Saturday, October 9, 2010

ரங்குஸ்கி

டாக்டர் வசீகரன்: லேடீஸ் அண்டு ஜென்டில்மேன்

பத்து வருசம் ராப்பகலா முழிச்சு, வெறும் சுக்குக்காப்பியும் காலேஜ் பீடியும் குடிச்சு இந்த ரங்குஸ்கி கொசுவை உருவாக்கியிருக்கேன். இதுக்கு எல்லா பிளட் க்ரூப்பும் புடிக்கும்; எல்லா ஜீவராசியையும் கடிக்கும்.

நம்ம நாட்டை சமீபகாலமா புடிச்சு ஆட்டுவிச்சுக்கிட்டிருக்கிற நோய்கள் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல், மலேரியா. இதுக்கெல்லாம் சில வலைப்பதிவர்கள் எழுதுற இடுகைகள் தான் காரணமுன்னு நிறைய பேரு நினைச்சிட்டிருக்காங்க! ஆனா, விஞ்ஞானபூர்வமா இந்த நோய்க்கெல்லாம் கொசுக்கள் தான் காரணம். இந்த வியாதி வந்தவங்க வலைப்பதிவு படிக்கிறது தற்கொலைக்கு சமம்; வலைப்பதிவு எழுதறது படுகொலைக்கு சமம்.

ஏடஸ் எகிப்டி-ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க! நிறைய பேரு இது ஆந்திராவுலே பெத்தலகுண்டா பக்கத்துலே பண்ணுற ஒருவிதமான உப்புமான்னு நினைச்சிட்டிருக்காங்க! ஆனா, இந்த ஏடஸ் எகிப்டிங்கிறது ஒரு கொசு! இந்தக்கொசு கடிச்சா டெங்கு, சிக்குன்குனியா மாதிரி நோய்கள் வரும். இப்போ நான் கண்டுபிடிச்சிருக்கிற ரங்குஸ்கி யாரை ஏடஸ் எகிப்டி கடிச்சுதோ, அவங்களை இதுவும் போய் கடிச்சு நோய்க்கிருமியை உறிஞ்சி எடுத்திரும். தமிழ் சினிமாவுலே பாம்பு கடிச்சா கடிச்ச இடத்துலே மனுசனும் கடிச்சு விஷத்தை உறிஞ்சுவாங்களே அதே மாதிரி! ஆனா ஒண்ணு, நான் எவ்வளவோ முயற்சி பண்ணியும் ரங்குஸ்கி வலைப்பதிவு நடத்துறவங்களை மட்டும் கடிக்கவே மாட்டேங்குது! கேட்டா மனிசன் மனிசனைக் கடிக்கலாம்; ஆனா கொசு கொசுவைக் கடிக்காதுன்னு லாஜிக் பேசுது!

இந்த ரங்குஸ்கி கொசுவுக்கு கராத்தே, பரதநாட்டியம், பிரேக் டான்ஸ், பாப் மியூசிக் எல்லாமே தெரியும். அதுனாலே யாரு எவ்வளவு வேகமா என்ன பண்ணிட்டிருந்தாலும் கரெக்டா போய் கடிச்சிடும். இந்த மாதிரி பல ரங்குஸ்கிகளை உருவாக்கி டூட்டியிலே போட்டா, அப்புறம் டெங்கு, சிக்குன்குனியா சுத்தமா இருக்காது.Dot!

சேட்டைக்காரன்: டாக்டர் வசீகரன்! இந்தக் கொசுவை ரிஜக்ட் பண்ணறேன். வலைப்பதிவர்களுக்கு டெங்குக்காய்ச்சல், சிக்குன்குனியா வந்தா உதவாத இந்தக் கொசுவாலே யாருக்கு என்ன பயன்?

டாக்டர் வசீகரன்: கவலைப்படாதீங்க சேட்டை! உங்களை மாதிரி பதிவருங்களுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தா கடிச்சு குணமாக்க புதுசா ஒரு பன்றியை உருவாக்கிட்டிருக்கேன். மேலும் நீங்க கடிக்கிற கடிக்கு உங்களையெல்லாம் எந்த கொசுவும் அண்டாது. இன்னும் சொல்லப்போனா தமிழ்நாட்டுலே டெங்கு அதிகமாப் பரவாம இருக்கிறதுக்கே நீங்கதான் காரணம். கொசுக்கெல்லாம் உங்களைப் பாத்தா அவ்வளவு பயம். Dot!

சேட்டைக்காரன்: ஏன் டாக்டர்? எந்திரன் படத்துலே வில்லன் ரோபோவுக்கு ரெட்-சிப் சொருகி அதை வச்சு ஊரையே கலக்கினா மாதிரி இந்த ரங்குஸ்கியையும் தவறாக உபயோகிக்க வாய்ப்பிருக்கா?

டாக்டர் வசீகரன்: அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை! ரெட்-சிப்போட பாச்சாவெல்லாம் ரங்குஸ்கி கிட்டே பலிக்காது. ஆனா, நேந்திரங்காய் சிப்ஸ் மட்டும் ரங்குஸ்கி கண்ணுலே படாம பார்த்துக்கோங்க! அதுக்கு ரொம்பப் பிடிக்கும். Dot!

சேட்டைக்காரன்: அப்படீன்னா, ரங்குஸ்கியாலே யாருக்கும் எந்த ஆபத்துமில்லேன்னு சொல்லுங்க!

டாக்டர் வசீகரன்: ஒரே ஒரு ஆபத்து இருக்கு! பொதுவா இது வலைப்பதிவர்களைக் கடிக்காதுன்னாலும், ’எந்திரன்’ படத்தைப் பத்தி ஒரு இடுகை கூட போடாதவங்களை நம்ம ரங்குஸ்கி கடிச்சிடும். அதுக்கப்புறம் சிக்குன்குனியா,மட்டன்குனியா,லெக்பீஸ் குனியான்னு பல நோய்கள் அவங்களுக்கு வந்திடும். எவ்வளவு பெரிய டாக்டர் வந்து கடிச்சாலும், அதாவது கவனிச்சாலும் ரங்குஸ்கியோட கடியிலேருந்து தப்பிக்க முடியாது. Dot!

சேட்டைக்காரன்: ஐயையோ டாக்டர்! நான் ’எந்திரன்’ படத்தைப் பத்தி விமர்சனம் கூட போடலியே!

ரங்குஸ்கி: என்னது? விமர்சனம் போடலியா? பரவாயில்லே, திட்டியாவது எழுதினீங்களா?

சேட்டைக்காரன்: இல்லியே ரங்குஸ்கி! சும்மா ஒண்ணு ரெண்டு பிட்டு போட்டிருக்கேன்.

ரங்குஸ்கி: எந்திரன் படத்தை ஒண்ணு தூக்கி எழுதணும்; இல்லாட்டித் தாக்கி எழுதணும். ரெண்டையுமே செய்யாம வலைப்பதிவருங்கிற பேருலே ஊரை ஏமாத்திட்டா இருக்கே சேட்டை? முதல்லே உன்னைக் கடிக்கிறேன்.

சேட்டைக்காரன்: ஐயையோ டாக்டர்! காப்பாத்துங்க காப்பாத்துங்க! ரங்குஸ்கி கடிக்க வருது!

டாக்டர் வசீகரன்: உன் ரேஞ்ஜுக்கு உன்னை சானட்டோரியம் கொசு கடிக்குறதே தப்பு! ரங்குஸ்கி! கோ!!

சேட்டைக்காரன்: ஐயோ! டாக்டர் வசீகரன்! காப்பாத்துங்க டாக்டர்!

டாக்டர் வசீகரன்: சேட்டை! எனக்காக சனா காத்துக்கிட்டிருப்பா! நான் போறேன்...காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை....?

சேட்டைக்காரன்: டாக்டர், காதல் அணுக்கள் இருக்கட்டும், என் உடம்பிலே ஒரு யூனிட் ரத்தம் கூட தேறாதே டாக்டர்!

ரங்குஸ்கி: கமாண்ட் மோட் ரெடி! டார்ஜட் சேட்டைக்காரன்! ரெடி..ஸ்டெடி..கோ!

5 comments:

எல் கே said...

settai ungala kadicha ranguski ennacchu?

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி இது லேடீஸ் கொசுவா ? இல்லை ஜென்ஸ் கொசுவா ? லேடிஸ் கொசுவா இருந்து என்னைய கடிச்சா பரவாஇல்லை .

நர்சிம் said...

gud one.

vaarththai said...

//எந்திரன் படத்தை ஒண்ணு தூக்கி எழுதணும்; இல்லாட்டித் தாக்கி எழுதணும். ரெண்டையுமே செய்யாம வலைப்பதிவருங்கிற பேருலே ஊரை ஏமாத்திட்டா இருக்கே...//

:)))))))

NaSo said...

ஐயய்யோ நான் இன்னும் எந்திரன் படமே பார்க்கலையே. எப்படி எந்திரன் பதிவு போடுறது?