Thursday, March 1, 2007

BE CAREFUL!!!

வானுச வையோரே வயசுல பெரியோரே வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தனும். மக்கள்ஸ் எல்லாரும் நலமா. இந்த அப்பாவி அப்ரண்டீஸை அட்லாஸ் ஆக்கிப் பாத்துப்புடனும்னு சங்கத்து சிங்கங்கள் முடிவெடுத்துட்டாங்க. எப்ப, யார் சிக்குவாங்கன்னு ரெடியா ஆப்பை கைல வச்சுகிட்டு ஸ்பேர் ஆப்பை பேண்ட் பாக்கெட்ல போட்டுட்டு திரியறவங்க இப்ப வகையா ஒருத்தன் சிக்கினா விடுவாய்ங்களா. வகைதொகை இல்லாம வரிஞ்சு கட்டப்போறாய்ங்க. இதுக்கெல்லாம் அசரவய்ங்களா நாம? 'நான் ஒரு முறை ஆப்பு வாங்கிட்டா அடுத்த ஆப்பை நானே மதிக்க மாட்டேன்'ன்னு வலியை வெளியக் காட்டாம ரியாக்ஷனை கண்ட்ரோல் பண்ணி சிரிச்சுட்டே இருக்கறதுதான் தலகிட்ட நாம எடுத்த ட்ரெயினிங்குக்கு மதிப்பு. அதே மாதிரி 'நான் ஒரு முறை மொக்கை போடறதுன்னு முடிவு பண்ணிட்டா என் மொக்கையை நானே தாங்க மாட்டேன்'. அதனால Be Careful :))

நம்ம தல கிட்ட எடுத்த ட்ரெயினிங்ல முக்கியமான எபிசோட் ஓசி காஜி அடிக்கறது. ஓசில ஆப்பே வந்தாலும் அதுல சீரியல் செட் அலங்காரம் போட்டு அல்டாப்பா உக்கார சொல்லிக்கொடுத்திருக்காரு தல. காலைல பல் துலக்கறதுல இருந்து ராத்திரி இழுத்துப்போத்திக்க பெட்சீட்டு வரைக்கும் இப்படி ஓசியிலயே ஓட்டறவய்ங்க பல பேர் இருக்காங்க.

இந்த மாதிரி ஆளுங்க கிட்ட எனக்கு ரொம்ப புடிச்சதே அவங்க கேட்கற விதம்தான், பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கற மாதிரி. நம்ம ப்ரெண்டு ஒருத்தர் இருக்காரு. எதையுமே அவருக்கு வேணும்னு கேட்கமாட்டாரு. "பாஸு, அந்த கடைல தேங்கா போளி நல்லாயிருக்கும் சாப்பிட்டிருக்கீங்களா"ன்னு தான் ஆரம்பிப்பார். இதுக்கப்புறம் நாம என்ன சொன்னாலும் எடுபடாது. நம்மள கையப்புடிச்சு கடைக்குக் கூட்டிட்டு போய் ஒரு போளியை வாங்கி அவர் சாப்பிட்டுட்டு கூட்டிட்டு வந்த கடனுக்கு நம்ம வாயில ஒரு போளியைத் திணிச்சு நம்ம பாக்கெட்ல இருந்து பணத்தை எடுத்து அவரே செட்டில் பண்ணிடுவாரு. நாம ஒன்னுமே செய்ய வேணாம். செய்யவும் முடியாது. அவர் அம்புட்டு திறமைசாலி.

அவரே காலேஜ் படிக்கற காலத்துல இன்னொரு காமெடி பண்ணியிருக்காரு. அப்பல்லாம் கைல அஞ்சு பத்து தான் இருக்கும். மாச மொத வாரத்துல வீட்டுக்கு போன் பண்ணாத்தான் பணம் வரும். அதுக்கப்புறம் ஒரு வாரத்துல போன் பண்ணவும் காசு இருக்காது. கடன் வாங்கி போன் பண்ணாலும் பணம் வராது. அப்படியான நேரத்துல நைட் ஸ்டடி போடறோம்னு நான், நம்ம ஓசி காஜி, அப்புறம் என்னை மாதிரியே இன்னொரு அப்பிராணி மூனு பேரும் ஹாஸ்டல் ரூம்ல உட்கார்ந்துகிட்டு பட்டறையைப் போட்டுட்டிருந்தோம். பட்டறைனா தெரியும்ல...அதாம்பா டாப்பு.

திடீர்னு நம்ம பாசுக்கு டீ குடிக்கற ஆசை வந்துடுச்சு. அவர் என்னைக்கு பாக்கெட்ல பணம் வச்சிருக்காரு? "பாசு, தூக்கம் வர மாதிரி இருக்கு. அக்கா கடைக்கு போய் டீ குடிச்சுட்டு வரலாமா?"ன்னு பேஸ்மெண்ட் போட ஆரம்பிச்சார். சரி ஒரு டீ அடிச்சுட்டு வரலாம்னு கெளம்பியாச்சு. மூனு டீ ஆறு ரூபாய்ன்னு கணக்கு பண்ணி என்கிட்ட இருந்த நாலு ரூபாய்கூட பக்கத்து ரூம் பையன்ட்ட ரெண்டு ரூபா கடன் வாங்கிட்டு போனோம்.

கடைக்குப் போனதும் நம்ம பாசு "பாஸு, நான் டீ குடிக்க மாட்டேன். பால் தான் குடிப்பேன்"ன்னாரு. "இல்ல பாசு, ஆறு ரூபா தான் இருக்கு.மூனு டீ தான் வரும். பால் மூனு ரூபா. பத்தாது"ன்னோம்.

உடனே பாஸு கடைக்காரர் பக்கம் திரும்பி ஆர்டர் கொடுத்தாரு பாருங்க. "ஒரு பால். ஒரு டீ ஒன் பை டூ". அவருக்கு பாலாம். காசு குடுக்கற எங்களுக்கு ஒன் பை டூ டீயாம். டேய் பாவி ஓசில குடிக்கற எகத்தாளத்தைப் பாருன்னு அவனை மொறச்சா ரியாக்ஷனே காட்டாம இருக்கான். அதுமட்டுமில்ல மிச்சமிருக்கற ஒரு ரூபாய்க்கு மசால் வடை வாங்கி பாதியை அவன் எடுத்துகிட்டு மீதி பாதியை எங்க ரெண்டு பேருக்கும் தூக்கிப்போட்டான். என்னத்த சொல்றது. நாங்களும் அரை டம்ளர் டீயாவது குடிக்கவிட்டானேன்னு வந்துட்டோம்.

இதுமாதிரி அடுத்தவங்க மிளகா அரைக்கறதுக்காகவே அண்டா சைஸுக்கு மண்டை வச்சிருக்கவய்ங்க நாங்க. பார்த்து சூதானமா அளவோடு ஆப்படிச்சு வளமோடு வாழுங்கப்பு.

தில்லுமுல்லு படம் பார்த்திருக்கீகளா? அதுல தேங்காய் சீனிவாசன் அப்பரண்டீசுகளுக்கு இண்டர்வ்யூ வச்சு நொங்கெடுப்பாரு. அப்ப சுப்பிரமணிய பாரதின்னு ஒரு அப்பரண்டீசு வருவாரு. அந்த டயலாக் ஞாபகம் இருக்கா?

"ல-னாவும் வராது!! ள-னாவும் வராது! ழ-னாவும் வராது!! பேரு மட்டும் சுப்பிரமணிய பாரதி. நீர் நாட்டுக்கும் அவருக்கும் பெரும் துரோகம் செய்யறீர்ய்யா"ம்பார் தேங்காய்.

அதுக்கு அசராத அப்பரண்டீசு "ஸார்ட் நேம் சுப்பி சார்"ன்னு இளிக்கும்.

"சுப்பியாவது கப்பியாவது கெட்டவுட்"ன்னு சீறுவார் தேங்காய்.

இதுமாதிரி எதுவும் வராம கப்பித்தனமா காமெடி பண்ணிட்டிருந்தவனை அலங்காரம் பண்ணி அட்லாஸ் ஆக்கிவிட்டிருக்கீங்க. உங்க வாழ்த்துக்களோட ஆட்டத்தை ஆரம்பிக்கறேன். தொடர்ந்து ஆதரவு தாங்க :)

BE CAREFUL! (நான் எனக்கு சொன்னேன்)