வெற்றிகரமா ஐநூறு பதிவு போட்டு பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நம் சங்கத்து மக்களுக்கு ஸ்பெஷலா என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது, கவுண்டரை ஏன் சங்கத்துக்கு கூப்பிட்டு வர கூடாதுனு ஒரு யோசனை. என்ன இருந்தாலும் ஒரு காமெடியன் மனசு இன்னொரு காமெடியனுக்கு தானே தெரியும்னு எல்லாரும் முடிவு பண்ணி, கவுண்டரை டெவில் ஷோ நடத்த சங்கத்துக்கு கூப்பிட்டு வந்துட்டோம். பொதுவா டெவில் ஷோக்கு மக்கள் தான் கவுண்டரை தேடி போவாங்க, இது சங்க விழாங்கறதால கவுண்டரை நாங்க சங்கத்துக்கு கூப்பிட்டு வந்துட்டோம். இப்ப டெவில் ஷோக்கு போகலாம்.
க: "வழக்கமா தனியா ஒருத்தனை புடிச்சி கும்மிட்டு இருந்தேன். இன்னைக்கு ஒரு கூட்டத்தையே கும்மனும்னு நம்மல கூப்பிட்டு வந்திருக்கானூங்க பசங்க. பொதுவாழ்க்கைனு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே. சரி, இப்ப நிகழ்ச்சிக்கு போவோம். சரி இங்க கூட்டமா நிக்கறானுங்க. ஒவ்வொருத்தனையா கூப்பிடுவோம். டேய் அரை டவுசர் மண்டையா. நீ முதல்ல வா. வந்து உன்னைப் பத்தி சொல்லு"
இளா : "நான் தான் விவசாயி"
க: "எங்க இங்க அப்படியே உழவு ஓட்டிக் காட்டுப் பார்ப்போம்"
இளா: "நான் அதெல்லாம் பண்ண மாட்டேன். நல்லா கடலை சாகுபடி பண்ணுவேன். அதான் விவசாயினு பேர் வெச்சிக்கிட்டேன்"
க: "டேய் விவா மண்டையா, கடலைப் போடறவனெல்லாம் விவசாயினு உனக்கு எவன்டா சொல்லக்கொடுத்தது. முதல்ல உன் பேரை மாத்துடா!"
இளா: Done.
க: "டேய் டன் மண்டையா. எதுக்கெடுத்தாலும் டன், கூல், ஃபைன் அப்படினு ஒரு வார்த்தைல பதில் சொல்றதுக்கு நீ என்ன மணிரத்னம் படத்துலயா மேன் நடிக்கிற. இனிமே எதை பேசினாலும் நாலஞ்சி வார்த்தை சேர்த்து வாக்கியமா சொல்ற. சரியா?"
இளா : ஓகே.
க: "உன்னையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. நீயா திருந்தனா தான் உண்டு. சரி, அடுத்த அந்த நாடக நடிகர் காஸ்டியூம்ல இருக்கற திருட்டு முழி முழிச்சிட்டு இருக்கற ஆள் வா. சரி உன்னை பத்தி சொல்லு"
சிபி : "நான் நாமக்கல் சிபி. நான் தான் இந்த சங்கத்து தளபதி"
க: "ஆமாம். இது பெரிய சோழ பேரரசு. இதுக்கு இவர் தளபதி. டேய் மாநக்கல் மண்டையா, இந்த டப்பா வீட்டுக்கு பேரு ஒரு சங்கம். இதுக்கு நீ ஒரு தளபதி. எங்க ஒரு கத்தி சண்டை போட்டுக் காட்டு"
சிபி: "டேய் யாருடா அது எங்க தலயைப் பத்தி தப்பா பேசினது. தைரியமிருந்தா அவர் மேல கையை வெச்சி பாருடா"
க: "டேய் தளபதி மண்டையா. என்ன மேன் பண்ண?"
சிபி: "நீங்க தானே ”கத்தி” சண்டை போட சொன்னீங்க. அதான்"
க: "ஜோக்கா'ம்டா. கஷ்ட காலம்டா சாமி. உன்னையெல்லாம் வெச்சி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ. சரி, தி நெக்ஸ்ட்"
தேவ்:"அம் தேவ். நான் தான் இந்த சங்கத்து போர் வாள்"
க: "என்னது? திரும்ப சொல்லு"
தேவ்: "நான் தான் இந்த சங்கத்துப் போர் வாள்"
க: "டேய் சிபி மண்டையா. இங்க வா"
சிபி: "சொல்லுங்க கவுண்ட்ஸ்"
க: "சரி, இந்த போர் வாளை தூக்கி ஒரு சொழட்டு சொழட்டி காட்டு பார்ப்போம்"
தேவ், சிபி இருவரும் எஸ்கேப்.
க: "நீ யார்டா என்னை பார்த்து மொறைச்சிக்கிட்டே இருக்க. உன் பேரு என்ன?"
புலி : "என் பேர் நாகை சிவா. ஆனா மக்கள் எல்லாம் என்னை புலினு தான் சொல்லுவாங்க"
க: "கொட்டை எடுத்ததா இல்லை கொட்டை எடுக்காததா?"
புலி : "ஹலோ நான் சொல்றது கடிக்கிற புலி."
க: "எங்க, அந்த சைட்ல நிக்கறானே அவனை கொஞ்சம் கடிச்சிக் காட்டு"
சிபி: "புலி, கோபத்துல என்னைக் கடிச்சிடாத. வேணும்னா நம்ம தலயை ஒரு நாலு கடி கடி. சதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா வரும்"
க: "எதுக்கெடுத்தாலும் அவன் தல தலனு சொல்லிட்டு இருக்கான். யார்டா அது தல"
சிபி: "இதோ இவர் தான் எங்க தல கைப்புள்ள."
கவுண்டர் மேலும் கீழும் பார்க்கிறார்.
க: "இது கைப்புள்ளையா மேன். இது கைப்புள்ளையா? எங்க கொஞ்சம் இதை இடுப்புல தூக்கி வெச்சிட்டு ஒரு வாக் போயி் காட்டு"
KRS: "கவுண்டமணி ஐயா"
க: "Who is the disturbance... ஓ நீயா? சொல்லுடாப் பையா?"
KRS: "கைப்புள்ள என்பது வேறு கைப்பிள்ளை என்பது வேறு, இதை தான் ஏழாம் நூற்றாண்டில் காக்கைப்பாடினியார் கைப்பிள்ளை காவியம் என்று பாடியுள்ளார். அதை இந்த அப்பாவி சிறுவனாகிய நான் சமீபத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்துள்ளேன்"
க: "ஆறடி உயரம் இருந்துட்டு நீ அப்பாவி சிறுவனா மேன்? கார்த்திக் ஸ்டைல்ல கூலிங் கிளாஸ் போட்டு கேப் போட்டுக்கிட்டா உன் வயசு தெரியாதா? நீயெல்லாம் ஜனலை திற. நாத்தம் வரட்டும்னு குமுதத்துலயோ, குங்கமத்துலயோ எழுத வேண்டிய ஆளு. இங்க இருந்து ஓடிப்போயிடு. போ மேன் போ. அவனை சொன்னா நீ என்ன மேன் மொறைக்கிற. நீ வா. உன்னைப் பத்தி சொல்லு"
வெட்டி : "என் பேரு வெட்டிப்பயல். நான் தான் சங்கத்தோட இளைய தளபதி"
க: அது என்னடா பேரு வெட்டிப்பயல், சட்டிப்பயல்னு. உங்களுக்கு எல்லாம் நல்ல பேரே கிடைக்கலயா? அப்பறம் அது என்ன இளைய தளபதி? எங்க அந்த காமெடிக்காரன் விஜய் மாதிரி ஒரு பாட்டுக்கு ஆடிக்காட்டு பார்க்கலாம்.
வெட்டி: ?!
க: "இனிமே இந்த மாதிரி வீணாப் போன பேர் எல்லாம் வெச்சிட்டு திரியாத. சரி இந்த கலவரத்துலயும் அங்க ஒருத்தன் ஜன்னல் பக்கத்துல் நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கானே. அவன் யாரு"
சிபி: "அவர் தான் ஜொள்ளுப்பாண்டி"
க: "சரி சரி. இந்த பேர்ல இருந்தே தெரியுது அவன் அங்க இருந்து என்ன பண்ணிட்டு இருக்கானு. ஆனா, இங்க இருந்து பார்த்தா அந்த இட்லிக்கடை ஆயாத்தான் தெரியுது. அதைக் கூடாவாடா விட்டு வைக்க மாட்டீங்க."
சிபி: "அவர் எதுக்கும் பார்ஷியாலிட்டி பார்க்கறதில்லை"
க: "ஆமாம், அங்க ஒருத்தன் பயங்கரமா வேலை செஞ்சிட்டு இருக்கானே. அவன் யாரு?"
சிபி: "அவன் தான் ராயல் ராம். சேட்டிங்ல கடலை போட்டுட்டு இருக்கான்"
க: "விளாங்கனாப்போல தான். ஆமாம், ரொம்ப நேரமா, நானும் யூத்து தான் . நானும் யூத்து தான். நானும் யூத்து தான்னு சொல்லிட்டு இருக்காரே இந்த பெரியவரு. இவர் யாரு"
அபி.அப்பா: "நான் தான் இந்த மாசத்து அட்லாஸ் வாலிபர்"
க: "டேய் உங்களுக்கே இது அடுக்குமாடா? ஒரு முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வாலிபனா இருந்ததை எல்லாம் கூப்பிட்டு வெச்சிக்கிட்டு வாலிபர்னு சொல்லிட்டு திரியறீங்களேடா. வேணும்னா அட்லாஸ் வாலிபருக்கு பதில் வயோதிக வாலிபர்னு பேர் வைங்க. இல்லை உங்க சங்கத்துக்கு சிவராஜ் சித்த வைத்திய சாலைனு பேர் வைங்க. சரியா இருக்கும். சரி, எனி படி ஐ மிஸ்"
சிபி: "எங்க சங்கத்து யூத்து கப்பி ஊருக்கு போயிருக்காரு. அவர் மட்டும் மிஸ்ஸிங்"
க: "சரி, சரி எங்க போயிட போறான். அவனுக்குனு ஒரு நாள் டெவில் ஷோ தனியா போட்டிடுவோம்"
தல: "அதெல்லாம் முடியாது.. எங்க சங்கத்து செல்லப்பிள்ள, ஞானகுழந்தை,ஜாவா பாவலர், கவிஞ்ஞர் கப்பி நிலவரை நீங்க பெருமை படுத்தனும்..."
க: "டேய், முழுசா வேகாத ஆப்பாயில் தல மண்டையா, இவ்வளோ நேரமா ஞானக்குழந்த, கவிஞ்ஞர், சொரிஞ்சர்'னு நக்கல்விட்டுடு என்கிட்டே பெருமைப்படுத்தனுமின்னு வேற கேட்கிறியா?"
கப்பி: "அவ்வ்வ்வ்..... தல'க்கு எம்மேலே அம்புட்டு பாசம்"
க: "ஏன்டா நீ கெட்டகேட்டுக்கு உருகுவே'லே ரசிகையர் மன்றம், ஆர்குட்'லே அம்பது கம்யூனிட்டியா? ஒனக்கே ஓவரா தெரியல"
சிபி: "கப்பி வாழ்க!! நமிதா வாழ்க!!!"
க: "இந்த வெட்டி கூவல் வேறயா? ஏண்டா ஒங்களுக்கெல்லாம் மனசாட்சியா இல்லையா? அந்த பீப்பா'வுக்கு இந்த பாப்பா மூஞ்சி மண்டயன் சரியான ஆளுதான்!! "
சிபி: "என்னோட அக்கவுண்ட்'க்கு அமெண்ட் போட்டிங்கன்னா, ஒங்களுக்கு ஸ்பெசலா கூவுவோம்... "
க: "இதெல்லாம் ஒரு பொழப்பாடா? நல்ல சங்கம்டா சாமிங்களா... சரி சரி, வந்ததுக்கு கடைசியா, இதே மாதிரி எல்லாரையும் சிரிக்க வைச்சிட்டு இருங்க. டாட்டா. பை பை."