Tuesday, December 14, 2010

விடாது துரத்தும் எக்ஸாம் பூதம்

நான் ஒரு டம்மி பீசுங்கறது இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கொஞ்ச நஞ்ச டவுட் இருந்தா இதைப் படிச்சுப் பாருங்க.

*******************************

"சார் நான் கோபி பேசறேன்"

"சொல்லு கோபி சௌரியமா?"

"நல்லா இருக்கேன் சார், நீங்க சௌரியம்தானே, கிருஷ்ணன் சொன்னான் சார்"

"ஆமாம்பா அவசியம் வந்துடு"

"நிச்சயமா சார்"

"MJN சொன்னாரு ஒன்ன chief கெஸ்டா போடா வேணாம்னு சொல்லிட்டியாமே, ஏம்பா"

"கிண்டல் பண்ணாதிங்க சார் "

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிறது பள்ளிப்படிப்பு முடித்து. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ முறை கும்பகோணம் சென்றிருக்கிறேன். ஆனால் பள்ளிக்கூடம் போக ஒரு முறையும் தோன்றவில்லை. சொல்லப் போனால் காசி தியேட்டர் போகப் பள்ளியைக் க்ராஸ் செய்துதான் போக வேண்டும். அப்போதும் பள்ளி செல்லத் தோணியதில்லை. ஒரு வேலை மழை வந்திருந்தால் ஒதுங்கி இருப்பேனோ என்னவோ.

"டேய் பஸ் ஏறிட்டேண்டா"

"சரி, பத்து மணிக்கு வந்துரு"

"ஏன், விழா சாயந்தரம் தானே"

"கொடி கட்றது, நாற்காலி போடறது இதுக்கெல்லாம் ஆள் வேணாமா, நீதான் செய்யணும் அதெல்லாம்"

"என்னடா சொல்ற"

"காலம்பர வேற ஒரு விழா, 9 மணிக்கு வெங்கட்ரமணா வந்துரு, டிபன் சாப்டுட்டு ஸ்கூலுக்குப் போயிடலாம்"

" சரி காசி தியேட்டர்ல என்ன படம் ஓடுது"

" MR சார்கிட்ட பேசுறியா பக்கத்துலதான் இருக்கார்"

" போன வைடா சாமி"

ஆண்டு முழுவதும் நடந்த பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கும் விழா காலை பத்து மணிக்கு ஆரம்பமானது. "ஏன்டா, நான் படிக்கிற காலத்துல எனக்கு ஒரு பரிசும் கொடுக்கல" என்றேன். " அதுக்கெல்லாம் ஸ்கூலுக்கு ஒழுங்கா வரணும். போட்டில கலந்துக்கனும். ஜெயிக்கணும். தட்சிநாமுர்த்தி ஞாபகம் இருக்கா ?" என்றான் கிருஷ்ணன்.

என் நினைவு பின்னோக்கிச் சென்றது. எந்தப் போட்டி என்றாலும் அவன்தான் முதல் பரிசு வாங்குவான் - கோலம் மற்றும் தையல் போட்டிகளைத் தவிர. எனக்குப் பொதுவாக எந்தப் போட்டியிலும் விருப்பம் இருந்ததில்லை (சீ சீ இந்தப் பழம் புளிக்கும்) . இருந்தாலும் சில போட்டிகளில் கலந்துகொண்டேன். இப்போது எல்லாரும் சொல்கிறார்களே பல்பு வாங்குதல் என்று. நான் கலந்து கொண்ட எல்லாப் போட்டிகளிலும் சீரியல் பல்பு செட் வாங்கினேன். தட்சிநாமுர்த்திக்கு உடனே போன் செய்து பேசினேன். "இப்பவும் பொறாமையா இருக்கா அவன நெனச்சா?" என்றான் கிருஷ்ணன். " லைட்டா" என்றேன்.

முதல் முறையாகத் தலைமை ஆசிரியர் அறைக்கு எந்த விதமான பிரச்னை பயமுமில்லாமல் நுழைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானக் கண்காணிப்பாளர் என்னையே உற்றுப் பார்த்து கிரௌண்ட் கேட்டின் பூட்டை ஒருமுறை உடைத்தது நான்தானே என்று கேட்டு உறுதி செய்து கொண்டார் (அவனா நீயி? ).

மாலை மூன்று மணிக்கு விழா ஆரம்பமானது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் ஆகியோருக்குப் பரிசுகளை வழங்க ஆரம்பித்தனர். (பய புள்ளைக கர்சிப் பாக்டரியே வச்சிருப்பாக போலிருக்கே, பக்கு பக்குன்னு எடத்தப் புடிக்குதுக). விழா முடிந்ததும் தலைமை விருந்தினர்களை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கிகொண்டனர். நானும் என் பேனாவை எதற்கும் இருக்கட்டும் என்று திறந்து வைத்துக்கொண்டேன் (நானும் ரௌடிதான்). என் நிலைமை கடைசியில் ஆளில்லாத டீக்கடை போலாகிவிட்டது.

இன்னும் கொஞ்சம் (?!) மெனக்கெட்டு நன்றாகப் படித்திருக்கலாமோ என்று திடீரென்று தோன்றியது. "போன வாரம் கோகிலா வந்துருந்தப்ப ஒன்ன விசாரிச்சாப்பா " என்றார் MR சார் . எப்போதோ தொலைத்த பொருள் இப்போது கிடைத்த திருப்தி எனக்கு. மன நிறைவுடன் பஸ் ஏறினேன்.

"எங்கப்பா போயிருந்த நேத்தி" என்றான் பொடியன்

" எங்க ஸ்கூலுக்கு" என்றேன் பெருமிதத்துடன்

" நீ இன்னும் ஸ்கூலே படிச்சு முடிக்கலையா" என்றான் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று என் மனதுக்குப் பட்டது.

"நீ என்னோட படிப்பப் பத்திப் பொடியன்கிட்ட எதாவது சொன்னாயா" என்றேன்

"இல்லைங்க ஒங்க அம்மாதான், அப்பா மாதிரி இருக்காதேன்னு நேத்தி சொல்லிக்கிட்டு இருந்தாங்க" என்றார் தங்க்ஸ்.

" ஆமாண்டா நாந்தான் சொன்னேன், என்ன இப்போ" என்றார் அம்மா.

" நான் 2000 த்துல அந்த எக்ஸாம்....." என்று முடிப்பதற்குள்

" கிருஷ்ணா அங்கிள் சொன்னாரு, ஏதோ Y2K, கம்ப்யூட்டர் ப்ராப்லம் அதனாலதான் நீ பாஸ் ஆனியாமே" என்றான் பொடியன்.

அம்மாவும் தங்கமணியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். நான் முறைக்க ஆரம்பித்தேன். ஒத்துக்கறேன் ஒத்துக்கறேன். நான் பல்பு வாங்கினத ஒத்துக்கறேன். ஆபீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன் என்றேன் மனதுக்குள்.

"ஏங்க அந்த ப்ரோமோஷன் எக்ஸாம் என்னாச்சு, அஞ்சு வருஷமா எழுதுறிங்களே" என்றார் தங்கமணி

மானங்கெட்ட மனசாட்சி வெளில எல்லாம் கேக்குது

6 comments:

அபி அப்பா said...

அட நீங்க கும்மோணம் டவுன் ஐஸ் கூலா? அப்டி போடு!

Vidhya Chandrasekaran said...

\\இன்னும் கொஞ்சம் (?!) மெனக்கெட்டு நன்றாகப் படித்திருக்கலாமோ என்று திடீரென்று தோன்றியது. \\

ரொம்ப லேட்ட்ட்ட்டா தோணிருக்கு:)

Unknown said...

ரசனையாக விவரித்துள்ளீர்கள். பல்பு, பழம் புளிக்கும், பயமின்றி தலைமையாசிரியர் அறைக்கு சென்றது என ஜாலியாக கொண்டு செல்கிறீர்கள்.

Anonymous said...

http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை


அனைவரும் வருக !

சி.பி.செந்தில்குமார் said...

?>>>நான் ஒரு டம்மி பீசுங்கறது இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்.

ஹா ஹா இதுவரை தெரியல .இப்போ தெரிஞ்சிடுச்சு

சி.பி.செந்தில்குமார் said...

இண்ட்லி ல இணைக்கலையா?