Monday, July 7, 2008

லொல்லு சபா 'ஜெயில்'

பதிவெழுத ஆரம்பிச்ச காலத்துல வல்லவன் படத்தப் பாத்த கொலவெறில லொல்லு சபா ஸ்டைலுல ஒரு பதிவு ஒன்னு எழுதுனேன். அதே மாதிரி அப்ப வந்த வெயில் படத்துக்கும் ஒரு பதிவ எழுதி ட்ராஃப்ட்ல போட்டு வச்சிருந்தேன். சங்கத்துல இப்ப போடுறதுக்கு எதுவுமே தோன மாட்டேங்குதுங்றதுனால.... ஹி...ஹி... இங்க அந்த பதிவ போட்டுடுறேன் மக்கா..

---------------------

என் பேரு முருகேசன். சின்ன வயசுல எங்கப்பா பொறுக்கி வச்சிருந்த கட்ட பீடிய சுட்டு நானும் இழுத்துட்டேன்னு எங்க அப்பா என்ன போட்டு அடிச்சாரு. அந்த கோவத்துல, அவரு பொறுக்கி வச்சிருந்த எல்லா கட்ட பீடிகளையும் தூக்கிக்கிட்டு நான் ஊர விட்டே ஓடி வந்துட்டேன். அதுக்கப்புறம், எங்க சுத்தியும் ஒரு ஃபிகரும் என்ன ஏறெடுத்து பாக்காததால, எங்கப்பனாவது எனக்கு ஒரு பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணி வைப்பான்னு, இருவது வருசம் கழிச்சு இப்பத்தான் நான் ஊருக்குப் போறேன்.


முருகேசன் அவரோட கிராமத்து வீடு பக்கம் வர்றாரு. அவரோட அப்பா, இப்பவும் அதே கட்ட பீடிய அடிச்சுட்டு திண்ணைல உக்காந்திருக்காரு.

"நைனா... நாந்தாம்பா ஒம் புள்ள முருகேசன்"

அவரு கண்டுகிடவே இல்ல.

"டேய் அப்பா... நாந்தான் டா உன் புள்ள முருகேசன்", கொஞ்சம் சத்தமாவே முருகேசன் சொன்னாரு.

"நீதான் என் புள்ளைங்றதுக்கு என்னடா சாட்சி? என் சொத்த ஆட்டையப் போடுறதுக்காக இப்படி வேசம் போட்டு வந்திருக்கியா?"

"ஆமா... இவரு பெரிய துபாய் அலி பாய்... நாலஞ்சி கப்பல் விட்டுறுக்காரு. ஏன் டா அப்பா, போடுறதுக்கு ஒரு பனியன் கூட இல்லாம, வெறும் ஒடம்புல ஒக்காந்திருக்க... ஒனக்கு இந்த ஓவர் சீன் தேவையா? உண்மைய சொல்லு, காசு இல்லாமத்தானே ஷேவிங் பண்ணாம, இப்படி பண்ணாட மாதிரி தாடி வச்சிட்டு திரியிற?"

"டேய்... வெறும் ஒடம்புல ஒக்காறது கிராம பழக்கம்டா"

"ஆமாங்கடா... உங்களுக்கெல்லாம் மனசுல அர்னால்டுன்னு நெனப்பா? அரசாங்கத்துல அரசியல் வாதிங்க சின்ன வீட்டுக்கு வூடு கட்டுனது போக, மிச்சக் காசுல இங்க கக்கூஸ கட்டுனா, அதுல போகாம, இந்த ஊரையே நாசம் பண்ணிட்டு, 'இந்த சுகம் வேற எங்கயாவது வருமா'ன்னு டையலாக் விடுறது ... இப்படி சட்டைய போடாம, போற வர்ற பொம்பள புள்ளைங்க கிட்ட சீன் போடுறது... கெழவி மூக்கு பொடிய திருடிட்டான்னு, ஒன்னே கால் ருவா மேட்டருக்கெல்லாம், பஞ்சாயித்துங்ற பேருல மூனு மணி நேரம் மொக்கைய போடுறது... கலாம் '2020 இல் இந்தியா வல்லரசு'ன்னு பேசிக்கிட்டு இருக்குற இந்த காலத்துலையும் உங்களோட அக்கப்போரு தாங்க முடியலடா..."

"நீ என்ன சொன்னாலும் உன்ன என் புள்ளைன்னு ஏத்துக்க முடியாதுடா"

என்னோட அப்பா அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் தம்பி கதிர் அங்க வந்தான்.

என் தம்பிக்கு எம் மேல ரொம்ப பாசம். சின்ன வயசுல, நான் பக்கத்து பெஞ்ச் பாண்டியம்மாவ சைட் அடிச்சிட்டு இருந்தத பாத்து, கமலா டீச்சர் என்ன வஞ்சிப் புட்டாங்க. அதுனால கோவப்பட்ட என் தம்பி, பள்ளிக்கூட சுவத்துல, 'கமலா டீச்சருக்கும், கணக்கு வாத்தியாருக்கும் காதலா?"ன்னு எழுதிப் போட்டு பழிவாங்குனான். என் தம்பிக்கு எம் மேல அவ்வளவு பாசம். இப்ப கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி, ஒரு வெளம்பர கம்பெனி ஆரம்பிச்சிருக்கான். ஊருல யாராவது காதல் பண்ணினாங்கன்னா, என் தம்பியோட கம்பெனித்தான் இந்த ஊருக்கே தெரிய படுத்தும். எல்லா சுவர் விடாம, விவேக் ஸ்டைல்ல, 'பாலா சன்மதி ஜங் ஜங்'னு எழுதி வைப்பான். பெரிய பெரிய அரசியல்வாதிங்கக்கிட்ட இருந்து கூட எதிர்க்கட்சிக் காரங்க வீட்டு சுவத்துல எழுதச் சொல்லி டெண்டர் வரும்
.


"டேய் கதிர்.. நான் அண்ணன் டா"

"ஏன் டா.. நெத்தில சொட்டையும், மொகத்துல தாடியும் வச்சிட்டு, பாதி கெழவனா வந்து நிக்கிற உன்னப் பாத்தாலே தெரியல... நீ என்னோட பெரியவந்தான்னு... அதுல என்ன டா நொண்ணன் டா"

"அது இல்ல டா.. சின்ன வயசுல ஓடிப் போன முருகேசன்"

'ஆஹா... இருந்த ஒரு குடிசையையும் ஆட்டையப் போட வந்துட்டானே', என்று மனதில் நினைத்துக் கொண்டாலும்

"அண்ணே... வாண்ணே உள்ள"

"அவன் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது. ஓடிப் போனவன் சும்மாவா போனான். என்னோட செருப்பத் தூக்கிட்டு ஓடிப் போயிட்டான். அது எப்படிப் பட்ட செருப்பு. அதப் போட்டு நடந்தா, செருப்புப் போட்டிருக்குறதே தெரியாது", முருகேசனின் அப்பா.

"எப்படிடா செருப்பு போட்டதுத் தெரியும். அது என்ன பாட்டா செருப்பா? பாட்டமே இல்லாத செருப்பப் போட்டுக்கிட்டு நடந்தா, செருப்புப் போட்டிருக்குறது எப்டிடா தெரியும்? ஏன் டா அண்ணா... அந்த செருப்ப நாய்கூட துக்கிக்கிட்டுப் போகாதா.. நீ என் டா அத எடுத்துட்டுப் போனா.. அத விடுடா... நான் ரூட் விட்டுட்டு இருந்த பக்கத்து வீட்டு பாண்டியம்மாவ ஏன் டா இழுத்துக்கிட்டு ஓடுன?"

"அத ஏன் டா கேக்குற? அவளும் என்னைய விட்டுட்டு ஓடிப் போயிட்டாடா"

"அப்புறம்?"

"அப்புறம் என்ன... நானும் ஒரு ஊருல பயாஸ்கோப் காட்டுற ஒருத்தன்கிட்ட வேலைக்கு சேந்து கஷ்டப்பட்டு, அவனுக்கு குவார்ட்டர்ல வெசவச்சி கொன்னு அந்த தியேட்டர் ஓனர் ஆனேன்"

"ஆமாம்.. பயாஸ்கோப்புன்னா அந்த கமல் படத்துல, 'கத கேளு கத கேளு'ன்னு ஒருத்தர் தூக்கிட்டு வருவாரே அதானே"

"அது இல்லடா.. இந்த லென்ஸு, கண்ணாடிய வச்சி, வெள்ள வேட்டில வாத்தியார் படத்தப் போடுவேமே. அது"

"அடத் தூ. சரி...உன் வாழ்க்கைல காதல் வரவே இல்லையாடா"

"வந்திச்சே.. நான் பயாஸ்கோப் காட்டுற தெருவிலத்தான் மீனு வித்துட்டு இருந்தா ஒருத்தி.. அவளை எப்படியோ கரெக்ட் பண்ணி காதல் பண்ணிட்டு இருந்தேன். சரி அவள கல்யாணம் பண்ணலாம்னு பாத்தா, அவளோட பழைய புருசனோட புது பொண்டாட்டியோட அப்பாத்தான் நான் கொன்ன பயாஸ்கோப் ஓனர்னு என்னோட பயாஸ்கோப்ப புடிங்கி அடிச்சு தொரத்திட்டாங்க. அப்புறம்தான் இங்கன வந்தேன். ஆமாம் கதிரு நீ கூட ஒருப் பொண்ண லவ் பண்றியாமே", அன்று கதிரைப் பாத்து கண்ணடிகிறார் முருகேசன்.

"அடப்பாவி.. நானே குச்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். என் ஆளையே தள்ளிட்டுப் போகப் பாக்குறியா. உன்னெல்லாம் வீட்டுக்குள்ளையே சேக்கக் கூடாது", கதிர் முருகேசனை துரத்திக் கொண்டு ஓடுகிறார்.

"ஆமாம்.. இந்தப் படத்துலத்தான் ஜெயிலே வரலியே.. ஏன் 'ஜெயில்'னு பேரு வச்சிருக்கீங்க", மனோகர் கைய ஆட்டி ஆட்டி கேட்கிறார்.

"ஏன் டா டேய். உனக்குக்கூடத்தான் நல்லக்கண்ணன்னு பேரு வச்சிருக்காங்க. உன் கண்ண பாக்குறவனுக்கெல்லாம் மெட்ராஸ் ஐ வருதே. அதப் பத்தி யோசிச்சியா? பெருசா நொட்ட சொல்ல வந்துட்ட", கதிராக சந்தானம் மனோகரை துவைக்கிறார்.

9 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

போட்டாச்சு ஒரு ஸ்மைலி....

இவன் said...

கலக்கலுங்கண்ணோவ்

Thamiz Priyan said...

:)))))))))))

Selva Kumar said...

//"ஏன் டா.. நெத்தில சொட்டையும், மொகத்துல தாடியும் வச்சிட்டு, பாதி கெழவனா வந்து நிக்கிற உன்னப் பாத்தாலே தெரியல... நீ என்னோட பெரியவந்தான்னு... அதுல என்ன டா நொண்ணன் டா"
//

பின்னீட்டீங்க ஜி...
:-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சங்கத்துல இப்ப போடுறதுக்கு எதுவுமே தோன மாட்டேங்குதுங்றதுனால.... ஹி...ஹி..//

இப்படி எல்லாம் டிஸ்கி போட்டு எஸ்ஸாக முடியாதுங்கண்ணா! அட்லாஸ் மாசத்துல வாரத்துல நாளுக்கு ஒன்னா எட்டுப் பதிவு போடனும்! :-)

thamizhparavai said...

மனோகருக்கு இன்னும் கொஞ்சம் அதிக வசனம் குடுத்திருக்கலாம்.. மத்தபடி ஓகே

தமிழ் said...

சூப்பருங்கோ! :-)

//கதிராக சந்தானம் மனோகரை துவைக்கிறார்//

ஜுனூன் தமிழ் கூட சூப்பருங்கோ! :-)

கப்பி | Kappi said...

:))

மங்களூர் சிவா said...

கலக்கல்!