Monday, July 28, 2008

கவுஜ திறனாய்வு...

எல்லாரும் சொவ்மா இருக்கியளா? 'அதெல்லாம் கெடக்கட்டும்.. உன்னையையும் நம்பி சங்கத்துல இருந்து அட்லாஸ்னு ஒரு டைட்டில கொடுத்தாவ.... ஒரு மரியாத இல்லாம போஸ்டே போடாம சுத்திட்டு திரியரியாலே...'னு கேக்குதியளா?? என்னத்த பண்ண சொல்லுதிய?? ஆணி அதிகம்னு சொன்னா நம்பவா போறியா?

போன பதிவுல காதலிக்கனும்னா கவுஜ எழுதனும்னு சொன்னதுல இருந்து நம்ம நண்பர் ஒருத்தர் நான் கவுஜ எழுதியே தீருவேன்னு ஒத்த காலுல நின்னாரு. அப்புறமா... நாந்தான் அதெல்லாம் ஒரு மாதிரியா சுத்திட்டு திரியரவ எழுதுறதுல.. அதாவது... ஒரு லெவலுக்கு மேல சரக்கிருக்குறவ எழுதுறது (நீங்க தப்பா நெனச்சிடாதிய), நமக்கெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னேன்.. உடனே பயபுள்ள சும்மா இருக்காம உங்க பதிவுலகத்துல இருந்து சில பல கவுஜைய சுட்டு என் காதலிக்கு கொடுத்திடுறேன்னு சலம்புனான்.

நமக்கும் தலைல ஒரு பல்பு எரிய, உடனே... 'எலே தம்பி... எங்க பதிவுல சமீபத்திய கவுஜ சூராவளி ஒருத்தவ இருக்காவ... அவிய எழுதுன கவுஜைய பாத்து அவனவன் அரண்டு மெரண்டு போயிருக்கான்னு BBCலையே சொன்னாவன்னா பாத்துக்கோயேன்'னு சொன்னேன். பயபுள்ளையும் நெம்ப ஆர்வமா, 'யாருடா அது?' னு கேட்டான். நானும்...'இந்த வெளிநாட்டு காரனுவ எல்லாம் தலைல கலர் கலரா பெயிண்ட் அடிச்சிட்டு, கழுத கணைக்குற மாரி கத்திட்டே இருப்பானுவளே... அந்த பாட்டு ஸ்டைலு பேரு... எது என்ன?? ஆங்... Rap... இவிங்க எக்ஸ்ட்ராவா இன்னொரு p சேத்து பேர வச்சிருக்காவ... நியுமராலஜி னு நெனக்கிறேன்'ன்னு சொன்னேன்... 'எலே தம்பி... நான் காதலிக்கிறதுக்கு கவுஜ கேக்குறேன்.. விவாகரத்துக்கு இல்லலே'னு சொல்றான்.

அப்புறம் அவனும் சில பல கவுஜைய சுட்டுப் போட்டு.. சும்மா இல்லாம, கவுண்டர் பெல்கிட்ட போய் திறனாய்வு பண்ண கொடுத்திருக்கான். அவரு சும்மா இருப்பாரா?? அவரோட திறனாய்வ நீங்களே பாருங்க...

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு


டேய் கோமட்டி தலையா... இது உனக்கே நியாயமா இருக்காடா?? அவளே என்ன பாக்குறாளா? உன்ன பாக்குறாளானே தெரியாத ஒன்றரைக் கண்ணு... அத வேற நீ மொழிபெயர்க்கிரியாடா? டேய்.. எல்.கே.ஜி ல ஏ.பி.சி.டி.யையே காப்பி அடிச்சவன்.. நீ எல்லாம் ட்ரான்ஸ்லேஷன் பத்தி பேச வந்துட்டியா?

சுவாரசியமான மர்ம நாவல்
வாசிப்பனாய்த் தான்
உன்னைக் கண்கொட்டாமல் பார்க்கிறேன்.
மற்றபடி நீ பார்க்கும் நாழிகை
முகம் திருப்பிக்கொள்வது எல்லாம்
வெறும் பக்கங்கள் புரட்டும் அவகாசமே.


அப்படியே பாத்துட்டு இரு... ஈவ் டீஸிங்ல புடிச்சிட்டு போக பெரிய கொண்ட போட்ட பொம்பள போலிஸ் வந்துட்டே இருக்குது... டேய் கருவாட்டு மண்டையா... உன்ன எல்லாம் மெட்ராஸ் ஐ வந்த பத்த பேர கூட்டிட்டு வந்து ஒன்றரை மணி நேரம் உடாம பாக்க வைக்கணும்டா... அப்பத்தான்டா திருந்துவ...

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்


ஏன் டா பனங்கொட்டத் தலையா... சம்பந்தமே இல்லாம சிரிச்சிட்டு இருந்தா சுத்தி இருக்குறவங்க வேடிக்க பாக்காம என்னடா பண்ணுவாங்க?? என்னமோ மூனு நாள் ஐஸ்பெட்டில இருந்து கின்னஸ் சாதன பண்ணவனாட்டம் அசிங்கப்பட்டதையும் சந்தோஷமா சொல்லிட்டு திரியிரியேடா... உன் மனசுல என்ன சுப்ரமணியபுரம் அழகர்னு நெனப்பாடா?

சொல்லவொண்ணா சோகங்களில்
நில்லாமல் வழிந்த விழிநீரில்
மனம் கசிந்து என்னுடன்
உனதிருப்பை உணர்த்திய
உன் உள்ளங்கையின்
மௌன மொழியா காதல்?


பள்ளிக்கூடப் பரிட்சைல கைல எழுதி வச்சி பிட்டு அடிச்சவந்தானடா நீயீ... ஏன் டா... இந்த மௌனம், தனிமைலாம் உங்கள என்னடா பண்ணிச்சு... சுத்தி சுத்தி அதையே புடிச்சிட்டு நிக்கிறியேடா... உன்ன எல்லாம் காது ரெண்டையும் செவுடாக்கி மொத்தமா மௌன மொழிய கேக்க வைக்கனும்டா...

நான் எப்படி எழுத முயன்றாலும் அதில்
யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்
காதல் உலகப்பொது மறைதானே- ஆனால்
யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!


காப்பி அடிக்கிறதையும் எப்படி டீஸண்டா சொல்லுது பார்.. டேய் தேங்கா மூடி தலையா... காதல் உலக பொதுமறையா?? இது திருவள்ளுவருக்கு தெரியுமாடா?? ஏன் டா... ஒன்னாப்புல இருந்து ஏழாப்பு எட்டு வருசம் படிச்சது வரைக்கும் அவ பேர சொல்லித்தானடா அவளுக்கு அட்டண்டென்ஸ் எடுத்தானுங்க? அத விடுடா... பள்ளிக்கூட பாத்ரூம்லகூட என்னமோ எல்லோரோ ஓவியம் மாதிரி அவ பேர எழுதி வச்சிருக்கானுங்க.... இதுல அவ பேரு யாரும் எழுதாத கவிதையா??

இப்பொழுதெல்லாம்
இயற்கையோடு சண்டையிடுவது
அன்றாடமாகிவிட்டது,
என்னவள் உன்னோடு ஒப்பிட்டவாறே!!


ஆரம்பிச்சிட்டானுங்கடா.... டேய் பஞ்சர் ஒட்டுன பிஞ்ச டயர் தலையா... ஏன்டா.. இதுக்கு முன்னால எல்லாம் நிலா, ஆறு, சூரியம், வானவில், அது இதுன்னு தனி தனியா புடிச்சி இழுத்து கவுஜ எழுதுனீங்க.. இப்ப மொத்த இயற்கையையும் வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சிட்டீங்களடா?? உங்கள எல்லாம்... டேய்.. வேண்டாம்டா... அசிங்கமா பேச கூடாதுன்னு நெனச்சிட்டு இருக்கேன் டா... வீணா ஏதாவது பேச வச்சிடாதீங்கடா...

கவுஜ மக்களே!! இந்த கவிதைகளயெல்லாம் நீங்க எழுதுனதுன்னு தெரிஞ்சிருந்தா கவுண்டர் பெல் இப்படி எல்லாம் திறனாய்வு பண்ணிருக்க மாட்டாரு.. என்னோட நண்பன், அந்த கரிச்சட்டி மண்டையன் எழுதுனதுன்னு நெனச்சித்தான் மணி அப்படி பேசிப் புட்டாரு... ஸோ... இதெல்லாம் மனசுல வச்சிக்காதிய... பாவம் காலிங்...

முந்தைய திறனாய்வு - 1
திறனாய்வு - 2

7 comments:

மங்களூர் சிவா said...

:)))))))))))))

கப்பி | Kappi said...

டோட்டல் டேமேஜ் :)))

AKARAMUDHALVAN said...

நானும் ஒன்ரூ

AKARAMUDHALVAN said...

நானும் ஒன்ரூ

http://akaramudhalvan-naga.blogspot.com/2008/07/tamil.html

sorry for the distapens. & my Eng.

Syam said...

அத்தன பேரையும் உக்காரவெச்சு கும்மிட்டீங்கல்லே...நல்லா இருக்குய்யா...நடத்துங்க நடத்துங்க
:-)

rapp said...

:):):)

anujanya said...

கவுஜயின்னா இத்தினு நக்கலு! இருக்கட்டும். கலக்கல்ஸ் ஜி.

அனுஜன்யா