Showing posts with label வெட்டிப்பயல். Show all posts
Showing posts with label வெட்டிப்பயல். Show all posts

Monday, June 15, 2009

ஒரு அப்பாவி ரங்கமணியின் பதில்

ச்சின்னப்பையன் அண்ணே புதுசா கேள்வி பதில் தொடர் ஒண்ணை ஆரம்பிச்சிருக்காரு. அந்தக் கேள்வியைப் படிச்சி ஃபீல் ஆன ஒரு அப்பாவி ரங்கமணி (ரங்கமணினாலே அப்பாவி தானேனு உண்மையை எல்லாம் சொல்லப்படாது) எனக்கு தனிமடல்ல பதில் அனுப்பினாரு. அதான் உங்களோட பகிர்ந்துக்கலாம்னு

உங்க மூக்கு உங்களுக்கு பிடிக்குமா?
சி.மூ.உ.மு வா இல்லை சி.மூ.உ.பி யா?
அது என்னனு கேக்கறீங்களா? சில்லு மூக்கு உடையறதுக்கு முன்னாடியா இல்லை பின்னாடியானு சொல்லலையே? அது ஒண்ணுமில்லை சீரியல் பாக்கற நேரத்துல கிரிக்கெட் மாட்ச் பார்க்கலாம்னு சேனல் மாத்தற ஒரு சின்ன சண்டைல சில்லு மூக்கு உடைஞ்சிடுச்சி. என் பல்லு அளவுக்கு சில்லு ஸ்ட்ராங்கா இல்லைனு ரொம்ப ஃபீல் ஆகிட்டாங்க. அப்பறம் அவுங்க ஃபீல் ஆனதைப் பார்த்து நாடகமே பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். மூக்கு இப்பவும் நல்லா இருக்கறதா தங்கமணி சொல்றாங்க.

உங்க பக்கத்துலே யாரு இருக்கறதுக்காக வருத்தப்படறீங்க?
இந்த மாதிரி கேள்வி எல்லாம் பப்ளிக்ல கேக்கப்பிடாது. சொல்லிப்பிட்டேன்

கண்ணாடி முன்னாடி நின்னு உங்க பற்களை எண்ணியிருக்கீங்களா? எவ்வளவு தேறுது?
போன வாரம் எண்ணத சொல்றதா இல்லை இன்னைக்கு எண்ணதை சொல்றதா?

(திருமணமான ஆண்களுக்கு மட்டும்) நீங்க கடைசியா சிரித்தது எப்போது?
நேத்துக் கூட சிரிச்சனே!
ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்த மாமனார், மாமியார் நேத்து ஊருக்கு போறோம்னு சொன்னவுடனே தான். அப்ப தான் முந்தின கேள்வில கேட்ட கவுண்ட்ல ஒண்ணு குறைஞ்சது.

சுடுதண்ணீரில் குளிக்க விருப்பமா அல்லது ஜில் தண்ணீரிலா?
கேஸ்க்கு அலைஞ்சதுல இருந்து ஜில் தண்ணில குளிக்கறது தான் விருப்பம்.

படிக்கட்டில் ஏறும்போதும் இறங்கும்போதும் - ஒவ்வொரு படிகளாக போவீர்களா அல்லது இரண்டிரண்டு படிகளாக தாண்டிப் போவீர்களா?
தனியா வீட்டை விட்டு வெளியே போகும் போது நாலு நாலு படியா தாண்டி போவேன். வீட்டுக்கு வரும் போது ஒண்ணு ஒண்ணா...

இட்லிக்கு எதை தொட்டுக்கொண்டு சாப்பிட பிடிக்கும்? (தரையை / சுவற்றை தொட்டுக் கொள்வேன் என்று அறுக்க வேண்டாம்!!).
எது செய்யறதுக்கு சுலபமா இருக்கோ அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடறது தான்.

மோதிரம் போட்டுப்பீங்களா? எந்த விரலில் போட்டுப்பீங்க?
தங்கமணி விரல்ல தான் :)

உங்க தலையில் வகிடு எந்தப்பக்கம் எடுப்பீங்க? இடது, வலது அல்லது நடு?
பூரிக் கட்டைல அடி விழும் போது எந்த பக்கம் விழுதோ அதுக்கு எதிர்பக்கம். அப்ப தானே மறைக்க முடியும்.

எந்த விரலில் நகம் கடிக்க அதிகம் விரும்புவீர்கள்?
ஆபிஸ்ல பக்கத்து சீட்ல உக்கார்ந்திருக்க மல்லு ஃபிகர் விரல்ல இருக்குற நகங்களைத் தான். 

இந்த தொடரை யார் வேணும்னாலும் தொடரலாம்.



Monday, March 16, 2009

கவுண்டர்ஸ் டெவில் ஷோ - சங்கத்து சிங்கங்கள்

வெற்றிகரமா ஐநூறு பதிவு போட்டு பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நம் சங்கத்து மக்களுக்கு ஸ்பெஷலா என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது, கவுண்டரை ஏன் சங்கத்துக்கு கூப்பிட்டு வர கூடாதுனு ஒரு யோசனை. என்ன இருந்தாலும் ஒரு காமெடியன் மனசு இன்னொரு காமெடியனுக்கு தானே தெரியும்னு எல்லாரும் முடிவு பண்ணி, கவுண்டரை டெவில் ஷோ நடத்த சங்கத்துக்கு கூப்பிட்டு வந்துட்டோம். பொதுவா டெவில் ஷோக்கு மக்கள் தான் கவுண்டரை தேடி போவாங்க, இது சங்க விழாங்கறதால கவுண்டரை நாங்க சங்கத்துக்கு கூப்பிட்டு வந்துட்டோம். இப்ப டெவில் ஷோக்கு போகலாம்.

க: "வழக்கமா தனியா ஒருத்தனை புடிச்சி கும்மிட்டு இருந்தேன். இன்னைக்கு ஒரு கூட்டத்தையே கும்மனும்னு நம்மல கூப்பிட்டு வந்திருக்கானூங்க பசங்க. பொதுவாழ்க்கைனு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே. சரி, இப்ப நிகழ்ச்சிக்கு போவோம். சரி இங்க கூட்டமா நிக்கறானுங்க. ஒவ்வொருத்தனையா கூப்பிடுவோம். டேய் அரை டவுசர் மண்டையா. நீ முதல்ல வா. வந்து உன்னைப் பத்தி சொல்லு"

இளா : "நான் தான் விவசாயி"

க: "எங்க இங்க அப்படியே உழவு ஓட்டிக் காட்டுப் பார்ப்போம்"

இளா: "நான் அதெல்லாம் பண்ண மாட்டேன். நல்லா கடலை சாகுபடி பண்ணுவேன். அதான் விவசாயினு பேர் வெச்சிக்கிட்டேன்"

க: "டேய் விவா மண்டையா, கடலைப் போடறவனெல்லாம் விவசாயினு உனக்கு எவன்டா சொல்லக்கொடுத்தது. முதல்ல உன் பேரை மாத்துடா!"

இளா: Done.

க: "டேய் டன் மண்டையா. எதுக்கெடுத்தாலும் டன், கூல், ஃபைன் அப்படினு ஒரு வார்த்தைல பதில் சொல்றதுக்கு நீ என்ன மணிரத்னம் படத்துலயா மேன் நடிக்கிற. இனிமே எதை பேசினாலும் நாலஞ்சி வார்த்தை சேர்த்து வாக்கியமா சொல்ற. சரியா?"

இளா : ஓகே.

க: "உன்னையெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. நீயா திருந்தனா தான் உண்டு. சரி, அடுத்த அந்த நாடக நடிகர் காஸ்டியூம்ல இருக்கற திருட்டு முழி முழிச்சிட்டு இருக்கற ஆள் வா. சரி உன்னை பத்தி சொல்லு"

சிபி : "நான் நாமக்கல் சிபி. நான் தான் இந்த சங்கத்து தளபதி"

க: "ஆமாம். இது பெரிய சோழ பேரரசு. இதுக்கு இவர் தளபதி. டேய் மாநக்கல் மண்டையா, இந்த டப்பா வீட்டுக்கு பேரு ஒரு சங்கம். இதுக்கு நீ ஒரு தளபதி. எங்க ஒரு கத்தி சண்டை போட்டுக் காட்டு"

சிபி: "டேய் யாருடா அது எங்க தலயைப் பத்தி தப்பா பேசினது. தைரியமிருந்தா அவர் மேல கையை வெச்சி பாருடா"

க: "டேய் தளபதி மண்டையா. என்ன மேன் பண்ண?"

சிபி: "நீங்க தானே ”கத்தி” சண்டை போட சொன்னீங்க. அதான்"

க: "ஜோக்கா'ம்டா. கஷ்ட காலம்டா சாமி. உன்னையெல்லாம் வெச்சி எப்படித்தான் சமாளிக்கறாங்களோ. சரி, தி நெக்ஸ்ட்"

தேவ்:"அம் தேவ். நான் தான் இந்த சங்கத்து போர் வாள்"

க: "என்னது? திரும்ப சொல்லு"

தேவ்: "நான் தான் இந்த சங்கத்துப் போர் வாள்"

க: "டேய் சிபி மண்டையா. இங்க வா"

சிபி: "சொல்லுங்க கவுண்ட்ஸ்"

க: "சரி, இந்த போர் வாளை தூக்கி ஒரு சொழட்டு சொழட்டி காட்டு பார்ப்போம்"

தேவ், சிபி இருவரும் எஸ்கேப்.

க: "நீ யார்டா என்னை பார்த்து மொறைச்சிக்கிட்டே இருக்க. உன் பேரு என்ன?"

புலி : "என் பேர் நாகை சிவா. ஆனா மக்கள் எல்லாம் என்னை புலினு தான் சொல்லுவாங்க"

க: "கொட்டை எடுத்ததா இல்லை கொட்டை எடுக்காததா?"

புலி : "ஹலோ நான் சொல்றது கடிக்கிற புலி."

க: "எங்க, அந்த சைட்ல நிக்கறானே அவனை கொஞ்சம் கடிச்சிக் காட்டு"

சிபி: "புலி, கோபத்துல என்னைக் கடிச்சிடாத. வேணும்னா நம்ம தலயை ஒரு நாலு கடி கடி. சதை கொஞ்சம் எக்ஸ்ட்ரா வரும்"

க: "எதுக்கெடுத்தாலும் அவன் தல தலனு சொல்லிட்டு இருக்கான். யார்டா அது தல"

சிபி: "இதோ இவர் தான் எங்க தல கைப்புள்ள."

கவுண்டர் மேலும் கீழும் பார்க்கிறார்.

க: "இது கைப்புள்ளையா மேன். இது கைப்புள்ளையா? எங்க கொஞ்சம் இதை இடுப்புல தூக்கி வெச்சிட்டு ஒரு வாக் போயி் காட்டு"

KRS: "கவுண்டமணி ஐயா"

க: "Who is the disturbance... ஓ நீயா? சொல்லுடாப் பையா?"

KRS: "கைப்புள்ள என்பது வேறு கைப்பிள்ளை என்பது வேறு, இதை தான் ஏழாம் நூற்றாண்டில் காக்கைப்பாடினியார் கைப்பிள்ளை காவியம் என்று பாடியுள்ளார். அதை இந்த அப்பாவி சிறுவனாகிய நான் சமீபத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் படித்துள்ளேன்"

க: "ஆறடி உயரம் இருந்துட்டு நீ அப்பாவி சிறுவனா மேன்? கார்த்திக் ஸ்டைல்ல கூலிங் கிளாஸ் போட்டு கேப் போட்டுக்கிட்டா உன் வயசு தெரியாதா? நீயெல்லாம் ஜனலை திற. நாத்தம் வரட்டும்னு குமுதத்துலயோ, குங்கமத்துலயோ எழுத வேண்டிய ஆளு. இங்க இருந்து ஓடிப்போயிடு. போ மேன் போ. அவனை சொன்னா நீ என்ன மேன் மொறைக்கிற. நீ வா. உன்னைப் பத்தி சொல்லு"

வெட்டி : "என் பேரு வெட்டிப்பயல். நான் தான் சங்கத்தோட இளைய தளபதி"

க: அது என்னடா பேரு வெட்டிப்பயல், சட்டிப்பயல்னு. உங்களுக்கு எல்லாம் நல்ல பேரே கிடைக்கலயா? அப்பறம் அது என்ன இளைய தளபதி? எங்க அந்த காமெடிக்காரன் விஜய் மாதிரி ஒரு பாட்டுக்கு ஆடிக்காட்டு பார்க்கலாம்.

வெட்டி: ?!

க: "இனிமே இந்த மாதிரி வீணாப் போன பேர் எல்லாம் வெச்சிட்டு திரியாத. சரி இந்த கலவரத்துலயும் அங்க ஒருத்தன் ஜன்னல் பக்கத்துல் நின்னு வேடிக்கைப் பார்த்துட்டு இருக்கானே. அவன் யாரு"

சிபி: "அவர் தான் ஜொள்ளுப்பாண்டி"

க: "சரி சரி. இந்த பேர்ல இருந்தே தெரியுது அவன் அங்க இருந்து என்ன பண்ணிட்டு இருக்கானு. ஆனா, இங்க இருந்து பார்த்தா அந்த இட்லிக்கடை ஆயாத்தான் தெரியுது. அதைக் கூடாவாடா விட்டு வைக்க மாட்டீங்க."

சிபி: "அவர் எதுக்கும் பார்ஷியாலிட்டி பார்க்கறதில்லை"

க: "ஆமாம், அங்க ஒருத்தன் பயங்கரமா வேலை செஞ்சிட்டு இருக்கானே. அவன் யாரு?"

சிபி: "அவன் தான் ராயல் ராம். சேட்டிங்ல கடலை போட்டுட்டு இருக்கான்"

க: "விளாங்கனாப்போல தான். ஆமாம், ரொம்ப நேரமா, நானும் யூத்து தான் . நானும் யூத்து தான். நானும் யூத்து தான்னு சொல்லிட்டு இருக்காரே இந்த பெரியவரு. இவர் யாரு"

அபி.அப்பா: "நான் தான் இந்த மாசத்து அட்லாஸ் வாலிபர்"

க: "டேய் உங்களுக்கே இது அடுக்குமாடா? ஒரு முப்பது நாப்பது வருஷத்துக்கு முன்னாடி வாலிபனா இருந்ததை எல்லாம் கூப்பிட்டு வெச்சிக்கிட்டு வாலிபர்னு சொல்லிட்டு திரியறீங்களேடா. வேணும்னா அட்லாஸ் வாலிபருக்கு பதில் வயோதிக வாலிபர்னு பேர் வைங்க. இல்லை உங்க சங்கத்துக்கு சிவராஜ் சித்த வைத்திய சாலைனு பேர் வைங்க. சரியா இருக்கும். சரி, எனி படி ஐ மிஸ்"

சிபி: "எங்க சங்கத்து யூத்து கப்பி ஊருக்கு போயிருக்காரு. அவர் மட்டும் மிஸ்ஸிங்"

க: "சரி, சரி எங்க போயிட போறான். அவனுக்குனு ஒரு நாள் டெவில் ஷோ தனியா போட்டிடுவோம்"

தல: "அதெல்லாம் முடியாது.. எங்க சங்கத்து செல்லப்பிள்ள, ஞானகுழந்தை,ஜாவா பாவலர், கவிஞ்ஞர் கப்பி நிலவரை நீங்க பெருமை படுத்தனும்..."

க: "டேய், முழுசா வேகாத ஆப்பாயில் தல மண்டையா, இவ்வளோ நேரமா ஞானக்குழந்த, கவிஞ்ஞர், சொரிஞ்சர்'னு நக்கல்விட்டுடு என்கிட்டே பெருமைப்படுத்தனுமின்னு வேற கேட்கிறியா?"

கப்பி: "அவ்வ்வ்வ்..... தல'க்கு எம்மேலே அம்புட்டு பாசம்"

க: "ஏன்டா நீ கெட்டகேட்டுக்கு உருகுவே'லே ரசிகையர் மன்றம், ஆர்குட்'லே அம்பது கம்யூனிட்டியா? ஒனக்கே ஓவரா தெரியல"

சிபி: "கப்பி வாழ்க!! நமிதா வாழ்க!!!"

க: "இந்த வெட்டி கூவல் வேறயா? ஏண்டா ஒங்களுக்கெல்லாம் மனசாட்சியா இல்லையா? அந்த பீப்பா'வுக்கு இந்த பாப்பா மூஞ்சி மண்டயன் சரியான ஆளுதான்!! "

சிபி: "என்னோட அக்கவுண்ட்'க்கு அமெண்ட் போட்டிங்கன்னா, ஒங்களுக்கு ஸ்பெசலா கூவுவோம்... "

க: "இதெல்லாம் ஒரு பொழப்பாடா? நல்ல சங்கம்டா சாமிங்களா... சரி சரி, வந்ததுக்கு கடைசியா, இதே மாதிரி எல்லாரையும் சிரிக்க வைச்சிட்டு இருங்க. டாட்டா. பை பை."

Friday, September 12, 2008

பெண்கள் மென்பொருள் துறையில் பட்டையை கிளப்புவது எப்படி?

மத்த எல்லா துறைகளையும் விட மென்பொருள் துறைல பொண்ணுங்க அதிகமா வேலை செய்யறதுக்கு என்ன காரணம்னு ரொம்ப நாளா சிந்திச்சிருக்கேன். பதில் தெரியவே இல்லை. சரி யாரை கேக்கலாம்னு யோசிக்கும் போது மென்பொருள் துறைல யார் யார் வந்தா எப்படி எப்படி வேலை செய்வாங்கனு அந்த துறையை புரிஞ்சிருக்கறவரும், பொண்ணுங்க மனசை நல்லா புரிஞ்சி வெச்சிருக்கறவருமான நம்ம அட்லாஸ் சிங்கம் ச்சின்னப்பையனை கேட்டுடலாம்னு ஒரு ஃபோனை போட்டேன்.

ச்சி.பை : என்னப்பா வெட்டி எப்படி இருக்க?

வெ.ப: நல்லா இருக்கேண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?

ச்சி.பை: நான் என்ன உன்னை மாதிரி தங்கமணியை இந்தியாக்கா அனுப்பிருக்கேன். இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு டென்ஷனாக்காதப்பா.

வெ.ப: சரி சரி. எனக்கு ஒரு சந்தேகம். அதான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்.

ச்சி.பை: எனக்கும் ஒரு சந்தேகமிருக்கு. தங்கமணியை இந்தியா அனுப்புவது எப்படினு ஒரு பதிவு போடேன். மக்களுக்கு பயனுள்ளதா இருக்கும்.

வெ.ப: அண்ணே. அதை பத்தி எல்லாம் அப்பறம் பேசலாம். இப்ப எனக்கு ஒரு பயங்கரமான சந்தேகம். அதை தீர்த்து வைங்க.

ச்சி.பை: சரிப்பா. சொல்லு.

வெ.ப: மத்த எல்லா துறையும் விட மென்பொருள் துறைல பெண்கள் அதிகமா இருக்கறதுக்கு காரணமென்ன?

ச்சி.பை: இது ஒரு நல்ல கேள்வி.

வெ.ப: பதிலை சொல்லுங்கண்ணே!

ச்சி.பை: இதுக்கு நான் பதில் சொல்றதை விட சில பல கேள்விகள் கேக்கறேன். அதுல இருக்குற சூட்சமத்தை புரிஞ்சிக்கிட்டா உனக்கே தானா புரிஞ்சிடும்.

வெ.ப: சரிண்ணே. கேள்வியை கேளுங்க

ச்சி.பை: சாப்ட்வேர்ல அதிகமா எல்லாரும் என்ன வேலை செய்வாங்க?

வெ.ப: டெவலப்பர்.

ச்சி.பை: டெவலப்பர்ஸ் அதிகமா என்ன செய்வாங்க?

வெ.ப: காப்பி பேஸ்ட்

ச்சி.பை: நதியா தோடு, குஷ்பூ ஜாக்கெட், சித்தி ராதிகா புடவை, கஜோல் சல்வார் இந்த மாதிரி பல ஐட்டம்ஸ் இருக்கு. ஆனா அஜித் சட்டை, விஜய் பேண்ட், சிம்பு பர்முடாஸ்னு ஏதாவது இருக்கா?

வெ.ப: இல்லையேண்ணே.

ச்சி.பை: இது தான் காப்பி பேஸ்ட்டோட துவக்கமே. இதுல யாரு எக்ஸ்பர்ட்னு புரியுதா?

வெ.ப: புரியுதுண்ணே.

ச்சி.பை: அது. அடுத்து என்ன வேலை அதிகமா செய்யறாங்க?

வெ.ப: டெஸ்டிங்

ச்சி.பை: அதுல என்ன பண்ணுவாங்க.

வெ.ப: எதுல என்ன தப்பு இருக்குனு கண்டுபிடிப்பாங்க.

ச்சி.பை: அப்படினா பொண்ணுங்க எல்லாம் பிறப்பாலே டெஸ்டர்ஸ் தான்பா. அவுங்களுக்கு எல்லாம் ட்ரெயினிங்கே கொடுக்க தேவையில்லை.

வெ.ப: எப்படினே சொல்றீங்க?

ச்சி.பை: மாமியார் மருமகள் பிரச்சனை, நாத்தனார் பிரச்சனையெல்லாம் தெரியாதா உனக்கு? இந்த மாதிரி மாமனார்- மருமகன் பிரச்சனைனோ, மாமன் மச்சான் பிரச்சனனோ ஏதாவது இருக்கா? ஒரு பொண்ணு கல்யாணமாகி வந்தா ஒரே நாள்ல அவள பத்தி ஆயிரம் Bugsஐ ஒரு மாமியாராலயும், நாத்தனாராலயும் ரிப்போர்ட் பண்ண முடியும். அதே மாதிரி மாமியார் நாத்தனாரை பத்தி ஆயிரம் Bugsஐ அந்த பொண்ணு ரிப்போர்ட் பண்ணும். ஆனா நம்ம பையனால ஒரு நாலு அஞ்சி பக்ஸ் கூட ரைஸ் பண்ண முடியாது.

வெ.ப: ஓ. அப்ப பொண்ணுங்க டெஸ்டிங்லயும் பட்டையை கிளப்புவாங்கனு சொல்றீங்க?

ச்சி.பை: நான் என்ன சொல்றது. உலகத்துக்கே அது தெரியும். அடுத்து என்ன வேலை அதிகமா பண்றாங்க?

வெ.ப: மெயிண்டனன்ஸ் ப்ராஜக்ட்

ச்சி.பை: அதுல என்ன செய்வாங்க?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச ப்ராஜக்ட்க்கு சப்போர்ட் பண்ணுவாங்க. ஏதாவது சின்ன சின்ன பிரச்சனை இருந்தா ஏற்கனவே பண்ணியிருந்ததுல கொஞ்சம் மாறுதல் செய்வாங்க. அதிகமான வேலை இருக்காது.

ச்சி.பை: இட்லி உப்புமானா என்னனு தெரியுமா?

வெ.ப: ஏற்கனவே செஞ்ச இட்லி மீந்துச்சுனா வீணாகாம இருக்க அதை கொஞ்சம் மாத்தி எல்லாரும் சாப்பிடற மாதிரி கொடுக்கறது.

ச்சி.பை: அதே அதே. நீ முன்னாடி சொன்னதும் கொஞ்சம் கொஞ்சம் அது மாதிரி தானே ;)

வெ.ப: அண்ணே. எங்கயோ போயிட்டீங்க. அடுத்து டேமஜர்.. சாரி சாரி மேனேஜர்

ச்சி.பை: அதுல எல்லாரையும் வேலை வாங்கனும். அப்படி தானே?

வெ.ப: ஆமாம்னே.

ச்சி.பை: இது நான் உனக்கு சொல்லி தான் தெரியனுமா? வேலை வாங்கறதுல பொண்ணுங்களை மிஞ்ச ஆள் இருக்கா? காலேஜ் படிக்க ஆரம்பிக்கும் போது பசங்க பொண்ணுங்களுக்கு வேலை செய்ய ஆரம்பிக்கறானுங்க. அது கட்டைல போற வரைக்கும் கண்டினியூ ஆகுது. சரி தானே?

வெ.ப: ஆமாங்கண்ணே...

ச்சி.பை: போதுமா இல்லை இன்னும் ஏதாவது வேணுமா?

வெ.ப: பொதும்ணே.. பொதும். என் அறிவு கண்ணை திறந்து வெச்சிட்டீங்க... பொண்ணுங்களுக்கு சாப்ட்வேர் இஞ்சினியராகற திறமை பை பர்த்தே இருக்குனு புரிய வெச்சிட்டீங்க.

ச்சி.பை: இதே மாதிரி வேற பொசிஷன்ஸ் பத்தி கேள்வி இருக்கறவங்களை பின்னூட்டத்துல கேக்க சொல்லு. நான் பதில் சொல்றேன்.

வெ.ப: இதெல்லாம் நீங்க சொல்லனுமா? என்ன மக்களே. ரெடி தானே? கும்மி அடிக்கின்ற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா?

Sunday, August 31, 2008

ஆகஸ்ட் போனால் செப்டம்பர் உண்டு கேளடா கண்ணா!!!

சிங்கம் சிங்கிளா தான் வரும்னு தலைவர் சொன்னாலும் சொன்னாரு, நம்ம சங்கத்துல இந்த மாசம் அட்லஸ் சிங்கம் ஆயில்ஸ் சிங்கிளா ஆடி பட்டையை கிளப்பிட்டாரு. இந்த ஒரு மாசம் முழுக்க பதினாறு பதிவு வித விதமா போட்டு பட்டையை கிளப்பிட்டாரு.

பொண்ணுங்களை வித விதமா பிரிச்சதை சொல்றதா, லவ்வு பண்ண அவர் கொடுத்த பிளானிங்க சொல்லவா, மொக்கையை பத்தி ஆராய்ச்சி பண்ணதை சொல்லவா, இல்லை டைமிங்கா அவர் போட்ட ஒலிம்பிக்ஸ் பதிவு, PIT போட்டிக்கு போட்ட பதிவை பத்தி சொல்லவா, நகைச்சுவை சாம்ராட் சார்ளி சாப்ளின் பத்தி எழுதனதை சொல்லவா இல்லை தசவதாரம் ரீமிக்ஸ் பாடல் மொக்கை நாயகனே பாடலை சொல்லவா? எதை விட எதை சொல்ல. பேசாம இங்க சொடுக்கி ஆயில்ஸ் எழுதின பட்டாசான பதிவு எல்லாத்தையும் சொல்லிடறேன். தவற விட்டவங்க படிக்கலாம். எல்லாமே யூத் ஃபுல் தான் ;)

என்னடா இந்த மாசம் ஒருத்தர் வந்து பட்டையை கிளப்பிட்டாரே, அடுத்த மாசம் யார் வருவார்னு ஆவலா இருக்கீங்களா? அவரும் நகைச்சுவைல பாட்டாசு கிளப்பறவர்தான்.

நான் க்ளூ கொடுக்கறேன் நீங்க கண்டுபிடிச்சிக்கோங்க

சின்ன வயசுல எல்லாம் "அவர்" வந்து புடிச்சிக்குவார்னு சொன்னா நாங்க எல்லாம் பயந்துக்குவோம். இப்ப அவர் URL தெரிஞ்ச குழந்தைகளுக்கு எல்லாம் "அவர்" வந்து புடிச்சிக்குவார்னு சொன்னா விழுந்து விழுந்து சிரிக்கறாங்க.

2011ல நானும் முதலமைச்சர் தானு சொல்லி வந்தது Gaptain மட்டுமில்லை... இவரும் தான்.

இவர் ஒரு தீர்க்கதரிசி. ஆமா. நிஜமா தான். நம்புங்க. 2030 எப்படி இருக்கும்னு இப்பவே சொல்லிட்டு இருக்காரு.

சாப்ட்வேர் ஃபீல்ட்க்கு யார் யார் வந்தா என்ன என்ன மாற்றங்கள் வரும்னு இவர் போட்டதை பார்த்து சாப்ட்வேர் இண்டஸ்ட்ரீயே நடுங்கி போய் இருக்கு.

அவருக்கு பின்னாடி 5.95 கோடி மக்கள் இருக்காங்க.

இதுக்கு மேலயும் நீங்க கண்டுபிடிக்கலனா நீங்க இன்னும் வலைப்பதிவெல்லாம் அதிகமா படிக்க ஆரம்பிக்கனும். நீங்க ரெட் அலர்ட்ல இருக்கீங்கனு அர்த்தம் ;)

ச்சின்னப்பையன் அவர்களை வருக வருக என்று சங்கம் வரவேற்கிறது...

Monday, May 12, 2008

ரெண்டு போட்டி அறிவிப்பு

ரெண்டு போட்டி முடிஞ்சி ஒரு வாரமாகுது என்னடா இன்னும் எந்த அறிவிப்பும் வரலைனு யோசிச்சிட்டு இருக்கற மக்கள் எல்லார்கிட்டையும் மாப்பு சொல்லிக்கறேன். ஆபிஸ்ல ஆணிகளின் எண்ணிக்கை ரொம்ப அதிகமாகிடுச்சி.

சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்.

போட்டி ரொம்ப அருமையா போச்சு. நிறைய பேர் கலந்துகிட்டு பட்டையை கிளப்பனீங்க (ஏன் லவங்கத்தை கிளப்பலையானு யாரும் கேக்க கூடாது). எல்லாருக்கும் எங்களோட நன்றி. இப்ப நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இது தான்.

* இரண்டு பதிவுகளுக்கு மேல போட்டிருக்கவங்க எல்லாரும் போட்டிக்கான தங்களோட இரண்டு பதிவை இன்னும் இரண்டு நாளைக்குள்ள (May 14 22:22 PST) இந்த பதிவுல சொல்லிடுங்க. (யாராவது கலந்துக்கனும்னு ஆசைப்பட்டா இந்த ரெண்டு நாளைக்குள்ள பதிவு எழுதி இங்க லிங் கொடுத்துடுங்க. இறுதி வாய்ப்பு).

*இரண்டு நாள்ல கொடுக்காதவங்களோட முதல் இரு இடுகைகள் கணக்கில் கொள்ளப்படும்.

*அடுத்து ஒரு வாரத்துக்கு ஓட்டெடுப்பு நடக்கும். அதுல ஜெயிக்கற 20 பேர் மீதி இருக்கற படைப்புகளுக்கு மதிப்பெண் கொடுப்பாங்க. அதுக்கான அறிவிப்பு May 15ஆம் தேதி வரும்.

ரெடி ஸ்டார்ட்...

Friday, April 25, 2008

ரெண்டு அறிவிப்பு

போட்டிக்கான இடுகைகள் வந்து குவிகின்ற காரணத்தால் போட்டி இன்னும் ஒரு வாரம் நீடிக்கப்படுகிறது.

போட்டிக்கான கடைசி நாள். May - 4 - 22:22:22 PST...

மறுபடியும் ரெண்டு சொல்லிக்கறேன்.

தலைப்புல இரண்டுன்னு வரணும்னு அவசியம் இல்லை.

பதிவிலும் வெளிப்படையா இரண்டு வரணும்னு அவசியமில்லை. இன்னும் கொஞ்சம் Out of the box யோசிங்களேன்
*சித்தி
* அப்பா (வீட்டுக்காக எவ்வளவு உழைச்சாலும் ரெண்டாவது இடம் தான். அம்மாக்குத்தான் முதல் இடம்.)
*ஒரு மனுஷனுக்குள்ள இருக்குற ரெண்டுங்கெட்டான் மனம்., (ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்.. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை...)
*சூப்பர் சிங்கர் ஜூனியர் மாதிரியான போட்டில இரண்டாவதா வந்த பையனோட மனநிலை... இப்படி...
போட்டி சுவாரஸ்யமா இருக்கும் இல்லை.

இதுவரை வந்த ஆக்கங்கள்:-
(ஏதாவது தப்பு இருந்தா பின்னூட்டத்துல தெரிவிங்க மக்கா)

1) செல்விஷங்கர்
அ) இரண்டடியில் இன்பம்
ஆ) இரண்டு மனம்

2) பாஸ்டன் பாலா

அ) ரெண்டுக்கு வந்த கோலாகலம்

3) அம்பி

அ) ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
ஆ) ரெட்டை ஜடை வயசு - II
இ)தமிழ் Vs உதித் நாராயண்

4) சென்ஷி

அ) என் இரண்டாம் காதலி
ஆ)உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

5) ச்சின்னப் பையன்

அ)எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!
ஆ) கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்
இ) சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!

6) தமிழரசன்

அ) ஜோடிப் புறா!
ஆ) இராமு எழுதிய காதல் கவிதை...
இ) பள்ளி மாணவர் தலைவன் தேர்தல்
ஈ) பிளாஸ்டிக் பூக்கள்

7) கோவி.கண்ணன்

அ) சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

8) PPattian : புபட்டியன்

அ) ரெண்டுதான் எனக்கு ராசி - வ.வா.ச போட்டிக்காக
ஆ) இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா
இ) குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்

9) ramachandranusha(உஷா)

அ) தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

10) king

அ) வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

11) பாச மலர்

அ) நதியொன்று விதி தேடி..
ஆ) நிறைமதி காலம்

12) ஆயில்யன்

அ) இது ”ரெண்டுக்கு” மேட்டர்
ஆ) ”இரண்டு”ங்கெட்டான்
இ) பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!
ஈ) 2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !
உ) இரண்டு கோட்டுத்துண்டுகள்
ஊ) ஹவாய் செருப்புகளும் இரண்டு மாதங்களும்!
எ) எரிபொருள் இல்லா இரண்டு சக்கர வாகனங்களும் இனிய வாழ்வும்!

13) திகழ்மிளிர்

அ) இதயம் இரண்டாகிறது

14) கண்மணி

அ) ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...

15) இரா. வசந்த குமார்

அ) ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும், என்ன?
ஆ) பாப்பா போட்ட தாப்பா...
இ) ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் தோணுது?
ஈ) நன்று என்று ஆன பின்!
உ) இது நாடகம்?
ஊ) என்ன தலைப்பு வைக்கலாம்?
எ) ஒளியிலே தெரிவது...
ஏ) எனவே, நான், வேண்டாம்.
ஐ) இரட்டைக் கிளவி..!


16) அபி அப்பா

அ) வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!
ஆ) தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!

17) சுல்தான்

அ) இரண்டுமே அவள்தான்

18) பினாத்தல் சுரேஷ்

அ) இதென்ன கலாட்டா?

19) இளைய கவி

அ) வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"

20) நிஜமா நல்லவன்

அ) ரெண்டாவது அட்டம்ப்ட்!!
ஆ) யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க?!


21) சிறில் அலெக்ஸ்
அ) இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்

22) மங்களூர் சிவா
அ) ரெண்டு

23) இரவு கவி
அ) வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவு...

24. Sen22
அ)
எனது புலம்பல்கள்_(9)

25) லக்கி லுக்
அ)திரும்பிப் பாருடி!

26) KRP
அ) கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே ...
ஆ) ரெண்டாவது குரல்

27) Radha Sriram
அ) இரட்டை பதிவர்கள் இம்சை...

28) sathiya
அ) இரண்டக்க இரண்டக்க...
ஆ) ரெண்டே ரெண்டு ஆசைதான்...

29) தமிழ் பிரியன்
அ) தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''




Wednesday, April 9, 2008

சங்கம்னா ரெண்டு

எவ்வளவோ போட்டில கலந்துக்கிட்டோம்... நம்ம சங்கத்து போட்டில கலந்துக்க முடியலனு நிறைய பேர் வருத்தப்பட்டிருந்தாங்க. கேமிராவை எல்லாம் பாரதிராஜா படத்துல தான் பார்த்திருக்கோம், நம்மல போய் ஃபோட்டோ எடுக்க சொன்னா என்ன செய்யறதுனு ஆயிரக்கணக்குல பிராது வந்துடுச்சு. சரி எல்லாருக்கும் ரெண்டாவது வருஷ விழால பங்கெடுத்துக்கனும்னு ரெண்டாவதா ஒரு போட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு.

சரி இரண்டாவது வருடத்துக்கான இரண்டாவது போட்டிக்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு சங்கத்துல கூடி யோசிச்சப்ப, நம்ம தல பேசாம "இரண்டு"னே தலைப்பு வெச்சிடலாம்னு பிரச்சனையை சுலபமா முடிச்சிட்டாரு.

"இரண்டு" என்ற கருவில் கதை/கட்டுரை/நகைச்சுவை/அனுபவம்/ கவிதை எது வேண்டுமென்றாலும் சமர்ப்பிக்கலாம். நீங்க எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதலாம் ஆனால் ஒருவர் "இரண்டு" ஆக்கங்களை மட்டுமே போட்டிக்கு சமர்பிக்கலாம்.

என்ன எல்லாம் எழுதறதுனு யோசிக்கறவங்களுக்கு சில டிப்ஸ் :
1. இரண்டாவது மதிப்பெண்.
2. Split Personality
3. சித்தி (இரண்டாவது தாய்)
4. இரண்டாம் வகுப்பு டீச்சர்
5. இரண்டாவது காதல்
6. இரண்டாவது நட்பு
7. பெரிய அளவிளான போட்டியில் இரண்டாம் இடம்... (தோல்வியை இப்படி கூட சொல்லலாம் இல்லை)
இப்படி நிறைய.... எல்லாத்தையும் நானே சொல்லிட்டேனு நீங்க ஃபீல் பண்ணக்கூடாது இல்லை. அதான் ;)

தலைப்பில் இரண்டு இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. கருதான் முக்கியம்.

முதல் இருபது போட்டியாளர்களுக்கு நீங்களே ஆச்சரியப்படும் வகையில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்படும்.

* அதிக ஆக்கங்களை எழுதபவருக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு.

* கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, ஆன்மீகம், சினிமா, இலக்கியம், அனுபவம், மொக்கை இப்படி அதிக பிரிவுகள் எழுதுபவருக்கும் ஆயிரம் ரூபாய் சிறப்பு பரிசு

முதல் பரிசு - மூன்றாயிரம் ரூபாய்

வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் முறை :

1. மக்கள் தீர்ப்பு (ஓட்டெடுப்பு) - 34%

2. பங்கெடுப்பவர்கள் தீர்ப்பு -
மக்கள் ஓட்டெடுப்பிலிருந்து முதல் 20 ஆக்கங்களை எடுத்து, அதில் உள்ள 20 நபர்கள் தங்களை தவீர மீதமுள்ள 19 பேர்களுக்கு மதிப்பெண் கொடுப்பார்கள் - 33%

3. சங்கத்து சிங்கங்கள் - 33%

சமர்பிக்கும் முறை

உங்கள் ஆக்கங்களுக்கு கீழே இந்த இணைப்பை கொடுக்கவும்.

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

மேலும் இந்த பதிவில் நீங்கள் போட்டிக்கு சமர்பிக்கும் இரண்டு ஆக்கங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நீங்க நிறைய எழுதினா எல்லா சுட்டிகளையும் கொடுக்கலாம். அதில் போட்டிக்கான இரண்டு இடுகைகளின் சுட்டியை குறிப்பிட்டு தெளிவாக கொடுக்கவும்...

போட்டியில் பங்கேற்க இறுதி நாள் ஏப்ரல் 26. இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு... அடிச்சி ஆடுங்க மக்கா;)

இதுவரை வந்த ஆக்கங்கள்:-

1) செல்விஷங்கர்
அ) இரண்டடியில் இன்பம்
ஆ) இரண்டு மனம்

2) பாஸ்டன் பாலா

அ) ரெண்டுக்கு வந்த கோலாகலம்

3) அம்பி

அ) ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
ஆ) ரெட்டை ஜடை வயசு - II
இ)தமிழ் Vs உதித் நாராயண்

4) சென்ஷி

அ) என் இரண்டாம் காதலி
ஆ)உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

5) ச்சின்னப் பையன்

அ)எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!
ஆ) கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்
இ) சங்கம் 'ரெண்டு' போட்டி - தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!!!

6) தமிழரசன்

அ) ஜோடிப் புறா!
ஆ) இராமு எழுதிய காதல் கவிதை...
இ) பள்ளி மாணவர் தலைவன் தேர்தல்
ஈ) பிளாஸ்டிக் பூக்கள்

7) கோவி.கண்ணன்

அ) சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

8) PPattian : புபட்டியன்

அ) ரெண்டுதான் எனக்கு ராசி - வ.வா.ச போட்டிக்காக
ஆ) இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா

9) ramachandranusha(உஷா)

அ) தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

10) king

அ) வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...

11) பாச மலர்

அ) நதியொன்று விதி தேடி..

12) ஆயில்யன்

அ) இது ”ரெண்டுக்கு” மேட்டர்
ஆ) ”இரண்டு”ங்கெட்டான்
இ) பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!
ஈ) 2ஆம் முறை தம் அ(பி)டிக்கும் நாம் !

13) திகழ்மிளிர்

அ) இதயம் இரண்டாகிறது

14) கண்மணி

அ) ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...

15) இரா. வசந்த குமார்

அ) ரெண்டு ரெண்டு பேராத் தான் போகணும், என்ன?
ஆ) பாப்பா போட்ட தாப்பா...
இ) ரெண்டுன்னு சொன்னா என்ன எல்லாம் தோணுது?
ஈ) நன்று என்று ஆன பின்!
உ) இது நாடகம்?

16) அபி அப்பா

அ) வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!
ஆ) தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!

17) சுல்தான்

அ) இரண்டுமே அவள்தான்

18) பினாத்தல் சுரேஷ்

அ) இதென்ன கலாட்டா?

19) இளைய கவி

அ) வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"

20) நிஜமா நல்லவன்

அ) ரெண்டாவது அட்டம்ப்ட்!!

பிரம்ம ரச போட்டி முடிவுகள்

பிரம்மரசம் போட்டி ரொம்ப கடுமையா இருந்ததால நடுவர்கள் ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க. அப்பறம் அலசி ஆராய்ஞ்சு, துவைச்சி காயப்போட்டு, பிரிச்சு பேன் பார்த்து ஒரு வழியா வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்துட்டாங்க.

இதோ இரண்டாம் பரிசு வென்ற அம்பியோட(;)) படம்...




முதல் பரிசு...

எல்லாருக்கும் தெரிஞ்சது தான்...

குட்டீஸ் கார்னர் - பேபி பவன்

இது எங்க குசும்பு மாமாவோட இப்போதய பிந்தாஸ் வாழ்க்கை



இது எங்க மாம்ஸ் கல்யாணம் ஆனப்புறம் இருக்க போகும் வாழ்க்கை...


போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கு சங்கத்து சிங்கங்களின் சார்பாக வாழ்த்துக்கள். போட்டியில ஜெயிக்கறதை விட பங்கெடுத்துக்கறது தான் முக்கியம் ;)

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அனுப்ப சின்ன தலை தனி மடலில் தொடர்பு கொள்வார்.

நம்ம தலயும், சின்ன தலயும் கேமிரா கவிஞர்களா இருக்கறதாலதான் போட்டோ வெச்சி காமெடி போட்டி நடத்திட்டார். கேமிராவையே பார்க்காத எங்களுக்கு எல்லாம் அநியாயம் செஞ்சிட்டார்னு ஃபீல் பண்ணி பல பிராதுகள் சங்கத்துக்கு வந்துச்சு. அதுக்கு அமைச்ச விசாரனை கமிஷன் அடுத்து ஒரு போட்டி வைக்கலாம்னு சொல்லிட்டாங்க. அதுக்கான விபரம் இன்னும் அரை மணி நேரத்தில்...

அடுத்த பதிவில் சந்திக்கலாம்...

Tuesday, October 23, 2007

சங்கம் வழங்கும் மொக்கை பதிவர் நம்பர் 1 - நடந்தது என்ன?

அபி அப்பா குழுவினர் மொக்கை பதிவர் நம்பர் 1ல் இருந்து வெளியேற்றப்பட்டத்தின் பின்னணி என்ன? இதோ உங்களுக்காக அங்கே படம்பிடிக்கப்பட்ட காட்சிகள்...

அபி அப்பா கோபமாக நின்றிருக்கிறார் (அப்படினு அவர் நினைச்சிட்டு இருக்கார். ஆனா அதை பார்த்து எல்லாம் சிரிச்சிட்டு இருக்காங்க. அவர் கோபமா இருக்கார்னு அவரே சொல்லியும் யாரும் நம்பவில்லை. கொஞ்ச நேரம் அவரே நம்பவில்லை). பக்கத்துல அப்பாவியாக "ரிப்பிட்டே" கோபி நின்றிருக்கிறார்.

நடுவர்கள் ஓசை செல்லா, (மொக்கை) மாஸ்டர் செந்தழல் ரவி மற்றும் ஒரு கொரிய பெண் பதிவர் (அவுங்களுக்கு இங்க என்ன வேலைனு கேக்க கூடாது)

ஓசை செல்லா: அபி அப்பாக்கிட்ட மைக் கொடுங்க...
என்ன பிரச்சனை?

அபி அப்பா: ஒன்னுமில்லை

ஓ.செ: என்ன பிரச்சனை? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?

அ.அ: ஐ அம் நாட் அப்ஸட்... ஐ அம் ஹேப்பி... வி டிட் பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ். திஸ் இஸ் பெஸ்ட் டே ஆஃப் மை லைப்

ஓ.செ: அப்பறம் என் அப்சட்டா இருக்கீங்க? டெல் மீ... டெல் மீ வாட் இஸ் இன் யுவர் மைண்ட்... டெல் மீ. அபி அப்பா.. கமான்.

கோபி :அபி அப்பா கமான்...

அ.அ: ஏன் என் பதிவு பிடிக்கல?

ஓ.செ: அதை ஏன் அப்ப கேக்கல? எதுக்கு இப்படி கோவிச்சிக்கனும்?

அ.அ: ஐ அம் ஆஸ்கிங் யூ நௌ... எல்லாத்துக்கும் இடம், பொருள், ஏவல் இருக்கில்லை.

ஓ.செ: நான் இப்ப உங்களை ஒன்னு கேக்கறேன்... கும்மி பதிவு போட்டிங்க இல்லை?

அ.அ: ஆமாம் போட்டேன்.

ஓ.செ: அந்த பதிவ படிக்காமலே பதிவு அருமையா இருக்குனு முதல்ல பின்னூட்டம் போட்டேன் இல்லை.

அ.அ: ஆமாம்.

ஓ.செ: அன்னைக்கு ஏன் பின்னூட்டம் போட்டேனு கேட்டீங்களா?

(பின்னாடி மகளிரணியை சேர்ந்த ஒருவர் பலமாக கை தட்டுகிறார்... அதை அப்படியே ஃபோகஸ் பண்ணறோம்)

அபி அப்பா தீவிரமாக சிந்தித்துவிட்டு : கேக்கலை

ஓ.செ: அதே மாதிரி நானும் இன்னைக்கு சொல்லல.
அன்னைக்கு நீங்க கும்மி போஸ்ட் போட்ட போது பதிவ படிக்காமலே அருமை, அட்டகாசம்னு கும்மி அடிச்சது யாரு?

அ.அ: ஹிம்?

ஓ.செ: யாரு?

அ.அ: நீங்க தான்.

ஓ.செ: அன்னைக்கு சந்தோஷமா எடுத்துக்கிட்டீங்க இல்லை. மிக்க நன்றினு பின்னூட்டம் போட்டிங்க இல்லை. இன்னைக்கு இந்த பதிவு மொக்கையா இல்லைனு சொல்லும் போது அதுக்கு ஏன் மிக்க நன்றினு சொல்ல முடியல? ஒய் ஆர் யூ கெட்டிங் அப்செட்?

(செந்தழல் ரவி பக்கத்துல இருக்குற கொரிய ஃபிகருடன். இப்படி தான் இந்த ஆளு பள்ளிக்கூடத்துல படிக்கும் போது ஒரு வாத்தியார் இவர் ஃபெயிலானதுக்கு அடிச்சப்ப. அன்னைக்கு நான் பாஸானப்ப அடிக்கல. இன்னைக்கு நான் ஃபெயிலானப்ப மட்டும் எப்படி அடிக்கலாம். பாஸானதுக்கு ஒரு நியாயம், ஃபெயிலானதுக்கு ஒரு நியாயமானு? கேட்டு அவரையே மடக்கிட்டாரு... கொரிய ஃபிகர் எதுவும் புரியாம அவர் சொல்றதுக்கு தலையை ஆட்டிட்டு இருந்தது)

அ.அ : ஏன்னா நான் நல்லா மொக்கை போட்டேன். பதிவு மொக்கையாவே இல்லைனா எப்படி அது?

ஓ.செ: பதிவு மொக்கையாவே இல்லைனு நான் சொன்னனா?

அ.அ: யா.. வேணும்னா டேப் ரீவைண்ட் பண்ணி பார்க்கலாமா?

ஓ.செ: நான் சொன்னனா பதிவு மொக்கையா இல்லைனு? டிட் ஐ சே தட்? டிட் ஐ சே தட்?

அ.அ: பதிவு மொக்கையாவே இல்லைனா அது அப்படி? இந்த இடத்துல மொக்கையா இல்லை, அந்த இடத்துல மொக்கையா இல்லைனா பரவாயில்லை. மொத்த பதிவும் மொக்கையா இல்லைனா எப்படி? ஹவ் கேன் யூ சே தட்? அது எப்படி மொக்கையா இல்லைனு சொல்லலாம்?

ஓ.செ: என்ன சொன்னிங்க?

அ.அ: மொக்கையா இல்லைனு எப்படி சொல்லலாம்?

ஓ.செ: அது இல்லை.. ஹவ் கேன் யூ சே தட்டா? இதுல இருந்து என்ன தெரியுது, உங்க பதிவெல்லாம் கும்மி அடிச்சா தப்பில்லை ஆனா மொக்கை போடலைனு மட்டும் சொல்ல கூடாது. அப்படி தானே?

அ.அ: நோ நோ. நான் அப்படி சொல்லல. இந்த இடத்துல மொக்கையா இல்லைனு சொன்னா சரி. ஆனா பதிவே மொக்கையா இல்லைனு எப்படி சொல்லலாம். அன்னைக்கு அந்த பதிவுல ஒரு இடத்துல பதிவு மொக்கையா இல்லைனு மொக்கை மாஸ்டர் செந்தழல் ரவி சொன்னாரு. ஐ டுக் இட். இப்படி பதிவே மொக்கையா இல்லைனு சொன்னா எப்படி? நாங்க வெளி நடப்பு செய்யறோம்... வா கோபி.

கோபி: ரிப்பீட்டே...

சரி அபி அப்பா சொல்கிற "பதிவு மொக்கையா இல்லை"னு ஓசை செல்லா சொன்னாரா? ரீ டெலிகாஸ்ட்...

ஓ.செ: எனக்கு பிடிக்கல... எனக்கு பிடிக்கலை.. எனக்கு இது தான் பிரச்சனை. நான் கொஞ்சம்.. கொஞ்சம் இல்லை கொஞ்சம் ஓவராவே ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்ட். மொக்கையா இருந்துச்சி. நல்ல கரு. நல்லா எழுதியிருக்கீங்க. ஸ்டைல் இருந்துச்சி. எல்லாமே இருந்துச்சி. ஆனா எனக்கு பிடிக்கலை. நச்சுனு சொல்றேன். ஐ அம் நாட் ஜோக்கிங். பதிவு மொக்கையா இல்லை. உண்மை என்னனா ரிப்பிட்டே கோபி சான்ஸேயில்லை. அருமையான மொக்கை. அன்பிலிவபிள், எக்ஸ்ட்ராட்னரியான மொக்கை. ஆனா அபி அப்பா என்னனு தெரியல. எக்ஸ்ட்ராடினரி தீம். ஆனா மொக்கை போடறதை மறந்துட்டாரோனு நினைக்கிறேன். அங்க அங்க சமுதாயத்துக்கு பயனுள்ளதா எழுதிட்டாரு. ரவி மொக்கையா இருக்குனு சொல்லிட்டாரு. அந்த கொரியன் ஃபிகர் கூட சொல்லிடுச்சி. ஆனா எனக்கு பிடிக்கல. எல்லாருக்குமே மொக்கையா தெரியலாம். ஆனா எனக்கு மொக்கையா தெரியல... ஒரு இணைய நாடோடியா சொல்றேன்... இது மொக்கையா இல்லை.

ரீ டெலிகாஸ்ட் முடிந்தது...

ஓ.செ: நான் தானே உங்களை பேச சொன்னேன். நானே உங்களை என்னை ஏன் திட்ட சொல்லனும்?

அ.அ: சூடான இடுகைல வரணும்னு தான். வேற எதுக்கு?

ஓ.செ: என்ன? சூடான இடுகைல வரதுக்கா? அதை தான் நாலாவது பக்கத்துக்கு தள்ளிட்டாங்களே. அதுல வரதுக்கு நான் ஏன் இப்படி பண்ணனும்?
சரி. நான் ஒண்ணு சொல்லறேன்? ஐ ஜஸ்ட் வாண்ட் டூ சே சம்திங். நான் வந்து யாருக்கும் பயப்படாதவங்க. எதை பத்தியும் கவலையேப்படமாட்டேன்...

அப்பப்ப யெஸ் யெஸ்னு பின்னாடி ஒரு பெண்ணின் குரல் கேக்குது. யாருனு யாருக்கும் தெரியல.

ஓ.செ: நான் என் மனசுல பட்டதை சொல்லுவேன். எனக்கு இந்த பார்ஷியாலிட்டி எல்லாம் பிடிக்காது. இந்த வலைப்பதிவுல வந்து தான் நான் பேர் வாங்கனும்னு இல்லை. நான் ஒரு இணைய நாடோடி. எனக்குனு ஃபேன்ஸ் இருக்காங்க. இணையம் ரொம்ப பெருசு. எல்லாரும் நல்லா மொக்கை போடறீங்க. வாழ்த்துக்கள். இன்னைக்கு இந்த வலைப்பதிவுல இருந்து விலக போறது யாருனா... ஓசை செல்லா... ஐ அம் கோயிங் டூ மிஸ் யூ ஆல்... (பின்னாடி வாய்வே மாயம் பாட்டு ஓடுது...)

மக்கள் எல்லாம் திகைச்சி போறாங்க. ஒரு சிலருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. பெண்கள் கண்களில் கண்ணீர் வடிகிறது. வலைப்பதிவுகள் எல்லாம் ஹேங் ஆகிறது...

மொக்கை பதிவர் 1 நிகழ்ச்சியாளர்கள் என்ன செய்வது என்று தவிக்கின்றனர்... ஓசை செல்லா லேப் டாப் ஷட் டவுன் ஆவதை பார்த்து உலகத்தில் வாழும் தமிழ் வலைப்பதிவர் அனைவரும் அவருக்கு ஃபோன் செய்கின்றனர். தமிழ் நாடு தொலை தொடர்பு துறையே ஸ்தம்பித்து போகிறது. கோவையில் போன் லைன் எல்லாம் அங்கு அங்கு வெடிக்கிறது. அமெரிக்காவில் ரிலையன்ஸ் இந்தியாவில் யாருக்கும் லைன் கிடைக்கவில்லை.

ஒரு வழியாக அவரை சமாதனப்படுத்தி வலைப்பதிவிற்கு அழைத்து வருகிறார்கள்...

அவர் பிறகு மொக்கை போடுவது எப்படினு மொக்கை போட்டு சொல்லி கொடுக்கிறார்...

சரி பார்ட்டிசிபண்ட் ஏதோ சொல்ல ஆசைப்படறாங்க. இதோ அவுங்களுக்கு கொடுக்கிறேன்.

மங்களூர் சிவா: இது ஒரு மொக்கை பதிவர் போட்டி. இதுல வந்துருக்கவங்க எல்லாருமே வலைப்பதிவர்கள். சில பேர் ரொம்ப மாசமா மொக்கை பதிவு போடறவங்க இருக்காங்க. என்னை மாதிரி புதுசா மொக்கை போடறவங்களும் இருக்காங்க. சீரியசா எழுதிட்டு அப்ப அப்ப மொக்கை போடறவங்களும் இருக்காங்க. சோ இது ஒரு இண்டக்ரிட்டி. மொக்கை போடறதுல ஒரு இண்டகிரிட்டி. நாங்க எல்லாரும் எங்களால முடிஞ்ச அளவுக்கு மொக்கை போடறோம்.

மொக்கை பதிவுனு வந்துடுச்சினா இவுங்க இத்தனை மாசம் மொக்கை போடறாங்க. இவுங்க இப்ப தான் மொக்கை போடறாங்கனு எல்லாம் கிடையாது. அதை நான் புரிஞ்சிக்கிட்டேன்.

அடுத்து வீ லவ் தி ஜட்ஜஸ்.இவுங்களே பெரிய மொக்கை பதிவருங்க. ஒரு பதிவை மொக்கையில்லைனு சொல்றதுக்கு எவ்வளவு கஷ்டப்படறாங்கனு எங்களுக்கு தான் தெரியும். ஒரு பதிவை மொக்கையில்லைனு சொல்றதுக்கு இவுங்க அநியாயத்துக்கு ஃபீல் பண்றாங்க. வீ லவ் யூ செல்லா.. நீங்க ஜீரி... நீங்க ஜீரி.

செந்தழல் ரவி (கடுப்புடன்): அப்ப நாங்க என்ன பூரியா?

மங்களூர் சிவா: நாங்க வெறும் பார்ட்டிசிபண்ட்ஸ் தான். நாங்க நல்லா மொக்கை போடறோமானு சொல்றதுக்கு தான் நீங்க இருக்கீங்க. அதுலயும் நீங்க எல்லாம் மொக்கைல ராஜாக்கள். இது எங்களுக்கு பெருமை...

இவ்வாறு மங்களூர் சிவா பேசிக்கொண்டிருக்கும் போதே அபி அப்பா வெளியேறினார்... பின்னாடி ஒரு தீம் மியூசிக் போடறோம்.

இது தான் அபி அப்பா போட்டியிலிருந்து வெளியேற காரணம். அவரை யாரும் துரத்தவில்லை என போட்டி அமைப்பாளர்கள் கூறினர்.

இது என்னக் கலாட்டான்னு யோசிக்கிறீங்களா.. புரியாதவங்க இந்தச் சுட்டியைத் தட்டிப் பாருங்க அப்புறம் திரும்ப வந்து படிங்க...

Thursday, August 2, 2007

சாமியார் சங்கம்!!!

கப்பி பிறந்த நாள் விழாக்கு நமீதா வராங்கனு நம்ம தள கிளப்பிவிட்ட புரளிய நம்பி ஊர்ல இருக்க எல்லா ஹோட்டலையும் சுத்திட்டு ஏமாந்து போய் கோபமா சங்கத்துக்கு வரார் நம்ம தல கைப்பு.

சங்கத்துக்குள்ள கால வெச்சவுடனே ஜெர்க்காகறாரு தல.

சங்கமே ஒரு ஆசிரமம் கணக்கா மாறியிருக்கு. எல்லா சங்கத்து சிங்கங்களும் காவி கட்டிட்டு பவ்யமா உக்கார்ந்திருக்காங்க.

தல அமைதியா வந்து தளபதியை கூப்பிடறார்.

"சிபி! என்னயா பண்ற? நமீதா வராங்கனு நீ கிளப்பிவிட்டதை நம்பி நாள் முழுக்க மெட்ராஸ்ல இருக்க எல்லா ஹோட்டலுக்கும் திரிஞ்சிட்டு வந்தா இங்க இந்த சங்கத்தையே மாத்தி வைச்சிருக்க"

"தலயானந்தா, இனிமே நீங்க என்னை தளபதினோ, சிபினோ கூப்பிடக்கூடாது. நான் இனிமே சிபியானந்தா. அதே மாதிரி இங்க இருக்கற சிங்கங்களுக்கு எல்லாம் திருநாமம் மாற்றப்பட்டுள்ளது. தேவானந்தா, இளவானந்தா, ராயலானந்தா, புலியானந்தா, வெட்டியானந்தா, ஜொள்ளானந்தா, கப்பியானந்தா, தம்பியானந்தா இப்படிதான் கூப்பிடனும். புரியுதா தலயானந்தா?"

"ஏய் தளபதி! நான் குச்சி ஐஸ் வாங்கி தின்ன கடனை அடைக்க சங்கத்தை அடகு வைச்சது உண்மைதான். அதுக்காக கடனை அடைக்க முடியாம சாமீயாராகறதெல்லாம் டூ மச். ஆமா சொல்லிட்டேன்"

"தல! இது சங்க கடனுக்காக போட்ட உடையில்லை. இந்த மாச அட்லாஸ் வாலிபருக்காக நாம ஏற்று கொண்ட வேடம்" ஜொள்ளானந்தா கண்ணிரூடன் சொல்கிறார்

"யாருப்பா அது எனக்கு தெரியாம?" கைப்ஸ் தீவிர சிந்தனையிலாழ்கிறார்.

சங்கத்து வாசலில் கார் வந்து நிற்கிறது.

"இதோ வந்துட்டார்"னு எல்லாரும் கோரசாக சொல்லி கொண்டே வெளியே செல்கிறார்கள்.

ஜீன்ஸ் பேண்ட், டீ - சர்ட், ரே பேன் க்ளாஸ், தலையில் கோல்டன் கலர் டையுடன் (அந்நியன் ரேமோ போல்) "ஹே டீயூட்ஸ், வாட்ஸ் திஸ் நான்ஸென்ஸ். ஐ ஹேட் திஸ் காவி, யூ நோ" என்று சொல்லி கொண்டே இருங்குகிறார் நம் "KRS"

Sunday, June 10, 2007

Operation கில்மா - 2

போன பதிவ படிச்சி மறந்தவங்களுக்கு...

அவர் சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்ட இல்லை. இப்ப பாரும்மா. சொல்லிவிட்டு இந்த ஐடியில் நுழைகிறார்... muniyamma.paravai@yahoo.com

"என்னண்ணா இது பேரு..."

"paravai.muniyamma ஏற்கனவே எவனோ எடுத்துக்கிட்டான். அதான் இந்த பேரு. நீ கண்டுக்காத" சொல்லிவிட்டு விவா லாகின் செய்து yahoo chat windowவில் நுழைகிறார்...


அங்கே ராம் ஆன்லைனில் இருக்கிறார்... விவா உள்ளே நுழைந்ததும்

நான்கு ஐந்து நபர்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் வருகிறது.. அதில் நம் ராயலும் ஒருவர்

ராயல் : ASL please...

"அண்ணா இது என்ன எங்க ஐத்தான் ABCD தப்பு தப்பா சொல்லுது?"

"தாயி... இது ABCD இல்லை. இதுக்கு Age, Sex, Locationனு பேரு"

"என்னணா இப்படி அசிங்க அசிங்கமா பேசறீங்க"

"தாயி... நீ நினைக்கிற மாதிரி அந்த Sex கிடையாது. ஆணா/பொண்ணானு கேக்கறாரு உங்க ஐத்தான்"

"அதக்கேட்டு என்ன பண்ண போறாக?"

"வயசு, ஊரு தெரிஞ்சாதான் பேசுவாகளாம்"

"அது எதுக்க அவகளுக்கு?"

"இப்ப பாரு தாயி உனக்கே புரியும்"

MP: 20,F,Salem

அண்ணா இது என்ன சேலம்னு போட்டிருக்கீக?

ஆமாந்தாயி.. 20 வயசு பொண்ணா இருந்தாதான் பேசுவாரு. இல்லைனா இண்டர்நெட் பிரச்சனைனு கிளம்பிடுவாங்க.

அண்ணா...எங்க ஐத்தான் நல்லவக. அவுகள இப்படி சொன்னீக அப்பறம் அந்த ஆத்தா மகமாயி உங்கள சும்மாவிட மாட்டா

தாயி... நான் எதுவும் சொல்லல. நீயே பாரு. இனிமே எதுவும் பேசாத. இந்த சேட்டை மட்டும் பாரு


Royal: Hey... u from Salem. Me from Bangalore yaa...

MP: Is it? What are you doing in Bangalore?

Royal: Me??? U know Microsoft???

MP: Yes... very big company

Royal: I am a project manager in Microsoft

இங்க பாரு தாயி... Microsoft Windowsஅ திறந்த காத்து வருமானு கேட்ட பய இப்ப கலர் கலரா ரீலு விடறான் பாத்தியா?

MP: wow... neenga periya aalu thaan poala...

Royal: he he.. athellam illai... en latchiyame Bill Gatesai vida oru roobai athigam sambathikanumnu thaan... BTW, nee enna panra?

நேத்து வியாபாரி பார்த்திருப்பானு நினைக்கிறேன். அடிச்சி விடுடா ராசா...

MP: naan inga Nirmala collegela B.Sc Comp Science padikiren...

Royal: OMG!!! neengalum comp field thaana?

"அண்ணா.. அது என்ன ஓம்ங்?"

"தாயி.. அது ஓம்ங் இல்லை... Oh!!! My God"

"இப்ப எதுக்கு சாமிய கூப்பிடறாக?"

"சாமியையும் கூப்பிடல மாமியையும் கூப்பிடல... அவரு ஃபீல் பண்ணறாராம். ரெண்டு பேருக்கும் இருக்கற ஒத்துமையை நினைச்சி"

"ஓ"

MP: pinna B.Sc Comp Sciencena Computer field illama paddy fieldaa?

Royal: ROFTL... sema humour sense unaku... i like it ya...

அண்ணா.. அது என்ன ரோபல்?

அது ரோபலும் இல்லை கோபாலும் இல்லை.. தரையில விழுந்து விழுந்து சிரிக்கறாகளாம்...

அய்யோ பார்த்து சிரிக்க சொல்லுங்கண்ணா. விழுந்து சிரிக்கும் போது அடிப்பட்டுடப்போகுது

தாயி.. அண்ணன கொலக்காரனாக்காத.

MP: neenga entha technologyla irukeenga?

Royal: naan actuala embedded systemla real time operating systemai implement panrathula iruken... u know thats really high funda... lets talk abt some interesting stuff ya.. un unmaiyana peru enna?

MP: unga perai sonna thaan naan en perai solluven...

Royal: ekapathini viruthar... avar peru thaan en peru

MP: ponnusamy?

Royal: athu yaaru?

MP: enga appa. avaruku enga amma mattum thaan...

Royal: LOL

அண்ணா இப்ப எதுக்கு கொரைக்கறாக?

அது கொரைக்கறதில்லைமா... சத்தம் போட்டு சிரிக்கறாகளாம்

ஓ... எங்க ஐத்தான் எப்பவும் சத்தம் போட்டு தான் சிரிப்பாக. அவருக்கு அப்ப கன்னத்துல வேற குழி விழும் பாருக... பிரபுவே தோத்துடுவாக... அம்புட்டு அழகு

தாயி... வேணாம். என் பொருமைய சோதிக்காத. இப்ப பாரு

MP: unga peru raamaa?

Royal: Wow... sema talentpa nee... eppadi kandupidicha?

MP: athellam enga thiramai.. en pera Akila

Royal: ehhh.... Akilandeswari thaane

MP: Wow... eppadi kandupidichinga?

Royal: athuvaa... en close friend peru kooda Akilandeswari thaan. aana Akhilanu style-a solluva...

MP: ohhh... athaan kandupidichiteengala?

Royal: un peroada Speciality theriyuma unaku?

MP: athu enna speciality?

Royal: Akhilandeswarina intha ulakathaiye paathukaravanganu artham... Akhila Akhila paatu kooda antha arthathatula thaan ezhuthinaanga

MP: kalakareenga... summava Microsoftla velai koduthaanga

Royal: he he... ithu ellam saatharanam... enaku salemla close friend kooda oruthan irukaan... neenga salemla enga?

நல்லா மாட்டினார் உன் மாமன்... அவருக்கு சேலம் சுத்திக்காட்டுவோமா?

டூரா? எங்க மாமாவுக்கு டூர்னா ரொம்ப பிடிக்கும்...

சரி. அப்ப டூர் அடிக்க வெச்சிடுவோம்...

(தொடரும்...)

Thursday, June 7, 2007

Operation கில்மா - 1

விவசாயி வார இறுதி விடுமுறைக்காக மதுரை செல்கிறார். அங்கே இயற்கையன்னையை ரசித்தபடி வரப்போரமாக நடந்துவருகிறார். அவர் வரவுக்காக காத்திருந்த ஒரு பட்டாம்பூச்சி அவரை பார்த்த பரவசத்தில் ஓடி வந்தது (பட்டாம்பூச்சினா பட்டாம்பூச்சியே இல்லை. ஒரு பொண்ணு. நீங்களா புரிஞ்சிக்கனும்.).

"அண்ணா... பெங்களூருல இருந்து தானே வாரீக"

"ஆமாம்மா"

"அவுகள பாத்திகளா?"

"அவுகனா யாருமா?"

"என்னணா! பெங்களூருல இருந்து வாரீக. அவுகள தெரியாதா? அங்க இருக்கற எல்லாருக்கும் அவுகள தெரியும்னு சொன்னாரே. இப்படி சொல்லிபுட்டீக"

"இப்படி மொட்டையா அவுக அவுகனு சொன்னா எப்படி அம்மணி தெரியும்? சும்மா பேர சொல்லு தாயி"

"ஐயோ அவுக பேரெல்லாம் சொல்ல மாட்டேன். நீங்களேதான் கண்டுபிடிக்கனும்"

"சரி ஏதாவது ஒரு க்ளூ கொடு. கண்டுபிடிக்கிறேன்"

"ராவுல ஆராம்பம்... மதியமுல முடிவு"

"ஏன் அம்மணி? இப்படி சொன்னா என்னத்த கண்டுபிடிக்க? வேற ஏதாவது சொல்லுமா"


"திராட்சைக்குள்ள இருந்து ஆரம்பிச்சி மாம்பழத்துல கடைசியா முடியும்"

"அம்மணி என்ன டென்ஷனாக்காத. வீக் எண்ட் ஜாலியா இருக்கலாம்னு தான் பொள்ளாச்சிக்கூட போகாம மதுரை பக்கம் வந்திருக்கேன். நீ என்னனா இப்படி போட்டு கொல்லறீயே. ஒழுங்கா சொல்லும்மா"

"சரி கடைசியா சொல்றேன்...ராகத்துக்கு கால ஒடைச்சா அவுக வருவாக. இப்பவாது கண்டுபிடிங்க"

"பேசாம என் காலை எவனாவது உடைச்சிருந்தாக்கூட நான் நிம்மதியா பெங்களூர்லையே இருந்திருக்கலாம் போல"

"அண்ணா... இப்பவாது கண்டுபிடிங்க ராகுகாலத்துல ஆரம்பிச்சி எமகண்டத்துல முடியும்"

"தாயி... எனக்கு தான் இப்ப செவன் அண்ட் ஆப் ஸ்டார்ட் ஆயிடுச்சினு நினைக்கிறேன்"

"அண்ணா செவன் அப் எல்லாம் இங்க கிடைக்காது...
சரி நீங்க கண்டுபிடிங்க - கைல வில்லுக்கூட வெச்சிருப்பாரே"

"மன்மதனா?"

"அவரு மன்மதன் தான்.. ஆனா அந்த பேர் இல்லை... வில்லு உடைச்சாரே"

"ராமரா?"

"அதேதான். அதுல முதல் ரெண்டு எழுத்து மட்டும்"

"ராமா???"

"ஆமாண்ணா. அவுகளேதான். அவுக பட்டணத்துல எப்படி இருக்காக? என்னையே நினைச்சிட்டு இருக்கறதா எப்பவுமே சொல்லுவாக"

"யாரு. அவரா? எந்நேரமும் கடலை தான் போடறாரு"

"அண்ணா கடலை எல்லாம் இல்லை. நெல்லுதான் இங்க போடுவோம்"

"தாயி நான் அந்த கடலைய சொல்லல. நான் பொண்ணுங்கக்கூட போடற கடலையை சொன்னேன்"

"அப்படினா?"

"இரு தாயி... உனக்கு சொன்னா புரியாது. நேர்லையே காட்டறேன்"

இருவரும் அருகிலிருக்கும் ப்ரௌசிங் செண்டருக்கு செல்கிறார்கள்.

"இங்க பாரும்மா. இது தான் மெசஞ்சர். இப்ப நான் என் பேர்ல உள்ள போறேன்" சொல்லிவிட்டு விவா லாகின் செய்ய உள்ளே ராயல் ஆன்லைனில் இருக்கிறார்...

விவா ராயலுக்கு பிங் செய்கிறார்

விவா: ராயல்.. எப்படிப்பா இருக்க?

ராயல்: நான் ரொம்ப பிஸி... இண்டர்நெட் வேற பிரச்சனை பண்ணுது. ரிலையன்ஸ்காரவங்கள் சரியான ஃபிராடு. நான் அப்பறம் பேசறேனு உங்ககிட்ட

விவா: சரிப்பா... எனக்கும் நேரமாச்சி. நான் கிளம்பறேன். சும்மா மெயில் செக் பண்ணதான் வந்தேன்

ராயல்: பை... have a good day

விவா... லாக் அவுட் செய்கிறார்

அவர் சொன்னதெல்லாம் கேட்டுக்கிட்ட இல்லை. இப்ப பாரும்மா. சொல்லிவிட்டு இந்த ஐடியில் நுழைகிறார்... muniyamma.paravai@yahoo.com

"என்னண்ணா இது பேரு..."

"paravai.muniyamma ஏற்கனவே எவனோ எடுத்துக்கிட்டான். அதான் இந்த பேரு. நீ கண்டுக்காத" சொல்லிவிட்டு விவா லாகின் செய்து yahoo chat windowவில் நுழைகிறார்...


அங்கே ராம் ஆன்லைனில் இருக்கிறார்... விவா உள்ளே நுழைந்ததும்

நான்கு ஐந்து நபர்களிடமிருந்து ரெஸ்பான்ஸ் வருகிறது.. அதில் நம் ராயலும் ஒருவர்

ராயல் : ASL please...

(தொடரும்...)

Tuesday, April 24, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்

முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)

க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...

(தொடரும்...)

(இன்னும் பல படங்கள் இருப்பதால் ஒரே பகுதியில் முடிக்க இயலவில்லை... அடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் காத்திருக்கின்றன)

Thursday, April 19, 2007

டெவில் ஷோ - ராயல் ராம்

மக்களே அடுத்து ஒரு சினிமா பிரபலத்த தான் டெவில் ஷோல கூப்பிடலாம்னு இருந்தோம். தல கூட ரெடியாயிட்டேனு சொன்னாரு. அப்பதான் நம்ம போர்வாள்கிட்ட இருந்து ஒரு போன் நம்ம ராயலுக்கு இன்னைக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லலையானு? சரினு வாழ்த்து சொல்லலாம்னு போன் பண்ணா எனக்கு டெவில் ஷோ போடலைனா நான் பேச மாட்டேனு ஃபீல் பண்ணிட்டாரு. சரினு, அப்படியே டெவில் ஷோக்கு அப்படியே ரெடியாகியாச்சு. இப்ப எல்லாம் நிகழ்ச்சிக்கு போவோம்

கவுண்டர்: "பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராம்"

ராயல்: "மிக்க நன்றி கவுண்ட்ஸ். ஆனா எம் பேர இப்ப வெறும் ராம் இல்லை. "ராயல்" ராம். கெஸட்ல கூட மாத்தியாச்சி."

கவுண்டர்: "அது என்ன ராயலு. நீ என்ன மைசூர் மகாராஜா பேமிலியா இல்லை இங்கிலாந்து எலிசபத் ஃபேமிலியா?"

ராயல்: "நோ நோ நோ நோ. எலி எல்லாம் எங்க வீட்ல இல்லை. எல்லாத்தையும் தம்பி பிடிச்சிட்டு போயி மஞ்சுளாக்கு கொடுத்துட்டான். என் சொந்த ஊர் மதுரை. அதனால பாண்டிய வம்சமா தான் இருக்கும்னு நினைக்கிறேன்"

கவுண்டர்: "ஏன்டா, பாண்டியன் படத்த தியேட்டர்ல பாக்க காசு இல்லாம சன் டீவில பாத்தவன் நீ? நீ ராயல் ஃபேமிலியா? ஏன்டா உனக்கு இந்த ஓவர் பில்டப்। "

ராயல்: "அது இல்லைங்க கவுண்ட்ஸ். ராயல்னு சொன்னா ஒரு ரிச் இருக்குமேனு தான். அதுவுமில்லாம எனக்கு ரிச்சி ரிச்னா ரொம்ப பிடிக்கும் அதான்."

கவுண்டர்: "அது எவன்டா அந்த ரிச்சி ரிச்?"

ராயல்: "ப்ளாக்ல என் ஃப்ரோபைல் போட்டோல இருக்கான் இல்ல.அவன் தான் ரிச்சி ரிச். நான் கூட ஏன் போட்டோ மாத்தினேனு ஒரு பதிவு போட்டேனே. நியாபகமில்லை."

கவுண்டர்: "ஓ! நீ ஏதோ ஒரு பொண்ணுக்கூப்பிட்டு ஃபோரம் போனப்ப இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்து ப்ரோபஸ் பண்ணி, கடைசியா மூணு பேரும் சேர்ந்து மொத்தனாங்கனு போட்டியே அதா? அது எப்படிடா உனக்கு மட்டும் இத்தன ஃபிகர் மாட்டுது?"

ராயல்: "அது நம்ம எழுத்து திறமைய பாத்துதான்."

கவுண்டர்: "டேய்! யாகூ சேட்ல நீ பண்ண அலும்பதான் உங்க போர்வாள் புட்டு புட்டு வெச்சிட்டாரே. இன்னுமும் ஏன்டா உனக்கு இந்த பில்டப்பு."

ராயல்: "ஹி ஹி ஹி..."

கவுண்டர்: "ஆமா அப்பறம் எதுக்கு அமெரிக்கால இருந்து வரவன எல்லாம் கலாய்ச்ச?"

ராயல்: "ஓ அதுவா? கப்பி வரும்போது சாக்லேட் வாங்கிட்டு வர சொன்னேன். அவன் வாங்கிட்டு வரல. அதனால தான். ஹி ஹி ஹி"

கவுண்டர்: "ஏன்டா அந்த ஒன்றையனா சாக்லேட்டுக்கு நீ இவ்வளவு அலும்பு பண்ணிருக்க.ஆமா அப்பறம் மதுரைல உங்க அப்பத்தாக்கிட்ட பெங்களூருக்கு போறதுக்கு பாஸ்போர்ட், வீசா எல்லாம் வாங்கனும்னு சொல்லியிருக்கியாமே. நிஜமாவா?"

ராயல்: "இந்த உண்மையெல்லாம் உங்களுக்கு யாருங்கண்ணா சொன்னா?"

கவுண்டர்: "நீ உங்க ஊர்ல சொல்லிருக்க விஷயமெல்லாம் கொஞ்ச கொஞ்சமா வெளிய வர ஆரம்பிடுச்சி கண்ணா... அப்பறம் எதுக்குடா ஆனா ஊனா ஃபீலிங் ஆகிடற?"

ராயல்: "ஓ! அதுவா??? சின்ன வயசுல இருந்தே யாராவது எதுனா சொன்னா இப்படி ஃபீல் ஆகற மாதிரி ஆக்ட் விடுவேன். உடனே சாக்லேட் வாங்கி கொடுத்துடுவாங்க."

கவுண்ட்ஸ்: "இந்த சாக்லேட் பிரச்சனை பெரும் பிரச்சனையா இருக்கும் போல இருக்கே. ஆமா குஷி படம் பார்த்துட்டு வரும் போது பேய் துரத்துச்சி, நாய் கடிச்சினு எல்லாம் போட்டிருந்தியே அது என்ன மேட்டரு?"

ராயல்: "அது ஒண்ணுமில்லைங்க... என் கூட வந்த என் ஃபிரெண்டுக்கும் எனக்கும் ஓட்ட பந்தயம் வெச்சோம்। அப்ப ஓடும் போது நாய் கடிச்சிடுச்சி. "

கவுண்ட்ஸ்: "டேய் எவண்டா ராத்திரி ஒரு மணிக்கு ஓட்ட பந்தியம் வைப்பான்? இதுக்கு தான் ஆன்லைன் ஆவிகள், ஆவி அம்மணி எல்லாத்தையும் பகைச்சிக்க கூடாதுனு சொன்னது. ஏதோ உன் நல்ல நேரம் நாய் உன்னைய விட்டுவெச்சிடுச்சி..."

ராயல்: "ஆமாங்க கவுண்ட்ஸ். சரிங்க கவுண்ட்ஸ் பர்த்டே அதுவுமா நான் ஆம்பிளைங்க கூட பேசி நான் டைம் வேஸ்ட் பண்ண விரும்பலை. நான் கிளம்பறேன்..."

கவுண்ட்ஸ்: "சரி பொறந்த நாளா இருக்கேனு நானும் உன்னை மன்னிச்சி விடறேன். இந்தா சாக்லேட்டு."

சந்தோஷமாக வாங்கி ஃபிகர்களிடம் கொடுக்க ஓடுகிறார் ராயல் :-)

Friday, March 30, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - போர்வாள் தேவ்

மக்களே போன வாரம் கிரிக்கெட் மேட்ச்ல கொஞ்சம் பிஸியா இருந்ததால டெவில் ஷோக்கு லீவ் விட்டாச்சு... ஏண்டா தோத்தீங்கனு நம்ம திராவிட்கிட்ட கேட்டா நீங்க எங்களுக்காக டெவில் ஷோ போடாம விட்டு கொடுத்ததை பார்த்து மனசு வலிச்சுது அதனால இலங்கைகிட்ட நாங்க விட்டு கொடுத்துட்டோம்னு சொல்றான்.

தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லுது பாருங்க... சரி அத அடுத்த டெவில் ஷோல பார்ப்போம். இப்ப நம்ம நட்சத்திர பதிவர், என்னுடைய சிஷ்யன் கைப்புள்ளய கலாய்க்கற சங்கத்தின் சிங்கம் தேவ் வந்துருக்காரு...

க: "வா தேவு... அது என்ன உன் ப்ளாகுக்கு பேரு சென்னை கச்சேரி? உனக்கு பாட்டு பாட தெரியுமா மேன்??? சொல்லு..."

தேவ்: "அது ஒண்ணுமில்லைங்க கவுண்ட்ஸ்... நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைல தான். நான் முன்னாடி தங்கிருந்த வீட்டு கக்கூஸ்ல தாழ்ப்பாள் கிடையாது... சரினு தினமும் நம்ம கச்சேரி தான். இப்ப புது வீடு வந்தாச்சி. என்ன இருந்தாலும் பழச மறக்ககூடாதுனு என் வலைப்பதிவுக்கு சென்னை கச்சேரினு பேர் வெச்சிட்டேன்!"

க: "அட தேவ் மண்டையா... இதுக்குள்ள இத்தன ரகசியத்தை மறைச்சி வெச்சிருக்கியா நீயி... ஆமாம் நீ என்ன வேலை பாக்கற?"

தேவ்: "நான் சாப்ட்வேர் பீல்ட்ல இருக்கேன்.."

க: "டேய் யாருக்கிட்ட டக்கால்ட்டி விடற??? நீ சென்னைல ஏதோ சாய் சாந்தி தியேட்டர்ல ரீல் ஓட்ற வேலை பாக்கறதா கேள்வி பட்டேன்..."

தேவ்: "இது அநியாயம்... அக்கிரமம்..."

க: "டேய் ஓவர் சவுண்ட் விடாத... அப்பறம் கச்சேரில பாட முடியாம போயிடும்...! ஏன்டா அந்த லீ படத்த உலகத்துல பார்த்த ஒரே ஆள் நீயாதாண்டா இருப்ப?? சரி படம் எப்படினு சத்தியராஜுக்கு போன் பண்ணா, "மாம்ஸ் விஜய் டீ.வில டப்பிங் பண்ணி போட்டிருந்தான். என்னமா சண்டை போடறான் அந்த லீ பய. நம்மல மாதிரி யூத்க்கு பிடிச்ச மாதிரி பறந்து பறந்து சண்டை போடறான் மாம்ஸ். என்ன இருந்தாலும் சைனிஸ் படம் சைனிஸ் படம்தான்" அப்படினு ப்ரூஸ் லீ, ஜெட் லீ படத்த பத்தி பேசறான். அவன் மகன் நடிச்ச அவனே பார்க்க மாட்றான். அந்த படத்தையும் விடாம பார்த்து விமர்சனம் எழுதறனா நீ கண்டிப்பா அந்த தியேட்டர்ல ரீல் சுத்தறவனாத்தானே இருப்ப??."

தேவ்: "மக்கள் பாவம் கஷ்டப்பட கூடாதேனு அந்த கஷ்டத்த நான் ஏத்துக்கிட்டேன்... எங்க தல கைப்ஸ் இந்த மாதிரி பல கஷ்டங்களை அனுபவிச்சிருக்கார்...!"

க: "வாடீ வா... இத்தன நாள் தான் அவன் பேர சொல்லி ஊர ஏமாத்திட்டு இருந்தே? உனக்குனு எழுத சொல்லி ஒரு வாரம் கொடுத்த அதையும் என்னனா அவுட் சோர்ஸ் பண்ணிட்டு இருக்க...??

தேவ்: "நான் அவுங்களுக்குள்ள இருக்கற திறமைய வெளிய கொண்டு வந்துட்டு இருக்கேன்...!!"

க:"இந்த டகால்டி எல்லாம் இங்க வேண்டான்டி... முதல்ல உன் திறமைய வெளிய கொண்டா? அப்பறம் அடுத்தவங்க திறமைய வெளிய கொண்டு வரலாம்!!"

தேவ்: "நான் ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டேனு உங்களுக்கு பொறாமை..."

க: "மக்களே!!! இந்த பாவத்துக்கு எல்லாம் நான் ஆள் இல்லை... இவர் ஸ்டாராயிட்டாராம் உடனே நாலு பேர கேள்வி கேட்டு ஸ்டார் ரிப்போர்ட்டராயிட்டாறாம். என்னுமோ ஸ்டார் டீவி ரிப்போர்ட்டர் கணக்கா பேசிட்டு இருக்கான் பாருங்க... அப்பறம் அது என்னடா பக்கம் 78, பக்கம் 102னு உன் இஷ்டத்துக்கு பேர் வெச்சிருக்க?"

தேவ்: "அதுவா... என் தெருல இருந்த 78ம் நம்பர் வீட்ல இருந்த ஃபிகரத்தான் நான் பத்தாவது படிக்கும் போது ரூட் விட்டுட்டு இருந்தேன். அப்ப எல்லாம் தினமும் அவ வீட்டு முன்னாடி தான் சைக்கிள் எடுத்துட்டு சுத்திட்டு இருப்பேன். அதெல்லாம் ஒரு பொற்காலம்..."

க: "ஏண்டா அது பொற்காலம் மாதிரியா இருக்கு? அது ஒரு கனாக்காலம் ரேஞ்சுக்கு இருக்கேடா... அதனால தான் அதுல உன் கதை, கவுஜ எல்லாம் எழுதி பிலிம் காட்டறயா?"

தேவ்: "ஆமாம்னா... நான் அது அவளுக்காக எழுத நினைத்த கவிதைகள்... ஆனா எதுவும் கொடுக்க முடியாமலே போச்சு!!"

க: "ஓ நோ!!! உனக்குள்ள இவ்வளவு சோகம் இருக்கா??? ஆமாம் உனக்கும் இந்த சாம்பு, இரவுக்கழுகு குழுவுக்கும் என்ன சம்பந்தம்? எல்லா பதிவுளையும் அவுங்கள பத்தியே கேள்வி கேட்டுட்டு இருக்க?"

தேவ்: "கவுண்ட்ஸ்... அப்படியெல்லாம் இல்லை, இந்த புலிய பத்தி எல்லாம் கிசு கிசு எழுதி பெரிய ஆள் ஆக்கறாங்க. அப்படியே நம்மலையுல் எழுதினா பெரிய ஸ்டாராயிடலாம் இல்லை.. அதான் பாக்கறேன்!"

க: "இந்த சினிமாகாரவங்க தான் இப்படி கெட்டு போயிருக்காங்கனா... நீங்களுமா??? சரி தேவு.. இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு ஓடி போயிடு... அது என்ன போர் வாள்??? நீ என்னைக்காவது போர்ல வாள் எடுத்து சண்டை போட்டிருக்கியா???"

தேவ்: "ஓ அதுவா??? சண்டைனு வந்துட்டா நான் வாள் வாள்னு கத்திட்டு இருப்பேன்... அது அப்படியே போர் வாளாயிடுச்சி.. இத மட்டும் வெளிய சொல்லிடாதீங்கண்ணா... நான் பெரிய லெவல்ல பில்ட் அப் கொடுத்து வெச்சிருக்கேன்..."

சொல்லிவிட்டு அடுத்த பேட்டி எடுக்க ஓடிவிடுகிறார் போர் வாள்!!!

Monday, March 19, 2007

இரு துருவம் - 3

பாகம் - 2

நண்பர்களே, இவ்வளவு லேட்டா இந்த பாகத்தை போடறதுக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்கறேன்... ஆணி ரொம்ப அதிகம்.

இனி கதைக்கு போகலாம்...

.......................................................

ஆடிட்டோரியத்திற்குள் பரபரப்பாக சுற்றி கொண்டிருந்தான் சரவணன். ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு வெளியே வந்தான். அங்கே வாசலில் அருமையாக இடப்பட்டிருந்த கோலத்தை பார்த்து ஆச்சரியமானான். அதன் அருகே இருந்தவர்களிடம் சரண்யாவை பற்றி விசாரித்தான். அவள் கோலம் போட்டு கை, கால் எல்லாம் கலரானதால் ஹாஸ்டலுக்கு சென்றிருக்கிறாள் என தெரிய வந்தது.

சரவணனும் மாணவர் விடுதிக்கு வேகமாக சென்று குளித்து ஃப்ரெஷாக வந்து சேர்ந்தான். அவன் வந்து சிறிது நேரத்திலே சீப் கெஸ்ட் வந்து சேர்ந்தார். ஒரு வழியாக விழா நல்ல படியாக முடிந்து சீப் கெஸ்டை காரில் ஏற்றி அனுப்பிவிட்டு வரும் போது வாசலில் கோலத்தை பார்த்தவுடன் தான் அவனுக்கு சரண்யா ஞாபகம் வந்தது.

அவளை தேடிய பிறகு தான் அவனுக்கு முதலாமாண்டு மாணவர்கள் டிப்பார்ட்மெண்ட் நிகழ்ச்சிகளில் பங்கு பெறவில்லை என்ற ஞாபகமே வந்தது. சரி போன் செய்து சொல்லிவிடலாம் என்று அருகிலிருக்கும் ஒரு ரூபாய் பூத்திலிருந்து லேடிஸ் ஹாஸ்டலுக்கு போன் செய்தான்.

போனை எடுத்த மாணவியிடம்

"ஹோலோ! ஃபர்ஸ்ட் இயர் சரண்யா இருக்காங்களா?"

"நீங்க யார் பேசறது?"

"நான் அவுங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயிண்ட் செக்ரட்டரி சரவணன் பேசறேன். கொஞ்சம் கூப்பிட முடியுமா?"

"டேய் சரவணா! நான் தான் வித்யா பேசறேன். எதுக்குடா ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுக்கு ரூட்விடற?"

வித்யா சரவணின் க்ளாஸ் மேட்...

"ஏய் லூசு... நீதானா? ரூட்டும் இல்ல ஒண்ணும் இல்லை. சும்மா தேங்க்ஸ் சொல்லலாம்னு கூப்பிட்டேன்"

"எதுக்கு தேங்க்ஸ் சொல்லனும். ஏன்கிட்ட சொல்லு அப்பதான் கூப்பிடவேன்"

"முதல்ல கூப்பிடு அப்பறம் சொல்றேன். சீக்கிரம் கால் கட்டாயிடும். இன்னும் 120 செகண்ட்ஸ் தான் இருக்கு. என்கிட்ட வேற காயின் இல்லை"

"சரி இரு கூப்பிடறேன்" சொல்லிவிட்டு
"ஃபர்ஸ்ட் இயர் சரண்யா... போன்" என்று சத்தமாக கத்தினாள். உடனே முதல் மாடியில் "சரண்யா போன்... சரண்யா போன்" என்று சத்தம் வந்தது.

"டேய் கூப்பிட்டுட்டேன். இப்ப சொல்லு"

"ஒண்ணும் இல்ல. இன்னைக்கு டிப்பார்ட்மெண்ட் ஃபங்க்ஷனுக்கு ஹெல்ப் பண்ணா. அதுக்கு தான் தேங்க்ஸ் சொல்லலாம்னு கூப்பிட்டேன்"

"டேய். ஏன்டா நாங்களும் தான் வேலை செஞ்சோம் எங்களுக்கு இப்படி போன் பண்ணி சொன்னியா என்ன?"

"லூசா நீ... நம்ம டிப்பார்ட்மெண்ட் ஃபங்ஷனுக்கு நீ பண்ண. அவளுக்கு என்ன டிப்பார்ட்மெண்ட் எல்லாம் இருக்கு. சரி நீ முதல்ல அவள்ட குடு"

சரியான நேரத்தில் வந்து நின்றாள் சரண்யா.

அவளிடம் போனை கொடுத்துவிட்டு "பேசி முடிச்சிட்டு செகண்ட் ஃப்ளோர்ல ரூம் நம்பர் 207க்கு வா" சொல்லிவிட்டு வேகமாக சென்றுவிட்டாள் வித்யா.

"ஹலோ" பயம் நிறைந்த குரளில் பேசினாள் சரண்யா.

"ஹலோ நான் சரவணன் பேசறேன்"

"எந்த சரவணன்? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே"

"ஹலோ நான் உங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயிண்ட் செக்ரட்டரி"

"ஓ!!! சாரி சார்... சொல்லுங்க"

"இந்த சார் மோர் எல்லாம் செகண்ட் இயர் பசங்களோட வெச்சிக்கோ! கோலம் ரொம்ப நல்லா இருந்துச்சி"

"தேங்க்ஸ்"

"அது நான் தான் சொல்லனும். தேங்க்ஸ். சரி அதுக்குத்தான் போன் பண்ணேன். பை" சொல்லிவிட்டு போனை வைத்தான் சரவணன்.

அடுத்த நாள் காலை இண்டர்வெலில் காண்டினில் நண்பர்களுடன் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருந்தான் சரவணன்.

அவனை நோக்கி வந்தாள் சரண்யா. "சார் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசனும்" அவள் சொன்னதை கேட்டதும் அவன் நண்பர்கள் அனைவரும் சரவணனை ஒரு மாதிரி பார்த்தனர். அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

"இருங்கடா வரேன்" சொல்லிவிட்டு கேண்டினை விட்டு வெளியே வந்தான் சரவணன்.

"நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்லை. நான் ரொம்ப நல்ல குடும்பத்து பொண்ணு. இந்த மாதிரி விஷயமெல்லாம் தெரிஞ்சா எங்க வீட்ல என்னை கொன்னு போட்டுடுவாங்க. ப்ளீஸ் இனிமே என்கிட்ட பேசாதீங்க" சொல்லிவிட்டு வேகமாக க்ளாஸ் ரூமை நோக்கி நடந்தாள் சரண்யா...

அவளை குழப்பத்துடன் பார்த்து கொண்டிருந்தான் சரவணன்...

(தொடரும்...)

Tuesday, February 20, 2007

இரு துருவம் - 2

இரு துருவம் முதல் பகுதி படிக்க

"டேய் குமாரு! இப்பவே கட்டிக்கப்போற பொண்ண பத்தரமா சைக்கிள்ல வெச்சி ஓட்டிட்டு வர" குமார் சைக்கிளை நிறுத்தியவுடனே சொன்னார் பக்கத்துவீட்டு தாத்தா. அதை கேட்டு சிரித்து கொண்டே வீட்டிற்குள் ஓடினாள் சரண்யா.

"அதெல்லாம் இல்லை" சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றான் குமார்.

அங்கே அத்தையின் மடியில் போய் உக்கார்ந்து கொண்டாள் சரண்யா. நேராக அம்மாவிடம் வந்தான் குமார்.

"அம்மா! ஏன் அந்த தாத்தா எப்ப பார்த்தாலும் இப்படியே சொல்லிட்டு இருக்காரு? இதுக்கு தான் நான் இவளை கூப்பிட்டு வர போக மாட்டேனு சொன்னேன்" கொபம் கலந்த குரலில் கேட்டான் குமார்.

"அவர் கிடக்கறாரு போடா. பாட்டி உள்ள சாப்பாடு போட்டு வெச்சிருக்கு, நீ போய் சாப்பிடு"

குமார், உள்ளே சென்று பாட்டியிடம் சாப்பிட ஆரம்பித்தான். வெளியே அத்தையுடன் கொஞ்சி கொண்டிருந்தாள் சரண்யா.

சரண்யா, குமாரின் ஒன்று விட்ட மாமன் மகள். குமாரின் அம்மாவிற்கும் கூட பிறந்தவர்கள் யாரும் அருகில் இல்லாததால் இந்த அண்ணனையே சொந்த அண்ணன் போலவும், சரண்யாவை மருமகள் போலவும் பார்த்து கொண்டாள். அவளை வீட்டிற்கு மருமகளாக்கும் திட்டமும் அவளுக்கு இருந்தது. சரண்யாவின் அப்பாவிற்கும் தங்கை பையனுக்கு கொடுத்தால் பிரச்சனையில்லை என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் குமார் வசிக்கும் தெருவிற்கு பக்கத்து தெருவிலே இருந்தனர்.

சரண்யாவும், குமாரும் ஒரே பள்ளியிலே படித்து வந்தனர். குமார் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான், சரண்யா மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். பள்ளிவிட்டு இருவரும் ஒன்றாக வந்து கொண்டிருந்தனர்.

"இங்க பாரு, இனிமே என்னை அண்ணனுதான் கூப்பிடனும். புரியுதா? மாமானு எல்லாம் கூப்பிட கூடாது" குமார் சொல்லி கொண்டு வந்தான்.

"சரி" தலையசைத்தாள் சரண்யா.

சரண்யா குமாரை அண்ணா என்று அழைப்பதை பார்த்துவிட்டாள் குமாரின் பாட்டி.

"ஏன்டி யாராவது அத்தை பையனை அண்ணானு கூப்பிடுவாங்களா? மாமானு தான் கூப்பிடனும். சரியா?" விளக்கி கொண்டிருந்தாள் பாட்டி.

"பாட்டி நான் தான் அண்ணானு கூப்பிட சொன்னேன். பள்ளி கூடத்துல மாமானு கூப்பிட்டா பசங்க எல்லாம் கேலி பண்றாங்க. இவ ஒண்ணும் என்னை மாமானு எல்லாம் கூப்பிட வேண்டாம். அண்ணானு கூப்பிட்டாலே போதும்" வேகமாக சொன்னான் குமார். பாட்டி எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை.

.........................................


சரவணன் பரபரப்பாக சுற்றி கொண்டிருந்தான். அன்று அவன் டிப்பார்ட்மெண்ட் துவக்க விழா. அவன் டிப்பார்ட்மெண்ட் ஜாயின் செக்ரட்டரி என்பதால் முன் நின்று வேலை பார்த்து கொண்டிருந்தான்.

"சார்! இன்னைக்கு எங்க டிப்பார்ட்மெண்ட் இனாகரேஷன் ஃபங்ஷன். கொஞ்சம் சேர் எடுத்து போட ஆள் வேணும். ஒரு பத்து பசங்களை மட்டும் அனுப்ப முடியுமா?" எலக்ட்ரிக்கல் லேப் ஆசிரியரிடம் கெஞ்சி கொண்டிருந்தான் சரவணன்.

"அதேல்லாம் முடியாதுப்பா. உங்க பசங்களை வெச்சியே பண்ணிக்கோங்க. செகண்ட் இயர் பசங்கதான் சேர் எடுத்து போடணுமா?" சீரியஸாக சொல்லி கொண்டிருந்தார் அந்த ஆசிரியர். அவரிடம் விவாதிக்க மனமில்லாமல் டிப்பார்ட்மெண்டை நோக்கி நடந்தான் சரவணன்.

உள்ளே சென்று HODயை பார்த்தான்.

"சார் நம்ம செகண்ட் இயர் பசங்களுக்கு இன்னைக்கு எலக்ட்ரிக்கல் லேப். அந்த சார் விட மாட்றேனு அடம் பிடிக்கிறாரு. வேலை செய்ய பசங்க கொஞ்ச பேர் வேணும். நீங்க ஏதாவது சொல்லிவிடுங்க சார்" கோபமாக சொன்னான் சரவணன்.

"அதெல்லாம் வேணாம்பா. நீ நம்ம ஃபர்ஸ்ட் இயர் பசங்களை கூப்பிட்டு போ. நான் சொல்லிக்கறேன்" பொறுமையாக சொன்னார் HOD.

முதலமாண்டு மாணவர்களின் வகுப்பிற்குள் சென்றான் சரவணன். உள்ளே எந்த ஆசிரியரும் இல்லாத்தால் மாணவர்கள் தொண தொணவென்று பேசி கொண்டிருந்தார்கள். சரவணனை பார்த்ததும் அமைதியாகிவிட்டார்கள்.

"ஹாய் ஜினியர்ஸ். நான் உங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயின் செக்ரெட்டரி. இன்னைக்கு நம்ம டிப்பார்ட்மெண்ட் இன்னாகரேஷன் ஃபங்ஷன். எனக்கு ஹெல்ப் பண்ண ஒரு பத்து பேர் வேணும். யார் வறீங்க?" அவன் கேட்டு முடித்ததும் வகுப்பு மேலும் அமைதியானது.

"வரவங்களுக்கு ஓ.டி இருக்கு" இதை அவன் சொன்னவுடன் உடனே ஒரு இருபது மாணவர்கள் எழுந்தனர்.

"சரி நீங்க பத்து பேர் மட்டும் வாங்க" முதலிலிருந்த பத்து பேரை பார்த்து சொன்னான்.

"அப்பறம் அந்த ரங்கோலி போட ஒரு 4-5 பொண்ணுங்க வேணும். யாருக்கு போட தெரியும்" அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அன்று அவன் பார்த்த பேசிய அந்த பெண் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அவள் அருகே சென்றான்.

"உனக்கு கோலம் போட வருமா?"

"ம்ம்... ஆனா ரங்கோலி எல்லாம் தெரியாது"

"சரி. நீ உன் ஃபிரெண்ட்ஸ் 4 பேரை கூப்பிட்டு ஆடிட்டோரியம் வந்துடு" அவன் சொன்னவுடன் அவள் திரு திருவென்று முழித்து கொண்டிருந்தாள்.

"ஆமாம். உன் பேரு என்ன?"

"சரண்யா..."

(தொடரும்...)

Tuesday, February 13, 2007

இரு துருவம்

"சார் வர சொன்னீங்களாமே... அட்டேண்டர் சொன்னாரு" ஹெச்.ஓ.டி முன் நின்றிருந்தான் சரவணன்.

"இன்னைக்கு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட்ஸ் ஜாயின் பண்றாங்கனு தெரியும் இல்லை"

"தெரியும் சார்" அமைதியாக சொன்னான் சரவணன்.

"நம்ம பசங்க யாரையும் ராகிங்க்ல இன்வால்வ் ஆக வேண்டாம்னு சொல்லு. போன வருஷம் அதிகமா மெக்கானிக்கல் பசங்களை சஸ்பெண்ட் பண்ணிட்டோம்னு அந்த டிப்பார்ட்மெண்ட் ஹெ.ஓ.டீ கடுப்புல இருக்காரு. நம்ம பசங்க யார் மாட்டினாலும் கண்டிப்பா சஸ்பெண்ட் தான். புது ஸ்க்வாட்ல அந்த டிப்பார்ட்மெண்ட் வாத்தியாருங்க தான் அதிகம். புரிஞ்சிதா?"

"யெஸ் சார்"

"அப்பறம் யார் மாட்டினாலும் உங்களுக்காக நான் பேசமாட்டேன்... போய் உங்க ஜூனியர்ஸ்கிட்ட சொல்லிடு"

ஹெச்.ஓ.டீ அறையிலிருந்து வெளியே வந்தான் சரவணன்.

சரவணன் கம்ப்யூட்டர்ஸ் டிப்பார்ட்மெண்டில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவன். அந்த டிப்பார்ட்மெண்டின் ஜாயிண்ட் செக்ரட்டரி அவன். படிப்பிலும் சுட்டி, ஆசிரியர்களிடமும் நல்ல பேர். அதே சமயம் காலேஜ் மாணவர்களுக்கே இருக்கும் துடிப்பும், குறும்பும் அவனிடம் இருந்தது.

அவன் செகண்ட் இயர் க்ளாஸ் ரூமிற்குள் நுழையும் போது அங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் இருந்தனர். பாதி மாணவர்கள் கோழி திருடியவர்கள் போல் திருட்டு முழி முழித்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் முதலாமாண்டு மாணவர்கள் என்பது அவர்கள் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது.

முதல் பெஞ்சிலேயே டேபிள் மேல் இருவர் மட்டும் டெஸ்க் ஓரத்தில் அமர்ந்திருக்க அவர்கள் முன் ஒரு பெண் நின்றிருந்தாள். நேராக அவர்களிடம் அவன் செல்ல...

டெஸ்க் மேல் அமர்ந்திருந்தவர்கள் கீழே இறங்கினர்.

"என்னடா ரேகிங்கா?"

"இல்லைனா... சும்மா..." அப்படியே வழிந்தான் ஒருவன்

"ஏன்ணா நீங்க பண்ணாத தான்னா நாங்க பண்றோம்" என்று பம்மி கொண்டே சொன்னான் மற்றொருவன்

அந்த பெண்ணை பார்த்தான் சரவணன். அவள் அழுது முகம் சிவந்திருந்தது.

"எந்த டிப்பார்ட்மெண்ட்?"

"கம்ப்யூட்டர் சயின்ஸ்" அவள் குரல் அழுகையோடு வந்தது.

"சரி நீ கிளம்பு" சொல்லிவிட்டு மற்ற அனைவரையும் பார்த்தான்...

"இங்க ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூண்ட்ஸ் யார் இருந்தாலும் உடனே வெளிய போகலாம். ஹெச்.ஓ.டி இப்ப இங்க வருவாரு. உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்"

அவன் சொல்லியவுடன் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு 10 - 15 பேர் வெளியே சென்றனர்.

"ஏன்டா முதல் நாளே ராகிங் பண்ணனுமா? அதுலயும் பொண்ணுங்கள கூப்பிட்டு பண்றீங்க. அறிவு இல்லை. இன்னைக்கு எப்படியும் ரெய்ட் வருவாங்கனு தெரியாதா? மாட்னா சஸ்பெண்ட் தான் அப்பறம் யாராலையும் காப்பாத்த முடியாது" அவன் டென்ஷனாக சொல்லி கொண்டிருந்தான்.

"ஏன்னா நீங்க மட்டும் ரொம்ப நல்லவர் மாதிரி பேசறீங்க? போன வருஷம் எங்களை எப்படி பண்ணீங்க?" சரவணனிடம் போன வருடம் கிரிக்கெட் மேட்சில் சத்தம் போட்டு அடி வாங்கிய ஒருவன் பேசினான்.

"டேய்... உங்களை ரேகிங் பண்ணாதீங்கனு சொல்லல. எப்பவுமே முதல் ஒரு மாசத்துக்கு யாரடா சஸ்பெண்ட் பண்ணலாம்னு திரியுவானுங்க. அப்ப மாட்டிக்கிட்டா சங்கு தான். மோர் ஓவர் பொண்ணுங்களை எப்பவுமே பசங்க ரேக் பண்றது தப்பு. அத ஈவ் டீசிங் கேஸ்லையும் போட்டுவிட்டுடுவாங்க. உங்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசக்கூட முடியாம போயிடும். ஜாக்கிரதையா இருக்க சொல்லி ஹெச்.ஓ.டி சொல்லிருக்காரு. இதுக்கு மேல பண்ணா உங்களை யாரும் காப்பாத்த மாட்டோம்" சொல்லிவிட்டு அவன் வெளியே வந்தான்.

அந்த காரிடரின் இறுதியில் அந்த பெண் நின்றிருந்தாள். அழுது சிவந்து போன முகம்.

"ரொம்ப தேங்க்ஸ்" அவளாகவே வந்து பேசியது அவனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

"சரி... முதல்ல போய் முகம் கழுவிட்டு வீட்டுக்கு கிளம்பு"

"நான் ஹாஸ்டல்ல இருக்கேன்" வருத்தமாக சொன்னாள் அவள்.

"ஓ"

" நீங்க தேர்ட் இயர் தானே?" கொஞ்சம் அப்பாவியாக கேட்டாள்.

"ஆமாம்! அப்பறம் நீ அழுவற மாதிரி அப்படி என்ன கேட்டானுங்க?"

"பேர் என்னனு கேட்டாங்க?"

"அப்பறம்?"

"அவ்ளோ தான் கேட்டாங்க" அப்பாவியாக சொன்னாள்.

"அதுக்கு எதுக்கு அழுத?"

"அழுதா அப்பறம் எதுவும் கேக்க மாட்டாங்க இல்லை.. அதனால தான்..." சொல்லிவிட்டு சிரித்து கொண்டே ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தொடரும்...