Monday, March 24, 2008

தஞ்சாவூர் Vs திருநெல்வேலி

தமிழ் நாட்டை பொறுத்தவரை எங்க ஏரியா உள்ள வராதே!னு கெத்தாக வளய வருபவர்களில் இந்த தஞ்சாவூரும் நெல்லை சீமைகாரர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.

தஞ்சாவூர் சம்ரதாயம், நெல்லை சம்ரதாயம் என தனியாக குறிக்கும் வழக்கமே இருந்து வருகிறது. அது என்னடா தஞ்சாவூர் சம்ரதாயம்?னு தலய பிச்சிக்க வேணாம்.
நீங்கள் ஒரு தஞ்சாவூர்காரர் வீட்டுக்கு போகிறீர்கள் என வைத்து கொள்வோம்! "வாங்கோ! வாங்கோ!" என பாயை விரித்து, பேனை போட்டு, காப்பி எல்லாம் உங்க வீட்லயே சாப்டுட்டு தான் வந்ருப்பீங்க!னு ஒரு பிட்டை போடுவார் பாருங்கள், அது தான் தஞ்சாவூர் சம்ரதாயம்.

இப்பொழுது உங்களுக்கு அபி அப்பா நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. :)

அது என்ன நெல்லை சம்ரதாயம்?
கல்யாணத்தில் நடுப்பந்தியில் உட்கார்ந்து கொண்டு " நம்ம அண்ணாவுக்கு 2 கரண்டி பாயசம் விடுடா! அவருக்கு பால் பாயசம்னா உசுரு!"னு பக்கத்து இலைக்கு பாயசம் கேட்பது தான் நெல்லை சம்ரதாயம். இப்ப உங்களுக்கு நம்ம இலவசகொத்தனார் நினைவுக்கு வராரோ? :D


தஞ்சாவூர்காரர்களாகட்டும், நெல்லைகாரர்களாகட்டும், இருவரும் இரண்டு விஷயங்களில் காப்ரமைஸ் பண்ணிக்கவே மாட்டார்கள்.
ஒன்று குளியல், மற்றது உணவு.

என்ன தான் ஸ்விம்மிங்க் பூல் இருந்தாலும், எங்க ஊர் காவிரிகரையில் முதுகு தேய்ச்சி(அவங்கவங்க முதுகை தான்) குளிக்கற மாதிரி வருமா? என தஞ்சாவூர்காரகளின் பீத்தல் என்ன, அட போய்யா! தாமிர பரணில முக்குளி போட்டு மூச்சடக்கி தொட்டு புடிச்சு விளயாடி குளிச்ச பயலுவ நாங்க!னு நெல்லைகாரர்களின் இறுமாப்பும் சரி மற்ற ஊர்காரர்களை (குறிப்பாக மதுரைகாரர்களை) நீண்ட பெருமூச்சு விட வைக்கும்.

இந்த இரண்டு பேருக்குமே நாக்கு நாலு முழம். காலை காப்பியாகட்டும், காலை உணவாம் பொங்கலும், கத்ரிகாய் கொத்சுவாகட்டும், இல்லை மணக்க மணக்க வெங்காய சாம்பார், உருளைகிழங்கு கறி என மதிய உணவாகட்டும், சாயந்தரம் காப்பிக்கு பின் சாப்பிடும் வெங்காய பக்கோடாவாகட்டும், அட இரவு அருந்தும் பாதாம்பாலாகட்டும் இந்த பயல்களுக்கு எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கனும்.


கும்பகோணத்து டிகிரி காப்பி குடிக்காத வாய் என்ன வாயே!
நெல்லை இருட்டு கடை அல்வாவை சுவைக்காத நாவென்ன நாவே! என திருமங்கையாழ்வார் சும்மாவா பாசுரம் பாடி வெச்ருக்கார். (பாசுரம் நன்றி -கேரெஸ் அண்ணா!)


தஞ்சாவூர்காரர்களுக்கு பொண்ணு குடுக்க யோசிப்பார்களாம். கல்யாணத்தில் மாப்ளை வீட்டார் ஆயிரம் நொள்ளை சொல்லுவார்களாமே! நெல்லைகாரர்களிடம் பொண்ணு எடுக்க யோசிப்பார்களாம்! பின்ன, கல்யாணத்துல ஏதும் தகராறுனா அருவாள் இல்ல பேசும்.

கும்பகோண வெத்தலையை கொண்டு வந்து வெச்சுட்டு தாலிய கட்டுங்கோ! என கும்மி அடிக்கும் தஞ்சாவூர் பெரியப்பாக்களும் உண்டு.
நம்மூர்காரவுகளுக்கு மட்டும் சாம்பார் சரியாவே ஊத்த மாட்டேங்கறான், எடுறா அந்த அருவாள!னு மீசை முறுக்கும் நெல்லை முறை மாமன்களும் உண்டு.
இருவருக்கும் நல்ல சங்கீத ரசனையும் உண்டு. தஞ்சவூர் ஜட்கா வண்டிகாரனுக்கு கூட சங்கீதம் தெரியுமாக்கும்! என இந்த தஞ்சாவூர் காரர்கள் குடுக்கும் பில்டப் இருக்கே! அவர்களை சொல்லி தப்பில்லை, பக்கத்துல திருவையாறு. நாத பிரம்மம் மூச்சு காற்று பட்ட இடமாச்சே! ஆரபிக்கும், நீலாம்பரியும் உள்ள வித்யாசத்தை சும்மா அசால்டா போகிற போக்கில் சொல்லிவிட்டு போவார்கள் இங்குள்ள மக்கள்.

இந்த ஜில்லாக்களுக்குள் பல ஒற்றுமையும் உண்டு. இரண்டு ஜில்லாவிலும் பாப நாசம் என்ற பெயர் கொண்ட ஊர்கள் உண்டு. தஞ்சையில் திருவிடைமருதூர் என்றால் நெல்லையில் திருபுடைமருதூர் உண்டு.
திரு நெல்வேலி என்றாலே நினைவுக்கு வருவது இருட்டு கடை அல்வா தான். தஞ்சையில் புகழ் பெற்ற ஸ்வீட் என்ன?னு யாரேனும் பின்னூட்டத்தில் சொன்னால் தன்யனாவேன்.

57 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

என்ன அம்பி இப்படி இத்தனை விஷயத்தையும் எழுதிட்டு கடைசில ரொம்ப முக்கியமான கேள்விக்கு பதில் கேட்டிருக்கேளே... தஞ்சாவூர் பேமஸ்
"அசோகா" தான்.. பயத்த மாவும் (பாசிப்பருப்பு மாவு), நெய்யும், லேசா வருத்த கோதுமை மாவும் கலந்து தக்காளி நிறத்த விட கொஞ்சம் கம்மியா தள தளன்னு நெய்யோட இலைல விழாத கல்யாணமே இல்ல போங்கோ......

இலவசக்கொத்தனார் said...

எலேய், நம்ம ஊரு அருமை பெருமை எல்லாம் எழுதுடேன்னு சொன்னா என்னமோ அந்த பயலுவளைச் சேத்துக்கிட்டு என்னல லூட்டி அடிக்க? ஒழுங்கா மரியாதையா வீடு போயிச் சேர ஆசையே இல்லையாடே?

ambi said...

//தஞ்சாவூர் பேமஸ்
"அசோகா" தான்.//

@கிருத்திகா, இதுக்கு தான் நாலும் தெரிஞ்சவங்கள பக்கத்துல வெச்சுகனும்னு சொல்றது. நன்றி யக்கா! :))

Anonymous said...

//இந்த ஜில்லாக்களுக்குள் பல ஒற்றுமையும் உண்டு. இரண்டு ஜில்லாவிலும் பாப நாசம் என்ற பெயர் கொண்ட ஊர்கள் உண்டு//.
kuthalam!?

மெளலி (மதுரையம்பதி) said...

ரெண்டு பக்கத்திற்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமையை விட்டுடீங்களே?..... அதை மண்டைகனம்னு எங்க பக்கம் சொல்வோம். :)

தஞ்சாவூருக்கு தியாகபிரும்மம்ன்னா திருநெல்வேலிக்கு முத்துச்சாமி தீஷதர் இருக்காரே....

எனக்கு ஒரு சந்தேகம் அம்பி....ஆழ்வார்ன்னா உனக்கு ஏன் கே.ஆர்.எஸ் மட்டுமே மனதில் வருகிறார்?, ஏன் குமரன், திரச, வல்லியம்மா, கீதாம்மா, ஜிரா எல்லாம் வருவதில்லை?... :)

ஆயில்யன் said...

//அசோகா" தான்.. பயத்த மாவும் (பாசிப்பருப்பு மாவு), நெய்யும், லேசா வருத்த கோதுமை மாவும் கலந்து தக்காளி நிறத்த விட கொஞ்சம் கம்மியா தள தளன்னு நெய்யோட இலைல விழாத கல்யாணமே இல்ல போங்கோ......//

ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//இலவசக்கொத்தனார் said...
எலேய், நம்ம ஊரு அருமை பெருமை எல்லாம் எழுதுடேன்னு சொன்னா என்னமோ அந்த பயலுவளைச் சேத்துக்கிட்டு என்னல லூட்டி அடிக்க? ஒழுங்கா மரியாதையா வீடு போயிச் சேர ஆசையே இல்லையாடே?
//

வெயிட்டீஸ் இ.கொ!
அபி அப்பா வரும்வரை உங்களை வாரும் வரை!

ஆயில்யன் said...

//மதுரையம்பதி said...
ரெண்டு பக்கத்திற்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமையை விட்டுடீங்களே?..... அதை மண்டைகனம்னு எங்க பக்கம் சொல்வோம். :)
///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ :(

ஆயில்யன் said...

தஞ்சை மாவட்டத்தில் பெரும்பான்மையான கோவில்கள் சைவ சமயம் சார்ந்தவை!

நெல்லை மாவட்டத்தில் பெரும்பான்மையான கோவில்கள் வைணவ சமயம் சார்ந்தவை!

இதுவும் சரிதானே..?

நிஜமா நல்லவன் said...

திருவையாறு ஆண்டவர் அல்வா கடையில போடுவாங்க பாருங்க அசோகா அப்படியே மெய் மறந்து சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். யாராச்சும் போனா சாப்பிட்டு பாருங்க.

கப்பி | Kappi said...

ரெண்டு ஊருக்கும் ஒரு கலவரத்தை உண்டாக்கி பார்த்துடறதுன்னு முடிவோட இருக்கிறாப்ல தெரியுது :)))


என் நண்பன் தஞ்சாவூர்காரன் ஒருத்தன் சூர்யகலா, சந்திரலேகா-ன்னு பொண்ணுங்க பேரில ஸ்வீட் வாங்கிட்டு வருவான் அண்ணாத்த..அதெல்லாமும் ஜூப்பராத்தான் இருக்கும்..அந்த ஸ்வீட்டை விட அங்க ஒரு கடைல லஸ்ஸி அருமையா இருக்கும்!

இலவசக்கொத்தனார் said...

//திருவையாறு ஆண்டவர் அல்வா கடையில போடுவாங்க பாருங்க அசோகா அப்படியே மெய் மறந்து சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். யாராச்சும் போனா சாப்பிட்டு பாருங்க.//

போடறது என்னமோ அசோகாவாம். (பேரைப் பாரு பேரை என்னமோ பாக்கு மாதிரி இருக்கு.) ஆனா கடை பேரு அல்வாக் கடை!! அவ்வளவுதாங்க மேட்டர்.

நிஜமானாச்சும் நல்லவரே ரொம்ப மெய் மறந்தீங்கன்னா பர்ஸை அடிச்சிடுவாங்க. பார்த்து!!

இலவசக்கொத்தனார் said...

//நெல்லை மாவட்டத்தில் பெரும்பான்மையான கோவில்கள் வைணவ சமயம் சார்ந்தவை!

இதுவும் சரிதானே..?//

இல்லைப்போ இல்லை. இல்லவே இல்லை. தாமிர சபை இருக்கும் எங்கள் ஊரை, அகத்தியரை அனுப்பி வெச்சு பின்னாடியே பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு வந்த சிவன் இருக்கிறதும் எங்க ஊரு. உமையைப் பாதியாத் தாங்கிக்கிட்டு நிக்கிறது சங்கரன்கோயில். அவரு பையன் இருக்கிறது செந்தூர். இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.

நீர் சொல்வது ஒத்துக்கவே முடியாது.

இலவசக்கொத்தனார் said...

//சூர்யகலா, சந்திரலேகா-ன்னு பொண்ணுங்க பேரில ஸ்வீட் வாங்கிட்டு வருவான் அண்ணாத்த//

பேரைக் கேட்டாலும் ஜொள்ளு வரும். ஸ்வீட்டைப் பார்த்தாலும் ஜொள்ளு வரும். எல்லாம் வயசுக் கோளாறு தம்பி!!

Unknown said...

//நீங்கள் ஒரு தஞ்சாவூர்காரர் வீட்டுக்கு போகிறீர்கள் என வைத்து கொள்வோம்! "வாங்கோ! வாங்கோ!" என பாயை விரித்து, பேனை போட்டு, காப்பி எல்லாம் உங்க வீட்லயே சாப்டுட்டு தான் வந்ருப்பீங்க!னு ஒரு பிட்டை போடுவார் பாருங்கள், அது தான் தஞ்சாவூர் சம்ரதாயம்.//
"வாங்கோ, வாங்கோ" என்று வாய் நிறைய வரவேற்று, "பாவம், காத்தாட இங்கே உட்காரலாம்" என்று வாசல் திண்ணையிலேயே உட்காரவைத்து, ('பாய்', 'பேன்' ஆ?) 'காப்பி, டீ எல்லாம் வயத்துக்கு கெடுதல், பால் மோர் எல்லாம் ஒத்துக்காது, தண்ணீர் சாப்பிடறீங்களா?" என்றல்லவா சொல்லுவார்கள்....

அப்படின்னு கேள்வி;-)

நெல்லை பாசம்/தஞ்சை பாசம் இரண்டுமே உறவினரிடம் காது நிறைய கேட்டாச்சு!

நிஜமா நல்லவன் said...

////இலவசக்கொத்தனார் said...
//திருவையாறு ஆண்டவர் அல்வா கடையில போடுவாங்க பாருங்க அசோகா அப்படியே மெய் மறந்து சாப்பிட்டுகிட்டே இருக்கலாம். யாராச்சும் போனா சாப்பிட்டு பாருங்க.//

போடறது என்னமோ அசோகாவாம். (பேரைப் பாரு பேரை என்னமோ பாக்கு மாதிரி இருக்கு.) ஆனா கடை பேரு அல்வாக் கடை!! அவ்வளவுதாங்க மேட்டர்.

நிஜமானாச்சும் நல்லவரே ரொம்ப மெய் மறந்தீங்கன்னா பர்ஸை அடிச்சிடுவாங்க. பார்த்து!!/////



பேருல என்னங்க இருக்கு கொத்தனார்? இருட்டு கடை அல்வானு சொல்லுறாங்க அங்க போய் பார்த்த நல்லா வெளிச்சத்துல தான் கிண்டுறாய்ங்க. நீங்க கூட தான் இலவசக்கொத்தனார் எத்தன வீடு இலவசமா கட்டி கொடுத்து இருக்கீங்க? பேரை பார்த்தா என்னமோ பாக்கு மாதிரி இருக்கா? ஆஹா பாக்கு மெல்லுறவங்க கிட்ட அசோகா பத்தி என்னத்த சொல்லுறது?அப்புறம் நீங்க பக்கத்துல இல்லாத வரைக்கும் பர்சுக்கு பயமில்லைங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

//, தண்ணீர் சாப்பிடறீங்களா?" என்றல்லவா சொல்லுவார்கள்.... //

தஞ்சாவூரை பொருத்தவரை இது மிகவும் சரி. வந்ததும் வராததுமா 1 சொம்பு தண்ணியை கைல கொடுத்துடுவாங்க.... :).

//போடறது என்னமோ அசோகாவாம். (பேரைப் பாரு பேரை என்னமோ பாக்கு மாதிரி இருக்கு.) ஆனா கடை பேரு அல்வாக் கடை!! அவ்வளவுதாங்க மேட்டர். //

சூப்பர்.... :)

ஆமாம் ஒரு முக்கியமான திருநெல்வேலி பட்ச்ணத்தை விட்டுடீங்களே அம்பி. திருநெல்வேலி மொனோகரம் டேஸ்ட் வேற எங்கயும் கிடைக்காது, (கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்பட). மதுரைல சுமங்கலின்னு ஒரு பட்சணகடை இருக்கு அங்க நல்லாயிருக்கும், ஏன்னா அவங்க திருநெல்வேலிக்காரங்க.... மாலாடும் உங்க ஸ்பெஷல்தானே? :)

ambi said...

@கொத்ஸ் அண்ணாச்சி, நம்மூர் பத்தி எழுதினவுடனே அடிச்சு ஆடறீங்களே, சூப்பர் அண்ணே! :))

@ அனானி, தஞ்சையிலும் குத்தாலம் இருக்கோ? சரி தான். :)

@மதுரையம்பதி, அதானே, வைகை பத்தி சொன்னா பொங்கிடுவீங்களே! :p

அப்படியே அரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதரையும் சேர்த்துக்குங்க.

ambi said...

//எனக்கு ஒரு சந்தேகம் அம்பி....ஆழ்வார்ன்னா உனக்கு ஏன் கே.ஆர்.எஸ் மட்டுமே மனதில் வருகிறார்?, ஏன் குமரன், திரச, வல்லியம்மா, கீதாம்மா, ஜிரா எல்லாம் வருவதில்லை?...//

@M'pathi, ஹிஹி, இதுக்கு பேரு தான் மதுரை குசும்பா? :p

அவரு தானே பந்தல் போட்டு பாசுரம் பாடி இருக்காரு. :))

ambi said...

@ஆயில்யன், நீங்க வருவீங்கனு தெரியும் , அதான் வலைய விரிச்சு இருக்கேன். :p

//தஞ்சை மாவட்டத்தில் பெரும்பான்மையான கோவில்கள் சைவ சமயம் சார்ந்தவை!

நெல்லை மாவட்டத்தில் பெரும்பான்மையான கோவில்கள் வைணவ சமயம் சார்ந்தவை!
//

அப்படி சொல்ல முடியாது, கொத்ஸ் சொல்லி இருக்காரு பாருங்க.
இந்தாங்க என் பங்குக்கு,

தெட்சிண காசியாம் தென்காசி எங்க நெல்லை ஜில்லாவுல தான்.

அதே சமயம், சாரங்க பாணி, சக்ரபாணினு தடுக்கி விழுந்த இடமேல்லாம் பெருமாள் கோவில் இருப்பது கும்பகோணத்தில் தான்.

நவ திருப்பதி இருப்பது நெல்லையில் தான்.
தென் திருப்பேரை மகர நெடுங்குழைகாதனை அறியாத பதிவரும் உண்டோ? :p

(யப்பா! நான் சாமியை தான் சொன்னேன்)

ambi said...

நல்வரவு நிஜமான நல்லவரே :)

//ரெண்டு ஊருக்கும் ஒரு கலவரத்தை உண்டாக்கி பார்த்துடறதுன்னு முடிவோட இருக்கிறாப்ல தெரியுது //

@கப்பி, ஹிஹி, ரொம்ப நாள் ஆசை, அதான் இப்படி. இன்னும் அபி அப்பாவை காணோம். :p

//சூர்யகலா, சந்திரலேகா-ன்னு பொண்ணுங்க பேரில ஸ்வீட் வாங்கிட்டு வருவான் //

அடடா! பேரே சூப்பரா இருக்கே! :))

ambi said...

@கெக்கபிக்குரணி அக்கா, கலக்கிடீங்க, அசரீரீ மாதிரி வந்து தஞ்சை பத்தி புட்டு புட்டு வெச்சுட்டீங்க போங்க. :p

//வந்ததும் வராததுமா 1 சொம்பு தண்ணியை கைல கொடுத்துடுவாங்க.... //

ROTFL :)) அதான் நீங்களே சொல்லிட்டீங்களே, வந்ததும் வராதுமானு. :p

மனோகரமும், மாலாடுவும் சும்மா அள்ளிக்கும் இல்ல, ம்ஹும், என் கல்யாணத்துல சாப்டது. :))

ஆயில்யன் said...

//@ஆயில்யன், நீங்க வருவீங்கனு தெரியும் , அதான் வலைய விரிச்சு இருக்கேன். :p//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மெய்யாலுமேவாஆஆ!

ஆயில்யன் said...

//அங்க ஒரு கடைல லஸ்ஸி அருமையா இருக்கும்!//

அதுதான் ரொம்ப ஜூப்பரான கடை!

எம்.எல்.ஏ உபயதுல்லாவோட கடைன்னும் சொல்லுவாங்க :)

ஆயில்யன் said...

//பேருல என்னங்க இருக்கு கொத்தனார்? இருட்டு கடை அல்வானு சொல்லுறாங்க அங்க போய் பார்த்த நல்லா வெளிச்சத்துல தான் கிண்டுறாய்ங்க.//

அதானே...!!!

ஆயில்யன் said...

//எலேய், நம்ம ஊரு அருமை பெருமை எல்லாம் எழுதுடேன்னு சொன்னா என்னமோ அந்த பயலுவளைச் சேத்துக்கிட்டு என்னல லூட்டி அடிக்க? ஒழுங்கா மரியாதையா வீடு போயிச் சேர ஆசையே இல்லையாடே?//

இந்த மாதிரி,வெட்டு குத்து மிரட்டல்களை,
தஞ்சாவூர்க்காரங்க கேட்டதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ இல்லையப்பா....!!!!

நிஜமா நல்லவன் said...

//////////ஆயில்யன். said...
//எலேய், நம்ம ஊரு அருமை பெருமை எல்லாம் எழுதுடேன்னு சொன்னா என்னமோ அந்த பயலுவளைச் சேத்துக்கிட்டு என்னல லூட்டி அடிக்க? ஒழுங்கா மரியாதையா வீடு போயிச் சேர ஆசையே இல்லையாடே?//

இந்த மாதிரி,வெட்டு குத்து மிரட்டல்களை,
தஞ்சாவூர்க்காரங்க கேட்டதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ இல்லையப்பா....!!!!//////////////



ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

மெளலி (மதுரையம்பதி) said...

//அவரு தானே பந்தல் போட்டு பாசுரம் பாடி இருக்காரு. :))//

நான் சொன்னது குசும்புன்னாஓ! இதுக்கு பேர் என்னவாம்?. கே.ஆர்.எஸ் இங்க வரமாட்டார்ங்கர நினைப்போ?....இரு போன் போட்டு சொல்றேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

என்னது உன் கல்யாணத்துல மொனோஹரமும் சாப்பிட்டியா?. அது தேன்குழலை பாகுல போட்டதுல்ல?...நான் நல்ல திருநெல்வேலி மனோஹரத்தை சொன்னேன். :-)

இலவசக்கொத்தனார் said...

அதெப்படி கேட்பீங்க. அது எங்கூரு ஸ்பெஷாலிட்டில்லா....

Radha Sriram said...

தஞ்சாவூர், திருனெல்வேலிக்கு நிறைய வித்யாசம் உண்டே??

தஞ்சாவூர் திருநெல்வேலி

1)சாதக் கரண்டி சாத ஆப்பை

2 வென்னீர் வென்னீர் பானை
தவலை
திருநெல்வேலி சமையலில் கேரள இன்ஃப்ளூயன்ஸ்ல் நிறைய தேங்காய் உண்டு. இது மாதிரி நிறைய.....

இன்னும் நியாபகம் வரும் போது எழுதரேன் ....

இப்படிக்கு தஞ்சாவூர் அப்பாக்கும் திருநெல்வேலி அம்மாக்கும் பிறந்த பெண்:):)

இலவசக்கொத்தனார் said...

ராதாக்கா ஆனாலும் நீங்க அப்படியே அம்மா சாயல்!! :)))

வல்லிசிம்ஹன் said...

இந்த இரண்டு பேருக்குமே நாக்கு நாலு முழம். காலை காப்பியாகட்டும், காலை உணவாம் பொங்கலும், கத்ரிகாய் கொத்சுவாகட்டும், இல்லை மணக்க மணக்க வெங்காய சாம்பார், உருளைகிழங்கு கறி என மதிய உணவாகட்டும், சாயந்தரம் காப்பிக்கு பின் சாப்பிடும் வெங்காய பக்கோடாவாகட்டும், அட இரவு அருந்தும் பாதாம்பாலாகட்டும் இந்த பயல்களுக்கு எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கனும்//

அம்பி!!!!!!
இப்பவே சாப்பிட்டாகணும் போல எழிதிட்டீங்க.

நெல்லைக்காரங்களுக்கு வாது சூது தெரியாதும்மா. அசட்டித்தனமா பேசி மாட்டீப்பாங்க. அவ்வளவுதான்.
தஞ்சாவூரா!! சாமி. படு பச்ச மிளகாய்.
நாம ஞேனு முழிக்கும்போது நூறு
வேலை செய்திடுவாங்க.
நான் முழு டின்னவேலியாய் இருந்தாலும்,
எங்க சிங்கம் நெல்லை அம்மாவுக்கும் கும்பகோணம் அப்பாவுக்கும் பொறந்ததினால் நாங்க அடக்கித்தான் வாசிப்போம்:))

வல்லிசிம்ஹன் said...

இந்த மாதிரி,வெட்டு குத்து மிரட்டல்களை,
தஞ்சாவூர்க்காரங்க கேட்டதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ இல்லையப்பா....!!!!//
ஆமாம்பா உண்மைதான். அவங்க பேச்சிலியே சாதிச்சுடுவாய்ங்க.
அவங்களுக்கு எதுக்குக் கத்தியும் கபடாவும்:)) இப்படிக்கு நெல்லைப் பாட்டி.

வல்லிசிம்ஹன் said...

நெல்லை மனோஹரம்
தஞ்சாவூர் பணியாரம்.

ambi said...

//மெய்யாலுமேவாஆஆ!
//

@ஆயில்யன், இதுக்காக சத்யம் எல்லாம் பண்ண முடியுமா என்ன? :p


//இந்த மாதிரி,வெட்டு குத்து மிரட்டல்களை,
தஞ்சாவூர்க்காரங்க கேட்டதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ இல்லையப்பா//

கேட்டதே இல்லயா? அதான் எங்க ஆளு சவுண்டு விட்டு இருக்காரு. :))


//கே.ஆர்.எஸ் இங்க வரமாட்டார்ங்கர நினைப்போ?....இரு போன் போட்டு சொல்றேன்.//

@மதுரையம்பதி அண்ணா, அடடா! என்ன ஒரு நல்ல எண்ணம்! அவரு இந்தியாவுக்கு வர அவசரத்துல இருப்பாருனு தான் தைரியமா பதிவு போட்டேன். :))

//அது தேன்குழலை பாகுல போட்டதுல்ல?...நான் நல்ல திருநெல்வேலி மனோஹரத்தை சொன்னேன்.//

சரி தான், சீர் பட்சணம் எல்லாம் கரெக்ட்டா கேட்டு வாங்கிட்டோம் இல்ல. :))

(என் தங்கமணி இந்த கமண்டை படிக்காம இருக்கனும்.) :p

//அதெப்படி கேட்பீங்க. அது எங்கூரு ஸ்பெஷாலிட்டில்லா....
//

@கொத்ஸ் அண்ணாச்சி,அப்படி போடுங்க அருவாள! :))

@ராதாக்கா, கலக்கிட்டீங்க போங்க. திட்ற ஸ்டைலும் வித்யாசபடுமாமே! கம்னாட்டினு குழந்தைகளை செல்லமா கூட கொஞ்சுவாங்களாம் தஞ்சை ஆளுங்க.

(சபைல சொல்ல வேணாம்னு பாத்தேன்) :))

Bee'morgan said...

ஆகா.. 36 பேர் எனக்கு முன்னாடியே சொல்லியிருக்காங்க.. யாராவது இதைப்பத்தி சொன்னாங்களான்னு தெரியல..
தஞ்சாவூருல, பாம்பே ஸ்வீஸ் பாம்பே ஸ்வீட்ஸ் னு ஒரு கடை இருக்கு.. அங்க சந்திர கலா அப்டீனு ஒரு ஸ்வீட்.. அப்பப்பா.. நினைச்சாலே நாக்கெல்லாம் ஊறும்.. அப்படி ஒரு ஸ்வீட்.. அந்த பக்குவம் என்னவோ வேறெந்த கடைக்கும் வருவதில்லை.. ஏரியா ஃபுல்லா படு பயங்கர ஃபேமஸ். ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் தவறாமல் நான் கொண்டுவருவது சந்திர கலாவைத்தான்.. :o)

ஆயில்யன் said...

/இலவசக்கொத்தனார் said...
ராதாக்கா ஆனாலும் நீங்க அப்படியே அம்மா சாயல்!! :)))
//

ராதா அக்கா மனசு அப்படியே அவங்க அப்பா மாதிரியே வெள்ளை மனசு :))

ஆயில்யன் said...

//கம்னாட்டினு குழந்தைகளை செல்லமா கூட கொஞ்சுவாங்களாம் தஞ்சை ஆளுங்க. //

ஹலோ அம்பி!
கம் நாட்டிப்பாய்ங்கறததான்

கம் நாட்டின்னு செல்லமா கூப்பிடுறது :))

ஆயில்யன் said...

//வல்லிசிம்ஹன் said...
இந்த மாதிரி,வெட்டு குத்து மிரட்டல்களை,
தஞ்சாவூர்க்காரங்க கேட்டதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ இல்லையப்பா....!!!!//
ஆமாம்பா உண்மைதான். அவங்க பேச்சிலியே சாதிச்சுடுவாய்ங்க.
அவங்களுக்கு எதுக்குக் கத்தியும் கபடாவும்:)) இப்படிக்கு நெல்லைப் பாட்டி.
//

பாட்டின்னா

பாட்டிதான்:)

ஆயில்யன் said...

//@கொத்ஸ் அண்ணாச்சி,அப்படி போடுங்க அருவாள! :))//

இத மட்டும் மறக்காதீங்க :)

இலவசக்கொத்தனார் said...

//திட்ற ஸ்டைலும் வித்யாசபடுமாமே! கம்னாட்டினு குழந்தைகளை செல்லமா கூட கொஞ்சுவாங்களாம் தஞ்சை ஆளுங்க.

(சபைல சொல்ல வேணாம்னு பாத்தேன்) :))//

அம்பி, இந்த கொஞ்சும் மேட்டரிலும் கூட நம்மளை அடிச்சுக்க முடியாது. ஆனா அதை எல்லாம் இந்தப் பதிவில் போட்டா, தமிழ்மணத்தில் இருந்து தூக்கிடுவாங்க!!

Sanjai Gandhi said...

இந்த 2 ஊர்காரய்ங்களும் கொஞ்ச்ம ஓவராதான் பீத்திகிறாங்க போல( ஆஸ் பர் அம்பிஸ் ஸ்டேட்மெண்ட்..:P )

எனக்கு ஒன்னும் தெரியாதுபா.. ;P

ஆயில்யன் said...

//ஆகா.. 36 பேர் எனக்கு முன்னாடியே சொல்லியிருக்காங்க.. யாராவது இதைப்பத்தி சொன்னாங்களான்னு தெரியல..
தஞ்சாவூருல, பாம்பே ஸ்வீஸ் பாம்பே ஸ்வீட்ஸ் னு ஒரு கடை இருக்கு.. அங்க சந்திர கலா அப்டீனு ஒரு ஸ்வீட்.. அப்பப்பா.. நினைச்சாலே நாக்கெல்லாம் ஊறும்.. அப்படி ஒரு ஸ்வீட்.. அந்த பக்குவம் என்னவோ வேறெந்த கடைக்கும் வருவதில்லை.. ஏரியா ஃபுல்லா படு பயங்கர ஃபேமஸ். ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் தவறாமல் நான் கொண்டுவருவது சந்திர கலாவைத்தான்.. :o)//


அதே கடையிலதான் ரொம்ப ரொம்ப பேமஸ் அசோகா :)))

அதத்தான் முதல்ல சொல்லினாங்க!

இவிகளுக்கு அந்த பேரு புச்சுக்கலையாம் :)

ஆயில்யன் said...

//இலவசக்கொத்தனார் said...
//திட்ற ஸ்டைலும் வித்யாசபடுமாமே! கம்னாட்டினு குழந்தைகளை செல்லமா கூட கொஞ்சுவாங்களாம் தஞ்சை ஆளுங்க.

(சபைல சொல்ல வேணாம்னு பாத்தேன்) :))//

அம்பி, இந்த கொஞ்சும் மேட்டரிலும் கூட நம்மளை அடிச்சுக்க முடியாது. ஆனா அதை எல்லாம் இந்தப் பதிவில் போட்டா, தமிழ்மணத்தில் இருந்து தூக்கிடுவாங்க!!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))

நிஜமா நல்லவன் said...

//////ஆயில்யன். said...
//கம்னாட்டினு குழந்தைகளை செல்லமா கூட கொஞ்சுவாங்களாம் தஞ்சை ஆளுங்க. //

ஹலோ அம்பி!
கம் நாட்டிப்பாய்ங்கறததான்

கம் நாட்டின்னு செல்லமா கூப்பிடுறது :))//////



இங்கிலீசுல புள்ளைகள கொஞ்சுனா பொறாமை. நீங்க நடத்துங்க ஆயிலு.
:)

ambi said...

//நெல்லைக்காரங்களுக்கு வாது சூது தெரியாதும்மா. அசட்டித்தனமா பேசி மாட்டீப்பாங்க. அவ்வளவுதான்.
தஞ்சாவூரா!! சாமி. படு பச்ச மிளகாய்.
//

@வல்லி மேடம், ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொன்னீங்க வல்லி மேடம். :))

என்ன ஆயில்யன் இதுக்கு என்ன சொல்றீங்க? :p

//ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் தவறாமல் நான் கொண்டுவருவது சந்திர கலாவைத்தான்.. //

வாங்க முருகன், நீங்க ஸ்வீட்டை தானே சொல்ல்றீங்க? :p

//ராதாக்கா ஆனாலும் நீங்க அப்படியே அம்மா சாயல்!! :)))
//

ராதா அக்கா மனசு அப்படியே அவங்க அப்பா மாதிரியே வெள்ளை மனசு //

சபாஷ்! சரியான போட்டி, :))

ராதாக்கா, உங்க குழந்தைங்க எல்லாம் அப்படியே அவங்க பாட்டி மாதிரி இல்லையா? :)))

//கம் நாட்டிப்பாய்ங்கறததான்

கம் நாட்டின்னு செல்லமா கூப்பிடுறது :))
//
ROTFL :)) குப்புற விழுந்தாலும், மீசைல மண்ணு ஒட்டலையாக்கும். :))

ambi said...

//அம்பி, இந்த கொஞ்சும் மேட்டரிலும் கூட நம்மளை அடிச்சுக்க முடியாது. ஆனா அதை எல்லாம் இந்தப் பதிவில் போட்டா, தமிழ்மணத்தில் இருந்து தூக்கிடுவாங்க!!
//

@கொத்ஸ் ஹிஹி, சரியா சொன்னீங்க, எனக்கும் கை துறுதுறுனு வந்தது. அப்புறம் எதுக்கு வம்பு?னு அடக்கி வாசிச்சேன். :D

ஏற்கனவே உங்க மேலே பல பேருக்கு காண்டு. பாத்து, உங்க பிளாக்க ஹாக் பண்ணிட போறாங்க. :p

// ஆஸ் பர் அம்பிஸ் ஸ்டேட்மெண்ட்..:P )

எனக்கு ஒன்னும் தெரியாதுபா//

@சஞ்சய், இந்தாப்பா சஞ்சய் ராமசாமி, நீ எந்த ஊரு? அத முதல்ல சொல்லு. :D

//இங்கிலீசுல புள்ளைகள கொஞ்சுனா பொறாமை.//

தோடா! :))

இலவசக்கொத்தனார் said...

//ஏற்கனவே உங்க மேலே பல பேருக்கு காண்டு. பாத்து, உங்க பிளாக்க ஹாக் பண்ணிட போறாங்க. :p//

அம்பி, இது எவ்வளவு நாள் ஆசை. ஆனாலும் இப்படிப் போட்டுக் குடுக்கறயேப்பா!! :))

இலவசக்கொத்தனார் said...

50 ஆயாச்சா!!! :))

Dubukku said...

டேய்ய்...இத எங்கயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்த நான் 2004ல எழுதியிருக்கேன் :))))))


http://dubukku.blogspot.com/2004/05/blog-post_19.html


இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ப ஒவ்ர்ப்பா...:))) ரீமிக்ஸ் பண்ணிட்டியே பரட்டை :))

ambi said...

//ஆனாலும் இப்படிப் போட்டுக் குடுக்கறயேப்பா!!//

@கொத்ஸ், என்ன இருந்தாலும் நீங்க நம்மூர்காரரு, உங்கள போட்டு குடுப்பேனா அண்ணாச்சி? :))


//இத எங்கயோ கேட்ட மாதிரி இருக்கேன்னு பார்த்த நான் 2004ல எழுதியிருக்கேன் //

@டுபுக்கு, அட ஆமா! இத தான் வெள்ளகாரன் இங்க்லீபீஸ்ல சோக்கா சொல்லி இருக்கான் "Great Men think alike"னு! :))

ஆனா அண்ணே! நீங்க அரசியல் இல்ல எழுதி இருக்கீங்க, நான் ஒன்லி தஞ்சை Vs நெல்லை பத்தி தானே எழுதி இருக்கேன்.

//ரீமிக்ஸ் பண்ணிட்டியே பரட்டை//

ஹிஹி, இப்பல்லாம் ரீமிக்ஸும் நல்லா தானே இருக்கு. :))

(பில்லா-2007 ரீமிக்ஸ்ல நயன் தாரா சோக்கா தானே இருந்தது.) :p

Unknown said...

தஞ்சாவூரான்னு பேரு வச்சுகிட்டு ஒரு கமென்டுகூட போடலேன்னா, எங்கூரு அய்யனார் கோச்சுகுவாரு :)

//நீங்கள் ஒரு தஞ்சாவூர்காரர் வீட்டுக்கு போகிறீர்கள் என வைத்து கொள்வோம்! "வாங்கோ! வாங்கோ!" என பாயை விரித்து, பேனை போட்டு, காப்பி எல்லாம் உங்க வீட்லயே சாப்டுட்டு தான் வந்ருப்பீங்க!னு ஒரு பிட்டை போடுவார் பாருங்கள், அது தான் தஞ்சாவூர் சம்ரதாயம்.//

என்ன ஓய் அப்பிடியே மாத்திச் சொல்றீரு? தண்ணி (H2O தான்!) கேட்டு வந்தா, மோர் குடுக்குறது (ஒரு காலத்துல) தஞ்சாவூர் பழக்கம்! இப்ப, ஜோடா, கலரு இல்லன்னா கிருசு பொட்டி.

அசோகா, இப்போ சமீபத்துல வந்த இனிப்பு. பாரம்பரிய இனிப்புன்னா, அது அதிரசம், கொழுக்கட்டை, பனியாரம்தான். இதெல்லாம், இப்போ கடையில கூட விக்கிறதில்ல.

எனக்குத் தெரிஞ்சவரை, விருந்தோம்பல்னா அது தஞ்சாவூர்க்காரர்களும், கொங்கு நாட்டுக்காரர்களும்தான்(இல்ல, தங்கமணி கொங்குச் சீமை இல்ல!). ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு சிறப்பு. எல்லாருமே ஒரு வகையில் சிறந்தவர்கள்தான் தமிழர்கள் என்று ஒரு குடையின் கீழ் வரும்போது :)

யார் பெரியவன் என்று போட்டி போடும்போதுதான் சிக்கலே!

திவாண்ணா said...

@/தஞ்சாவூரான் // இப்ப, ஜோடா, கலரு இல்லன்னா கிருசு பொட்டி.//

ஜோடா கலரு எல்லாம் இன்னும் கிடைக்குதான்னா? எல்லாம் காணாம போயாச்சுன்னு நெனச்சேன்.
கிருசு பொட்டி? க்ரஷ் பாக்ஸ் ஆ?

Unknown said...

//ஜோடா கலரு எல்லாம் இன்னும் கிடைக்குதான்னா? எல்லாம் காணாம போயாச்சுன்னு நெனச்சேன்.//

கிராமங்கள்ல இன்னும் கிடைச்சுகிட்டுதான் இருக்கு. கோக், பெப்சி புண்ணியத்துல சீக்கிரம் 'நாகரீக'மாயிடுவாங்கன்னு நெனைக்கிறேன் :)

//கிருசு பொட்டி? க்ரஷ் பாக்ஸ் ஆ?//

கறுப்புக் 'கலரு'க்குத் தான் 'கிருசு பொட்டி'ன்னு சில பெருசுகள் சொல்லும்.ேன்னு சரியாத் தெரியல.

திவாண்ணா said...

தஞ்சாவூரான் said...

//ஜோடா கலரு எல்லாம் இன்னும் கிடைக்குதான்னா? எல்லாம் காணாம போயாச்சுன்னு நெனச்சேன்.//
...கிராமங்கள்ல இன்னும் கிடைச்சுகிட்டுதான் இருக்கு. கோக், பெப்சி புண்ணியத்துல சீக்கிரம் 'நாகரீக'மாயிடுவாங்கன்னு நெனைக்கிறேன் :)..
ம்ம் மாப்பிள்ளை ஜோடா ன்னு ஏதோ கேள்வி பட்டாமாதிரி இருக்கு.

//கிருசு பொட்டி? க்ரஷ் பாக்ஸ் ஆ?//

....கறுப்புக் 'கலரு'க்குத் தான் 'கிருசு பொட்டி'ன்னு சில பெருசுகள் சொல்லும்.ேன்னு சரியாத் தெரியல....

பெரிசுங்க சொன்னா சரி.

Anonymous said...

thappichalae..

ethavathu esaku pisaka eluthi irunthaena mavanae..