Thursday, September 11, 2008

நலம் நலமறிய ஆவல்...

காதல் கோட்டை படத்தில் ஒரு அருமையான பாடல் 'நலம் நலமறிய ஆவல்...'. இது காதலர்கள் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி பாடறது.

அதே அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு அறுபது நாள் ஆனப்பிறகு (என்ன வெட்டி?... முப்பது நாள் போதுமா...) பாடினா எப்படி இருக்கும்றதுதான் இந்த கற்பனைப் பாடல்.

இது ஒரு ஜாலியான கற்பனைதான். அந்த பாட்டை கொலை செய்யும் முயற்சி இல்லை. அதனாலே, பின்வர்ற பாட்டை அதே மெட்டுலெ பாடி, எப்படி இருக்குன்னு சொல்லுங்க...

நம்ம ஹீரோ தனியா வெளிநாட்டுக்கு வந்துடறார். ஹீரோயின் இந்தியாவிலே....

இன்னொரு முக்கியமான விஷயம். ஒரிஜினல் பாட்டுலே - கேள்விகள் ஹீரோ கேக்கறமாதிரியும், பதில்கள் ஹீரோயின் சொல்றாமாதிரியும் இருக்கும். இங்கே அது அப்படியே உல்டா.

இப்போ பாட்டு....

நலம்.. நலமறிய ஆவல்... உன் நலம் நலமறிய ஆஆவல்...

நான்இங்கு சுகமே.... நீ அங்கு சுகமா?... ( நான்)

தீண்டவரும் காற்றினையே இங்கனுப்புங்க...... வேர்க்கிறதே...
ஏற்கனவே சம்மர் இங்கே... வெயில் வேறே மண்டையை பொளக்கிறதே...

கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிவெக்கட்டா?
கப்பினில் போஸ்ட்மேனும் மயங்கிடுவாரே...

இரவினில் கனவுகள் தினம் தொல்லையா...
மப்பினில் நினைவில்லை கனவுகளே...ஏஏஏ......... ( நலம்)


கோயிலிலே நான் தொழுதேன்... கோவைக்கு நீங்க திரும்பிடவே...
கோடி முறை நான் தொழுதேன்... Contract Renew ஆகிடவே......

என் முகம் நீங்க பார்க்க கடிதமேதானா....
ஊர்லே வெச்சி பார்த்ததே... பயம் போகலியே....

நிழற்படம் அனுப்பட்டா, என் உயிரே...ஏ..?
திருஷ்டி பொம்மை இருக்குது... என்கிட்டேயே..... ( நலம்)

--------

இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடாமே தப்பிக்கறவங்கல்லாம், மேலே சொன்ன கருத்தை வழிமொழியறாங்கன்னு நான் தெரிஞ்சிப்பேன். ரொம்ப ரொம்ப நன்றி...