Thursday, April 27, 2006

வந்துட்டோம்ல!!!

45 comments:

பொன்ஸ்~~Poorna said...

இந்த போஸ்டரின் கருத்தை விதைத்து
அறுவடையும் செய்து
லாரி ஏற்றி அனுப்பிய
விவசாயி இளாவிற்கு
தலை கைப்பு சார்பாக ரெண்டு ஆப்பு அனுப்பி வைக்கப் படுகிறது :)

ரொம்ப நன்றிங்க இளா!!!

நாமக்கல் சிபி said...

இளா! போஸ்டர் மிக அருமை!

Unknown said...

இளா... அருமை..போட்டுத் தாக்குங்க..வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

ஆப்பு கிடைச்சதுங்கோ, நன்றி!. "ஆப்பு வாங்க பிறந்த மக்களே" இன்னும் சில பேர்க்கு பட்டப் பெயர் இல்லை கவுனிச்சீங்களா? பட்டப் பெயர்களுடன் அடுத்த போஸ்டெர் வரும் வரை காத்திருக்கவும்.
சிலருக்கு நானே பேர் வெச்சுட்டேன், (ஆப்புகள் வரவேற்க்கப்படும்)
கீதாவுக்குதான் பேர் சரியா அமையல, சொலுங்க மக்களே
"பிதற்றல்" சிபி, "கச்சேரி" தேவ், "பிகுலு" பொன்ஸ்,"மதுர" கார்த்தி,"மைனர்" சந்தோஷ்,"ஜொள்ளு" பாண்டி. தலைக்கு பேரே பட்டப்பெயத்தான்.

ஜொள்ளுப்பாண்டி said...

விவசாயி கலக்குங்கப்பு !

போஸ்டர்ல தல யாரையோ தேடுதே !!! யாரையாயிருக்கும்? ம்ம்ம்....

பொன்ஸ்~~Poorna said...

//வரவேற்க்கப்படும்//
இளா, ரெண்டு 'க்' போடாதீங்க.. ஏற்கனவே நம்ம சங்கத்தமிழை ப.ம.க ரொம்ப 'ரசிக்கறாங்க' :)

அதென்னங்க 'பிகிலு' பொன்ஸ்? அப்டி என்ன பிகிலு ஊதிகினுகீறேன்??!!!

தலைவி கீதானு போட்ருங்க,... அப்போ தான் பிரச்சினை வராது ;)

பொன்ஸ்~~Poorna said...

//போஸ்டர்ல தல யாரையோ தேடுதே !!! யாரையாயிருக்கும்? ம்ம்ம்.... //
உன்னத் தான்லே... நயன் தாரா எங்கன்னு கேக்கறாரு !!!

Unknown said...

பேராசிரியர் பேரை மாத்துப்புட்டிங்களா?

கனல் கீதா??
கராத்தே கீதா??
குங்ப்பூ கீதா??

ம்ம்ம் கானா வில்ல வேற என்ன இருக்கு எதுக்கும் அவங்களையேஒரு நல்ல ஐடியா கேளுங்களேன்..

பொன்ஸ்~~Poorna said...

இளா,
தளபதி சிபி
பேராசிரியர் கார்த்திக்
கவிஞர் பொன்ஸ் ( ஹி ஹி :))

இதெல்லாம் வச்சா நல்ல இருக்கும் இல்ல??

பொன்ஸ்~~Poorna said...

புரட்சிக் கவிஞர் பொன்ஸ் இன்னும் பெட்டரா தெரியுதில்ல?

ILA (a) இளா said...

தலைவருக்கே கைப்புன்னுதான் பேர் வெச்சு இருக்கோம். நாங்க தான் பேர் வெப்போம். அதெல்லாம் type mistakeங்க, வருங்காலத்துல பார்த்துக்கிறேன்.

ILA (a) இளா said...

கவிஞர் பொன்ஸ் , புரட்சிக் கவிஞர் பொன்ஸ், இதெல்லாம் கொஞ்சம் ஓவர். "கானா" கீதா. க'ன வுக்கு க'ன. "பிகுலு" பொன்ஸ் ப'னாவுக்கு ப'னா

ஜொள்ளுப்பாண்டி said...

பொன்ஸக்கா அதென்ன 'புரட்சிக்கலைஞர்'மாதிரி ? பேசாம 'புரட்சிக்கவி' பொன்ஸ் இல்லே 'சங்கக்கவி' பொன்ஸ் ! எப்படி?

நீங்கதான் தமில் புலவி ரேஞ்சுக்கு ஆசிரியப்பாவில் சீர் அடியெல்லாம் பிரிச்சுமேயுரீங்களே!
'சங்கக்கவி'ன்னா 'சங்கத்தமிழ் கவி'ன்னு அர்த்தம் பண்ணிக்கலாம் இல்லை நம்ம வ.வா.சங்கத்து கவி ன்னும் சொல்லிக்கலாம் என்ன சொல்றீங்க?

Ravi Bala said...

கைப்பு ஒரு வேளை கைம்பொண்ணை தேடுதோ!

கைப்புள்ள said...

//கனல் கீதா??
கராத்தே கீதா??
குங்ப்பூ கீதா??//

ஹ்ம்ம்...ஹ்ம்ம்ம்...என்னோட சாய்ஸ்..."வாம்மா மின்னலு" இல்லைன்னா "மின்னலு"

கவிதா | Kavitha said...

ஓ ..இதானா சங்கம் ஆரம்பிச்சிருக்கற support ல தான் .சந்தோஷ் ஓவரா.. அனில்க்கிட்ட படம் போட்டுருக்காறா..என்னம்மா பொன்ஸ் இது.. சங்கத்துல..என்னமா செய்யறதா உத்தேசம்..?!!

கவிதா | Kavitha said...

பொன்ஸ், உங்க சங்க உறுப்பினர்கள் பற்றிய complaints எல்லாம் யார் கிட்ட சொல்லனும்..ஏன்னா நான் ஒரு complaint அணில் குட்டி சார்புல file பண்ணனும்..!

பொன்ஸ்~~Poorna said...

//சங்கத்துல..என்னமா செய்யறதா உத்தேசம்..?!!
//
வ.வா. சங்கம் ஒரு திறந்த புத்தகம்.. அதன் கொள்கை ஒரு பப்ளிஷான பதிவு.
(அட அட.. தத்துவம்.. )

எல்லாரும் இன்புற்றிருப்பதே அல்லாது
யாமொன்றறியோம் பராபரமே..

பொன்ஸ்~~Poorna said...

//பொன்ஸ், உங்க சங்க உறுப்பினர்கள் பற்றிய cஒம்ப்லைன்ட்ச் எல்லாம் யார் கிட்ட சொல்லனும்..ஏன்னா நான் ஒரு cஒம்ப்லைன்ட் அணில் குட்டி சார்புல file பண்ணனும்..! //
எங்கள் சங்கத்தின் சிங்கங்கள் நல்லது செய்திருந்தால் நீங்கள் செல்ல வேண்டியது, பொன்ஸ், @ பொன்ஸ் பக்கங்கள் அல்லது வருத்தப்படாத வாலிபர் சங்கம்

எங்கள் சங்கத்தின் அன்புத் தம்பிகள் தவறிழைத்ததாக நீங்கள் எண்ணியிருந்தால், அதனை கைப்புள்ள @ கைப்புள்ள அல்லது வருத்தப்படாத வாலிபர் சங்கத்திடம் சொல்லலாம்..
அண்ணன் தாயுள்ளத்தோடு மன்னித்து விட்டு விடுவார் :)

சொஜ்ஜி said...

//ஹ்ம்ம்...ஹ்ம்ம்ம்...என்னோட சாய்ஸ்..."வாம்மா மின்னலு" இல்லைன்னா "மின்னலு" //

அப்பு.. வந்துட்டீயளா? ஏம்பா இளா, அதான் அவுக வேல டென்சன்லயும் வந்து பேரு சொல்லுறாக, அதக் கேக்காம, என்னென்னவோ வக்கணுங்கறீயளேப்பா..

Unknown said...

//கைப்பு ஒரு வேளை கைம்பொண்ணை தேடுதோ!//

அய்யா அது கைப்பொண்ணு...
'ப்'க்கு பதிலா 'ம்' வச்சா அர்த்தமே மாறுதுங்கண்ணா...

கைப்புள்ள said...

//அப்பு.. வந்துட்டீயளா? ஏம்பா இளா, அதான் அவுக வேல டென்சன்லயும் வந்து பேரு சொல்லுறாக, அதக் கேக்காம, என்னென்னவோ வக்கணுங்கறீயளேப்பா.. //


ஆமாம் டார்லிங்! ஆனா செல்லம் நீ ஏன் கலர் சீலை உடுத்த மாட்டறே? பாரு உன் வெள்ளை சீலையைப் பாத்து நான் இருக்கும் போதே கைம்பொண்ணுன்னு உன்னைய சொல்றாங்க.

கவிதா | Kavitha said...

//ஆமாம் டார்லிங்! ஆனா செல்லம் நீ ஏன் கலர் சீலை உடுத்த மாட்டறே? பாரு உன் வெள்ளை சீலையைப் பாத்து நான் இருக்கும் போதே கைம்பொண்ணுன்னு உன்னைய சொல்றாங்க//

அய்யய்யோ..தாங்கல..அழுகை அழுகையா வருது..விட்டுடுங்க! எங்கள பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு..?!!

சிவமுருகன் said...

அட கொஞ்சம் சங்க அறிக்கை விட்டா நல்லா இருக்கும்

பொன்ஸ்~~Poorna said...

இத்தோட, ப ம க பெயரை பயன்படுத்தாமலே 25 பின்னூட்டம் வாங்கி விட்டோம் என்று அறிவித்துக் கொள்கிறேன்.. பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கும் வம்பர்களுக்கும் மிக்க நன்றி... நன்றி.. நன்றி... :) :)

பினாத்தல் சுரேஷ் said...

ப ம க பெயரை ஐந்தாவது பின்னூட்டத்தில் உபயோகப்படுத்தியதை மறந்து, அதன் தெய்வீகக் காற்று அடித்ததாலேயே 25-ஐத் தாண்டி வாழும் இப்பதிவை வாழ்த்துவதா, தூற்றுவதா என்பதை ப ம க பொதுக்குழு தீர்மானித்தபின் அடுத்த பின்னூட்டம் விடுகிறேன்!

Karthik Jayanth said...

அள்ளு !

சில்லு !

தல வந்தாச்சி !

இனிமே எல்லாரும்

ஓரங்கட்டி நில்லு !



தல போஸ்ட்டர் ல எந்த பேரு ஆப்பு வைக்க வாராங்கன்னு பாக்குறார். என்ன தல சரியா ?

சங்க ஆற்றலரசி பொன்ஸ், பாச மலரே இப்படி ஒரு கொள்கை பரப்பு ஊடகம் ஆரம்பிச்சதை சொல்லவே இல்லயே

நாமக்கல் சிபி said...

கோவை பிரதர் னு தலையே சொல்லும்போது அதெதுக்கு பிதற்றல்கள் சிபி, "கோவை பிரதர் சிபி"ன்னே போடலாமேன்னு மத்தவங்க கேட்கக்கூடும்னு நான் நினைக்கக் கூடும்.

நாமக்கல் சிபி said...

////போஸ்டர்ல தல யாரையோ தேடுதே !!! யாரையாயிருக்கும்? ம்ம்ம்.... //

//உன்னத் தான்லே... நயன் தாரா எங்கன்னு கேக்கறாரு !!! //

பொன்ஸ்,
ஏங்க தலைக்கும் எனக்கும் தகராறு உண்டு பண்ணுறீங்க! நயன்தாரா நம்ம(என்) ஆளுங்கறது நாடறிஞ்ச விஷயமாச்சே!

இலவசக்கொத்தனார் said...

//சங்க ஆற்றலரசி பொன்ஸ், பாச மலரே இப்படி ஒரு கொள்கை பரப்பு ஊடகம் ஆரம்பிச்சதை சொல்லவே இல்லயே//

கட்சியில் இரண்டாம் நிலைப் பிரஜையாய் உட்கார்த்தி வைக்கப் பட்டிருக்கும் கார்த்திக் அவர்களே, என் தம்பியே, இப்பொழுதாவது நீ இருக்க வேண்டிய இடம் எதுவென தெரிகிறது அல்லவா?

இலவசக்கொத்தனார் said...

//ப ம க பெயரை ஐந்தாவது பின்னூட்டத்தில் உபயோகப்படுத்தியதை மறந்து, அதன் தெய்வீகக் காற்று அடித்ததாலேயே 25-ஐத் தாண்டி வாழும் இப்பதிவை வாழ்த்துவதா, தூற்றுவதா என்பதை ப ம க பொதுக்குழு தீர்மானித்தபின் அடுத்த பின்னூட்டம் விடுகிறேன்!//

அது இல்லைன்னா எப்படி? அதெ தெரிஞ்சுகிட்டாலும் தெரிஞ்சுக்காத மாதிரி காட்டிக்கறாங்க. விடுங்க. தூங்கறா மாதிரி நடிக்கிறவங்களை எழுப்பவா முடியும்?

நிலா said...

என்ன, ரெண்டு கட்சியும் சேந்து பொதுமக்கள நக்கல் பண்றீங்களா?
உங்க அண்டர்கிரவுண்ட் டீலிங்கை அம்பலப் படுத்திட்டோம்ல :-))

http://nilaraj.blogspot.com/2006/04/blog-post_28.html

குமரன் (Kumaran) said...

என்ன சிபி. முழு நேர அரசியல்வாதியாகிவிட்டீரா? பதிவுகளையும் காணோம். பின்னூட்டங்களும் காணோம்?

ஜொள்ளுப்பாண்டி said...

//நயன்தாரா நம்ம(என்) ஆளுங்கறது நாடறிஞ்ச விஷயமாச்சே!//

சிபியண்ணே நயந்தாரா உங்க ஆளுதான்னேன். ரொம்பநாளா உங்கள காணலையா அதான் நீங்க நயன்ந்தாராவோட எங்காவது கோடைவாசஸ்தலத்துக்கு போய்ட்டீங்களோன்னு அண்ணன் பார்கறாரு.

குன்றிருக்குமிடமெல்லம் குமரன் இருப்பான் !
அதுபோல
நயன்ந்தாரா இருக்குமிடமெல்லாம் நீங்களிருப்பீர்கள் என நினைத்துவிட்டாரோ என்னமோ? :)))

பொன்ஸக்கா பார்த்து கமெண்ட்டு வுடுங்க! கூட்டாளிகளுக்குள்ளே குழப்பத்த தீக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு !!

ஜொள்ளுப்பாண்டி said...

//கட்சியில் இரண்டாம் நிலைப் பிரஜையாய் உட்கார்த்தி வைக்கப் பட்டிருக்கும் கார்த்திக் அவர்களே//

கொத்தனாரே உமது கோயபல்ஸ் பிரச்சாரம் இங்கு எடுபடப்போவதில்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன் ! எந்த நிலையில் உட்காத்தி வைக்கப் பட்டிருந்தாலும் நாங்கள் வருத்தப் படப்போவதில்லை என்பது எம் சங்கப் பெயரைப்பார்த்தாவது தெரியவில்லை?
என்னே விந்தையிது ?

சங்க சார்பாக உமக்கும் பினாத்தலாருக்கும் ஒரு கிலோ ENO அளிக்க பொதுக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறேன் :)))

சொஜ்ஜி said...

சின்னாளம்பட்டி சந்தையில நீங்க உசிரக் கொடுத்து திருடிகிட்டு வந்த சீலைன்னு தானே இதையே கட்டறேன்.. என்னப் பாத்து இப்படிக் கேட்டுட்டீயளே..

நானே காணாம போய்,.. நொந்து நூலா வந்துருக்கேன்.. என்கிட்ட இப்படிக் கேக்கறீயளே.. இட்லிவடையில போடாம விட்டுட்டாகன்னு பொங்கல் வடையில போட்ட சேதிய, பதிவா போட்டுருக்கேன்.. இங்ஙன பாருங்க...

பொன்ஸ்~~Poorna said...

//சங்க ஆற்றலரசி பொன்ஸ், பாச மலரே இப்படி ஒரு கொள்கை பரப்பு ஊடகம் ஆரம்பிச்சதை சொல்லவே இல்லயே //

இல்லை பிரதர்.. நீங்க இன்போசிஸ் கல்யாணம், கூட்டாளியின் பிரிவுன்னு ஒரு ரேஞ்சா இருந்தீங்க.. அதான் தொந்தரவு பண்ண வேண்டாமேன்னு.. ஹி ஹி..

இப்போ மட்டும் என்ன?!!! , மதுரை தந்த மாணிக்கம், கடல்தாண்டியும் மனம் மாறாத கட்டித் தங்கம், பாசமலர் சிவாஜியின் மறுபதிப்பு, பேராசிரியர் கார்த்திக் வாழ்க..

வாழ்க வாழ்க..

பொன்ஸ்~~Poorna said...

//எங்கள பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு..?!! //
உங்களைப் பாத்தா பாவமாத் தான் இருக்கு கவிதா.. ஒரு நாள் பிரசாரத்துக்கு வந்தே அணில் இப்படி சாப்பிடுதே, நீங்க எப்படித்தான் அதைவச்சு சமாளிக்கறீங்களோ..

பொன்ஸ்~~Poorna said...

//அட கொஞ்சம் சங்க அறிக்கை விட்டா நல்லா இருக்கும் //
சிவமுருகன், நீங்க தானே இந்த சங்கத்தை விட்டுட்டு குமரகாவியம் எழுத சொல்லி தளபதிக்கு அட்வைஸ் பண்ணினவரு.. இப்போ என்னவோ அறிக்கை கேக்கறீங்க!!!

பொன்ஸ்~~Poorna said...

//ஏங்க தலைக்கும் எனக்கும் தகராறு உண்டு பண்ணுறீங்க! நயன்தாரா நம்ம(என்) ஆளுங்கறது நாடறிஞ்ச விஷயமாச்சே!
//
மன்னிச்சிருங்க சிபி.. தெரியாம சொல்லிட்டேன்.. பாண்டி தேடினா என்ன, நீங்க தேடினா என்ன. யாராவது நயன் தாராவை அழைச்சிகிட்டு வாங்க.. அப்போ தான் கைப்பு பிரசாரத்துக்கு வருவாராம்..

பொன்ஸ்~~Poorna said...

//சங்க சார்பாக உமக்கும் பினாத்தலாருக்கும் ஒரு கிலோ ENO அளிக்க பொதுக்குழுவிற்கு பரிந்துரை செய்கிறேன் :)))
//
தம்பி பாண்டி, மருத்துவர் ராமநாதனை விட்டு விட்டாயே.. அவருக்கு ஒரு கிலோ ENO போதுமா?

Geetha Sambasivam said...

வாங்க கைப்புள்ள, கொஞ்ச நாள் ஊருக்குப் போயிட்டு வரதுக்குள்ள என்ன என்னமோ வேலையெல்லாம் நடந்திருக்கு. ஜமாயுங்க. அது சரி, Team members மத்தவங்க என்ன சுறுசுறுப்பே காணோம், எலக் ஷன் நேரம், பார்த்து, கட்சி மாறிடப் போறாங்க. இந்த பெனாத்தலாரு வேறே அவர் கட்சிக்கு ஆள் பிடிக்கிறாரு. ஜாக்கிரதைங்க.அவங்க அறிக்கை எல்லாம் படிச்சீங்க இல்ல?

Karthik Jayanth said...

பாச மலரே,

//இப்போ மட்டும் என்ன?!!! , மதுரை தந்த மாணிக்கம், கடல்தாண்டியும் மனம் மாறாத கட்டித் தங்கம், பாசமலர் சிவாஜியின் மறுபதிப்பு, பேராசிரியர் கார்த்திக் வாழ்க..

வாழ்க வாழ்க..

உடம் பிறவா சகோதரின்னு சொன்னாலே ரொம்ப கவனமா இருக்கனும்ன்னு நீங்க நிருபிச்சிடீங்க :-)

Maraboor J Chandrasekaran said...

அப்படிப்போடு போடு போடு.. தன்னாலே

சேதுக்கரசி said...

நாங்களும் வந்துட்டோம்ல! :-) சரி உங்க வலைப்பூவை சாவகாசமா வாசிச்சிட்டு அப்புறம் வரேன்.. (வரேன்னு சொல்லிட்டுக் காணாமப் போயிட்டேன்னா, கண்டுக்காதீங்க... விடுமுறைல வேற போகப்போறேன்...)