Friday, September 22, 2006

சங்கத்து ஆல்பம் - 2

மக்கள் எல்லாம் வாரக் கடைசியிலே சிரிச்சுகிட்டே சந்தோஷமா வீட்டுக்குப் போகணும்ங்கற ஒரே நோக்கத்தோட தல கைப்புள்ளயே களத்திலே இறங்கி ஆல்பத்தின் அடுத்த பகுதியையும் பிரின்T போட்டு ரிலீஸ்க்கு ரெடி பண்ணிட்டார்.


"இந்தாப் பேச்சு பேச்சாத் தான் இருக்கணும் சொல்லிட்டேன்.. நீயும் உள்ளே வரப்பிடாது.. நானும் வெளியே வர மாட்டேன்.. உன்னிய நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. அது வரைக்கும் என் சங்கத்து ஆள் உங்கூடப் பேசிகிட்டு இருப்பான்... வர்றட்டா"
" ஏய் நாங்க எல்லாம் கருஞ்சிறுத்த அப்பூ பறக்கிற பிளைட் ஓடுற பஸ்ன்னு எதில்லயுமே கம்பியைப் பிடிக்காம கையைப் புறம்பாக் கட்டிகிட்டு கச்சிதமா நிப்போம்ல்ல.. ப்பூ பேன் காத்துக்கெல்லாம் பயந்துருவோமா என்ன? கப்பித் தனமாக் கரண்டை வேஸ்ட் பண்ணாம பேனை ஆப் பண்ணுங்கடா"


"கௌரவ்ம் கௌரவம்ன்னு சொல்லி இப்படிக் கூட்டிட்டு வந்து கும்மி அடிச்சு என் கௌரவத்தை நாறடிச்சு இப்படி ஒரு ஓரத்துல்ல உக்கார வச்சுட்டீங்களேடா"

இங்கேப் பார்டா... என்னிய மாதிரியே எவ்வளவு அலகா இருக்கான்... போட்டாவை சங்கத்துக்கு நடுவுல்ல மாட்டி வைங்கடா

மக்களே இப்போ சந்தோஷ்மா வீட்டுக்குப் போங்க ... ENJOY MAADI

11 comments:

ILA (a) இளா said...

அட கைப்புவா இப்படி?

நிலா said...

:-)))

அசல் வடிவேலுவுக்கே வசனம் எழுதலாம்யா நீங்கள்லாம் :-)))

இராம்/Raam said...

//கப்பித் தனமாக் கரண்டை வேஸ்ட் பண்ணாம பேனை ஆப் பண்ணுங்கடா"//


ஏலேய் யாருப்பா இங்கே தென் அமெரிக்கா சிங்கம், மாண்டிவியோ தங்கத்தை சொரண்டி பார்த்தது......

கப்பி | Kappi said...

கைப்ஸ்..இதெல்லாம் உங்க பொட்டில புடிச்சு இன்னொரு பொட்டில க்ராபிக்ஸ் பண்ண பொகைப்படமா??


//ஏலேய் யாருப்பா இங்கே தென் அமெரிக்கா சிங்கம், மாண்டிவியோ தங்கத்தை சொரண்டி பார்த்தது......
//

ராயல்...நான் கேட்டேனா???

நாமக்கல் சிபி said...

தல,
ஆமாம் அது என்ன கப்பி தனம்???

கதிர் said...

//ஆமாம் அது என்ன கப்பி தனம்??? //

கப்பி வந்து பதி சொல்லுப்பா!

Mohan Madwachar said...

பார்த்தேன் ரசித்தேன் சிரித்தேன்.

http://www.muthamilmantram.com/ சேருங்கள் நன்றாக உள்ளது. நேரம் கிடைத்தால் என் வலைதளங்களுக்கு சென்று
வாருங்கள்.
www.leomohan.net
http://tamilamuhdu.blogspot.com
http://leomohan.blogspot.com

Syam said...

நம்ம தல ரேஞ்ச்சுக்கு வீரமா,அலகா,அரிவா 500 வருசத்துகு ஒருத்தரு தான் பொறப்பாங்கனு எங்கயோ கேள்வி பட்டேன் :-)

Udhayakumar said...

சங்கத்துப் பக்கம் ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்க்க முடியது... பக்கத்துல யாருமே உங்களுக்கு ஆப்பு வைச்ச மாதிரி தெரியல, அதுதான் காரணமா???

உங்கள் நண்பன்(சரா) said...

மாப்பு முருகேசா! என்ன கொஞ்ச நாளா ஆளைக்காணோம், அதுவும் ஆல்பம்னு வெற சொன்னியா கக்கத்துல வெத்தலப்பொட்டிய வச்சிக்கிட்டு,மஞ்சக் கலர் சிலுக்கு ஜிப்பா போட்டுகிட்ட Aல்பம் கொண்டுவந்திருப்பனு நெனச்சு வந்தேன்.:))))

//ராயல்...நான் கேட்டேனா???//

கப்பி நீ கேக்கலனாலும் நாங்க வைப்போம்ல(??!):)))

உனக்குனு ஒரு கவுரத இருக்கு அத காப்பத்த வேணாமா?
இல்லைனா உன்னைய மறந்துட்டு யாராவது வெட்டித்தனமா கப்பினா என்னனு கேட்டுட்ட என்ன பண்ணுரது?


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

:))))