Sunday, December 10, 2006

களை கட்டும் "தல" கச்சேரி

தலயின் தீர்க்கமான முடிவினில் சங்கம் மொத்தமும் நடுங்கி நிற்க...

"போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு.." பாடலைத் தல சங்கராபரணம் ஹீரோ ரேஞ்சுக்கு ராகமாய் முணுமுணுத்தப் படி தன் அறைக்குப் போனார்.


அதுக்கப்புறம் தல பலவாறு யோசிச்சி யோசிச்சி நம்ம பயலுவே என்னமோ பெரிய பெரிய பேரா சொல்லுறானுவே. நமக்கு தமிழே விட்டா வேறே பாசை எதுவும் தெரியாது. நமக்கு தெரிஞ்ச தமிழில்லாத ஒரு பாட்டு சிங் இன் த ரெயின்'தான். இப்போ வேறே என்ன பண்ணுறது, என் இனிய எதிரி வேறே ஒன்னோட கொரலு நல்லாயிருக்குன்னு வேறே சொல்லிட்டாப்பலே..! அதுக்காக இந்த சீசன்லே கச்சேரியும் பண்ணிரலாமின்னு சபா ஒன்னுலே வேறே துண்டை போட்டு இடத்தே வேறே பிடிச்சி குடுத்துருக்காரு. நமக்கு நல்லாதான் பாடவருமின்னு உலகத்துக்கே தெரியும். ஆனா இது ஒரு சத்தியச்சோதனையா ஆகிறுமே. நல்லா பாடலேன்னா மொதல்லா கல் கொண்டு எறியறப் பயலுவே நம்ம சங்கத்து சிங்ககள்தான், அதுவே நல்லா இருந்தா போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டுறது பத்தாதுன்னு வெள்ளைமாளிகையிலிருந்து ஐநா சபை வாசல் வரைக்கும் ஒட்டி அமர்க்களப்படுத்துவானுக.!

அடபாவி அடபாவி என்னை இப்பிடி தனியா புலம்ப வச்சிட்டானுவேலே!! சரி அவிங்ககிட்டே கேப்போம் ஏதாவது ஐடியா இருக்கான்னு??

தல தன் அறையிலிருந்து மின்னலென வெளிவருகிறார். அங்கு வெட்டி கணக்கு லெட்சரில் ஏதோ எழுதி கொண்டிருப்பதை பார்க்கிறார்.

"ஏலேய் கட்டரு, என்னா எழுதுறே?"

"தல, அ.வா'வுக்கு வரவேறப்புக்கு ஆன செலவே பற்று வைக்கிறேன்!"

"ஓ எம்பூட்டு"

"கொஞ்சம்தான் எவ்வளவு அதிலே பணமின்னு இருந்துச்சோ அதே விட 15000 ருபா கூட "

"அடபாவிகளா, சங்கத்து கணக்கிலே இருந்த பணத்தே தீர்த்ததும் பத்தமே அதிலே நஷ்ட கணக்கு வேறே எழுதுறீங்களா? அப்பிடியென்னா செலவு பண்ணீங்க??"

"சவுண்ட்பார்ட்டிக்கு ஒரு ஆளு உசரத்துக்கு ஸ்பீக்கரு கட்டினோம்."

"என்னாது? ஸ்பீக்கரு பெட்டியா? வெளியே ரெண்டு கொழா ரேடியாதானாய்யா கெடக்கு? அதிலே ஒன்னுலே கொண்டையே வேறே காணோம்? ஆனா உங்களே மாதிரி புரட்டு கதையை சொல்லுறதுக்கு அடிச்சுக்க ஆளே கிடையாதுப்பா!"

"ஏன் தல உள்ளேதானே இருந்தீங்க? இப்போ எதுக்கு வெளியே வந்து சவுண்ட்?" ன்னு போர்வாள் எகிற

"கேட்டியா ஒரு கேள்வி.. ரைட்டுதான் அந்த கேள்வி! செவனேனு தானய்யா இருந்தேன். நான் எந்த வம்பு தும்புக்காவது போயிருக்கேனா..சொல்லு ? இது டிசம்பரு மாசம் நாமெல்லும் கச்சேரி வச்சிருவோமின்னு எனக்குள்ளே இருந்த சங்கீத ஆசையே தூண்டிவிட்டிங்க.. இப்போ அது அனலா தகிச்சு தீயா கொழுந்து விட்டு எரிய ஆரம்பிச்சிருச்சு."

சட்டென்னு ஏதோ ஞாபகம் வந்ததாய் தேவ்.. தலையே கோணலா திருப்பி விட்டத்தே வெறிக்கிறார்.

"ஆமா தல.. அந்த கச்சேரிலே விளம்பரம் செய்யினுமின்னா சென்னை கச்சேரியே அணுகவுமின்னு நோட்டிஸ் பண்ணினேன், ஆனா இப்போ அதிலே மா மன்னாரு சாப்ட்வேர் கம்பெனி வேறே போயிட்டிருக்கு!"

"ராஸ்கல்! சங்கம் டெக்னாலாஜிஸ்'க்கு போட்டி கம்பெனி ஆரம்பிக்கிறீயா நீயி?"

"அதெல்லாம் இல்லே தல... சங்கத்து டெக்னாலாஜிஸோட இணைந்தே இதுவும் நடக்கும்."

"என்னோமோ போ ஒன்னை மாதிரியே அதுவும் பிராடுத்தனம் பண்ணமே இருந்தா சரி!"

"தல ஒனக்கு இப்போ என்னா வேணும்?"ன்னு கோபமாய் தேவ் கேட்க

"எனக்கு குச்சி மிட்டாயி வேணும்! ஏலேய் அப்போயிருந்து என்னா சொல்லிக்கிட்டு இருக்கேன்னு தெரியலேயா? நான் கச்சேரிலே பாட்டு பாடணும் அதுக்கு நீங்கெல்லாம் ஒரு ஐடியா கொடுப்பீங்கன்னு வந்தேன்."

"தல ஒன்னோட குலப்பெருமையே சொல்லுற Sing the Rain பாட்டே தமிழிலிலே முழிபெயர்ந்து அதே அப்பிடியே பாடிருவோமா." ன்னு சிபி கேட்க, தல சட்டென்னு டென்சனாகி, சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க,சிபி தலயே முறைக்க,தல சிபியே முறைக்க, இப்பிடியே முறை வச்சு முறைப்பு படலமா இருக்கிறப்போ தீடீரென்னு ஒரு கொரல், குடுத்தது கட்டரு..

"தல, தள நீங்க ரெண்டு பேரும் முறைச்சத யாராவது சினிமாகாரன் பார்த்திருந்தா ரெண்டுபேரும் சேர்ந்து போட்டி சாங் போட்டுறுப்பான்! பாட்டுக்குள்ளே ரெண்டு பேரும் சண்டை, வாக்குவாத போருன்னு கொண்டு வந்திருப்பாங்க"

"அயோக்கிய அப்ரெண்டிஸ்! இங்கே என்ன நடக்கிதுன்னு தெரியமே என்னா பேச்சு பேசுறே? இதுக்குதான் ஓவரா தெலுங்கு படம் பார்க்காதேன்னு சொல்லுறது, இது ஒரு பார்வை பரிமாற்ற போர்முறை, இதே நீ சீக்கிரமே கத்துக்குவே!"

"தல ஒன்னு பண்ணுவோமோ! நீங்க மேடையிலெ ஒட்கார்ந்து பாடுறமாதிரி ஆக்ட் கொடுங்க, நான் பின்னாடி இருந்து டேப்ரிக்கடருலே பாட்டு போட்டு விடுறேன்."ன்னு பாண்டி சொல்ல

"ஏலேய்! தெரியுமில்லெய் ஒன்னோட வேலை என்க்கிட்டே ஆவாதிடி, யாரவது அங்கிட்டு ஒரு பொண்ணு போச்சின்னா அது பின்னாடியே நீப்பாட்டுக்கு போயிட்டேனா நான் இங்கிட்டு ஒரெ பாட்டே திரும்ப திரும்ப பாடறமாதிரி அவிங்ககிட்டே மாட்டிக்கிட்டு ஒதை'தான் வாங்கணும்."

"தல ஒன்னு பண்ணலாம்! ஏதாவது ஒரு பாட்டு வாத்தியாருக்கிட்டே போயி செவனெனு பாட்டு கத்துக்கிட்டு வந்திரு, அப்பிடியே ஃபிரஷ்'ஆ நாலு பாட்டு பாடி அப்ளாஸ் வாங்கிரலாம்"

"யாருப்பா இது விவ்'ஆ., ம்ஹீம் நான் கும்பக்கோணத்துக்கு வழிக் கேட்டா கொட்டைப் பாக்கு ரூபாய்க்கு அஞ்சுன்னு ஏத்தமா பதிலே சொல்லுறே! ஏலேய் அப்ரெண்டிஸ்களா நீங்களாவது ஒரு ஐடியா சொல்லுங்க சாமீகளா"

"தல எம்.ஜீ.ஆரோட நாலு பாட்டு, சிவாஜியோட நாலு பாட்டு அதெய்யலாம் மேடையிலே பாடிரு, அதெல்லாம் இப்போ இருக்கிற ஆளுகளுக்கு சரியா தெரியாது, அதெல்லாம் ஒன்னோட பாட்டுன்னு நினைச்சிருவாங்க! என்னா சொல்லுறே" இது கட்டர்

"இது நல்ல ஐடியாதான், ஆனா சிலப்பேருக்கு அந்த பாட்டெல்லாம் தெரியும், ராயல் நீ என்ன சொல்லுறே??"

"தல, பழைய பாட்டுன்னா யாருக்குமே தெரியமே இருக்கிறது மகாலிங்கம்,தியாகராஜர் பாகவதர் பாட்டெல்லாம்தான். நீ அதேவே பாடிறலாம்!"

"ரைட்டேய், இதெல்லாம் மைண்ட்'லே வச்சிருக்கேன்.சரி நான் கச்சேரிக்கு போட்டுக்கிறதுக்கு டிரெஸ் வாங்கிட்டு வந்திய்யா ராயலு?"

"ம் இருக்கு தல! இந்த மஞ்சபையிலே சுருட்டி வைச்சிருக்கேன், இந்தா பாருங்க!"

"அடபாவி அப்ரெண்டிஸ், இது கலராய்யா? ஓரத்திலே படுத்து கிடக்கிற நொண்டி மாடுகூட என்னை தேடி வந்து நச்சுன்னு முட்டிட்டு போகுமிடா? ஏண்டா சட்டைன்னா மஞ்சகலரும்,உள்சட்டை கருஞ்செவப்பு கலரு, பச்சை கலருலே வேட்டியும்தான் கிடைச்சதா?"

"தல நீதானே சொன்னே? எதுவுமே ஒரு அட்ராக்டா செய்யினுமின்னு? அதுதான் போடுற டிரெஸிலே அட்ராக்டிவான கலரா தேடி கண்டுப்பிடிச்சேன்.!"

"சரி அதெல்லாம் ஓகே! யாராவது ஐடியா சொல்லுங்கய்யா?? எப்பிடி மேடையிலே பாடுறதுன்னு??"

"தல மேடையிலே ஏறி ஒனக்குன்னு இருக்கிற இடத்திலே உட்கார்ந்து, மைக்கே எடுத்து வாயை திறந்து பாடணும்!!"

"டேய் ராஸ்கல், ஒனக்கு வரவர ரொம்ப ஏத்தமா போச்சுலே பாண்டி! நான் என்ன கேட்டா நீ என்ன பதிலே சொல்லுறே? சுருதி சுத்தமா எப்பிடிய்யா பாடுறது? யாராவது சொல்லித் தொலைங்கய்யா சாமிகளா... சும்மா இருக்கிறவனே சொறிச்சு விட்டு வேடிக்கை பார்க்கிறதே உங்களுக்கெல்லாம் பொழப்பா போச்சுலே???"

"தல நான் ஒரு ஐடியா சொல்லுறேன்"ன்னு சிபி முன்னுக்கு வருக்கிறார்.

"ம் சொல்லு என்னருமை தளபதியே?"

"தல ஒரு வரியே நாலு அஞ்சு தடவை சும்மா திரும்ப திரும்ப பாடிக்கிட்டே இரு, அது போதும், அப்பிடியே கேட்கிறவங்களுக்கு ஒரு கச்சேரி கேட்கிற எபக்ட் வந்திரும். இதேமாதிரி செஞ்சேன்னு வை, ஒரு பாட்டே பாடி முடிக்க 15லிருந்து 20 நிமிசம் ஆகிறும், அப்பிடியே நாலுப்பாட்டுக்கு ரெண்டு மணிநேரமா இழுந்திரலாம். என்னா சொல்லுறே??"

"அதெல்லாம் சரிதான்! இப்போ என்ன பாட்டே பாடுறது? எனக்கு நல்ல குரல்வளம் இருக்கான்னு தெரியலே?"

"தல நீ பார்க்கதான் பென்சில்லே கோடு வரைஞ்சமாதிரி சரிரம்! ஆனா நீ பாடினா அது கட்டை சாரீரம்!"

"என்னாமோ தள! ஒன்னோட பேச்சே மலை மாதிரி நம்புறேன். இந்த ராகம்,தாளம்,பல்லவியோட பாடணுமே? அதுக்கு என்னா பண்ணுறது?"

"இப்பிடி பண்ணலாம்! கோவைக்கு ஒன்னோட ஹெலிக்காப்டருலே வந்துரு! நீயும் நானும் ராகம்,தாளம்,பல்லவிக்கு போயி ஒவ்வோரு ஷோ'வா பார்த்துட்டு படத்திலே இருக்குற நல்ல பாட்டெல்லாம் கச்சேரிலே வந்து சேர்த்து வச்சு பாடிரு! ஒவ்வொரு பாட்டுக்கு முன்னாடியும் ஒரு போர்டு'லே இது ராகமிலே பார்த்தது, தாளத்திலே பார்த்தின்னு சொல்லிறலாம்!!!"

"ஆனா ஒன்னே ஒன்னு தெரிஞ்சு போச்சு! உங்களளே எனக்கு ஒன்னத்துக்கும் சல்லிக்காசு'க்கு பிரயோசனமில்லன்னு நல்லவே தெரிஞ்சு போய்யா சாமிகளா??? போங்க போய் எனக்கு எப்பிடி ஆப்பு வைக்கலாமின்னு அமெரிக்காகாரன் அடுத்த நாட்டு மேலே குண்டு போடுறதுக்கு யோசிக்கிறமாதிரி பெரிய விஞ்ஞானிகளாட்டம் திங் பண்ணுங்க..."

தல இம்மாதிரி மனசொடிந்து பேசும் பேச்சைக் கேட்டு சங்கத்து சிங்கம்கள் அனைவரும் கவலையுறுகின்றனர்.

"தல நாமே ஒன்னு பண்ணலாம்! நமக்குதானே தெரியலே? வேறே யாராவது அதேபத்தி தெரிஞ்சவங்ககிட்டே கேட்டுப்பார்போமா?"

"ஆங்..பரவாயில்லேயே விவ், இம்பூட்டு நேரமா அமைதியா இருந்தாலும் நல்ல வாசகமா அதுவும் திருவாசகமாதான் சொல்லிருக்கே! இப்போதாய்யா எனக்கு நல்ல ஐடியா'வே வருது! நம்ம சங்கத்து தீரா தலைவி(வலி)யே காண்டக்ட் பண்ணுங்க.. இல்லேன்னோ அந்த விக்கிபசங்களே உசுப்பி விடுங்கய்யா?? அவங்க வந்து என்ன கர்ஜிக்கிறாங்கன்னு பார்ப்போம்... எனக்கு எப்பிடியாவது கச்சேரி பண்ணியே ஆவணும். ஐ வாண்ட் டூ இட் நவ்...

"தல இன்னோன்னு பண்ணலாம்? எனக்கு தெரிஞ்சு பெரிய பெரிய தலைங்கயெல்லாம் பாட்டு பாடி குழந்தைகளை கவர் பண்ணுவாங்க.. நீயும் குழந்தை குழந்தையா இருந்தாதான் பிடிக்குமின்னு சொல்லிறுக்கே?? அதுனாலே மொதல்லே குழந்தைகளை கவர் பண்ணு! அதுக்கப்புறம் கைப்பு அங்கிள்! கைப்பு அங்கிள்! உன் பின்னாடியே எல்லாரும் வந்திருவாங்க.."

"வேணாம் கட்டரு! நானெல்லாம் ஏற்கெனவே பெரிய தலையா ஆகிட்டேன். எனக்கு தெரியவேண்டியது ராகம்,தாளம்,பல்லவி'தான்... பார்ப்போம் அந்த விக்கிபசங்க எம்பூட்டு நாளைக்குள்ளே சொல்லிதாரங்கன்னு?? அவங்கதான் என்னா சந்தேகம் கேட்டாலும் தீர்ந்து வைக்கப்பாலேமே?? எனக்கு இப்போ மீஜீக்'லே பேசிக் நாலெச் வேணும்??"

தலயோட இந்த அறிவிப்பை கேட்டு சங்கத்து சிங்கக்கள் எல்லாரும் அமைதியாகிறார்கள். விக்கிப்பசங்கதான் பாவம் நம்ம தல கேட்கிறகேள்விக்கெல்லாம் எப்பிடிதான் சமாளிக்க போறாங்களா..!! அய்யோ.. அய்யோ!!!!

38 comments:

Unknown said...

ஆகா தல ஒரே கேள்வி கேட்டாலும் கேட்டாரு விக்கிப் பசங்க விக்கிப் போயிட்டாங்களே!!!

கில்லி பையன் said...

அடப் பாவி பயல்களா.. விக்கிப் பசஙக்ன்னு ஒரு வலைத் தளம் வச்சு நெட்ல்ல பெட் காபில்ல இருந்து நைட் நைன்ட்டி அடிச்சிட்டுத் தூங்கி நல்லதொரு நெட்டிசன்களா வாழும் எல்லாருக்கும் நலம் பயக்கும் விவரங்கள் குடுக்க அவங்க முயற்சி பண்ணா.. அங்கேயும் இந்த் வெட்டி சன்கள் குசுமபைக் காட்டுறாய்ங்களே...

இவன் முடியை முதல்ல ஒழுங்கா வெட்டி விடுங்கடா.. இவனுக்கெல்லாம் சங்கமே டூ மச் இதுல்ல சங்கீதம் வேறயா.. வேணாம்டா பாவம் டா சங்கீதம்

Divya said...

\"அடபாவி அப்ரெண்டிஸ், இது கலராய்யா? ஓரத்திலே படுத்து கிடக்கிற நொண்டி மாடுகூட என்னை தேடி வந்து நச்சுன்னு முட்டிட்டு போகுமிடா? ஏண்டா சட்டைன்னா மஞ்சகலரும்,உள்சட்டை கருஞ்செவப்பு கலரு, பச்சை கலருலே வேட்டியும்தான் கிடைச்சதா\"

சான்ஸே இல்ல, சூப்பர் காமடி! ஒரத்துல கிடக்கிற நொண்டி மாடு முட்டுறது கற்பனை பண்ணி பார்க்கவே சிரிப்பா இருக்குது!

கில்லி பையன் said...

ஏம்மா நீ வேற இதெல்லாம் காமெடியா.. மக்கள் சிந்திக்கணும் அது காமெடி.. இது வெறும் வெடி... சவுண்ட் மட்டும் தான்.. நீ யும் இவிங்களை ஏத்தி விடாதே.. யப்பா இவனுங்க ரவுசு தாங்கல்லடா.. ஜார்ஜ் புஷ் கிட்டச் சொல்லி நியூக்ளியர் பாம் போட்டு இவனுங்களை ஆல் கிளியர் பண்ணனும் போலிருக்கே

இராம்/Raam said...

பஞ்ச் இது நல்லதுக்கில்லே சாமி... எங்க தல எங்கே போனாலும் பின்னாடியே வந்து வம்பிழுக்கிறே... சும்மா இருக்கிற சிங்கத்தை சொரண்டிவிட்டுட்டு போகதே... அப்புறம் ஒன்னை அதே கடிச்சு குதறாமே விடாது....

கில்லி பையன் said...

படிச்ச்ப் பையன் மாதிரி வேற இருக்குற... உச்சி எல்லாம் எடுத்து தலை சீவியிருக்க.. வீணா அந்த ஸ்பிரிங் டோப்பாப் போட்டவனுக்காக என் கிட்ட சவுண்ட் விடாதே...

அப்துல் கலாம் எழுதுன அக்னி சிறகுகள் படிச்சிருக்கீயா நீயு.....அதைப் படிப்பா

கப்பி | Kappi said...

:))))

முறை வச்சு முறைப்பு, ராகம் தாளம் பல்லவி, நொண்டி மாடு எல்லாமே கலக்கல்!!

கதிர் said...

என்னய்யா இது சங்கீதத்துக்கு வந்த சோதனை!

இராம்/Raam said...

//சான்ஸே இல்ல, சூப்பர் காமடி! ஒரத்துல கிடக்கிற நொண்டி மாடு முட்டுறது கற்பனை பண்ணி பார்க்கவே சிரிப்பா இருக்குது! //

திவ்யா நன்றிங்க... :)

//முறை வச்சு முறைப்பு, ராகம் தாளம் பல்லவி, நொண்டி மாடு எல்லாமே கலக்கல்!! //

வளரே நன்னி கப்பி... :)

இராம்/Raam said...

//என்னய்யா இது சங்கீதத்துக்கு வந்த சோதனை! //

ஐயா தம்பி,

நம்ம தல சோதனையிலும் சாதனை படைப்பார்....

:-)))

கதிர் said...

தல நான் வேணா ஐடியா தரட்டுமா?

நான் ஒரு நாலு பாட்டு சொல்லித்தரேன் அதையே பாடிடு, வெத்தலப்பொட்டிங்க எல்லாம் அசந்து போயிடும்

"லதாங்கி"யில வேங்கட ரமணா நின் திருவிளையாடலை யாரறிவார்...

"சிந்து பைரவில" தம்பூரி நீட்டி வர...

"பூபாளத்துல", 'கருணாநிதியே, தாயே , கடைக்கண் பார்த்தருள்வாயே

"ராகமாலிகையில்" 'பாயுமொளி நீ எனக்கு'...

மேல இருக்கறது எல்லாம் ஏதோ பிகருங்க பேருன்னு போயி எவ வீட்டுலயாச்சும் கதவ தட்டி வழக்கம்போல பொதுமாத்து வாங்கிறாத!

இதெல்லாமே நீ பாடிட்டேன்னு வைய்யி அப்புறாம் எல்லா சபா காரவுகளும் கியூல நிப்பாங்க!

மேல்விபரங்களுக்கு... தம்பியின் சென்னை கிளையை அணுகவும்..

Anonymous said...

தல நீ பாடறத விட ஆடறதுதான் தமிழ்நாட்டு சனங்களுக்கு புடிச்சிருக்கு. அதனால எங்க மேளக்குழுவினருக்கு தலைவரா வந்துடுங்க!

அப்பால எல்லா திருவிழாவுக்கு நாமதான், சும்மா பொளந்து கட்டிருவோம்!

இலவசக்கொத்தனார் said...

//ஆகா தல ஒரே கேள்வி கேட்டாலும் கேட்டாரு விக்கிப் பசங்க விக்கிப் போயிட்டாங்களே!!!//

தேவு, இங்க இப்படியா சவுண்டு வுடற? அந்தப் பக்கம் வா கவனிச்சுக்கறேன். :))

G.Ragavan said...

விக்கிப் பசங்கள ஆளையே காணோம்னு பேசிக்கிறாங்க. என்னடான்னு பாத்தா...இதாங் காரணமா? பாவம்யா அவங்க. ரொம்பப் பாவம்.

இலவசக்கொத்தனார் said...

//எனக்கு தெரியவேண்டியது ராகம்,தாளம்,பல்லவி'தான்.//

அடப்பாவிங்களா. ஒரு கேள்வி கேட்க ஒரு பதிவாடா? அதுக்குத்தான் எங்க பதிவுல அம்மாம் பெருசா ஒரு கேள்விக்குறி போட்டு வெச்சு இருக்கோமில்ல. அத வுட்டுட்டு இது என்ன கலாட்டா?

சரி அதைத்தான் விடுங்க, கேட்குற கேள்வியாவது சரியா இருக்கா? அதுவும் மொக்கை. அதான் அந்த தியேட்டர் பக்கம் போனீங்க இல்ல. அங்கயாவது பேரை சரியா பாக்கவேண்டாம்? அட தல உம்மைச் சொல்லலையா. உமக்கு எழுதப் படிக்க தெரியாது சரி. அதுக்குத்தானே கூட அம்புட்டு அப்பரசண்டிங்க. அவனுங்களாவது சரியாப் படிச்சி சொல்ல வேண்டாம்? என்ன பசங்களோ, போ.

அது ராகம் தாளம் பல்லவி இல்லைப்பா, அது ராகம் தானம் பல்லவி. நல்ல வேளை பல்வலின்னு சொல்லாம விட்டீங்களே.

போகட்டும், இப்போ இதுக்கு ரெண்டு விதமான பதில் தர முடியும். ஒண்ணு நம்ம பெனாத்தலாரை வெச்சு, உங்களுக்கு ஏத்தா மாதிரி. இல்லை உண்மையிலேயே ராகம் தாளம் , (அடச்சீ, உங்க கூட சேர்ந்தா என்ன ஆவுதுன்னு பாருங்க) தாளம், பல்லவி பத்தி ஒரு பதிவு போடச் சொல்லலாம்.

என்ன வேணும். எதா இருந்தாலும் நம்ம பதிவுல வந்து இந்த பதிவுக்கு சுட்டி குடுத்து ஒரு கேள்வி போடுங்க.

இலவசக்கொத்தனார் said...

ஜிரா,

என்ன இப்படி சொல்லிட்டீங்க? அங்க பதிவு வந்திருக்கு. வந்துக்கிட்டுதான் இருக்கு. உங்களைத்தான் காணும்.

அப்பாடா, வந்து பார்க்க ஒரு ஆளைத் தேத்தியாச்சு.

இராம்/Raam said...

//விக்கிப் பசங்கள ஆளையே காணோம்னு பேசிக்கிறாங்க. என்னடான்னு பாத்தா...இதாங் காரணமா? பாவம்யா அவங்க. ரொம்பப் பாவம். //

ஏன் ஜிரா இப்பிடியெல்லாம் கொளுத்தி வீட்டு போறீங்க....

மதுரையிலே ஒருநா இருந்தாலும் பொதுமாத்து வாங்கிதர்ற ஐடியாவே மட்டும் நச்சுன்னு செஞ்சுட்டிங்க..... :)

இராம்/Raam said...

கொத்ஸ்,

உங்க பதிலே பார்த்து மலைச்சு போயிருக்கோம்.... :)

இன்னும் விளக்கமா தல'க்கு புரியறமாதிரி ஒரு பதிவு போடுங்க.... :)

தருமி said...

//மதுரையிலே ஒருநா இருந்தாலும் பொதுமாத்து வாங்கிதர்ற ஐடியாவே மட்டும் நச்சுன்னு செஞ்சுட்டிங்க..... :)//

அப்டின்னா என்ன? மதுரக்காரங்க எல்லாம் பொதுமாத்து வாங்கிறதில/வாங்கித்தர்ரதுல பெரிய எக்ஸ்பெர்ட்டுகளா?

Anonymous said...

//அடபாவி அப்ரெண்டிஸ், இது கலராய்யா? ஓரத்திலே படுத்து கிடக்கிற நொண்டி மாடுகூட என்னை தேடி வந்து நச்சுன்னு முட்டிட்டு போகுமிடா? //

chanceless!! 2 தடவ படிச்சுட்டேன்!!
சிரிச்சு சிரிச்சு வயிரு புண்ணா போகுது!

இராம்/Raam said...

//அப்டின்னா என்ன? மதுரக்காரங்க எல்லாம் பொதுமாத்து வாங்கிறதில/வாங்கித்தர்ரதுல பெரிய எக்ஸ்பெர்ட்டுகளா? //

வாங்க தருமி ஐயா,

நாமெல்லாம் ஒரு ஊருக்காராங்க.. எதுக்கு நம்ம பெருமையே நாமேளே சொல்லிக்கிறது. அது மக்கள் எல்லாருக்குமே தெரியுமே!!! பொதுமாத்து கொடுக்கிறதிலேயும் சரி அதே வாங்கிட்டு ஒன்னுமே நடக்காதே மாதிரி கமுக்கமா போறேதில்லேயும் நம்மளை விட எக்ஸ்பர்ட் இருக்காங்களா என்ன?????

:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

இராம்/Raam said...

//chanceless!! 2 தடவ படிச்சுட்டேன்!!
சிரிச்சு சிரிச்சு வயிரு புண்ணா போகுது! //

ரொம்ப நன்றிங்க அபர்ணா....

Anonymous said...

This was too good.. I like Post & Blog

கதிர் said...

தல இப்ப எங்க இருக்காரு?

இராம்/Raam said...

//This was too good.. I like Post & Blog //

ரொம்ப நன்றி அனானி...

//தல இப்ப எங்க இருக்காரு? //

தம்பி,

தல தூண்லேயும் இருப்பாரு, துரும்புலேயும் இருப்பாரு.. ஆனா அவரு எங்கே இருந்தாலும் கச்சேரியே எப்பிடி நடத்துறதுன்னு தீவிர யோசனைலேதான் இருப்பாரு.... ஆனா நாங்க அவருக்கு அடுத்து எப்பிடி ஆப்பு வைக்கலாமின்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம்..... :)

தருமி said...

//ஓரத்திலே படுத்து கிடக்கிற நொண்டி மாடுகூட என்னை தேடி வந்து நச்சுன்னு முட்டிட்டு ..//

தெற்குவாசல் பக்கம்தான் நிறைய 'சாமி' மாடுகள் அலையும்; அங்கன நடந்த விஷயம்தான் இப்ப்டி இங்க வந்துச்சோ..?

கைப்புள்ள said...

இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை! நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை...ராயல்...நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை.
:(

Unknown said...

முறைப்பு, பாட்டு, கேள்வி, காமடி, ஐடியா, சோதனை, சிரிப்பு, யோசனை, கற்பனை போ தல.

நாமக்கல் சிபி said...

ராயலு...
கலக்கிட்டீங்க கலக்கி...

தல,
நீ பேசாமா எட்டணா இருந்தா எட்டூரூம் என் பாட்ட கேக்குமே பாடிட்டு இரு தல...

Unknown said...

ராயலு நம்ம தலக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்க நாம எடுத்த சபதம் நிறைவேற கொத்ஸ் சொல்லுற மாதிரி விக்கி ட்யூஷ்ன் சென்டர் போய் மனு கொடுத்துட்டு வந்துறு.. வருஷ கடைசிக்குள்ளே தல கைப்புள்ள ஒரு இசை சுனாமியா மாத்தியாகணும் என்னா?

Anonymous said...

I am eagrly wait for the concert.

இராம்/Raam said...

//தெற்குவாசல் பக்கம்தான் நிறைய 'சாமி' மாடுகள் அலையும்; அங்கன நடந்த விஷயம்தான் இப்ப்டி இங்க வந்துச்சோ..? //

ஐயா,

இதுக்கு எப்பிடி நான் பதில் சொல்லுறதின்னு தெரியலை... ஏன்னா எந்த மாடும் என்னை முட்டினதில்லை.

//இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை! நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை...ராயல்...நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை.//

தல,

நீ சோதனையிலும் சாதனை படைக்கும் சிங்கமில்லை. எதுக்கு கலங்குறே.. நாங்கெல்லாம் இருக்கோம் ஒனக்குன்னு ஒன்னு நடந்தா பார்த்துக்கிறதுக்கு....

சங்கத்து சிங்கம்கள் இருக்கறப்போ கவலை எதுக்கு.... கண்ணை தொடச்சுக்கோ, இனிமே அதிலே ஆனந்தக் கண்ணிர் மட்டும்தான் வரணும்...... ;)

இராம்/Raam said...

//முறைப்பு, பாட்டு, கேள்வி, காமடி, ஐடியா, சோதனை, சிரிப்பு, யோசனை, கற்பனை போ தல. //

வாங்க மோகன்.
உங்களை இது மகிழ்வித்தது எனில் அது நாங்கள் செய்த பாக்கியம். மீண்டும் வருகைதாருங்கள்.

//ராயலு...
கலக்கிட்டீங்க கலக்கி...//

டாங்கீஸ் கட்டரு...

//தல,
நீ பேசாமா எட்டணா இருந்தா எட்டூரூம் என் பாட்ட கேக்குமே பாடிட்டு இரு தல... //

ஹெட்'டு

நோட் திஸ் த பாயிண்ட்...

இராம்/Raam said...

//ராயலு நம்ம தலக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்க நாம எடுத்த சபதம் நிறைவேற கொத்ஸ் சொல்லுற மாதிரி விக்கி ட்யூஷ்ன் சென்டர் போய் மனு கொடுத்துட்டு வந்துறு.. வருஷ கடைசிக்குள்ளே தல கைப்புள்ள ஒரு இசை சுனாமியா மாத்தியாகணும் என்னா? //

ஓகே போர்வாள்,

நீங்க இட்ட கட்டளையே உடனே நிறைவேத்துறேன்.

இராம்/Raam said...

//I am eagrly wait for the concert. //

அனானி சாமி... சீக்கிரமே தல கச்சேரியே பார்த்து ரசிக்கலாம்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.... :-)

கப்பி | Kappi said...

//இசை தமிழ் நீ செய்த அருஞ்சாதனை! நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை...ராயல்...நீ இருக்கையிலே எனக்கு பெரும் சோதனை//

தல

உன் மேல ராயல் காட்டின பாசத்துக்கு இது தான் பதிலா??? உன் கச்சேரிக்காக அவர் சொந்த செலவுல ஒரு லாரி முட்டை ஆர்டர் பண்ணியிருக்கார்..அவரைப் போய் சோதனைன்னு சொல்லிட்டியே தல...

இலவசக்கொத்தனார் said...

யப்பா ராசாங்களா,

கொஞ்சம் இங்க வந்து பாருங்கப்பா.

Anonymous said...

Super... I enjoy a lot