Showing posts with label கப்பி பய. Show all posts
Showing posts with label கப்பி பய. Show all posts

Friday, February 13, 2009

கவிமெழுகுவத்தி தாராபுரம் தகரநிலவன் கவிதைகள்

என்கிட்ட இருக்கு பிளாக்பெர்ரி - உன்
கண்ணு ரெண்டும் இனிக்கும் ஸ்ட்ராபெர்ரி!

**************



காலங்கார்த்தால விடியல் - அப்ப
உன்னைப் பார்த்தாலோ டரியல்!

*************



நைட்டானா வருது ஸ்டாரு - நான்
டைட்டானா குடிப்பேன் பீரு
சைட்டுன்னா அதுக்கு உன் பேரு - நீ
வெயிட்டுன்னா காலம்பூரா காத்திருப்பேன் பாரு!

**********************


படிக்காதவன் ஹீரோயின் தமன்னா!
நீ என்னை காக்க வந்த சூப்பர்வுமன்னா?

**************



அவளைப் பார்த்ததும் அடிச்சேன் பிகிலு!
அவ அடிச்சதுல கிழிஞ்சது என் செவுலு!

******************************




ரோட்டுல ஓடுது காரு!
சரக்கடிக்க டாஸ்மாக் பாரு!!
குட்டிக்கதைக்கு சாரு!!!
நீதானே என் லைஃப்புக்கு வேரு!!!!

******************

டே(ய்) கவிதை

ஜனவரி ஒன்னு நியூ இயர் டே
மே ஒன்னு லேபர்ஸ் டே
நவம்பர் பதினாலு சில்ரன்ஸ் டே
பிப்ரவரி பதினாலு வாலண்டைன்ஸ் டே
நவம்பர்ல வரும் தாங்க்ஸ் கிவிங் டே
நீ ஓகே சொல்ற நாள் எனக்கு லைஃப் கிவிங் டே

********

தீர்ப்பு சொல்றதுக்கு வேணும் சொம்பு
டார்ச்சர் பண்றதுக்குன்னே பொறந்தவன் சிம்பு
நீ லுக்கு விட்டா என்னை தாக்குதடி அம்பு
என் வாழ்நாள் பூராவும் வேணுமடி உன் அன்பு

*********



காமெடி கிங் கவுண்டமணி!
சிவாஜி நடிச்சது ஆலயமணி!
மூன்றாம்பிறை நாய் சுப்ரமணி!
நான் ஆகனும் உன்னோட ரங்கமணி!

******************************




இஸிகோல்ட்டு கவிதை


கிஸ்ஸடிக்கும் காதலியும்
ஆப்படிக்கும் மேனேஜரும்
ஒன்றுதான்
இருவருமே
நேரம் பார்த்து
கழுத்தறுப்பார்கள்!


*****************************




? கவிதை

உன் தந்தை பிநவாதியா?
நீ அவர் எழுதிய புனைவா?
உன் அன்னை வலைப்பதிவரா?
நீ அவர் எழுதிய மொக்கையா?
உன் குடும்பம் கூட்டுப்பதிவா?
நீ வாய் திறந்தாலே கும்மியா?

************************


'இப்ப இன்னாங்கற நீ' கவிதைகள்

நீ வரும்போதெல்லம்
உன்னைப் பார்த்து
ஏன் சிரிக்கிறேன் என்கிறாய்
'இடுக்கண் வருங்கால் நகுக'
மறந்துவிட்டாயா கண்ணே!

**

நீ வாங்கிய தங்க வளையல்
நன்றாக இருக்கிறதா
என்கிறாய்
என் கிரெடிட் கார்டில் இப்படி
வரைமுறையின்றி தீட்டுவது
நன்றாகவா இருக்கிறது?

**

பாண்டியன் எக்ஸ்பிரஸில்
டிக்கெட் கிடைக்கவில்லை என்கிறாய்
போன மாதமே
ரிசர்வேஷன் செய்யாதது
உன் தவறென்று
எப்படி சொல்வேன் பெண்ணே?

**

- தகரநிலவனின் 'டரியல் காதல்' கவிதை தொகுப்பிலிருந்து

Sunday, December 7, 2008

டெரர் டீ.ஆர்

Monday, August 25, 2008

வீரத்தளபதி ஜே.கே.ரித்திஷின் நாயகன் தடை - அமெரிக்காவில் போராட்டம்

டல்லாசுப்பட்டி, ஆகஸ்ட் 25, 2008: வீரத்தளபதி ஒலக நாயகன் ஜே.கே.ரித்தீஷ் நடித்து வெளியாகியுள்ள 'நாயகன்' திரைக்காவியத்தை அமெரிக்காவில் வெளியிட தடைகள் ஏற்படுத்திய அந்நிய சக்திகளைக் கண்டித்து அனைத்தமெரிக்க ரித்தீஷ் நற்பணி மன்றம் சார்பில் அமெரிக்கா எங்கும் போராட்டங்களும் சாலை மறியல்களும் நடைபெற்றன. கடந்த வெள்ளியன்று பல்வேறு நாடுகளில் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ள ஜே.கே.ரித்திஷ் நடித்த நாயகன் திரைப்படம் அமெரிக்காவில் வெளியாகவில்லை. வீரத்தளபதியின் வளர்ச்சி பொறுக்காத சில கோடம்பாக்கத்து முன்னணி நட்சத்திரங்கள் அமெரிக்காவிலுள்ள தங்கள் நண்பர்கள் மூலம் தடைகள் ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே இங்குள்ள திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிடத் தயங்கியதாகவும் செய்திகள் வெளியாயின.





இந்நிலையில் சென்ற சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அமெரிக்காவின் பல்வேறு பெருநகரங்களில் ஜே.கே.ரித்தீஷின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இத்திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடக் கோரியும் தடைகள் உண்டாக்கிய கருங்காலிகளைத் தண்டிக்க கோரியும் போராட்டம் நட்த்தினர். அனைத்து பெருநகரங்களிலும் மாபெரும் பேரணியும் பேரணியின் முடிவில் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த போராட்டத்தின் காரணமாக பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.



பெருந்திரளான மக்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் பேசிய புகழ்பெற்ற ஆங்கில இயக்குனர் லீமான் "வீரத்தளபதி தமிழ் திரையுலகின் 'அசைக்க' முடியாத சக்தியாக 'வளர்ந்துகொண்டிருக்கிறார்'. அவர் வளர்ச்சியை அந்நிய சக்திகளால் தடுத்து நிறுத்த முடியாது" என்று கருத்து கூறினார். டிங்கர் கிச்சான் பேசுகையில் "இது தரித்திரம் சரித்திரம் காணாத போராட்டம்" என்றார். இந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பேரன், டூமிர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இவர்கள் மட்டுமல்லாது ஏஞ்சலினா காலி, ஸ்கார்லெட் போகன்சன் போன்ற காலிவுட் நடிகைகளும் கலந்துகொண்டனர்.


விழாவில் பேசிய கிஜய.டி.ராட்ரிகேஜர்
"இந்தூரு காப்பி கடை ஸ்டார் பக்ஸு
இருமல் வந்தா தடவிக்கோ விக்ஸு
இத்தனை நாளா அடிச்சது ஒலிம்பிக்ஸு
இனி அடிக்கும் ரித்தீஷோட கிலிம்பிக்ஸு" என்று மேடையில் தாளமிட்டு பாடி ரித்திஷுக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார். இதை நரி செய்தித் தொலைக்காட்சி ஸ்லோமோஷனில் போட்டுக்காட்டி டி.ஆர்.பியை எக்கச்சக்கமாக ஏற்றிக்கொண்டது.

நியூயார்க்கில் நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் அழகிய சிங்கர் படோனா வீரத்தளபதியின் "நிலா நிலா ஓடி வா" பாடலைப் பாடி ஆடினார். வீரத்தளபதியின் புகழ் பாடும் பாடல்களின் கேசட் விற்பனை களைகட்டியது.





கலிபோர்னிய மாகாண ஆளுனர் அரைலோடு சிவாஜிநேசர் கடிதம் மூலம் அனுப்பிய செய்தியில் "என்னைப் போன்ற நடிகர்கள் பெயரளவில் நாயகர்களாக நடித்தாலும் உண்மையான நாயகன் ரித்தீஷ்தான்" என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவரும் இந்த வேளையில் ரித்தீஷின் திரைப்படம் வெளியாவதில் உண்டாகியிருக்கும் இந்த நிலை கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஓவாமா ரகசியமாக ரித்திஷிடம் தொலைபேசியில் பேசியதாக நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து மெக்குயின் கருத்து எதுவும் சொல்லாதது பெரும்பான்மையான மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.




அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் பல நாடுகளில் போராட்டம் நடந்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து சென்னையில் இருக்கும் வீரத்தளபதி ரித்தீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் சுமூகமாக படம் வெளியிட தக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அமெரிக்க ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்னெறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வீரத்தளபதி மேலான தங்களின் பாசத்தை மனதில் கொண்டு 'நாயகன்' திரைக்காவியத்தை அமெரிக்காவில் வெளியிட வேண்டுமென்பதே அவர் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

Tuesday, May 20, 2008

ரெண்டு போட்டி - முதல் கட்ட வாக்கெடுப்பு - Updated

வணக்கம் மக்களே!! ரெண்டு போட்டியில் பட்டையைக் கிளப்பும் உங்க பங்களிப்புல மகிழ்ச்சிக் கடலில் கைப்புவை தள்ளிவிட்டுட்டு மத்த சிங்கங்கள் படகுல மிதந்துட்டிருக்கோம். போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் ஏற்கனவே சொன்னது போல் உங்களின் முதல் இரண்டு பதிவுகளையோ அல்லது இந்தப் பதிவில் நீங்க சொன்ன இரண்டு பதிவுகளையோ முதல் கட்ட வாக்கெடுப்புக்கு சேர்த்திருக்கோம்.



போட்டியில் கலந்துகொள்ளும் பதிவுகளின் முழுப்பட்டியல்:


செல்விஷங்கர்

1. இரண்டடியில் இன்பம்

2. இரண்டு மனம்

பாஸ்டன் பாலா

1. ரெண்டுக்கு வந்த கோலாகலம்

அம்பி

1. ரெட்டை ஜடை வயசு

2. தமிழ் Vs உதித் நாராயண்

சென்ஷி

1. என் இரண்டாம் காதலி

2. உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு

ச்சின்னப் பையன்

1. எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'!!!

2. கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்

தமிழரசன்

1. ஜோடிப் புறா

2. ப்ளாஸ்டிக் பூக்கள்

கோவி.கண்ணன்

1. சன்டேன்னா இரண்டு ! ( வவாச போட்டி)

PPattian : புபட்டியன்

1. இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா

2. குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்

ramachandranusha(உஷா)

1. தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு

KING

1. வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...


பாச மலர்

1. நதியொன்று விதி தேடி..

2. நிறைமதி காலம்

ஆயில்யன்

1. இது ”ரெண்டுக்கு” மேட்டர்

2. ”இரண்டு”ங்கெட்டான்


திகழ்மிளிர்

1. இதயம் இரண்டாகிறது

2. அன்பே சிவம்

கண்மணி

1. ரெண்டு ....ரெண்டா...தெரியுதுங்க...


இரா. வசந்த குமார்

1. எனவே, நான், வேண்டாம்.

2. இது நாடகம்?


அபி அப்பா

1. வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு!!! -" ரெண்டு"!!!!

2. தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா "ரெண்டு".. வ.வா.ச போட்டிக்கு என் "ரெண்டாவது" பதிவு!!!!


சுல்தான்

1. இரண்டுமே அவள்தான்


பினாத்தல் சுரேஷ்

1. இதென்ன கலாட்டா?

2. இரண்டும் ஒன்றும்


இளைய கவி

1. வ.வா சங்க போட்டிக்கு "ரெண்டு பதிவு"


நிஜமா நல்லவன்

1. ரெண்டாவது அட்டம்ப்ட்!!

2. யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க?!


சிறில் அலெக்ஸ்
1 இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்


மங்களூர் சிவா

1. ரெண்டு


இரவு கவி

1. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவுக்காக...


Sen22

1. எனது புலம்பல்கள்_(9)


லக்கி லுக்

1. திரும்பிப் பாருடி!

2. ரெண்டக்கா.. ரெண்டக்கா.. ரெண்டக்கா..


KRP

1. கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே ...

2. கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்



Radha Sriram
1. இரட்டை பதிவர்கள் இம்சை...


Sathiya

1. இரண்டக்க இரண்டக்க...

2. ரெண்டே ரெண்டு ஆசைதான்...


தமிழ் பிரியன்

1. தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''

2. ஆத்தா! ரெண்டாவது ரேங்க் வாங்கிட்டேன்..

சந்தோஷ்

1. இரண்டு வார்தைகளால் உல‌கை அறிந்தோம்

2. இரண்டு விரல்களின் நடுவில் ஒற்றை குழல்


NewBee

1. ஒரே ஒரு கதை

2. டாக்டர் புதுவண்டின் பரிந்துரை


நிலா

1. நிலாவுக்கு இன்று இரண்டு


கல்யாண்ஜி

1. இரண்டு மனம் வேண்டும்- டிஎம்எஸ்ஸின் திகில் அனுபவம்

2. இடமாற்றம் - வ.வா.சங்கத்திற்கான போட்டிக் கவிதை


ஓகை

1. ரெப்பா கியர்.


சகாதேவன்
1. யூ ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்

2. கல்யாண சமையல் சாதம்


ஷைலஜா

1. எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்


ஜாம்பஜார் ஜக்கு

1. இத்தலைப்பில் மூண்று தவருகள் இருக்கின்றன.


பொன்வண்டு

1. அய்யய்யே!!! 'ரெண்டு' !!!


வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )

1. முருகன் கொடுக்காத இரண்டு


அருட்பெருங்கோ

1. தண்டவாளப்பயணம்

கபீரன்பன்

1. ஒரு ஜோடி நாற்காலியின் கதை


சக்தி

1. அன்பு மகனே

TBCD

1. இரண்டில் ஒன்று......!!!!!!!!!!!!!!!-

68 பதிவுகளையும் படிச்சுட்டீங்களா? வோட்டுப் பொட்டி கீழே இருக்கு. உங்களுக்கு புடிச்ச ஒரு 'ரெண்டு' பதிவைத் தேர்ந்தெடுங்க. ஒவ்வொரு பதிவுக்கும் பக்கத்தில் இருக்கற பொத்தானை க்ளிக்கினாலே வோட்டு விழுந்துடும். எல்லா வாக்கெடுப்பும் போல இங்கயும் ஒருத்தருக்கு ஒரு வோட்டு தான். சங்கத்துல புகுந்து யாராவது வாக்குப்பொட்டியைத் தூக்கனும்னு நினைச்சா தல தன்னோட தலையை அடமானம் வச்சாவது வாக்குப்பொட்டியைக் காப்பாத்துவாரு.

பூத் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை திறந்திருக்கும். ஒரு வாரத்துக்குள்ள எல்லா பதிவுகளையும் படித்து உங்களுக்குப் பிடித்த ஒரு 'ரெண்டு' பதிவுக்கு வோட்டு போடுங்க. இந்த வாக்கெடுப்பின் மூலம் இருபது பதிவுகள் இரண்டாம் கட்ட போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.


போட்டியில் பங்குகொண்டவர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றிகளும் வாழ்த்துக்களும்!!

கீழே இருக்க பொட்டியில் உங்க பொன்னான வாக்குகளை கன்னாபின்னான்னு போட்டுத் தாக்குங்க!! ஸ்டார்ட் மீஜீக்க்!!

Update: மக்களே, முதல்ல வைத்த வாக்குப்பெட்டி நான் எழுதற நிரலி மாதிரியே புட்டுக்கிச்சு.....சொதப்பிருச்சு..டமாலாயிருச்சு..டூமிலாயிடுச்சு..புஸ்ஸாயிடுச்சு..மொத்தமா வெடிச்சிருச்சு....

Zoho-வில் உள்ள சில குறைகளால் அதை தூக்கிட்டு புதுசா ஒரு பொட்டி இறக்கியிருக்கோம்..இப்ப உங்க விரல்ல நீங்களே மையை வைச்சுக்கிட்டு ஆளுக்கு ஒரே ஒரு கும்மாங்குத்து குத்துங்க...வோட்டு போட்டதும் உங்க மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் வரும்(எரிதமாகக்கூட(Spam) வரலாம்)..அந்த மின்மடல் மூலம் உங்க வாக்கை உறுதிசெய்யனும்..மறந்துடாதீங்க..



வோட்டு பொட்டி தூக்கியாச்சு!!

Tuesday, March 25, 2008

ஜில்பான்சி ரசம்
























தல கைப்புவின் ஆணைப்படி பிரம்மரசத்தை டாங்கர் லாரில புடிச்சுட்டு வந்தாவது கரைபுரள ஓட வைக்க இங்கிட்டு வாங்க..இப்படி க்ளிக்குங்க

Tuesday, February 5, 2008

தாரே கோடம்பாக்கம் பர்

பொங்கலுக்கு ரிலீஸான படங்கள் நடித்தவர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு படம் பார்த்தவர்களுக்கு என சகலருக்கும் ஆப்பு மேல் ஆப்பாக பார்சல் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது தெரியாமல் பொங்கல் ரிலீஸ் படங்களை வரிசையாக பார்த்து மப்பேறி மட்டையாகியிருக்கும் சின்னக் கலைவாணர் விவேக் கோலி ஜோடா அடித்து ஹேங் ஓவரைப் போக்க வடபழனி க்ரீன் பார்க்குக்கு வருகிறார். அங்கே ஏற்கனவே கோலிவுட் கும்பல் ஒன்று குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது

விவேக்: அடேய்! எங்கே போனாலும் ஒரு க்ரூப்பா வந்துடுறீங்களேடா! மனுசனை நிம்மதியா சோடா குடிக்கக் கூட விடமாட்டீங்களா? இப்ப யாருக்கு சமாதி கட்ட கூடியிருக்கீங்க?

பரத்:அட ஏற்கனவே எங்களுக்கு சமாதி கட்டற நிலமைல தான் இருக்கு. பேரரசு இளநீ பழனின்னு ரைமிங்கா டயலாக் சொல்லி டைமிங்கா ஆப்படிச்சுட்டாரு. இதுலருந்து எப்படி வெளிய வர்றது..எப்படி ஹிட் கொடுக்கறதுன்னு பேசிட்டிருக்கோம்

விவேக்: அஜீத், விஜயகாந்துன்னு வரிசையா அந்தாள் ஆப்படிச்சுட்டு வரும்போதே தெளிவாயிருக்கனும்..வெள்ளை பெயிண்ட்ல விபூதியும் கருப்பு பெயிண்ட்ல மீசையும் வரைஞ்சு விட்டதும் ஃபேன்சி டிரஸ் காம்பெடிஷன்ல கலந்துக்க போற காண்வெண்ட் பையன் மாதிரி கெளம்பிட்ட..இப்ப ஃபீல் பண்ணி என்ன ஆவப்போகுது?

பரத்: அதில்ல சார். அடுத்த படத்துல ஒரு நல்ல கதையா புடிக்கனும். எல்லாரும் ரீமேக் பண்றாங்க..இப்ப தாரே ஜமீன் பர் தான் ஹிட்டு...அதை தமிழ்ல பண்ணலாமான்னு பேசிட்டிருக்கோம்

விவேக்: அந்த சின்ன பையனா நீ நடிக்க போறயா? அதெல்லாம் உனக்கு சூட்டாவாது. அப்படியே நாலு குத்து பாட்டு ரெண்டு லெக் ஃபைட்டுன்னு ஒரு ரூட்டைப் புடிச்சு போய் பொழச்சுக்கோ

எஸ்.ஜே.சூர்யா: ஆங்க்...இப்படி சொன்னா எப்படி ஆங்க்...நான் கதையை ரெடி பண்ணிட்டேன்..ஆங்க்

விவேக்: மொதல்ல இஎண்டி ஸ்பெஷலிஸ்ட்ட காமிச்சு உன் தொண்டைய ரெடி பண்ணனும்டா

எஸ்.ஜே.சூர்யா: அந்த சின்ன பையனா நானே நடிக்கறேன். அதாவது வயசு 22. மனசளவுல 12. அவன் க்ளாஸ்மேட் கல்பனா, சயின்ஸ் டீச்சர் சந்தியா, டியூஷன் மிஸ் மீனா, பக்கத்து வீட்டு பத்மா, அவனோட நொண்டி விளையாடற நமீதான்னு பார்க்கற பொண்ணுங்க மேல எல்லாம் பாசத்தைக் காட்டறான். அதைப் புரிஞ்சுக்காம அந்த சின்னப் பையனை

விவேக்: சின்னப் பையனா..கலிகாலம்டா டேய்

எஸ்.ஜே.சூர்யா: அந்த சின்னப் பையனை பாய்ஸ் ஸ்கூல்ல சேர்த்துடறாங்க. அங்க பி.டி. மாஸ்டரா இன்னொரு சூர்யா. இந்த சூர்யாவும் அந்த சூர்யாவும் சேர்ந்து ஒவ்வொரு கேர்ள்ஸ் ஸ்கூலா, ஒவ்வொரு லேடீஸ் காலேஜா போய் சைட் அடிக்கறாங்க. கடைசில சைட் அடிக்கறது ஒரு வியாதி இல்ல..அவங்களோட வாழ்க்கை அப்படின்னு மக்களுக்கு புரியற மாதிரி ஒரு மெசெஜ் சொல்றோம். நடுல அம்மா செண்டிமெண்ட்ல இருந்து ஐயிட்டம் நம்பர் வரைக்கும் எல்லாத்தையும் கொண்டு வர்றோம்...வாலி பாட்டெழுதினா அத்தன பேரும் காலி

விவேக்: டேய் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோடா! யூனிபார்ம் டவுசர்ல உன்னைப் பார்த்தா தமிழ்நாட்டுல எத்தன பேர் டவுசர் கிழியப் போதோ தெரிலயேடா..எங்களை எல்லாம் மன்னிச்சு விட்டுடக்கூடாதாடா?

அப்போது "ஆமாண்ணே..இல்லண்ணே...வெறும் லைம் ஜூஸ் தாண்ணே..தண்ணி நிறைய கலந்துட்டண்ணே..இல்லண்ணே ஒரு க்ளாஸ் தான்ணே" என்று மொபைலில் பேசியபடி வருகிறார்.

விவேக்: அடப்ப்ப்பாவி...ஒரு லைம் ஜூஸ் குடிக்கறதுக்கு மிக்ஸிங் கலந்து அதுக்கு போன்ல கன்னாபின்னான்னு பெர்மிஷன் வாங்கி..என்னடா நடக்குது இங்க..

ஜெயம் ரவி: இல்லைங்க..எனக்கு லைம் ஜூஸ் புடிக்கும்ங்க..எங்கண்ணனுக்கு புடிக்காதுங்க.அதுனால கொஞ்சமா குடிக்கறேங்க

என்று மூக்கால் பேசி ஃபீலாகிறார்.

விவேக்: தனியா வந்திருக்கியே செல்லம் வீட்டுல தேட மாட்டாங்களா ராசா??

ஜெயம் ரவி: இல்லைங்க..சொல்லிட்டு தாங்க வந்தேன்..எனக்கு ரீமேக் தாங்க ஹிட்டாகும். அதான் தாரே ஜமீன் பர் டிஸ்கஷன் ஓடுதுன்னு சொன்னாங்க வந்தேங்க

விவேக்: இங்க பாருடா! ரீமேக் தான் ஹிட்டாகுதாம்..தம்பி உங்க படம் கடைசியா எப்ப ஹிட் ஆச்சு ஞாபகம் இருக்கா?

ஜெயம் ரவி: சந்தோஷ் சுப்ரமணியம் சூப்பரா வந்திருக்கு. ஜெனிலியா அவ்ளோ அழகா இருக்காங்க. நல்லா நடிச்சிருக்காங்க. அண்ணன் சூப்பரா டைரக்ட் பண்ணியிருக்காரு. எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க

விவேக்: ஹிட் படம் எங்கடான்னு கேட்டா வரப்போற படத்தைப் பத்தி பேசறான்.. அதுசரி..உனக்கு தெலுகு படம் தானே ஒத்துவரும்..இந்தி பக்கம் வந்துட்ட?

ஜெயம் ரவி: ஓ இது இந்தி படமா? எனக்கு தெரியாதே..எங்கண்ணன் அனுப்பினாரு..அதான் வந்தேன்

விவேக்: என்னமோ போ..அங்க யாருடா தலைல சேமியாவை சொருவிட்டு வர்றது

சிம்பு: எனக்குப் புடிக்கல..தாரே ஜமீன் பர் எனக்கு புடிக்கல

விவேக்: தெரியுமே..நாலு ஹீரோயினைப் போட்டு படமெடுத்தா ஒனக்கு புடிக்கும். இது எப்படி புடிக்கும்

சிம்பு: இல்ல சார்.எல்லாருக்கும் பொறாமை. சின்ன வயசுலயே இவ்ளோ பண்றானேன்னு. இன்னும் கலக்குவான் இந்த சிம்பு. தாரே ஜமீன் பர்ரை தமிழ்ல எடுக்கறேன் சார்

விவேக்: நீ மட்டும் என்ன பெருசா எடுக்கப் போற. எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதைல கொஞ்சம் எதுனா மாத்துவ. அவ்வளவு தானே?

சிம்பு: இதுல அப்படியே உயிரை உருவி கைல வைக்கற மாதிரியான கதையை சொல்றோம்

விவேக்: கோடம்பாக்கத்துக்கு பஸ் புடிச்சு வரும்போதே எல்லா டைரக்டரும் மனப்பாடம் பண்ற மொத டயலாக்கே இதுதானேடா..உயிரை உருவறீங்களோ இல்லையோ..ப்ரொடியூசர் வேட்டியை நல்லா உருவறீங்கடா

சிம்பு: இந்தில சின்ன பையனுக்கு தானே வியாதி..ஆனா இதுல ஹீரோயினுக்கு டிஸ்செக்ஸியா

விவேக்: டேய் அது டிஸ்லெக்சியாடா

சிம்பு: ஏதோ ஒன்னு..இதுல ஹீரோயினுக்கு அந்த வியாதி இருக்கு. அவளை அது தெரியாம மெண்டல் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடறாங்க. அங்க நானும் இருக்கேன்

விவேக்: கரெக்டான இடத்துல தான் இருக்க..கண்டினியூ பண்ணு

சிம்பு: அங்க அவளைப் பார்த்ததுமே எனக்குள்ள ஒரு புயல். காதல் அப்படியே பொங்கிட்டு வருது

விவேக்: டாஸ்மாக்ல வாங்கற பீர் பாட்டிலே இப்பல்லாம் பொங்க மாட்டேங்குது..அதெப்படிடா உங்களுக்கு இந்த காதல் மட்டும் அப்படி பொங்குது??

சிம்பு:அவளை பார்த்து லவ்ஸ் ஆகும்போதுதான் அந்த ஹாஸ்பிடலுக்கு டாக்டரா இன்னொரு ஹீரோயின் என்னை விட வயசுல பெரியவங்க ஒருத்தர் வர்றாங்க

விவேக்: டேய் இந்த படத்துலயுமா...முடியலடா..அவ்வ்வ்

சிம்பு: இந்த முக்கோண காதல் கதைல நடுல இன்னும் ரெண்டு ஹீரோயினைப் போட்டு, சந்தானம், சத்யனை எல்லாம் கூப்பிட்டு ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டியது தான். வருவான் சார். சிம்பு வருவான்

விவேக்: உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா..அங்க யாருடா தீவிரமா யோசிக்கறது??

பேரரசு: உட்டாலக்கடி உலக்கை
வூட்டாண்ட கீறான் அல்லக்கை
தண்டவாளத்துல ரயிலு
அடிக்கிது பாரு பிகிலு

என ஃபீலிங்காக எழுதிக்கொண்டிருக்கிறார்

விவேக்: சார்..என்ன சார் எழுதிறீங்க

பேரரசு: அடுத்த படத்துக்கு டூயட் எழுதறேன் சார்..சூப்பரா வந்துட்டுருக்கு..வார்த்தை அப்படியே விழுது

விவேக்: இது டூயட்டா...என்னவோ மணிரத்னம் 'கதை மடில வந்து விழுது'ன்னு பில்டப் கொடுக்கற ரேஞ்சுக்கு நீயும் கொடுகறீயே உனக்கே ஓவரா தெரியல

பேரரசு: திருத்தணி வந்தா திருப்பம் சார்..சொல்லி அடிக்கிறோம். 'தாயே செம்மீன் பல்' படத்தை ரீமேக் பண்றோம்.

விவேக்: மொதல்ல வாயைத் தொறந்து பேசுங்க சார். தாரே ஜமீன் பர் சொல்லுங்க பாக்கலாம்

பேரரசு: விஜய் டேட் கொடுத்துட்டாரு..இனி பேச்சு இல்ல..வெறும் வீச்சு தான்

விவேக்: என்ன வீசப்போறீங்க? உங்களை வெளிய பாத்தா ஆசிட் முட்டை வீச தான் ரெடியா இருக்காங்க

பேரரசு: அத விடுங்க..கதைய சொல்றேன்..படத்துல ஹீரோ டாஸ்மாக்ல வேலை பாக்கறாரு. ஹீரோயின் திரிசா பால்வாடி ஸ்கூல்ல டீச்சரா வேலை பாக்கறாங்க. ஒரு சின்ன பையன் டெய்லி டாஸ்மாக்ல கட்டிங் வாங்கி அடிக்கிறான். இந்த சின்ன வயசுலயே இப்படி சரக்கடிக்கறானேன்னு நம்ம ஹீரோ அவனை பெருமையா பாக்கறாரு. அவன் யாருன்னு அவன் பின்னாடியே போய் பாக்கறாரு. பார்த்தா அது அவனோட அக்கா மகன். அக்கான்னா ஹீரோவோட பெரியப்பாவோட சித்தப்பாவோட மாமா பையனுக்கு ஒன்னுவிட்ட சித்தப்பாவோட பேத்திக்கு மக. அவ்வளவு நெருங்கிய சொந்தம். தன் மகன் தண்ணியடிக்கறது புடிக்காம அவ அழறதை ஹீரோ பாக்கறாரு. அந்த பையனை திருத்தனும்னு அவனுக்கு டாஸ்மாக்ல சரக்கு கொடுக்காம திருத்தராரு. ஆனா அக்கா புருஷன் அதுக்கு மேல குடிக்கறான். அவனையும் அடிச்சு திருத்தறாரு. கடைசில ஏரியா கவுன்சிலரையும் திருத்தராரு. எல்லாரையும் திருத்திட்டு டாஸ்மாக்ல சேல்ஸ் இல்லைன்னு வேலையை விட்டு தூக்கிடறாங்க. அப்ப லாங் ஷாட்ல குடும்பத்தோட சாராயம் காய்ச்ச போறாரு

விவேக்: உன் கதை ஏன்டா இப்படி காறித்துப்பற மாதிரி இருக்கு

பேரரசு: அப்படிலாம் சொல்லாதீங்க சார். இந்த படமும் கமர்சியல் ஹிட்டாகும் சார். அதுக்கேத்த மாதிரி ஸ்கிரீன் ப்ளே வச்சிருக்கேன் சார்

விவேக்: தமிழ்நாட்டு மக்களை இந்த விஷயத்துல்ல தான் டா என்னால புரிஞ்சுக்கவே முடியல..உன் படமெல்லாம் எப்படிடா ஹிட் ஆகுது??

எனும்போதே "எல்லா ஹீரோவுக்கும் அல்லு கிழலனும்..நாம தான் ரீமேக் பண்றோம்" என்று சே குவேரா கெட்டப்பில் திருமாவும் "இன்னும் நான் யூத்யா..தலைமுடி பாத்தியா ஒரிஜினல் ஹேரு..தாரே ஜமீன் பர்ரு நான் நடிக்கிறேன் பாரு" என்று டீ.ஆரும் "முகத்தை மூடி அழறதுல நான் இன்னொரு எம்.ஜி.ஆர். எனக்கு இந்த ரோல் அப்படியே பொருந்துதுன்னு அசிஸ்டெண்ட்ஸ் சொல்லிட்டாங்க" என்று சேரனும் கொலைவெறியுடன் ஓடி வர அங்கிருந்து அப்பீட் ஆகிறார் விவேக்.

Wednesday, August 29, 2007

சக் தே கோலிவுட்டு!!

சக் தே இந்தியாவில் ஷாருக் கான் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராகப் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 16 பெண்கள் கொண்ட அணியைத் தயார்படுத்தி இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுக்கிறார். சத்யம் தியேட்டரில் சக் தே இந்தியா பார்த்துவிட்டு பிரபா ஒயின்ஸ் பார் பக்கம் ஒதுங்கும் சிம்பு, சந்தானம், சத்யன் கோ தமிழிலும் இப்படி ஒரு படம் எடுத்து படம்காட்ட வேண்டுமென டிஸ்கஷனில் இறங்குகிறது.

சத்யன்: ண்ணா இந்தில ஹாக்கிய வச்சு சக் தே இந்தியான்னு பட்டையக் கிளப்பறாங்க..இங்க சென்னை- 28ன்னு புதுப்பசங்க புளியைக் கரைக்கறாங்க..நாமளும் ஏதாவது பண்ணனும்ண்ணா

சந்தானம்: ஏதாவது பண்ணனும்னா கொடுத்த வேலையை ஒழுங்கா பண்ணுடா..வாங்கிக் கொடுத்த ஓசி சரக்குக்கு அவனை ஏத்திவிடறயா? அவன் விரலை நீட்டி பேச ஆரம்பிச்சா நமக்கு அடிச்ச சரக்கெல்லாம் இறங்கிடும்டா..சொன்னா கேளுடா

சிம்பு: கெட்டவன் கதையை மாத்தறோம்...ஏதாவது விளையாட்டை வச்சு படமெடுப்போம்..என்ன விளையாட்டுன்னு அப்புறம் முடிவு பண்ணலாம்..மொதல்ல நடிக்கறதுக்கு 20 பொண்ணுங்களைப் புடிப்போம்

சந்தானம்: டேய்..மொத ரவுண்டுக்கே இந்த எஃபெக்டா...அதுவும் இருபது பேர் எதுக்குடா?

சத்யன்: ண்ணா..சூப்பருங்கண்ணா..போன வாரம் எங்க ஏரியா கேபிள் டிவில புதுசா ஒரு காம்பியரர் அம்மணி வந்திருக்குண்ணா..அவங்களையும் கூப்பிட்டுக்கலாம்ண்ணா

சந்தானம்(சத்யனைப் பார்த்து): நீ ஏன் இப்ப ஓவரா ஃபீல் ஆவற? எப்படியும் உனக்கு சான்ஸ் கொடுப்பான்டா..

சிம்பு: மந்திரா பேடில இருந்து அந்த கேபிள் பொண்ணு வரை புடிக்கறோம். படத்துல இந்த சிம்பு அவார்ட் மேல அவார்டா வாங்குவான்

சந்தானம்: டேய்..அவார்ட் வாங்கறது இருக்கட்டும்..மொதல்ல சைட் டிஷ் வாங்குடா...எவ்வளவு நேரம் சைட் டிஷ் இல்லாம சரக்கடிக்கறது?

சத்யன்: விஜய் கில்லில கபடி ஆடிட்டாரு..நாம என்ன விளையாடறதுண்ணா?

சந்தானம்: டேய் கில்லில அவர் ஆடினது பேர் கபடியா? லொள்ளு சபால சொட்டை மண்டையனே அதை விட நல்லா ஆடினான்டா..

எனும்போதே எஸ்.ஜே சூரியா என்ட்ரி ஆகிறார்.

எஸ்.ஜே: நானும் ஆட்டைக்கு வருவேன்..ஆங்க்...விளையாட்டுக்கு சேர்த்துக்கோங்க...ஆங்க்க்க்

சந்தானம்: சரக்குல பங்கு கேக்கதான் வந்தியோன்னு பார்த்தேன்..நல்லவேள..அப்படியே ஓரமா எதுனா கெஸ்ட் ரோல் பண்ணிக்கோ.

எஸ்.ஜே: எனக்கு ரெண்டு ஹீரோயின் கண்டிப்பா இருக்கனும்..ஆங்க்...மொதல்ல கேவலமா விளையாடி ஹீரோயின் கூட சண்டை போட்டு செகண்ட் ஆஃப்ல சூப்பரா விளையாடற மாதிரி கதையிருக்கனும்.ஆங்க்..நமீதா படத்துல உண்டா? ஆங்க...

சந்தானம்: டேய் எங்களைப் பார்த்தா பத்து செகண்ட்ல கான்செப்ட் யோசிச்சு காமெடி பண்ற மாதிரி இருக்குதா? டேய் நாங்க எவ்வளவு சீரியசா உருப்படியா விளையாட்டை வ்ச்சு ஒரு படம் எடுக்கலாம்னு டிஸ்கஷன்ல இருக்கோம்..நடுவுல உன் டிராக் ஓட்டறயா?

எஸ்.ஜே: நான் சின்ன வயசுலயே பக்கத்து வீட்டு பொண்ணுங்க கூட நொண்டி, பல்லாங்குழிலாம் விளையாடியிருக்கேன்..ஆங்க்..

சந்தானம்: நானகூட் பல பேர் காலை உடைச்சு நொண்டியாக்கியிருக்கேன்

எஸ்.ஜே: இப்ப நான் என்ன செய்ய சொல்லு? ஆங்க்க்க்

சந்தானம்: ஏன்டா ஆட்டோ ஹாரனை முழுங்கிட்டியா...ஆங்க்..ஆங்க்ன்னு சவுன்டு விட்டுட்டிருக்க? இது நாலு பேரு வந்துபோற இடம்...உன்னை இதுக்கு மேல பேச விட்டா அசிங்கமாயிடும்..அந்த கட்டிங் அடிச்சுட்டு பிளாட் ஆயிடு..இல்ல ஹாக்கி ஸ்டிக்க வச்சு நடுமண்டைல போட்ருவோம்

சிம்பு: (திடீரென குறுக்கில் புகுந்து) நாங்க எப்படிலாம் பழகனோம்..அப்படியே மிதக்கற மாதிரி இருந்துச்சு..விதி என் வாழ்க்கைல விளையாடிடு்ச்சு

என்றபடியே சந்தானத்தின் தோளில் சாய்ந்து பழக்க தோஷத்தில் கடித்து வைக்கிறார்.

சந்தானம்: டேய் கடிக்கறான்டா

சத்யன்: ண்ணா..எவ்வளவு சீரியசா ஃபீல் பண்றாரு..கடிக்கறாருன்னு சொல்றீங்களேன்ண்ணா

சந்தானம் : அதில்லடா கையைக் கடிக்கறான்டா

சத்யன்: மாசக்கடைசி ஆச்சுன்னா கையைக் கடிக்கறது வழக்கம் தானே..நமக்கு வேற ஓசில சரக்கு வாங்கித்தராரு

சந்தானம்: டேய் அவன் என் கையைக் கடிக்கறான்டா..நீ அவனுக்கு மேல கடிக்கறியே..அங்க யாருடா டிவின் டவர்ஸுக்கு பேண்ட் சட்டை மாட்டிவிட்ட மாதிரி ரெண்டு பேர் வர்றானுங்க

சிபியும் ( அட தளபதி இல்லீங்க..நம்ம சத்யராஜோட அண்ணன்..ச்சே மகன் சிபிராஜ்) 'ஜெயம்' ரவியும் வருகிறார்கள்.

சிபிராஜ்: நான் ஒன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க..அனுபவஸ்தன் சொல்றேன் விளையாட்டெல்லாம் வச்சு படமெடுத்தா விளங்காமப் போயிரும்

சந்தானம்: ஆமா இவர வச்சு எடுத்தா மட்டும் கலெக்ஷன் கோடிகோடியா கல்லா கட்டும்...டேய் இவன் படத்தை விட எடுக்க போற படம் நல்லா ஓடிடும்னு பொறாமைல பேசறான்டா

சிபிராஜ்: பொறாமைலாம் இல்லீங்க..நான் கூட ஃபுட் பால் வச்சு எடுத்த படத்துல நடிச்சேன்..ஆனா படம் பத்து நாளைக்கு மேல ஓடல

சந்தானம்: அந்த பத்து நாள் கூட நிலாவுக்காகவும் பிரகாஷ் ராஜுக்காகவும் தான் ஓடுச்சு..உனக்காக இல்ல..இங்க இருவது பொண்ணுங்களைப் புடிச்சு கில்மாவா படமெடுக்க ப்ளான் போடறோம்..உங்கள மாதிரி பத்திருபது பனை மரங்க வந்து ஃபுட் பால் ஆடினா எவனுக்கு என்ன வந்துச்சு? எவன்டா அதுக்கு அம்பது ரூபா செலவு பண்ணி பார்ப்பான்?

சிபி: அது சூப்பர் ஸ்டோரிண்ணா..டைட்டில்ல இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் எல்லாமே வித்தியாசமா எடுத்தோம்

சந்தானம்: டேய் அது என்ன டைட்டில் லீயா? சைனீஸ், இங்கிலீஷ் படம்லாமே இப்பல்லாம் மிரட்டல் அடி, பாயும் புலி, பருத்தி வீரர்கள்னு நேட்டிவிட்டியோட டைட்டில் வைக்கறாங்க..நீ லீன்னு வச்சா ஈன்னு இளிச்சுட்டு போயிடுச்சு

ரவி: அதை விடுங்க..நான் எம்.குமரன்ல பாக்சிங் விளையாடினேன், தாஸ படத்துல ஃபுட் பால் விளையாடினேன்..அதெல்லாம் கூட ஓடலைங்க

சந்தானம்: நீ நடிச்சு என்னவோ அந்த ரெண்டு படம் மட்டும்தான் ஓடலைங்கற மாதிரி சொல்ற?

ரவி(தழுதழுக்கும் குரலில்): அதெல்லாம் எங்க அண்ணனை கேட்டா தாங்க் தெரியும்..ஆனா நான் நல்லா ஆடுவேங்க..என்னை நம்புங்க

சந்தானம்: டேய் நான் கூடத்தான் டைட்டா சரக்கடிச்சுட்டு போதைல உன்னை விட சூப்பரா ஆடுவேன்..படம் ஓட இதெல்லாம் ஒரு காரணமாடா?

ரவி: விளையாட்ட வச்சு படமெடுக்கறதுக்கு பதில் மறுபடியும் அப்பாஸை கேப்டனா போட்டு சேப்பாக்கத்துல கிரிக்கெட் விளையாடலாம்ங்க..எங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டேன்

சந்தானம்: டேய் இங்க ஒழுங்கா காமெடி பண்ணாலே மக்கள் சிரிக்க மாட்டேங்கறாங்க..நீ வேற ஏன்டா நடுவுல புகுந்து இப்படி ராவடிக்கற?

சத்யன்:(இடையில் புகுந்து) இல்லீங்கண்ணா..மிக்ஸிங்கோட தான் அடிக்கறேன்

சந்தானம்: இப்ப நான் உன்னை அடிக்கறேன்டா

என சத்யனை அடிக்க வரும்போதே எஸ்.ஏ.சந்திரசேகர் கையில் கேமரா ஆங்கிள் காட்டியபடி வருகிறார்.

எஸ்.ஏ.எஸ்: தம்பிகளா கவலைப்படாதீங்க..உங்கள வச்சு நான் படமெடுக்கறேன். நீங்க எல்லாரும் ஹாக்கி ப்ளேயர்ஸ்..எல்லா மேட்ச்லயும் கிராமத்து பண்ணையாரான வில்லனோட சதியால தோத்துடறீங்க..செகண்ட் ஆஃப்ல விஜய் கெஸ்ட் ரோல்ல சப்ஸ்டியூட்டா ஆடி உங்கள ஜெயிக்க வைக்கறாரு

சந்தானம்: ஏன் சார்..ஆப்படிக்க புதுசா ஹுரோ யாரும் வரலையா? இவனுங்க டார்ச்சரே தாங்க முடியல..இப்ப நீங்க பேசின பேச்சுல ஏறின மப்பெல்லாம் போயிடுச்சு

சத்யன்: எங்கண்ணா போச்சு?

சந்தானம்: ஷேர் ஆட்டோ புடிச்சு டூமில்குப்பம் போயிடுச்சு..டேய் உன்னை மொதல்ல உதைக்கனும்டா

எஸ்.ஏ.எஸ்: எல்லாருக்கும் ஒரு ஹீரோயின் வச்சுக்கலாம்பா..அவங்களை அந்த பண்ணையார் ரேப் பண்ணிடுவான்..விஜய் வந்து சண்டை போட்டு உங்களை காப்பாத்துவான்

சந்தானம்: இப்ப எவன் சார் வந்து எங்களை காப்பாத்துவான்?

என்று அழ ஆரம்பிக்கிறார். அப்போது பெரும்புயல் அடிக்கிறது. டேபிளெல்லாம் பறக்கிறது..விளக்கெல்லாம் அணைந்து அணைந்து எரிகிறது..ஜன்னல் கதவுகள் படார் படாரென அடிக்கின்றன.

சத்யன்: ண்ணா.என்னண்ணா ஆச்சு பயமாயிருக்குங்ண்ணா

சந்தானம்: டேய் எத்தன படத்துல பார்த்திருக்கேன்..இப்படியெல்லாம் வந்தா வழக்கமா ஒன்னு ஹீரோ என்ட்ரியா இருக்கும்..இல்ல பேயோ பிசாசோ வரும்..இல்ல விநோத ஜந்து ஏதாவது வரும்..இப்ப என்ன வருதுன்னு தெரிலயேடா

"நான் ஆடாத விளையாட்டா!
எம்ஜியாருக்கே நான் காட்டினேன் டாட்டா!
நான் நிப்பேன்டா ஒண்டிக்கு ஒண்டி!
எவனாயிருந்தாலும் போட்டிக்கு ரண்டி!
நான் சிலம்பெடுத்தா சிம்பு!
என்கிட்ட வச்சுக்காத வம்பு!
சின்ன வயசுல ஆடியிருக்கேன் கில்லி!
எதிர்த்தவனை அடிப்பேன்டா சொல்லி!"

என குரல் கேட்கிறது.

சந்தானம்: டேய் நான் கடைசியா சொன்னதுதான் வந்துடுச்சு போல..பில்லுக்கு பணம் கேட்கறதுக்கு முன்ன அப்படியே எஸ்கேப்பாகி ஓடிருவோம் டா

என சத்யனை இழுத்துக்கொண்டு ஓடுகிறார். மற்றவர்கள் அங்கேயே மட்டையாகிறார்கள்.

Tuesday, July 24, 2007

சங்கம் டெக்னாலஜீஸில் சின்னக் கலைவாணர்

சங்கம் டெக்னாலஜீஸின் லெட்ஜர் கணக்கைப் பார்த்த தல கைப்பு கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்திருக்கிறார். டீக்கடை கடனைக்கூட அடைக்கமுடியாத அளவுக்கு கம்பெனியின் கிராஃப் அதளபாதாளத்திற்கு இறங்கிக்கிடக்க அடுத்த கட்ட நடவடிக்கைக் குறித்து தீவிர யோசனையில் இருக்கிறார். அப்போது தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் கன்சல்டன்ட்,கருத்து கந்தசாமி, சின்னக் கலைவாணர் விவேக் கைப்புவை சந்திக்க ஆப்பீசுக்கு வருகிறார்.

"எவ்ளோ ஆப்பு வாங்கினாலும் ரியாக்சன் காட்டாம இருப்பியே..இப்ப என்னடான்னா கன்னத்துல கைவச்சுகிட்டு ஏதோ ராக்கெட் விடப்போற மாதிரி யோசிச்சிட்டிருக்கியே..என்னடா ஆச்சு?"

"கம்பெனி கூடிய சீக்கிரம் திவாலாகப் போவுது விவேக்கு. நானும் எவ்வளவு நேரம் தான் வேலை பாக்கற மாதிரியே நடிக்கறது. பஞ்சாயத்து பஞ்சாயத்தா போய் உதைவாங்கி உடம்பு பஞ்சராயிப்போச்சு. ஊருக்குள்ள தல காட்டமுடியல. பசங்க என்னடான்னா விவரம்புரியாம வெளாட்டுக்காரப் பயலுகளாவே இருக்கானுங்க. இவனுங்கள வச்சு எப்படி மாரடிக்கறதுன்னு புரியாம உக்காந்திருக்கேன்"

"அது கரெக்ட்தான் கைப்பு. இப்பல்லாம் டாவடிக்கறதுல இருந்து ஒரு கட்சி ஆரம்பிக்கறதுவரைக்கும் எல்லாமே காஸ்ட்லியாகிப்போச்சு. ஆனா நம்ம நெலம தான் அப்படியே இருக்கு. மின்னலே மாதவன் சாப்ட்வேர் சொல்லிக்குடுத்து ஆறாயிரம் சம்பளம் வாங்கும்போதும் அதே பிரான்ட் சரக்குதான் வாங்கித்தர்றான். சிவாஜி இருநூத்தம்பது கோடி சம்பாதிச்சாலும் அதே பிரான்ட் சரக்குதான் வாங்கித்தர்றான்"

"நான் சங்கத்து ஆபிசைப் பத்தி புலம்பினா நீ உன் சொந்த புலம்பலை ஆரம்பிச்சுட்டயா..எனக்கு ஒரு வழி சொல்லப்பு"

"ஆமா இவரு பில் கேட்ஸ் கம்பெனி நடத்தறாரு..நாங்க அட்வைஸ் கொடுக்கறோம்.சரி உன் கம்பெனிக்கு வரேன். என்னதான் பண்றீங்கன்னு பார்த்து என் கருத்தை சொல்றேன்" என்றபடி கைப்புவும் விவேக்கும் சங்க ஆப்பீசுக்கு வருகிறார்கள்.

அலுவலகத்துக்குள் நுழையும்போதே முன்னால் விவ்ஸ் இளா சேர் மேல் ஏறி நின்றுகொண்டு எல்லோருடைய மானிட்டரையும் வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

விவேக்: டேய், ஆபீஸ் நேரத்துல சேர் மேல ஏறி நின்னு என்னடா செய்யற?

கைப்பு: நான் தான் அவனை சேர் மேல ஏறி நிக்க சொன்னேன்

விவேக்: ஏன் சுவத்துக்கு ஒட்டடை அடிக்கவா?

இளா: அது இல்லீங்க..நான் ஜி-டாக்ல ரொம்ப நேரம் சாட் பண்றேன்னு தல பனிஷ்மெண்ட் கொடுத்துட்டாரு. இப்ப வேற யாராவது சாட் பண்ணாங்கன்னா அவங்களை கண்டுபுடிச்சு சேர் மேல நிக்க வச்சுட்டுத்தான் நான் உட்காரனும். அதான் யார் சிக்கறாங்கன்னு பார்க்கறேன்

விவேக்: இன்னும் நீங்க வளரவே இல்லையாடா

கைப்பு: யப்பா இது நான் ஸ்ட்ரிக்டா கொடுத்திருக்க பனிஷ்மெண்ட். அப்பத்தான் சிங்கங்க பேசாம வேலை பார்க்கும்

விவேக்: இது பனிஷ்மெண்ட் இல்லடா...ஃபன்னிஷ்மெண்ட். அங்க யாருடா தனக்குத்தானே சிரிச்ச்ட்டு உக்காந்திருக்கவன்? டேய் நீ யாரு? என்ன பண்ற?

தேவ்: நான் பத்து மணிக்கு ஆபிஸுக்கு வருவேன். மக்கள்ஸ் எல்லாருக்கும் சாட்டில குட் மார்னிங் சொல்லுவேன். அப்புறம் டீ குடிக்க போவேன். டீ குடிச்சதால வாய் கசக்கும். அதனால ஒரு ஆப்பிள் ஜூஸும் குடிப்பேன். 12 மணிக்கு வந்து மறுபடியும் சாட் பண்ணுவேன். ஒரு மணிக்கு சாப்பிடப் போய் 3 மணிக்கு திரும்ப வருவேன். ஒரு அரைமணி நேரம் சீட்டுல சாஞ்சு குட்டித்தூக்கம். அப்புறம் ஒரு மணி நேரம் சாட். அப்புறம் கீழே டீக்கடைக்கு போய் டீ அடிச்சுட்டு அஞ்சு மணிக்கு வீட்டுக்கு கிளம்பிடுவேன்.

விவேக்: நீ சங்கத்து ப்ராஜெக்ட் மேனேஜர்னு சுத்தி வளைச்சு சொல்றியா? வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேல பாக்கக்கூடாதா ராசா?

தேவ்: தல கம்பெனில யாராவது வேலை பார்த்தா அது தலக்குதான் அசிங்கம். போய்யா அந்த பக்கம்

விவேக்: அது சரி..உங்களை 1000 பில் கேட்ஸ் வந்தாலும் திருத்த முடியாதுடா..அங்க யாருடா ரொம்ப சீரியசா கீபோர்டை உடைச்சுட்டிருக்கறது?

சிபி: நான் தான் தளபதி. HR டீம். எங்கே, எந்த நேரத்துல ஆள் வேணும்னாலும் வோல் சேல்ல அனுப்புவேன்.

விவேக்: உன்னைத்தான்யா ரொம்ப நாளாத் தேடிட்டிருந்தேன். அவனவன் ஒரு பொண்டாட்டி, ஒரு பதிவு, ஒரு பாஸ்வேர்ட் வச்சே மெயின்டெயின் பண்ண முடியாம நாட்டுல பல கலவரங்கள் உருவாகுது. நீ எப்படி இத்தனையும் சமாளிக்கற?

சிபி: எனக்கு பிரச்சனை வந்துச்சுன்னா ஆவி உலகத்துல இருந்து நண்பர்களைக் கூப்பிட்டுப்பேன்.

விவேக்: ஆவியா...என்னடா ரோட்டு கடை இட்லிலருந்து வர ஆவி மாதிரி அசால்டா சொல்றீங்க...உங்க கிட்டயெல்லாம் பார்த்து பக்குவமா இருக்கனும்போலிருக்கேடா..கைப்பு என்ன அப்படியே கைத்தாங்கலா அடுத்த ஆளுகிட்டே கூட்டிட்டுப்போய்யா

அங்கு ஜொ.பா ஃபிகர்களுக்கு கொலைவெறியோடு எஸ்.எம்.எஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

விவேக்: டெக்னாலஜியை எவன் யூஸ் பண்றானோ இல்லையோ..உங்களை மாதிரி ஆளுங்க தான்டா நல்லா யூஸ் பண்றீங்க..அந்த செங்கல்லு செல்போனை வச்சு எந்த ஆண்ட்டியடா கரெக்ட் பண்ற?

ஜொ.பா: தல..எனக்குத் தேவை தமிழ் கலாச்சாரத்தோட ஒரு பொன்னு.

விவேக்: அடப்பாவிகளா..போன வாரம் சிட்டி சென்டர் வாசல்ல கண்ணு தெரியாத பிச்சைக்காரன் போஸ்ல உட்கார்ந்துகிட்டு குட்டைப் பாவாடைகளை சைட் அடிச்சுட்டு வந்துட்டு இப்ப "தமிழ் கலாசாரம் ஆந்திரா மிளகா காரம்"னு டயலாக் விடறியேடா

ஜொ.பா: அதெல்லாம் ச்சும்மாச்சுக்கு..ஆனா எனக்குத் தேவை தமிழ் கலாசாரத்தோட ஒரு பொண்ணு

விவேக்: டேய்...சும்மா சும்மா தமிழ் கலாசாரப் பொண்ணுங்கறியே..எங்க "கண்ணே கனியமுதே கார்முகிலே"ன்னு தமிழ்ல ஒரு லவ் லெட்டர் எழுது பார்க்கலாம்

ஜொ.பா: அட விடுங்க தல..நமக்கு பொண்ணுங்க தான் முக்கியம்..தமிழ்ல கவுஜ எழுதறதுக்குத்தான் எங்க சின்ன தல இருக்காருல்ல

விவேக்: அது யாருடா உங்க சின்ன தல

கைப்பு: இராயலைப் பார்த்து யாருன்னு கேட்டுட்டியா? ராயல் என் செல்லம்.

விவேக்: செல்லம்னா மடில வச்சு கொஞ்ச வேண்டியதுதானே..இங்க பாரு இறக்கிவிட்டதும் ரஞ்சனி மகான்னு ஊருல ஒரு பொண்ணு விடாம சாட் பண்ணுது உன் செல்லம்

ராயல்: எனக்கான வெளியில்
குருட்டுப் புலியில்
மொட்டை வெயிலில்
ஓட்டை குடையில்
இன்னொரு இரவிலும் பயணத்தை தொடர
முடிவெடுத்தது.

விவேக்: என்னாங்கடா இது..புலின்றான் வெளின்றான்...சரி சூடான் புலி மேல உனக்கென்ன கோபம்? குருட்டுப்புலின்னு திட்டற?

ராயல்: அது படிமம்ண்ணே

விவேக்:"படிமம் அடி ரம்"னு ஏதேதோ சொல்றானுங்க..நல்லாத்தானேடா இருந்தீங்க?

எனும்போதே "சப்ஜெக்ட் கிடைச்சுடுச்சு" என கத்தியபடியே இராயல் ஃபிகர்களை படமெடுக்கிறார். பின்னால் உட்கார்ந்திருந்த ஜி ஓடி வருகிறார்.

ஜி: இளந்தல, அபெர்ச்சர் சரியா இருக்கா..லைட்டிங் ஏத்தி எடுங்க..மேக்ரோ எஃபெக்ட் போடுங்க..நைட் மோட் மாத்திட்டீங்களா...ஜூம் கரெக்டா பண்ணுங்க

விவேக்: டேய் டேய் டேய்..போதும்டா...உனக்கு தெரிஞ்ச எல்லா டெக்னிகல் வார்த்தையையும் சொல்லிட்ட..கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ

ஜி: நாங்களும் போட்டொகிராபர் தெரியும்ல?

விவேக்: உங்களச் சொல்லி குத்தமில்லடா...உங்களப் பத்தி தெரியாம உங்களுக்கு சொல்லிக்குடுத்தாங்களே ரெண்டு பேரு..அவங்களச் சொல்லனும்

ஜி: அண்ணே..பாத்து இருந்துக்கோங்க...இங்கல்லாம் அருவா வீச்சுதான்...வாளும் வேலும் என் கண்கள்..

விவேக்: டேய் கிரீடம் 'தல'யே பேஸ் வாய்ஸ்ல பஞ்ச் அடிக்கறத விட்டுட்டாரு..நீங்க இன்னும் விடலயாடா? அங்க ரொம்ப நேரமா ஒருத்தன் மானிட்டரை வெறிச்சிட்டிருக்கானே..புலி ராசா சிவா..என்னய்யா ஆச்சு?ரொம்ப நேரமா சும்மாவே உட்கார்ந்திருக்க?

சிவா: என் மவுஸ் பேடைக் காணோம்.

விவேக்: அதுக்கு?

சிவா: யோவ் மண்டையில ஏதாவது இருக்கா? மவுஸ் பேட் இல்லைனா எப்படிய்யா வேலை செய்யறது? அதான் சும்மா உட்கார்ந்திருக்கேன்.

விவேக்: அடப்பாவிகளா உள்ளுக்குள்ள எழுநூத்தம்பது ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத கம்ப்யூட்டர் மவுஸ் பேடால தான் ஓடுதாடா? உங்களைத் திருத்தவே முடியாதுடா

சிவா: திருத்தறதுக்கு நாங்க என்ன எக்ஸாம் ஆன்சர் ஷீட்டா?

விவேக்:(மனதுக்குள்) ஆகா..வில்லங்கம் புடிச்ச ஆளா இருக்கானே...வாயக்கொடுத்து மாட்டிக்க கூடாது..கைப்பு நெலம ரொம்ப பாவம்தான்

விவேக்: கப்பி, ரொம்ப நேரமா விட்டத்தை பார்த்து யோசிச்சுட்டிருக்கியே?

கப்பி: நம்ம சங்கத்துக்கு எப்படி லாபம் சம்பாதிக்கலாம்னு யோசிக்கறேன்

கைப்பு: ஜாவா பாவலா! உண்மையாவா ராசா? நீ தான் டா சிங்கம்..

விவேக்: ஜாவா பாவலனா...ஏன்டா?

கைப்பு: இவன் ஜாவா கோட் அடிக்கும்போதே வரிக்கு ஒரு வார்த்தை தான் அடிப்பான்..ஆச்சரிய குறிலாம் போடுவான்

விவேக்: அடப்பாவிகளா..இப்படிலாம் அடிச்சா புரோகிராம் வேலையே செய்யாதே? எரர் வருமே? க்ளையன்டு காசு கொடுக்க மாட்டானே? அப்புறம் எப்படிடா லாபம் சம்பாதிப்பீங்க?

கப்பி: ஊர்ல இருக்க எல்லா கம்பெனியும் சைட் பிசினஸா பஸ் விட்டு சம்பாதிக்கறாங்க. ரோட்டுல பார்த்தா ஃபுல்லா இவங்க பஸ்ஸாதான் இருக்கு. அதே மாதிரி நாமளும் நெறய பஸ் வாங்கிவிட்டு பாதி ரேட்டுக்கு டிக்கெட் வித்து சங்கத்துக்கு பணம் சேர்க்கலாம்

விவேக்: ஏன் ஒரு டிரெயின் வாங்கி விட்டா இன்னும் நல்ல லாபம் வருமே..நீ உண்மைலயே படிச்சுத்தான் வேலைக்கு வந்தயா? அதெல்லாம் அந்தந்த கம்பெனில வேலை செய்யறவங்களை ஏத்திட்டு போறதுக்குடா..போற போக்குல என்னைய கைப்பு ஆக்கி காமெடி பண்ணிடுவீங்க போலிருக்கேடா

வெட்டி: விவேக் நீங்க இஙக் வாங்க. நீங்க எங்க ஆபீசுக்கு வந்ததும் எனக்கு ஒரு லவ் ஸ்டோரிக்கு கரு கிடைச்சுடுச்சு

விவேக்: சொல்லவேணாம்னு சொன்னா விடவா போற? சொல்லு

வெட்டி: நீங்க ஒரு கம்பெனிக்கு இது மாதிரி கன்சல்டிங்கு போறீங்க. அங்க ஒரு தெலுகு பொண்ணு மேல உங்களுக்கு பார்த்த உடனே காதல. ஆனா அவ ஃப்ரென்ட்லியா பழகுறா. அதே கம்பெனில மில்காஜின்னு ஒரு பையன் வேல பார்க்கறான். அவன் அந்த தெலுகு பொண்ணை ஒன்சைடா லவ் பண்றான். அது உங்களுக்குத் தெரிஞ்சுடுது. நீங்க ஆபிசை விட்டு போற கடைசி நாள் பிரியற நேரத்துல அந்த பொண்ணு ஃபீலாகி உங்க கிட்ட 'ஐ லவ் யூ' சொல்றா.

விவேக்: ஏ தெலுகுமொழியேஏஏஏஎ

என 'முதல்வன்' பாட்டை அடித்தொண்டையிலிருந்து பாடுகிறார்.

வெட்டி: ஆனா நீங்க மில்காஜிகூட அந்த பொண்ணை சேர்த்துவச்சுட்டு பாலகிருஷ்ணா படம் பார்க்க போயிடறீங்க

விவேக்: அடப்பாவி..இங்கயும் எனக்கு காதலை சேர்த்துவைக்கிற அல்லக்கை வேலை தானா? கடைசி வரைக்கும் ஜோடி சேர விடமாட்டீங்களாடா?

வெட்டி: மில்காஜி பாவம்ல

விவேக்: பாவமாவது கூவமாவது..போடாடேய் போடா..ஆ...ஆஅ....

என கமல் வாய்ஸில் ஃபீலாகுகிறார்.

அப்போது தம்பி சோடா எடுத்துக்கொண்டு வர

விவேக்: இந்த ஏரியாவுலயே நீ ஒருத்தன் தான் கைகட்டி பவ்யமா இருக்க? என்ன லாங்குவேஜ்ல புரோகிராம் எழுதுவ? சியா? வி.பியா? ஜாவாவா?

தம்பி: மலையாளம் சேட்டா

விவேக்: என்னடா சோடா குடுத்துட்டு சேட்டாங்கறா? நான் சேட்டெல்லாம் இல்லடா...மறத்தமிழன்டா

தம்பி: அண்ணே..எனக்கு தெரிஞ்ச மொழி மலையாளம்னு சொன்னேண்ணே

விவேக்: மலையாளமா? ஏன்டா கேரளாவுல ஏதாவது க்ளையன்ட் புடிக்கப்போறியா?

தம்பி: க்ளையன்ட் இல்லண்ணே..கிளி புடிக்கப்போறேன்

கைப்பு: கிளியா? ஏற்கனவே உள்ளூருல அடிவாங்க வைக்கறது பத்தாதுன்னு என்னைக் கேரளாவுக்கு பார்சல் பண்ண ப்ளான் போட்டுட்டீங்களாய்யா?

தம்பி: அதெல்லாம் இல்ல தல..எல்லாம் பாவனாவுக்காகத்தான்

விவேக்: பாவனாவா...ஊருக்கு ஒரு பிகரைப் பிடிக்கறியேடா..நாடு தாங்காதுடா..மஞ்சுளா பாவம்டா..

எனும்போதே "கும்மி கும்மி, ரிப்பீட்டு ரிப்பீட்டு" என பாசக்கார குடும்பத்தினர் அட்லாஸ் கண்மணி டீச்சர் தலைமையில் அலுவலகத்தில் நுழைகின்றனர். "மொக்கை! மொக்கைக்கு மொக்கை!! மொக்கையோ மொக்கை!! மொக்கையை வச்சு மொக்கை" எனக் கொலைவெறி கும்பலோடு செந்தழல் வருகிறார்.

"கிளம்பிட்டாங்கய்யா....ஆப்பெல்லாம் ரெடியா எடுத்துட்டு வந்துட்டீங்களா..அவ்வ்வ்வ்" என தல சேரில் சாய்ந்து மயக்கமாகிறார்.

"இவங்ககிட்ட சிக்கினா சிக்குன்குனியாவே வந்துரும்போலயே...தப்பிச்சிருடா விவேக்கு" என கைப்பு டோனில் சவுண்ட் விட்டு ஜன்னலேறி தப்பியோடுகிறார் விவேக்.

Tuesday, June 12, 2007

ராயல்ஜி - The Boss




சிவாஜி - The Boss டிரெயிலரை எல்லாரும் பார்த்திருப்பீங்க. எங்க பாஸோட டிரெயிலரை பார்த்தீங்களா? சங்கத்தோட கடனை அடைக்க சின்ன தலயை வச்சு பூஜை போட்ட படம் தான் "ராயல்ஜி - The Boss". பலவிதமான கெட்டப்புக்காக ஜெமினி சர்க்கஸ்ல சிங்கத்துக்கு பிடறிமுடி சீவிவிடும் மேக்கப் மேனை ஸ்பெஷலா கூட்டிட்டு வந்து மேக்கப் போட்டு ராயலோட கேமராவுலயே ஸ்டில்ஸ் எடுத்து டிரெயிலர் ரீலிஸ் பண்ணோம். டிரெயிலரைப் பார்த்தே அரண்டு போன ஷங்கர், ஏவிஎம் சரவணன் பயந்துபோய் எங்க படத்தை டிராப் பண்ண சொன்னப்போ கூட கேட்கல. அப்புறம் சூப்பர் ஸ்டாரே வந்து கேட்டதால படத்தை டிராப் பண்ணிட்டோம். அந்த படத்தோட எக்ஸ்க்ளூசிவ் டிரெயிலர் கீழே!



"தடதட ஓடுவது உன் ஸ்டைல்
அவ்வ் அவ்வ் அவ்வ் அழுவது உன் ஸ்டைல்
கடகட சிரிப்பது உன் ஸ்டைல்
அடிக்கடி அடிபடுவது உன் ஸ்டைல்
எல்லாமே ஸ்டைல்
"

"எனக்கு தேவை சங்க கலாசாரத்தோட ஒரு ஆப்பு"

"ஆப்பு போனா வரும் உயிர் போனா வருமாங்க. இனிமே என்ன தேடி வராதீங்க"

"ஆப்பு இல்லாத நாள் தெரிஞ்சுபோச்சுன்னா வாழற நாள் நரகமாயிடும். ஆப்பு தாங்க முக்கியம்"



"நான் என்ன பிசினஸ் பண்றதுக்காய்யா பர்மிஷன் கேட்டேன்? சங்கத்துல ஆப்பு வாங்கறதுக்கய்யா"

"என்ன ஏன்மா இராயலா பெத்த?"
"இல்லன்னா மத்தவங்க ஆப்பு அடிக்க முடியாதுன்னு தாம்பா இராயலா பெத்தேன்"


"நம்ம நாட்டுல ஆப்படிக்கறது இன்னும் குறையல. ஆப்படிக்கறவன் அடிச்சுட்டே இருக்கான். வாங்கறவன் வாங்கிட்டே இருக்கான்"

"இதான் என் சங்கம். இதுக்கு நல்லது செய்யாம விடமாட்டேன்"




"எங்க தல இதுவரைக்கும் பத்தாயிரம் பேருக்கு மேல ஆப்பு வாங்கியிருக்காருங்க"

"நான் சொல்ற மாதிரி செஞ்சீங்கன்னா இப்படி இருக்க உங்க சங்கம்


இப்படி ஆயிடும்"



"இராயல் எவ்வளவு பெரிய ஆப்புகள் வாங்கிட்டிருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா?"

"யாரு?"

"கோன் ஹை?"

"BOSS. Bachelor of Sangam Service"



"பேரைக் கேட்டவுடனே சும்மா ஆப்படிக்கனும்னு தோணுதுல்ல"

Monday, March 26, 2007

கிரிக்'கெட்டுப் போச்சு'

நொந்து நூலாகி அந்து அவலாகிப் போயிருக்கும் இந்திய அணியினர் மக்களிடமிருந்தும் மீடியாவிடமிருந்தும் எப்படியோ எஸ்கேப்பாகி சென்னை வருகின்றனர். அங்கு ஏற்கனவே அவுட் ஆப் ஃபார்மில் இருக்கும் விஐபிக்கள் சிலரை சந்தித்து ஆலோசனை பெற ரகசிய மீட்டிங் ஏற்பாடு செய்கின்றனர். அல்டிமேட் ஸ்டார் அஜித், இயக்குநர் இடிதாங்கி பேரரசு, புரட்சிப்புயல் வைகோ என நம்மூர் ஆட்கள் கிரிக்கெட் அணியினரை தேற்ற வந்திருக்கின்றனர். 'அசத்தப் போவது யாரு', 'அரட்டை அரங்கம்' ஷுட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு டி.ஆரும் யாரும் கூப்பிடாமலே வந்திருக்கிறார்.

ஏதோ ஒரு சங்க மீட்டிங் என்று மண்டபத்துள் எட்டிப்பார்க்கும் சின்னக் கலைவாணர் விவேக்கை அலேக்காக பிடித்து உள்ளே இழுத்துவருகிறார்கள் நம் வீரர்கள்.

விவேக்: டேய் இங்க என்னடா நடக்குது? யாருடா நீங்கல்லாம்? உங்களையெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேடா?

டிராவிட்: விவேக் சார், நாங்க கிரிக்கெட்ல தோத்ததை எப்படி சமாளிக்கறதுன்னு ஏற்கனவே அவுட் ஆப் பார்ம்ல இருக்கவங்க கிட்ட அட்வைஸ் கேட்கலாம்னு வந்திருக்கோம். நீங்களும் உங்க அறிவுரையை சொல்லி எங்களைக் காப்பாத்தனும்

விவேக்(ஹை பிட்சில்): அடப்பாவிகளாஆஆ...அவுட் ஆப் ஃபார்முன்னு டிக்ளேரே பண்ணிட்டீங்களாடா...இனி நான் என்ன சொன்னாலும் கேட்கப்போறதில்ல...சரி உங்க மீட்டிங்கை நீங்க நடத்துங்க.நான் ஒரு கட்டிங் விட்டுட்டு கார்னர்ல உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கறேன்

அவர் முடிப்பதற்குள் டி.ஆர் துள்ளிக் குதித்து எழுகிறார்.

விவேக்: ஏன் சார் இந்த ஆரஞ்சு கலர் சட்டை எல்லாம் எங்கே புடிக்கறீங்க? ரொம்ப டைட்டாயிருக்கே..சிம்புவோடதா??

அதை கண்டுகொள்ளாத டி.ஆர் கோபமாக :
"கவர்ன்மெண்ட் ஸ்கூல் பேர் பால்வாடி
பைத்தியம் முத்தினா நம்மூர் ஏர்வாடி
சம்பாத்திச்சீங்களேடா பல கோடி
ஏமாத்திட்டீங்களே மோசமா விளையாடி"

என கண்களில் கண்ணீர் வழிய ஹைபிட்சில அலறுகிறார்.

வழக்கம் போல யாருமே அவரை கண்டுகொள்ளாமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

டிராவிட்: இதெல்லாம் விளையாட்டுல சகஜம். ஆனா மக்கள் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க. நீங்கதான் எங்க இமேஜை வளர்க்க ஏதாவது ஐடியா கொடுக்கனும் என மற்றவர்களைக் கேட்கிறார்.

அஜித்: நான் பேஸ்மாட்டேன். ஜெயிச்சுட்டு தான் பேஸ்வேன். என்னை யாரும் அழிக்க முடியாது. நான் தண்ணி ஊத்தி வளர்த்த ஸ்டேடியம் புல் இல்ல..தானா வளர்ந்த காட்டுப் புல்.

விவேக்: பேஸ் மாட்டேன் பேஸ் மாட்டேன்னு பேஸ் வாய்ஸ்ல பேசி டார்ச்சர்ஸ் பண்றாரே

சாப்பல்: அஜித், இப்ப நான் கூட உங்க ஐடியாதான் ஃபாலோ பண்றேன். மீடியாகிட்ட பேசமாட்டேன்னு சொல்லிட்டேன்

அஜித்: அதுஉஉ

என டெசிபலை ஏற்றி அலறுகிறார்.

அப்போது அங்கே யாரோ விசும்பும் சத்தம் கேட்கிறது. வைகோ கருப்புத்துண்டை முகத்தில் பொத்தியபடி அழுதுகொண்டிருக்கிறார்.

விவேக்: பொடால போட்டாங்க அழுதீங்க. கூட்டணியைவிட்டு வெளிய வந்ததுக்கு அழுதீங்க. கட்சியை உடைச்சதுக்கு அழுதீங்க. நடைபயணத்துல கால் வலிச்சுது அழுதீங்க. இப்ப கிரிக்கெட்ல தோத்ததுக்கும் அழனுமா? வைகோ சார், கண்ட்ரோல் யுவர்செல்ஃப்.

வைகோ: ஐயகோ என் உடன்பிறப்பே, உலகக்கோப்பையை நீ வென்றிருந்தால் கலிங்கப்பட்டியில் பிறந்த நான் உங்கள் பேரில் கலிங்கத்துப்பரணி பாடியிருப்பேனே... இப்படி தோற்றுவிட்டீர்களே

இதைக் கண்டு செண்டிமெண்டில் ஃபீலாகும் வீரர்கள் வைகோவை தேற்றுகின்றனர்.

வைகோ: 1970களிலே இங்கிலாந்து கிரவுண்டுகளிலே சிக்ஸர் சிக்ஸராக அடித்தானே என் உடன்பிறப்பு விவ் ரிச்சர்ட்ஸ், அவன் மண்ணிலே போய் நாம் தோற்றதுதான் அவமானமாக இருக்கிறது

என்று கோபமமக ரியாக்ஷனை அப்படியே மாற்றுகிறார்.

விவேக்: அந்நியன் அம்பி ரேஞ்சுக்கு ரியாக்ஷன் காட்டறாரே. இவரை இப்படியே பேசவிட்டா நாம தனியா பொதுக்குழு நடத்தனும் போலிருக்கு. அஜித் நீங்க என்ன ஒரே பஞ்ச் டயலாக்ல நிறுத்திட்டீங்க. வேற ஏதாவது ஐடியா குடுங்க

அஜித்: டிராவிட்ஜி, யாராவது ஓட்டலுக்கு டிஸ்கஷன் கூப்பிட்டா போகாதீங்க. கூப்பிட்டு வச்சு குமுறி அப்புறம் டீம்ல இருந்தே தூக்கிடுவாங்க. 'நான் கடவுளுக்கு' உடம்பை குறைச்சு என் பாடி வெயிட்டை விட தலைமுடி வெயிட் அதிகமா ஏத்திவச்சிருந்தே. கடைசில படத்துல இருந்தே தூக்கிட்டாங்க. இனிமே நீங்க் பிரஸ்மீட் போனா 'நான் கேப்டன்'ன்னு அடிக்கடி சொல்லுங்க. அப்ப தான் டீம்ல நிலைக்க முடியும். நீங்க இருக்கறது பஞ்சுமெத்தை. நான் சுமக்கறது முள்கிரீடம்.

டிராவிட் 'நான் கேப்டன்ன்ன்' என சொல்லிப்பார்க்கிறார்

டி.ஆர்: கிரிக்கெட் டீமுக்கு நீ கேப்டன்
பனிக்காலத்துல காதுக்கு வச்சுக்க காட்டன்
சினிமால எல்லாருக்கும் நான் பாட்டன்
சிம்புவுக்கு மட்டும்தான் சொல்வேன் வெல்டன்

விவேக்: இவர் வேற சம்பந்தா சம்பந்தமில்லாம பேசி கழுத்தறுக்கறாரே. இங்க வில்லங்கம் புடிச்ச ஒரு கேரக்டர் ரொம்ப நேரமா அமைதியா இருக்கே...ஆளைப் பார்த்தா அத்தனை பேரையும் க்ளீன் போல்டாக்க ஏதோ ப்ளானோட இருக்க மாதிரி இருக்கு. பேரரசு சார்.. ஏதாவது பேசுங்க

பேரரசு: என்னான்னு சொல்வேனுங்கோ, சீமானெல்லாம் சேகுவேரா டி-ஷர்ட்டை கழட்டிட்டு காக்கிச்சட்டை மாட்டி இன்ஸ்பெக்டரா நடிக்க ஆரம்பிச்சுட்டாரு. நான் காக்கிச்சட்டை மாட்டி ஆட்டோ டிரைவரா நடிச்சா ஒத்துக்க மாட்டேங்கறாங்க.

டிராவிட்: உங்க பிரச்சனையை விடுங்க பேரரசு. நீங்க தான் தமிழ்நாட்டுக்கே தலைவலின்னு கேள்விப்பட்டோம். எங்க பிரச்சனைக்கு உங்க கிட்ட ஏதாவது தீர்வு இருக்கா?

பேரரசு: இருக்கு சார். மொதல்ல உங்க பேரெல்லாம் மாத்துங்க. என்ன பேர் இதெல்லாம்? ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர்னு? நல்லாவா இருக்கு?? நான் சொல்ற மாதிரி பேரை மாத்துங்க..டிங்கர் டிராவிட், சலம்பல் சச்சின், கவுதாரி கங்குலி, யுனானி யுவராஜ், தோட்டா தோனின்னெல்லாம் பேரை மாத்துங்க

விவேக்: அப்படியே சனியன் சாப்பல்னு மாத்தி கெஜட்ல உட்டுடலாமா??

பேரரசு(தான் கவனிக்கப்படுவதைக் கண்டு சந்தோஷமாக): அப்படியே இனி விளையாடப்போனா கிரீமெல்லாம் தடவிட்டு போகாதீங்க. வடபழனி முருகன் கோயில் வாசல்ல சந்தனம் வாங்கிட்டு போய் மொகத்துல தடவிட்டு ஆடுங்க. இதனால அட்வாண்டேஜ் என்னன்னா மேட்ச் பார்க்கற ஜனங்களுக்கு யார் அவுட் ஆகறீங்கன்னே தெரியாது. எஸ்கேப் ஆகிடலாம்

விவேக்: அப்படியே ஒரு பஞ்சாமிர்த பாட்டில் வாங்கிக்கொடுத்துட்டா பெவிலியன்ல உட்கார்ந்து நக்கிட்டிருக்கலாமே

டி.ஆர்: தங்கச்சி உனக்கு கல்யாணம் பண்ணி நலங்கு வைக்க கரைச்சு வச்சேன் சந்தனம்.... இந்த பயலுக தோத்ததால நொந்துபோச்சே என் மனம்.. என ராகம் கட்டி பாட ஆரம்பிக்கிறார்.

இனி இந்த ஏரியாவில் இருந்தால் யாராவது கடித்துவிடுவார்களென அஜித்தை இழுத்துக்கொண்டு எஸ்ஸாகிறார் விவேக்.

அப்போது "என்ன சார் நடக்குது இங்க? ஒரு தமிழன் இருக்கற இந்திய அணி உலகக்கோப்பைல தோக்குது. இப்படியாப்பட்ட கிரிக்கெட் நமக்கு வேணுமா? தமிழனோட மானம் எங்க போச்சு? டிராவிட் உங்க பசங்கள கடலூர்க்கு லாரில கொண்டாந்துருங்க. 'பள்ளிக்கூடம்' படத்துல கிட்டிப்புல் விளையாடற டீம் நீங்க. இந்த படத்தை வச்சு உங்க இமேஜை நான் தூக்கி நிறுத்தறேன். என்ன சார் நடக்குது இங்க?" என பத்து இருபது பேருடன் தங்கர்பச்சான் அலட்டலாக உள்ளே நுழைகிறார்.

பேரரசுவும் டீ. ஆரும் என்ன டயலாக் பேசலாமென கொலைவெறியோடு யோசிக்க, "பெரிய கலவரமே நடக்கப்போகுது ஓடிடுங்கடா அப்ரண்டீஸ்களா" என தன் டீமை இழுத்துக்கொண்டு தப்பியோடுகிறார் டிராவிட்

Sunday, March 18, 2007

மாடு மேய்ப்பது எப்படி?

டிஸ்கி: இது ஒரு காட்டுத்தனமான எதிர்வினைப் பதிவு.

நம்ம தம்பி வறட்டி தட்டுவது எப்படின்னு விலாவாரியா ஆராய்ச்சிக் கட்டுரை போட்டிருக்காரு. வறட்டி தட்ட சாணி வேணும். சாணி போட மாடு வேணும். மாடு சாணி போடனும்னா நாம அதுக்கு தீனி போடனும். அதனால இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு பார்ப்போம்.

மாடு மேய்க்கற விதம் நாம இருக்க இடத்தைப் பொறுத்து மாறும். மெட்ராஸ் மாதிரி பட்டனத்துல இருந்தா மாடு மேய்க்கறதை மறந்துடலாம். அந்த நேரத்துல ஜொள்ளுப்பாண்டி அண்ணன்கிட்ட டிப்ஸ் கேட்டு வாழ்க்கைல உருப்படற வழியைப் பார்க்கலாம். சிறு நகரமாகவோ கிராமமாகவோ இருந்தா மாடு மேய்க்க மேல ப்ரொசீட் பண்ணலாம்.

இப்ப மாட்டை நாம தேர்ந்தெடுக்கனும். பால் வியாபாரம் செய்யறதுன்னாலும் வறட்டி பிசினஸ் செய்யறதுனாலும் எருமை மாடு தான் பெஸ்ட். எருமை பால் தான் கொஞ்சம் கெட்டியா இருக்கும். பால்ல நிறைய தண்ணி கலக்கலாம். அதே நேரம் நிறைய சாணியும் போடும். பசு மாடுன்னா நம்மாள நிறைய தண்ணி கலக்க முடியாது. அவ்வளவுதான். வறட்டி பிசினஸ் அதே அளவுல தான் இருக்கும்.

இப்ப மாடு மேய்க்கறது எப்படின்னு மெயின் டாபிக்குக்கு போகலாம். காலைல எழுந்ததும் மாட்டுக்கு தண்ணி காட்டிட்டு உங்க வயித்துக்கும் கொஞ்சம் ஏதாவது காட்டிட்டு மாட்டை ஓட்டிட்டு கிளம்பனும். கிளம்பும்போது அத்தியாவசமான பொருட்கள் எல்லாம் எடுத்து வச்சுக்கனும். ஒரு செக்லிஸ்ட் வேணும்னா கூட தயார் பண்ணிக்குங்க. மாட்டைக் கட்ட கயிறு, அந்த கயித்தைக் கட்ட ஒரு குச்சி, கொறிக்கறதுக்கு எதுனா எடுத்துக்கலாம். அப்படி இல்லைனாலும் பிரச்சனை இல்ல. கடலை விதைச்சிருக்க புஞ்சை பக்கமா மேய்க்க போயிடலாம். நிலத்துக்கு சொந்தக்காரன் பார்க்காத நேரத்துல ஒரு கொத்து செடியைப் புடுங்கி மடியில கட்டிக்கிட்டா அன்னைக்கு கொறிக்க ஆச்சு. சாப்பாட்டுக்கு வீட்டுக்கு திரும்பி வரதுன்னா பிரச்சனை இல்ல. சாயங்காலம் வரைக்கும் மேய்க்கனும்னா சாப்பாடும் கொண்டுபோயிடனும்.

மாட்டை ஒரு தரிசு நிலத்துலயோ அறுவடை ஆகி முடிஞ்ச நிலத்துலயோ குச்சியை அடிச்சு கட்டி மேய விட்டுடனும். போட்டி நிறைய இருந்தா ஏரியா பிரிச்சுக்குங்க. அந்தளவு மட்டும் கயிறை விட்டு மாட்டைக் கட்டுங்க. ஏன்னா எந்த வேலை செஞ்சாலும் நாம கே.டி.குஞ்சுமோனா தான் இருக்கனும். மாட்டைக் கட்டும்போது பக்கத்துல முள்காடு எதுவும் இல்லாம பார்த்துக்கனும். இல்லனா மாடு உள்ள போய் சிக்கி நம்ம உயிரை வாங்கிடும். அதை வெளிய இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம கைகாலெல்லாம் அக்குபஞ்சர் ஆகிடும். அதே மாதிரி பக்கத்துல எவனாவது பயிர் வச்சிருந்தா அந்த பக்கம் நம்ம மாடு போகாம பார்த்துக்கனும். இல்லைனா பஞ்சாயத்து ஆகிடும். நமக்கு ஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனை. அதுல இது வேற எதுக்கு?

மாடு அதுபாட்டுக்கு மேய்ஞ்சுட்டு கிடக்கும். நாம அந்த கேப்புல நிறைய வேலை பார்க்கலாம். பம்ப் செட்ல படுத்து தூங்கிடலாம். அப்படி தூக்கம் வரலைனா மாட்டுக்கு வைக்க புல் புடுங்கலாம். ரெண்டு மூனு பேரா செட் சேர்ந்துட்டா மரத்தடில உட்கார்ந்துட்டு ஆடுபுலி ஆட்டம் ஆடலாம். ஓடிப்போன முருகேசன் சம்சாரத்தைப் பத்தி பேசலாம். கேப்டன் கட்சியைப் பத்தி பேசலாம். பஞ்சாயத்து தலைவர் ரோடு காண்டிராக்ட்ல பணம் அடிக்கறதைப் பத்தி பேசலாம். அமெரிக்க போன கோடிவீட்டு குப்புசாமியோட ரெண்டாவது புள்ளையைப் பத்தி பேசலாம். அடுத்த மாசம் மெட்ராஸ் போறதுக்கு இப்பவே ப்ளான் போடலாம். துரைசாமி கல்யாணத்துக்கு மொய் எவ்வளவு வைக்கலாம்னு கூடிப்பேசி முடிவு பண்ணலாம். இப்படி ஏதாவது பேசியோ தூங்கியோதான் பொழுதைக் கழிக்கனும்.

பொழுது சாய்ஞ்சதும் மாட்டை ஓட்டிக்கிட்டு வீட்டைப் பார்த்து நடக்கனும். வறட்டி பிசினஸ்ல நீங்க ரொம்ப சீரியசா இருந்தா ஒரு கூடைல நம்ம மாடு நிலத்துல போட்ட சாணியெல்லாம் அள்ளிட்டு வரலாம். மாட்டைக் கொட்டாயில கட்டிட்டு ஒரு குளியலைப் போட்டுட்டு மாட்டுக்கு தண்ணி காட்டனும். தவிடு புண்ணாக்கெல்லாம் போட்டா பால் நல்லா கறக்கும். மாட்டுக்கு தண்ணி காட்டினதும் அதுக்கு வைக்கோலோ புல்லோ போட்டுட்டு நம்ம கட்டையை சாய்க்க வேண்டியதுதான்.

இதே நீங்க ஒரு நகரத்துல இருந்தா கொஞ்சம் பிரச்சனை. மாடு மேய்க்க இடம் அவ்வளவு சுலபமா கிடைக்காது. ஊருக்கு வெளியே ஏதாவது ஏரிக்கரை பக்கம் போகனும். அங்கயும் பட்டா இல்லாத நிலத்துல பக்காவா பங்களா கட்டி வச்சிருப்பானுங்க. அவங்க தொல்லை தாங்காது. நம்ம மாட்டுக்கு அரிப்பெடுத்து அவங்க வீட்டு சுவத்துல உரசினா நம்மகிட்ட சண்டைக்கு வருவானுங்க. அதனால மாட்டை அந்த மாதிரி ஆளுங்க வீடு பக்கம் போகாம பார்த்துக்கனும்.

டவுண்ல இன்னொரு பிரச்சனை, நம்ம மாடு போஸ்டர், பேப்பர் எல்லாத்தையும் விரும்பி சாப்பிடும். ஆனா நாம விடக்கூடாது. பால் அளவு குறைஞ்சுடும். சாணியும் கம்மியா போயிடும். வறட்டி பிசினஸ் டவுன் ஆயிடும். அப்படியே போஸ்டரை சாப்பிட விட்டாலும் அரசியல் கட்சி போஸ்டரை சாப்பிட விடாதீங்க. ஜீரணம் ஆகாது.

டவுண்ல இன்னொரு பிரச்ச்னை டிராபிக். ரோட்டுல மாடு போகவே இடம் இருக்காது. பின்னாடி லாரி பஸ்காரன்லாம் வந்து ஹாரன் அடிச்சுட்டிருப்பாங்க. அதையெல்லாம் கண்டுக்காம நாம மாடு போற வேகத்துல போகட்டும்னு விட்டுடனும். உணர்ச்சிவசப்படக் கூடாது. பட்டாலும் பெரிய எஃபெக்ட் இருக்காது.

மாடு மேய்க்க அடிப்படையா இவ்வளவு தெரிஞ்சா போதும். மத்த விஷயமெல்லாம் போகப்போக அனுபவ அறிவுல கத்துக்கனும். நல்ல முறையில மாடு வளர்த்து பால் கறந்து கோ-ஆப்பரேடிவ் சொசைட்டில அதை வித்து, வறட்டி தட்டி பிசினஸை டெவலப் பண்ணி எல்லோரும் அண்ணாமலை படத்துல தலைவர் ரேஞ்சுக்கு வளர வாழ்த்துக்கள் :)

Thursday, March 15, 2007

சினிமா! சினிமா!!

சிறுவயதில் சினிமாவிற்கு செல்வது என்பது எப்போதாவது நிறைவேற்றப்படும் ஆசை. தலைவர் படத்திற்கு மட்டும் அழுது அடம்பிடித்து செல்ல வேண்டும். இல்லையெனில் ஊரிலிருந்து வரும் அத்தை மாமாக்களுக்காகக் காத்திருக்க வேண்டும். காலப்போக்கில் வீட்டில் நம்மை கைகழுவி விட்டதும் திரையரங்கு இன்னொரு மைதானமாகிவிட்டது.

வடபழனியில் தங்கியிருந்தபோது சுற்றுவட்டாரத்தில் நிறைய திரையரங்குகள். கமலா, பங்கஜம், உதயம், காசி, அன்னை கருமாரி காம்ப்ளெக்ஸ், விஜயா, நேஷனல் என ஏதாவது ஒரு தியேட்டரில் நாங்கள் பார்க்காத படம் ஓடிக்கொண்டிருக்கும். வாரத்திற்கு ஏழு நாட்களும் நைட் ஷோ பார்த்த நாட்களுமுண்டு. சில சமயங்களில் ஒரு புது திரைப்படத்தைத் தியேட்டரில் பார்ப்பது என்பது பொழுதுபோக்காக இல்லாமல் கடமையாக மாறிவிடுகிறது.

கல்லூரியில் படிக்கும்போது அனைத்து படங்களும் விடுதி மைதானத்திற்கே வந்துவிடும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மைதானத்தில் திரை கட்டி சிடியில் திரைப்படங்கள் திரையிடுவோம். அது மட்டுமில்லாமல் எந்த குப்பை படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்ப்போம். 'இந்த படம் ரொம்ப கேவலமா இருக்குப்பா. திரும்ப போயிடுங்க' என கவுண்ட்டரில் டிக்கெட் விற்பவரே சொல்வதும் நடந்திருக்கிறது.

கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படங்களில் குறிப்பாக இரண்டு படங்கள் மறக்கமுடியாதவை [விடுதியிலிருந்து 40-50 பேர் மொத்தமாக சென்று ஆப்பு வாங்கிய சிட்டிசனை விட்டுவிடுவோம் ;)]. ஒன்று சாமி. மற்றொன்று சார்லீஸ் ஏஞ்சல்ஸ்.

ஒரு படத்தைப் பார்த்தோ பார்க்காமலோ கருத்து சொல்வதைப் போலவே நமக்குள் ஊறிய இன்னொரு விஷயம் யாராவது வழி கேட்டால் தெரியாவிட்டாலும் குத்துமதிப்பாக கைகாட்டிவிடுவது. 'சாமி' திரைப்படம் மதுரை 'சிந்தாமணி' தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் ஆறு பேர் கிளம்பிச் சென்றோம். தியேட்டருக்கு குத்துமதிப்பாகத்தான் வழி தெரியும். சிம்மக்கல்லில் இறங்கியதும் நானும் இன்னொரு நண்பனும் வலப்பக்கம் திரும்பாமல் நேராக நடக்க ஆரம்பித்துவிட்டோம். பின்னால் வந்த ஒருவன் எங்களுக்கு வழி தெரியுமா எனக் கேட்டதற்கும் "நாங்கள்ல்லாம் மதுரயை கரைச்சு குடிச்சவய்ங்க. பேசாம வா மாப்ள"ன்னு லந்துவிட்டுக்கிட்டு நடக்க ஆரம்பித்தோம்.

என்ன மேட்டர்னா மதுரையில் மாசி வீதி, பங்குனி வீதின்னு எல்லாம் சுத்தி சுத்தி இருக்கும். நாங்க இன்னர் ரிங்ல நடக்கறதுக்கு பதில் அவுட்டர் ரிங்க்ல நடந்துட்டு இருக்கோம். இந்த மேட்டரே அரை ரவுண்ட் அடிச்சப்புறம் தான் தெரியுது. அப்படியும் முன்னாடி போயிட்டிருந்த நாங்க ரெண்டு பேரும் அசரல. கொஞ்சம் வேகமா நடந்து பசங்க கண்ணுல இருந்து மறைஞ்சு அவங்க பார்க்கறதுக்கு முன்ன வேற யார்கிட்டயாவது வழி கேட்டுடலாம்னு வேகமா நடந்தோம். ஒரு ஜிகர்தண்டா தள்ளுவண்டி கடைக்காரர்கிட்ட கேட்டா "சிந்தாமணி தியேட்டர் ஒரு கிலோமீட்டர் முன்னாடியே இருக்கே"ங்கறாரு.

இதை பசங்க கிட்ட சொல்ல முடியுமா? லெப்ட் ரைட்டுன்னு எடுத்து எப்படியாவது தியேட்டருக்கு போயிடலாம்னு நடந்தா மீனாட்சி அம்மன் கோயிலே வந்துடுச்சு. அங்கயிருந்து எப்படியோ தியேட்டரை கண்டுபுடிச்சு போனா டிக்கெட் வித்துமுடிச்சுட்டாங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து படம் பார்க்காம போறதான்னு ப்ளாக்ல வித்துட்டிருந்த ஒரு அண்ணாச்சிகிட்ட ஆறு டிக்கெட்டை வாங்கி உள்ள போனா வச்சாங்க பாருங்க ஒரு ஆப்பு. டிக்கெட் கிழிச்சு குடுக்கறவரு அப்படியே ஆறு பேரையும் வெளிய தள்ளிவிட்டார். கேட்டா அது போன ஷோவோட டிக்கெட்டாம். அலைஞ்சு திரிஞ்சு அல்லாடி வந்தா ப்ளாக்ல வாங்கின டிக்கெட்லயும் ஆப்பு.

மத்த பசங்க எல்லாம் என்னவோ எல்லாத்துக்கும் நாங்கதான் காரணம்னு எங்க ரெண்டு பேரையும் முறைக்கறாங்க. இதுக்காக ஃபீல் பண்ணா முடியுமா? ஒரு ரெண்டு மணி நேரம் அப்படியே மாசிவீதியில சுத்திட்டு ஒரு கடையில ரவுண்ட் கட்டி சாப்பிட்டு நைட் ஷோ அதே படத்தை அதே தியேட்டர்ல பார்த்துட்டு தான் வந்தோம். முன் வச்ச காலை பின் வைக்கலாமா? அப்புறம் தல டிரெயினிங்குக்கு என்ன மரியாதை?

இதே மாதிரி இன்னொரு முறை 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' படத்துக்கு ஒரு பத்து பேர் கிளம்பினோம். மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்ல. தியேட்டருக்குப் போய் பார்த்தா நாலு பசங்க பாக்கெட்ல பத்து பைசா இல்லாம வந்திருக்காங்க. கைல இருந்த காசையெல்லாம் போட்டு டிக்கெட்டை வாங்கி படத்தை நல்லா ஜாலியா பார்த்தோம். காமரூன் டியாஸ், ட்ரூ பேரிமூர், சப்பை மூக்கு லூசி லியூன்னு நல்லா கில்பான்ஸா இருந்துச்சு.

படம் முடிஞ்சு வெளிய வந்து திரும்பி போக பஸ்ஸுக்கு காசு இருக்கான்னு பார்த்தா ஆறு ரூபாய் குறையுது. இதுக்காக டிக்கெட் வாங்காமலா போக முடியும்? நோ. நெவர்.

ஆபத்பாந்த்தவனா ஒரு பையன் செமஸ்டர் முழுக்க தோய்க்காம இருந்த துணிகளை தோய்க்க நாலு பாக்கெட் சர்ஃப் பவுடர் வாங்கி வச்சிருந்தான். அதை கடைல குடுத்து காசு வாங்கிக்கலாம்னு பக்கத்துல இருந்த ஒரு கடைல "அண்ணே, நாங்க திருப்பரங்குன்றம் தியாகராஜா காலேஜ்ல படிக்கறோம். என் பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்க. பஸ்ஸுக்கு டிக்கெட் காசு கொஞ்சம் குறையுது. இந்த சர்ஃப் பாக்கெட்டை வச்சுக்கிட்டு அதுக்கான காசை குடுக்க முடியுமா?"ன்னு பம்மிட்டே கேட்டோம்.

அந்த நல்ல மனுசனும் நாலு சர்ஃப் பாக்கெட்டை வாங்கிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். மீதி குடுக்க "ரெண்டு ரூபாய் சேஞ்ச் இல்லையே"ன்னு கெத்தா சொன்னான் நம்ம கூட இருந்தவன். அவர் கேவலமா ஒரு லுக் விட்டுட்டு "பரவாயில்ல தம்பி. இருக்கட்டும்"ன்னு ரெண்டு ரூபாய் போட்டுக் குடுத்தார். அந்த காசை வச்சு அடிச்சுபுடிச்சு ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம்.

இதுமாதிரி தியேட்டர் அனுபவங்கள் நிறைய இருக்கு. ஒரு நண்பனை மூனு மணி நேரம் தியேட்டர் வாசல்ல காத்திருக்க வச்சுட்டு நான் ஆபிஸ்ல ஆப்பு வாங்கிட்டிருந்த கதையெல்லாம் இருக்கு.

இதை எழுதிட்டு இருக்கும்போது என் நண்பன் "ஏன்டா, ஓசில இடம் குடுக்கறாங்கன்னு இட்லிக்கு சட்னி வைக்காததைக் கூட எழுதிட்டு இருப்பியா?"ன்னு கேட்கறான். " என்னங்க பண்றது. பொது வாழ்க்கையில இறங்கிட்டப்புறம் எல்லா வித மொக்கையும் போட்டுத்தானே ஆகனும்? :)))

Friday, March 9, 2007

சங்கம் டெக்குனாலஜீஸ்

சங்கம் டெக்னாலஜீஸ் திண்ணையில் உட்கார்ந்து ஆணி அடிக்கும் சுத்தியில் ஈ அடித்துக்கொண்டிருக்கிறார் தல. மற்ற சங்கத்து சிங்கங்கள் தல செலவில் ஆளுக்கு ஐந்து அன்லிமிட்டட் மீல்ஸ் சாப்பிட்டு அசதியில் தூங்கிக்கொண்டிருக்கின்றனர்.அப்போது போர்வாள் தேவ் "தல..டெண்டர் வாங்கிட்டோம்" என கத்தியபடியே வரப்பில் ஓடி வருகிறார். மற்ற சங்கத்து சிங்கங்கள் தூக்கம் கலைந்து எழுந்துவருகிறார்கள்.

"தல, வெள்ளைக்காரன் ஆணி புடுங்கற காண்ட்ராக்டை நமக்கு கொடுத்துட்டான். நாம உடனே வேலையை ஆரம்பிக்கனும்" என மூச்சு வாங்கியபடியே ஹை டெசிபலில் அலறுகிறார்.

"என் வயித்துல பாலை வார்த்த ராசா! அப்ரண்டீஸ்களா இம்புட்டு நாள் ரெஸ்ட் எடுத்தது போதும். வேலையை ஆரம்பிங்கப்பு" என சவுண்ட் விட்டு எல்லோரையும் உள்ளே அனுப்புகிறார் கைப்பு.

சாப்ட்வேரைப் பற்றி ஒன்றும் தெரியாத தல போர்வாளை தனியே கூப்பிட்டு "ராசா, எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எல்லாப் பயலுகளுக்கும் தெரியும். ஆனாலும் இன்னும் மெயின்டெயின் பண்ணிட்டிருக்கேன். நீ தான் இந்த ஆணி புடுங்கற காண்ட்ராக்டை நல்ல படியா முடிச்சுக்குடுக்கனும்" என கெஞ்சியபடி பின்னால் செல்கிறார்.

"தல நம்ம அப்பரண்டீசுங்க எல்லாம் ஒன்னா ஒழுங்கா வேலை பார்க்கனும்னா அவங்களுக்குள்ள ஒரு டீப் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கனும். அதனால எல்லாரையும் கிரிக்கெட் வெளாட கூட்டிட்டுப் போறேன். அங்க போய் பேசி எல்லாம் ஒன்னா மண்ணா ஆனதும் வேலையைப் பார்க்கலாம்."

இதைக் கேட்டதும் சிங்கங்கள் சந்தோஷமாக மீண்டும் சங்க திண்ணைக்கே வருகிறார்கள்.

"அடப்பாவி மக்கா! வேலையை ஆரம்பிங்கடான்னா வெளாடப் போறோம்னு கெளம்பிட்டீங்களா? அதெல்லாம் இன்னைக்கு கிடையாது. எல்லாப்பயலுகளும் உள்ளே போங்க" என மீண்டும் உள்ளே அனுப்புகிறார். சிங்கங்கள் பொட்டி தட்டுவது போல் நடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு பொட்டியில் இளாவும் தளபதி சிபியும் விண்டோஸ் பெயிண்ட்டை திறந்து வைத்துக்கொண்டு அதில் குறுக்கும் நெடுக்குமாக கோடுகளை வரைந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்ததும் பி.பி எகிற அவர்களிடம் வரும் கைப்பு 'ஒரு மாசத்துல எல்லா வேலையும் முடிக்கிறோம்னு தேவு தம்பி வாக்கு குடுத்துட்டு வந்திருக்கு. ஆக்ரோஷமா வேலை பார்க்க வேண்டிய நீங்க ரெண்டு பேரும் விளையாடிட்டிருக்கீங்க. என்ன இது?" என கண்கள் சிவக்கிறார்.

உடனே தளபதி 'தல! இது கலாய்த்தல் திணை. அதுல இப்படி தான் கோடு அடிக்கனும். கீழே பாரு. சின்ன ஃபாண்ட்ல இது சும்மா லுல்லலாய்க்குன்னு எழுதியிருக்கேன்' என விவரிக்கிறார்.

"சாமி, உங்க கலாய்த்தலை நிப்பாட்டிக்குங்க. நேரத்துல ஆணி புடுங்கலைன்னா மொத்த ஆப்பும் எனக்குத்தான். வேலையைப் பாருங்கய்யா" என்றபடி திரும்புகிறார். அப்போதுதான் இராயல் உள்ளே வருகிறார்.

தன் மொத்த கோபத்தையும் தன் கண்களில் காட்டி "எங்கே போயிட்டு வர்ற?" என தலை கேட்க,

"இண்டர்வெல் போனேன் தல" என அப்பாவியாய் சொல்கிறார் இராம்.

"இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள இண்டர்வெல்லா? சரி அதை விடு. இன்னைக்கு என்ன வேலை பார்க்க போற?"

"மைக்ரோசாப்ட் ஆபிஸ்ல வேலை பார்க்க போறேன் தல"

"ராஸ்கோல், என் ஆபிஸ்ல வேலை பார்க்க சோறுபோட்டு சம்பளம் குடுத்து உட்கார வச்சா அது எவன்டா மைக்ரோசாப்ட் அவன் ஆபிஸ்ல வேலை பார்க்கற? அவன் யாரு? கட்டதுரை ஆளா?"

"ஐயோ தல, ஆபிஸ்ன்றது ஒரு சாஃப்ட்வேர் பேரு. உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு எங்களுக்குத் தெரியும். ஒரு மூலைல போய் உட்காரு. இல்ல நடக்கறதே வேற" என கத்திவிட்டு சீட்டுக்கு சென்று சீட்டாட ஆரம்பிக்கிறார்.

"இங்கிபிங்கி பாங்கி தல ஆஸ் தி டாங்கி" என பின்கட்டிலிருந்து சவுண்ட் வருகிறது.

அங்கே இளையதளபதி வெட்டி சீரியசாக ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

"அங்கே என்னடான்னா ஒருத்தன் கிரிக்கெட் விளையாடனும்னுட்டு இருக்கான். இங்க நீ இங்கிபிங்கி பாங்கி போடற. என்னங்கடா நடக்குது இங்க?"

"தல, டிஸ்டர்ப் பண்ணாத. நான் இந்த சாப்ட்வேரை டெஸ்ட் பண்றேன். இங்கிபிங்கி போட்டு அந்த டெஸ்ட் பாசாயிடுச்சா இல்ல பெயிலான்னு முடிவு பண்ணுவேன்" என எக்ஸ்ப்ளெயின் செய்கிறார் வெட்டி.

"அடப்பாவிகளா, இப்படித்தான் டெஸ்ட் பண்ணுவீங்களா? நான் கூட ஏதோ பெரிய டெக்குனிக்கு இருக்குன்னு நினைச்சனேடா..இதான் உங்க டெக்குனிக்கா?"

பக்கத்து சீட்டில் ஜொள்ஸ் செல்போனில் ஹஸ்கி வாய்ஸில் காலை பஸ்ஸில் கரெக்ட் பண்ன பிகரைக் கொஞ்சிக்கொண்டிருக்கிறார்.

"வேலை நேரத்துல என்னய்யா போனு?"

"வெள்ளைக்காரன் கூட தான் தல பேசிட்டிருக்கேன். அவனுக்கு எந்த மாதிரி ஆணியெல்லாம் புடுங்கனும்னு கேட்டுட்டிருக்கேன்" என பொய்மூட்டையய அவிழ்க்கிறார் பாண்டி.

"என்னமோ சொல்ற. நானும் நம்பறேன். சரி சூடான்ல ஒரு அப்பரண்டீசு உட்கார்ந்திருக்கானே. என்ன செய்யறான்? அவனுக்கு ஒரு போனைப் போடு" என்றதும் புலிக்கு டயல் செய்கிறார் பாண்டி. அது தவறுதலாக ஒரு அஜால்குஜால் நம்பருக்கு செல்கிறது. "ஹேய் ஸ்வீட்டி, எப்படி இருக்க?" என கொஞ்சல் குரலில் மறுமுனையில் ஒரு பெண். "ச்சே ராங்க் டைம்ல கரெக்ட் நம்பர்" என புலம்பியபடி தல பார்ப்பதுக்கு முன் கட் செய்கிறார் பாண்டி. அதற்குள் தலயின் செங்கல்போன் காட்டுக்கத்து கத்த அதை அலம்பலாக எடுக்கிறார் தல. மறுமுனையில் சிவா.

"தல இங்கன நிலமை ரொம்ப மோசமாயிருக்கு. விலைவாசி ஏறிடுச்சு. எனக்கு சம்பளத்தைக் கூட்டிக்கொடு" என்று சண்டை போடுகிறார் புலி.

"அடப்பாவி இன்னும் வேலையே பார்க்க ஆரம்பிக்கல. அதுக்குள்ள சம்பள உயர்வா? ராஸ்கோல். அடுத்த வாரம் பொதுக்குழு கூட்டும்போது முடிவு பண்ணிக்கலாம். போனை வை" என்று அணைக்கிறார் கைப்ஸ்.

அருகிலுள்ள பொட்டியில் மற்ற வலையுலகத்து சங்க மக்கள் அனைவரும் ரவியின் தேடுஜாப்ஸ் வலைப்பக்கத்தை மேய்ந்துகொண்டிருக்கின்றனர். "அட அநியாய அப்ரண்டீசுகளா, சங்கத்து ஆபிஸ்லயே வந்து அடுத்த வேலைக்கு அப்ளிகேஷன் போடறீங்களா" என நொந்து நூடுல்ஸ் ஆகிறார் தல.

அப்போது "ஐயோ என்னை விட்ருங்க! என்னால இதுக்கு மேல ஆணி புடுங்க முடியாது. இந்த ஆப்பே இன்னும் ஆறு மாசத்துக்கு காணும். சங்கத்து பணியை ஆத்தனும். இல்லன்னா தல என்னைக் கடிக்கும். என்னை விட்ருங்க. விட்ருங்க" என யாரையோ பார்த்து கத்தியபடியே சங்கத்தை நோக்கி ஓடி வருகிறான் கப்பி.

ஒரு பொறியில் இருந்து எஸ்கேப்பாகி இன்னொரு பொறியில் சிக்குவது போல் ஆப்பை தயாராக வைத்திருக்கும் சங்க மக்கள்ஸைப் பார்த்ததும் மயங்கிவிழுகிறான் கப்பி. அவனைப் பிடிக்க சிங்கங்கள் ஓடி வர "இன்று விடுமுறை" என சங்கம் டெக்னாலஜிஸ் வாசலில் போர்ட் மாட்டுகிறார் ராயல்.

Thursday, March 1, 2007

BE CAREFUL!!!

வானுச வையோரே வயசுல பெரியோரே வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தனும். மக்கள்ஸ் எல்லாரும் நலமா. இந்த அப்பாவி அப்ரண்டீஸை அட்லாஸ் ஆக்கிப் பாத்துப்புடனும்னு சங்கத்து சிங்கங்கள் முடிவெடுத்துட்டாங்க. எப்ப, யார் சிக்குவாங்கன்னு ரெடியா ஆப்பை கைல வச்சுகிட்டு ஸ்பேர் ஆப்பை பேண்ட் பாக்கெட்ல போட்டுட்டு திரியறவங்க இப்ப வகையா ஒருத்தன் சிக்கினா விடுவாய்ங்களா. வகைதொகை இல்லாம வரிஞ்சு கட்டப்போறாய்ங்க. இதுக்கெல்லாம் அசரவய்ங்களா நாம? 'நான் ஒரு முறை ஆப்பு வாங்கிட்டா அடுத்த ஆப்பை நானே மதிக்க மாட்டேன்'ன்னு வலியை வெளியக் காட்டாம ரியாக்ஷனை கண்ட்ரோல் பண்ணி சிரிச்சுட்டே இருக்கறதுதான் தலகிட்ட நாம எடுத்த ட்ரெயினிங்குக்கு மதிப்பு. அதே மாதிரி 'நான் ஒரு முறை மொக்கை போடறதுன்னு முடிவு பண்ணிட்டா என் மொக்கையை நானே தாங்க மாட்டேன்'. அதனால Be Careful :))

நம்ம தல கிட்ட எடுத்த ட்ரெயினிங்ல முக்கியமான எபிசோட் ஓசி காஜி அடிக்கறது. ஓசில ஆப்பே வந்தாலும் அதுல சீரியல் செட் அலங்காரம் போட்டு அல்டாப்பா உக்கார சொல்லிக்கொடுத்திருக்காரு தல. காலைல பல் துலக்கறதுல இருந்து ராத்திரி இழுத்துப்போத்திக்க பெட்சீட்டு வரைக்கும் இப்படி ஓசியிலயே ஓட்டறவய்ங்க பல பேர் இருக்காங்க.

இந்த மாதிரி ஆளுங்க கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே அவங்க கேட்கற விதம்தான், பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கற மாதிரி. நம்ம ப்ரெண்டு ஒருத்தர் இருக்காரு. எதையுமே அவருக்கு வேணும்னு கேட்கமாட்டாரு. "பாஸு, அந்த கடைல தேங்கா போளி நல்லாயிருக்கும் சாப்பிட்டிருக்கீங்களா"ன்னு தான் ஆரம்பிப்பார். இதுக்கப்புறம் நாம என்ன சொன்னாலும் எடுபடாது. நம்மள கையப்புடிச்சு கடைக்குக் கூட்டிட்டு போய் ஒரு போளியை வாங்கி அவர் சாப்பிட்டுட்டு கூட்டிட்டு வந்த கடனுக்கு நம்ம வாயில ஒரு போளியைத் திணிச்சு நம்ம பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்து அவரே செட்டில் பண்ணிடுவாரு. நாம ஒன்னுமே செய்ய வேணாம். செய்யவும் முடியாது. அவர் அம்புட்டு திறமைசாலி.

அவரே காலேஜ் படிக்கற காலத்துல இன்னொரு காமெடி பண்ணியிருக்காரு. அப்பல்லாம் கைல அஞ்சு பத்து தான் இருக்கும். மாச மொத வாரத்துல வீட்டுக்கு போன் பண்ணாத்தான் பணம் வரும். அதுக்கப்புறம் ஒரு வாரத்துல போன் பண்ணவும் காசு இருக்காது. கடன் வாங்கி போன் பண்ணாலும் பணம் வராது. அப்படியான நேரத்துல நைட் ஸ்டடி போடறோம்னு நான், நம்ம ஓசி காஜி, அப்புறம் என்னை மாதிரியே இன்னொரு அப்பிராணி மூனு பேரும் ஹாஸ்டல் ரூம்ல உட்கார்ந்துகிட்டு பட்டறையைப் போட்டுட்டிருந்தோம். பட்டறைனா தெரியும்ல...அதாம்பா டாப்பு.

திடீர்னு நம்ம பாசுக்கு டீ குடிக்கற ஆசை வந்துடுச்சு. அவர் என்னைக்கு பாக்கெட்ல பணம் வச்சிருக்காரு? "பாசு, தூக்கம் வர மாதிரி இருக்கு. அக்கா கடைக்கு போய் டீ குடிச்சுட்டு வரலாமா?"ன்னு பேஸ்மெண்ட் போட ஆரம்பிச்சார். சரி ஒரு டீ அடிச்சுட்டு வரலாம்னு கெளம்பியாச்சு. மூனு டீ ஆறு ரூபாய்ன்னு கணக்கு பண்ணி என்கிட்ட இருந்த நாலு ரூபாய்கூட பக்கத்து ரூம் பையன்ட்ட ரெண்டு ரூபா கடன் வாங்கிட்டு போனோம்.

கடைக்குப் போனதும் நம்ம பாசு "பாஸு, நான் டீ குடிக்க மாட்டேன். பால் தான் குடிப்பேன்"ன்னாரு. "இல்ல பாசு, ஆறு ரூபா தான் இருக்கு.மூனு டீ தான் வரும். பால் மூனு ரூபா. பத்தாது"ன்னோம்.

உடனே பாஸு கடைக்காரர் பக்கம் திரும்பி ஆர்டர் கொடுத்தாரு பாருங்க. "ஒரு பால். ஒரு டீ ஒன் பை டூ". அவருக்கு பாலாம். காசு குடுக்கற எங்களுக்கு ஒன் பை டூ டீயாம். டேய் பாவி ஓசில குடிக்கற எகத்தாளத்தைப் பாருன்னு அவனை மொறச்சா ரியாக்ஷனே காட்டாம இருக்கான். அதுமட்டுமில்ல மிச்சமிருக்கற ஒரு ரூபாய்க்கு மசால் வடை வாங்கி பாதியை அவன் எடுத்துகிட்டு மீதி பாதியை எங்க ரெண்டு பேருக்கும் தூக்கிப்போட்டான். என்னத்த சொல்றது. நாங்களும் அரை டம்ளர் டீயாவது குடிக்கவிட்டானேன்னு வந்துட்டோம்.

இதுமாதிரி அடுத்தவங்க மிளகா அரைக்கறதுக்காகவே அண்டா சைஸுக்கு மண்டை வச்சிருக்கவய்ங்க நாங்க. பார்த்து சூதானமா அளவோடு ஆப்படிச்சு வளமோடு வாழுங்கப்பு.

தில்லுமுல்லு படம் பார்த்திருக்கீகளா? அதுல தேங்காய் சீனிவாசன் அப்பரண்டீசுகளுக்கு இண்டர்வ்யூ வச்சு நொங்கெடுப்பாரு. அப்ப சுப்பிரமணிய பாரதின்னு ஒரு அப்பரண்டீசு வருவாரு. அந்த டயலாக் ஞாபகம் இருக்கா?

"ல-னாவும் வராது!! ள-னாவும் வராது! ழ-னாவும் வராது!! பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. நீர் நாட்டுக்கும் அவருக்கும் பெரும் துரோகம் செய்யறீர்ய்யா"ம்பார் தேங்காய்.

அதுக்கு அசராத அப்பரண்டீசு "ஸார்ட் நேம் சுப்பி சார்"ன்னு இளிக்கும்.

"சுப்பியாவது கப்பியாவது கெட்டவுட்"ன்னு சீறுவார் தேங்காய்.

இதுமாதிரி எதுவும் வராம கப்பித்தனமா காமெடி பண்ணிட்டிருந்தவனை அலங்காரம் பண்ணி அட்லாஸ் ஆக்கிவிட்டிருக்கீங்க. உங்க வாழ்த்துக்களோட ஆட்டத்தை ஆரம்பிக்கறேன். தொடர்ந்து ஆதரவு தாங்க :)

BE CAREFUL! (நான் எனக்கு சொன்னேன்)