Thursday, August 23, 2007

உலகின் மிகச்சிறந்த பதிவர் தேர்வு - அவர் ஒரு இந்தியர்

உலகின் மிகச்சிறந்த பதிவர் போட்டியில், இந்தியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டுநலன் மற்றும் சுகாதாரம் பற்றி அவர் எழுதிய பதிவுகளை கோடிக்கணக்காணோர் படித்து மறுமொழிந்துள்ளனர். சிறந்த எழுத்தாளருக்கான பதக்கமும் அரசாங்கம் அவருக்கு அளித்து கவுரவிக்க உள்ளது. வாழ்த்துக்கள் சிபி

சே, தூக்கம் கலைஞ்சு கனவும் கலைஞ்சுருச்சு. எல்லாமே கனவுதானா?

19 comments:

  1. ஹெ ஹெ ஹெஹ்ஹெஹ்ஹே!

    சிபியார் பாடுகிறார்

    கனவே கலையாதே
    கையேந்தியே நான் கேட்கிறேன்
    நூறு பின்னூட்டம்.

    ReplyDelete
  2. //கையேந்தியே நான் கேட்கிறேன்
    நூறு பின்னூட்டம்.
    //

    ஜிரா
    இளா சொன்னதைச் சரியாப் பாருங்க!
    --கோடிக்கணக்காணோர் படித்து மறுமொழிந்துள்ளனர்--
    ஆகக் கூடிக்,கோடிப் பின்னூட்டம!!! :-)

    நாம தயார் தான்! ப்ளாக்கர் தாங்குமா?
    காலையில் இருந்தே வேற ப்ளாக்கர் down!

    ReplyDelete
  3. //உலகின் மிகச்சிறந்த பதிவர்// வழிமொழிகிறேன்.

    :))

    ReplyDelete
  4. கனவு மெய்பட வேண்டும் !

    சிபி எனக்கு நண்பர் என்று சொல்லி பெருமிதம் அடைவேன்.

    :)

    ReplyDelete
  5. இளா ,

    நீங்க கண்ட கனவை முழுசா சொல்லாமா பாதிய மறைத்துவிட்டீர்கள் ,சரியா யோசித்து பாருங்க,, அதைக்கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்க,
    இப்படி தான் கனவு வந்து இருக்கும்,

    "உலகின் மிகச்சிறந்த பதிவர் போட்டியில், இந்தியர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாட்டுநலன் மற்றும் சுகாதாரம் பற்றி அவர் எழுதிய பதிவுகள் கோடிக்கணக்காணோர் படித்து மறுமொழிந்துள்ளனர். சிறந்த எழுத்தாளருக்கான பதக்கமும் அரசாங்கம் அவருக்கு அளித்து கவுரவிக்க உள்ளது."அப்பதக்கத்தை சென்ற ஆண்டின் சிறந்த பதிவராக தேர்ந்த்தெடுக்கப்பட்ட வவ்வால் வழங்குவார்கள்", வாழ்த்துக்கள் சிபி"

    கனவிலும் துரோகம் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு இப்படி துரோகம் செய்திட்டிங்களே!

    ReplyDelete
  6. வவ்வாலு ஐயா, நாம் ரெண்டு பேரு நிறைய இடத்துல மோதிக்கிறோம்ம், அட கருத்துலதான். உங்க பேரை போடாத்ததுக்கு காரணம் இருக்கு. இந்தப் பதிவு தப்பும் இல்லே, பொய்யும் இல்லே, மொக்கையும் இல்லே. இப்போ கண்டுபுடிங்க பார்ப்போம்.

    ReplyDelete
  7. தமிழ்த்தாயே! உனக்கே இந்த சோதனையா? தமிழ் கூட சரியா படிக்காம மொக்கன்னு பின்னூட்டம் போடுற அந்த அனானிகளை மன்னிச்சுரு!

    ReplyDelete
  8. கனவு மெய்ப்பட வேண்டும்.......

    ஒருநாள் மெய்ப்படும்.............

    ReplyDelete
  9. நண்பர்களே,

    இந்த பதிவில் வரும் இடுக்கைக்கு முன் வ.வா.ச என்று முன் அடையாளமிட்டு வந்தால் நன்றாக இருக்கும்.. Ha Ha Ha..

    உள்ளே வந்து ஏமாந்து போகிறேன்.. பல தடவை..Ha Ha Ha..

    Please...!

    நன்றி!

    ReplyDelete
  10. வவாச இடுக்கைகளை தொடந்து படிப்பவன்.. ஆனால் இது இளா ஏதோ செய்தி சொல்லியிருக்கிறார் என நினைத்து உள்ளே வந்து ஏமாந்தேன்..

    போன இடுக்கையில் கூட ரவிசங்கர் ஏதோ வித்தியாசமான நிகழ்வை பகிர்கிறார் என நினைத்தேன்..

    மன்னிக்க.. தவறு இருந்தால்..

    வவாச என இருந்தால், உள்ளே வரும்போதே மகிழ்வுடன் படிக்க ஏதுவாக இருக்கும்..


    தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில் கேட்கிறேன்..

    அலோசியுங்கள்

    நன்றி

    ReplyDelete
  11. Clue-1: நாட்டுநலன் மற்றும் சுகாதாரம் பற்றி அவர் எழுதிய பதிவுகள் கோடிக்கணக்காணோர் படித்து மறுமொழிந்துள்ளனர்.

    ReplyDelete
  12. சிவபாலன் உங்க கருத்தை ஏத்துக்கிறோம். ஆனால் இந்தப்பதிவுல ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரு விஷயம் புதைஞ்சு கிடக்கு. ஒருத்தர் மட்டும் சரியா சொன்னதால அவர் பின்னூட்டம் வெளியிடப்படவில்லை. யோசனை பண்ணி பாருங்க. ஒரு வார்த்தை விளையாட்டுதான் இந்தப் பதிவே. முன்னமே பின்னூட்டத்துல ஒரு துப்பும் குடுத்து இருக்கேன். அவ்ளோ மொக்கை போடுற பதிவ எல்லாம் சங்கத்துல எதிர்பார்க்கவேணாங்க சிவா. இருந்தாலும் தலைப்பு மொக்கைதானே? அதுக்கு ஹிஹி. தலைப்பு அப்படி வெக்கலைன்னா பதிவுல அந்த துப்பு சுலபமா கிடைச்சுடும். வார்த்தை விளையாட்டுதான் இந்தப் பதிவு.

    ReplyDelete
  13. வார்த்தை விளையாட்டா..அட்ரா சக்கை!! அட்ரா சக்கை!! அட்ரா சக்கை!!

    ReplyDelete
  14. ஆஹா புரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு

    ReplyDelete
  15. வல்லி அப்படியெல்லாம் யாரும் இல்லீங்க. அது சும்மா திசை திருப்புற யுக்தி.

    //கோடிக்கணக்காணோர்//
    முடிஞ்சா கண்டுபுடிங்க. இந்தப் பதிவுல இருக்கிற உள்குத்து என்ன? அது ஏன் சிபிய சொல்லி இருக்கிறோம்

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)