கிராம சந்தைக் கூடும் போதெல்லாம், ரவுடி பில்டப்பில் பணம் வசூல் செய்துவருகிறார் கைப்புள்ள, அவருக்கு நான்கு அல்லக்கைகள் வேறு.
எல்லோரும் சந்தைக்கு வசூல் வேட்டைக்கு கிளம்புகிறார்கள்.
சந்தையில் கடைக்காரர்கள் கைப்புள்ளையை கண்டதும்
"கைப்புள்ள வர்றான், கைப்புள்ள வர்றான் காசை மூடுங்க, முடிஞ்சா எல்லாத்தையும் துணியைப் போட்டு மூடுங்க"
அல்லக்கை 1 : அண்ணே, உங்களப் பார்த்து எம்புட்டு பயம்
கைப்பு அவனுக்கு ஒரு அரை விட்டுவிட்டு
கைப்பு : நான் யாரு, ரவுவுடி.....பயப்படாமல் என்கூட பம்பரம்
வெளையாட கூப்பிடுவாங்களா ?
அல்லக்கை 2 : அண்ணே அங்க பாருங்க, முறுக்குகாரி உங்களைப் பார்த்ததும் முறுக்கெல்லாம் மூடி வைக்கிறா...
அனைவரும் அங்கே செல்கிறார்கள்
கைப்பு : அடியே என் பெரிய அத்தே, ஏன் மூடி வச்சு வியாபாரம் பார்க்கிறியே ?
முறுக்குகாரி : மூடி வைகலைன்னா , கண்ட நாயும் கவ்விக்கிட்டு போய்டும்
கைப்பு : நக்கலு ? சரி இன்னிக்கு எம்புட்டு வியாபாரம் ஆச்சு ?
முறுக்குகாரி : அதையேன் உன்கிட்ட சொல்லனும், இந்த இரண்டு முறுக்கை கடிச்சிக்கிட்டே எடத்தை காலி பண்ணு.
கைப்பு : அதை மொதலிலேயே கொடுத்து இருந்தா, நான் ஏன் உங்கிட்ட மல்லுக்கட்டப் போறேன்
முறுக்குகாரி : மல்லுக்கட்டிதான் பாரேன், என் புருசன் வெட்டிட்டுதான் ஜெயிலில் இருக்கான்.
கைப்பு அங்கிருந்து நகர்கிறார், அடுத்து பட்டானிக்கடைக்குச் செல்கிறார்கள்
ஒரு பிடி வறுத்த வேர்கடலையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே
கைப்பு : இது பொறிக்கடலை தானே ?
கடைக்காரர் : உங்க ஊரில் பொறிக்கடலை, எங்க ஊரில் வறுகடலை
கைப்பு : என்னமோ ஒரு கடலை, சரி கமிசனை எடு
கடைக்காரர் : டேய் கொள்ளிக் கட்டையை வெளியே இழு
கைப்பு : எதுக்கு கொள்ளிக்கட்டையெல்லாம், இன்னிக்கு வியாபாரம் ஆகலைன்னு தன்மையாக சொன்னால் போயிடப் போறோம்
கடைக்காரர் : அட அது இல்லை, ஒரே பொகையாக இருக்கு வேற கரியைப் போடச் சொன்னேன்,
கைப்பு : சரி சரி வாரேன், சாயந்தரம் இந்த பக்கம் வருவேன் எடுத்து வை
கடைக்காரர் : இப்பயே வாங்கிட்டுப் போ, டேய் அந்த ...
செல்லிக்காமல் இடத்தை காலி செய்கிறார்
அடுத்து கட்டதுரை கறி விற்கும் இடத்திற்கு செல்கிறார்கள்
அல்லக்கை 3 : அண்ணே, கட்டதுரை பாயி ரொம்ப நாளாக ஏமாத்திக்கிட்டு வர்றாண்ணே
கைப்புள்ள : இன்னிக்கு பாரு, அவன் ஆடு வெட்டுறானா இல்லை நான் அவனை என்ன செய்கிறேன்னு பாரு
இடத்தை நெருங்குகிறார்கள்
கைப்புள்ள : டேய் கட்டதுரை ...
கட்டதுரை : வா...கைப்புள்ள....இங்கே எப்படியும் வருவேன்னு தெரியும்...என்ன வேண்டும், இன்னிக்கே வாங்கிக்கிறியா ? இல்லாட்டி ?
தள்ளி நின்று கொண்டே
கைப்புள்ள : என் ஆளை அங்கிட்டு அனுப்புறேன், அவன்கிட்ட கொடு
நெருங்கிச் சென்ற அல்லக்கைக்கு கட்டதுரையின் கையால் பலத்த அரை விழுகிறது
கைப்புள்ள : இப்ப என் ஆள அடிச்சுட்டே மன்னிச்சு விட்டுறேன்...என்மேல கைவச்சு பாரு
கட்டதுரை கைப்புள்ளையை நெருங்கி, ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டு,
கட்டதுரை : இப்ப என்ன சொல்றே ?
அசராமல்
கைப்புள்ள : ம்ம்ம்ம்ம் இரண்டாவதும் கைவச்சுதான் பாரேன்
மறுபடியும் அறை விழுகிறது
கைப்புள்ள : ஸ்டாப் ஸ்டாப் உனக்கு இரண்டு சான்ஸ் கொடுத்தேன் முடிஞ்சுட்டு, அத்தோடு முடிச்சிக்கிறனும், அது மரியாதை.
கட்டதுரை : இல்லேண்ணா ?
அதற்குள் நான்காவது அல்லக்கை செல்பேசியில் யாருனோ பேசிவிட்டு
அல்லக்கை 4 : அண்ணே, அண்ணே உங்களுக்கு மூத்திர சந்தில் இருந்து போன் வந்திருக்கு
கைப்புள்ள : கட்டதுரை கட்ட்ட்ட்ட்ட்ட துரை பார்த்தியா என் ரேஞ்ச...நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாதவன் இல்லை, அங்கங்கே அப்பாய்ன்மெண்ட் கொடுத்து...அடிவாங்க போன் போட்டு கூப்பிட்டு கொடுக்கிறானுங்க, நான் அவ்வளவு பிசி.... உன்னிய மதிச்சி 2 அரைவாங்கினது நான் உனக்கு கொடுத்த மரியாதை...காப்பாத்திக்க...
கட்டதுரை : இந்தா கைப்புள்ள....வாங்கிட்டுப் போ,,,,,,,
கட்டதுரை கைகொட்டி சிரிக்கிறார்.
கைப்புள்ள மனதுக்குள், 'பாவி பய கன்னத்துல கைவச்சுட்டனே, கண்ணெல்லாம் பொறி பறக்குது...வலிதெரிகிற மாதிரி காட்டிக்கிட்டா அப்பறம் ஒரு பயலும் பயலுக்கும் பயம் இல்லாமல் போய்டும்'
அல்லக்கை 3 : அண்ணே வலிக்குதான்னே ?
கைப்புள்ள : நான் யாரு சிங்கத்துக்கே சிக்கெடுத்தவண்டா நானு...... எனக்கு வலியா ? போடா எ...வென்று...
வலியை பொறுத்துக் கொண்டு அவனை முறைக்கிறார்
பிகு : தமிழகம் செல்வதால் நேரம் கிடைக்கும் போது கர்ஜிப்போம் ! சிங்கமாமே...:))
~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Showing posts with label கோவியார். Show all posts
Showing posts with label கோவியார். Show all posts
Saturday, May 17, 2008
Thursday, May 15, 2008
இவிங்கெல்லாம் எப்படி பெயர் வைப்பாங்க ?
வலைப்பக்கத்துக்கு பெயர் வைத்துவிட்டு எழுதுகிறோம். வலைப்பக்கத்தின் தலைப்புக்கும் (மொட்டைத்தலை) எழுதுவதற்கு (முழங்காலுக்கும்) எதாவது தொடர்பு இருக்கிறதா ?. ஒருசிலர் தலைப்பில் உள்ளவாறு அதன் தொடர்பிலேயே முடிந்தவரையில் எழுதுவார்கள்.
அறியப்பட்டவர்கள் (பிரபலங்கள்) ,அவர்களின் வலைப்பக்த்திற்கு பெயர் வைத்தால்,
கலைஞர் : பாசவலை
ஜெயலலிதா : என்னுயிர் தோழி
மருத்துவர் இராமதாஸ் : மதில்மேல் பூனை
திருமாவளவன் : அடங்குடா
வைகோ : சிறைப்பறவை
விஜயகாந்த் : புள்ளிவிவரம்
கிருஷ்ணசாமி : எங்கே நிம்மதி
ஈவிகேஎஸ் இளங்கோவன் : ஏட்டிக்கு போட்டி
சரத்குமார் : அண்ணாச்சி
ஸ்டாலின் : பட்டத்து இளவரசன்
அழகிரி : மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்
கனிமொழி : டெல்லி தமிழச்சி
வழக்கறிஞர் ஜோதி : அந்தரங்கம்
மாறன் சகோதர்கள் : கிரஹ(ண)ம்
ரஜினிகாந்த் : 6 லிருந்து 60 கோடிவரை
கமலஹாசன் : முகங்கள்
அஜித் : பூவா தலயா ?
விஜய் : 'கருடன்' என்று பெயர் வைக்க இருந்தார், குருவியினால் கைவிட்டுவிட்டார்
சூர்யா : ஞாபகங்கள்
விக்ரம் : ஏற்றம் இறக்கம்
சிம்பு : சகலகலாகெட்டவன்
தனுஷ் : மருமகன்
வடிவேல் : கிளம்பிட்டாங்கையா
விவேக் : நக்கலு
குஷ்பு : 'கற்'பகம்
இதுக்கே மூச்சு வாங்குது
நயன்தாரா : ________ ?
நமீதா : ______ ?
த்ரிசா : ______ ?
விடுப்பட்ட இடங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். மற்ற மற்றவர்களின் பெயர்களையும் வலைப்பூ தலைப்புகளையும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். எல்லோரும் படித்து மகிழ்வோம்.
அறியப்பட்டவர்கள் (பிரபலங்கள்) ,அவர்களின் வலைப்பக்த்திற்கு பெயர் வைத்தால்,
கலைஞர் : பாசவலை
ஜெயலலிதா : என்னுயிர் தோழி
மருத்துவர் இராமதாஸ் : மதில்மேல் பூனை
திருமாவளவன் : அடங்குடா
வைகோ : சிறைப்பறவை
விஜயகாந்த் : புள்ளிவிவரம்
கிருஷ்ணசாமி : எங்கே நிம்மதி
ஈவிகேஎஸ் இளங்கோவன் : ஏட்டிக்கு போட்டி
சரத்குமார் : அண்ணாச்சி
ஸ்டாலின் : பட்டத்து இளவரசன்
அழகிரி : மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்
கனிமொழி : டெல்லி தமிழச்சி
வழக்கறிஞர் ஜோதி : அந்தரங்கம்
மாறன் சகோதர்கள் : கிரஹ(ண)ம்
ரஜினிகாந்த் : 6 லிருந்து 60 கோடிவரை
கமலஹாசன் : முகங்கள்
அஜித் : பூவா தலயா ?
விஜய் : 'கருடன்' என்று பெயர் வைக்க இருந்தார், குருவியினால் கைவிட்டுவிட்டார்
சூர்யா : ஞாபகங்கள்
விக்ரம் : ஏற்றம் இறக்கம்
சிம்பு : சகலகலாகெட்டவன்
தனுஷ் : மருமகன்
வடிவேல் : கிளம்பிட்டாங்கையா
விவேக் : நக்கலு
குஷ்பு : 'கற்'பகம்
இதுக்கே மூச்சு வாங்குது
நயன்தாரா : ________ ?
நமீதா : ______ ?
த்ரிசா : ______ ?
விடுப்பட்ட இடங்களை நிரப்பிக் கொள்ளுங்கள். மற்ற மற்றவர்களின் பெயர்களையும் வலைப்பூ தலைப்புகளையும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். எல்லோரும் படித்து மகிழ்வோம்.
Tuesday, May 13, 2008
இவ்வளவு செலவு ஆச்சா ?
சென்னைப் போன்ற பெரிய நகரங்களில் ... எல்லாம் தினப்படி சரியாக பழக்கத்தில் வைத்திருக்காமல் இருந்து... திடிரென்று திணறடிக்கும் அடிவயிற்றின் அவசரத்திற்கு, கட்டண கழிப்பிடம் கிடைப்பதே பெரிய விசயம் தான், அங்கு மூக்கைப் பிடித்துக் கொண்டு உள்ளே (வெளியே) சென்று வருபவர்களுக்கு எப்போதும் நரக(ல்) வேதனைதான்.
ஒன்றாக தங்கி இருக்கும் இரு நண்பர்கள் பேசிக் 'கொல்வதை' கிழே கவனியுங்கள்,
*********
"ஏண்டா அடிவயித்தை முட்டுவது போல மூஞ்ச வச்சிருக்கே....வயுத்த வலிச்சா போய்டு வர வேண்டியதுதானே"
"போய்டு வந்ததால் தான் அந்த கொடுமையே நடந்து போச்சு"
"வயிறு கடுப்பா ? கடுக்கா தண்ணி குடிச்சா சரியாப் போய்டுன்னுவாங்க "
"அட அதில்லடா....ஒன்னுமில்ல நீ சும்மா இரு" அவன் தீவிரமாக அன்றாட கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டு இருந்தான்,
முதலாமவன் எட்டிப்பார்த்து,
"என்னடா இது, டாய்லெட் சென்று வந்த செலவு ரூ 25.70 ன்னு எழுதி வைச்சிருக்கே"
"ஆமாம், வீன் விரயம் ஆனாலும் செலவு செலவு தானே"
"அப்படி என்ன விரயமாச்சு, கழுவ பன்னீரையா வாங்கிப் போனே ?"
"ஐயோ......., வீட்டுக்கு திரும்பி வரும்போது பயங்கர வயுத்து வலி, கட்டண கழிவறைக்குச் போனேன், அவசரத்தில் குனிந்த போது, சட்டை பாக்கெட்டில் இருந்த 23.70 காசு டாய்லெட்டில் கொட்டிவிட்டது, நான்கு ஐந்துரூபாய் காய்ன், அப்பறம் சில்லைரைகள்
மொத்தம் 23.70 வைத்திருந்தேன், அத்தனையும் கொட்டிட்டு...போனது போனது தானே..."
"அடப்பாவி... டாய்லெட் கட்டணம் 2 ரூபாய் சேர்த்து மொத்தம் 25.70 ஆன கணக்கு இப்பதான் புரியுது...வெவரமானவன் தான் நீ..."
இது எப்போதோ ஜூவி டயலாக் பகுதியில் யாரோ எழுதி சின்னதாக வந்த டயலாக்,
கொஞ்சம் விரித்து எழுதி இருக்கிறேன்.
பிகு : இது வவாச "இரண்டு" போட்டிக்காக எழுதியது இல்லை. :)
ஒன்றாக தங்கி இருக்கும் இரு நண்பர்கள் பேசிக் 'கொல்வதை' கிழே கவனியுங்கள்,
*********
"ஏண்டா அடிவயித்தை முட்டுவது போல மூஞ்ச வச்சிருக்கே....வயுத்த வலிச்சா போய்டு வர வேண்டியதுதானே"
"போய்டு வந்ததால் தான் அந்த கொடுமையே நடந்து போச்சு"
"வயிறு கடுப்பா ? கடுக்கா தண்ணி குடிச்சா சரியாப் போய்டுன்னுவாங்க "
"அட அதில்லடா....ஒன்னுமில்ல நீ சும்மா இரு" அவன் தீவிரமாக அன்றாட கணக்கு வழக்குகளை எழுதிக் கொண்டு இருந்தான்,
முதலாமவன் எட்டிப்பார்த்து,
"என்னடா இது, டாய்லெட் சென்று வந்த செலவு ரூ 25.70 ன்னு எழுதி வைச்சிருக்கே"
"ஆமாம், வீன் விரயம் ஆனாலும் செலவு செலவு தானே"
"அப்படி என்ன விரயமாச்சு, கழுவ பன்னீரையா வாங்கிப் போனே ?"
"ஐயோ......., வீட்டுக்கு திரும்பி வரும்போது பயங்கர வயுத்து வலி, கட்டண கழிவறைக்குச் போனேன், அவசரத்தில் குனிந்த போது, சட்டை பாக்கெட்டில் இருந்த 23.70 காசு டாய்லெட்டில் கொட்டிவிட்டது, நான்கு ஐந்துரூபாய் காய்ன், அப்பறம் சில்லைரைகள்
மொத்தம் 23.70 வைத்திருந்தேன், அத்தனையும் கொட்டிட்டு...போனது போனது தானே..."
"அடப்பாவி... டாய்லெட் கட்டணம் 2 ரூபாய் சேர்த்து மொத்தம் 25.70 ஆன கணக்கு இப்பதான் புரியுது...வெவரமானவன் தான் நீ..."
இது எப்போதோ ஜூவி டயலாக் பகுதியில் யாரோ எழுதி சின்னதாக வந்த டயலாக்,
கொஞ்சம் விரித்து எழுதி இருக்கிறேன்.
பிகு : இது வவாச "இரண்டு" போட்டிக்காக எழுதியது இல்லை. :)
Monday, May 12, 2008
பித்தாஸ்ரமம் - பித்தானந்தா - பக்தைகள் !
வெள்ளிக்கிழமை இரவு பூசைக்காக பித்தாஸ்ரமத்தில் பக்தைகளுக்கு நடுவே அமர்ந்திருக்கிறார் பித்தானந்தா,
கண்ணை மூடியபடி... மொதுவாக,
பித்தானந்தா : ஓம், கிரீம். க்ளீம்....கிரீம்....கிரீம்....கிரீம்....கிரீம்....கிரீம் .... என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
பக்தை ஒருவர்,
பக்தை : சுவமிஜி, என்ன இது கிரீம் கிரீம் என்று பலமுறை சொல்கிறீர்கள்
பித்தானந்தா : குழந்தாய், நம் பக்தர் ஒருவருக்கு 'ஏஜீஎஸ் ரிங்சோலின்' போட்டும் அரிப்புத் தீரவில்லையாம், என்னிடம் என்ன செய்வது ....குழப்பமாக இருக்கிறது என்று கேட்டார், அவருக்காகத்தான், கண்ணை மூடிக் கொண்டு வேறு எதாவது நான் பயன்படுத்திய நல்ல கிரீம் பெயர் நினைவுக்கு வருகிறதா என்று கிரீம்... கிரீம்... என்று சொல்லிப் பார்த்து நல்ல அரிப்பு நிவாரணி களிம்பின் பெயர்களை நினைத்துப் பார்க்கிறேன்.
எல்லா பக்தைகளும், குருவே சரணம்....குருவே சரணம்... என்று சொல்ல மற்றொரு,
பக்தை : சாமி தும்மினாலும் கூட அதற்கு பொருள் இருக்கிறது, ம் சாதாரணவர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப் போகிறது.
சிறிது மூக்குப் பொடியைப் போட்டுவிட்டு, அப்போது பித்தானந்தா பலமாகவே தும்மினார்.
பித்தானந்தா : அச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
பக்தை : சுவாமிஜி, என்ன ஆயிற்று ? ஏன் இந்த பலமான தும்மல் ?
பித்தானந்தா : குழந்தாய், உலகம் கெட்டுக்கிடக்கிறது, நான் போட்ட பட்டணம் பொடியிலும், கெட்டப்பயல்கள் கலப்படம் செய்து விற்கிறார்கள், நாசியில் தூசி படிந்தது போல் ஒரே நெடி.
பக்தை : சுவாமிஜிக்கு மோப்ப சக்தி அதிகம், முகர்ந்து பார்த்தே கலப்படத்தைச் சொல்லிவிடுகிறாரே, சுவாமி இது தெய்வீகத் தன்மை தான்
அனைவரும் உடனே கன்னத்தில் போட்டுக் கொண்டு,
பக்தைகள் : பித்தானந்த பகவானே.....பித்தானந்த பகவானே
மற்றொரு பக்தை, சுவாமிஜியிடம்
பக்தை : சுவாமிஜி தவறாக நினைக்கக் கூடாது. ஒண்ணு கேட்கனும்
பித்தானந்தா : குழந்தாய், நான் தவறாக நினைப்பேன் என்று நீ தான் தவறாக நினைக்கிறாய், முக்காலமும் உணர்ந்த எனக்கு எல்லாம் சரியாகாவே தெரியும். ம் சொல்லு.....
பக்தை : வெளியே 'புகை உடலுக்கு பகை' என்று பதாகையில் எழுதி தொங்கவிட்டிருக்கிறீர்கள், இங்கே வெண்குழல் வத்தியை 10 நிமிடத்திற்கு ஒரு முறை பற்ற வைக்கிறீர்களே, இது சரியா சுவாமிஜி ?
பித்தானந்தா பலமாக சிரிக்கிறார்......
பித்தானந்தா : குழந்தாய்.... உடல் என்றால் இந்த தேகம்.....புகை என்றால் அதனுள் உள்ள ஆவி....ஆன்மா
பக்தை : சுவாமிஜி புரியவில்லை. தேகமும் ஆன்மாவும் ஏன் ஒன்றுக்கொன்று பகை ?
பித்தானந்தா : இந்த பூவுலகில் உயிரும், உடலும் சேர்ந்திருப்பதால் தானே வாழ்கையே, ஆனால் இந்த வாழ்கையை உண்மை, நிரந்தரம் என்று எண்ணி, மனிதர்கள் அடுத்தவர்களையெல்லாம் ஏமாற்றி சொத்து சேர்க்கிறார்கள். என்றோ ஒரு நாள் உடல் - ஆன்மா பகை ஏற்பட்டு இரண்டும் நிரந்தரமாக பிரிந்துவிடும். இது தெரியாமல் மனிதர்களுக்கிடையே பகை.....பேராசை .......நிம்மதி இழந்து வாழ்கிறார்கள்.

பித்தனந்தாவின் 'புகை உடலுக்கு பகை' விளக்கம் கேட்டு, ஒட்டுமொத்தமாக பக்தைகள் அனைவரும், பரவசத்துடன்
பக்தைகள் : "பித்தானந்தா சுவாமிஜி உங்களால் பேறு பெற்றோம்.......பெரும் பேறு பெற்றோம்"
பித்தானந்தா : சத்தமாக சொல்லாதீர்கள், பெரும் பேறு பெற்றோம் என்பதை....குழந்தை பெறும் பேறு பெற்றோம் என்று யாரும் புரிந்து கொண்டு என்னை பிரேமானந்தாவுக்கு பக்கத்து செல்லில் போட்டுவிடப் போகிறார்கள்.
கண்ணை மூடியபடி... மொதுவாக,
பித்தானந்தா : ஓம், கிரீம். க்ளீம்....கிரீம்....கிரீம்....கிரீம்....கிரீம்....கிரீம் .... என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
பக்தை ஒருவர்,
பக்தை : சுவமிஜி, என்ன இது கிரீம் கிரீம் என்று பலமுறை சொல்கிறீர்கள்
பித்தானந்தா : குழந்தாய், நம் பக்தர் ஒருவருக்கு 'ஏஜீஎஸ் ரிங்சோலின்' போட்டும் அரிப்புத் தீரவில்லையாம், என்னிடம் என்ன செய்வது ....குழப்பமாக இருக்கிறது என்று கேட்டார், அவருக்காகத்தான், கண்ணை மூடிக் கொண்டு வேறு எதாவது நான் பயன்படுத்திய நல்ல கிரீம் பெயர் நினைவுக்கு வருகிறதா என்று கிரீம்... கிரீம்... என்று சொல்லிப் பார்த்து நல்ல அரிப்பு நிவாரணி களிம்பின் பெயர்களை நினைத்துப் பார்க்கிறேன்.
எல்லா பக்தைகளும், குருவே சரணம்....குருவே சரணம்... என்று சொல்ல மற்றொரு,
பக்தை : சாமி தும்மினாலும் கூட அதற்கு பொருள் இருக்கிறது, ம் சாதாரணவர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப் போகிறது.
சிறிது மூக்குப் பொடியைப் போட்டுவிட்டு, அப்போது பித்தானந்தா பலமாகவே தும்மினார்.
பித்தானந்தா : அச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
பக்தை : சுவாமிஜி, என்ன ஆயிற்று ? ஏன் இந்த பலமான தும்மல் ?
பித்தானந்தா : குழந்தாய், உலகம் கெட்டுக்கிடக்கிறது, நான் போட்ட பட்டணம் பொடியிலும், கெட்டப்பயல்கள் கலப்படம் செய்து விற்கிறார்கள், நாசியில் தூசி படிந்தது போல் ஒரே நெடி.
பக்தை : சுவாமிஜிக்கு மோப்ப சக்தி அதிகம், முகர்ந்து பார்த்தே கலப்படத்தைச் சொல்லிவிடுகிறாரே, சுவாமி இது தெய்வீகத் தன்மை தான்
அனைவரும் உடனே கன்னத்தில் போட்டுக் கொண்டு,
பக்தைகள் : பித்தானந்த பகவானே.....பித்தானந்த பகவானே
மற்றொரு பக்தை, சுவாமிஜியிடம்
பக்தை : சுவாமிஜி தவறாக நினைக்கக் கூடாது. ஒண்ணு கேட்கனும்
பித்தானந்தா : குழந்தாய், நான் தவறாக நினைப்பேன் என்று நீ தான் தவறாக நினைக்கிறாய், முக்காலமும் உணர்ந்த எனக்கு எல்லாம் சரியாகாவே தெரியும். ம் சொல்லு.....
பக்தை : வெளியே 'புகை உடலுக்கு பகை' என்று பதாகையில் எழுதி தொங்கவிட்டிருக்கிறீர்கள், இங்கே வெண்குழல் வத்தியை 10 நிமிடத்திற்கு ஒரு முறை பற்ற வைக்கிறீர்களே, இது சரியா சுவாமிஜி ?
பித்தானந்தா பலமாக சிரிக்கிறார்......
பித்தானந்தா : குழந்தாய்.... உடல் என்றால் இந்த தேகம்.....புகை என்றால் அதனுள் உள்ள ஆவி....ஆன்மா
பக்தை : சுவாமிஜி புரியவில்லை. தேகமும் ஆன்மாவும் ஏன் ஒன்றுக்கொன்று பகை ?
பித்தானந்தா : இந்த பூவுலகில் உயிரும், உடலும் சேர்ந்திருப்பதால் தானே வாழ்கையே, ஆனால் இந்த வாழ்கையை உண்மை, நிரந்தரம் என்று எண்ணி, மனிதர்கள் அடுத்தவர்களையெல்லாம் ஏமாற்றி சொத்து சேர்க்கிறார்கள். என்றோ ஒரு நாள் உடல் - ஆன்மா பகை ஏற்பட்டு இரண்டும் நிரந்தரமாக பிரிந்துவிடும். இது தெரியாமல் மனிதர்களுக்கிடையே பகை.....பேராசை .......நிம்மதி இழந்து வாழ்கிறார்கள்.
பித்தனந்தாவின் 'புகை உடலுக்கு பகை' விளக்கம் கேட்டு, ஒட்டுமொத்தமாக பக்தைகள் அனைவரும், பரவசத்துடன்
பக்தைகள் : "பித்தானந்தா சுவாமிஜி உங்களால் பேறு பெற்றோம்.......பெரும் பேறு பெற்றோம்"
பித்தானந்தா : சத்தமாக சொல்லாதீர்கள், பெரும் பேறு பெற்றோம் என்பதை....குழந்தை பெறும் பேறு பெற்றோம் என்று யாரும் புரிந்து கொண்டு என்னை பிரேமானந்தாவுக்கு பக்கத்து செல்லில் போட்டுவிடப் போகிறார்கள்.
Friday, May 9, 2008
இதுவும் காதல் தானோ ?!
முதன் முதலில் அவளை கோவிலில் தான் சந்தித்தான், ஒரு சின்னக்குழந்தை அவளைப் பார்த்து எதோ சொல்ல... சில்லைரையைக் கொட்டியது போன்று அவளின் சிரிப்பு, திரும்பிப் பார்த்தான்,
கையில் இருந்த தட்டில் உடைந்த தேங்காய் மற்றும் பழங்கள் இருந்தன.
அவன் பார்பதை கவனித்துவிட்டதாலோ, வேறு காரணத்தினாலோ விறுவிறுவென்று
கிளம்பி சென்று விட்டாள்,
அடுத்து ஒருவாரம் சென்று, அதே கோவில் வாசலில் அவள்,
அவனை கண்டுகொண்டு, பார்த்து புன்னகைத்தாள், இப்படி ஒரு பெண்ணுக்குத்தான்
இங்கே தினமும் வந்து, காத்துக் கிடந்தது போல் அவனுக்கு மனசு குளிர்ந்தது .
அவள் சிரிப்பு கொடுத்த தைரியத்தில், அவன்
"எ....என்ன ஒருவாரம் இருக்குமா ? இங்கே வந்து"
அவளும் தயங்கி தயங்கி,
"இங்கே யாரும் நல்லவர்களே வருவதில்லை, பூரா காலி பசங்க, என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள், அதுதான் இப்பெல்லாம் கபாலிஸ்வரர் கோவிலுக்கு போய்விடுகிறேன்"
"ஓ...! அங்கே பரவாயில்லையா ?"
"ம் அப்படித்தான் நினச்சு போனேன், போய்வர பஸ் செலவு அது இதுன்னு...அலைச்சல், பேசாமல் பழையபடி இந்த கோவிலுக்கே.."
அவள் இயல்பாக பேசுவதை வைத்து, தயங்காமல் சட்டென்று கேட்டுவிட்டான்
"என்னைய உனக்கு பிடிச்சிருக்கா, ஒருவாரமாக உன் நினைவில் தான் இருக்கேன்"
"பிடிக்கலைன்னா பேசுவனா ?" வெட்கப்பட்டாள்
"அது என்ன தட்டுல, ஏன் மூடி வச்சிருக்கே..."
"கொரங்கு தொல்லைதான்... திறந்து இருந்தால் தட்டிப்பறிச்சுட்டு ஓடிடும்"
"...ம் சரிதான்...நீ எவ்வளவு நாளாக இந்த கோவிலில்"
"நான் கேட்கவேண்டிய கேள்வி, உங்களை போனவாரம் தான் முதன் முதலில் பார்த்தேன்"
"ஆமாம், நான் காரணீஸ்வரர் கோவிலுக்கு போவது தான் வழக்கம், அங்கும் கூட்டமாகிவிட்டது, ஒரே கூட்டம் எனக்கு சரிப்பட்டுவராது...அப்பறம் எப்படி அங்கேயே....அதுதான் இந்த கோவிலுக்கு வந்தேன்"
"சரி சரி ... முதலில் வரிசையைப் பிடிக்கனும்... வாங்க பக்கத்திலேயே கொஞ்சம் தள்ளி உட்காருங்க"
"ம் சரிதான் நம்ம கதையை இனி தினமும் பேசுவோம்"
அதன் பிறகு அவர்கள் இருவரும்,வரும் போகும் பக்தர்களைப் பார்த்து, கோரசாக
"அம்மா, ஐயா, தாயே தருமம் செய்யுங்கம்மா... புள்ளக் குட்டிகெல்லாம் புண்ணியமாப் போவும்"
****
பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது இல்லை. ச்சும்மா டுவிஸ்டு சிறுகதை(?) - அடிக்கவராதிங்க. பிச்சைக்காரர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் காதல் வருமே, துணை தேவைப்படுமே. ஒரு படத்தில் விவேக் - கோவை சரளா (பிச்சைக்காரியாக), இருட்டுக்குள் நடக்கும் காமடி நினைவு வந்தது, இதை எழுதி தொலைத்தேன்.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... பிச்சைக்காரர்கள் கிள்ளுக் கீரைகளா ? அவர்களை வைத்து காமடி செய்தால் ஏன் எந்த சிந்தனையாளர்களும், அமைப்புகளும் அதை எதிர்ப்பதே இல்லை ? அவர்களை விலங்குகளைவிட கேவலமாக நினைக்கிறதா உலகம் ? உடலியலாமை என்ற காரணம் தவிர்த்து பிச்சை எடுப்பது இழிவான செயல்தான், ஆனால் திருடர்களை ஒப்பிடுகையில் இவர்கள் பரவாயில்லையே, கேட்டுதானே வாங்குகிறார்கள்.
கடைகளில் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசத்திற்கு கூடும் கூட்டத்தை என்னவென்று சொல்வது ?
கையில் இருந்த தட்டில் உடைந்த தேங்காய் மற்றும் பழங்கள் இருந்தன.
அவன் பார்பதை கவனித்துவிட்டதாலோ, வேறு காரணத்தினாலோ விறுவிறுவென்று
கிளம்பி சென்று விட்டாள்,
அடுத்து ஒருவாரம் சென்று, அதே கோவில் வாசலில் அவள்,
அவனை கண்டுகொண்டு, பார்த்து புன்னகைத்தாள், இப்படி ஒரு பெண்ணுக்குத்தான்
இங்கே தினமும் வந்து, காத்துக் கிடந்தது போல் அவனுக்கு மனசு குளிர்ந்தது .
அவள் சிரிப்பு கொடுத்த தைரியத்தில், அவன்
"எ....என்ன ஒருவாரம் இருக்குமா ? இங்கே வந்து"
அவளும் தயங்கி தயங்கி,
"இங்கே யாரும் நல்லவர்களே வருவதில்லை, பூரா காலி பசங்க, என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள், அதுதான் இப்பெல்லாம் கபாலிஸ்வரர் கோவிலுக்கு போய்விடுகிறேன்"
"ஓ...! அங்கே பரவாயில்லையா ?"
"ம் அப்படித்தான் நினச்சு போனேன், போய்வர பஸ் செலவு அது இதுன்னு...அலைச்சல், பேசாமல் பழையபடி இந்த கோவிலுக்கே.."
அவள் இயல்பாக பேசுவதை வைத்து, தயங்காமல் சட்டென்று கேட்டுவிட்டான்
"என்னைய உனக்கு பிடிச்சிருக்கா, ஒருவாரமாக உன் நினைவில் தான் இருக்கேன்"
"பிடிக்கலைன்னா பேசுவனா ?" வெட்கப்பட்டாள்
"அது என்ன தட்டுல, ஏன் மூடி வச்சிருக்கே..."
"கொரங்கு தொல்லைதான்... திறந்து இருந்தால் தட்டிப்பறிச்சுட்டு ஓடிடும்"
"...ம் சரிதான்...நீ எவ்வளவு நாளாக இந்த கோவிலில்"
"நான் கேட்கவேண்டிய கேள்வி, உங்களை போனவாரம் தான் முதன் முதலில் பார்த்தேன்"
"ஆமாம், நான் காரணீஸ்வரர் கோவிலுக்கு போவது தான் வழக்கம், அங்கும் கூட்டமாகிவிட்டது, ஒரே கூட்டம் எனக்கு சரிப்பட்டுவராது...அப்பறம் எப்படி அங்கேயே....அதுதான் இந்த கோவிலுக்கு வந்தேன்"
"சரி சரி ... முதலில் வரிசையைப் பிடிக்கனும்... வாங்க பக்கத்திலேயே கொஞ்சம் தள்ளி உட்காருங்க"
"ம் சரிதான் நம்ம கதையை இனி தினமும் பேசுவோம்"
அதன் பிறகு அவர்கள் இருவரும்,வரும் போகும் பக்தர்களைப் பார்த்து, கோரசாக
"அம்மா, ஐயா, தாயே தருமம் செய்யுங்கம்மா... புள்ளக் குட்டிகெல்லாம் புண்ணியமாப் போவும்"
****
பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டது இல்லை. ச்சும்மா டுவிஸ்டு சிறுகதை(?) - அடிக்கவராதிங்க. பிச்சைக்காரர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் காதல் வருமே, துணை தேவைப்படுமே. ஒரு படத்தில் விவேக் - கோவை சரளா (பிச்சைக்காரியாக), இருட்டுக்குள் நடக்கும் காமடி நினைவு வந்தது, இதை எழுதி தொலைத்தேன்.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம்... பிச்சைக்காரர்கள் கிள்ளுக் கீரைகளா ? அவர்களை வைத்து காமடி செய்தால் ஏன் எந்த சிந்தனையாளர்களும், அமைப்புகளும் அதை எதிர்ப்பதே இல்லை ? அவர்களை விலங்குகளைவிட கேவலமாக நினைக்கிறதா உலகம் ? உடலியலாமை என்ற காரணம் தவிர்த்து பிச்சை எடுப்பது இழிவான செயல்தான், ஆனால் திருடர்களை ஒப்பிடுகையில் இவர்கள் பரவாயில்லையே, கேட்டுதானே வாங்குகிறார்கள்.
கடைகளில் ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசத்திற்கு கூடும் கூட்டத்தை என்னவென்று சொல்வது ?
Thursday, May 8, 2008
:-) பல்டி லெவல் மார்கெட்டிங்க் (-:
எதோ ஒரு விதத்தில் முன்பே அறிமுகமான இந்திய மலேசியர் இருவரின் உரையாடல்கள்,
"சார் உங்களை சந்திக்கனும்னு நினச்சிக்கிட்டே இருப்பேன்...எதாவது வேலை வந்து தள்ளிப் போய்டுது"
"நானும் தான் சார், உங்க தொலைபேசி எண்ணை தொலைத்துவிட்டேன் அதனால தொடர்பு கொள்ள முடியல..."
"எப்படி இருக்கிங்க....அழஞ்சி திரிஞ்சு எதாவது செய்தால் தான் பொழைக்க முடியும் போல இருக்கு"
"சரிதான், முன்னமாதிரி மாச சம்பளத்தில காலம் ஓட்ட முடியல"
"சார், நீங்க தனியார் நிறுவனத்தில் தானே வேலை செய்றிங்க, சம்பளம் கட்டுப்படி யாகுதா ?
"அட...நானே கூட அதை உங்களிடம் கேட்க நினைத்தேன்"
"ஆமாம், பாருங்க சார், ஏறுகிற விலை வாசியில் எங்கே கட்டுப்படி ஆகுது, இருந்தாலும் ஒருவாறு சாமாளிக்கிறேன்"
"உங்களிடம் ஒண்ணு ..."
அவரை பேசவிடாமல்,
"உங்களுக்கு பார்டைம் வேலைப் பார்க்க இஷ்டம் இருக்கா ?"
"உங்களிடம் ஒண்ணு"
"சார், ஸெங்கோ (மங்குஸ்தான் பழசாறு) பற்றி கேள்விப்பட்டு இருக்கிங்களா ?, இதோ பாருங்க "
"...."
"பாருங்க சார்...இது சர்வரோக நிவாரணி சார், ப்ளட் ப்ரசர், சர்கரை எல்லாத்தையும் கட்டுபடுத்துது"
"......!!!! ? " வியப்பு பொங்க அவரைப் பார்க்க,
"ரொம்ப ஆர்வமாக இருக்கிங்க, சொல்றேன், இது பாட்டிலில் அடைத்த ஒரு திரவ உணவு...மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி ஜென்மத்துக்கும் திரும்பாது"
"...."
"ஒரு பாட்டில் விலை 100 ரிங்கிட்.... ஆனால் இது வெளி மார்க்கெட்டில் 120 ரிங்கிட் வரை போகுது"
"...."
"பாருங்க சார்...இதை என் பார்டைம் கம்பெனி 80 ரிங்கிட்டுக்கு உறுப்பினர்களுக்கு கொடுக்கிறார்கள்"
அவரே தொடர்ந்து...
"அத நாம 100 ரிங்கிட்க்கு பொதுமக்களுக்கு விற்கலாம், கூடவே எங்க கம்பெனியில் விற்பனை செய்ய உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால் மாச மாசம் நிரந்தரமாக கமிசன் வரும்..."
"........!!!"
"என்ன சார் அப்படி பார்க்கீறிங்க ? புரியுது நானே சொல்லிடுறேன் .... இதை எல்லோரும் மல்டி லெவல் மாட்கெட்டிங்கான்னு கேட்கிறாங்க... ஆனா இது அது இல்லை...இது வேற..."
"நான் சொல்ல வந்தது..."
"பாருங்க சார்...நீங்க யோசிக்கிறிங்க, தயங்குறிங்க, புரியுது... இப்ப பாருங்க என் மாத வருமானமாக அலுவலக சம்பளம் தவிர கூடுதலாக 5000 ரிங்கிட் வரை கிடைக்குது, என்கிட்ட கார் இருக்கு....பேங்கில சேவிங் இருக்கு"
"நான் சொல்ல வந்தது..."
"நம்புங்க சார், 3 மாதத்தில் உங்க தேவையெல்லாம் பூர்த்தியாகிடும்...."
"நான் சொல்ல வந்தது...."
"இன்னும் எதோ கேட்க நினைக்கிறீர்கள் ....சரி உங்க சந்தேகத்தைக் கேளுங்க...."
"சார் நானும் அதே மங்குஸ்தான் பழச்சாறு தான் விற்கிறேன்"
அதிர்ச்சி அடைந்தவர்,
"கெட்டுது போங்க...வீட்டுக்கு போக நேரமாச்சு...நாம அப்பறம் பேசுவோம்"
இருவரும் அசடு வழிந்து பிரிகிறார்கள்.
"சார் உங்களை சந்திக்கனும்னு நினச்சிக்கிட்டே இருப்பேன்...எதாவது வேலை வந்து தள்ளிப் போய்டுது"
"நானும் தான் சார், உங்க தொலைபேசி எண்ணை தொலைத்துவிட்டேன் அதனால தொடர்பு கொள்ள முடியல..."
"எப்படி இருக்கிங்க....அழஞ்சி திரிஞ்சு எதாவது செய்தால் தான் பொழைக்க முடியும் போல இருக்கு"
"சரிதான், முன்னமாதிரி மாச சம்பளத்தில காலம் ஓட்ட முடியல"
"சார், நீங்க தனியார் நிறுவனத்தில் தானே வேலை செய்றிங்க, சம்பளம் கட்டுப்படி யாகுதா ?
"அட...நானே கூட அதை உங்களிடம் கேட்க நினைத்தேன்"
"ஆமாம், பாருங்க சார், ஏறுகிற விலை வாசியில் எங்கே கட்டுப்படி ஆகுது, இருந்தாலும் ஒருவாறு சாமாளிக்கிறேன்"
"உங்களிடம் ஒண்ணு ..."
அவரை பேசவிடாமல்,
"உங்களுக்கு பார்டைம் வேலைப் பார்க்க இஷ்டம் இருக்கா ?"
"உங்களிடம் ஒண்ணு"
"சார், ஸெங்கோ (மங்குஸ்தான் பழசாறு) பற்றி கேள்விப்பட்டு இருக்கிங்களா ?, இதோ பாருங்க "
"...."
"பாருங்க சார்...இது சர்வரோக நிவாரணி சார், ப்ளட் ப்ரசர், சர்கரை எல்லாத்தையும் கட்டுபடுத்துது"
"......!!!! ? " வியப்பு பொங்க அவரைப் பார்க்க,
"ரொம்ப ஆர்வமாக இருக்கிங்க, சொல்றேன், இது பாட்டிலில் அடைத்த ஒரு திரவ உணவு...மூன்று மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் மூட்டு வலி ஜென்மத்துக்கும் திரும்பாது"
"...."
"ஒரு பாட்டில் விலை 100 ரிங்கிட்.... ஆனால் இது வெளி மார்க்கெட்டில் 120 ரிங்கிட் வரை போகுது"
"...."
"பாருங்க சார்...இதை என் பார்டைம் கம்பெனி 80 ரிங்கிட்டுக்கு உறுப்பினர்களுக்கு கொடுக்கிறார்கள்"
அவரே தொடர்ந்து...
"அத நாம 100 ரிங்கிட்க்கு பொதுமக்களுக்கு விற்கலாம், கூடவே எங்க கம்பெனியில் விற்பனை செய்ய உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால் மாச மாசம் நிரந்தரமாக கமிசன் வரும்..."
"........!!!"
"என்ன சார் அப்படி பார்க்கீறிங்க ? புரியுது நானே சொல்லிடுறேன் .... இதை எல்லோரும் மல்டி லெவல் மாட்கெட்டிங்கான்னு கேட்கிறாங்க... ஆனா இது அது இல்லை...இது வேற..."
"நான் சொல்ல வந்தது..."
"பாருங்க சார்...நீங்க யோசிக்கிறிங்க, தயங்குறிங்க, புரியுது... இப்ப பாருங்க என் மாத வருமானமாக அலுவலக சம்பளம் தவிர கூடுதலாக 5000 ரிங்கிட் வரை கிடைக்குது, என்கிட்ட கார் இருக்கு....பேங்கில சேவிங் இருக்கு"
"நான் சொல்ல வந்தது..."
"நம்புங்க சார், 3 மாதத்தில் உங்க தேவையெல்லாம் பூர்த்தியாகிடும்...."
"நான் சொல்ல வந்தது...."
"இன்னும் எதோ கேட்க நினைக்கிறீர்கள் ....சரி உங்க சந்தேகத்தைக் கேளுங்க...."
"சார் நானும் அதே மங்குஸ்தான் பழச்சாறு தான் விற்கிறேன்"
அதிர்ச்சி அடைந்தவர்,
"கெட்டுது போங்க...வீட்டுக்கு போக நேரமாச்சு...நாம அப்பறம் பேசுவோம்"
இருவரும் அசடு வழிந்து பிரிகிறார்கள்.
Wednesday, May 7, 2008
கைப்புள்ள கலாட்டா ! - டிக்கெட் ... டிக்கெட் ...
சென்னை மாநகர பேருந்து ஒன்றில் நடத்துனராக இருக்கிறார் கைப்புள்ள
கைப்பு : டிக்கெட் டிக்கெட்...டிக்கெட் வாங்கதவங்கெல்லாம் டிக்கெட் எடுத்துடுங்க பின்னால செக்கர் வந்தா அம்புட்டுதான்.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பார்த்தி ஏறுகிறார்.
கைப்பு : இவன் ஏன் இங்கிட்டு வந்தான்
பார்த்தி தெரியாதது போல்,
பார்த்தி : தேனாம்பேட்டைக்கு ஒரு டிக்கெட் கொடு
கைப்பு : தேனாம்பேட்டையெல்லாம் போகாது
பார்த்தி : என்னது தேனாம் பேட்டை போகாதா ? தேனாம்பேட்டை என்னைக்கு போச்சு இன்னிக்கு போக, எனக்கு தெரிஞ்சு அங்கேயே தான் இருக்கு
கைப்பு : ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான், இந்த பஸ்ஸு அங்கிட்டு போகாதுன்னு சொல்ல வந்தேன்
பார்த்தி : அத தெளிவாகச் சொல்ல வேண்டியது தானே
கைப்பு : இப்ப சொல்லிட்டேன்ல இறங்கு
பார்த்தி : இது உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா ? நான் எங்கே வேண்டுமானாலும் போவேன், ஏன் இந்த பஸ் எங்கே போவுதோ அங்கே போவேன்
கைப்பு : அட நீ எங்கிட்டாச்சும் போப்பா, மொதலில் டிக்கெட் எடு
பார்த்தி சுற்றிலும் பார்த்துவிட்டு, மெதுவாக
பார்த்தி : ஆமாம் உனக்கு சம்பளம் என்ன கிடைக்குது ?
கைப்பு : அத ஏன் கேட்கிறே, என்ன பிடித்தமெல்லாம் போவ எட்டாயிரம் இருக்கும்
பார்த்தி : இப்ப விக்கிற வெல வாசியில் உன்னால தாக்கு பிடிக்க முடியுதா ?
கைப்பு : ஆமாம்பா, வாங்குற காசு கந்துவட்டிகே சரியாப் போயிடுது
பார்த்தி : நான் ஒரு யோசனை சொல்றேன்
கைப்பு : உனக்கு புன்னியமா போச்சு. சொல்லு என்ன செய்யனும்
பார்த்தி : என்கிட்ட டூப்ளிகேட் டிக்கெட் இருக்கு, 100 ரூபாய்க்கு 500 டிக்கெட் தருகிறேன்
கைப்பு : அத வச்சு சீட்டுக்கட்டு விளையாடச் சொல்றியா ?
பார்த்தி : மடையா, ஒர்ஜினல் டிக்கெட்டு பதிலாக இந்த டிக்கெட்டை ஜனங்களுக்கு கொடுத்தா, வசூலாகும் அம்புட்டும் உனக்குத்தான், கூடவே ஒரிஜினல் டிக்கெட்டும் கொஞ்ச கொஞ்ச கொடுக்கனும், அப்பறம் வசூலில்லை என்று சந்தேகம் வரக்கூடாது இல்லையா ?
கைப்பு : நல்ல யோசனையாக இருக்கே, இந்த 100 ரூபாய், 500 டிக்கெட் கொடு
பார்த்தி பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கட்டு கட்டுகளைக் கொடுக்கிறார்
கைப்பு : என்னைய ஏமாத்த முடியாது
பார்த்தி : ?? (முழிக்கிறார்)
கைப்பு : பத்தியா பத்தியா, நீ இன்னும் டிக்கெட் வாங்கலைன்னு சொன்னேன்
பார்த்தி : (மனதுக்குள் சிரித்துக் கொண்டு) ஒன் அறிவுக்கு நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை. சரி பஸ்ஸு போகும் கடைசி ஸ்டாப்புக்கு ஒரு டிக்கெட் கொடு
கைப்பு : அது...! என்ன தான் இருந்தாலும் தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கே.
டிக்கெட்டை கொடுக்கிறார்
பார்த்தி : ஏய் என்கிட்டேயே என் டிக்கெட்டா, ஒரிஜினல் டிக்கெட்டைக் கொடு,
கைப்பு : ச்சும்மா சோதிச்சு பார்த்தேன்...சோதிச்சு
பார்த்தி : மனதுக்குள் 'இருடி உனக்கு இருக்கு' என்னையே ஏமாத்த பார்க்கிறியா ?
ஒரிஜினல் டிக்கெட்டை வாங்கிக் கொள்கிறார். அடுத்த ஐந்து ஸ்டாபிங்குற்குள் ஏறும் பயணிகளுக்கு டூப்ளிக்கேட் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு, பணப்பை நிறம்பிவிட்டதா என்று குலுக்கி குலுக்கி பார்க்கிறார் கைப்பு
ஆறாவது ஸ்டாபிங்கில் செக்கர்கள் ஏறுகிறார்கள்
ஒவ்வொருவராக சோதனை செய்கிறார்கள், பாதி டூப்ளிகேட் டிக்கெட்
பார்த்தி : சார், இதுவும் டூப்ளிகேட்டா பாருங்க, நான் அவசரமாகப் போகனும் - என்று டிக்கெட்டைக் காட்டுகிறார்
செக்கர் : ஒரிஜினல் தான், நீங்க எறங்கிப் போகலாம் என்கிறார்.
பார்த்தி கைப்புவைப் பார்த்து,
பார்த்தி : நான் வரட்டா ? என்கிறார்
கைப்புக்கு பார்த்திதான் டூப்ளிகேட் டிக்கெட் கொடுத்தார் என்று சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் செக்கர்களைப் பார்க்க
செக்கர் : உன் மேல என்கொயரி வைக்கிறோம், வண்டியை விட்டு இறங்கு

கைப்பு : மாப்பு மாப்பு வச்சுட்டான்யா ........ஆப்பு.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்று சொல்லியபடி செக்கர்களுடன் இறங்கிச் செல்கிறார்
கைப்பு : டிக்கெட் டிக்கெட்...டிக்கெட் வாங்கதவங்கெல்லாம் டிக்கெட் எடுத்துடுங்க பின்னால செக்கர் வந்தா அம்புட்டுதான்.
அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பார்த்தி ஏறுகிறார்.
கைப்பு : இவன் ஏன் இங்கிட்டு வந்தான்
பார்த்தி தெரியாதது போல்,
பார்த்தி : தேனாம்பேட்டைக்கு ஒரு டிக்கெட் கொடு
கைப்பு : தேனாம்பேட்டையெல்லாம் போகாது
பார்த்தி : என்னது தேனாம் பேட்டை போகாதா ? தேனாம்பேட்டை என்னைக்கு போச்சு இன்னிக்கு போக, எனக்கு தெரிஞ்சு அங்கேயே தான் இருக்கு
கைப்பு : ஆரம்பிச்சுட்டான்யா ஆரம்பிச்சுட்டான், இந்த பஸ்ஸு அங்கிட்டு போகாதுன்னு சொல்ல வந்தேன்
பார்த்தி : அத தெளிவாகச் சொல்ல வேண்டியது தானே
கைப்பு : இப்ப சொல்லிட்டேன்ல இறங்கு
பார்த்தி : இது உங்க அப்பன் வீட்டு பஸ்ஸா ? நான் எங்கே வேண்டுமானாலும் போவேன், ஏன் இந்த பஸ் எங்கே போவுதோ அங்கே போவேன்
கைப்பு : அட நீ எங்கிட்டாச்சும் போப்பா, மொதலில் டிக்கெட் எடு
பார்த்தி சுற்றிலும் பார்த்துவிட்டு, மெதுவாக
பார்த்தி : ஆமாம் உனக்கு சம்பளம் என்ன கிடைக்குது ?
கைப்பு : அத ஏன் கேட்கிறே, என்ன பிடித்தமெல்லாம் போவ எட்டாயிரம் இருக்கும்
பார்த்தி : இப்ப விக்கிற வெல வாசியில் உன்னால தாக்கு பிடிக்க முடியுதா ?
கைப்பு : ஆமாம்பா, வாங்குற காசு கந்துவட்டிகே சரியாப் போயிடுது
பார்த்தி : நான் ஒரு யோசனை சொல்றேன்
கைப்பு : உனக்கு புன்னியமா போச்சு. சொல்லு என்ன செய்யனும்
பார்த்தி : என்கிட்ட டூப்ளிகேட் டிக்கெட் இருக்கு, 100 ரூபாய்க்கு 500 டிக்கெட் தருகிறேன்
கைப்பு : அத வச்சு சீட்டுக்கட்டு விளையாடச் சொல்றியா ?
பார்த்தி : மடையா, ஒர்ஜினல் டிக்கெட்டு பதிலாக இந்த டிக்கெட்டை ஜனங்களுக்கு கொடுத்தா, வசூலாகும் அம்புட்டும் உனக்குத்தான், கூடவே ஒரிஜினல் டிக்கெட்டும் கொஞ்ச கொஞ்ச கொடுக்கனும், அப்பறம் வசூலில்லை என்று சந்தேகம் வரக்கூடாது இல்லையா ?
கைப்பு : நல்ல யோசனையாக இருக்கே, இந்த 100 ரூபாய், 500 டிக்கெட் கொடு
பார்த்தி பணத்தை வாங்கிக் கொண்டு டிக்கட்டு கட்டுகளைக் கொடுக்கிறார்
கைப்பு : என்னைய ஏமாத்த முடியாது
பார்த்தி : ?? (முழிக்கிறார்)
கைப்பு : பத்தியா பத்தியா, நீ இன்னும் டிக்கெட் வாங்கலைன்னு சொன்னேன்
பார்த்தி : (மனதுக்குள் சிரித்துக் கொண்டு) ஒன் அறிவுக்கு நீ இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லை. சரி பஸ்ஸு போகும் கடைசி ஸ்டாப்புக்கு ஒரு டிக்கெட் கொடு
கைப்பு : அது...! என்ன தான் இருந்தாலும் தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கே.
டிக்கெட்டை கொடுக்கிறார்
பார்த்தி : ஏய் என்கிட்டேயே என் டிக்கெட்டா, ஒரிஜினல் டிக்கெட்டைக் கொடு,
கைப்பு : ச்சும்மா சோதிச்சு பார்த்தேன்...சோதிச்சு
பார்த்தி : மனதுக்குள் 'இருடி உனக்கு இருக்கு' என்னையே ஏமாத்த பார்க்கிறியா ?
ஒரிஜினல் டிக்கெட்டை வாங்கிக் கொள்கிறார். அடுத்த ஐந்து ஸ்டாபிங்குற்குள் ஏறும் பயணிகளுக்கு டூப்ளிக்கேட் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு, பணப்பை நிறம்பிவிட்டதா என்று குலுக்கி குலுக்கி பார்க்கிறார் கைப்பு
ஆறாவது ஸ்டாபிங்கில் செக்கர்கள் ஏறுகிறார்கள்
ஒவ்வொருவராக சோதனை செய்கிறார்கள், பாதி டூப்ளிகேட் டிக்கெட்
பார்த்தி : சார், இதுவும் டூப்ளிகேட்டா பாருங்க, நான் அவசரமாகப் போகனும் - என்று டிக்கெட்டைக் காட்டுகிறார்
செக்கர் : ஒரிஜினல் தான், நீங்க எறங்கிப் போகலாம் என்கிறார்.
பார்த்தி கைப்புவைப் பார்த்து,
பார்த்தி : நான் வரட்டா ? என்கிறார்
கைப்புக்கு பார்த்திதான் டூப்ளிகேட் டிக்கெட் கொடுத்தார் என்று சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் செக்கர்களைப் பார்க்க
செக்கர் : உன் மேல என்கொயரி வைக்கிறோம், வண்டியை விட்டு இறங்கு

கைப்பு : மாப்பு மாப்பு வச்சுட்டான்யா ........ஆப்பு.........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்று சொல்லியபடி செக்கர்களுடன் இறங்கிச் செல்கிறார்
Monday, May 5, 2008
குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !
இளைய தளபதி விஜயின் குருவி படத்தை சிறப்புக் காட்சியாக கலைஞருக்கு போட்டுக் காண்பித்து, விமர்சனம் எழுதித்தரச் சொல்லி தலையை சொறிகிறார், அந்த படத்தின் இயக்குனர் தரணி. பேரன் உதயநிதியின் படம் என்பதால் அரைமனதாக ஒப்புக் கொள்கிறார் கலைஞர், இனி கலைஞரின் விமர்சனம் இங்கே,
********
குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !
உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம் தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு, குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப் பட்ட ஒரு கதையை சுமந்து வருவது தான் குருவி.
இந்த படத்தை சிறப்புக் காட்சியாக எனக்குப் போட்டுக் காட்டினார்கள், தம்பி தரணியின் மற்றொரு தங்கமான படைப்புதான் குருவி. அன்பு தம்பி இளைய தளபதி என்னும் இளைய சூராவளி விஜயின் மற்றொரு வெற்றிப் படம் தான் குருவி.
தமிழகத்தில் இந்த படத்தை எடுத்து இருந்தால் பொதுமக்களே எதிர்த்திருப்பார்கள். காரணம் அமைதிச் சோலையான தமிழகத்தில் கொத்தடிமை முறை என்பது திமுக முதல் முறை அரியணை ஏறிய போதே ஒழிக்கப்பட்டுவிட்டது. தம்பி தரணி அண்டை மாநிலம் கடப்பாவில் நடக்கும் கொத்தடிமையை களைவதற்கு கடப்பாடு கொண்டு தன்னாலான முயற்சியை நன்றாக செய்து இருக்கிறார்.
கண்குளிர மலேசிய காட்சிகள், சீறிப்பாயும் காளையென விஜயின் அதிரடி சண்டைக்காட்சிகள். மின் தூக்கியில் அடைக்கப்பட்டு மீண்டுவரும் இளைய தளபதி விஜய், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனோகராவை நினைவு படுத்துகிறார். அழகு பதுமையாக வனிதை திரிசா காதல் பாடல்களில் இளைஞர்களின் மனைதை கொள்ளையடிக்கிறார். பாடல் காட்சிகளில்பம்பரமாக சுழன்றாடும் விஜய் பரவசப்படுத்துகிறார். அன்று தாயைக் காத்த தனயனாக மனோகரா இன்று தந்தையை காட்கும் தனயனாக வெற்றிவேலுவாக விஜய் என் நினைவுகளையெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னால் இட்டுச் செல்கிறார். முதல் பத்து நிமிடங்கள் (மட்டும்) வந்தாலும் சின்னக் கலைவாணர் விவேக்கின் நகைச்சுவை நம் நாடி நரம்புகளையெல்லாம் சிரிக்க வைக்கிறது.
படத்தின் சிறப்பென ஆசிஸ்வித்யார்த்தியின் அருமையான நடிப்பு, தம்பி சுமனின் வில்லத்தனம், தம்பி வித்யாசாகரின் தரமான இசை, கழக உடன்பிறப்பு மணிவண்ணனின் குணச்சித்திர நடிப்பு இப்படி எதைவிடுவது எதைச் சொல்வதென்றே இந்த படத்தைப் பார்த்த நான் திக்குமுக்காகிவிடுகிறேன்.

கனவு பாடல்களுக்காக வனிதை திரிசாவா, திரிசாவுக்காக கனவுப் பாடல்களா ? உங்களோடு சேர்ந்து எனக்கும் ஐயம் ஏற்படுகிறது. முதல் (தர) காட்சிகளில் வந்து இளமையை கிள்ளிச் செல்கிறார் படர்ந்த பருவக் கொடி மாளவிகா.
குருவி - இது வணிகம் சார்ந்த திரைப்படம் அல்ல. ஏழை எளியவர்களின் கொத்தடிமை துயர் துடைக்கும் பாடம். கழக உறுப்பினர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து, பயன்பெற்று தம்பி விஜயையும், இயக்குனர் தரணியையும் தாராளமாகப் போற்றலாம்.
குருவி மூன்றெழுத்து
விஜய் மூன்றெழுத்து
தரணி மூன்றெழுத்து
திரிசா மூன்றெழுத்து
சுமன் மூன்றெழுத்து
விவேக் மூன்றெழுத்து
மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !
பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை விமர்சனம், இதில் அரசியல் எதுவும் இல்லை.
********
குருவி - கலைஞர் பாணி விமர்சனம் !
உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு வணக்கம், தளபதி ஸ்டாலினின் தனயன், இளைய சூரியன் உதயநிதியின் பெரிய சூரியன் நிறுவனத்தின் ( RED Giant) படம் தான் குருவி. குருவி என்றால் சுறுசுறுப்பு, குருவி என்றால் பரபரப்பு, குருவி என்றால் அரவணைப்பு, குருவி என்றால் கூட்டுக் குடும்பம், அப்படிப் பட்ட ஒரு கதையை சுமந்து வருவது தான் குருவி.
இந்த படத்தை சிறப்புக் காட்சியாக எனக்குப் போட்டுக் காட்டினார்கள், தம்பி தரணியின் மற்றொரு தங்கமான படைப்புதான் குருவி. அன்பு தம்பி இளைய தளபதி என்னும் இளைய சூராவளி விஜயின் மற்றொரு வெற்றிப் படம் தான் குருவி.
தமிழகத்தில் இந்த படத்தை எடுத்து இருந்தால் பொதுமக்களே எதிர்த்திருப்பார்கள். காரணம் அமைதிச் சோலையான தமிழகத்தில் கொத்தடிமை முறை என்பது திமுக முதல் முறை அரியணை ஏறிய போதே ஒழிக்கப்பட்டுவிட்டது. தம்பி தரணி அண்டை மாநிலம் கடப்பாவில் நடக்கும் கொத்தடிமையை களைவதற்கு கடப்பாடு கொண்டு தன்னாலான முயற்சியை நன்றாக செய்து இருக்கிறார்.
கண்குளிர மலேசிய காட்சிகள், சீறிப்பாயும் காளையென விஜயின் அதிரடி சண்டைக்காட்சிகள். மின் தூக்கியில் அடைக்கப்பட்டு மீண்டுவரும் இளைய தளபதி விஜய், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனோகராவை நினைவு படுத்துகிறார். அழகு பதுமையாக வனிதை திரிசா காதல் பாடல்களில் இளைஞர்களின் மனைதை கொள்ளையடிக்கிறார். பாடல் காட்சிகளில்
படத்தின் சிறப்பென ஆசிஸ்வித்யார்த்தியின் அருமையான நடிப்பு, தம்பி சுமனின் வில்லத்தனம், தம்பி வித்யாசாகரின் தரமான இசை, கழக உடன்பிறப்பு மணிவண்ணனின் குணச்சித்திர நடிப்பு இப்படி எதைவிடுவது எதைச் சொல்வதென்றே இந்த படத்தைப் பார்த்த நான் திக்குமுக்காகிவிடுகிறேன்.

கனவு பாடல்களுக்காக வனிதை திரிசாவா, திரிசாவுக்காக கனவுப் பாடல்களா ? உங்களோடு சேர்ந்து எனக்கும் ஐயம் ஏற்படுகிறது. முதல் (தர) காட்சிகளில் வந்து இளமையை கிள்ளிச் செல்கிறார் படர்ந்த பருவக் கொடி மாளவிகா.
குருவி - இது வணிகம் சார்ந்த திரைப்படம் அல்ல. ஏழை எளியவர்களின் கொத்தடிமை துயர் துடைக்கும் பாடம். கழக உறுப்பினர்கள் அனைவரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து, பயன்பெற்று தம்பி விஜயையும், இயக்குனர் தரணியையும் தாராளமாகப் போற்றலாம்.
குருவி மூன்றெழுத்து
விஜய் மூன்றெழுத்து
தரணி மூன்றெழுத்து
திரிசா மூன்றெழுத்து
சுமன் மூன்றெழுத்து
விவேக் மூன்றெழுத்து
மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்க வேண்டியது தமிழர்களின் தலையெழுத்து, தலையெழுத்து !
பின்குறிப்பு : இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட கற்பனை விமர்சனம், இதில் அரசியல் எதுவும் இல்லை.
வருத்தப்படாமல் ஒரு இன்ப சுமை !
சர்க்கரை இனிப்பாக இருக்கும் ! சர்கரை மூட்டையோடு தூக்கச் சொன்னால் இனிக்குமா ? முயற்சி செய்கிறேன். நம்(ம) வவா சங்கம் நண்பர்களின் வவாச பதிவில் ஒரு மாதகாலத்திற்கு அட்லஸ் வாலிபராக இருக்கச் சொல்லி உறுப்பினராக இணையும் அழைப்பும் வந்தது. அதன் பிறகு வவாச பதிவின் முகப்பில் எனது இடுகையின் பற்றிய (புரொபைல்) படம் வந்திருந்தது. இடையில் வெளியூர் சென்றிருந்ததால் உடனடியாக இடுகை எதையும் இட முடியவில்லை.
வவாச-வில் ஏற்கனவே மண்டபதில் இருந்து எழுதிய போல் (வெளியில் இருந்து) இரு இடுகைகள் எழுதி இருக்கிறேன்.
வவாசவில் எழுத ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. தனிப்பட்ட எவரையும், எந்த சமூகத்தையும் புண்படுத்தக் கூடாது, படிக்கிறவர்கள் சிரிக்காவிட்டாலும் முகம் சுழிக்காமல் இருக்கும் படி எழுதப்பட்டவை இருக்க வேண்டும், எனக்கு தெரிந்து எல்லோரும் அது போலவே நன்றாக எழுதி இருக்கிறார்கள். சமூகம் அரசியல் இதைப்பற்றியே எனது பதிவுகளில் மிகுந்தவையாக எழுதி வருகிறேன். அவ்வப்போது நகைச்சுவை எழுதுவதுண்டு. இங்கு நகைச்சுவை எழுத வேண்டும். என்ன விதமான நகைச்சுவை எழுதுவேன் என்று தெரியவில்லை. பார்ப்போம். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் கால்களை வைப்பதால், தலையை கொடுப்பதால், முன்பே எதையும் எழுதி வைக்கவில்லை. இனி எழுதப்போவதைத் தான் இடவேண்டும்.
நான் வாலிபரா ? நடுத்தரவயது வாலிப வயது இல்லையா ? :)

மேலே வண்ண நிழல் படத்தில் ? நான் தானுங்க, நம்ம டிபிசிடி ஐயாவின் கைவண்ணம். என்னமோ வளைச்சு வளச்சு எடுத்தாரு... அப்பறம் இந்த கொடுமை நடந்து போச்சு. :)
எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன் !!!
உங்க(ள்) யாருக்கும் இளமை திரும்பி வாலிபராக வேண்டுமென்றால் டிபிசிடிக்கு முன்னால் நில்லுங்க(ள்), நிழல்படத்தில் நீங்கள் வாலிபராகிவிடுவீர்கள், அப்பறம் அதைப்பார்த்து வேறு யாராவது வருத்தப்படனும். :)
வவாச-வில் ஏற்கனவே மண்டபதில் இருந்து எழுதிய போல் (வெளியில் இருந்து) இரு இடுகைகள் எழுதி இருக்கிறேன்.
வவாசவில் எழுத ஒரு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. தனிப்பட்ட எவரையும், எந்த சமூகத்தையும் புண்படுத்தக் கூடாது, படிக்கிறவர்கள் சிரிக்காவிட்டாலும் முகம் சுழிக்காமல் இருக்கும் படி எழுதப்பட்டவை இருக்க வேண்டும், எனக்கு தெரிந்து எல்லோரும் அது போலவே நன்றாக எழுதி இருக்கிறார்கள். சமூகம் அரசியல் இதைப்பற்றியே எனது பதிவுகளில் மிகுந்தவையாக எழுதி வருகிறேன். அவ்வப்போது நகைச்சுவை எழுதுவதுண்டு. இங்கு நகைச்சுவை எழுத வேண்டும். என்ன விதமான நகைச்சுவை எழுதுவேன் என்று தெரியவில்லை. பார்ப்போம். முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் கால்களை வைப்பதால், தலையை கொடுப்பதால், முன்பே எதையும் எழுதி வைக்கவில்லை. இனி எழுதப்போவதைத் தான் இடவேண்டும்.
நான் வாலிபரா ? நடுத்தரவயது வாலிப வயது இல்லையா ? :)

மேலே வண்ண நிழல் படத்தில் ? நான் தானுங்க, நம்ம டிபிசிடி ஐயாவின் கைவண்ணம். என்னமோ வளைச்சு வளச்சு எடுத்தாரு... அப்பறம் இந்த கொடுமை நடந்து போச்சு. :)
எப்படி இருந்த நான், இப்படி ஆகிட்டேன் !!!
உங்க(ள்) யாருக்கும் இளமை திரும்பி வாலிபராக வேண்டுமென்றால் டிபிசிடிக்கு முன்னால் நில்லுங்க(ள்), நிழல்படத்தில் நீங்கள் வாலிபராகிவிடுவீர்கள், அப்பறம் அதைப்பார்த்து வேறு யாராவது வருத்தப்படனும். :)
Subscribe to:
Posts (Atom)