி வரவேற்கின்றேன். //

அதெல்லாம் இருக்கட்டும், வந்தீங்க. உள்ளேன் ஐயா போட்டீங்க. அப்புறம் என்ன எஸ் ஆகிட்டீங்க?

வந்து திறனாயுங்க பாஸ்.

இலவசக்கொத்தனார் said...

//ஒரு
ரோஜா
இன்னொரு
ரோஜாவை
சூடிவுள்ளது!

மொட்டைமாடியில்
அமர்ந்து
ஒரு நிலா
இன்னொரு
நிலாவை
ரசிக்கின்றது! //

யோவ் சிவா, திறனாயச் சொன்னா இப்படி மேல மேல கவுஜ எழுதினா எப்படி? குடுத்த வேலையைப் பாருமப்பா.

(சரியா படியுங்க. பாரும் அப்பான்னு எழுதியிருக்கேன். பாரு மப்பா அப்படின்னு படிச்சிட்டு டாஸ்மாக் பக்கமெல்லாம் போகக்கூடாது!)

இலவசக்கொத்தனார் said...

//"பார்த்திரு"க்கேன் சந்தோஷின் கவிதையை,
"காத்திரு"க்கேன் இங்கே,
அந்த நாள் போல் "ஒரு நாள்"
"எனக்கும்" வரும் என்று,
ஆனால் அந்த "கவிதை"யை விட
நல்ல கவிதையாக "வரும்". //

சிவா, உங்களுக்கு இருக்கற திறமைக்கு சந்தோஷை இதைவிட நல்லா கலாய்க்க முடியும். மீண்டும் முயலுங்கள். (அப்பா, அங்க கை காட்டியாச்சு. நம்மக் கிட்ட வரமாட்டாரு!)

Unknown said...

எப்பா கொத்தனாரு, நல்லா ரோசனை பண்ணிட்டு தான் நைனா வந்த்ருக்கே! இப்டி போட்டா, எம்புட்டு பேரு அடிச்சுனு வந்து பின்னூட்டம் போடுவாங்க ன்னு எல்லாம் ஐடியாவோடத் தான் வந்திருக்கே... இருக்கட்டும். இப்போ வீட்ல சொல்லிட்டுத் தானே வந்தே!

இல்லே, நானும் தெரிஞ்சுட்டே தெர்யாமே கேக்கறேன், அகில பிரபஞ்ச மண்டூகங்களின் சார்பிலே: இன்னா கோவம் உனக்கு, எங்க மேல. நாங்க பாட்டுக்கு ராவுலே கத்தினு கீறோம் வறட்டு, வறட்டுன்னு. அது கவுஜயா தெர்ய்தா உன்க்கு? எங்களுக்கு பின் நவீனத்துவம்-னா என்ன தெரியும்? இல்ல, உங்க ஊரு கூவம் (Hudson) நதி கிட்டாண்ட இருக்கற genetically-நவீன மண்டூகம் பத்தி பேசறியா நீனு? இல்லே, உங்க ஊருக்கு ஆட்டோ அனுப்ப முடியாதுன்னு நெனச்சியா!

யப்பா, எல்லாம் பாத்துக்கங்க, இவரு பின்னூட்ட மவராசன் மட்டும் இல்ல. அடுத்து இந்த பில்டப் வச்சிகினு, வ.வா.சங்கத்திலே சேஃப்டி-பின் நவீனத்துவத்துலே எப்படி கவுஜ எளுதறது-ன்னு சங்க கூட்டம் போட்டோம்னு சொல்லிகிட்டு, ரெண்டு அறிக்கை விட வெண்பா கவுஜரும், பெண்பாவலரும், வந்துடுவாங்க.

தல, இதெல்லாம் சரியில்ல, சொல்லிட்டேன். நம்ம வ.வா. சங்கத்தோட மானம், மருவாதி இன்னா, கவுஜ திறனாய்வு செய்யுற அளவுக்கு நமக்கு திறம கீதா, சங்கத்தோட கொள்கைய காப்பாத்தாம இன்னா கவுஜ வேண்டி கெடக்குது, சொல்லு.

இதாம்பா கரகீட்டு கவிதை:
பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
உனக்கும்
ஆட்டோ வரும்.
(ரிபிட், ரிபிட்)
(ரெமோ ரிபீட்டு இல்லை மக்களே, அமெரிக்க மண்டூகங்களின் ரிபிட்).

கவுஜ வரும்னுட்டு தில்லக்கேணியிலே பாத்துட்டே காத்துட்டு இருந்த பளய வளக்கத்தில்,
கெ. பி.:-)))

இலவசக்கொத்தனார் said...

//மொய் எழுதுவது போல் 101வது பின்னூட்டத்தை எழுதி விட்டு, இப்ப ஜுட் விடுகின்றேன். மிச்சத்தை நாளைக்கு பார்க்கலாம். //

பொய் எழுதியதற்கு நன்றி. (நினைச்சுப் பாருங்க. நம்மகிட்டதான் மெய்யாலுமே மொய்யை எழுதறாங்க. இல்ல!)

நாளை
வரும்
வரை
காத்திருக்கிறேன்.
(சும்மானா உடைச்சுப் போட்டேன். இதையெல்லாம் திறனாயக் கிளம்பாதீங்க!)

இலவசக்கொத்தனார் said...

//அய்யா சாமி.. இந்த பின் நவீனத்துவம்... முன் நவீனத்துவம் .. மேல் நவீனத்துவம்.. பக்கவாட்டு நவீனத்துவம் இதெல்லாம் ரொம்ப அலர்ஜி.. கவிதையா?? ரெண்டு வரி கிருக்கி தள்ளிட்டு போய்ட்டே இருக்கணும்... அம்புட்டுதேன்

என்னங்கறீரு ?//

வாத்தி,

உமக்கு திறனாய்வு அலர்ஜி. எனக்கு கவுஜனாலே அலர்ஜி. நீர் கிறுக்கறீரு. நான் திறனாயறேன்.

நான் நல்லவனா? நீர் நல்லவனா?

(வேணும்னா நாயகன் பேத்திய கூப்பிடுவோமா?)

இலவசக்கொத்தனார் said...

//அகில பிரபஞ்ச மண்டூகங்களின் சார்பிலே//

ஆஹா! இயற்கைவியாதிகள் யாருமே வந்து சவுண்ட் விடலையேன்னு நினைச்சேன். இன்னைக்கு உம்ம கோட்டாவா? இருக்கட்டும். இருக்கட்டும். ( யப்பா, இது வெறும் இருக்கட்டும். இதைப் போயி இரு முடி கட்டு, ஜெயமாலான்னு ரூட் மாத்திக்கிட்டுப் போகப் போறீங்க!)

//அது கவுஜயா தெர்ய்தா உன்க்கு?//

இல்லையே. இருக்கற கவிஜர்கள் போறாதுன்னு இன்னும் மண்டூகக்கவிஜ எல்லாம் படிச்சி மண்டை காயணுமா?

//எங்களுக்கு பின் நவீனத்துவம்-னா என்ன தெரியும்? //

தெரியாது. அது எனக்கு தெரியும். அதான் கிளாஸ் எடுக்கறேன்.

//இல்லே, உங்க ஊருக்கு ஆட்டோ அனுப்ப முடியாதுன்னு நெனச்சியா!//

முடியாதே. ஆட்டோ ஓட்ட கால் வேணுமே. அதைத்தான் கால்கரியார் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டாரே. :)

//சேஃப்டி-பின் நவீனத்துவத்துலே எப்படி கவுஜ எளுதறது//

அடடா! நான் என்ன கவிஜ எழுத சொல்லறவன்னு கீழ்த்தரமா பேசறீங்க. வந்தாலும் வரலைனாலும் உம்ம பேச்சு கா! :(

// வெண்பா கவுஜரும், பெண்பாவலரும், வந்துடுவாங்க. //

கவுஜர் அண்ட் பாவலர். வந்து நீங்களே பதில் சொல்லுங்க.

//தல, இதெல்லாம் சரியில்ல, சொல்லிட்டேன். நம்ம வ.வா. சங்கத்தோட மானம், மருவாதி இன்னா, கவுஜ திறனாய்வு செய்யுற அளவுக்கு நமக்கு திறம கீதா, சங்கத்தோட கொள்கைய காப்பாத்தாம இன்னா கவுஜ வேண்டி கெடக்குது, சொல்லு. //

மிஸ்டர் கைப்ஸ். நீங்க கூப்பிட்டீங்கன்னு (நடந்தது எதுவும் வெளிய தெரிய வேணாமுன்னு நீங்க கேட்டுக்கிட்டதால இப்படி டீஸண்டாவே சொல்லறேன்.) வந்தேன். இதுக்கெல்லாம் நீங்களே பதில் சொல்லுங்க.

//இதாம்பா கரகீட்டு கவிதை:
பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
உனக்கும்
ஆட்டோ வரும்.
(ரிபிட், ரிபிட்)
(ரெமோ ரிபீட்டு இல்லை மக்களே, அமெரிக்க மண்டூகங்களின் ரிபிட்).//

அதாவது எங்க பக்கங்களில் வீடு வாங்கினா பூஜையின் போது பசு மாட்டைக் கூட்டிக் கொண்டு வருவார்கள். அது வரும் போது ஆவின் toe வரும். அதைத்தானே ஆட்டோ என சொல்கிறீர்கள்?

உனக்கும் ஆட்டோ வரும் என்றால் உனக்கும் சொந்த வீடு வாங்கும் பாக்கியம் கிட்டும் என வாழ்த்துகிறேன். இதுதானே உங்க கருத்து? ரொம்ப நன்றி!

//கவுஜ வரும்னுட்டு தில்லக்கேணியிலே பாத்துட்டே காத்துட்டு இருந்த பளய வளக்கத்தில்,
கெ. பி.:-)))//

தில்லிக்கேணியா? முன்னமே சொல்லாத இப்படி கமுக்கமா இர்ந்தா எப்டி? ஒரு வார்த்த கூட நம்ப பாசைல பேசாத வுட்டுடியேப்பா..

கோவி.கண்ணன் said...

திறனாய்வா ? அது எந்த பதார்த்தம் ?

உவமையும், உட்பொருளும்
சேர்த்து கவிதை புணைந்தேன்
கவிதையல்ல வெறும் பூச்சுற்றல்
என்றார்கள் !
எனக்கும் புரியாத ஏதோ ஒன்றை
எழுதிவிட்டு எட்டி நின்றேன்
பொருள் புதைந்து ஏதோ
சொல்லவரும் புதுக்கவிதை இது
என்றார்கள் !
எனக்கு உண்மையில் எதுவும்
புரியவில்லை !

:)

இலவசக்கொத்தனார் said...

//எனக்கு உண்மையில் எதுவும்
புரியவில்லை !//

நீங்களும் நம்ம கேஸ்தானா? எனக்கும் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. உங்க கவுஜயையே எடுத்துக்குங்க.இப்போ என்ன சொல்ல வறீங்க? இந்த லாஸ்ட் ரெண்டு வரியைத் தவிர மத்த ஒண்ணுமே புரியலையே...

Unknown said...

//இ.கொ. சொன்னது: ...ஆவின் toe வரும்..// நல்ல ("மாம்" என்று கத்திக் கொண்டு, ட்ரெய்லரில் வரும்)ஜெர்ஸி பசு-வாகவே வர வாழ்த்துக்கள். கூடவே Ford-Explorer ஓட்டிக் கொண்டு பூசை செய்பவரும் வருவார் - நமக்கு "தெரிந்தவர்" தான்:-))

கால்கரியார் ஆவின் toe-வை எப்படி மிச்சம் வைத்தார்? வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்கள் மிருக பட்சிணி என்று படித்ததாக நினைவு...

சரி, இப்போ இன்னா டீலு? ஒமக்கு கவுஜ வரணும், நாங்க தெறனாய்ஞ்சுகணும். சொன்னாப்ல, (என்னிய மாதிரி மனுச / மண்டூக சன்மங்களுக்கு) தெறனாய்வு சொல்லி கொடுக்கறதுக்குள்ள மண்ட காயத்தான் போறீங்க:-) இந்த "பின்", "நவீனத்துவ", "திறனாய்வு" ன்னுட்டு சோக்கு சோக்கா பேசிட்டா விட்டுடுவோமா? அருஞ்சொற்பொருள் தருக:-)

பொன்ஸ்~~Poorna said...

//கவுஜ திறனாய்வு செய்யுற அளவுக்கு நமக்கு திறம கீதா, சங்கத்தோட கொள்கைய காப்பாத்தாம இன்னா கவுஜ வேண்டி கெடக்குது, சொல்லு. //

கெபி அக்கா, எதுக்கு கீதாக்காவைத் திட்டறீங்க??

என்னை என்ன வேணாலும் சொல்லுங்கக்கா.. ஆனா எங்க பாச பீரங்கி, அன்புத் தமக்கை, என்றும் பதினாறு கீதாக்காவை ஒண்ணியும் சொல்லாதீங்க.. அப்புறம் மண்டூகங்கள் சார்பாவும் மத்தவங்க சார்பாவும் நான் வெண்பாப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டி வரும்.. ஆமாம்.

பொன்ஸ்~~Poorna said...

//ஹம், இப்படியே தொடர வேண்டியது தானே!

ஒரு
ரோஜா
இன்னொரு
ரோஜாவை
சூடிவுள்ளது!

மொட்டைமாடியில்
அமர்ந்து
ஒரு நிலா
இன்னொரு
நிலாவை
ரசிக்கின்றது!
//

ஒரு
நாகை
வெடிகுண்டே
கன்னி வெடியை
விளக்குகிறதே!

ராபின் ஹூட் said...

வ.வா சங்கதில் ஊழல்! நஷ்டத்தில் தடுமாறிகிறது சங்கம்!
புதிய தகவல்கள் இங்கே

VSK said...

ஓடும் யானை
ஓடினால்
பாடும் பெண்ணும்[பொன்ஸும்]
பாடுமா?

பதிவொன்று
போட்டால்
பலநூறு
பின்னூட்டம்
பெறுகின்ற
கொத்தனார்
இலவசம்!

இப்படிக் கூட சொல்லலாமே!

Unknown said...

//பொன்ஸ் சொன்னது: //கவுஜ திறனாய்வு செய்யுற அளவுக்கு நமக்கு திறம கீதா,... கீதாக்காவை ஒண்ணியும் சொல்லாதீங்க.. //

அடி ஆத்தாடி, சைக்கிள் கேப்பில டாங்கு ஓட்டிகினு வராங்க டோய்! இப்போ இன்னா சொன்னேன்: "திறம கீதா". நம்ம அல்லாரோட விட அவ்வளவு திறம கீதாக்கு தான். இத புரிஞ்சுக்காம போயிட்டியே பொன்ஸு!!

அகில பிரபஞ்ச மண்டூகங்கள் சார்பாக முதன் முதலாக குரல் கொடுத்தது நான் தான் என்று தமிளு கூறு போடும் நல்லுலகம் நன்றறியும்... வந்துட்டாங்க...

:-)

துளசி கோபால் said...

மண்டூகங்கள் சார்பா பொன்ஸ் ஆரம்பிக்கப்போற வெண்பாப் போராட்டதுக்கு என் முழு ஆதரவையும்
அளிக்க நான் தயார்.
அப்படியே வெண்பான்னா என்னன்னு யாராவது சொல்லுங்களேன். புண்ணீயமாப் போகும்.

கொத்ஸ், நம்மளை மிரட்டுறாருப்பா:-)))

இலவசக்கொத்தனார் said...

கெக்கே பிக்குண்ணி (இனி கெ.பி.),

//இந்த "பின்", "நவீனத்துவ", "திறனாய்வு" ன்னுட்டு சோக்கு சோக்கா பேசிட்டா விட்டுடுவோமா? அருஞ்சொற்பொருள் தருக:-) //

அட, என்ன நீங்க. இன்னுமா விளையாட்டு புரியலை? நான் எது வேணாலும் சொல்லுவேன். அர்த்தம் கண்டுபிடிச்சு சொல்லறது உங்க வேலை.

எங்க நீங்களே அ.சொ.பொ. குடுங்க பார்ப்போம். :)

இலவசக்கொத்தனார் said...

//அப்புறம் மண்டூகங்கள் சார்பாவும் மத்தவங்க சார்பாவும் நான் வெண்பாப் போராட்டம் ஆரம்பிக்க வேண்டி வரும்.. //

ஏம்மா பொன்ஸு, ஆரம்பத்துல எனக்கு திறனாயத் தெரியுமாக்கும் ஆனா இதெல்லாம் நான் திறனாயற அளவு திறமையா இல்லைன்னு ஸ்டண்டு. இப்போ நைசா மண்டூகங்கள் சங்கத்தில மெம்பர்ஷிப். உன்ன புரிஞ்சிக்கவே முடியலையேம்மா.

இலவசக்கொத்தனார் said...

//ஒரு
நாகை
வெடிகுண்டே
கன்னி வெடியை
விளக்குகிறதே! //

கொஞ்ச நேரம் முன்னாடிதான் இருக்கட்டும் அப்படின்னு ஒரு வார்த்தை போட்டதுக்கு தனியா டிஸ்கி போட்டேன். இப்போ கன்னி வெடியா? ஏம்பா நம்மளை இப்படி வம்புக்கு இழுக்கறீங்க?

இலவசக்கொத்தனார் said...

//வ.வா சங்கதில் ஊழல்! நஷ்டத்தில் தடுமாறிகிறது சங்கம்!//

ஏம்பா இப்படி ஒரு அபாண்ட குற்றச்சாட்டு? நீ படமெடுத்துப் போட்டா மட்டும் நம்பவா போறாங்க?

இலவசக்கொத்தனார் said...

//ஓடும் யானை
ஓடினால்
பாடும் பெண்ணும்[பொன்ஸும்]
பாடுமா?//

அந்தம்மாதான் ஒருத்தர் விடாம பாடறாங்களே. நீங்க மட்டும் ஒரு நாலு வார்த்தை தப்பா எழுதிப் பாருங்க. உங்க வீட்டாண்டை வந்தும் கூடப் பாடுவாங்க. (ஆனா சும்மா சொல்லக்கூடாது, சும்மா உச்ச சுருதியில் சோக்கா பாடுவாங்க!)

//பதிவொன்று
போட்டால்
பலநூறு
பின்னூட்டம்
பெறுகின்ற
கொத்தனார்
இலவசம்!//

ஏற்கனவே எடுப்பார் கைப்புள்ளையா கூப்பிட்ட இடமெல்லாம் போயி பதிவு போடறேன். நீங்க வேற இலவசமுன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டுனா, நம்ம கதி, லேடிஸ் காலேஜ் போன மாதவன் நிலமையாகிடப் போகுது. கொஞ்சம் கருணை காட்டுங்க ஐயா!

இலவசக்கொத்தனார் said...

//அகில பிரபஞ்ச மண்டூகங்கள் சார்பாக முதன் முதலாக குரல் கொடுத்தது நான் தான் என்று தமிளு கூறு போடும் நல்லுலகம் நன்றறியும்... //

ஹாஹாஹா!

இலவசக்கொத்தனார் said...

//மண்டூகங்கள் சார்பா பொன்ஸ் ஆரம்பிக்கப்போற வெண்பாப் போராட்டதுக்கு என் முழு ஆதரவையும்
அளிக்க நான் தயார்.//

ஆஹா டீச்சர் வந்தாச்சு. டீச்சர் வந்தாச்சு. ஆனா நம்ம பதிவ பத்தி ஒண்ணும் சொல்லக் காணுமே! போராட்டம்ன்னா போதுமே ஒண்ணு சேர்ந்துடுவீங்களே. இந்த பொம்பிளைங்களே இப்படித்தாம்பா! :)

//அப்படியே வெண்பான்னா என்னன்னு யாராவது சொல்லுங்களேன். புண்ணீயமாப் போகும்.//

அட அதுதான் தலை தலையா நானும் வாத்தியும் அடிச்சுக்கறோமே. அங்க வந்து பாக்கறது. என்னதான் டீச்சரா இருந்தாலும் தொடர்கல்விக்காக அடுத்தவங்க எடுக்கற வகுப்புக்குள்ளையும் எட்டிப் பார்க்கலாமில்ல.

//கொத்ஸ், நம்மளை மிரட்டுறாருப்பா:-))) //

கடவுளுக்கு யாரு கிட்ட பயம்ன்னா அவரோட மிகச் சிறந்த பக்தன் கிட்டதானாம். உங்களுக்கும் உங்களின் சிறந்த மாணவன் கிட்ட பயம் இருக்கறதுல தப்பே இல்லை டீச்சர்! ஹிஹி!

இயற்கை நேசி|Oruni said...

இங்க யாருங்க (மண்டூகம்=) தவளைப் பசங்களப் பத்தி தப்பா பேசுறது. இங்க ஒருத்தன் இருக்கேன் மண்டூகங்களுக்கு சப்போர்ட்டா ஞாபகம் இருக்கட்டும் ;-))

இலவசக்கொத்தனார் said...

வாருமய்யா இ.நே.

தலைப்பு வைக்கும் போதே உம்மைத்தான் நினைச்சேன். என்ன இவ்வளவு லேட்டு?

நினைச்ச நான் உமக்கு ஒரு பதிலும் ரெடி பண்ணி வெச்சுருக்க மாட்டேனா? இதோ பிடியும்.

நம் புவியின் சீரழித்தலை நமக்குக் காட்டுவது இம்மண்டூகங்கள். ஆகையால் அவைதான் நமக்கு இயற்கை ஃபார் டம்மீஸ் பதிவு போட வேண்டும். ஆனால் அவைகளுக்கு நாம் எதாவது சொல்லித் தர முயன்றால் என்ற நவீனத்துவ எண்ணத்தின் பிரதிபலிப்பே இப்பதிவு.

அவைகள் கவுஜ எழுதும் அளவு மோசமில்லை என்பதால் எழுதப்பட்ட கவுஜைகளைத் திறனாய்வு செய்யச் சொல்லிக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில்தான் இப்பதிவு. :)

மற்றபடி இயற்கையின் நலத்தைக் கூறும் வெப்பமானிகளாக இருக்கும் (உம்ம பதிவு எல்லாம் படிக்கிறேன் பாருங்க) மண்டூகங்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் (அப்பா, இந்த வார்த்தையை பயன்படுத்தணும்ன்னு ரொம்ப நாள் ஆசை) இல்லை. போதுமா!

இயற்கை நேசி|Oruni said...

/மற்றபடி இயற்கையின் நலத்தைக் கூறும் வெப்பமானிகளாக இருக்கும் (உம்ம பதிவு எல்லாம் படிக்கிறேன் பாருங்க) மண்டூகங்களை அவமரியாதை செய்யும் எண்ணம் எனக்கு கிஞ்சித்தும் (அப்பா, இந்த வார்த்தையை பயன்படுத்தணும்ன்னு ரொம்ப நாள் ஆசை) இல்லை. போதுமா!//

அப்பொ இந்தப் பதிவு போட என் தவளைங்கதான் காரணமுன்னு சொல்லுங்க. மனசில நின்னா சரி, அம்புட்டுத்தான் நமக்கு வேணும்.

இலவசக்கொத்தனார் said...

//அப்பொ இந்தப் பதிவு போட என் தவளைங்கதான் காரணமுன்னு சொல்லுங்க. மனசில நின்னா சரி, அம்புட்டுத்தான் நமக்கு வேணும். //

அதுதான் உமக்கு வேணும். நமக்கு என்ன வேணும் தெரியுமில்ல. மறக்காம எல்லா பதிவுக்கும் வந்து ஆவன செய்யணும் என்ன? :)

Unknown said...

யப்பா...

ஆட்டொவுக்கு திறனாய்வுன்னு சொன்னதும் ஓடிவந்து பாத்தா இங்கேயும் நம்ம கால்கரி கொண்ட கவ்பாயை வாரு வாரிருக்கீங்க.அதுவுமில்லாம வீடு கட்டினா ஆவின் டோ வரும்ங்கறீங்க...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இந்த ஊரில் ஆவின்டோ ந்னா ஸ்டேக்கை கொண்டு வந்து நீட்டிடுவான்.....

என்ன ஊரப்பா இது?

இலவசக்கொத்தனார் said...

//இந்த ஊரில் ஆவின்டோ ந்னா ஸ்டேக்கை கொண்டு வந்து நீட்டிடுவான்.....

என்ன ஊரப்பா இது?
//

அழாதீங்க நம்ம ஊர் பக்கம் வாங்க. நல்லா சாப்பிடலாம். அதோட இப்போ சரவணபவன் வேற் திறக்கப் போறாங்க. இனிமே எஞ்சாய்தான்.

Unknown said...

பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!

பார் த் திரு...
திரு ஆண்மகனைக் குறிக்கும் சொல் சோ
ஆண்மகனைப் பார்க்கச் சொல்லுகிறார்.

ஒரு நாள்
காலத்தின் அவசியத்தை சூசகமாய் கவிஞர் விள்க்குகிறார்

கா த் திரு...
அந்த ஆண்மகன் பார்க்கததால் 'கா' விடுகிறார் கவிஞர்

என க் கும்
இங்கு என க் கும் என் இருப்பதைத் திருப்பிப் படிக்க வேண்டும்
கும் என

க விதை வ ரும்!
கடைசி வரியில் வேளாண்மையின் சிறப்பைக் கூறுகிறார் கவிஞர்

அதாவது
பார்க்காத ஆண்மகனிடம் கா விடும் தலைவியானவள்
ஒரு நாள் தானும் கும் என ஆகிவிடும் நிலையில் தானாய் கவிதை வரும் எனக் கூறுவது ஒரு பொருள்

இன்னொரு பொருள்
பார்த்திரு காத்திரு விவசாயப் பெருமகனே
ஒரு நாள்
கும் என விதை வரும் விவசாயம் செய்து வேளாண் பெருமை அடைவாய் அது இன்னொரு பொருள்

யப்பா சாமீ இதுக்கு மேல என்னால்ல முடியல்லடா

Unknown said...

புலிக்கேசியின் அவையில் கவிப் பாடிய புலவர் யார்ன்னு இப்போத் தான் தெரியுது கொத்ஸ் இப்போத் தான் தெரியுது அது நீங்கத் தானா.... கைப்பு குரூப் சும்மா விட்டுருச்சு.. இம்சை அரசன் குரூப்ன்னா தலைக் கீழேக் கட்டி மூக்குல்ல பொடித் தூவி பொலம்ப விட்டுருவானுங்கப் பாத்துத் த்லைவா.. ஏற்கன்வே முதுகுல்ல அட்லாஸ் லோடு வேற இருக்கு தாங்கணும்ய்யா...

ILA (a) இளா said...

//பார்த்திரு காத்திரு விவசாயப் பெருமகனே
ஒரு நாள்
கும் என விதை வரும் விவசாயம் செய்து வேளாண் பெருமை அடைவாய் அது இன்னொரு பொருள்//.
யப்பா என்னால முடியல சாமி.

எனக்கு "ஒரு நாள் கும் என உதை வரும்"
அப்படின்னு தான் தெரியுது.
இம்சை படம் பார்த்தேன் அப்பு.

புலிகேசி: ஞானம்
தேவு: யானை..

இந்த கதை இன்னும் யாருக்கும் தெரியாது, கொஞ்ச நாள் கழிச்சு தெரிய வரும். அப்புறமா சொல்றேன்.

ILA (a) இளா said...

இம்சை படத்தில் ஞானம் என்றால் யானைன்னு சொல்ற தேவு என்ன நினைச்சு சொல்றாருன்னா.. ஞானத்துக்கு பேரு பொன்ஸ். அப்படியா பொன்ஸ்?

இலவசக்கொத்தனார் said...

//யப்பா சாமீ இதுக்கு மேல என்னால்ல முடியல்லடா //

தேவு தம்பி. ரொம்ப மேலோட்டமான திறனாய்வா இருக்கே. உங்களை மாதிரி அட்வான்ஸ்ட் மாணவர்கள் எல்லாம் இன்னும் நல்லா போடவேண்டாமா?

அந்த கும்முன்னு கவிதை மட்டும் சரியா பிடிச்சீங்க. :)

இலவசக்கொத்தனார் said...

//விட்டுருவானுங்கப் பாத்துத் த்லைவா.. ஏற்கன்வே முதுகுல்ல அட்லாஸ் லோடு வேற இருக்கு தாங்கணும்ய்யா... //

இதுக்கெல்லாம் புலிகேசி படத்தோட டி.வி.டி அனுப்பாம இருந்தீங்கன்னா எப்படி பதில் சொல்லறது? சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்கப்பா.....

இலவசக்கொத்தனார் said...

//இந்த கதை இன்னும் யாருக்கும் தெரியாது, கொஞ்ச நாள் கழிச்சு தெரிய வரும். அப்புறமா சொல்றேன். //

இந்த ஒரு தகுதி போதுமய்யா நீர் கவிஜ எழுத. நல்லா நிறையா எழுதுங்க. அப்படியாவது எனக்கு தலைமுடி வெட்டிக்கிற செலவு மிச்சமாகும்.

Unknown said...

தலைவரே இந்தக் கவிதைப் பெண்களுக்கு எதிரானதாக அமையப் பெற்றுள்ளதென புலிக்கேசி அரசவைக் கவிஞர் கொள்ளுக்கு ஊசியார் கூறுகிறாரே உண்மையா?

இலவசக்கொத்தனார் said...

//இம்சை படத்தில் ஞானம் என்றால் யானைன்னு சொல்ற தேவு என்ன நினைச்சு சொல்றாருன்னா.. ஞானத்துக்கு பேரு பொன்ஸ். அப்படியா பொன்ஸ்?//

அப்போ ஞானம் இருக்கறவங்கள ஞானப்பழம் அப்படின்னு சொல்லுவாங்களே! நீங்க பழமா பொன்ஸ்?

Unknown said...

அதாவது பார்த்திரு காத்திரு...

பார் என்றால் பூமி.. காலம் காலமாய் பூமியைத் தாயாய் பெண்ணுருவம் கொண்டு வணங்கி வருகிறோம். அது காற்று.. இங்கு காத் எனச் சுருக்கப் பட்டுள்ளது... காற்றையும் பெண்ணாய் பார்ப்பது தமிழ் பண்பாடு...

ஆனால் மரபை மீறி கவிஞர் கொத்ஸ் பாரைத் திரு வென விளிக்கிறார்.. அப்புறம் காத் தை திருவென விளிக்கிறார்.. இது பெண்ணுலகிற்கு கொத்ஸ் இழைக்கும் மாபெரும் மன்னிக்க முடியாத குற்றம் என கொள்ளு ஊசியார் கொந்தளிக்கிறார்...

தலைவாப் பதில் சொல்லுங்க

இலவசக்கொத்தனார் said...

//தலைவரே இந்தக் கவிதைப் பெண்களுக்கு எதிரானதாக அமையப் பெற்றுள்ளதென புலிக்கேசி அரசவைக் கவிஞர் கொள்ளுக்கு ஊசியார் கூறுகிறாரே உண்மையா? //

தப்பா புரிஞ்சுக்கிட்டு இந்த சின்னப் பசங்க அடிக்கற லூட்டி தாங்கலைடாப்பா. நமக்கு வோட்டுப் போடற தாய்க்குலத்தை நான் அவமதிப்பேனா?

தம்பி தேவு, நல்ல உள்மனசுக்குள்ள இருக்கற அந்த விளக்கத்தை எடுத்துப் போடப்பா...

பொன்ஸ்~~Poorna said...

//புலிகேசி: ஞானம்
தேவு: யானை...//

//இம்சை படத்தில் ஞானம் என்றால் யானைன்னு சொல்ற தேவு என்ன நினைச்சு சொல்றாருன்னா.. ஞானத்துக்கு பேரு பொன்ஸ். அப்படியா பொன்ஸ்?//

இளா, தேவ், இந்த ரெண்டு வரியே புரியலியே.. அதுக்கே தனியா திறனாயணும் போலிருக்கே..
கீரை ஆய்ஞ்சே நாளாச்சு.. இதெல்லாம் எப்படி ஆயப் போறேனோ!!!

இந்த அழகுல எனக்கு "பழம்" பெறும் பட்டம் வேற!! ம்ஹும்..

நிலா said...

கொத்ஸ்

என்ன பதிவு போட்டாலும் இப்படி அலம்பல் பண்ணியே தீர்றதுன்னு ஒரு முடிவோட இருக்கீறா?

உங்களுக்கேத்த ஒரு சங்கமும் அமைஞ்சிருச்சி... நடத்துங்க நடத்துங்க

இந்தத் தடவை ஆயிரமா?

இலவசக்கொத்தனார் said...

//தலைவரே இந்தக் கவிதைப் பெண்களுக்கு எதிரானதாக அமையப் பெற்றுள்ளதென புலிக்கேசி அரசவைக் கவிஞர் கொள்ளுக்கு ஊசியார் கூறுகிறாரே உண்மையா? //

சரி, நானே ஒரு விளக்கம் சொல்லறேன்.

பாருங்க திரு அப்படின்னா செல்வம் அப்படின்னு அர்த்தம். திருமகள் அப்படின்னும் சொல்லலாம். செல்வம் சொத்து அப்படின்னாலே நினைவுக்கு வரது நிலம்தான் அதாவது பூமி. கொஞ்சம் பூமி போதுமுன்னு யாரு சொல்லுவா இந்த உலகமே வேண்டுமல்லவா? அதுனாலதான் பார்த்திரு. அதாவது இந்த உலகமே செல்வம்.

ஆனா கொஞ்சம் யோசிச்சிப் பார்த்தீங்கன்னா நிலம் நீச்சா செல்வம்? நல்ல ஆரோக்கியமான வாழ்வு இல்லைன்னா அதெல்லாம் எதுக்கு? அதனால ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். அதுக்கு உயிர் வேண்டும் அதாவது மூச்சுக் காற்று வேண்டும். அந்த மூச்சுதான் நம்ம செல்வம். அதனால காத்திரு.

சரி. நல்ல ஆரோக்கியம் இருக்கு, நிலபுலன் இருக்கு. அப்போ மனசு என்ன பண்ணும்? எல்லா சுகங்களையும் அடைய இங்கும் அங்கும் ஓடும். அதனால நிதானமிருக்காது, ஆனா அந்த சந்தோஷமெல்லம் நிலையானது இல்லை அப்படின்னு புரிஞ்ச உடனே மனசு அமைதியாகும்.

அதுவரை பார்த்த உலகையே அப்போ பார்க்கும் போது மனசுல கவிதை வரும். அந்த நிலையை அடைய ஆசைப்பட்டுதான் எனக்கும் ஒரு நாள் கவிதை வரும் அப்படின்னு சொல்லறான்.

இப்போ படியுங்க....

பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!

இதுல நம்ம பெண்ணுலகிற்கு இழைக்கும் மாபெரும் மன்னிக்க முடியாத குற்றம் என்ன இருக்கு? சின்னப்பசங்க சத்தம் போட்டா கண்டுக்காம விடுங்க, தேவு!

இலவசக்கொத்தனார் said...

//இளா, தேவ், இந்த ரெண்டு வரியே புரியலியே.. அதுக்கே தனியா திறனாயணும் போலிருக்கே..
//

ஏம்ப்பா நம்ம ஊரிலே இல்லாதவங்க எல்லாருக்கும் ஒரு குறுந்தகடு அனுப்புங்கப்பா.

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்//

நிலாக்கா, நீங்களா? நம்பமுடியவில்லை... (சிங்காரவேலனில் கமல் சொல்லறா மாதிரி படிச்சுக்குங்க)

//என்ன பதிவு போட்டாலும் இப்படி அலம்பல் பண்ணியே தீர்றதுன்னு ஒரு முடிவோட இருக்கீறா?//

எப்பவுமே பதிவு போட்ட பிந்தான் அலம்பல். இங்க பதிவே அலம்பல். சரி, அப்படி என்ன அலம்பல் கண்டீங்க?

//உங்களுக்கேத்த ஒரு சங்கமும் அமைஞ்சிருச்சி... நடத்துங்க நடத்துங்க

இந்தத் தடவை ஆயிரமா? //

அதெல்லாம் நடத்துவோமில்ல. ஆயிரம் எல்லாம் வேண்டாம். அளவோடு பெற்று வளமோடு வாழ்வோம். (அளவு என்னன்னு மட்டும் கேட்காதீங்க) :D

VSK said...

-கொத்தனாரே1
நீங்கள் ஆ.எ.பா. தி.ஆ.!

பார்= உலகம்
திரு= செல்வம்

கா= சோலை
திரு= செல்வம்

ஒரு= ஒன்று
நாள்= தினம்
என= என்று
கும்= கும்பி போலக் குழம்பாதே

க= மெய்யாகவே [தமிழின் முதல் மெய்யெழுத்து 'க']
விதை= மேலே ஓடு மூடிய உயிர்

வரும்= வந்தே தீரும்!

பரந்து விரிந்த இவ்வுலகம் ஒரு செல்வம்!
அதில் பச்சைப்பசேலென்று ஆடுகின்ற சோலைகள் பெருஞ் செல்வம்!
இச்சோலைகளை இன்றைய தினம் அழித்துக் கொண்டிருக்கின்ற
இயற்கை விரோதிகளை எண்ணி மனம் மயங்காதே!
ஓடுகளை மேலே மூடிக்கொண்டிருக்கின்ற
வீரியம் மிக்க உயிர் உள்ள விதைகளைக்
கொடுத்த பின்பே அவை அழிகின்றன!
நிச்சயமாக ஒருநாள் அவை யாவும்
மரமாகும்!
மரங்கள் சோலையாகும்!
இவ்வுலகம் வளம் பெறும் !!
கலங்காதே!

இன்றைய தமிழினப் போரில் உயிர்களைச் சிந்தி பலர் மாண்டாலும்
வெற்றி கிடைக்கும் வரை விதைகள் மரமாகி
நாளைய தினம் வெற்றிக்கனிகளைக் கொடுத்தே தீரும் என்ற சீரிய கருத்தைக்
கவிஞர் முன்வைக்கிறார்!

ஆஹா! என்ன உயரிய கருத்து!


இந்த அரிய கருத்தினைச் சொன்ன கொத்தனாருக்கு ஒரு ஜே!

அடுத்த நூறு தொடரட்டும்!
:))

இலவசக்கொத்தனார் said...

எஸ்.கே சாதாரண ஆசாமியா நீங்க. ஆ! சாமி!

உங்க தமிழுக்கு முன்னாடி நான் என்ன சொல்ல? சரண்டர் சாமி சரண்டர்!

ILA (a) இளா said...

முதல் பதிவே அசத்தல் பதிவுங்க
Hats off கொத்ஸ். எல்லாரும் கருத்து சொல்லுவாங்க. நீங்களோ செதுக்கிட்டீங்க.

கவிதை எழுதவே ட்யூஷன் வைக்கிற நம்ம கைப்புவ இப்படியா மிரட்டுறது.
"ஐயா, இனிமே இந்த பக்கமே வர மாட்டேன், உங்க சங்காத்தமே வேண்டாம்டா சாமி. 4 வரி போட்டுட்டு 40 பக்கத்துக்கு விளக்கம் சொன்னா யாரால முடியும்" அப்படின்னு சொல்லிட்டு கைப்பு ஓடிப்போயிட்டாராமே உண்மையா?.

இலவசக்கொத்தனார் said...

இளா,

அவரு வந்துகிட்டுதானே இருக்காரு. இது என்ன கதை?

யோவ் கைப்பு, வந்து ஒரு உள்ளேன் ஐயா போடய்யா.

கதிர் said...

இப்பாதாங்க தெரியுது எத்தனை பேரு இதனால பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு!

இலவசக்கொத்தனார் said...

//இப்பாதாங்க தெரியுது எத்தனை பேரு இதனால பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு!//

படிச்சதுனால பாதிப்பா இல்லை படிக்காம விட்டதுனாலையா? சரியா சொல்லுங்க தம்பி.

இதுவே நம்ம வெண்பா கிளாசுக்கு வந்தீங்கன்னா, வெண்பா எழுத சொல்லித் தருவோம். அங்க நீங்க வந்தீங்கன்னா 'பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு' சொல்ல மாட்டீங்க. 'பா அதிகப்பட்டிருக்காங்க' அப்படின்னு சொல்லுவீங்க. :)