Showing posts with label விஜி. Show all posts
Showing posts with label விஜி. Show all posts

Friday, June 17, 2011

ஒரு எலக்கியவாதி உருவாகிறான் :))









நம்ம ஈரோ கோவாலு இருக்கானே அவன் பெரிய வஸ்தாது. எல்லாத்துக்கும் ரெஜிஸ்டர் மெயிண்டெயின் பண்ணுவான். ஆபிசில் அவனோட வேலையைப்பார்த்து மேனேசரு அவனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக்கொடுத்தாரு. கோவாலு பள்ளிக்கோடத்தில படிக்கும் போதே கம்ப்யூட்டர் க்ளாஸ் போயி அதை உப்பு போட்டு ஊறுகா தொட்டு கரைச்சு குடிச்சவன். நம்பி அவன்கிட்ட ஒரு கம்ப்யுட்டரை ஒப்படைச்சதும் அலுவாச்சியே வந்துடுச்சு. தினம் ஆபிசு வந்ததும் ஒரு துணி எடுத்து துடைச்சு தூசி தட்டி தொட்டுக்கும்பிட்டுட்டுதான் மறுவேலை.

திடீர்னு ஒரு நாள் அவன் கூகுளாண்டவரை எதையோ தேடப்போக அவனுக்கு தமிழ்ல ஒரு கட்டுரை சிக்குச்சு. என்னடா இது தமிழ்ல என்னவோ எழுதிருக்கேன்னு பார்த்தா, அது ஒரு பதிவு. ஆஹா இப்படி ஒரு மேட்டர் நமக்கு இதுவரைக்கும் தெரியாமப்போயிடுச்சேன்னு பயபுள்ள தேடித்தேடி ஒருவழியா ப்ளாக்ன்னா என்னான்னு கண்டுபிடிச்சான்.  கண்டுபிடிச்சானா அன்னைக்கு பிடிச்சுது அவனுக்கு கெரகம்.

முத நாள் ஒரு நாலு லைன் எழுதினான், அதை வெளியிட்டதும் அவனுக்கு அப்படியே புல்லரிச்சுப்போயிடுச்சு. அப்படியே சேர்ல சாய்ஞ்சு உக்காந்தானா.. கொஞ்சம் கண்ணை அசந்துட்டான். அவன் எழுதின பதிவு ஒரே நாளில் வாசகர் பரிந்துரையெல்லாம் தாண்டி எல்லா மணம், எலியிலையும் டாப்ல வந்துடுச்சு. பதிவுலகமே பரபரன்னு ஆயிடுச்சு. பேட்டி வந்து பரபரத்து போன பதிவுலக எஃபெக்ட் திரும்பவும் வந்ததுன்னு மூத்த பதிவர்கள் அறிக்கை விட்டாங்க. அதை பஸ்ல இருக்கும் 13,427 அண்ட் அரை பஸ்ஸர்களும் ரீஷேர் பண்ணி, புதிய எலக்கிய சுனாமியை ஊருக்கு அடையாளம் காட்டினாங்க.

மேற்கு புக் கடை, கண்மை போன்ற எல்லா பதிப்பாளர்களூம் அண்ணே நீங்க கைக்காசு போடவேண்டாம் நாங்க போட்டு அடிச்சுத்தரோம் புக்குன்னு ஆயிரம் காப்பி அடிச்சு எல்லா ஊரிலையும் புத்தக வெளியிட்டு விழா, அறிமுக விழான்னு அமர்க்களப்படுத்தினாங்க. எந்த பதிவர் டாப்ல இருந்தாலும் அள்ளிப்போட்டுக்கும் நொந்த விகடனில் வந்த அந்த பதிவு இன்னும் பிரபலமாக்கிடுச்சு. ஊரெல்லாம் தோரணம், கட் அவுட்டு, எலக்கியத்தை வாழவைக்க வந்த கம்ப்யுட்டர் கம்பன், அவ்வைப்பாட்டிக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த அறிவுக்கொழுந்து, எழுத்துலக விடிசனி.. அப்படின்னு கன்னாபின்னான்னு ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் பேனரு அதுல நம்ம கோவாலு கையில மவுஸோட ஸ்டைலா நிக்கும் போட்டா.

எந்த புக்கை எடுத்தாலும் கோவாலுவோட எலக்கிய உரை, இந்த மந்திரி அந்த போனை வாங்கினது நல்லதா கெட்டதான்னு நொந்த அகடனிலையும்,ங்ஙே பக்கங்கள்னு சந்தனத்திலையும் வாராவாரம் கோவாலு எடுத்த எலக்கிய வாந்தி. வாசகர் வட்டம், சதுரம் எல்லாம் தாண்டி கோவாலுவோட வாசகர்கள் சர்க்கஸ் பைக் ஓட்டுவாங்கல்ல கூண்டு அதிலேயே இருக்காங்களாம். செர்மனு, லண்டனு, ப்ரான்ஸுனு எல்லா ஊருலையும் இருக்கும் வாஜகர்கள் இங்க வாங்க இங்க வாங்கன்னு கூப்பிடறாங்க.என்ன நம்ம கோவாலுக்குதான் போகக்காசில்லை, ஒரு எலக்கியவாதியை வேர்ல்ட் டூர் போக வைக்க முடியாத இந்த சமூகம் நாசமாப்போகட்டும்னு ஒரு கவர்ஸ்டோரி எழுதலாம்னு ஐடியால இருக்கான்.

திடீர்னு தமிழ்திரை உலகின் சூறாவளி இயக்குனர் அஸ்குபுஸ்குவிடம் இருந்து போன், அவரோட அடுத்த கதைக்கு ஒரு ஃபுல் பாட்டுக்கு சோலோ டான்ஸ் ஆடி, திரைக்கதை எழுதித்தரனும்னு கெஞ்சி போனிலேயே காலில விழுந்தார். நம்ம கோவாலு பெரிய மனசு பண்ணி தொலைஞ்சு போகுதுன்னு டான்ஸ் ஆட ஒத்துக்கிட்டு காஸ்ட்யும் டிசைனரை வீட்டுக்கு வரச்சொல்லி கன்பார்ம் பண்ணினான். நம்ம கெட்ட நேரம் அந்த ஒரு பாட்டு மட்டும் எல்லாச்சேனல்லையும் -டிஸ்கவரி, நேசனல் ஜியாகரபி உட்பட எல்லாச்சேனல்லையும் ஓட்டோ ஓட்டோன்னு ஓட்டி ஓவர் நைட்ல புதிய புயல் கோவாலுவா ஆயிட்டான்.

கோவாலு கட் அவுட்டுக்கு பதிவர்கள் சார்பில் பாலாபிஷேமும் பீராபிசேகமும் நடக்கனும்னு பிரபல, ப்ராப்பள பதிவர்களுக்கு மத்தியில் சண்டை எல்லாரும் ஊர்வலம் போறாக, உண்ணாவிரதம் இருக்காக. புதிய புர்ட்சி தலவலி கோவாலுவை அடுத்த முதல்வரா வேட்புமனு தாக்கசொல்லி...கோவாலுவும் மக்கள் கோரிக்கையை மகேசன் ( அதாங்க அந்த கடேசி வீட்டு மகேசு) கோரிக்கையா நினைச்சு வேட்புமனு தாக்கல் செய்யபோறான். அதுக்குள்ள பஸ்ஸர்கள், பதிவர்கள் எடுத்த கருத்து கணிப்பில் மானாவாரியா ஓட்டு வாங்கி ஜெயிச்சுட்டான். ஜெயிச்சு கோட்டைக்கு போகும் போது மழை வந்துடுச்சு. அட நாம பிரபலம் ஆனதிலேருந்து மழையில நனையவே இல்லையேன்னு தலையை மட்டும் நீட்டினா, மழை ச்ச்சோன்னு பேய்து...

அய்யே என்னா கோவாலு சாரு, இப்படி தூங்கறே? கம்ப்யுட்டரு வந்தா நல்லா வேலை செய்வேன்னு சொன்னாங்க, இப்படி வாயைத்தொறந்து தூங்கறே. ஒரு பாட்டில் தண்ணி ஊத்தி எழுப்பவேண்டியதா போச்சுன்னு அட்டெண்டர் அய்யாசாமி டெரரா நிக்கறான்....

அடக்கெரகமே. இம்புட்டு நேரம் கனாவா கண்டோம்னு ஃபீல் ஆயிடுச்சு கோவாலுக்கு, அப்படியே கம்ப்யுட்டரை ஷட் பண்ணிட்டு ரெஜிஸ்டரை ஓப்பன் பண்ணிட்டான்.....

மாரல் ஆஃப் தெ ஸ்டோரி : கனாக்காணுங்க...

டிஸ்கி. இதை படிச்சு எந்த பிரபல பதிவராவது நினைப்புக்கு வந்தா அதுக்கு சங்கம் பொறுப்பேற்காது... ஆங் சொல்லிப்புட்டேன்

Wednesday, December 8, 2010

லேடீஸ் ஸ்பெஷல்

என்ன இப்படிக் கிறுக்கி வெச்சிருக்கீங்கன்னு யாரும் கேட்டுட முடியாது இவங்களை. அதுக்குத்தான் ப்ளாக் பேருலயே கிறுக்கல்கள் அப்படிங்குற வார்த்தையை வெச்சிருக்காங்க. வழக்கமா நாம போடற பதிவுக்கு டிஸ்கி எழுதுவோம். இவங்க கொஞ்சம் மேல போய் வலைப்பூவுக்கே டிஸ்கி கொடுத்திருக்காங்க.

சரி என்னதான் எழுதுறாங்கன்னு, மன்னிக்கவும், கிறுக்குறாங்கன்னு போய்ப் பாத்தா தொலைஞ்சீங்க. வாரா வாரம் ஒரு ஹோட்டலுக்குப் போயிட்டு அங்க உள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு ஒரு பதிவு அதைப் பத்தி. பர்ஸ் எடுத்துட்டுப் போறாங்களோ இல்லையோ கேமராவும் கையுமாப் போய்டுவாங்க போல. வித விதமா போட்டோ. படிக்கிறவங்களை வெறுப்பேத்துறதுக்கே போட்ட மாதிரி இருக்கும்.

இந்தப் பதிவுகளுக்கு விஜி மேடம் ஒரு டெம்ப்லேட் பின்னூட்டம் போடுவாங்க. ‘பாத்துட்டேன் அப்புறம்’ அப்படின்னு. அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். என்னிய வுட்டுட்டு நீங்க மட்டும் போய் நல்லா சாப்புடுறீங்க அப்படிங்கறதுதான்.

சரி, இது தவிர வேற என்ன எழுதி இருக்காங்கன்னு பாத்தோம்னா விதூஷ் எழுதின கவிதைக்கு ஒரு கோனார் நோட்ஸ். கோபுலுன்னு விகடன்ல ஒரு கார்டூனிஸ்ட் இருந்தார். அதுல ஒரு கார்ட்டூன் ஞாபகம் வருது. ஒரு சிறுவன் அப்பா இருக்கும் அறைக்குப் போவான். அவர் அப்போதுதான் முகம் முழுதும் ஷேவிங் கிரீம் தடவி வைத்திருப்பார். சிறுவன் பயந்து போய் வேறொரு அறைக்குப் போவான். அங்கே அம்மா நிறைய பேசியல் கிரீம் கொண்டு முகம் பூரா அப்பி வைத்துக் கொண்டிருப்பார். சிறுவன் அதைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுவான். எனக்கு அது மாதிரிதான் ஆச்சு. விதூஷ் கவிதையை முதலில் படித்தேன். அதன் பின் வித்யாவின் கோனார் நோட்ஸ். நான் பதிவு எழுத ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே எனக்கு நடந்த இரட்டை விபத்து இது. இது போக இவர் நிறைய முழி பேர்ப்புக் கவிதைகள் எழுதியுள்ளார். உங்களால் ஒரு கவிதைக்கு மேல் படிக்க முடியாது. ஒரு கவிதை படித்து முடிக்கும்போதே முழி பேந்து விடுமே!

அது என்ன மாயமோ, பக்கோடா கட்டித் தரும் பேப்பரில் உள்ள விஷயம் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கும். அந்தப் பொது விதியை நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி பக்கோடா பேப்பர்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். முழி பேர்ந்ததுதான் மிச்சம்.

அடுத்தது தி கிரேட் விஜி. இவங்களைப் பத்தி நான் ஒண்ணும் பெரிசா சொல்ல வேணாம். ஏற்கனவே இவங்க பேர்ல இருந்த வலைப்பூ ஒண்ணு காணாம போச்சு. கூகிளுக்கே பொறுக்கலை. அதான் காணாம போச்சு. இப்போ புதுசா ஒண்ணு. தி கிரேட் விஜி அப்படின்னு வலைப்பூ பேரு. எப்படியும் பெரிசா பதிவு ஒன்னும் போடப் போறதில்லை. அதனால பேர்லயாவது கிரேட் இருக்கட்டும்னு வெச்சிக்கிட்டாங்க போல.

எனக்கு ஒரு சந்தேகம் வரும். இவங்களை நம்பி எப்படி சங்கத்தோட பொறுப்பை ஒப்படைச்சாங்கன்னு. அப்புறம்தான் தெரியுது, யார் ரொம்ப வெட்டியோ அவங்க பொறுப்பில்தான் சங்கம் இருக்கிறது என்று. நான் கூட ரொம்பப் பெருமைப் பட்டேன். நம்மையும் எழுதக் கூப்பிடுகிறார்களே என்று. அப்புறம்தான் தான் தெரியுது, வெட்டியா உள்ளவங்களைத்தான் எழுதவே கூப்பிடுவாங்கன்னு. அதெப்படி விஜி, நான் வெட்டிங்குறதை இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சீங்க?

இவங்க மூணு பெரும் விட்ட (கூகிள்) பஸ்ஸை வரிசையா நிறுத்தினா நைல் நதி நீளம் வரும். அவ்ளோ பஸ். எழுந்ததும் பஸ், புக்கு படிச்சா பஸ், சாப்பிட்டா பஸ், இத்யாதி. இதுல வித்யா பேஸ் புக்குல இருந்து சில விஷயங்களை எடுத்து பஸ்ல விடுவாங்க.

பதிவிற்குச் சம்பந்தமில்லாத விஷயம்

நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து கிட்டத்தட்ட என் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுபவர்கள் பரிசல்காரனும் வித்யாவும் (கொஞ்ச நாளாய் பின்னூட்டங்கள் இல்லை, ஏன்?). நான் இன்று ஏதோ கொஞ்சம் சுமாராக எழுத அவர்கள் கொடுத்த ஊக்கமும் ஒரு முக்கியக் காரணம். என்னுடைய சுமாரான ஒரு பதிவை வலைச்சர ஆசிரியராக அவர் இருந்தபோது அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தக் காரணங்களுக்காக நான் வித்யாவுக்கு சரிவர நன்றிகள் ஒருபோதும் சொன்னதில்லை. இந்தத் தருணத்தில் சொல்லி விடுகிறேன். வித்யா, மிக்க நன்றி.

Monday, December 6, 2010

...ஆகவே இனி யாரையும் கலாய்ப்பதில்லை...

(டிஸ்கி: வெறும் கலாய்ப்பது மட்டுமே நோக்கம். உங்களுக்குப் பிடிக்காத விஷயம் இருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். நீக்கி விடுகிறேன்.

பதிவில் வருவது போன்ற உரையாடல்கள் நடக்கவே இல்லை.)

சென்ற பதிவில் யாரையும் குறிப்பிட்டுக் கலாய்க்கவில்லை என்று நிறைய கண்டனங்கள் வந்துள்ளன. எனக்குக் கலாய்க்க வரவில்லை என்கிற உண்மையும் தெரிய வந்துள்ளது எல்லோருக்கும். அதனால் இனிக் கலாய்ப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். கும்மிதான்.

எதுவா இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறது என் வழக்கம். பிள்ளையார் சுழி உயிரெழுத்து ‘உ’ மாதிரி இருக்கும். ‘அ’ வுக்கு முன் வரும் ‘உ’ அப்படின்னு சொல்லியே நான் ஒரு ரெண்டு பதிவு போட்டிருக்கேன். நீங்க படிச்சாத்தானே. சரி இப்போ யாரைக் கும்மப் போறோம்? வெரி குட் கண்டுபிடிச்சிட்டிங்களே. நம்ம உனா தானா அண்ணனைத்தான்.

தங்க்சும் (ம), ரங்க்சும் (க) பேசிக்கொள்(ல்)வது போல உள்ளது.

ம: இவர் பேர் நல்லாருக்கே

க: ஆளும் சொக்கத் தங்கம்

ம: அவர் எப்படி எழுதுவாரு?

க: அவர் பயங்கர பாஸ்ட். ஒரு உதாரணம் சொல்றேன். சினிமாவப் பாத்துக்கிட்டே இருப்பார். தியேட்டர்ல வணக்கம் போடறதுக்கு முன்னாடி இவர் முப்பது பக்கத்துல விமர்சனம் போட்டுடுவார்

ம: அடுத்த ஷோ வணக்கத்துக்கு முன்னாடியா?

க: போடி இவளே, அவர யாருன்னு நெனச்ச, அதே ஷோ முடியறதுக்குள்ளே

ம: எங்க நான் கொஞ்சம் படிக்கிறேன் (படித்து முடித்துவிட்டு) ஏங்க இவர் பேருக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய நம்பர் வெச்சிருக்காரு?

க: அவர்ட்ட கேட்டேன். அவ்ளோ ஹிட் வந்ததற்கப்புறம் தான் எழுதுவதை நிறுத்துவாராம்

ம: ரொம்ப நீளமா எழுதுறாரே?

க: நீ வேற, அவர் மல்டிபிள் சாய்ஸ் ஆன்செர்ஸ் எக்ஸாம்ல கூட அடிஷனல் சீட் கேட்டவராம்

ம: திரைக்கதை ஸ்கிரிப்ட் தொலைஞ்சு போனாக் கவலையே படவேணாம். இவர் பதிவுல இருந்து மீட்டுக்கலாம். ஏங்க நான் நெனைக்கிறத சொல்லட்டுமா?

க: எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சொல்லு பரவால்ல

ம: இவரோட வேகத்தைப் பார்த்தா இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்துல லாரன்ஸ் நெழல விட வேகமா சுடுவாரே அது ஞாபகம் வருதுங்க

க: தேவலையே அப்புறம்

ம: இவர் விளக்கமா எழுதுறதப் பார்த்தா சிங்கம் படத்துல சூர்யா, ராதா ரவி கேட்ட ஒரு கேள்விக்கு எல்லாத் தகவலும் தருவாரே அது ஞாபகம் வருதுங்க

க: நீ வுட்டா ரசிகர் மன்றமே வச்சிடுவ போலிருக்கே. சரி வா அடுத்து வேற ஒரு பதிவரைப் பத்திப் பாப்போம்.

ம: போங்க நீங்க, நான் என்ன வெட்டியா, எனக்குக் கிச்சன்ல வேலை இருக்கு. நீங்க ஒன்னு பண்ணுங்க. விஜி உங்களை விட வெட்டியா இருப்பாங்க. அவங்களுக்குப் போன் போட்டு ஐடியா கேளுங்க.

க: சரி சரி, இதெல்லாம் சொல்லிக்கிட்டு. ஆனாலும் ஐடியா சூப்பர். நான் விஜிகிட்ட பேசறேன்.

(விஜி பேசுவது சாய்வு எழுத்துக்களில்)

தத்து மம்மி, நான் கோபி பேசறேன்

சொல்லுங்க. என்னங்க என்னையே கலாய்க்கிறீங்க

சரி சரி லூஸ்ல விடுங்க. இனிமே நோ கலாய்த்தல். நேரா கும்மிதான். உனா தானா அண்ணனைக் கும்மியாச்சு. அடுத்து யாரைக் கும்மலாம்னு ஐடியா கொடுத்தீங்கனா...

நீயே சொல்லு.

நம்ம காபா எப்படி?

சரிதான், கும்மிடலாம்.

இந்தப் பேரே எனக்கு ரொம்பப் பிடிக்கும்

ஏன்?

நம்ம பொடியன் ஒரு வயசுல சின்ன சின்னதா வார்த்தைகள் பேசுவான். கொஞ்சம் போல சுருக்கி சொல்வான்.

சாக்லேட்- சாக்கு
கல்கண்டு – காக்கு

அதே போல இரண்டு வார்த்தைகள் வரும் இடத்தில் அப்ரிவியேட் (abbreviate) பண்ணுவான். அப்பா உன்னை எப்படிக் கொஞ்சுவார்னு கேட்டா காபா (கண்ணா பாப்பா) என்று சொல்லுவான். எனக்கு அந்த ஞாபகம் வருது.

அதெப்படி கோபி உன் பையன் இவ்ளோ புத்திசாலியா இருக்கான்?

அழகிலும், அறிவிலும் அவன் அவங்க அம்மாவைப் போல.

அதானே பாத்தேன். காபாவைக் கண்ணே பாப்பான்னுல்லாம் கொஞ்சாதீங்க. நல்லாவே இல்லை. மேலும் நீங்க போன் பண்ணது அவரைக் கும்மத்தான் அப்படிங்கறதை ஞாபகம் வெச்சுக்கோங்க.

சரி சரி, இவரோட வலைப்பூவில் என்ன சொல்லி இருக்கார்னு பாத்தீங்களா?

நல்லாத்தானே இருக்கு. மதுரைக்காரன் அப்ப்டிங்குறதுல பெருமைன்னு சொல்லியிருக்கார்.

அது சரி. ஆனா மதுரை இவரைப் பத்தி என்ன நினைக்குதுங்குறதுதான் முக்கியம்.

அப்படிப் பாத்தா நீ, நான்லாம் பதிவராவே இருக்க முடியாது கோபி.

விஜி, நீங்க பதிவரா?

சரி சரி, லூஸ்ல விடுங்க.

காபாவுக்கு ஒலக இலக்கிய வியாதி உண்டு. ச்சே தப்பா சொல்லிட்டேன். அவர் ஒரு உலக இலக்கியவாதி. உள்ளூர் இலக்கியமும் தெரியும். ஆனா ஊனா ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போய் ஒரு புக்கு வாங்கிட்டு வந்து அதை கூகிள் பஸ்ஸில் போட்டுடுவார். நான் உடனே அதைப் பத்தி ஒரு நாலு லைன் கமென்ட் போட்டுடுவேன்.

எனக்கும் தெரியும் அது. அது சரி கோபி, உன்கிட்ட இருக்குறதே மொத்தமா நாலு புக்குதான். அதுல நீ படிச்சதே நாலு பக்கம்தான். அதெப்படி நிறைய படிச்ச மாதிரியும், நிறைய புக்கு இருக்குற மாதிரியும் சமாளிக்க முடியுது உன்னால?

ரொம்ப சிம்பிள் விஜி. எல்லாப் பதிப்பகத்தின் நூல் பட்டியலைக் கையில் வெச்சுக்கிட்டா மேட்டர் ஓவர்.

சரி சரி காபா மேட்டர் என்னாச்சு.

இவர் சமீபத்துல என்ன பண்ணார்னு கேளுங்க. கிகுஜிரோ பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். நந்தலாலா பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். அடுத்து ரெண்டையும் சீன் பை சீன் ஒப்பிட்டு ஒரு பதிவு வரும்னு நினைக்கிறேன்.

கோபி அந்த எஸ்ரா மேட்டர்...

இவர் எஸ்ரா பாணில காமெடின்னு நினைச்சு ஏதோ எழுதப் போக எல்லாரும் அதுக்கு சீரியசா பின்னூட்டம் போட ஆரம்பிச்சாங்க. இவரே வந்து இது காமெடி அப்படின்னு சொல்ல வேண்டியதாப் போச்சு. ஹா ஹா, ஜோக்கு முடிஞ்சிடிச்சி விஜி, இப்ப நீங்க சிரிக்கணும்.

ஹா ஹா ஹா போதுமா? நீங்க ஒரு ஆணாதிக்கவாதி கோபி

தத்து மம்மி, என்னாச்சு?

பாருங்க பெண் பதிவர்களைக் கலாய்க்க மாட்டேங்குறீங்க?

இவ்ளோதானே. இருங்க சீட்டுக் குலுக்கிப் போடறேன். யார் பேர் வருதுன்னு பாப்போம்.

(வந்தது விதூஷின் பெயர்)

விஜி, விதூஷ் பேர் வந்திருக்கு.

எல்லா சீட்லயும் விதூஷ் பேர்தான் எழுதிப் போட்டாயோ?

என்ன நம்பிக்கையே இல்லாம?

சரி சரி சொல்லு

நீங்க இந்தக் கண்ணன் பட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்னு பாரதியார் எழுதின கவிதைத் தொகுப்புகளைப் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க.

கோபி, பாரதியார் பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க. வீட்டுக்கு லாரியே வரும்.

அவசரப்படாதீங்க. இவங்க அதே மாதிரி, முழிபேர்ப்புக் கவிதைகள், இந்தா பிடிச்சுக்கோ கவிதைகள், சயனைடு கவிதைகள் எல்லாம் எழுதி இருக்காங்க.

நானும் படிச்சேன். முழி நிஜமாவே பேந்து போச்சு.

இப்போல்லாம் தங்க்ஸ் எனக்குக் குடுக்கிற பனிஷ்மென்ட் இதான். இந்த மூணு கவிதையையும் கோடு போட்ட நோட்டுல மார்ஜின் போட்டு, ஸ்கெட்ச் பென் எல்லாம் யூஸ் பண்ணி ஒவ்வொரு கவிதையையும் பத்து பத்து வாட்டி எழுதணும். அடித்தல் திருத்தல் இல்லாம. பின்னூட்டங்கள் உட்பட எழுதியாகனும். இந்த முழி பேர்ப்புக் கவிதைகளுக்கு ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யா கோனார் நோட்ஸ் எல்லாம் கூடப் போட்டிருக்காங்க.

அந்தக் கொடுமை வேறயா? அடுத்து யாரைக் கலாய்க்கப் போறீங்க? ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யாவா?

இல்லை விஜி, ஆபீஸ் போகணும்.

உன் நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு. ஆபீஸ் போகனும்னுதான் சொல்ற. வேலை பாக்கனும்னு சொல்லலை. சரி வை போனை.

?????!!!!!!