Friday, August 7, 2009

டவுசர்பாண்டிகளின் " அந்த" - பாகம் 2


டிரை சைக்கிள்காரன் நம்ம டவுசர்பாண்டியின் முப்பாட்டியின் அம்மாவின் கற்பையெல்லாம் கேள்விக்குள்ளாக்கி கொண்டிருந்தான். ஒரு வழியா அவன தாக்காட்டி மண்டபத்துக்கு போனோம். கருத்தரங்கம் நடத்துன டிரஸ்ட்காராரு தெரிஞ்சவன் சொந்தகாரய்ங்க, எதுத்தவீட்டுகாரய்ங்கனு அல்லாத்தையும் அள்ளி போட்டு வந்திருந்தாரு.

கருத்தரங்கம் துவங்கி பேசின மென்டல் டாக்டர் ஒருத்தர், இத எழுதறவைங்க எல்லாம் லூசுப்பயலுகங்கற மாறியே பேசி முடிச்சாரு. நம்மாளு கையை ஓங்கி முன்னாடி இருக்குறவேய்ங் சேருல குத்தி அந்த டாக்டர கொலைவெறியா பாத்துகிட்டே "வாடா தம் போட்டுட்டு வரலாம்ன்னு சொல்லி கிளம்ப நானும் பின்னடியே போனேன். நம்மாளு டென்சனாகிட்டா மட்டும் தான் தம் அடிக்க போயிடுவாரு. ஒரு நாளைக்கு இருவது தடவ டென்சனாவாரு. கக்குசு வரலைனா, அவங்கப்ப பாக்கெட்ல காசு ஆட்டைய போட கையவிட்டு அங்க காசில்லைனா, காது கொடைய எதுத்த கடை நாடாரு கடனுக்கு இயர் பட்ஸ் தரலைனா இப்படி அவரு டென்சனாக நிறைய காரணம் இருக்கும். இப்ப இந்த மென்டல் டாக்டரு காரணமாகிட்டாரு.

இவரு சாணிப்பேப்பரு ஒரு கட்டை கைல வச்சுகிட்டு என்னமோ The Brief History of Timeமை உலகத்துக்கு வாசிச்சு காட்டபோற மாதிரி தம்மடிக்கவும் , உள்ள வந்து உக்காரவும்னு பயங்கர படம் போட்டுட்டு இருந்தாரு. நான் அப்பன்னு பாத்து "ஆம்பளை கக்குசுலாதன் இப்படி எழுதி வைப்பானுகளா இல்ல பொம்பளைகளூம் எழுதுவாகலான்னு அசமம் தெரியாம கேட்டுவைக்க, டவுசரு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு. கொஞ்ச நேரம் கழிச்சு நாயகன் கமல் மாதிரி "தெரியலைப்பா"ன்னு உணர்ச்சிவசப்பட இவர கட்டுரை வாசிக்க கூப்பிட்டானுங்க. சரி "சனியன் சடைபோட்டு பூ வச்சு போகுதுன்னு" நிம்மதியா டீ குடிக்க போயிட்டு 10 நிமிசம் கழிச்சு வந்து பாத்தா அப்பவும் பேச ஆரம்பிக்காம மைக்க சரி பண்ணிட்டு இருந்தவரு ஒரு செருமல் செருமி வாசிக்க துவங்கினார்,

" முதலில் கழிவறை எழுத்துகளென்பதை கழிவறை இலக்கியம் என்று உலகம் ஏற்றுக்கொண்டது. ஆகவே அதை ஒரு இலக்கியமாக பார்க்கவேண்டும். நாம் கிழக்கில் உறைந்து போயுள்ளோம். மேற்கின் அறிவே நமது திறவுகோல், அதைப்பற்றி பார்த்துவிட்டு கழிவறைக்குப்போவோம். ( இதுக்கே கடைசி ஒரு வரிசை காலி) தோழர்களே ! இலக்கியம் - தத்துவம் அல்லது தத்துவார்த்த இலக்கியம் அல்லது இலக்கியபூர்வமான தத்துவம் இப்படித்தான் அவைகளை பார்க்கவேண்டும். அதற்கு முன் ஹெய்டேக்கரை நீங்கள் படிக்கவேண்டும். ஹெய்டேக்கரை படிக்கவேண்டுமானால் அதற்கு முன் ஹெகலிடம் இருந்து துவங்கவேண்டும். ( இன்னைக்கு இவன் பேச்ச கேட்டா எப்படியும் ஒரு 5 பேரு மென்டாலாகிடுவானுக - நமக்கு பேஷன்டுக்கு பேஷென்டாச்சுன்னு ' மென்டல் டாக்டர் சந்தோஷமான மாதிரி தெரிஞ்சுது என் கண்ணுக்கு )

அந்த என்.ஜி.ஓ க்காரரு பின்னாடி வந்து சட்டைய புடுச்சு இழுத்தாரு என்னை, சொல்லுங்க அங்கிள், ( புது ஸ்கூட்டி ஓட்டித்திரியும் வினோதா அவரு மகள் என்று தெரிந்த பின் அவரை அண்ணேன்னா கூப்பிட முடியும் ) இங்க பாருப்பா, டிரஸ்ட் ஆரம்பிச்சவுடனே ஒரு ரத்ததான முகாம், அப்புறம் ஒரு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் , அதுக்கு பிறகு ஒரு கருத்தரங்கம் நடத்துனாத்தான் பண்டு அலாட் பண்ணுவேய்ன்னு கலக்டரு சொல்லிட்டாரு அந்த கருமத்துகாகத்தான் இந்த எழவெல்லாம் நடத்துறேன். தெரிஞ்ச பயலாச்சேன்னு கூப்பிட்டா இப்படியா கொல்லுறதுன்னு கண்ணீர் மல்க டவுசர்பாண்டி மேல புகார் வாசிச்சார். "ஒன்னும் பிரச்சினையில்ல நான் கொடுக்கிற துண்டு சீட்ட அவருட்ட கொடுங்க டக்க்ன்னு முடிச்சிட்டு வந்திடுவாருன்னு" சொல்லி ஒரு சீட்ல " ஜானி ஒயின்ஸ் மாடி , ஓல்டு டிராவன் ஃபுல் ரெண்டே பேர்"ன்னு எழுதி கொடுத்துவிட்டேன்.

அதுவரைக்கும் அவரு படிச்ச எல்லா கழிவறை எழுத்துகளுக்கு பூராம் தத்துவார்த்த விளக்கம் கொடுத்து அரங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி கொண்டிருந்தார் டவுசரு.

"இதோ சமீபத்தில் திருச்சியில் ஒரு இலவச கழிவறையில் பார்த்த பாலியல் கலப்பில்லாத வாசகம் " எரிக்காத சக்தியும் ' செரிக்காத உணவும் சுடுகாட்டு தேரின் சக்கரங்கள்" இத எதுக்கு எழுதிருக்கான் அவனுக்கு அஜிரனம், கூடவே மலச்சிக்கல் சோ தன் துயரை அங்கு வெளிக்காட்டியுள்ளான். இதைத்தாண்டி "இன்செஸ்ட்" என்கிற வகையில் உள்ள எழுத்தகளை பற்றியும் கண்டிப்பாக இங்கு சொல்லவேண்டும் என்று ஆரம்பிக்க .அய்யயோ இவன் கூட வந்த கொடுமைக்கு நம்மளையும்ல அடி வாஙவைப்பான் போலருக்குன்னு மேடைக்கு சீட்ட கொடுக்க அதை இடக்கையால் "இசுடைலாக" ( சுத்த தமிழாம், ஸ் வடமொழியென்பதால் ஸ்டைல் , இசுடைலாக மருவிகிறது ) வாங்கியவரின் முழி நட்டுகிட்டது. அடுத்த வார்த்தையே "ஆகவே கழிவறை எழுத்தக்கள் நம் சமுகத்தை பிரதிபலிக்கிற கண்ணாடி என்று சொல்லி முடிக்கிறேன் என்றார். பேசி முடித்தபின் டிரஸ்டுக்கார அங்கிள் வந்து ஒரு 500ரூவாய் நோட்ட இவரு பாக்கட்டுல சொருவி விட்டாரு "வேணாங்க வேணாங்க ந்னு சொல்லிட்டே எடுத்து உள்பாக்கட்டுல வச்சுகிட்டாரு. நான் எஸ்கேப்பு.

மறு நாள் காலையில பாஸ்கர் இட்லிக்கடைல டவுசர பாத்து ஒரு 50 குடுங்க தோழர் ரெண்டு நாளையில தாரேன்னு நான் கடன் கேக்க "காசு இருந்தா ஒரு வில்ஸ் வாங்கி பத்தவச்சு அடிச்சிட்டு பாதி கொடுன்னாரு" சரி ரவுண்டா 500 வச்சுருக்காரு 1.75 ( அப்போதைய விலை ) வில்ஸுக்கு போயி அத முறிக்க சங்கட படுறாறோன்னு தம்மை வாங்கி கொடுத்தேன்.

நேத்து கோரிப்பாளையம் கலா லாட்ஜுக்கு போனேன்னு சொன்னாரு. எனக்கு கொஞ்சம் எரொடிக் கதை கேக்கபோறோம்ன்னு உள்ளுக்குள்ள தோணவே ஹார்வி நகர் மொத தெருவுக்கு கூட்டிட்டு போயி யாருமில்ல இங்க , இப்ப சொல்லுங்கன்னு கேட்டேன்.

அவரும் அவரு கூட ஒரு வீணாப்போன கவிஞரும் கலா லாட்ஜுகு போயிருக்கானுங்க. கலா லாட்ஜு "அந்த" மாதிரி லாட்ஜு. டவுசருக்கும் அவர் நண்பருக்கும் பெண்வாசணை என்பது 7அ பஸுல காலேஜுக்கு போகும் பட்டதுதான் அதுக்குபிறகு வெறும் "வறட்டிழுப்பு"தான். கையில 500ரூவாய் இருக்கவும் பல பத்தாண்டுகளின் பேராவலை போக்க போயிருக்கிறார்கள். அங்க போனதும் தலைக்கு 200 வாங்கிட்டானுக, அப்புறம் "உள்ளபோகும் " போது 50 ரூவாய் டிப்சு கொடுங்க இல்ல கம்பெனி கிடைக்காதுன்னு "புத்தி" சொல்லி அனுப்பிருக்கானுங்க. மொதல்ல கவிஞரு போயிருக்காரு, அடுத்து டவுசர் உள்ளே போயிருக்காரு. கால் லேசாக நடுங்குகிறது. முதன் முதலில் ஒரு பெண்ணுடன் தனியே என்று இவரின் நடுக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. விட்டால் தன் கால்சட்டையிலேயே ஒன்னுக்கு அடிக்கிற கண்டிசன்ல இவரு அந்த பெண் பாலியல் தொழிலாளியிடம் கேட்டிருக்கிறார் " டென்சனாய் இருக்கு ஒரு தம் அடிச்சிக்கவான்னு" அதுக்கு அந்த பெண் சொல்லியிருக்கா "ஏன்ய்யா நாங்க என்ன டீக்கடையா வச்சிருக்கோம்' இப்பத்தான் உனக்கு முன்னாடி வந்தவன் தம்மடிச்சிட்டு போன்னான்னு"

அன்னைல இருந்து தோழர் என்னை தம்மடிக்க கூப்பிடுறதே இல்லை

10 comments:

ரவி said...

Lets Start it here

ILA (a) இளா said...

aha..

ரவி said...

ila, time sollu..

குப்பன்.யாஹூ said...

if you could post some madurai real pictures especialy aarappalayam river , tembavani, mappilai vinayakar thetre etc, it would be interetsing

முபாரக் said...

தல, எப்பவும் நம்ம சிரிக்கிறது ஒங்க எழுத்துலதான் :-) அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல

ஜெகதீசன் said...

:))))

யாசவி said...

:-))

Pot"tea" kadai said...

இதுல ஏம்லே கெரிடிட்டு கொடுக்கல்ல. புடிச்சிடுவோம்ல

Pot"tea" kadai said...

படம்லாம் போட்டா ஒத்துகிருவோமா?

மிதக்கும்வெளி said...

எச்சூஸ்மி, யாரு அந்த டவுசர்பாண்டி?