Tuesday, October 23, 2007

சங்கம் வழங்கும் மொக்கை பதிவர் நம்பர் 1 - நடந்தது என்ன?

அபி அப்பா குழுவினர் மொக்கை பதிவர் நம்பர் 1ல் இருந்து வெளியேற்றப்பட்டத்தின் பின்னணி என்ன? இதோ உங்களுக்காக அங்கே படம்பிடிக்கப்பட்ட காட்சிகள்...

அபி அப்பா கோபமாக நின்றிருக்கிறார் (அப்படினு அவர் நினைச்சிட்டு இருக்கார். ஆனா அதை பார்த்து எல்லாம் சிரிச்சிட்டு இருக்காங்க. அவர் கோபமா இருக்கார்னு அவரே சொல்லியும் யாரும் நம்பவில்லை. கொஞ்ச நேரம் அவரே நம்பவில்லை). பக்கத்துல அப்பாவியாக "ரிப்பிட்டே" கோபி நின்றிருக்கிறார்.

நடுவர்கள் ஓசை செல்லா, (மொக்கை) மாஸ்டர் செந்தழல் ரவி மற்றும் ஒரு கொரிய பெண் பதிவர் (அவுங்களுக்கு இங்க என்ன வேலைனு கேக்க கூடாது)

ஓசை செல்லா: அபி அப்பாக்கிட்ட மைக் கொடுங்க...
என்ன பிரச்சனை?

அபி அப்பா: ஒன்னுமில்லை

ஓ.செ: என்ன பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?

அ.அ: ஐ அம் நாட் அப்ஸட்... ஐ அம் ஹேப்பி... வி டிட் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ். திஸ் இஸ் பெஸ்ட் டே ஆஃப் மை லைப்

ஓ.செ: அப்பறம் என் அப்சட்டா இருக்கீங்க? டெல் மீ... டெல் மீ வாட் இஸ் இன் யுவர் மைண்ட்... டெல் மீ. அபி அப்பா.. கமான்.

கோபி :அபி அப்பா கமான்...

அ.அ: ஏன் என் பதிவு பிடிக்கல?

ஓ.செ: அதை ஏன் அப்ப கேக்கல? எதுக்கு இப்படி கோவிச்சிக்கனும்?

அ.அ: ஐ அம் ஆஸ்கிங் யூ நௌ... எல்லாத்துக்கும் இடம், பொருள், ஏவல் இருக்கில்லை.

ஓ.செ: நான் இப்ப உங்களை ஒன்னு கேக்கறேன்... கும்மி பதிவு போட்டிங்க இல்லை?

அ.அ: ஆமாம் போட்டேன்.

ஓ.செ: அந்த பதிவ படிக்காமலே பதிவு அருமையா இருக்குனு முதல்ல பின்னூட்டம் போட்டேன் இல்லை.

அ.அ: ஆமாம்.

ஓ.செ: அன்னைக்கு ஏன் பின்னூட்டம் போட்டேனு கேட்டீங்களா?

(பின்னாடி மகளிரணியை சேர்ந்த ஒருவர் பலமாக கை தட்டுகிறார்... அதை அப்படியே ஃபோகஸ் பண்ணறோம்)

அபி அப்பா தீவிரமாக சிந்தித்துவிட்டு : கேக்கலை

ஓ.செ: அதே மாதிரி நானும் இன்னைக்கு சொல்லல.
அன்னைக்கு நீங்க கும்மி போஸ்ட் போட்ட போது பதிவ படிக்காமலே அருமை, அட்டகாசம்னு கும்மி அடிச்சது யாரு?

அ.அ: ஹிம்?

ஓ.செ: யாரு?

அ.அ: நீங்க தான்.

ஓ.செ: அன்னைக்கு சந்தோஷமா எடுத்துக்கிட்டீங்க இல்லை. மிக்க நன்றினு பின்னூட்டம் போட்டிங்க இல்லை. இன்னைக்கு இந்த பதிவு மொக்கையா இல்லைனு சொல்லும் போது அதுக்கு ஏன் மிக்க நன்றினு சொல்ல முடியல? ஒய் ஆர் யூ கெட்டிங் அப்செட்?

(செந்தழல் ரவி பக்கத்துல இருக்குற கொரிய ஃபிகருடன். இப்படி தான் இந்த ஆளு பள்ளிக்கூடத்துல படிக்கும் போது ஒரு வாத்தியார் இவர் ஃபெயிலானதுக்கு அடிச்சப்ப. அன்னைக்கு நான் பாஸானப்ப அடிக்கல. இன்னைக்கு நான் ஃபெயிலானப்ப மட்டும் எப்படி அடிக்கலாம். பாஸானதுக்கு ஒரு நியாயம், ஃபெயிலானதுக்கு ஒரு நியாயமானு? கேட்டு அவரையே மடக்கிட்டாரு... கொரிய ஃபிகர் எதுவும் புரியாம அவர் சொல்றதுக்கு தலையை ஆட்டிட்டு இருந்தது)

அ.அ : ஏன்னா நான் நல்லா மொக்கை போட்டேன். பதிவு மொக்கையாவே இல்லைனா எப்படி அது?

ஓ.செ: பதிவு மொக்கையாவே இல்லைனு நான் சொன்னனா?

அ.அ: யா.. வேணும்னா டேப் ரீவைண்ட் பண்ணி பார்க்கலாமா?

ஓ.செ: நான் சொன்னனா பதிவு மொக்கையா இல்லைனு? டிட் ஐ சே தட்? டிட் ஐ சே தட்?

அ.அ: பதிவு மொக்கையாவே இல்லைனா அது அப்படி? இந்த இடத்துல மொக்கையா இல்லை, அந்த இடத்துல மொக்கையா இல்லைனா பரவாயில்லை. மொத்த பதிவும் மொக்கையா இல்லைனா எப்படி? ஹவ் கேன் யூ சே தட்? அது எப்படி மொக்கையா இல்லைனு சொல்லலாம்?

ஓ.செ: என்ன சொன்னிங்க?

அ.அ: மொக்கையா இல்லைனு எப்படி சொல்லலாம்?

ஓ.செ: அது இல்லை.. ஹவ் கேன் யூ சே தட்டா? இதுல இருந்து என்ன தெரியுது, உங்க பதிவெல்லாம் கும்மி அடிச்சா தப்பில்லை ஆனா மொக்கை போடலைனு மட்டும் சொல்ல கூடாது. அப்படி தானே?

அ.அ: நோ நோ. நான் அப்படி சொல்லல. இந்த இடத்துல மொக்கையா இல்லைனு சொன்னா சரி. ஆனா பதிவே மொக்கையா இல்லைனு எப்படி சொல்லலாம். அன்னைக்கு அந்த பதிவுல ஒரு இடத்துல பதிவு மொக்கையா இல்லைனு மொக்கை மாஸ்டர் செந்தழல் ரவி சொன்னாரு. ஐ டுக் இட். இப்படி பதிவே மொக்கையா இல்லைனு சொன்னா எப்படி? நாங்க வெளி நடப்பு செய்யறோம்... வா கோபி.

கோபி: ரிப்பீட்டே...

சரி அபி அப்பா சொல்கிற "பதிவு மொக்கையா இல்லை"னு ஓசை செல்லா சொன்னாரா? ரீ டெலிகாஸ்ட்...

ஓ.செ: எனக்கு பிடிக்கல... எனக்கு பிடிக்கலை.. எனக்கு இது தான் பிரச்சனை. நான் கொஞ்சம்.. கொஞ்சம் இல்லை கொஞ்சம் ஓவராவே ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட். மொக்கையா இருந்துச்சி. நல்ல கரு. நல்லா எழுதியிருக்கீங்க. ஸ்டைல் இருந்துச்சி. எல்லாமே இருந்துச்சி. ஆனா எனக்கு பிடிக்கலை. நச்சுனு சொல்றேன். ஐ அம் நாட் ஜோக்கிங். பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல. எக்ஸ்ட்ராடினரி தீம். ஆனா மொக்கை போடறதை மறந்துட்டாரோனு நினைக்கிறேன். அங்க அங்க சமுதாயத்துக்கு பயனுள்ளதா எழுதிட்டாரு. ரவி மொக்கையா இருக்குனு சொல்லிட்டாரு. அந்த கொரியன் ஃபிகர் கூட சொல்லிடுச்சி. ஆனா எனக்கு பிடிக்கல. எல்லாருக்குமே மொக்கையா தெரியலாம். ஆனா எனக்கு மொக்கையா தெரியல... ஒரு இணைய நாடோடியா சொல்றேன்... இது மொக்கையா இல்லை.

ரீ டெலிகாஸ்ட் முடிந்தது...

ஓ.செ: நான் தானே உங்களை பேச சொன்னேன். நானே உங்களை என்னை ஏன் திட்ட சொல்லனும்?

அ.அ: சூடான இடுகைல வரணும்னு தான். வேற எதுக்கு?

ஓ.செ: என்ன? சூடான இடுகைல வரதுக்கா? அதை தான் நாலாவது பக்கத்துக்கு தள்ளிட்டாங்களே. அதுல வரதுக்கு நான் ஏன் இப்படி பண்ணனும்?
சரி. நான் ஒண்ணு சொல்லறேன்? ஐ ஜஸ்ட் வாண்ட் டூ சே சம்திங். நான் வந்து யாருக்கும் பயப்படாதவங்க. எதை பத்தியும் கவலையேப்படமாட்டேன்...

அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.

ஓ.செ: நான் என் மனசுல பட்டதை சொல்லுவேன். எனக்கு இந்த பார்ஷியாலிட்டி எல்லாம் பிடிக்காது. இந்த வலைப்பதிவுல வந்து தான் நான் பேர் வாங்கனும்னு இல்லை. நான் ஒரு இணைய நாடோடி. எனக்குனு ஃபேன்ஸ் இருக்காங்க. இணையம் ரொம்ப பெருசு. எல்லாரும் நல்லா மொக்கை போடறீங்க. வாழ்த்துக்கள். இன்னைக்கு இந்த வலைப்பதிவுல இருந்து விலக போறது யாருனா... ஓசை செல்லா... ஐ அம் கோயிங் டூ மிஸ் யூ ஆல்... (பின்னாடி வாய்வே மாயம் பாட்டு ஓடுது...)

மக்கள் எல்லாம் திகைச்சி போறாங்க. ஒரு சிலருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. பெண்கள் கண்களில் கண்ணீர் வடிகிறது. வலைப்பதிவுகள் எல்லாம் ஹேங் ஆகிறது...

மொக்கை பதிவர் 1 நிகழ்ச்சியாளர்கள் என்ன செய்வது என்று தவிக்கின்றனர்... ஓசை செல்லா லேப் டாப் ஷட் டவுன் ஆவதை பார்த்து உலகத்தில் வாழும் தமிழ் வலைப்பதிவர் அனைவரும் அவருக்கு ஃபோன் செய்கின்றனர். தமிழ் நாடு தொலை தொடர்பு துறையே ஸ்தம்பித்து போகிறது. கோவையில் போன் லைன் எல்லாம் அங்கு அங்கு வெடிக்கிறது. அமெரிக்காவில் ரிலையன்ஸ் இந்தியாவில் யாருக்கும் லைன் கிடைக்கவில்லை.

ஒரு வழியாக அவரை சமாதனப்படுத்தி வலைப்பதிவிற்கு அழைத்து வருகிறார்கள்...

அவர் பிறகு மொக்கை போடுவது எப்படினு மொக்கை போட்டு சொல்லி கொடுக்கிறார்...

சரி பார்ட்டிசிபண்ட் ஏதோ சொல்ல ஆசைப்படறாங்க. இதோ அவுங்களுக்கு கொடுக்கிறேன்.

மங்களூர் சிவா: இது ஒரு மொக்கை பதிவர் போட்டி. இதுல வந்துருக்கவங்க எல்லாருமே வலைப்பதிவர்கள். சில பேர் ரொம்ப மாசமா மொக்கை பதிவு போடறவங்க இருக்காங்க. என்னை மாதிரி புதுசா மொக்கை போடறவங்களும் இருக்காங்க. சீரியசா எழுதிட்டு அப்ப அப்ப மொக்கை போடறவங்களும் இருக்காங்க. சோ இது ஒரு இண்டக்ரிட்டி. மொக்கை போடறதுல ஒரு இண்டகிரிட்டி. நாங்க எல்லாரும் எங்களால முடிஞ்ச அளவுக்கு மொக்கை போடறோம்.

மொக்கை பதிவுனு வந்துடுச்சினா இவுங்க இத்தனை மாசம் மொக்கை போடறாங்க. இவுங்க இப்ப தான் மொக்கை போடறாங்கனு எல்லாம் கிடையாது. அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்.

அடுத்து வீ லவ் தி ஜட்ஜஸ்.இவுங்களே பெரிய மொக்கை பதிவருங்க. ஒரு பதிவை மொக்கையில்லைனு சொல்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படறாங்கனு எங்களுக்கு தான் தெரியும். ஒரு பதிவை மொக்கையில்லைனு சொல்றதுக்கு இவுங்க அநியாயத்துக்கு ஃபீல் பண்றாங்க. வீ லவ் யூ செல்லா.. நீங்க ஜீரி... நீங்க ஜீரி.

செந்தழல் ரவி (கடுப்புடன்): அப்ப நாங்க என்ன பூரியா?

மங்களூர் சிவா: நாங்க வெறும் பார்ட்டிசிபண்ட்ஸ் தான். நாங்க நல்லா மொக்கை போடறோமானு சொல்றதுக்கு தான் நீங்க இருக்கீங்க. அதுலயும் நீங்க எல்லாம் மொக்கைல ராஜாக்கள். இது எங்களுக்கு பெருமை...

இவ்வாறு மங்களூர் சிவா பேசிக்கொண்டிருக்கும் போதே அபி அப்பா வெளியேறினார்... பின்னாடி ஒரு தீம் மியூசிக் போடறோம்.

இது தான் அபி அப்பா போட்டியிலிருந்து வெளியேற காரணம். அவரை யாரும் துரத்தவில்லை என போட்டி அமைப்பாளர்கள் கூறினர்.

இது என்னக் கலாட்டான்னு யோசிக்கிறீங்களா.. புரியாதவங்க இந்தச் சுட்டியைத் தட்டிப் பாருங்க அப்புறம் திரும்ப வந்து படிங்க...

51 comments:

Unknown said...

திரும்ப வந்துட்டோம்ல்ல :))

Unknown said...

விடுமுறை கழித்து வந்திருக்கும் சங்கத்துக்கு பதிவுலக மக்களே உங்கள் பொன்னான ஆதரவை அள்ளித் தாருங்கள்.. வாருங்கள்.. வந்து மகிழுங்கள்..

கைப்புள்ள said...

வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தனும். லீவு முடிச்சு திரும்பி வந்துட்டமே!

Boston Bala said...

குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமா ;)

கோவி.கண்ணன் said...

பழையபடிக்கு வந்தாச்சா, பதிவில் படத்தைக் காணுமே. இனி படம் காட்டுவதில்லை என்ற தீர்மானமா ?

Unknown said...

//Boston Bala said...
குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமா ;)//

அடிக்குது குளிரு ம்ம்ம்ம் அது சரி அது சரி.... ஸ்டார்ட் மீசிக் முதல் மொய் வச்ச பாபாவுக்கு தேங்க்ஸ்ங்கோ

Unknown said...

//கோவி.கண்ணன் said...
பழையபடிக்கு வந்தாச்சா, பதிவில் படத்தைக் காணுமே. இனி படம் காட்டுவதில்லை என்ற தீர்மானமா ?//

கோவியாரே வாங்க.. என்ன படம் அது? :)))

Anonymous said...

இந்தச் சம்பவமே ஒரு நாடகம் என்று மக்களால் பேசப்படுகிறது. இதற்குப் பின் வந்த பதிவுகளிலும் ஓசை செல்லா, அபி அப்பா பின்னூட்டம் போட்டிருப்பதைப் பற்றி அவர்களிடம் கேட்டதற்கு வழவழா கொழகொழா என்றுதான் பதில் சொல்லி இருக்கிறார்கள். பினாத்தலாரின் இந்தப்பதிவு (http://penathal.blogspot.com/2007/10/22-oct-07.html) ஒரு மெகா ஹிட் ஆனதால் போட்டிக்காக வேண்டுமென்றே நடத்தப்பட்ட நாடகம் என்று சிலர் கூற, முடிவை நாம் வாசகர்களிடமே விட்டுவிடலாம்.
இது என்னன்னு புரியாதவங்க http://idlyvadai.blogspot.com/2007/10/vs.html இங்கே படிச்சு புரிஞ்சுக்கலாம்

கோபிநாத் said...

ஆரம்பிச்சிட்டிங்களா...வாழ்த்துக்கள் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Boston Bala said...
குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமா ;)//

குளிர்காலத்து-ல
கூட்டத்தொடர்-ல
ஏதாச்சும் கொளுத்தணும் இல்ல?
அப்ப தானே குளிர் போகும்? :-))

கோபிநாத் said...

\\பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல.\\

ம்ம்ம்...இந்த மாதம் நான் தான் கிடைச்சேனா ! நடத்துங்க நடத்துங்க..அவ்வ்வ்வ்வ்வ்

கோபிநாத் said...

\"சங்கம் வழங்கும் மொக்கை பதிவர் நம்பர் 1 - நடந்து என்ன?"\\

அடுத்து யாருப்பா !?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.
//

இது யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்! :-))

யாரா இருந்தாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்!

யாரா இல்லீன்னாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்!

யாரா இருந்தாலும் யாருன்னு வந்து, யாரு கிட்டயாச்சும், யாராச்சும் சொல்லுங்க சொல்லுங்க! :-)))

Anonymous said...

:)) welcome back singams

Anonymous said...

அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.

Thamizhachi?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அபி அப்பா கோபமாக நின்றிருக்கிறார் (அப்படினு அவர் நினைச்சிட்டு இருக்கார். ஆனா அதை பார்த்து எல்லாம் சிரிச்சிட்டு இருக்காங்க. அவர் கோபமா இருக்கார்னு அவரே சொல்லியும் யாரும் நம்பவில்லை. கொஞ்ச நேரம் அவரே நம்பவில்லை).//
\\பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல.\\

லீவு முடிச்சுவரீங்க சங்கத்துல ஆரம்பமே அட்டகாசமா இருக்கு.

mgnithi said...

Sangathu singangale..welcome back..

Re entry superungana...

முரளிகண்ணன் said...

அபி அப்பா பேட்டி குமுதத்தில் : நாந்தான் சீனியர் அவருக்கு மொக்கையை கத்து குடுத்ததே நாந்தான். நான் வெளியேரின இரவு எல்லாரும் சீரியஸ் பதிவுல எல்லாம் போய் கும்மி அடுச்சிருக்காங்க. கொரிய நடுவர் என் மொக்கையை ரசிச்சனால ரவிக்கு கோபம்.

கதிர் said...

பயங்கரமான உள்குத்து பதிவா இருக்கே!

அபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்.

மங்களூர் சிவா said...

//
தம்பி said...
பயங்கரமான உள்குத்து பதிவா இருக்கே!

அபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்.
//
?????

இலவசக்கொத்தனார் said...

அடுத்த நாள் ஸ்பெஷல் கெஸ்டா வந்த துளசி டீச்சருக்கு பொக்கே குடுத்த போது கூடவே அபிஅப்பாவும் இருந்தாராமே? அது என்ன கணக்கு?

மங்களூர் சிவா said...

//
அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.


இது யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்! :-))

யாரா இருந்தாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்!

யாரா இல்லீன்னாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்!
//
ரிப்பீட்டேய்

வெட்டிப்பயல் said...

// பினாத்தல் சுரேஷ் said...

இந்தச் சம்பவமே ஒரு நாடகம் என்று மக்களால் பேசப்படுகிறது. இதற்குப் பின் வந்த பதிவுகளிலும் ஓசை செல்லா, அபி அப்பா பின்னூட்டம் போட்டிருப்பதைப் பற்றி அவர்களிடம் கேட்டதற்கு வழவழா கொழகொழா என்றுதான் பதில் சொல்லி இருக்கிறார்கள். பினாத்தலாரின் இந்தப்பதிவு (http://penathal.blogspot.com/2007/10/22-oct-07.html) ஒரு மெகா ஹிட் ஆனதால் போட்டிக்காக வேண்டுமென்றே நடத்தப்பட்ட நாடகம் என்று சிலர் கூற, முடிவை நாம் வாசகர்களிடமே விட்டுவிடலாம்.
இது என்னன்னு புரியாதவங்க http://idlyvadai.blogspot.com/2007/10/vs.html இங்கே படிச்சு புரிஞ்சுக்கலாம்//

//

இது நாடகமாக இருந்திருந்தால் ஓசை செல்லா தனக்கு பதிவெழுத தெரியாது என்று கண்ணீருடன் சொன்ன காட்சிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இது மக்களுக்கு அபி அப்பா வெளியேற்றப்பட்டதின் காரணத்தை தெரிவிக்கவே காட்டப்பட்டது ;)

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

ஆரம்பிச்சிட்டிங்களா...வாழ்த்துக்கள் :)//

மிக்க நன்றி 'ரிப்பீட்டே' கோபி

ramachandranusha(உஷா) said...

செந்தழலாரின் தமிழ் பற்றுக்கு தலை வணங்குகிறேன். மொழி புரியாத கொரிய பிகருடன் தமிழ் பேசியதை நினைக்க நினைக்க மனம் பெருமிதத்தில் கூத்தாடுகிறது.

கண்மணி/kanmani said...

வெல்கம் பேக்
நாங்களும் வாழ்த்துவோமில்ல
[நீங்களும் இருந்தாத்தானே சூடு பிடிக்கும்]
பபாச சார்பாக வாழ்த்தும் டீச்சர்ர்ர்ர்ர்

cheena (சீனா) said...

ஒரு நிகழ்ச்சியை லொள்ளு சபா உறுப்பினர்கள் அழகாக நடத்திக் காட்டி இருக்கின்றனர். உண்மை நிகழ்ச்சியை விட இது நன்றாகவே இருந்தது. ஓசை செல்லாவும் அபி அப்பாவும் அருமையாக சித்தரிக்கப்பட்டி இருக்கின்றனர். ரவியும் அவரது கொரிய பிகரும் ச்ச்ச்ச்ச்சுசுசுசூசூசூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ரோரோரோரோரோ சூப்பர்.

கேயாரெஸ்ன் பின்னூட்டத்துக்கு ரிப்பீட்டேய்

கப்பி | Kappi said...

வந்துட்டோம்ல வந்துட்டோம்ல :)))

வெட்டிகாரு...அல்டிமேட் காமெடி :))

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Boston Bala said...
குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமா ;)//

குளிர்காலத்து-ல
கூட்டத்தொடர்-ல
ஏதாச்சும் கொளுத்தணும் இல்ல?
அப்ப தானே குளிர் போகும்? :-))//

கொளுத்தி போட்டாச்சா?

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

\\பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல.\\

ம்ம்ம்...இந்த மாதம் நான் தான் கிடைச்சேனா ! நடத்துங்க நடத்துங்க..அவ்வ்வ்வ்வ்வ்//

ரிப்பீட்டே...

(சும்மா உங்க ஸ்டைல்ல சொல்லி பார்த்தேன் ;))

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.
//

இது யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்! :-))

யாரா இருந்தாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்!

யாரா இல்லீன்னாலும் யாருன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்!

யாரா இருந்தாலும் யாருன்னு வந்து, யாரு கிட்டயாச்சும், யாராச்சும் சொல்லுங்க சொல்லுங்க! :-)))//

எனக்கும் சொல்லுங்கப்பூ... தெரிஞ்சிக்கனும்னு ஆசையா இருக்கு

வெட்டிப்பயல் said...

//துர்கா|thurgah said...

:)) welcome back singams//

நன்றி தூர்கா...

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.

Thamizhachi?//

அடப்பாவிகளா...
அந்த வீடியோல யார் முகத்தையும் காட்டல. வெறும் குரல் மட்டும் யெஸ் யெஸ்னு ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருந்துச்சி. அதான் அப்படியே யூஸ் பண்ணிக்கிட்டேன்...

வெட்டிப்பயல் said...

// முத்துலெட்சுமி said...

\\அபி அப்பா கோபமாக நின்றிருக்கிறார் (அப்படினு அவர் நினைச்சிட்டு இருக்கார். ஆனா அதை பார்த்து எல்லாம் சிரிச்சிட்டு இருக்காங்க. அவர் கோபமா இருக்கார்னு அவரே சொல்லியும் யாரும் நம்பவில்லை. கொஞ்ச நேரம் அவரே நம்பவில்லை).//
\\பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல.\\

லீவு முடிச்சுவரீங்க சங்கத்துல ஆரம்பமே அட்டகாசமா இருக்கு.//

மிக்க நன்றி அக்கா...

வெட்டிப்பயல் said...

// mgnithi said...

Sangathu singangale..welcome back..

Re entry superungana...//

மிக்க நன்றி mgnithi... (இது எப்படி படிக்கிறதுனு தெரியல. அதனால அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணிட்டேன்)

வெட்டிப்பயல் said...

// முரளி கண்ணன் said...

அபி அப்பா பேட்டி குமுதத்தில் : நாந்தான் சீனியர் அவருக்கு மொக்கையை கத்து குடுத்ததே நாந்தான். நான் வெளியேரின இரவு எல்லாரும் சீரியஸ் பதிவுல எல்லாம் போய் கும்மி அடுச்சிருக்காங்க. கொரிய நடுவர் என் மொக்கையை ரசிச்சனால ரவிக்கு கோபம்.//

இது வேற சொல்லிருக்காரா?
என்ன நடக்குதுனே புரியல ;)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

பயங்கரமான உள்குத்து பதிவா இருக்கே!

அபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்.//

ஏன்யா பதிவ படிச்சா அனுபவிச்சிட்டு போவியா??? ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான்...

சரி நம்ம ஊருக்கு போனதை பத்தி ஒரு தொடர் எழுதிட்டு இருக்கனே.. பார்த்தியா?

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

அடுத்த நாள் ஸ்பெஷல் கெஸ்டா வந்த துளசி டீச்சருக்கு பொக்கே குடுத்த போது கூடவே அபிஅப்பாவும் இருந்தாராமே? அது என்ன கணக்கு?//

அபி அப்பாவுக்கு ஆட்டத்தை விட்டு துரத்தியதே தெரியாதாம்... அவர் ஒரு வாரமா ஆப்பிரிக்கா இருண்ட கண்டத்துக்கு சுற்று பயணம் போயிருந்தாராம். அதனால தமிழ் வலையுலகில் நடந்தது அவருக்கு தெரியாதாம்...

ILA (a) இளா said...

//அபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்//
யோசிச்சாலும், ஆராய்ச்சி பண்ணினாலும் பதில் ஒன்னுதான். பதிவுல மொக்கையா இருக்காது, தலைப்பு மட்டும் மொக்கையா இருக்கும்.

ILA (a) இளா said...

//பழையபடிக்கு வந்தாச்சா, பதிவில் படத்தைக் காணுமே. இனி படம் காட்டுவதில்லை என்ற தீர்மானமா ?//

செல்லா அழுவுறதை படமா போட்டுறலாமா?

ஜி said...

//மங்களூர் சிவா said...
//
தம்பி said...
பயங்கரமான உள்குத்து பதிவா இருக்கே!

அபிஅப்பா போட்ட பதிவு மொக்கையா இல்லன்னு சொன்னா அது யோசிக்க வேண்டிய விஷயம்.
//
?????//

யோசிக்கிறாராமாம்....

ஜி said...

நச்சுன்னு ஒரு காமெடி.... :))

நாகை சிவா said...

கல கல வர வெச்ச வெட்டி நீ வாழ்க... நம் இனம் வாழ்க.. நம் குலம் வாழ்க...

அபி அப்பா said...

அட நாராயனா இப்பத்தான் பார்த்தேன்! என் தரப்பு பதில் என்னான்னா>>>>>>

அபி அப்பா said...

எனக்கு வலைப்பதிவுக்கு அறிமூகப்படுத்தியதே ஓசை செல்லாவின் தந்தையார் தான். அவர் யார் நல்லா மொக்கை போடுவாங்ககளோ அவங்களை மட்டுமே தமிழ்மனத்தில் அறிமுகப்படுத்துவார். இதோ நான் போட்டது மொக்கை என்று சொல்லும் ஓசை செல்லா அப்போது குழந்தை. மொக்கைன்னு போட சொன்னாகூட நொக்கைன்னு தான் போடுவார். அவர் தந்தையார் கூடவே அவரும் தமிழ்மணத்துக்கு அடிக்கடி வந்து எட்டி பார்க்கும் போது, அப்போது நான் மொக்கையில் கொடிகட்டி பறந்து கொண்ண்டிருந்ததை பார்த்து பார்த்து மொக்கை போட கற்ரூ கொண்டவர் தான் இந்த ஓசை செல்லா! காலத்தின் கோலம் இப்போது அவரே எனக்கு பூரி ஸாரி ஜூரியா வந்து நான் போட்டது மொக்கையே இல்லை என்று சொல்வது அபத்தம் அபத்தம்.

அபி அப்பா said...

பழைய பாஃர்ம்க்கு வந்துட்டாங்கப்பா சிங்கம் எல்லாம்!அது என்ன துறை ஒதுக்கப்படாத அமைச்சர் மாதிரி ""தம்பி" என்ன பதிவு போடாத சிங்கமா??? (அப்பாடா கொளுத்தி போட்டாச்சு)

இராம்/Raam said...

ஹா ஹா.... சூப்பரு.... :)

ஜொள்ளுப்பாண்டி said...

வந்தாச்ச்ச்ச்ச்ச்......

சீக்கிரம் வந்து குந்துங்கப்பூ...

கலக்கல் வெட்டி ... :)))

காரூரன் said...

நீங்க தான் லிட்டில் சுப்பர் ஸ்டார். கலக்கினது நீங்க தான். ரொம்ப கலக்கினுங்கின்னா, அப்புறம் அசத்த சொல்லி கூப்பிட்டிடுவாங்க! :))

இலவசக்கொத்தனார் said...

நாந்தான் 50 அடிக்கிறேனா?

கப்பி | Kappi said...

கொத்ஸ்..50க்காக ஸ்பெஷல் எபிசோட் ரெடி பண்ணிடுவோம்..

அம்பது அடிக்கும்போது உங்க ஃபீலிங்க்ஸ் எப்படி இருந்தது?? படபடப்பா இருந்தீங்களா?? உங்க நண்பர்கள் என்ன சொன்னாங்க?? வீட்டுல சப்போர்ட் எப்படி இருந்தது?? :))))