Friday, August 31, 2007

வ.வா.சங்கத்துக்குப் போட்டியா ச.சா.சங்கம்!

தங்கங்களே! நாளைய தலைவர்களே!
தங்கங்களே! சங்கத்துச் சிங்கங்களே!
அட்லாஸ் மாசம் இன்னியோட முடியுது! உத்தரவு வாங்கிக்கறேன்!

எனக்கு பள்ளிக் கூடத்துலேயே அட்லாஸ்-ன்னா பயம்!
எங்கேயோ ரோமாபுரியில் இருக்குற ஒரு குக்கிராமத்தை, அட்லாஸ்ல எந்தப் பக்கத்துக்குப் போயித் தேடிக் கண்டுபுடிக்கறதுன்னு ஒரு பயம் வந்துடும்!
வீட்டில் என்றால் பையத் தேடிக்கலாம்! ஆனாப் பள்ளியில் இந்த ஷீலா மிஸ் இருந்தாங்க பாருங்க!
ச்சே...ரொம்ப மோசம்! ஒத்தை மல்லிப்பூ வச்சிக்கிட்டு ரொம்ப அழகா வருவாங்க. கொஞ்சம் கொஞ்சம் சிம்ரன் லுக்!

அவங்க எப்பமே என்னையத் தான் வகுப்பில் பதில் சொல்லச் சொல்லுவாங்க! அதுவும் போர்டில் தொங்கும் ஒரு பெரிய அட்லாஸ் மேப்பில் தேடிக் கண்டுபிடிக்கச் சொல்லுவாய்ங்க!
க்ளாஸ் பொண்ணுங்க முன்னாடி போர்டுக்குப் போயித் தேடணும்!
சில சமயம் டக்குன்னு ஊரு அகப்படாது! மேப்பில் தடவு தடவுன்னு தடவறது பார்த்து, ஆல் கேர்ள்ஸ் ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாய்ங்க! அய்யோடா சாமீ! :-)

ஆனா இந்த வ.வா.ச அட்லாஸ்-ல அந்த மாதிரிப் ப்ரச்சினை எல்லாம் எதுவும் இல்லப்பா! ஜூப்பரா இருந்திச்சு! :-))
மாதவிப் பந்தல் பதிவெல்லாம் அரை மணி, ஒரு மணியில் எழுதிடலாம்!
இது போல் வாய் விட்டுச் சிரிக்கும் பதிவு எழுதத் தானுங்கண்ணா பெண்டு கழன்டிடுச்சு! :-))
நீங்க எல்லாம் எப்படித் தான் அசால்டா வெளுத்து வாங்கறீங்களோ!
சரி பிஸ்துங்க, நம்ம சங்கத்துச் சிங்கங்கள் எல்லாம்! - நன்றி! நன்றி!

ஒங்க அன்புக்கும் ஆதரவுக்கும் வெறுமனே "நன்றி"-ன்னு மட்டும் சொல்லிட்டுப் போக முடியுமா? அதான் என்னால முடிஞ்ச ஒரு கைங்கர்யம்!
ஒரு போட்டிச் சங்கம்! தொடங்கியாச்சு!
ச.சா.சங்கம்! - ஆன்மீகப் பதிவர்களுக்கு 0.33% ரிசர்வேசன் உண்டு! :-)

சங்கத்தின் முதல் உறுப்பினர், நீதிபதி பாஸ்டன் பாலாஜி! (snapjudge ப்பா) !
இவர் ஒரு ஆண்மீகப் புயல்! ஆண்மீகத் தல! எப்படின்னு கேக்கறீங்களா?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பத்தி என்னமா ஒரு போஸ்ட் போட்டாரு! அவரை முதல் உறுப்பினராக அடைவதில் சங்கம் பெருமை கொள்கிறது!

சங்கத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்,
கொள்கை பரப்புச் செயலாளர் (பெண்கள் மட்டுமே!),
மற்றும் மாவட்டம், வட்டம் - எல்லாப் பதவிகளும் நிரப்பப் படாமல் உள்ளது! பின்னூட்டத்தில் விண்ணப்பம் செய்யுங்கள்! உடனே சிங்கிள் விண்டோவில் வழங்கப்படும்!
சங்கத்தின் நிரந்தர முதல்வர் பதவிக்கு மட்டும் யாரும் விண்ணப்பம் செய்ய வேண்டாம்! அது எங்கள் ஜிரா அண்ணனுக்கு மட்டுமே! மட்டுமே!! மட்டுமே!!!


எல்லாம் சரி...அது என்னடா அது ச.சா.சங்கம்?
சபலப்"படாத" சாமியார்கள் சங்கம்! ச்ச்சே....இல்லை இல்லை!!

சபலப்படும் சாமியார்கள் சங்கம்!
ச.சா.ச! வாழ்க! வாழ்க!!


எல்லோருக்கும் மங்களம் உண்டாகட்டும்!!!



கடவுளையே கலாய்க்கிற உரிமை நாமக்கல் சிபிக்கா? நற்றமிழுக்கா??

சிவபெருமான் முக்கண்ணனா? - யார் சொன்னா? அரைக் கண்ணு தான்!
பெருமாள் உலகத்தையே தாங்குறாரா? - யார் சொன்னா? - ஒரு ஈயைக் கூடத் தாங்க முடியலை அவரால!


சென்ற மதுரைப் பதிவில்,
நண்பர் குமரன் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தாரு!
//இது என்ன ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனுசனைக் கடிக்கிறதும்பாங்க;
நீங்க ஆளுங்களை கலாய்க்கிறத விட்டுட்டு ஊரைக் கலாய்க்கத் தொடங்கியிருக்கீங்க?//
அவரு இந்தப் பதிவுக்கு வந்து, இன்னொன்னு சொல்றதுக்குள்ள, நானே சொல்லிடறேன்...."ஹூம்....இப்போ கடவுளையே கலாய்க்கும் டைமா?"

.......அச்சோ, கடவுளைக் கலாய்ப்பது நான் இல்லீங்க! தமிழ் இலக்கியம் தான்!
தளபதி சிபி, கலாய்த்தல் திணையைத் துவங்கினாரே!
எங்கிருந்துன்னு இப்ப தெரியுதா? எல்லாம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில் இருந்து தான்! :-)



ஆன்மீகப் பதிவர் ஒருவரைச் சங்கத்தில் கூப்பிட்டாலும் கூப்பிட்டாக!
பெருமாளைப் பற்றிச் சங்கத்தில் ஒன்னுமே சொல்லாமப் போனா எப்படி? நாளையோட அடியேன் அட்லாஸ் மாதமும் முடியுது! அதுக்குள்ளாற சுவாமியின் திருமுக மண்டலத்தை ஒரு வவாச பதிவிலாச்சும் போடாமப் போனா எப்படி? :-))

அதுக்காக நான் திருப்பதி பிரம்மோற்சவத்தை வவாச-வில் போட முடியுமா? அந்தப் பாலாஜி சும்மா விட்டாலும், இந்த வெட்டி பாலாஜி சும்மா வுட மாட்டாரே!
வவாச-வில் நகைச்சுவையோட கலந்து வேணும்னா எழுதலாம்! அதான் இந்தக் கலாய்த்தல் ஐடியா! சங்கத்துக்குக் காவி பெயிண்ட் அடிக்கும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஒரு விக்ரமாதித்தன்....இதோ!

வைகைப்புயல், சின்னக் கலைவாணர் என்று பல பட்டப் பெயர்கள் தமிழ்ச் சினிமாவில் இருக்கு! அதே போல் நகைச்சுவைச் செம்மல் ஒருத்தர், தமிழ் இலக்கியத்திலும் இருக்காரு! ஓகோ மேகம் வந்ததோ என்று அவரைப் பற்றிப் பாடலாம்.
சாதாரண மேகம் இல்ல அவர். கருத்த மேகம்! சிரிப்பு மேகம்!
ஒரு பொண்ணை டாவடிச்சி, லவ்ஸ் பண்ணி, அவளுக்காகத் திருவரங்கத்தில் சுடச்சுடக் கிடைக்கும் நெய் தோசையை விட்டு விட்டு, பொண்ணு பின்னாடி ஓடியாந்தாராம்!
இந்நேரம் கண்டு புடிச்சிருப்பீங்களே யார் என்று! - அவரே தான்! கவி காளமேகம்!!!


சிவபெருமானுக்கு எத்தனை கண்கள்?
பொதுவாச் சொல்லறதுன்னா முக்கண்ணன்; திருமுகத்தில் இரு கண்ணும், நெற்றியில் ஒரு கண்ணுமாய் மூன்று கண்கள்!
ஆனாப் பாருங்க, இல்லவே இல்லை, என்று சாதிக்கிறார் காளமேகம்!
சரி எத்தனை கண்ணுன்னு நீயே சொல்லுப்பா என்று கேட்டால், அரைக் கண்ணு தான் என்கிறார்!

துரைக்கண்ணு தெரியும்; அது என்னா அரைக்கண்ணு?
இது என்ன சின்னபுள்ளத்தனமா-ல்ல இருக்கு? சில பேரை ஒன்றரைக் கண்ணுன்னு கேலி பண்ணுவாங்க! ஆனா, அது என்னா அரைக்கண்ணு? அவர் சொல்ற கணக்கைப் பாருங்க!

சிவபெருமானில் சரி பாதி அன்னை பார்வதி.
அப்படின்னா, இருக்குற மூன்று கண்ணில், சரி பாதியான ஒன்றரைக் கண் பார்வதிக்குச் சொந்தம்!
அப்ப மீதி இருப்பது ஒன்றரைக் கண் தான்! ஆனா அங்கேயும் விடமாட்டங்கறாரு நம்ம காளமேகம்! அதுல ஒரு கண்ணு, கண்ணப்ப நாயனார் தன்னுடையதைப் பிடுங்கி வைத்த கண்!

அப்படிப் பாத்தா, ஒன்றரை கண்ணில் ஒரு கண்ணு, கண்ணப்பருடையது!
அப்ப, பாக்கி எவ்ளோ இருக்கு? - அரைக் கண்ணு தான்!
எனவே சிவபிரானின் ஒரிஜினல் கண், அரைக் கண் மட்டும் தான் என்று சாதிக்கிறாரு காளமேகம்! :-)))
முக்கண்ணன் என்றுஅரனை முன்னோர் மொழிந்திடுவர்
அக்கண்ணற்கு உள்ளது அரைக்கண்ணே - மிக்க
உமையாள்கண் ஒன்றரை மற்றுஊன்வேடன் கண்ஒன்று
அமையும் இதனால்என்று அறி.

பாருங்க, கவிஞருக்கு என்னமா கலாய்த்தல் தெறமை!

அன்னிக்கு நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே-ன்னு சொன்னாரு ஒருத்தரு! இங்க என்னடான்னா, அதுக்கும் வழி கொடுக்காம, முக்கண்ணனை அரைக்கண்ணன் ஆக்கிட்டாரு காளமேகம்!
இப்படி இறைவனிடமே கலாய்த்து விளையாடும் உரிமை தெய்வத் தமிழுக்கு அல்லால் வேறு ஏது?





சரி சிவனை மட்டும் கலாய்த்து விட்டுப் பெருமாளை விட்டுட்டா?
அது வேற இன்னொரு ப்ப்ப்ப்பெரீய்ய்ய்ய்ய்ய் சண்டையாப் போயிடுமே, பதிவுலகில்! - நம்ம ஜிரா மேல ஒரு பயம், காளமேகத்துக்கு அப்பவே இருந்திருக்கு போல! :-)
பிறப்பால் வைணவர் - காதலுக்காகச் சைவர் - அப்பறம் திருவானைக்கா அம்பாளின் உச்சிஷ்டமான, எச்சில் வெற்றிலையை உண்டதால், ஆசு கவி என்று புகழ் பெற்ற காளமேகம்!

அந்த ஆசு கவியைப் பார்த்து,
"உன்னால ஈ ஏறி மலை குலுங்கியதாகப் பாட முடியுமா டோய்?",
என்று சவால் விட்டார் ஒரு புலவர். அந்தக் காலத்து இலக்கிய அரசியல்-ல இதெல்லாம் சகஜம்! ஒருத்தர் நல்ல திறமையால முன்னுக்கு வந்துட்டாருன்னா அதைப் பார்த்து ஏற்கனவே இருந்தவங்களுக்குப் பொறாமை!

அறிவால் ஆசுகவியை அடக்கவும் முடியலை! என்னா தான் செய்யறது?
இந்த மாதிரி எடக்கு மடக்காக் கேள்விய கேக்கறது தான் வேலை! கேள்வியைத் தான் யாரு வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் கேக்கலாமே! பதில் சொல்லறதுக்குன்னே பல நூறு பின்னூட்டம் வருமே! :-)))

காளமேகம் இதுக்கெல்லாம் சளைத்தவரா என்ன?
ஆனால் என்ன விஷயம்-னா, அந்த ஆற்றல் எல்லாம், பாதி நேரம் இந்த மாதிரி ஆட்களைச் சமாளிக்கவே போயிடும்! அப்புறம் எங்கிருந்து ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணி செய்யறது? ஆனா காளமேகம் அதையும் தாண்டித் தெறமையானவரு!

டோய், மலை என்னய்யா மலை!
ஈ உட்கார, அண்ட சராசரமே குலுங்கியதாகப் பாடுகிறேன் பாரு என்றார்!
எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனைக் கிருஷ்ணாவதாரத்தில் தாயாக வளர்த்தவள் ஒரு இடைச்சி! யசோதைப் பிராட்டி!
தயிர் கடையும் மத்தினால் ஒரு முறை குழந்தையை அடித்து விட்டாள்! அதனால் கண்ணனுக்கு பாவம், வாயில் ஒரு காயம், புண்!

சேட்டையே பையனாய்ப் பிறந்திருக்கும் பையன் அவன்! இதுக்கெல்லாம் அஞ்சுவானா? அடப் போம்மா என்று மண்ணை எடுத்து மீண்டும் மீண்டும் உண்கிறான். யசோதைக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது!
அடேய், வாயைத் திறடா என்கிறாள்! குழந்தையும் பொக்கை வாயைத் திறந்து காட்ட....

அம்மாடியோவ்...மில்கே வே கேலக்சியில் இருந்து, சகல கேலக்சியும் டெலஸ்கோப் இல்லாமலே தெரியுதே வாயில்!
சூரிய சந்திரர்கள், அண்ட சராசரங்கள்,
சமுத்திரங்கள், பூமி, பாரதம், ஆயர்ப்பாடி........
அப்படியே zoom in பண்ணா, அவனும் யசோதையும் கூடத் தெரியறாங்க!
Google Earth-இல், Zoom out/Zoom in, மொதல்ல கண்டு புடிச்சது இப்படித் தானோ? :-))

அந்த நேரம் பார்த்து,
கண்ணன் வாய்ப்புண்ணில் ஒரு ஈ வந்து மொய்க்கிறது!....
கூச்சத்தில் கிருஷ்ணனின் உடல் சற்றே குலுங்குகிறது!....

அதனால்........அவனுள் அடங்கி இருக்கும் அண்ட சராசரங்களும் குலுங்குகின்றன!
"ஈ உட்கார, உலகமே குலுங்கியது! போதுமா?" - காளமேகம் இப்படிச் சொன்னதும், ஈயாடவில்லை, அவைப் புலவன் எவன் முகத்திலும்!

இப்படி அண்டம் எல்லாம் தாங்கும் பெருமாளால், ஒரு சாதாரண ஈயைக் கூடத் தாங்க முடியவில்லை! - இது தான் காளமேகம் கலாய்ச்சல் :-)
வாரணங்கள் எட்டும் மகமேருவும் கடலும்
தாரணியும் நின்று சலித்தனவால் - நாரணனைப்
பண்வாய் இடைச்சி பருமத்தினால் அடித்த
புண்வாயில் ஈமொய்த்த போது

(எட்டுத் திக்குகளையும் தாங்கும் அஷ்ட திக் கஜங்கள் என்னும் யானைகளும், மகா மேரு மலையும், கடலும், உலகங்களும் குலுங்கின! நன்றாகப் பண்கள் பாடும் இடைச்சியான யசோதை, பருத்த மத்தினால் கண்ணனை அடித்தாள். அந்தப் புண்ணில் ஈ மொய்த்த போது, கண்ணன் கூச்சத்தால் குலுங்க, சகலமும் குலுங்கியது!)

(அப்பாடா, ஆசை தீர, வவாச-வில் பெருமாள் படம் போட்டாச்சுப்பா! :-)

இப்படித் தமிழ் இலக்கியத்தில் பல நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து , நகைச்சு வைக்கலாம்! - சங்கம் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ் - எங்க ஒரு முறை உரக்கச் சொல்லுங்க பார்ப்போம்! ஜய ஜய கிருஷ்ணா, முகுந்தா, முராரே! :-)

Wednesday, August 29, 2007

சக் தே கோலிவுட்டு!!

சக் தே இந்தியாவில் ஷாருக் கான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 16 பெண்கள் கொண்ட அணியைத் தயார்படுத்தி இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுக்கிறார். சத்யம் தியேட்டரில் சக் தே இந்தியா பார்த்துவிட்டு பிரபா ஒயின்ஸ் பார் பக்கம் ஒதுங்கும் சிம்பு, சந்தானம், சத்யன் கோ தமிழிலும் இப்படி ஒரு படம் எடுத்து படம்காட்ட வேண்டுமென டிஸ்கஷனில் இறங்குகிறது.

சத்யன்: ண்ணா இந்தில ஹாக்கிய வச்சு சக் தே இந்தியான்னு பட்டையக் கிளப்பறாங்க..இங்க சென்னை- 28ன்னு புதுப்பசங்க புளியைக் கரைக்கறாங்க..நாமளும் ஏதாவது பண்ணனும்ண்ணா

சந்தானம்: ஏதாவது பண்ணனும்னா கொடுத்த வேலையை ஒழுங்கா பண்ணுடா..வாங்கிக் கொடுத்த ஓசி சரக்குக்கு அவனை ஏத்திவிடறயா? அவன் விரலை நீட்டி பேச ஆரம்பிச்சா நமக்கு அடிச்ச சரக்கெல்லாம் இறங்கிடும்டா..சொன்னா கேளுடா

சிம்பு: கெட்டவன் கதையை மாத்தறோம்...ஏதாவது விளையாட்டை வச்சு படமெடுப்போம்..என்ன விளையாட்டுன்னு அப்புறம் முடிவு பண்ணலாம்..மொதல்ல நடிக்கறதுக்கு 20 பொண்ணுங்களைப் புடிப்போம்

சந்தானம்: டேய்..மொத ரவுண்டுக்கே இந்த எஃபெக்டா...அதுவும் இருபது பேர் எதுக்குடா?

சத்யன்: ண்ணா..சூப்பருங்கண்ணா..போன வாரம் எங்க ஏரியா கேபிள் டிவில புதுசா ஒரு காம்பியரர் அம்மணி வந்திருக்குண்ணா..அவங்களையும் கூப்பிட்டுக்கலாம்ண்ணா

சந்தானம்(சத்யனைப் பார்த்து): நீ ஏன் இப்ப ஓவரா ஃபீல் ஆவற? எப்படியும் உனக்கு சான்ஸ் கொடுப்பான்டா..

சிம்பு: மந்திரா பேடில இருந்து அந்த கேபிள் பொண்ணு வரை புடிக்கறோம். படத்துல இந்த சிம்பு அவார்ட் மேல அவார்டா வாங்குவான்

சந்தானம்: டேய்..அவார்ட் வாங்கறது இருக்கட்டும்..மொதல்ல சைட் டிஷ் வாங்குடா...எவ்வளவு நேரம் சைட் டிஷ் இல்லாம சரக்கடிக்கறது?

சத்யன்: விஜய் கில்லில கபடி ஆடிட்டாரு..நாம என்ன விளையாடறதுண்ணா?

சந்தானம்: டேய் கில்லில அவர் ஆடினது பேர் கபடியா? லொள்ளு சபால சொட்டை மண்டையனே அதை விட நல்லா ஆடினான்டா..

எனும்போதே எஸ்.ஜே சூரியா என்ட்ரி ஆகிறார்.

எஸ்.ஜே: நானும் ஆட்டைக்கு வருவேன்..ஆங்க்...விளையாட்டுக்கு சேர்த்துக்கோங்க...ஆங்க்க்க்

சந்தானம்: சரக்குல பங்கு கேக்கதான் வந்தியோன்னு பார்த்தேன்..நல்லவேள..அப்படியே ஓரமா எதுனா கெஸ்ட் ரோல் பண்ணிக்கோ.

எஸ்.ஜே: எனக்கு ரெண்டு ஹீரோயின் கண்டிப்பா இருக்கனும்..ஆங்க்...மொதல்ல கேவலமா விளையாடி ஹீரோயின் கூட சண்டை போட்டு செகண்ட் ஆஃப்ல சூப்பரா விளையாடற மாதிரி கதையிருக்கனும்.ஆங்க்..நமீதா படத்துல உண்டா? ஆங்க...

சந்தானம்: டேய் எங்களைப் பார்த்தா பத்து செகண்ட்ல கான்செப்ட் யோசிச்சு காமெடி பண்ற மாதிரி இருக்குதா? டேய் நாங்க எவ்வளவு சீரியசா உருப்படியா விளையாட்டை வ்ச்சு ஒரு படம் எடுக்கலாம்னு டிஸ்கஷன்ல இருக்கோம்..நடுவுல உன் டிராக் ஓட்டறயா?

எஸ்.ஜே: நான் சின்ன வயசுலயே பக்கத்து வீட்டு பொண்ணுங்க கூட நொண்டி, பல்லாங்குழிலாம் விளையாடியிருக்கேன்..ஆங்க்..

சந்தானம்: நானகூட் பல பேர் காலை உடைச்சு நொண்டியாக்கியிருக்கேன்

எஸ்.ஜே: இப்ப நான் என்ன செய்ய சொல்லு? ஆங்க்க்க்

சந்தானம்: ஏன்டா ஆட்டோ ஹாரனை முழுங்கிட்டியா...ஆங்க்..ஆங்க்ன்னு சவுன்டு விட்டுட்டிருக்க? இது நாலு பேரு வந்துபோற இடம்...உன்னை இதுக்கு மேல பேச விட்டா அசிங்கமாயிடும்..அந்த கட்டிங் அடிச்சுட்டு பிளாட் ஆயிடு..இல்ல ஹாக்கி ஸ்டிக்க வச்சு நடுமண்டைல போட்ருவோம்

சிம்பு: (திடீரென குறுக்கில் புகுந்து) நாங்க எப்படிலாம் பழகனோம்..அப்படியே மிதக்கற மாதிரி இருந்துச்சு..விதி என் வாழ்க்கைல விளையாடிடு்ச்சு

என்றபடியே சந்தானத்தின் தோளில் சாய்ந்து பழக்க தோஷத்தில் கடித்து வைக்கிறார்.

சந்தானம்: டேய் கடிக்கறான்டா

சத்யன்: ண்ணா..எவ்வளவு சீரியசா ஃபீல் பண்றாரு..கடிக்கறாருன்னு சொல்றீங்களேன்ண்ணா

சந்தானம் : அதில்லடா கையைக் கடிக்கறான்டா

சத்யன்: மாசக்கடைசி ஆச்சுன்னா கையைக் கடிக்கறது வழக்கம் தானே..நமக்கு வேற ஓசில சரக்கு வாங்கித்தராரு

சந்தானம்: டேய் அவன் என் கையைக் கடிக்கறான்டா..நீ அவனுக்கு மேல கடிக்கறியே..அங்க யாருடா டிவின் டவர்ஸுக்கு பேண்ட் சட்டை மாட்டிவிட்ட மாதிரி ரெண்டு பேர் வர்றானுங்க

சிபியும் ( அட தளபதி இல்லீங்க..நம்ம சத்யராஜோட அண்ணன்..ச்சே மகன் சிபிராஜ்) 'ஜெயம்' ரவியும் வருகிறார்கள்.

சிபிராஜ்: நான் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க..அனுபவஸ்தன் சொல்றேன் விளையாட்டெல்லாம் வச்சு படமெடுத்தா விளங்காமப் போயிரும்

சந்தானம்: ஆமா இவர வச்சு எடுத்தா மட்டும் கலெக்ஷன் கோடிகோடியா கல்லா கட்டும்...டேய் இவன் படத்தை விட எடுக்க போற படம் நல்லா ஓடிடும்னு பொறாமைல பேசறான்டா

சிபிராஜ்: பொறாமைலாம் இல்லீங்க..நான் கூட ஃபுட் பால் வச்சு எடுத்த படத்துல நடிச்சேன்..ஆனா படம் பத்து நாளைக்கு மேல ஓடல

சந்தானம்: அந்த பத்து நாள் கூட நிலாவுக்காகவும் பிரகாஷ் ராஜுக்காகவும் தான் ஓடுச்சு..உனக்காக இல்ல..இங்க இருவது பொண்ணுங்களைப் புடிச்சு கில்மாவா படமெடுக்க ப்ளான் போடறோம்..உங்கள மாதிரி பத்திருபது பனை மரங்க வந்து ஃபுட் பால் ஆடினா எவனுக்கு என்ன வந்துச்சு? எவன்டா அதுக்கு அம்பது ரூபா செலவு பண்ணி பார்ப்பான்?

சிபி: அது சூப்பர் ஸ்டோரிண்ணா..டைட்டில்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் எல்லாமே வித்தியாசமா எடுத்தோம்

சந்தானம்: டேய் அது என்ன டைட்டில் லீயா? சைனீஸ், இங்கிலீஷ் படம்லாமே இப்பல்லாம் மிரட்டல் அடி, பாயும் புலி, பருத்தி வீரர்கள்னு நேட்டிவிட்டியோட டைட்டில் வைக்கறாங்க..நீ லீன்னு வச்சா ஈன்னு இளிச்சுட்டு போயிடுச்சு

ரவி: அதை விடுங்க..நான் எம்.குமரன்ல பாக்சிங் விளையாடினேன், தாஸ படத்துல ஃபுட் பால் விளையாடினேன்..அதெல்லாம் கூட ஓடலைங்க

சந்தானம்: நீ நடிச்சு என்னவோ அந்த ரெண்டு படம் மட்டும்தான் ஓடலைங்கற மாதிரி சொல்ற?

ரவி(தழுதழுக்கும் குரலில்): அதெல்லாம் எங்க அண்ணனை கேட்டா தாங்க் தெரியும்..ஆனா நான் நல்லா ஆடுவேங்க..என்னை நம்புங்க

சந்தானம்: டேய் நான் கூடத்தான் டைட்டா சரக்கடிச்சுட்டு போதைல உன்னை விட சூப்பரா ஆடுவேன்..படம் ஓட இதெல்லாம் ஒரு காரணமாடா?

ரவி: விளையாட்ட வச்சு படமெடுக்கறதுக்கு பதில் மறுபடியும் அப்பாஸை கேப்டனா போட்டு சேப்பாக்கத்துல கிரிக்கெட் விளையாடலாம்ங்க..எங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்

சந்தானம்: டேய் இங்க ஒழுங்கா காமெடி பண்ணாலே மக்கள் சிரிக்க மாட்டேங்கறாங்க..நீ வேற ஏன்டா நடுவுல புகுந்து இப்படி ராவடிக்கற?

சத்யன்:(இடையில் புகுந்து) இல்லீங்கண்ணா..மிக்ஸிங்கோட தான் அடிக்கறேன்

சந்தானம்: இப்ப நான் உன்னை அடிக்கறேன்டா

என சத்யனை அடிக்க வரும்போதே எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் கேமரா ஆங்கிள் காட்டியபடி வருகிறார்.

எஸ்.ஏ.எஸ்: தம்பிகளா கவலைப்படாதீங்க..உங்கள வச்சு நான் படமெடுக்கறேன். நீங்க எல்லாரும் ஹாக்கி ப்ளேயர்ஸ்..எல்லா மேட்ச்லயும் கிராமத்து பண்ணையாரான வில்லனோட சதியால தோத்துடறீங்க..செகண்ட் ஆஃப்ல விஜய் கெஸ்ட் ரோல்ல சப்ஸ்டியூட்டா ஆடி உங்கள ஜெயிக்க வைக்கறாரு

சந்தானம்: ஏன் சார்..ஆப்படிக்க புதுசா ஹுரோ யாரும் வரலையா? இவனுங்க டார்ச்சரே தாங்க முடியல..இப்ப நீங்க பேசின பேச்சுல ஏறின மப்பெல்லாம் போயிடுச்சு

சத்யன்: எங்கண்ணா போச்சு?

சந்தானம்: ஷேர் ஆட்டோ புடிச்சு டூமில்குப்பம் போயிடுச்சு..டேய் உன்னை மொதல்ல உதைக்கனும்டா

எஸ்.ஏ.எஸ்: எல்லாருக்கும் ஒரு ஹீரோயின் வச்சுக்கலாம்பா..அவங்களை அந்த பண்ணையார் ரேப் பண்ணிடுவான்..விஜய் வந்து சண்டை போட்டு உங்களை காப்பாத்துவான்

சந்தானம்: இப்ப எவன் சார் வந்து எங்களை காப்பாத்துவான்?

என்று அழ ஆரம்பிக்கிறார். அப்போது பெரும்புயல் அடிக்கிறது. டேபிளெல்லாம் பறக்கிறது..விளக்கெல்லாம் அணைந்து அணைந்து எரிகிறது..ஜன்னல் கதவுகள் படார் படாரென அடிக்கின்றன.

சத்யன்: ண்ணா.என்னண்ணா ஆச்சு பயமாயிருக்குங்ண்ணா

சந்தானம்: டேய் எத்தன படத்துல பார்த்திருக்கேன்..இப்படியெல்லாம் வந்தா வழக்கமா ஒன்னு ஹீரோ என்ட்ரியா இருக்கும்..இல்ல பேயோ பிசாசோ வரும்..இல்ல விநோத ஜந்து ஏதாவது வரும்..இப்ப என்ன வருதுன்னு தெரிலயேடா

"நான் ஆடாத விளையாட்டா!
எம்ஜியாருக்கே நான் காட்டினேன் டாட்டா!
நான் நிப்பேன்டா ஒண்டிக்கு ஒண்டி!
எவனாயிருந்தாலும் போட்டிக்கு ரண்டி!
நான் சிலம்பெடுத்தா சிம்பு!
என்கிட்ட வச்சுக்காத வம்பு!
சின்ன வயசுல ஆடியிருக்கேன் கில்லி!
எதிர்த்தவனை அடிப்பேன்டா சொல்லி!"

என குரல் கேட்கிறது.

சந்தானம்: டேய் நான் கடைசியா சொன்னதுதான் வந்துடுச்சு போல..பில்லுக்கு பணம் கேட்கறதுக்கு முன்ன அப்படியே எஸ்கேப்பாகி ஓடிருவோம் டா

என சத்யனை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். மற்றவர்கள் அங்கேயே மட்டையாகிறார்கள்.

Monday, August 27, 2007

அனுப்பிய அவருக்கு நன்றி-2




இப்படி சிரிச்சுகிட்டே வேலைய ஆரம்பிங்க. இந்த வாரம் சூப்பர் சக்ஸஸ் வாரம்.

Sunday, August 26, 2007

மதுரைக் காரய்ங்க எல்லாம் மாபாவிகளா?

இதைக் கேட்டுப் போட்டு என்னை அடித்து நொறுக்க,
வைகை போல் திரண்டிருக்கும், "மதுரை மாபாவியர்கள்" அனைவருக்கும் அடியேன் வணக்கம்!
தருமி சாருக்கு ஸ்பெஷல் வணக்கம்!:-)

மதுரைக்காரங்க எல்லாம் ஒன்னாச் சேர்ந்து அழகான வலைப்பூ தொடங்கியிருக்காய்ங்க!
அதுல நம்ம சங்கத்துச் சிங்கம் அண்ணாத்த ராயல் வேறு, கெளரவம் மிக்க உறுப்பினர்!
மதுரை தாஜ் ஹோட்டல் பிரியாணிக்காகத் தான் அதுல அவர் சேர்ந்தாரா என்பதைப் பற்றிப் பாண்டியன் சபையில் பெருத்த விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது!:-)



கோவலன் கண்ணகி நாடகம் மிகவும் உணர்ச்சிகரமானது.
சினிமாவை விடச் சூடும் சுவையும் உள்ளது நாடகம் தான். பின்னே செட் போட்டு, கண் முன்னாடி ஒரு நகரமே எரிந்தால் சும்மாவா?
தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகம் அது!

சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி அறியாதார் யார்!
முத்தமிழுள் ஒன்றான நாடகத் தமிழை மீண்டும் தூக்கி நிறுத்தியவர் அவர்!
கதை-வசனம்-பாடல்கள்-ஒளிப்பதிவு-டைரக்சன் என்று வித்தை காட்டிக் கொள்ளும் இன்றைய இயக்குநர்களுக்கு எல்லாம் அவர் தான் முன்னோடி. அவர் எழுதிய நாடகம் தான் கோவலன் கண்ணகி!

பல ஊர்களில் சக்கைப் போடு போட்ட அந்த நாடகம், கடைசியில் மதுரையிலேயே நடத்தப்பட்டது! அதில் இருந்து ஒரு சீன்!
கண்ணகி பாண்டியன் சபையிலே கூக்குரல் இட்டுப் பாடுகிறாள்.
"மா பாவியர் வாழும் மதுரை ஆளும் பாண்டிய மன்னா!!!"
ட்ட்ட்டங் ட்ட்ட்டங் டொய்ங்க்....



சபையில் ஒரே பரபரப்பு, குழப்பம், கூச்சல், விசில்!
"டேய், யாரைப் பாத்து இன்னா வார்த்தை சொன்னீங்கடா, கொக்க மக்கா".....மதுரை, சென்னைக்கு ஷிஃப்டானது, தமிழில்! :-)
மாப்பிள்ளை வினாயகர் கடை சோடா பாட்டில்கள் பறக்க...பயந்து போய் திரை போட்டார்கள்!
மதுரை மக்கள் உணர்ச்சி வேகத்துடன் கேட்டார்கள்! "மாபாவியர் வாழும் மதுரை என்று எப்படிச் சொல்லலாம்? அப்ப நாங்க-ல்லாம் என்ன மகா பாவிகளா?"

சபா செக்கரட்டரி மற்றும் பலர் ஓடியாந்தாய்ங்க.
"அது இல்லீங்கப்பு! கண்ணகி, கணவனைப் பறிகொடுத்த கோபத்தில் உணர்ச்சிகரமாப் பேசறா. அதப் பாத்து நீங்க ஏதும் உணர்ச்சி வசப்படாதீங்கப்பு!"

"எலேய்...மொதல்ல நாடகத்தை நிறுத்து.
எழுதியவரை மேடைக்கு வரச் சொல்லு!
மன்னிப்புக் கேட்ட பின் தான் நாடகம் தொடர அனுமதிப்போம்!"

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் இப்படி அடாவடி பண்ணுறாங்களே என்று நாடக நிர்வாகிகளுக்கும் கோபம் வந்தது. ஆனா வேறு வழியில்லை!
கோபம் ஆஃப் மதுரை வேர்ல்ட் ஃபேமஸ்! அதனால் சங்கரதாஸ் சுவாமிகளையே மேடைக்கு வரச் சொன்னார்கள்!

மேடைக்குச் சிரித்துக் கொண்டே வந்தார் சுவாமிகள்.
"தமிழன்பர்களே, உண்மையைத் தானே உயர்ந்த கருத்தாக எழுதினேன்.
இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளலாமா? தமிழ் தெரியாத கத்துக்குட்டிகளா நீங்கள்?
மதுரைக்காரங்களுக்கே தமிழ் தெரியலை என்று நாளை யாராவது பேசி விடப் போகிறார்கள்! அதனால் அமைதியுடன் நான் சொல்வதைக் கேளுங்கள்!"


"மாபாவியர்" என்றால் நீங்கள் நினைப்பது போல் ஒன்னும் மோசமான பொருள் அல்ல.
மா = மாதரசி, மங்களகரமான மகாலட்சுமி,
பா = பார்வதி,
வி = வித்தைக்கு அரசி, சரஸ்வதி.
முப்பெரும் தேவியரான திருமகள், மலைமகள், கலைமகள்!
மா, பா, வி வாழும் ஊர் தானே மதுரை?
இவர்கள் எல்லாம் உங்கள் ஊரில் வாழ வேணாம் என்றால் சொல்லுங்க, உடனே மாற்றி விடுகிறேன்".

பட பட பட பட வென்று ஒரே கைதட்டல். மதுரை மக்கள் ஆரவாரம்.
சங்கரதாஸ் சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, மாலை அணிவித்துப் பாராட்டி, மேலும் பணமுடிப்பு கொடுத்தார்கள்!
நாடகமும் பெருத்த அப்ளாசுடன் நடந்தேறியது!

பின்னர் சபா அங்கத்தினர்கள் சுவாமிகளிடம் ப்ரைவேட்டாக, உண்மையிலேயே அக்கருத்தில் தான் எழுதப்பட்டதா என்று கேட்டார்கள்!
"ச்சே ச்சே...இல்லை! இல்லை!
சமயத்திற்கு ஏற்றவாறு சமாளித்தேன். அவ்வளவு தான்!" என்றாராம் சுவாமிகள்.

பிழையான ஒரு பாட்டுக்குப் பாண்டியன் பரிசு அளிக்கிறான் என்று பல மணி நேரம் சண்டை போட்டு விட்டுக்....கடைசியில்
அதே பிழையான பாட்டுக்குத் தானே பரிசை அளிக்கச் சொன்னார்கள்!
பாருங்க, நமக்கும் அதிகமாப் பண முடிப்பு கொடுத்துள்ளார்கள் என்று அவர் சொல்ல...
சீரியஸ் கண்ணகி நாடகத்துக்கு நடுவே, குபீரென்று சிரிப்பலைகள் எழுந்து பாய்ந்தது!
பாசக்காரப் பயலுங்கப்பா, மருதக்காரய்ங்க!

மாமதுரை போற்றுதும் மாமதுரை போற்றுதும் என்று மாற்றிப் பாடலாமா?
ச்ச்சே வேண்டாம்! அதான் ஒரிஜினலாவே போற்றிப் பாடி இருக்காய்ங்களே!

நிலம்தரு திருவின் நிழல்வாய் நேமி
கடம்பூண்டு உருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்
கோலின் செம்மையும் குடையின் தண்மையும்
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்
பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மாநகர்
கண்டாங்கு...


சங்கம் வைத்த, வருத்தப்படாத வாலிபர்கள் சார்பாக
சங்கம் வைத்த, மதுரை மூதூருக்குச்
சிரிப்பலை வணக்கங்கள்!


இப்பச் சொல்லுங்க,
இந்தப் பதிவு போட்டதுக்கு என்னைய மருத மக்கா அடிப்பாய்ங்களா இன்னா? :-)

வ.வா - மதுரை வாலிபர்கள்

வ.வா - மதுரை வாலிபிகள்

Thursday, August 23, 2007

உலகின் மிகச்சிறந்த பதிவர் தேர்வு - அவர் ஒரு இந்தியர்

உலகின் மிகச்சிறந்த பதிவர் போட்டியில், இந்தியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டுநலன் மற்றும் சுகாதாரம் பற்றி அவர் எழுதிய பதிவுகளை கோடிக்கணக்காணோர் படித்து மறுமொழிந்துள்ளனர். சிறந்த எழுத்தாளருக்கான பதக்கமும் அரசாங்கம் அவருக்கு அளித்து கவுரவிக்க உள்ளது. வாழ்த்துக்கள் சிபி

சே, தூக்கம் கலைஞ்சு கனவும் கலைஞ்சுருச்சு. எல்லாமே கனவுதானா?

Tuesday, August 21, 2007

கடீஸ் கார்னர்-1


  • Butter'fly fly ஆகும் ........ Catter'pillar பில்லர் ஆகுமா?

  • என்னதான் கருணாநிதி DMK ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா"னுதான் கத்தும்.

  • வாழை மரம்தான் தார் போடும். ஆனா அந்த தார் வெச்சு ரோடு போட முடியுமா?

  • என்னதான் ஏரோப்ளேன் மேல பறந்தாலும் பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகனும்.

  • Hand wash'ன்னா கை கழுவறது, 'Face wash'ன்னா முகம் கழுவறது, அப்ப 'brain wash'ன்னா, brainஅ கழுவறதா?

  • டீ கப்புல டீ இருக்கும், அப்ப world cupல world இருக்குமா?

  • செல் மூலம sms அனுப்பலாம். ஆனா sms மூலமா செல் அனுப்ப முடியுமா?

  • அடையார் ஆனந்தபவனின் கிளைகள் எங்கே வேணுமின்னாலும் இருக்கலாம். ஆனா அடையார் ஆலமரத்தோட கிளைகள் அடையார்ல மட்டும்தான் இருக்கும்

  • பாம்பு எத்தனை எத்தனை முறை படம் எடுத்தாலும் அதை வெச்சு எந்த தியேட்டர்லயும் ரிலீஸ் பண்ண முடியாது

  • ரேஷன் கார்டு வெச்சு சிம் கார்டு வாங்கலாம். சிம் கார்டு வெச்சு ரேஷன் கார்ட வாங்க முடியாது.

  • நீங்க என்னதான் தீனி போட்டு கோழி வளர்த்தாலும், அடுத்த முறையும் முட்டைதான் போடும். 100/100 எல்லாம் போடாது.

  • சைக்கிள் ஓட்டினா சைக்கிளிங், ட்ரெயின் ஒட்டினா ட்ரெயினிங்கா?

  • மெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிக் ஆகலாம், சாப்ட்வேர் என்ஜினியரால எந்த காலத்திலேயும் சாஃப்ட்வேர் ஆக முடியாது.

போலீசுக்கே ஆப்படித்த Blogger VCR!

இது ஒரு நண்பனின் உண்மைக் கதை: கதையல்ல, நிஜம்!
போன் போர்பர் என்ற உலக மகா நகரத்துல நமக்கு ஒரு தோஸ்து இருக்காரு. அவருக்குக் காரை ஓட்டணும்னா சுத்தமாப் பிடிக்காது!....காரைத் துரத்தத் தான் பிடிக்கும்!

ஒரு முறை நியூயார்க் நகரத்துக்கு வண்டியை விரட்டிக்குனு வந்தாரு நம்ம ஹீரோ!
உன் விரட்டு என் விரட்டு இல்ல... காளை மாடு அடக்கும் மஞ்சு விரட்டு!
(அவர் காருக்கு முன்னால மஞ்சு-ன்னு ஒரு ஃபிகர் கார்ல போயிக்கிட்டு இருந்தாங்க.
அதான் "மஞ்சு விரட்டு" விரட்டினார் என்று பின்னர் வந்த காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுச் செய்தி சொல்லியது - இதற்கு துப்பு கொடுத்தவர் சிங்க வாகனத்தில் வரும் ஒரு பெண் பதிவர்-ன்னு பரவலாப் பேசிக்கறாங்க!)

நான் இப்ப மேட்டருக்கு ஓஸ்தானு!
தன் கடமையில் சற்றும் மனம் தளராத ஒரு போலீஸ் மாமா, நண்பருக்கு பின்னாடியே வந்து லைட்டைப் போட்டாரு! ஒரங்கட்டேய்! .....

அப்பறம் நடந்த காமெடியைப் பற்றி நண்பர் ஒரு பதிவ போட்டாரு! ஆனா பாருங்க....ஏதோ தான் மட்டும் ஜென்டில்மேன் போலவும், போலீஸ் மாமா தான் ரொம்ப டகால்டி பண்ணி, கொடைச்சல் கொடுத்ததாகவும் அந்த பதிவுல அளந்திருந்தாரு!

எனவே உண்மைய ஊருக்கும் ஒலகத்துக்கும் எடுத்துச் சொல்ல,
காவல்துறை என்னைய சிறப்புச் செய்தியாளரா அப்பாயிண்டு சேஸ்தானு!
நண்பருக்கும் போலீஸ் மாமாவுக்கும் நடந்த உரையாடல் இதோ படியுங்கள்!
(முன் குறிப்பு: இது சோனி மினி டிவிடியில் டேப்பும் செய்யப்பட்டுள்ளது! - பதிவின் இறுதியில் அந்தக் காட்சிய நீங்களே பாருங்க!)



ஆபிசர்: உங்கள் ட்ரைவிங் லைசன்சைக் காட்டுங்க!
நண்பர்: அதெல்லாம் இப்ப இல்லீங்க ஆபிசர். ஏற்கனவே மூணு தபா புடிச்சி வுட்டுட்டாங்க.
நாலாவது தபா அதைப் புடிங்கிக்குனாங்க ஆபிசர், பாவிப் பயலுங்க!.

ஆபிசர்: சரி, வண்டி ஓனர் பத்திரம் எடுங்க
நண்பர்: சாரிங்க ஆபிசர். வண்டி என்னுதல்ல, நேத்து தான் டிஸ்கோ பார் வாசல்ல திருடினேன்!

ஆபிசர்: வாட்? திருட்டுக் காரா?
நண்பர்: ஆமாங்க ஆபிசர். பாருங்க நான் எப்பவும் உண்மையே தான் பேஸ்வேன் ஆபிசர்

ஆபிசர்: காரின் உண்மையான ஓனர் யார் என்று தெரியுமா?
நண்பர்: தெரியுங்க ஆபிசர். இந்த ஹேண்ட்பேக்-ல அவிங்க அட்ரெஸ் இருக்கு ஆபிசர். எடுக்கட்டுங்களா?
ஆனா உள்ளார ஒரு சின்னக் கைத்துப்பாக்கி வச்ச்சிருக்கேன் ஆபீசர்!

(ஆபிசர் ஒரு ஐந்து அடி பின்னால் நகர்கிறார், ஒரு வித வெடவெடப்புடன்)
நண்பர்: அந்தத் துப்பாக்கியால தாங்க ஆபிசர், இந்தக் காருக்குச் சொந்தக்கார பொண்ணைச் சுட்டேன்;
பின்னாடி டிக்கியில், பொணத்த கூட போட்டிருக்கேனுங்க ஆபிசர்!

(ஆபிசருக்கு வெலவெலத்துப் போய்விடுகிறது! ஒரு அம்பது அடி பின்னால் நகர்ந்து கொண்டு, பெரிய ஆபிசரை வாக்கி டாக்கியில் கூப்படறாருங்கோ!
எங்கிருந்தோ வந்தான், போலீஸ் சாதி நான் என்றான்-ன்னு, திபுதிபு-ன்னு ஒரு நாலு ஆபிசர்கள் காரை புடை சூழ்ந்து கொள்கிறார்கள்...பெரிய ஆபிசர் காரை நோக்கி ஒஸ்தானு!...)



பெ.ஆபிசர்: ஆடாதே! அசையாதே!
அப்படியே உக்காருங்க மிஸ்டர்! லைசன்ஸ் இல்லை போல இருக்கே?
நண்பர்: ஐயோ! இதோ இருக்கு ஆபிசர்!
(பெ.ஆபிசர் பாக்குறாரு, லைசன்ஸ் பக்காவா இருக்கு)

பெ.ஆபிசர்: யாரு காருங்க இது?
நண்பர்: என் காரு தான் ஆபிசர்!
பாவா வீட்டுல ஜாவா படிச்சி,
சுயமா சிந்திச்சி, கூகுளில் code தேடாம.........
ஆபீசில் பதிவு எழுதாம.....பின்னூட்டம் போடாம, நெத்தி வேர்வை நிலத்தில் சிந்தி, பொட்டி தட்டி, சம்பாரிச்சதுங்க ஆபிசர்! இந்தாப் பாருங்க டாக்குமெண்டு!
(பெ.ஆபிசர் பாக்குறாரு, டாக்குமெண்டு பக்காவா இருக்கு)

பெ.ஆபிசர்: இது யாரு கைப்பைங்க, மிஸ்டர்? துப்பாக்கி இருக்கு-ன்னு சொன்னீங்க போல இருக்கே?
நண்பர்: ஐயோடா சாமீ...என் தங்கமணி பை தாங்க ஆபிசர்...
அதுக்குள்ள துப்பாக்கியா? தொறந்து பாருங்க ஆபிசர்...
ஒரே கொண்டை ஊசி, ஒம்போது சீப்பு, நாலு மேக்கப் ஷேடு, நாப்பது லிப்ஸ்டிக்கு - இது தாங்க இருக்கு ஆபிசர்!
(பெ.ஆபிசர் தொறந்து பாக்குறாரு, சிரிக்கிறாரு - அவரு தங்கமணியை அவரு நினைச்சிக்கிட்டாரு போல!)

பெ.ஆபிசர்: சாரி மிஸ்டர், பாத்தா பால் வடியும் பால முகமா இருக்கீங்க...
If you dont mind...கொஞ்சம் டிக்கிய ஓப்பன் பண்ண முடியுமா?
(நண்பர் ஓப்பன் செய்ய,.....அய்யோ....
டிக்கியில் நாலு ஜட்டி, ரெண்டு டென்னிஸ் பாட், எப்போதோ தூக்கி வீசிய மாங்கொட்டை, ஒரு ஸ்டெப்னி தான் காட்சி கொடுத்தது!)

பெ.ஆபிசர்: எனக்கு ஒண்ணுமே புரியலையே!
இந்த ஆபிசர் உங்களிடம் லைசன்ஸ் இல்லை, திருட்டுக் கார், துப்பாக்கி இருக்கு, பொணம் டிக்கியில இருக்குன்னுல சொன்னாரு!
யோவ், ஈகிள் 402, ஸ்ட்ரைப் 303....என்னய்யா நடக்குது இங்க?

நண்பர்: அய்யோ, அப்படியா சொன்னாங்க ஆபிசர்? பகல் கனவு காணுறாங்களா? மிட் நைட் மசாலா ஏதாச்சும் பாத்த கலக்கமா?
நான் ஓவர் ஸ்பீடுல..100 மைல் பெர் ஹவர்ல போனதாக் கூடச் சொல்லி இருப்பாங்களே, ஆபிசர்? கலி காலம்டா ஆபிசர்!

பெ.ஆபிசர்: ஆமாம்...ஆமாம்...ஈகிள் 402 அப்பிடித் தான் சொன்னாரு!
நண்பர்: (அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு) அதை எல்லாம் நீங்க நம்புறீங்களா ஆபிசர்?

பெ.ஆபிசர்: சேச்சே...ஏதுமறியாப் பச்சிளம் பாலகன் போல இருக்கீங்க! பால் மணம் மாறாச் சிறுவனைப் போல இருக்கும் உங்களைப் போயி.....
ஐ ஆம் வெரி சாரி மிஸ்டர் VCR!......நீங்கள் போகலாம்!
தொந்தரவுக்கு மன்னிக்கவும்! உங்கள் பயணம் இனிய பயணமாய் அமையட்டும்!
(பெ.ஆபிசர் திரும்பி, ஆபிசர்களை எல்லாம் ஒரு முறை முறைக்க....)


நண்பரின் கார் நியூயார்க்கை நோக்கிப் பறக்கிறது!...காருக்குள் சிடியில்...
அண்ணே அண்ணே...சிப்பாய் அண்ணே
நம்ப ஊரு, நல்ல ஊரு, இப்ப ரொம்ப கெட்டுப் போச்சண்ணே!
அதச் சொன்னா வெக்கக் கேடு
அதச் சொல்லாட்டி மானக்கேடு...
அண்ணே அண்ணே...


நியூயார்க் நகரத்து டிஸ்கோ பார் வாசலில், (Cop)காப்புக்கே ஆப்படித்த கடமை வீரரை, ப.பா.சங்கத்தினர் ஒரு வித வெட்கத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர்.
நண்பர் நேரே டிஸ்கொத்தேவில் கலந்து ஐக்கியமாக, நமீதாவுடன், காதல் யானை வருகுது ரெமோ! இதோ!



அன்பு அண்ணன் வீசீஆரை-ஐ, வீசி வரவேற்கத் (தக்காளி தான் வேறென்ன?) துடியாய்த் துடிக்கும் 23ஆம் வார்டின் அன்புத் தொண்டர்கள், படம் வரைந்து கட்-அவுட் வைத்த பாச உடன்பிறப்புக்கள்:
பாசமலர் மலேசிய மாரியாத்தா, மற்றும் மற்றும் கனவு நாயகன் DreamZZZ, மற்றும் cdk

போலீசுக்கே ஆப்படித்த Blogger VCRக்கு, "ஆப்பம்" வாங்கித் தருவோம் வாங்க.
டமிள் கூறும் பதிவர்களே, வந்து உங்கள் ஜனநாயகக் கடமையை செய்து விட்டுப் போங்கள்! :-)







Thursday, August 16, 2007

சிபியாரின் கவி வரிகளில் விவாஜி - THE FARMER

விவாஜி உருவான கதையை உங்க கிட்ட சொல்லிகிட்டு இருக்கேன்... விவாஜி படத்துல்ல பாடல்கள் பட்டயக் கிளப்ப போறது உறுதி.. ஏன்னா படத்துல்ல பாட்டு எழுதப் போறது நம்ம கன்னாபின்னா கவிசாம்ராட் சிபி அவர்கள்.. சிபியார் ரெண்டு பாட்டு எழுதுறார்.. மத்தப் பாடல்களுக்கு கவி ஆல்ப்ஸ் அய்யனார் அவர்களிடமும், கவிதாயினி விமர்சன வித்தகி காயத்ரி அவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.. இது தவிர சின்னத் தல ராமும் மதுரை தேனி மெயின் ரோட்டுல்ல ஒரு புளிய மரத்தடியிலே நின்டுகிட்டே ஒரு முக்கிய பாடலுக்கான வரிகளை யோசிச்சிட்டு இருக்கார்ங்கறதையும் சொல்லிடுறேன்...

கவிஞர்கள் எல்லாம் கதைக் கேக்க கிளம்பி வந்தாங்க... போன தடவை விட்ட இடத்திலே இருந்து அவங்க கிட்டக் கதையைச் சொன்னேன்.. நீங்களும் கேளுங்க.. வெட்டிகாரு கிட்ட சவால் விட்டுட்டு வெளியே வர்ற சிவாஜி கிட்ட அவர் கம்பெனி சீனியர்ஸ் ஒரு முக்கியமான புரொஜக்ட் தர்றாங்க... அதுக்கு ரொம்ப முக்கியமான ரெக்ரூட்மெண்ட் அசைன்மென்ட் விவாஜி மற்றும் சிபி கிட்டக் கொடுக்குறாங்க

ரெக்ரூண்ட்மெண்டுக்கு உலக அளவில் இருந்து பெண்கள் கூட்டம் குவிகிறது.. க்யூ கட்டி நிற்கிறார்கள்... விவாஜி அவங்களை எல்லாம் பாத்து மலைச்சு நிக்குறார்...
ஹேய் விவ் வி லவ் யூ என்று பல குரல்கள் கேட்கின்றன...

"யோவ் அனானி.. இங்கே என்னய்யா நடக்குது?"

"விவாஜி நீ ஸ்டார்ட் பண்ணப் போற ஆன் லைன் அக்ரி கல்சுர் புராஜக்ட்க்கு ஆல் கல்சுர் கேர்ஸ் ஆன் லைன்ல்ல நிக்குறாங்க நீ ஓ,கே சொல்லுற பொண்ணுக்கு ஓடனே அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடி பண்ணிட்டாப் போச்சி.. கமான் சூஸ் த கேண்டிடேட்."

"எஸ் விவாஜி.. உங்க அக்ரிகல்சுர் புரொஜக்ட் சொன்ன ஓடனே.. சும்மா அப்ளிகேஷன் ஸ் குவிஞ்சுப் போச்சு... என்னச் சொல்லுறீங்க" கோவியார் சொல்ல

"உங்க சாய்ஸ் விவாஜி" அப்படின்னு பெனத்தாலாரும் சொல்ல

"அய்யா..இது அக்ரி கல்சுர் புரொஜ்கட்.. எனக்கு வேண்டிய கல்சுர் டமில் கல்சுர்..சுத்தமானத் தமிழ்ல்ல கடலைப் போடத் தெரிஞ்சப் பொண்ணு... எஸ்.எம்.எஸ், மெயில், சேட்டிங்ன்னு எல்லாத்துல்லயும் தமிழ் தட்டும் பெண்"

"தமிழ் தட்டும் பெண்...ம்ம்ம்.... தல பாலா.... கேக்குதா விவாஜி விடுற சவுண்ட்... நீ தான் வந்து பதில் சொல்லணும் இதுக்கு" சிபி கிடைச்சக் கேப்பில் கிடா வெட்டுகிறார்,

இங்கே ஒரு பாட்டு வேணும் அப்படின்னு சிபி கிட்டச் சொல்லுறேன்.. அவர் நோட் பண்ணிக்குறார்.அடுத்தாப்புல்ல... நம்ம விவாஜி தன் கடலைச் சேவையை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு கூற வழி தேடுகிறார்.. தமிழ் பதிவு வளர்ச்சி குறித்த விசயம் என்பதால் பேராசிரியர் தருமி அய்யாவைப் பார்த்துப் பேசும் படி அனுப்பி வைக்கிறார்கள்.. விவாஜியின் அதி ஆர்வமான புராஜக்ட் பற்றி கேட்டறியும் தருமி அய்யாவும் தன்னுடைய மாணவனைப் பார்த்து மேற்கொண்டு பேசும் படி விவாஜியிடம் சொல்லுகிறார்...மாணவனும் மாலையில் மதுரை தல்லாகுளம் பஸ் ஸ்டாண்டுக்கு வரும் படி சொல்லுகிறான் அங்கே அனைத்தையும் தெளிய தெளியப் பேசலாம் என்று சொல்லி அனுப்புகிறான்.

"ம்ம்ம் நீங்க பாரின்ல்ல இருந்து தானே வர்றீங்க... வரும் போது உங்க கூட வெள்ளைக்கார பிகர் எதாவது வந்து இருக்குமே....சாயங்காலம் வரும் போது முடிஞ்சா"

"டேய் இதெல்லாம் ஓவர்..." அப்படின்னு சிபி பொங்கும் போது

"இல்லைண்ணே அந்தப் பிகர் மெயில் ஐடி.. சேட் ஐடி அப்படி எதாவது கொண்டு வாங்கன்னு சொல்ல வந்தேன்"

"ஏனுங்க ஆபிசர் இப்போ உள்ளூர் பிகர் கூட எல்லாம் நீங்க கடலைப் போடறதை நிறுத்திட்டீங்களா"

"இல்லைண்ணே.. உள்ளூர்ல்ல ஒருத்தியும் சேட் எல்லாம் பண்ணுறதில்லைண்ணே... எல்.கே.ஜியிலே சேட்டிங் எல்லாம் முடிஞ்சுப் போயிருதுண்ணே.. என்னைய அவுட் ஆப் சிலபஸ்ன்னு சொல்லி சிலிப்பிட்டுப் போயிறாளுங்கண்ணே.."

அந்த மாணவர் யார்ன்னு உங்களுக்கெல்லாம் சொல்லணுமா என்ன? ஆங் அவரே தான் இவரு...சாயங்காலம் ஜிகர்தண்டாவை கலக்கி குடித்து விட்டு.. கொத்து பரோட்டாவுக்குச் சொல்லிவிட்டு

"விவாஜி சார்.. உங்கப் பதிவு மூலமா கடலைப் போடுற புராஜக்ட அவ்வளவு லேசான விசயம் இல்ல...புதுசா பதிவு போடணும்.. அதுக்கு டெம்ப்ளேட் ரெடி பண்ணணும்.. சுமார் 720 லைன் கோடு எழுதணும்... எழுதண கோடு தவிர கண்ட இடத்துல்ல களவாண்டு சுமார் 400 லைன் காப்பி பேஸ்ட் பண்ணனும்.. 300 விட்ஜிட் வைக்கணும்... 200 லிங்க் கொடுக்கணும்... 100 இடத்துல்ல டேக் பண்ணனும்.. 10 திரட்டியிலே சேர்க்கணும்... 5 சங்கத்துல்ல சேர்க்கணும்.. கும்மி அடிக்கணும்.. கும்மி பதிவர்தெய்வங்கள், மொக்க பதிவர் உபதெய்வங்கள், ஜல்லி பதிவர் குட்டி தெய்வங்கள்ன்னு பின்னூட்டம் வாங்கணும்... இதுக்கெல்லாம் மொத்தமா ஏற்பாடு பண்ணனும்.. "

"சின்னத் தல சார் நீங்க தான் அதுக்கெல்லாம் எப்படியாவது ஏற்பாடு பண்ணணும் சார்?"

"பண்ணிரலாம்.. இந்தப் பதிவு மூலமா எவ்வளவு கடலை போடலாம்ன்னும் இருக்கீங்க...?"

"ஒரு நாலாயிரம் கடலை"

"அதுல்ல ரெண்டு பர்சென்ட்.. நாப்பது கடலையை எனக்குக் கொடுத்துருங்க... உங்க வேலையை நான் முடிச்சுத் தந்துடுறேன்"

"உனக்கு எதுக்கு நான் கடலைத் தரணும்... நான் என்ன வங்கக் கடலை விலைக்கு வாங்கவா உன் பர்மிஷன் கேட்டேன்... ஏழைத் தமிழ் மக்கள் கடலைப் போடுறதுக்கய்யா...." விவாஜி பொங்கி எழுகிறார்.

"அண்ணே நீங்க ப்ரீயா கடலைப் போடுங்கண்ணே... போடச் சொல்லிக் கொடுங்கண்ணே.. நான் எல்லாம் இப்படி உங்க தயவுல்ல போட்டாத் தான்னே உண்டு..."

"அனானி.. அவன் கிட்ட கொடுத்த அந்த பாரின் பிகர் மெயில் ஐடியைத் திருப்பி வாங்குப்பா"

"இந்தாங்கண்ணே.. நீங்களே வச்சுக்கங்க... நான் ஆல் ரெடி அவங்களுக்கு என் லேப் டாப்புல்ல இருந்து ஏ.எஸ்.எல் ப்ளீஸ் அனுப்பிட்டேனே..."

"அட கண்றாவியே... இம்புட்டு வறண்ட தேசமாடா நீயு... போடா" என்று புறப்படுகிறார் விவாஜி.."

அடுத்து விவாஜி ஒவ்வொரு இடமாக அலைகிறார்..

"உங்களுக்கு தமிழ் டைப்பிங் தெரியுமா?"

"உங்க ப்ரவுசர் தமிழ் பாண்ட் சப்போர்ட் பண்ணாது போலிருக்கே"
"உங்க இன்டநெட் கனெக்ஷ்ன் சரியில்ல"

"உங்க கீ போர்ட்ல்ல கீ எல்லாம் சரி இல்ல"

"உங்களுக்கு HTML தெரியுமா? எதுக்கும் ஒரு கோர்ஸ் போயிருங்க..."

"உங்க பிளாக் டெம்ளெட் சரியாத் தெரியல்லயே"

"உங்க டெம்ளெட் இந்த விஜிட் எல்லாம் சப்போர்ட் பண்ணாது..எப்படி சேர்த்தீங்க?"

"ம்ம்ம் இந்தப் பதிவைத் திரட்டியிலே சேர்க்க நீங்க இந்தக் கோட் சேர்க்கணுமே"

விவாஜி ஒரு பதிவு இடுவதில் இருக்கும் மொத்தக் குழப்பங்களையும் கண்டு வெதும்பி நொந்து நூலாகி மறுபடியும் தல்லாக்குளம் பஸ் ஸ்டாண்டுக்கே வருகிறார்...

அங்கு மீண்டு நம்ம மாணவன் விவாஜியைச் சந்திக்கிறார்...விவாஜி செலவில் அங்கு போண்டாக்களும் இடலி வடைகளும் பரிமாறப் படுகிறது...அவர் செலவில் செமக் கட்டு கட்டும் வ.வா.சங்கம் சார்ந்த பதிவர்கள்... விவாஜிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து பதிவு போட உதவி செய்கின்றனர்...

ஒரு பதிவு போட இவ்வளவு பாடு படணுமா? யோசிக்கிறார் விவாஜி...


அவருக்குப் பின்னால் வேளாண் தமிழன் விவாஜி ஆன் லைன் கடலை கல்வி மையம்.காம் மெல்ல கிராபிக்ஸ்ல் உதயமாகிறது...


விவாஜியின் பதிவு உதயம் ஆகும் செய்தி புலி மூலம் வெட்டியை எட்டுகிறது..
ஆனா இதுப் பத்தி எல்லாம் கவலைப் படாமல் நம்ம விவாஜி தன்னுடைய புராஜக்ட் ரெக்ரூமெண்ட் விசயமா பெங்க்ளூர் காலேஜ்க்கு பயணமாப் போறார்....


விவாஜியின் கதை இன்னும் வரும்....

Tuesday, August 14, 2007

டெவில் ஷோ: வெட்டிப்பயல் உருவாக்கிய ஆன்மீகப் போலிகள்! - 3

வெட்டி வேரு வாசம், வெட்டிப் பயல் மோசம் ன்னு பாடல் பேக்கிரவுண்டில் ஒலிக்க...வெட்டியை நோக்கி வீறுநடை போட்டார் கவுண்டர். சற்றே திரும்பிப் பார்க்க, சிபியை அங்கே காணோம்! ஆளு எஸ்கேப்பு! கவுண்டர் இதுக்கெல்லாம் கலங்குறவரா என்ன?
அங்கே போயி பார்த்தால்...அம்ச தூளிகா மஞ்சத்தில் வெட்டி...
கன்னியர் புடை சூழ...forbidden appleஐச் சுவைத்துக் கொண்டு இருக்கிறார்! அதைப் பார்த்து ஜெர்க்கான கவுண்டர், கண் சிவக்கிறார்!
முந்தைய பாகங்கள் இங்கே!
Part 1
Part 2

கவுண்டர்: டேய், நரகலோகத்துல என்னாடா இது நாராசம்?
வெட்டி: நரகத்துல உன்னை விட பெரிய பாவி யாரும் இல்லை...அதனால யாருக்கும் பயப்படாதே!
அதே மாதிரி உன்னை விட சின்ன பாவி யாரும் இல்லை...அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!!
- அதே நா ப்ளாக்கு ஸ்லோகன்னு - நான் ஓட்டறது மாருதி வேகன்னு - நூ ரா கண்ணு!

கவுண்டர்: டேய் டயலாக்கு வாயா. எம தூதர்கள் கிட்ட சொன்னேன் வையி - உன் டயலாக்கு வாயி எல்லாம், டங்கு வாயி ஆயிடும் ஜாக்கிரதை!
அது சரி, நீ எப்படியும் இங்க வர வேண்டிய ஆளு தான்! அதுல டவுட்டு லேது!
ஆனா நீ எப்படிடீ ஆன்மிகப் பதிவு பசங்களோடு வந்து சேர்ந்த?
வெட்டி: ஓ அத கேக்கறீங்களா, மிஸ்டர் ஜீ!

கவுண்டர்: டேய்...இன்னா சொன்ன நீ?
வெட்டி: மிஸ்டர் ஜீ...ஏன் மரியாதையா தானே கூப்பிட்டேன்?.
கவுண்டர்: ஓ அப்படியா, மிஸ்டர் வி?
டேய், டேய். நம்மள வச்சி பதிவு போட்டுக்குனு நம்பளுக்கே நெக்கலா?
டெவில் ஷோ-ன்னு ஆரம்பிச்சு அளப்பற பண்ண இல்ல?. அதான் டெவிலுங்க இருக்குற இடத்துக்கே கரெக்டா வந்து சேந்துருக்க!

வெட்டி: கோச்சிக்காதீங்க கவுண்டரே! என்னைப் போல ஒரு பக்திமானை நீங்க பாத்துருக்கவே முடியாது.
கவுண்டர்: ஆமா இவரு அப்படியே துள்ளி துள்ளி ஓடற பக்திமானு...அன்னிக்கி இட ஒதுக்கீடு உண்ணாவிரதப் போராட்டத்துல, இருபது இட்லி துன்னுட்டு, அந்தமான் ஜெயில்ல இருந்தவன் தானடா நீயி? அந்தமான்-ல இருந்தவன்லாம் பக்திமான், சக்திமான் ரேஞ்சுக்கு பேசறாங்களடா சாமீ!


வெட்டி: நான் கர்ணன்-கண்ணன்-ன்னு பதிவு போட்டவன். கங்கைக்குப் புருஷன் சிவனா-சந்துனுவா-ன்னு பதிவு போட்டவன். சுப்ரபாதத்துக்கு எல்லாம் பின்னூட்டம் போட்டவன். அதுனால கொஞ்சம், பாத்து பாத்து, பாத்து பேசண்டி.
கவுண்டர்: ஆமா...பேசண்டி, பாசந்தின்னு, ஆனா ஊனா தெலுங்குல எதுக்குடா பிட்டு போடுற? அவ்ளோ தைரியம் இருந்தா தெலுங்குமணத்துல போயி எழுத வேண்டியது தானே! எதுக்குடா இங்க எழுதி இவனுங்க உயிர எடுக்குற?
சுப்ரபாதத்துக்கு பின்னூட்டம் போட்டானாம்!
டேய் ஒனக்கு குளுருதுன்னா ஒங்க வூட்டுல தீக்காஞ்சிக்கோ? எதுக்குடா சுப்ரபாதப் பதிவ போயி பத்த வச்ச?

வெட்டி: ஹிஹி...சுப்ரபாதம் சூடானா தானே, வெண்பொங்கல் சூடா கெடைக்கும் அதான்!
கவுண்டர்: அடப்பாவி...ஒனக்கு எதுக்குடா கங்கைக்குப் புருஷன் யாரு-ன்னு ஆராய்ச்சி எல்லாம்?
அதுவும் இவரு நாலே நாலு வரியில பதிவு போடுவாராம்! அதுக்கு நாப்பது பேரு, நானூறு பின்னூட்டம் போட்டு மண்டைய ஒடச்சிக்குவாங்களாம்! நான்சென்ஸ்! ஏண்டா டேய்,
அவனவன் தெலுங்கு கங்காவுல தண்ணி வரலைன்னு, அழுவறான்.
நீ என்னாடான்னா கங்காவுக்கு புருஷன் வரலைன்னு பதிவு போட்டுக்கினு இருக்க. நெல்லிக்கா மண்டையா, நொங்கிடுவேன் நொங்கி!

வெட்டி: அப்படி எல்லாம் பேசாதீங்கண்ணே! பதிவ படிச்சா அனுபவிக்கணும், ஆராயக் கூடாது!
கவுண்டர்: மவனே!
பதிவ படிச்சாலும் அனுபவிக்கணும்,
ஒன் கால ஒடிச்சாலும் அனுபவிக்கணும்...
இப்ப நீ அனுபவி, ஆராயாத இன்னா? Guards, இவன அண்டாவுல போடுங்க!
(Guards வெட்டியை அலேக்காகத் தூக்க, கன்னிப் பெண்கள் எல்லாம் "பாவா, பாவா" என்று கூக்குரல் கொடுக்க, கொதிக்கும் அண்டாவில் தூக்கி வெட்டியை வீசுகிறார்கள்)

கவுண்டர்: அடச்சீ...வாய மூடுங்கடி...பாவா பாவான்னு சொன்னீங்க பேத்துடவேன்...பாவீ பாவீ ன்னு சொல்லுங்க!
(பெண்கள் எல்லாரும் வெட்டியைப் பாவீ பாவீ-ன்னு கைதட்டிக் அழைக்க, வெட்டி நொந்து போகிறார். அன்று கரிக்கைச் சோழியைக் கரியாக்கியவர், இன்று அவரே கரிக்கை வெட்டி ஆகிறார்...கரிந்து போன அண்டாவில்)

கவுண்டர்: டேய், நீ ஒரு ஃபேமஸ் கண்ணன் பாட்டு போட்டியாமே! எங்கே, அதைப் பக்தியோடு பாடு! இந்த அண்டா ஜில்லுன்னு ஆகுதா பார்ப்போம்!
வெட்டி: கண்ணா - இதோ உன் பாட்டு! நீ - வந்து அருள் காட்டு!
சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி. அவனைச் சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி!
யே..யே...தில்லாலங்கடி தாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு!
யே..யே...தில்லாலங்கடி தாங்கு, நீ திருப்பிப் போட்டு வாங்கு!
கவுண்டர்:
Guards, இவன இதே அண்டாவுல அப்படியே திருப்பிப் போட்டு வாங்குங்க! (வெட்டியைப் பார்த்து)...டேய்...பரவை முனீம்மா ஒனக்கு பரவை நாச்சியாரா?
இப்ப பாடுறீ...கண்ணன் பாட்டை! நான் பாக்குறேன் நீ படுற பாட்டை!

சேவகர்கள் இரண்டு பேர் ஓடோடி வருகிறார்கள்...கவுண்டரிடம் ஒரு ஓலை கொடுக்கிறார்கள். படித்துப் பார்த்த கவுண்டர்...
ச்சே...இந்த இந்திரன் பயலுக்கு வேற வேலையே இல்ல போல! எதுக்கு இப்ப நம்மள கூப்புடறான்?...கத்திரிக்கா மண்டையன்! ஜி-டாக்ல வர்றத வுட்டுபுட்டு...இவன நேரா வேற போயி பாக்கணுமாம்!
ஃபோன்ல பேசணும்னாலே நாம ரொம்ப கான்சன்ட்ரேட் பண்ணி ஃபோகஸ் பன்ணி பேச வேண்டியிருக்கும்...இதுல நேர்ல வேறயா? ச்சீ....சாட்டிங்-க்ல வாடா பேட்டிங் தலையா!


இந்திரன்: வருக கவுண்டரே!
செந்தில்: நலந் தானா? நலந் தானா? நரகத்தில், உடலும் உள்ளமும் நலந் தானா அண்ணே?
கவுண்டர்: டேய், திரும்பி வந்தேன்னு வையி, உன்னைத் தில்லானா வாசிச்சுடுவேன். பொத்திக்கினு உக்காரு. நீங்க சொல்லுங்க ஆபிசர். எதுக்கு அவசரமா கூப்டீங்க? எனி அர்ஜண்ட் ப்ராப்ளம்?
இந்திரன்: ஆமாம் கவுண்டரே...இன்னிக்கு உங்களுக்கு ஆப்புரைசல்.
கவுண்டர்: அப்பிடீன்னா என்ன ஆபிசர்?...

இந்திரன்: மேலதிகாரியான நான், உங்களுக்கு எது புடிச்சிருக்கு எது புடிக்கலைன்னு அன்பா விசாரிச்சிட்டு, எது புடிக்கலையோ, அதையே அன்பாக ஆப்படி்ச்சிக் கொடுத்துடுவேன். அதுவே புதிய மேனேஜ்மெண்ட் டெக்னிக்!
கவுண்டர்: ஓ, நல்ல சிஸ்டம். இப்ப அதுக்கு நான் என்னா செய்யணும்?
இந்திரன்: உங்களுக்குப் பணி நிரந்தரம் செய்யப் போகிறோம்! உங்களுக்கு எந்த இடம் பிடித்துள்ளதோ அங்கு வேலை செய்யலாம்! சொல்லுங்க, சொர்க்கத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க, நரகத்தையும் கொஞ்ச நாள் பாத்துட்டீங்க! எங்க வேலை பார்க்க பிடிச்சிருக்கு?

கவுண்டர்: (மனசுக்குள்ளேயே...சொர்க்கத்துல வேலை பார்த்தா ஒரே லாபம் இந்தக் குஜால் பிகருங்க தான்...ஆனா அதுக்காக இந்த வாழைப்பழ வாயன் கிட்ட எல்லாம் விகடகவியா வேலை பாக்க நம்மால முடியாது.
அங்கேன்னா, அப்பாவி ஆன்மீகப் பதிவர்கள் எல்லாம் இருக்கானுங்க! வாயில்லாப் பூச்சிங்க! பிரிச்ச மேய அதான் நமக்குச் சரியான இடம்...நம்ம வாழ்வே நம்ம வாயி தானே!)

ஆபிசர்...நான் நரகத்துல இப்ப பாக்குற வேலயே பாத்துக்கறேன் ஆபிசர்! ஐ லைக் இட் வெரி மச்சி ஆபிசர்!
இந்திரன்: ஓ...அப்படியா! சரி இந்தாங்க உங்க அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர், இதில் கையெழுத்து போட்டு விட்டு, உங்கள் விருப்பம் போல் போய் வாங்க! ஆல் தி பெஸ்ட்!
(கவுண்டர் கையெழுத்து போட்டு விட்டு, நரகலோகம் செல் நம்பர் 420க்குத் திரும்புகிறார்)

நரகலோகம் செல் நம்பர் 420யே இருண்டு கிடக்கிறது! ஆல் அண்டாஸ் ஆஃப் ஆயிக் கிடக்குது!
ஆன்மீகப் பதிவன் ஒருத்தனையும் காணோம்!
ஜெர்க் ஆகிறார் கவுண்டர்!

கவுண்டர்: Guards...எங்கடா இங்க இருந்த பாவிப் பசங்க? நான் கொஞ்ச நேரம் அந்தாண்ட போயிட்டு வரதுக்குள்ள பதிவு போடப் போயிட்டானுங்களா? இல்ல எங்காச்சும் கும்மி அடிக்கப் போயிட்டானுங்களா?
எங்கடா அந்த ஜீரா ஜோரா, கேயாரஸ்ஸு டவுன்பஸ்ஸூ எல்லாரும்?
(சேவகர்கள் எல்லாம் கவுண்டரைப் பரிதாபமா பாக்குறாங்க!)
என்னங்கடா இஞ்சி துன்ன இளிச்ச வாயனுங்க கணக்கா லுக்கு வுடறீங்க? வேர் ஆர் தீஸ் பக்கர்ஸ்? டெல் மீ மேன்...டெல் மீ....

சேவகர்கள்: அவிங்க எல்லாம் ஆன்மீகப் பதிவர்கள் இல்லீங்கண்ணே!
கவுண்டர்: பின்னே கோன்மீகப் பதிவருங்களா?

சேவகர்கள்: இல்லீங்கண்ணே...அவங்க எல்லாரும் போலி!
கவுண்டர்:
வாட்! போலியா? அப்படீன்னா...?

சேவகர்கள்: என்னங்கண்ணே....நீங்க தமிழ்மணம் படிக்கறதே இல்லையா? போலி-ன்னா இன்னான்னு தெரியாம இப்படி அப்பாவியா இருக்குறீங்களே!
அவிங்க எல்லாரும் போலிப் பதிவருங்கண்ணே! போலிப் பதிவருங்க!
கவுண்டர்: (இடிந்து போய்) டேய்...என்ன தாண்டா நடக்குது இங்க? புரியிறா மாதிரி சொல்லித் தொலைங்கடா, சொரக்காத் தலையனுங்களா!

சேவகர்கள்: அண்ணே...ஒங்களப் பாத்தாப் பாவமா இருக்குண்ணே!
ஒங்க லொள்ளைத் தாங்க முடியாம, நடிகருங்க நடிகைங்க டைரக்டருங்க எல்லாரும் பாற்கடலுக்குப் போயி கன்ணபிரான் கிட்ட மொறையிட்டாங்க!
கவுண்டர்: அதான் எல்லாச் சினிமாவுலயும் பாக்குறது தானே! நாலு பாட்ட பாடுவானுங்க...அவரு நான் பாத்துக்கறேன்னு சொன்னதும் அந்தாண்ட ஓடுவானுங்க! அப்பறம் என்னடா ஆச்சு?

சேவகர்கள்: என்ன தான் லொள்ளு பண்ணாலும், ஒங்களுக்கு ரசிகர் பட்டாளம் ஜாஸ்தியா இருக்கா! அதான் ஒங்கள நேரடியா போட்டுத் தாக்காம, ஒங்களையே ஒப்புக்க வச்சி, ஒங்க கையாலயே எழுதி வாங்கிட்டாய்ங்க!
நீங்களும் போலிப் பதிவருங்க-ன்னு தெரியாம, ஏதோ எல்லாரயும் டபாய்க்கிற குஷியில, இங்கயே இருந்துக்கறேன்னு எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டீங்கண்ணே!
கொஞ்சம் யோசிக்கக் கூடாதாண்ணே?...ஆன்மீகப் பதிவருங்க எல்லாம் எப்படிண்ணே நரகத்துக்கு வருவாய்ங்க?

கவுண்டர்: அடங் கொக்கா மக்கா! டோட்டல் ஃபிராடு பண்ணி இருக்கானுங்களே! அத்தனையும் போலியா?
டேய், டேய், எனக்குத் துன்னுற போளி தாண்டா தெரியும்! இது என்னாடா இது போலி, ஜாலின்னு, காலி பண்ணுறீங்க?
சேவகர்கள்: எல்லாமே மாயை-ன்ணே, மாயை!
போலியே மாயை! மாயையே போலி!
பாற்கடல்-ல போட்ட திட்டம்-ன்ணே திட்டம்!
பக்தர்களைக் காக்கவும் சொக்தர்களை பேக்கவும் போலியாய் இறங்கி வருவேன்-னு டயலாக் எல்லாம் நீங்க கேட்டதில்லையாண்ணே?

கவுண்டர்: இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்தவன் எவன்டா? அந்த பேரிக்காத் தலையன் செந்திலா?
சேவகர்கள்: ஐயோ, அவுரு நல்லவருண்ணே! கடைசியா நீங்க பேசிக்கிட்டு இருந்தீங்க பாருங்க, ஒரு தில்லாலங்கடி தாங்கு!

கவுண்டர்: ஆமாம், ஏதோ வெட்டிப்பயல், குட்டிப்பயல்-ன்னு பேரைச் சொன்னானுங்களே!
சேவகர்கள்: அவரே தான்! அவரே தான்!
அவரு தான் நாரதர்-ண்ணே! நாரதரோட அவதாரம் தான் இந்த வெட்டிபயல் என்கிற பதிவரு! அவரு போட்ட மாஸ்டர் பிளான்-ல தாண்ணே நீங்க மாட்டிக்கிட்டீய்ங்க!
ஏதோ ஒங்கள வச்சி டெவில் ஷோ நடத்தறேன்னு, டெவில் ஷோ நடத்தறேன்னு நல்லா வசூல் பண்ணாரு! நீங்களும் ஏதோ அவுரு, ஒங்க புகழைப் பறப்பறதா நெனச்சிக்கீட்டங்க! கடைசில இப்படி ஆயிட்டீங்களேண்ணே!

கவுண்டர்: வெட்டின்னு வெட்டின்னு இப்பிடி வெட்டிப்புட்டானே...கடங்காரன்!
இதுக்கு குட்டி குட்டின்னு நானு சொர்க்கத்துலேயே இருந்திருப்பேனே!
அடேய் வெட்டி, புட்டி, குட்டி, சட்டி, ரொட்டி....

இடி மேல் இடியாக இறங்கிய கவுண்டர், இடி தாங்கியாகத் தரையில் உட்கார்ந்து புலம்ப....
பேக்கிரவுண்டில் பாடல் ஒலிக்கிறது....
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வெட்டியே வகுத்தடடா! - கவுண்டா!
வருவதை எதிர்கொள்ளடா
!
ட்டொங் டொங் டொய்ங்க்.....ட்டொங் டொங் டொய்ங்க்.....
சுபம்!!!

Doctor ஆவலியோ Doctor


ஷங்கரு, விஜய்க்கு, ஷில்பா ஷெட்டிக்கும் எல்லாம் டாக்டர் பட்டம் தரும்போது நம்ம பதிவர்களுக்கு நாம டாக்டர் பட்டம் குடுத்தா என்னான்னு ஒரு யோசனை. காரணமில்லாம நாங்க டாக்டர் பட்டம் குடுக்கலைன்னு சொன்ன அந்த பல்"வலி"கலைக் கழகத்துக்கு போட்டியா நாமும் காரணத்தை அடுக்குவோம்ல. அதனால கீழ்க்காணும் சாதனையும் "டாக்டர்" பட்டமும்.



  • கொலை வெறி கவிதை ஆரம்பிச்சதுக்காக- சிபி, மஹி

  • உப்புமா பதிவு-பெனாத்தல்

  • விக்கிட்டா தண்ணி குடிக்காம இருந்ததுக்காக- கொத்ஸ்

  • வூடு கட்டி அடிச்சதுக்காக- டீச்சர்

  • மொக்கை மட்டுமே போட்டதுக்காக- செந்தழல் ரவி

  • அடுத்தவங்க பதிவை வெச்சு மட்டுமே பதிவு போட்டதுக்காக-செல்லா

  • டவுசரை கிழிச்சுக்கிட்டதுக்காக- லக்கி

  • நெசமாலும் நல்ல பதிவு போட்டதுக்காக-மா.சிவக்குமார்

  • லீவ் விட்டதுக்காக- தேவ்

  • பூ படமா போட்டதுக்காக-ராம் (யார் கூட போய் பூ பார்த்தீங்க?)

  • பேங்க கதைக்காக-கப்பி
  • சும்மானாச்சுக்கும் மின்னலுக்கும்

  • Deja vu பத்தி என்னனே தெரியாம எழுதனதுக்காக-வெட்டி

  • பாஸ்போர்ட்-??????

  • எலிய பூனைக்கிட்டே தொலைச்சதுக்காக- பொன்ஸ்

  • கும்மி ஸ்பெஷல்-சு.திவாகர்

  • சோகக் கவுஜ, படம்- கவிதாயினி

  • போன்ல அனானி-கண்மணி அக்கா

  • ஆன்மிக அப்ரசெண்டுகள்- KRS, ஜி.ரா, VSK, குமரன்,வல்லி சிம்ஹன்,தேசிகன்.

  • சும்மா என் ஆசைக்காக கோவிக்கும்

  • கலாய்ச்சல் தாங்காம அடிக்கடி காய்ச்சல் வரும் பாலபாரதிக்கும்

  • கவிதை அர்த்தம் சொன்ன-குசும்பன்

  • பதிவுலக சுஜாதான்னு பேர் வாங்கின - அய்யனாரு

  • பாவனாவுக்காக கலைச் சேவை செய்த தம்பி
  • பொடி போட்டதுக்காக சுதர்சன்
  • பொட்டி வெச்சதுக்காக வாத்தியார்
  • பதிவுலகத்தை விட்டு போனதற்காக ராசா
  • சர்வே போடும் சன்
  • படம் போடும் சின்ன குட்டி அண்ணன்
  • mobile படம் போடும்- சீவிஆர்

  • கொசுவை பத்தின பெரிய பதிவு போட்டு அறிவியல் ஆராய்ச்சி செஞ்சதுக்காக புலிக்கும்

  • பெண்ணீயம்- மோஹன் தாஸ்

  • ஆணீயம்- உஷாக்கா

  • பித்தளை-அண்ணாச்சி

  • இவ்வளவு பேர்க்கு டாக்டர் பட்டம் குடுத்ததனால நானும் இனிமே டாகட்ர்தான்

லிஸ்ட்ல டாக்டர் பட்டம் வாங்காதவங்க நேரா சங்கத்து வந்து வாங்கிங்க. ALL free, டாக்டர் பட்டம் எல்லாம் இனிமே சும்மாதான். இனிமே பதிவர் வட்டம்ன்னு இருக்கிறதுக்கு பதிலா டாக்டர்ஸ் பட்டம் சே சே டாக்டர்ஸ் வட்டம்னு அந்த கருவேலம் பட்டையில மாத்த சொல்லுவோம்.



Friday, August 10, 2007

மொக்கை போட்டி முடிவுகள்!


இன்னும் யாரும் சரியா அர்த்தம் சொல்ல முடியாத ஒரே வார்த்தை "மொக்கை". ஏன்னா இதுக்குன்னு ஒரு வடிவமோ, அழகோ இல்லே. சரி, இப்படியே மொக்கை போட்டா எப்படி? போட்டியில கலந்துகிட்டவங்கள்ல அஞ்சு பேரை கடைசி சுத்து வரைக்கும் வந்தாங்க. அதை போன பதிவிலேயே சொல்லி இருந்தோம். மொக்கை போடாம இந்த முடிவை அறிவிச்சுடறோம்.




மொக்கை கிங் 2007


"செந்தழல்" ரவி!


ஒன்னுமே இல்லாத விசயத்தை பெரிசு பண்ணி சூடாக்குறதுல ரவி'ய அடிச்சுக்க இன்னும் ஆள் வரவே இல்லே. இப்படி மொக்கைன்னு ஒரு trend set பண்ணினதும் ரவிதான். வாழ்த்துக்கள் ரவி!





Thursday, August 9, 2007

வெட்டி கலக்கும் விவாஜி The Farmer

கதைச் சொல்லி ஒரு நாள் ஆன நிலையில் சின்னத் தல கிட்ட இருந்து எந்த பதில் போனும் வர்றல்ல. சரி கதையைப் பிடிக்கல்ல போலிருக்குன்னு முடிவு பண்ணும் போது தான் அந்த போன் வந்துச்சு

லைன்ல்ல வந்தது தல.. ஆமாங்க ஹூடி..ஹூடின்னு மகுடியில்ல மயங்கிப் போன சங்கத்து சிங்கம் தல கைப்புள்ளயே தான்..

"உன் கதையைப் படிச்சேன்.. ஆரம்பம் எல்லாம் அசத்தலாத் தான் இருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு.. அதுவும் விவாஜிங்கற அந்த பேர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஆனா யார் நீ..? சங்கத்துக்குள்ள எப்படி வந்த.. ? விவரத்தைச் சுருக்குன்னுச் சொல்லு...கிளையண்ட் வந்து என்னைக் களைப் புடுங்க கழுத்துல்ல கிடக்க கார்டு கயித்தோட இழுத்துகிட்டு போறதுக்குள்ளேச் சொல்லு"

"என் அறிமுகம் இருக்கட்டும் தலண்ணே.. நான் ஒரு சின்னப் பொடியன் தலதலண்ணே.. .. நம்ம விவாஜியில்ல ஒரு முக்கிய ரோலுக்கு ஒரு முக்கியமான ஆளு வேணும் தலண்ணே.. உங்க செல்வாக்கைப் பயன் படுத்தி அவர் சம்மதம் வாங்கி தாங்கதலண்ணே.. "

"ஆகா அது என்ன ரோலு.. சொல்லு... விவாஜின்னு நீ படம் எடுக்குற அந்த ஒரே காரணத்துக்காகவே நானே நடிச்சித் தர்றேன் காசு கூட வேணாம்ய்யா"

"தலண்ணே.. அந்த ரோல் உங்களுக்கு செட் ஆகாது.. ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்களே"

"ஏன்? அப்படி என்ன ரோல் அது...? என் நடிப்புக்கு சவால் விடுற ரோல்..?" தலண்ணே போனிலே டென்சனாக

"தலண்ணே.. அது வில்லன் ரோல் தலண்ணே.."

"ஆமா சரி தான்.. நான் வில்லனா நடிச்சா நாடே நாகரீகம் கெட்டுப் போயிருமே... சரி யாரை வில்லனாப் போடப் போற.. நான் வேற ரெகமண்ட் பண்ணனும்ன்னு சொல்லுற.."

"தலண்ணே.. வில்லன் கேரக்டர் பேர் "வாரங்கல் வெட்டிகாரு" இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்குமே.." நான் இழுக்க..

"அட என்னப்பா நீயு.. அவன் சாதுவான ஆள் ஆச்சே.. அவனை வில்லனா நினைச்சுக் கூடப் பாக்க முடியல்லயே.. அது மட்டுமில்லாம ஆந்திராவுல்ல அவன் ரேஞ்சு வேற ஆச்சேப்பா.. ஜனங்க ஒத்துக்குவாங்களா.. விவாஜிக்கு அவன் தம்பி மாதிரி இல்ல நம்ம மக்கள் மனசுல்ல அவன் இமேஜ் இருக்கு" தலண்ணே காரணம் எல்லாம் சொல்ல..

"தலண்ணே நான் கதையைச் சொல்லுறேன் நீங்களே அப்புறம் சொல்லுங்க "அப்படின்னு நான் இழுக்க

"ஓ.கே..சட்டுன்னு சொல்லு" அப்படின்னு தலண்ணே சிக்னல் கொடுக்க...

நம்ம கதையை பிளாஷ் பேக்ல்ல ஸ்டார்ட் பண்ணுறோம்.
அப்படியே கதைக்காக கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் போறோம்...

அங்கே கோயம்புத்தூர்ல்ல இருந்து வர்ற பஸ் டாப்ல்ல செம ஸ்டைலா ஆரஞ்ச் பேண்ட் அப்புறம் கருப்பு சட்டை கூலிங் கிளாஸ் சகிதமா நம்ம விவாஜி வர்றார்.... அவரை வரவேற்க ஒரு பெரிய கூட்டமே நிக்குது...

தளபதி சிபி படு ஸ்மார்ட்டா ஒயிட் அன்ட் ஒயிட் யூனிபார்ம்ல்ல நிக்குறார்.. அவரைச் சுத்தி ஒரு ஒயிட் அன்ட் ஒயிட்ல்ல ஒரு கும்பல் ஸ்மோக் எபெக்ட்ல்ல நிக்குது

"ஹாய்...ஹாய்...ஹாய்.. நான் தான் கோவி.கண்ணன்.. ச்சே சாரி ஆவி அண்ணன்.. எல்லாரும் விவாஜியைப் பாக்க வந்தீங்களா?" அப்படின்னு கேட்டுகிட்டே என்டிரி கொடுக்குறார் சிபி...

அங்கே பெனாத்தல் சுரேசும் கோவி.கண்ணனும் ( நிஜமான கோவி.கண்ணன் தான்) நிக்குறாங்க...சிபி நிஜமான கோவி.கண்ணனைப் பார்த்து லைட்டா ஜெர்க் ஆகிறார்.

"HI WE R THE RECRUITERS OF VIVAJI "அப்படின்னு பினாத்தலார் சொல்ல

"ஓ.."அப்படின்னு சிபி கூட வந்த ஓயிட் அன்ட் ஓயிட் கும்பல் சவுண்ட் விட...

ஆகா விவாஜியை வேலைக்குச் சேர்த்தவங்களைப் பார்த்ததுக்கே இந்த எபெக்ட்ன்னா விவாஜியைப் பார்த்தா என்னாகுமோன்னு சிபி சொல்ல.. விவாஜி வந்த பஸ் பிரேக் அடித்து விவாஜி பறந்து வருகிறார்...

வாவ் என ஓயிட் அன்ட் ஓயிட் கூட்டம் கத்துறாங்க...
சும்மா தியேட்டரே கதறுதுல்ல...



சிபியைப் பார்த்து விவாஜி ஹே அனானி எப்படி இருக்க? அப்படின்னு கேக்க

யார் நான் அனானியா... அண்ணா நீன்னு கூப்பிடு அது தான் ஒனக்கு மரியாதை அப்படின்னு சொல்லுறார் சிபி..

"இவங்க எல்லாம் யார் மேன்?" அப்படின்னு விவாஜி கேக்க...

"இது ஆவி அண்ணாச்சி.. இது ஆவி அம்மணி..இது ஆவி அண்ணா, இது ஆவி தம்பி... "

"ஆக இதெல்லாம் அனானி தானே?" அப்படின்னு விவாஜி டபாய்க்கிறார்.


விவாஜியின் டிராக்டரில் விவாஜி, சிபி, மற்றும் விவாஜியின் புதிய கம்பெனி ரெக்ரூட்டர்ஸ் எல்லாரும் சேர்ந்து கிளம்புறாங்க.. மவுண்ட் ரோட்ல்ல ஷாட் வைக்கிறோம்

"விவாஜி இப்போ எல்லாம் கடலை போடுறது அல்ட்ரா மாடர்ன் ஆகிருச்சு நம்ம சென்னையிலே...மொபைல்... லாப்டாப்..பிராட் பேண்ட்.. இப்படி வேர்ல்ட் ரேஞ்சுக்குப் போயிட்டு இருக்கோம்.."


"IS IT COOL"

அப்போது தேனாம்பேட்டை எஸ் ஐ டி கல்லூரி வாசல் சிக்னலில் விவாஜியின் டிராக்டர் நிற்கிறது. அங்கே ஒரு விடலை பையன் பஸ்ல்ல இருக்கும் காலேஜ் பொண்ணு மேல பேப்பர் அம்பு விட விவாஜி பயங்கர பீலிங் ஆகிறார்.

"ம்ம் எஸ்.எம்.எஸ், எம்.எம்.எஸ்,வாய்ஸ் மெயில், இன்ட்ர் நெட், வயர்லெஸ் இப்படி கடலைப் போட என்னவெல்லாமோ வந்தாச்சு..ஆனா ஏழை மாணவர்கள் கடலைப் போட இன்னும் இந்த பேப்பர் ஏரோ தானே...அது இன்னும் மாறல்ல "

விவாஜி இறங்கிப் போய் அந்த பையனுக்கு தன்னுடைய மொபைல் போனை சும்மா தருகிறார்...அப்போ அதில் ஒரு மெசேஜ் வர் வைப்ரேட்டர் அடிக்கிறது....பையன் கையில் இருந்து செல் வைப்பரேட்டர் அதிர்ச்சியில் எகிறி விழப் போக அதை ஸ்டலா பிடிக்கும் நம்ம விவாஜி கேமராப் பார்த்து பஞ்ச் வைக்கிறார்

மெசெஜ் வந்தா சும்மா செல் எகிறுதுல்ல

அடுத்து சீன் அப்படியே கட் ஆகி ஒரு பதிவர் சந்திப்புக்கு போவுது...

(தலண்ணே இங்கே ஸ்பெஷல் ரோல் பண்ணுறார்.. அவர் கூடவே நம்ம கிடேசன் பார்க் மக்களும் ஸ்பெசல் அப்பியரன்ஸ் தர்றாங்க)

"ஏன் விவாஜி கோயம்புத்தூர் விட்டு இங்கே வந்துருக்கீங்களே.. என்னப் பண்ணப் போறீங்க?" பெனத்தலார் கேட்கிறார்

"அது ஒண்ணும்ல்ல கிராமம் கிராமமா போய் கடலை வளர்த்து சாகுபடி பண்ணியாச்சு. இனிமே சென்னையிலேத் தான் வங்கக் கடலைப் பாத்துகிட்டே கடலைப் போடப் போறேன்... இனி வேற எங்கேயும் போக மாட்டேன்"

"ஏன் விவாஜி இது வரைக்கும் ஒரு ஆறு கோடி கடலைப் போட்டிருப்பீயா?" சிபி கேக்குறார்..

""இல்லை அதுல்ல ஒரு பத்துக் கொறைச்சுக்கோ"

தமிழ்ல்ல கடலை போட முடியாதுங்கறது இல்ல..இங்கே யாரும் சரியாக் கடலைப் போடுறது இல்ல அதான் பிரச்சனை..அதுக்காக எதாவது செய்யணும்ன்னு தான் நான் வந்துருக்கேன்... வெள்ளைக்காரனைப் பாருங்க விதம் விதமா கடலைப் போடுறான்.. இந்திக்காரனும் அவன் பங்குக்கு பக்காவாக் கடலைப் போடுறான். ஆனா நாம இன்னும் கடலைப் போடுறவனைப் பார்த்து பொங்கி பொங்கியே பொழப்பைக் கெடுத்துகிட்டு இருக்கோம்.. அது மாறணும்.." அப்படின்னு நம்ம விவாஜி மைக் பிடித்து பேசும் அதே நேரம் பயங்கர கெட்டப்புல்ல ஆந்திரா மடிப்பு வேஸ்ட்டி கட்டிகிட்டு ஒருத்தர் உள்ளே வர்றார்...

"விவாஜி இது தான் வாராங்கல் வெட்டிகாரு.. பெரிய பதிவர்.. இவருக்கு பிளாக் ஸ்பாட் வேர்ட்பிரஸ் அப்படின்னு எக்கச்சக்கப் பதிவு இருக்கு... ரொம்ப பெரிய கை.. பதிவு சைஸ்க்கு பின்னூட்டமே போடுற அளவுக்கு முக்கியமான புள்ளி " அப்படின்னு சிபி விவாஜிக்கு வெட்டிகாருவை அறிமுகம் செய்து வைக்கிறார்.


"அய்யோ அவர் மிகையாச் சொல்லுறார்..நான் வெறும் வெட்டிப் பயல் தாங்க..ஓட்டணும்ன்னு அவரே என் பெயர் கூட 'காரு' சேத்துச் சொல்லிக் கலாய்க்கிறார்.. உங்களுக்கு என்ன உதவி வேணுமோ கேளுங்க நானே செய்யுறேன்.."

வெட்டிகாரு கையை மடக்கி கும்பிட பக்கத்தில் நிற்கும் புலிக்குட்டி படு பவ்யமாய் ஒரு கார்டை நீட்டுகிறார் அதில் vettttipayal.blogspot.com, vettipayaal.wordpress.com... etc அப்படின்னு நிறைய இருக்கு. விவாஜி அதை வாங்கிப் பாக்கெட்டுக்குள் வச்சிக்குறார்.


அவர் போனதும்... மியூசிக் அலறுது...அப்பா என்னப்பா இது விவாஜி இருக்க ஊர்ல்ல இப்படி கச்சாம்புச்சான்னு பாட்டு சுசீலா அம்மா பாடுன்ன பாட்டைப் போடுங்க அப்படின்னு ஒரு கொரலு பாரத்தா ஜி.ரா நிக்குறார்...

சுசிலா அம்மா பாட்டு ஸ்டார்ட் ஆகி அப்படி ரீமிக்ஸ்ல்ல... பாட்டு பட்டையக் கிளப்புது...

(பாட்டுல்ல பார் ஏ சேஞ்ச் நம்ம சிபி நயந்தாராவோடு ஒரு பல்லவிக்கு பக்காவா குத்துப் போடுறார்)

இதுக்கு அப்புறம் நம்ம விவாஜி வெட்டிகாருவைச் சந்திக்கப் போறார்...
அங்கே....உதவி கேட்டுப் போன விவாஜியை உக்கார வைக்கிற வெட்டி டேபிள்ல்ல ஒரு இன்டர்னேஷ்னல் எபெக்ட்க்காக பில் கிளிண்டனும் ஹிலாரியும் இருக்க போட்டோவை வைக்கிறோம்... பின்னாடி பெரிய சைஸ்ல்ல தலண்ணே கைப்புள்ளவோட போட்டோவையும் வைக்கிறோம்

"இந்தாங்க விவாஜி.. இது உங்க ஜிடாக் ஐடி...அப்புறம் இது ஆர்குட் ஐடி...இது யாஹூ ஐடி... எல்லாம் நானே உக்காந்து உங்களுக்காக கிரியேட் பண்ணிட்டேன்.. இதுல்ல போய் லாகின் பண்ணி ஆரம்பிச்சீங்கன்னா உங்க கடலை கடல் தாண்டி கலகலன்னு கொடி கட்டும்"


"வெட்டிகாரு நாங்க பதிவு போட்டு பின்னூட்டக் கடலை போட வழி கேட்டா.. நீங்க வேற எதோ சொல்லுறீங்களே"ன்னு சிபி இழுக்க


"ம்ஹும் அதெல்லாம் சரி வராதுங்க.. நான் ரெண்டு பதிவு வச்சிருக்கேன் பிளாக்ஸ்பாட்ல்ல ஒண்ணு வேர்ட்பிரஸ்ல்ல ஒண்ணு..பிளாக்ஸ்பாடல்ல ஒரு பதிவுக்கு நூறுல்ல இருந்து நூத்தி இருவது பின்னூட்டம் வரைக்கும் வாங்குறேன்... வேர்ட்பிரஸ்ல்ல அம்பதுல்ல இருந்து தொண்ணூறு வரைக்கும் வாங்குறேன்... இப்போ நீங்களும் பதிவு பின்னூட்டம்ன்னு பங்கு போட வந்தா நான் என்னப் பண்றது..?" வெட்டிகாரு லைட்டான கோவம் காட்ட...

"பரவாயில்லங்க..நானே கடலைப் போட வழி பாத்துக்குறேன் " அப்படின்னு விவாஜி எழும்ப..

"இப்படி தான் இதுக்கு முன்னாடி பதிவு போடுறேன்னு.. பட்டையக் கிளப்புறேன்னு நிறைய பேர் வந்தாங்க.. அவங்களுக்கு எல்லாம் தெலுங்குல்லே பின்னூட்டம் போட்டு பீதியக் கிளப்பிட்டோம்ல்ல.." அப்படின்னு புலி பாய..

"மிரட்டுறீங்களா? இந்த விவாஜி கண்டிப்பா கடலைப் போடுவான்.. ஒரு நாளைக்கு மூணு பதிவு போட்டு முன்னூறு பின்னூட்டம் போட்டு கடலைப் போடுவான்.. நீ என்ன பண்ண முடியுமோ பண்ணு "

என்று வாசலில் இருக்கும் டிராக்டர் நோக்கி ஸ்லோ மோஷனில் போறார் விவாஜி கூட நம்ம சிபியும் போறார்...

"ஆகா சூட்டைக் கிளப்புதே கதை... கிளையண்ட் மண்டை வேற முக்குல்ல தெரியுது.. வந்து நான் முழிக்க முழிக்க முன்னூறு கேள்வி கேப்பானே... சரி அது எம் பிரச்சனை உனக்கு எதுக்கு.. இந்தாப் பொடியா இதுவரைக்கும் ஓ.கே.. நாளைக்கு சாயங்காலம் வெள்ளி கிழமையாச்சா.. வெள்ளைக்கார கிளையண்ட்க்கு உள்ளூர் குவார்ட்டர் வாங்கி ஊத்திவிட்டுட்டு வந்துருறேன்.. மீதி கதையை விளக்கமாச் சொல்லு.... ஆன் ஒரு சின்னக் கரெக்ஷன்...."

தலண்ணே சொன்ன கரெக்ஷன் கீழே சேர்த்தாச்சு.... மீதி கதையை நாளைக்கும் சொல்லுவோம்....

இன்றைய பதிவில் அறிமுகம் ஆகும் சங்கத்து சிங்கங்கள் வெட்டி, சிபி, புலிக்குட்டி, மற்றும் பாசத்துக்குரிய நண்பர்கள் பெனத்தாலர், கோவி.கண்ணனுக்கு நன்றிகளோடு பதிவின் இந்தப் பகுதியினைச் சமர்பிக்கிறேன்.

கிடேசன் பார்க் மக்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

போனப் பதிவில் அபி அப்பாவுக்கு சொல்ல மறந்த நன்றி இந்தப் பதிவில் சொல்லிக்குறேன்

தலண்ணே கைப்புள்ள அவர்கைன் பேராசியோடு
சின்னத் தல ராயலாரின் உறுதுணையோடு

சங்கம் புரொடக்ஷ்ன்ஸ்
பெருமையோடு வழங்கும்

விவாஜி - THE FARMER

Wednesday, August 8, 2007

விவாஜி - THE FARMER

சின்னத் தல ராயலாரின் நல்லாசியோடு சங்கம் புரொடக்ஷன்ஸ் வழங்கும்

விவாஜி - த பார்மர்

"எலேய் பொடியா கதையைச் சீக்கிரம் சொல்லு.. எங்க டேமேஜர் எந்நேரம் வேணும்ன்னாலும் வந்து என் டவுசரைக் கிழிப்பான்.. " சின்னத் தல கான் கால் போட்டுவிட, நான், அடியேன் சின்னப் பொடியன் கதையோட ஓப்பனிங் சீனைச் சொல்ல ஆரம்பிச்சேன்..

எடுத்த உடனே.. அந்த ஆறாயிரம் பேர் வேலைப் பாக்குற சங்கம் டெக்னாலஜீஸ் ஆபிஸ் கேம்ப்ஸை டாப் ஆங்கிள்ல்ல காட்டுறோம்... பின்னாடி ஓன்னு மியூசிக்...

கேமராவை ஜூம் பண்றோம்..
அப்படியே ஒரு சிஸ்டம் ஷட் டவுண் ஆகுது..
மானிட்டர் ஆப் ஆகுது..
கனெக்ஷ்ன் ஓயர் எல்லாம் கழட்டுறாங்க..
நம்ம ஹீரோவை அப்படியே பிடிச்சி எழுப்பி கூட்டிட்டு போறாங்க...

கையைப் பிடிச்சுட்டு இழுத்துட்டுப் போகும் போது ஆபிஸ்ல்ல ஒரு ஒரு டிபார்மெண்ட்ல்ல இருந்தும் மக்கள் சவுண்ட் விடுறாங்க..

"அய்யோ எங்க பார்மர் எங்களுக்கு எல்லாம் மாசம் பத்தாயிரம் பேருக்கு கடலைப் போடுறது எப்படின்னு ஐடியா கொடுத்தாரே அவரைப் போய் இப்படி பிடிச்சுட்டுப் போறீங்களே"

"ஆறு வருசமா சேட்டிங்க்கெ இல்லாத எங்க ஆபிஸ்க்கு எங்க பார்மர் ஒரு வாரத்துல்ல சேட்டிங் சாப்ட்வேர் எல்லாம் டகால்டியா டவுண்லோட் பண்ணிக் கொடுத்தாரே"

"எங்க பார்மர்க்கு மட்டும் மறுபடியும் சிஸ்டம் கொடுக்கல்ல தமிழ் இணையமே மொக்கையாயிடும்.. ஜல்லி அள்ளி தெறிக்கும்...ஆமா" என சில இளைஞர்கள் ஆவேசப் படுகிறார்கள்.

"அவனை கொறைஞ்சப் பட்சம் பத்து மாசமாவது பெஞ்ச்ல்ல உக்கார வைக்கணும்ய்யா.. நான் சேட் பண்ண பிகரைக் கூட கிடைச்சக் கேப்ல்ல உஷார் பண்ணிட்டான்..." டாப் மேனேஜ்மென்T சொட்டை ஒண்ணு பார்மர் மீது எரிச்சல் கொள்கிறது.

"எஸ் எஸ் அவனை பெஞ்ச் விட்டு எழுப்பவே கூடாது... ஆன் சைட் பிகரை கூட அபேஸ் பண்ணிட்டான்..WE SHOULD NOT LEAVE HIM" இன்னொரு மேனேஜர் பக்க வாத்தியம் வாசிக்கிறார்.

அப்படியே சீன் பெஞ்ச்கு மூவ் ஆகுது...

அட்மின் கேபின் அங்கே நம்ம ஹீரோ நிக்குறார்...

அட்மின் எக்ஸ்கிட்டிவ் நம்ம பார்மரைப் பார்த்துக் கேக்குறார்...

பெயரு.... விவாஜி
தொழில்.. கடலைப் போடுறது...சாரி கோடு எழுதுறது...

அப்புறம் பெஞ்ச்ல்ல போய் உக்காராரு நம்ம பார்மர்.. அங்கே பக்கத்து பெஞ்ச்ல்ல நம்ம அபி அப்பா (கெஸ்ட் ரோல்)

"ஆமா நீ எதுக்குப் பெஞ்ச்க்கு வந்த.. பிராஜக்ட் முடிஞ்சு போச்சா?"

குனிந்தப் படி பார்மர் இல்லை என தலையை ஆட்டுகிறார்...

"அப்புறம் பெர்மான்ஸ் சரி இல்லையா?"

மறுபடியும் பார்மர் குனிந்த தலை நிமிராமல் இல்லை எனத் தலை ஆட்டுகிறார்.

"எதாச்சும் ட்ரெயினிங்கா...?"

அதற்கும் இல்லையெனத் தலையாட்டா அபி அப்பா கடுப்பாகி அப்புறம் என்ன இழவுக்குய்யா இங்கே வந்து குந்திகிட்டு இருக்கன்னு சவுண்டா கேக்க

பயங்கர மீசிக் இங்கேப் போடுறோம்....அப்படியே கேமராவை கன்னாபின்னான்னு ஆங்கிள் வச்சு தரையிலே இருந்து பார்மர் தலையைத் தூக்குறதை எமோஷனலாக் காட்டுறோம்...
பார்மர் சிரிச்சிகிட்டே சவுண்டா சொல்லுறார்....

வேலைச் செஞ்சேன்ய்யா

அடப் பாவமே வேலைச் செஞ்சா பெஞ்சா... அபி அப்பா எமோஷனலாக
மறுபடியும் பார்மர் சிரித்துக் கொண்டே சொல்லுறார்..

பார்மர்ன்னா விவசாயி.. இந்த விவசாயிக்குத் நல்லாத் தெரிஞ்ச வேலை.. கடலைச் சாகுபடி பண்ணுரது.. அதைச் செஞ்சேன்....

அப்படின்னு சொல்லிட்டு ஹா...ஹா...ஹா...ன்னு அவர் பாணியிலே சிரிக்குறார்

"இது தான் சின்னத் தல நம்ம படத்தோட ஓப்பனிங்.. ஓகேவான்னு" நான் பயந்துக் கேக்க...

சின்னத் தல கான் கால் லைன்ல்ல தமிழ் மணத்தின் உச்ச நட்சத்திரமே லைன்ல்ல வந்தார் அவர் குரலைக் கேட்டு நான் ஆடிப் போயிட்டேன்...

"ம்ம்ம் டேய் சின்னப் பொடியா உன் ஓப்பனிங் எல்லாம் நல்லாத் தான் ஆனா பினிசிங் சரியா இருக்குமான்னு" அவர் கேக்க ....

"அண்ணே மீதி கதையையும் சொல்லுறேன் கேக்குறீயளா" அப்படின்னு கேட்டேன்...

"இப்போ நான் ரொம்ப பிசி பேஸ்கட் பால் பிராக்டீஸ்ல்ல இருக்கேன்.. டூமாரோ கால் பண்ணி கன்டினியூ பண்ணு" அப்படின்னு போனை வச்சிட்டார்...

அப்போ மீதியை நாளைக்குப் பாக்கலாமா இல்லை இத்தோட நிறுத்திக்குவோமா மக்களே நீங்களே சொல்லுங்க...

டெவில் ஷோ: கவுண்டர்-ஆன்மீகப் பதிவர்கள்-ஒண்டிக்கு ஒண்டி! - 2

நரகத்தில் மாட்டுப்பட்ட ஆன்மீகப் பதிவர்களை நோக்கி, நம்ம கவுண்டர் ஒரு ராஜ நடை நடந்து வருகிறார். சேவகர்கள் வழி விடுகிறார்கள். அங்கே முதல் அண்டாவில் தளதள என்று மிதக்கும் கண்ணபிரான் ரவிசங்கர்! முந்தைய பாகம் இங்கே!

கவுண்டர்: ஹே மேன்...வாட் இஸ் யுவர் நேம்?
ரவி: அடியேன் Kannabiran Ravi Shankar (krs)
கவுண்டர்: டேய், இதுல எதுடா உன் பேரு? அடியேனா? கண்ணபிரானா? ரவியா? சங்கரா? krsஆ?
ரவி: யார் யார் என்னை எப்படி எப்படி அழைக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் நான் அப்படி அப்படித் தெரிவேன்!
கவுண்டர்: டேய் பள்ளி கொண்ட மண்டையா, இது தானே வேணாங்கறது! அப்படி அப்படி தெரியறதுக்கு நீ என்னா சீரியல் செட் லைட்டா?

சரி...அது இன்னாடா அது மாதவிப் பந்தல்? ஒனக்கு வேற பேரே கெடைக்கலியா?
கலைஞர் கண்ணகிக்கு சிலை வச்சாரு சரி!....நீ இன்னா அவருக்குப் போட்டியா, மாதவிக்கு பதிவு வைக்கறியா?
டான்ஸ் ஆடுற பொண்ணு பேர எல்லாம் எதுக்கு மேன் பதிவுக்கு வைக்கறீங்க?

ரவி: ஐயோ கவுண்டரே! அது சிலப்பதிகார மாதவி இல்லை....
கவுண்டர்: பின்னே ராஜ பார்வையில் கமல் கூட ஜோடி போட்டுச்சே, அந்த மாதவியா?
டேய் திருப்பதி லட்டு மண்டையா...வைக்கறது தான் வைக்கற!
ஒரு சிம்ரன் பந்தல், த்ரிஷா பந்தல், அசின் பந்தல், ஷ்ரேயா பந்தல்-னு வச்சா என்ன கொறைஞ்சா போயிடுவ?
வந்துட்டானுங்க மாதவிப் பந்தல், தண்ணீர்ப் பந்தல், மோர் பந்தல்-ன்னு...பந்தல் போடறதுக்கு!

ரவி: ஐயோ, என்னைப் பேச விடுறீங்களா! இது அந்த மாதவி எல்லாம் கிடையாது!
கண்ணன் வீட்டில் ஒரு பந்தல் இருக்கும்; அதில் செண்பகப்பூ கொடிகள் படர்ந்து இருக்கும்; அதுக்கு மாதவிப் பந்தல்-ன்னு பேரு.
கவுண்டர்: டேய், நீ இன்னா கண்ணன் வூட்டு கேர் டேக்கரா? இல்ல ட்ரவுசர் போட்ட தோட்டக்காரனா?
என்னமோ செடி வளருதாம், கொடி வளருதாம்! கதை வுடறானுங்கப்பா....
ரவி: அச்சோ அச்சோ, "மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் கூவின காண்" ன்னு திருப்பாவையில் வருமே! நீங்க படிச்சதில்லையா கவுண்டர் ஐயா?

கவுண்டர்: ஐயோ! கொல்லுறானே, கொல்லுறானே! அடேய், அடேய், எதுக்குடா ஆன்னா ஊன்னா ஒரு பாட்ட எடுத்து வுடறீங்க?
பாடாதீங்கடா...பேசுங்கடா...அதுவும் புரியறாப் போல தமிழ்-லலலலல பேசுங்கடா.....
நான் எப்படிப் பேசுறன்? பாக்கற இல்ல? அது போல பேசுடா!

ரவி: அது எப்படிங்க ஐயா, உங்களால் மட்டும் இப்படி எல்லாம் "அடித்துப்" பேச முடிகிறது?
கவுண்டர்: டேய்! அதுக்கெல்லாம் அறிவு வேணும்டா! எனக்கு ஒடம்பு பூரா மூளை டா!
ரவி: ஒடம்பு பூரா இருந்தா அதுக்குப் பேரு கொழுப்புண்ணே. மூளை மண்டையில் மட்டும் தான் இருக்கணும். மண்டையா மண்டையா-ன்னு அடுத்தவங்களை எப்ப பார்த்தாலும் கூப்படறீங்க...ஆனா இது தெரியலயே ஒங்களுக்கு?

(கவுண்டர் செம டென்சன் ஆகிறார்...)
கவுண்டர்: டேய், என்னையே எதிர்த்துப் பேசுறியா நீயி! Guards...இவன் நெத்தியில நாமத்தைப் போட்டு, இன்னும் நல்லா வதக்கி எடுங்க! அப்ப தான் அடங்குவானுங்க!
(கோபமே வராது என்று சொல்லிக் கொள்ளும் ரவிக்குக் கூடக் கோபம் வந்து விடுகிறது...கவுண்டரை நெற்றிக்கண் ரேஞ்சுக்கு முறைக்கிறாரு ரவி)...

கவுண்டர்: ட்ட்ட்டேய்...இன்னா லுக்கு வுடறே?
மாதவி-ன்னு பேரு வச்சிக்கினு...
கண்ணகி கசின் பிரதர் ரேஞ்சுக்கு முறைக்கிற? நோண்டிடுவேன் ஜாக்கிரதை!.....
(அன்பு நண்பர் ரவியைக் காப்பாற்ற எண்ணுகிறார் ஜிரா.
கவுண்டரைத் திசை திருப்ப, உரத்த குரலில், சுசீலாம்மா பாட்டை எடுத்து விடுகிறார்...யார் யார் யார் அவர் யாரோ? ஊர் பேர் தான் தெரியாதோ??...)


கவுண்டர்: யாரு மேன் அது காட்டுக் கூச்சல் போடறது? ஓ நீயா! உன் பேரு என்னடா? krsஆ இல்லை grsஆ?
ஜிரா: நான் பக்தியுடன், ஜி ராகவன்
கவுண்டர்: அப்ப நாங்க என்னா, சக்தியுடன், ஜி. மணியா?
இந்த நக்கல் தானே வேணாங்கறது! சரி, அது இன்னாடா அது ஜிரா?....
ஸ்நேகா ஸ்வீட் ஸ்டால்ல, ரசகுல்லா, குலாப் ஜாமூன் போட்டுக்கினு இருந்தியா நீயி? - ஜிரா, ஜீரா-ன்னுகிட்டு! ஒரே பிசு பிசுன்னு!

ஜிரா:அவலா கொன்றோ மிசையா கொன்றோ...அவ்வழி நல்லை வாழிய நலனே!
கவுண்டர்: டேய்...மவனே யாரப் பாத்து கொன்றோ கொன்றோ -ன்னு மிரட்டுற நீயி? என்னைக் கொன்னுடுவியா நீ? பிச்சிப்புடுவேன் பிச்சி!
ஜிரா: ஆகா! பிச்சி!.... என்ன ஒரு சொல்! சொல் ஒரு சொல்!
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியாள்!
விச்சியாள், அவள் பிச்சியாள்! தலை உச்சியாள். தமிழ்க் கட்சியாள். வெற்றி வெட்சியாள்!

கவுண்டர்: ஆமாண்டா, மச்சியாள், நம்ம மச்சியோட ஆள்.
டேய் டேய், அடங்குங்கடா! அடங்குங்க!.....இன்னோரு தபா இப்படி தாறு மாறாத் தமிழ் பேசின, ஒனக்கு மட்டும் அண்டாவைத் தூக்கிவிட்டு குண்டாவுல காய்ச்ச சொல்லிடுவேன்! நமக்குன்னு வரானுங்கு பாரு! பிச்சி,மச்சி,குச்சி-ன்னு! ச்சே.....

(கவுண்டரின் செல் போன் அடிக்கிறது....)
கவுண்டர்: அலோ, ஐ ஆம் ஆல்-இன்-ஆல் அழகுராஜ், கவுண்டர் ஸ்பீக்கிங்...யாரு மேன் லைன்-ல?
கவுண்டரே வணக்கம், நான் கந்த வெற்பில் இருந்து, முருகப்பெருமான் பேசறேன்...இருங்க என் மனைவி உங்ககிட்ட பேசணுமாம்...(லைனில் தெய்வயானை அம்மையார்....! @$%‍">@#$%‍&*())

கவுண்டர்: அப்படீங்களா மேடம். ஆல்ரைட் மேடம். ஓக்கே மேடம். கவலைப்படாதீங்க மேடம். நான் பாத்துக்குறேன் மேடம். வைச்சிடறேன் மேடம்!
(ஜிராவைப் பார்த்து...) வாடி ரங்கநாயகி...வாயக் கொடுத்து மாட்டிக்கினியா நீயி? Guards...இவனுக்குச் சாப்பிட என்ன கொடுக்கறீங்க?
Guards: உப்புக் கருவாடும்..ஊற வைச்ச சோறும், மோரில் துவைத்த வெங்காயமும், கார அடையும்......
கவுண்டர்: ஸ்டாப்..ஸ்டாப்...ஸ்டாப்! இது என்ன நரகலோகமா? இல்லை நளந்தா பேலஸா?

இனிமே இவனுக்கு வெறும் ஓட்ஸ் உப்புமா கொடுங்க, போதும்.
மேலிடத்தில் இருந்து ஸ்ட்ராங்கான உத்தரவு!
குடிக்கத் தண்ணி எல்லாம் கொடுக்காதீங்க....வேணும்னா, பெருமாள் கோயில் தீர்த்தம் கொடுங்க! அதை இவனே வேண்டாம்-னு சொல்லிடுவான்!


அடுத்து யாரு மேன் லைன்ல?
குமரன்: அடியேன் சிறிய ஞானத்தன். கூடல் குமரன்.
கவுண்டர்: ஓ நீயும் அடியேன் தானா? இப்பல்லாம் அடியேன், என்னை இன்னொரு தபா அடியேன்-ன்னு, அடியைக் கேட்டு கேட்டு வாங்கறானுங்கப்பா.
சரி...அது இன்னா மேன் அது, பின்னூட்டக் கோனார் நோட்ஸ்?
இந்த வேண்டாத வேலை எல்லாம் ஒனக்கு எதுக்கு மேன்?
குமரன்: யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்!

கவுண்டர்: ஐ..ஐ...ஐ....
இவரு பெற்ற இன்பம், பெறுக இவ்வையகமாம்!
ஏன்...யான் பெற்ற சம்பளம், பெறுக இவ்வையகம்-ன்னு சொல்லேன் பார்ப்போம்! ஏதோ, இவனுங்க பேங்க் அக்கவுண்ட்ல இருந்து எடுத்து, அள்ளி வுடறா மாதிரி இல்ல, அள்ளி அள்ளி வுடறானுங்க!
இன்னா தப்பு செஞ்சிட்டு மேன் இங்க வந்த நீயி?

குமரன்: ஐயகோ! என்னடி மீனாட்சி! சொன்னது என்னாச்சி? நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சி!
கவுண்டர்: ஏய், இன்னா, மீனாட்சி-ன்னு சத்தமாக் கூவினா, மதுரைக்காரங்க எல்லாம் செட்டு சேந்துக்கலாம்-னு திட்டம் போடறியா நீயி?
அது எல்லாம் என் கிட்ட நடக்காது! ஐ ஆம் கவுண்டர் ப்ரம் கோயம்புத்தூர்! யூ நோ?

அது இன்னா மேன் அது? ஒரு தும்மல் தும்மினா, ஒடனே ஒரு வலைப்பூ தொடங்கிடுவியா நீயி?
இப்பல்லாம் பூலோகத்துல, பசங்களுக்கு ஒன்-டு-த்ரீ எண்ணறதுக்கு, உன் ப்ளாக்-கைத் தான் முன்னாடி வைக்கறாங்களாம்!
பசங்களுக்கு கணக்கு சொல்லிக் குடுக்குற கணக்கு டீச்சர் கனகாவே, உன் கணக்குல கன்ப்யூஸ் ஆயிட்டான்னா பாத்துக்கோ! - இது எல்லாம் தேவையா மேன் உனக்கு?
குமரன்: :-)
கவுண்டர்: இந்தச் சிரிப்புக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல! அடுத்து யாரு மேன்?


VSK: நாதவிந்து கலாதீ நமோ நம! மயிலை மன்னாரு டீயோ கமோ கம!
கவுண்டர்: உன் பேர் என்ன மேன்?
VSK: என்னை SKன்னு கூப்பிடுங்க.
கவுண்டர்: நீ சொல்லி நான் என்ன மேன் கூப்பிடறது? நான் VSKன்னே கூப்டுக்கறேன். எதுக்கு மேன் மெட்ராஸ் பாஷையில திருக்குறள் நோட்ஸ் போடற நீயி?

அதப் படிச்சிட்டு, பசங்க எல்லாம் எக்ஸாம் ஹாலுக்குப் போயி, மெட்ராஸ் பாஷைல திருக்குறள் எழுதி ஃபெயிலாயிட்டு வருதுங்களாம்.
இப்படி எல்லாம் டகால்டி வேலை பண்ணறியே! இதுக்கு மொதல்ல திருவள்ளுவர் கிட்ட பர்மிஷன் வாங்கினியா மேன் நீயி?

VSK: லப் டப்...லப் டப்...லப் டப்...
கவுண்டர்: ஓ...நீங்க மருத்துவர் வேற இல்லை? (மனசுக்குள்: சரி...ரொம்ப நோண்ட வேண்டாம்...நமக்கும் ஹார்ட்டு வீக்கு...நரகத்துல சிகிச்சைக்கு இந்த ஆளு உதவி தேவைப் பட்டாலும் படலாம்)
யார் அங்கே? இந்த ஆளுக்கு தினமும் ஒரு கப் கூழு எக்ஸ்ட்றா ஊத்துங்க! என்ஜாய் மேன் VSK!


கவுண்டர் அப்படியே நகர்ந்து, ஞானவெட்டியான் ஐயாவைப் பார்க்கிறார்...(மனசுக்குள்: ஐயோ மிலிட்டிரி ஆளு போலத் தெரியுதே...வம்பே வேணாம்)
ஹாய் மேன், ஹவ் ஆர் யூ என்று கை குலுக்குகிறார். இருந்தாலும் இயற்கையா இருக்கும் லொள்ளு அவருக்குத் தானாத் தலை தூக்குகிறது!

முனைவர் நா.கண்ணனைக் காண்கிறார்...
ஹாய் மேன், இது இன்னா நரகத்துல வந்து தொப்பியும் கூலிங் க்ளாஸும்? இதெல்லாம் ஒங்களுக்கே ஓவராத் தெரியலை?
தானா வாயக் கொடுத்து மாட்டிக்கின மேன் நீயி. அது இன்னா கிகா பைட்டும், பாவ புண்ணியம்-னு உன் பதிவு?
இந்த ஐடியாவை பிக்-அப் பண்ணி நரகலோகம் ஃபுல்லா கிகா பைட் ஆக்கிட்டாங்க!
டோட்டலா கம்ப்யூட்டர் பண்ணிட்டாங்க மேன்! இனிமே பாவக் கணக்க முன்ன பின்ன மாத்திக் கூட எழுத முடியாது... இது தேவையா மேன் ஒனக்கு?


வல்லி சிம்ஹனைக் காண்கிறார்...
கவுண்டர்: நீங்க தான் வல்லியம்மா-வா?
வல்லியம்மா: ஆமாண்டா குழந்தே! நல்லா இருக்கியா நீ?
கவுண்டர்: ஏய் ஏய்...நோ சென்டி ஓக்கே! நல்லாப் பாட்டு பாடுவிங்க போலக் கீதே!....இனிமே டெய்லி நான் காபி குடிக்கும் போது வந்து ஒரு பாட்டு பாடணும்...இன்னா சரியா?

வல்லியம்மா: பாடிட்டாப் போச்சு; காபி குடிக்கறச்சே காபி ராகத்துல பாடட்டுமா?
கவுண்டர்: அடங்கொக்க மக்கா...காபி குடிக்க கூட ஒரு ராகம் கண்டுபுடிச்சிட்டானுங்களா? இசை இன்பம்னு வலைப்பூ தொடங்கி இம்சை இன்பம் பண்ணுறானுங்கடா சாமீ!


கவுண்டர்: நெக்ஸ்ட்...
கார்ட்ஸ்...எங்கே அந்த ட்வின் பசங்க? என்றென்றும் ஆப்புடன் பாலா and தேசி தேசிகன்?
Guards:
சார்....அவிங்க ரெண்டு பேரும் சுஜாதாவோட கிரிக்கெட் ஆட ஸ்ரீரங்கம் போயிருக்காங்க சார்!

அப்படியே அவரு கிட்ட நைசாப் பேசி, சிவாஜி படத்துல சிவாஜியா நடிக்கற ஹீரோ பேரு ரஜினி-ன்னு, ரொம்பவும் கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சிக்குனு வருவாங்க சார்....
கவுண்டர் தலையில் அடித்துக் கொண்டு நகர்கிறார்...கீதா சாம்பசிவம் அவர்களை நோக்கி...



கவுண்டர்: ஹாய் மேன்! ஹவ் ஆர் யூ?
கீ.சா: ஐ ஆம் நாட் மேன்! ஐ ஆம் வுமன்!
பர்ஷ்டு அண்டர்ஸ்டாண்ட் தட்! அண்டு ஆல்சோ கால் மீ...தலைவி!
கவுண்டர்: சொறிங்க தலைவி....சாரி...சாரீங்க தலைவலி!
இன்னா, எனக்கே ஆர்டர் போடுற அளவுக்கு திமிரா? தலைவிங்கிற தலைக்கனமா?

சரி சரி...அந்த அம்பிப் பையனை எதுக்கு ஆனா ஊன்னா பின்னிப் பெடல் எடுக்கற நீயி? நல்லவங்க நாலு பேரை சும்மா வுடலீன்னா தூக்கமே வராதா?
கீ.சா: நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு....எல்லாம் சிதம்பர நாதனைப் பற்றிப் பதிவு எழுதும் எனக்குத் தான் தெரியும்.
கவுண்டர்: உக்கும்...எல்லாம் தெரிஞ்ச மகராசி...இதையும் தெரிஞ்சுக்கோ...அந்த அம்பி தான் ஒன் மேல பெட்டிஷனாத் தட்டி வுட்டு, இப்ப இங்க வந்து நிக்கறீங்கோ! - இனி மேலாச்சும் சைக்கிள் கேப்புல சாண்ட்ரோ ஓட்டறத நிறுத்திக்கோங் கங்கோ!


நெக்ஸ்ட்...
பித்தானந்தா நாமக்கல் சிபி....
கவுண்டர்: டேய் நீ நம்ம ஆளுல்ல...நீ எங்கடா இங்க?.........அது சரி, நீயும் நம்ம இனம் தானே! வேறெங்க வருவ? சரி, வந்தது வந்துட்ட! வா, ஜாலியா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வருவோம்!
சிபி: அண்ணே, முக்கியமான ஒரு ஆள நீங்க வுட்டுட்டீங்கண்ணே!
போட்டுக் கொடுக்கறதா நெனைச்சுக்காதீங்க! நான் போடாமத் தான்-ணே கொடுக்கறேன்!
கவுண்டர்: யாருடா அவன்?
சிபி: வெட்டி-ண்ணே!

கவுண்டர்: ஓ...அந்த கொல்ட்டி மண்டையனா!
சிபி: அவனே தான்! லவ் ஸ்டோரி லபக்குதாஸ் அவன் தான்ணே!
கவுண்ட்ர்: சரியான குசும்பு புடிச்சவன்-பா அவன்! அவன் எப்படி இவனுங்க ஆன்மீக லிஸ்ட்-ல வந்து சேந்தான்?
சிபி: அதாண்ணே ஒண்ணும் புரியாம, அண்டாவுல ஆறு மாசமாத் தவிச்சிகிட்டு இருக்கேன்!
கவுண்டர்: கொதிக்கற அண்டாவோட சூடு தெரியல உனக்கு? அவனெல்லாம் எப்பிடி ஆன்மீகப் பதிவரானான்-ங்கிறது தான் பெருசா தெரியுது, இல்ல? - நல்ல ஷிப்புடா இந்த பிரெண்டுஷிப்பு!

சரி வா, உன் ஆசைக்கு அவனைப் போயி ஒரு நொங்கு நொங்கிட்டு வரலாம்! அது சரி, இவனுங்க எல்லாம், எப்படி இங்க வந்து மாட்டுனானுங்க-ன்னு கேட்டு, எமனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பி வச்சேன்....
எருமை மாட்டு வேகத்துல பதில் வந்துக்குனு இருக்கு போல!

(தொடரும்....அடுத்த பகுதியில் நிறையும்!)

Tuesday, August 7, 2007

பாலாபாய் என்ன செய்கிறார்?







மொக்கைப்பதிவு போட்டியில் இறுதிச் சுற்றில் ஐவர்
1. மின்னலு
2. குசும்பன்
3. கோவி
4. ரவி
5. லக்கி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முதல் பரிசு பெறப் போகும் நபருக்கு மொக்கை கிங் 2007 என்ற மாபெரும் பட்டம் அளித்து வ.வா.சங்கம் கவுரவிக்கப்போகிறது.

படத்தை ஒன்னு சேர்த்தீங்கன்னா தலைப்புக்கு என்ன பதில்னு நீங்களே சொல்ல முடியும்.

Sunday, August 5, 2007

பதிவர் பட்டறைக்கு வ.வா.சங்கத்தின் வாழ்த்துக்கள்!

இன்று காலை இனிதே துவங்கிய சென்னை வலைப்பதிவர் பட்டறை கலந்துக் கொண்ட அனைவருக்கும் பயனுள்ள வகையில் அமைந்தது.

1) சங்கத்து சிங்கங்கள்:-



(Updated) இடமிருந்து வலமாக: நாகை சிவா, சிபி, கப்பி, தல, தேவ் அப்புறம் ராம். தேவ்க்கும் தல'க்கும் பின்னாடி ஒளிஞ்சுகிட்டு நிக்கிறது Mr.ஜொள்ஸ் பாண்டி

2) தல & தல & தள




பதிவர் பட்டறை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் சங்கம் தனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும் புகைப்படங்களுக்கு இங்கு சுட்டுங்கள்.

Saturday, August 4, 2007

அமெரிக்காவில் இந்தியா மீண்டும் சரண்


அட எதுக்கு இதைப்பத்தின்னு நீங்க கேக்குறது தெரியுது.

மொக்கைப்போட்டி முடிவுகள் திங்கட் கிழமைன்னு சொல்ல விடுங்கப்பா.

The main part of this Post is sponsored by Dinamalar

Friday, August 3, 2007

டெவில் ஷோ - நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள்! - 1

இடம்: தேவ லோகம் - இந்திரனின் சபை
ரம்பையும் ஊர்வசியும், அண்ணன் கவுண்டமணியை இந்திரனின் சபைக்கு அழைத்து வருகிறார்கள்.
கவுண்டர் ஒரே ஜாலி மூடில், ஒட்டகத்தைக் கட்டிக்கோ-ன்னு பாடிக்கிட்டே வருகிறார். அப்படியே கெட்டியாக ஒட்டிக்கோ-ன்னு பக்கத்துல ரம்பாவோடு ஒட்டிக்கிட்டு வருகிறார்

இந்திரன்: வருக கவுண்டரே! இந்திர சபைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக!
கவுண்டர்: எங்க வரவு நொல் வரவு ஆவறது எல்லாம் இருக்கட்டும்.
ஒரு பெரியகவுண்டர் நான் வரேன்னா... வாட் இஸ் திஸ்?
கெரகம், பொய்க்கால் குதிரை, புலியாட்டம், ஒயிலாட்டம்...இதெல்லாம் ஒண்ணுமே இல்ல...என்னய்யா வரவேற்பு இது? ஒரு கட் அவுட் கூட இல்ல! நான்சென்ஸ்!

(அண்ணே, இங்க வந்ததும் வராததுமா லொள்ளு பண்ணறீங்களே!
கொஞ்சம் பாத்து பேசுங்கண்ணே! இது இந்திரன் சபைண்ணே...என்று ஒரு குரல் கேட்கிறது....)
கவுண்டர்: எவண்டா அவன் என் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடறது?

(அங்கு ஆஸ்தான மண்டபத்தில், ஒரு ரத்தின ஆசனத்தில், செந்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கார். கவுண்டருக்கு செந்திலைக் கண்டதும் ஒரே ஷாக்!!!)
அடப்பாவி...நீயா? வீங்குன வாயா...நாயே நாயே!
நீ இங்க இருக்கேன்னு தெரிஞ்சிருந்தா, நான் நரகத்துக்கே போயி இருப்பேனேடா, பனங்கா மண்டையா! உன்னையெல்லாம் எவன்டா சொர்கத்துக்குள்ளாற வுட்டான்?

செந்தில்: அதோ அவரப் போயி கேளுங்கண்ணே. புண்ணியவான் அவரு தான் என்னைய உள்ளார விட்டாரு.
கவுண்டர்: (இந்திரனை நோக்கித் திரும்பி) அடச்சே...இவன் புண்ணியவானா? நாலு கொள்ளை ரெண்டு கற்பழிப்பு கேசுல இவனத் தான் பூலோகத்துல பல பேர் தேடுறாங்க! ...

சரி, எனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சாகணும்!
(செந்திலைப் பார்த்து...)
கொசப்பேட்டை,கொத்தவால் சாவடியில இருக்குற குப்பன் வீட்டுல கூட "நாய்கள் ஜாக்கிரதை"-ன்னு ஒரு போர்டு தொங்கும்! ஆனா இங்க இவ்ளோ பெரிய காட்டு நாய் - உன்னைய உள்ள வுட்டுட்டு, ஒரு போர்டு கூட வைக்காம இருக்காங்க...
ச்சே...என்ன சொர்க்க லோகமோ சொரக்கா லோகமோ...போங்க!

செந்தில்: அண்ணே ஓவராப் பேசாதீங்க சொல்லிட்டேன். உங்க ஜம்பம் எல்லாம் பூலோகத்தோடு முடிஞ்சி போச்சி! இங்க நான் தான் சீனியர்!
கிவ் ரெஷ்பக்ட் அன் டேக் ரெஷ்பக்ட்!
கவுண்டர்: ஆமாம்...கண்டதை துன்னுட்டு, ஃப்ரீயா கெடைக்குதே-ன்னு பினாயிலையும் குடிச்சிட்ட.
அதான் டிக்கெட் வாங்கிக்குனு சீக்கிரம் வந்துட்ட...அதுனால நீ எல்லாம் சீனியராடா?




(அந்த சமயம் பார்த்து, செந்தில் கையில் உள்ள கோப்பையில் சோம பானத்தை ஊற்றுகிறாள் மேனகை! அதையே வெறித்து வெறித்துப் பார்க்கிறார் கவுண்டர்...அவருக்கும் உள்ளுர சபலம்!)

செந்தில்: அண்ணே...அப்படிப் பாக்காதீங்கண்ணே...எனக்கு வயிறு வலிக்கப் போகுது!
கவுண்டர்: ஆமாண்டா..வயிறு வலிக்கும், தயிரு வலிக்கும்!
டேய், அப்படியே வயிறு வலிச்சா, ரெண்டு இட்லி-கெட்டிச் சட்னி வைச்சி அமுக்குவியேடா! ஒடனே உன் வயித்து வலி போயிடுமே!
வெக்கமில்லாம அவளும் ஃபினாயிலு ஊத்துறா. இவனும் குடிக்கிறான் பாரு!
த்தூ.....இந்திரலோகத்தையே இன்ஸ்டன்ட் பார் ஆக்கிட்டானுங்கடா சாமீ!

(மேனகையைச் சொன்னதும் இந்திரனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது!...)
இந்திரன்: ட்ட்ட்ட்டேய்...யாரு வூட்டுக்கு வந்து இன்னா பேசுற நீயி? அவ என்னோட ஃபிகருடா!
அவ ஃபெனாயிலுனா ஊத்துவா, பாமாயிலுனா ஊத்துவா! அத கேக்க நீ யார்றா?

கவுண்டர்: ஐய்யய்யோ, சாரிங்க ஆபிசர்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லா தூய தமிழ்ல ஜிரா மாதிரி பேசிக்கினு இருந்தீங்களே ஆபிசர்!
இப்படி வெட்டி ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே ஆபிசர்! (கவுண்டர் பம்முகிறார்)

இந்திரன்: ஏதோ,
தமிழ்த்திரையில் அவை கூட்டி,
நகைச்சுவையில் சுவை கூட்டி,
கலாய்த்தல் திணை என்று தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் செய்தீர்கள் என்று தான் உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்து வந்தோம்!
அதற்காக உங்களுக்குச் சொர்க்கத்தில் நிரந்தரமாக இடம் கொடுத்து விட்டோம் என்று நினைத்து விடாதீர்கள்.

இங்கு இன்னும் ஓர் ஆண்டு, நீங்கள் எனக்கும் என் நண்பர் செந்திலார்க்கும் விகடகவியாக இருக்கலாம்.
இல்லை...அது வேண்டாம் என்றால், இருக்கவே இருக்கு...
நரகத்தில் செல் ஆபிசராக உங்களை நியமித்து அனுப்பி விடுவோம்!

கவுண்டர்: (மனசுக்குள்ளேயே) நான் அப்பவே நெனைச்சேன்டா...இந்தப் பேரிக்கா மண்டையன் ஏதாச்சும் டகால்டி வேல பண்ணி இருப்பான்னு...இவனுக்கு நாம விகடகவியா? தூ....இதுவும் ஒரு வேலையா?...(உரத்த குரலில்)

ஐ ஆம் வெரி சாரி ஆபிசர்...
இந்தாங்க ஆபிசர், உங்களுக்காக பூலோகத்துல இருந்து காணிக்கை ஒண்ணு கொண்டாந்தேன் ஆபிசர்...
இதை வச்சிக்கிட்டு ஒரு நல்ல தீர்ப்பா சொல்லுங்க ஆபிசர்!
பேப்பர்-லாம் பக்காவா இருக்குங்க ஆபிசர்!
(திருக்குறள் புத்தகத்தில் பல டாலர் நோட்டுகளைச் சொருகி இந்திரன் கையில் தருகிறார்!)

இந்திரன்: ஆகா..எனக்கே லஞ்சமா? என்ன ஆணவம்! என்ன ஆணவம்!....இது இந்திர லோகமடா
இங்கே நோ லஞ்சம்! ஒன்லி மஞ்சம்!! - புரிஞ்சுதா?
யாரங்கே, இவனை நரகத்தில் செல் நம்பர் 420இல் தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள்! அங்குள்ள பாவிகளை எல்லாம் மேய்க்கும் டேமஜராக இவனை அறிவித்து விடுங்கள்!



கண் மூடிக் கண் திறப்பதற்குள்...

கவுண்டர் நரகத்தில் தூக்கி எறியப் படுகிறார்.
யூனிபார்ம் கொடுத்து, நேம் ப்ளேட் ஒட்டி, அவரை செல் நம்பர் 420க்கு அதிகாரியாக நியமிக்கிறார்கள்!
முதல் நாள் ரவுண்ட்சுக்குச் செல்கிறார் கவுண்டர்!
அங்கே...

ஒரே கொதிப்பு, வெக்கை, புழுக்கம்...
அண்டாவில் எண்ணெய் கொதிக்க, பலரை அதில் முக்கி முக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள்...
இந்தப் பக்கம் "பெருமாளே பெருமாளே" என்று ஒரு சத்தம்...
அந்தப் பக்கம் "முருகா முருகா" என்று இன்னொரு சத்தம்!
அட இது என்ன கூத்து என்று பார்த்தால்...
அங்கே கொதிக்கும் அண்டாக்களில்...ஆன்மீகப் பதிவர்கள்!

மாதவிப் பந்தல் கண்ணபிரான் ரவிசங்கர்
பக்தியுடன், கோ. இராகவன்
அடியேன் சிறிய ஞானத்தன், குமரன்
முருக பக்தர் VSK
தத்துவ வித்தகர் ஞானவெட்டியான் ஐயா
முனைவர் நா.கண்ணன் ஐயா
ஆன்மீகப் பயணம், கீதா சாம்பசிவம்
நாச்சியார், வல்லியம்மா
பித்தானந்தா, நாமக்கல் சிபி
வெட்டிப்பயல்
என்று வரிசையா அத்தனை ஆன்மீகப் பதிவரையும் வாட்டி வதக்கிக் கொண்டு இருந்தார்கள்!

கவுண்டர்: அடங் கொக்கா மக்கா...இவனுங்க எப்படிடா இங்க! ஒண்ணுமே புரியலையடா சாமீ!
ஏதோ கடவுளோட பர்சனல் அசிஸ்டண்டு கணக்கா-ல்ல இவனுங்க அளப்பற வுட்டுக்குனு திரிஞ்சானுங்க!
திருப்புகழ் இன்னா, அந்தாதி இன்னா, சுப்ரபாதம் இன்னா - கடைசிலே சுத்தற பாதமா ஆயிட்டானுங்களேப்பா....

இரு....இன்னா தான் விஷயம்ன்னு போயி பார்ப்போம்...
(தொடரும்...)