இன்று காலை வரு.வா.சங்கம் தலைமை நிலையத்துக்கு வந்த கடிதங்களைப் பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கடிதம் மற்ற கடிதங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தது.
உடைந்த இதயம் வடிவில் இருந்த அந்தக் கடிதத்தை பாண்டியும் நானும் பார்த்து திடுக்கிட்டோம் காரணம்... அந்தக் கடித்தின் அனுப்புனர் பெயர்....எங்கள் ஒன்னே முக்கால் வயதில் இருந்து எங்களின் ஓரேத் தானை தலைவனாக நாங்கள் முழு மனதோடு ஏற்று கொண்ட எங்கள் 'தல' பாசமிகு அண்ணன் கைப்புவின் உயிருக்குச் சொந்தக் காரியாகிய அன்பு அன்றில் பேர்ட் மற்றும எங்கள் மரியாதைக்கும் பாசத்திற்குமுரிய அண்ணியாம்... கைப்பொண்ணு...
அந்தப் பெயர் கோழிக் கிறுக்கலாய் கவ்ரின் பின்புறம் இருந்தது .
எங்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் கட்டிக் கொண்டது.. அவ்வ்வ்வ்வ்வ் என்ற சங்கத்தின் நாத ஒலிக் கூட எழுப்பமுடியாமல் திக்கி திணறி விக்கி உதறி நின்றோம் நாங்கள்....
கடித்ததின் முதல் வரியிலேயே ஒரு பேரல் காதல் வழிந்தது....
அந்த முதல் வரி என்னன்னா...
இந்த பாரசீக பேரட் மனசுல்ல வந்து கொய்யாச் செடி நட்டு வச்ச என் மம்முதக் கொய்யாலே.. என் காதல் அய்யாலே....அதுக்கு மேலப் படிக்க முடியாம நாங்க அப்படியே அழுக ஆரம்பிச்சிட்டோம்.
கடிதத்தின் ரிவர்ஸ்ல்ல விலாசம் தேடுனோம்... அதுல்ல எதோ அமெரிக்கா அட்ரஸ் இருந்துச்சு....(புத்ரகம் வரு.வா.ச கிளைக்கு கடித்தின் நகல் அனுப்பப்ப்ட்டுள்ளது.. விவரங்கள் தனிப் பதிவில்)
அதுக்கு அடுத்த வரி எங்களைப் பதற வைத்தது...
அது...
மேக்னட் கலர்ல்ல வந்து பிஷ் நெட் போட்டு என்னைக் கவர் பண்ண களவாணி மாமனுக்கு இந்த க்யூட் கைப்பொண்ணு எழுதும் கடைசி மடல்.....
பாண்டி கூட்டிட்டு வந்தப் பிரெஞ்சுப் பொண்ணு அது பிரெஞ்சு இல்லன்னு சொல்லிருச்சு... கடித்திலே இதுக்குப் பொறவு வர்ற செயதி எல்லாம் தலை கீழா தமிழ்ல்ல தான் எழுதி இருக்கு இந்தா மொத்தம் கடிதமும் அதன் விவரமும்...
என் ஆச சிரிப்பு எம்.சீ.ஆரே.. உம்ம மேல கொண்ட லவ்க்கு எப்படி நான் விளக்கம் கொடுப்பேன்...?
மொதமொதல்ல வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் பக்கம் என்னைப் பாத்ததும் என்னைய வச்ச கண்ணு வாங்காம சைட் அடிச்சுகிட்டே நின்னிங்க...அப்போ உங்களைப் பாத்துப்புட்ட உங்க அய்யாகிட்ட, அம்புட்டு பயலும் வேடிக்கைப் பாக்க டவுசர் கிழிய அடிய வாங்கிட்டும் கொஞசம் கூட அசராம என்னியப் பாத்து ஒரு சிரிப்பு சிரிச்சியளே அதச் சொல்லவா?
அதுக்கு அப்புறம் எங்கப்பார் இளவ்ட்டக் கல்ல தூக்குனாத் தான் உனக்கு எம்பொண்ணை உனக்குக் கொடுப்பேன்ன்னு சொன்னத்துக்காக இளவ்ட்டக் கல்லைத் தூக்கப் போய் மூச்சு திணறி முக்கி மூணு மாசம் ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியிலே கிடந்தியளே அந்த வீரத்தைச் சொல்லவா?
ஆத்தூர்ல்ல அச்சு முறுக்கும்... கம்பத்துல்ல கடலை உருண்டையும்... பெரிய குளத்துல்ல பெப்பர் மின்ட்டும் வாங்கி கொடுத்த என்
வில்லேஜ் வீராண்டியில்ல நீங்க....
தேனி டவுண்ல்ல வசந்து தியேட்டர்ல்ல இன்ட்ர்வெல் விடும் போது தேன் முட்டாய் வாங்கப் போன நீங்க... அது இல்லாம திரும்பி வர... நான் கண் கலங்க.... அங்கிட்டு இருந்த தேன் கூட்டுல்லயே கைய விட்டு தேனீகிட்ட கொட்டு வாங்கியும் கம்பீரமாக் கதறி பெரும் கலவரமே செஞ்ச காதல் அரசா... என் கனவு புருசா...
என் அழகு ராசா மேல எம்புட்டு பேருக்கு கண்ணு....உங்க அழகு எனக்கு மட்டும் தான்ன்னு உங்க ஆத்தாக் கிடாரி மேல சத்தியம் ப்ண்ணியளே...
ம்ம்ம் இம்புட்டு வீரம்.. காதல்... பாசம்.. இது எல்லாம் எந்தப் புள்ளக்குக் கிடைக்கும்
டார்லிங்!!!! ராசா அழகு ராசா ஐ லவ்ஸ் யூ....ஆனா அந்த சரளாக்கா அன்னிக்கு உங்களைப் பார்த்து ஆயிரம் இருந்தாலும் ஆம்பிளைன்னா மீசை வேணும்டான்னு சொன்னதேக் கேட்டு என் சின்ன இதயம் சிதறிப் போச்சு.
கரபுர கரடி லேகியமெல்லாம் தடவிப் பார்த்தும்.. ஏன் மடக் மடக்குன்னு குடிச்சுப் பார்த்தும் எம் பொம்முக்குட்டி சிங்கத்துக்கு மீசையும் தாடியும் வளரவேயில்லையே.
இந்த ஏக்கத்துல்லயே என் வெயிட்டும் குறைஞ்சது.. என் கலரும் போயிகிட்டு இருந்துச்சு...
ஆச ராசா மீசையிலே இந்த கருப்பு ரோசா முகம் புதைச்சு லவ்ஸ் பண்ணனும்ங்கற கனவெல்லாம் கலைஞ்சுப் போயிட்டே இருந்தது...
என் மம்முத ராசாவும் என் மனக் கவலையைப் போக்க ஐடெக்ஸ் பென்சில் வச்சு வித்விதமா மீசை வரைஞ்சிட்டு வந்து செல்லம் அழுவாதாடா கண்ணுன்னு ஆறுதல் சொல்லுவீங்க.. அது என் மனசை எவ்வளவு வலிக்க வச்சதுத் தெரியுமா?
பென்சில் மீசை முகம் கழுவும் போது அழிஞ்சுப் போயிரும்ன்னு எனக்காக மூணு மாசம் முகம் கழுவாம என் ராசா கருத்து வேறப் போயிட்டீங்க... என் மவராசா காதலைப் போல வருமா?
அப்புறம் முகம் கழுவல்லன்னா நாறிப் போயிரும்ன்னு எடுத்துச் சொல்லி நீங்களும் முகம் கழுவிட்டு என் ஆசைக்காக ஒட்டு மீசை வச்சுட்டு நிப்பீங்க...
அந்த ஒட்டு மீசையை அந்த எடுப்பட்ட பயல்வ பார்த்தீபனும் கட்டத்துரையும் ஊதுவத்தி வச்சு நீங்க உறங்கும் போது சுட்டு சுட்டு விளையாடுவாய்ங்க... அதைக் கூட எம்மேல இருக்க அளவுக்கதிமான பியார் காரணமாப் பொறுத்துகிட்டு புன்னகைப்பீங்களே...
அய்யா எருமைக்கெல்லாம் பெருமை, கருமை பொறுமைன்னு புத்தி சொன்னவரே...
என்னாலேத் தாங்க முடியல்ல நீங்க மீசை இல்லாம தனியாப் போய் கண்ட சரக்க அடிச்சிட்டு கண்டமேனிக்கு புலமபறதை..
அதுன்னாலே நான் ஒரு முடிவு பண்ணுனேன்... உங்களுக்கு மீசை வளர எம்புட்டு செலவு ஆனாலும் பரவாயில்லன்னு...
ஆராய்ச்சிக்கு அஞ்சு கண்டம் சுத்தி வந்தேன்... அன்டார்டிக்காவுக்கு கூடப் போயிட்டு வந்தேன்...
என் முயற்சிக்கு நல்ல பலன் வந்துச்சு... மீசை முளைக்கிற மூலிகையை புதரகத்துல்ல ஒரு புதருக்குப் பின்னாலேக் கண்டுபிடிச்சேன்...
ஆனா..எப்படி சொல்லுவேன்...
இந்தக் கட்டத்துரையும் அவன் குரூப்பும் நான் கண்டுபிடிச்ச மூலிகையைப் புடுங்கி என் முகத்துல்ல மூணு வாரம் தேய்ச்சு விட்டுட்டாங்க...
அதுனால்ல...
அய்யோ இனி நான் உங்க முகத்துல்ல எப்படி விழிப்பேன்...
என் அழகு ராசா.. வீரமாண்டி ...அழகனுக்கெல்லாம் அழ்கன்ன்னு அசலூர் சந்தையில்ல பேர் எடுத்த மம்முத சிங்கத்து முகத்துல்ல நான் எப்படி முழிப்பேன்... அய்யோ
என்னிய சிரிக்கச் சொல்லி போட்டாவெல்லாம் புடிச்சாயங்க...
நான் என் பாட்டி ஊர் கிழக்காப்பிரிக்காவுக்குப் போறேன்... இனிமே நான் உன்னியப் பாக்க திரும்பி வரவேமாட்டேன்...
எனக்காக ஒண்ணு செய்வீயா மாமா..
அந்தக் கட்டத்துரை குரூப் கிட்டே தான் உனக்காக ஆசயாத் தயாரிச்ச மூலிகைத் தைலம் இருக்கு அதை எப்படியாவது நீ அவங்க கிட்ட இருந்து கைப்பற்றி மூணுவாரம் தேச்சு மீசை வளத்துக்கோ மாமா.. அப்போ நீ என் மேல வச்சுருக்க காதல் உண்மையானதுன்னு இந்த ஊருக்கே தெரியும்...லவ் அன்ட் லவ் ஒன்லி
உன் பாச ஜிலேபி கைப்பொண்ணு:(
லெட்டர் கூட வந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு....

அந்த புகைப்படத்துக்குப் பின்னாடி இருந்த விஷயம்
மாமா இன்னொரு விஷ்யம் அந்தக் கும்பல் கூட ஒரு பொண்ணும் இருந்துச்சு... அந்தப் பொண்ணு கைப்பொண்ணைக் கொல்லணும்.. அப்படின்னு சவுண்ட் வேற கொடுத்துச்சு.. நான் பயந்துப் போயிட்டேன்.. அந்தக் குரல் நம்ம சங்கத்துக் கூட்டத்துல்ல கேட்டுருக்கேன்...ஆனா யாருன்னு சொல்ல பயமா இருக்கு....பாத்து மாமா
மேலும் விவரங்களுக்கு காத்திருங்கள்...