ஆற்றோரம் நடைபயில அண்ணம் நீ எனை அழைக்க.
உன் பின்னழகை கண்டு மனம் செத்து பிழைக்க.
கரையோர தென்றலிலே உன் மல்லிகை வாசம்
மனம் போடத்துவங்கியது குரங்கென வேசம்
உன் இடையழகு கண்டு நான் சிதறி கிடக்க
உன் கொலுசொலியில் மனம் பதறி தவிக்க
நடப்பது என்னவென்றே அறியாமல் நான்
என்னை கேலிசெய்து போனது ஒரு மீன்
புள்ளிமானை கண்டு பதைபதைத்த புலியாக
உன் முன்னழகும் கண்டு நான் பலியாக
உன் வளைகரம் தீண்டி வாலிபம் உருக
காமத்தீ கண்களில் ஆழியென பெருக.
அய்யகோ அடுத்தென்ன என்ற வேளையில
காதல் சூடு தாங்காமல் காமனவன் மாரி பொழிய
நனைந்த உன் கோலம் கண்டு மனம் கசக்கி பிழிய.
நிமிடங்கள் கலைந்தது மெளனத்தில்
கண்கள் உரைந்தன மோகத்தில்.
என் சிருங்கார வித்தைகளை சிங்காரி உன்னிடம்
மன்மத கலைகளை கற்றிந்த பெண்ணிடம்.
அட்டவணையிட்டு ஆற்றிக்கொள்ள
அம்மம்மா என என்னவள் எனை ஏற்றுக்கொள்ள.
காளையடக்குதல் வீரமாம் இங்கே -
கன்னியடக்குதலும் வீரம் தானே

//காளையடக்குதல் வீரமாம் இங்கே -
ReplyDeleteகன்னியடக்குதலும் வீரம் தானே//
சபாஷ்! சூப்பர் லைன்ஸ்!
இளைய கவி என்கிற பெயரை நிரூபிக்கிறேய்யா!
ReplyDeleteதம்பி இது உன் ப்ளாக் இல்லை
ReplyDeleteவருத்தபடாத வாலிபர் சங்கம்
இங்கே காமெடி தான் பண்ணனும்
கவிதை பாடி ட்ராஜடி பண்ணக்கூடாது!
இதற்கு தண்டனையாக உடனடியாக ஒரு கலக்கல் காமெடி பதிவு போட வேண்டும்
ReplyDelete//தம்பி இது உன் ப்ளாக் இல்லை
ReplyDeleteவருத்தபடாத வாலிபர் சங்கம்
இங்கே காமெடி தான் பண்ணனும்
கவிதை பாடி ட்ராஜடி பண்ணக்கூடாது!//
யாருய்யா இது காமெடி இல்லைன்னு சொல்றது!
எனக்கொண்ணும் அப்படித் தோணலையே!
//யாருய்யா இது காமெடி இல்லைன்னு சொல்றது!//
ReplyDeleteஉங்க கஷ்டம் புரியுது அங்கிள்
/உங்க கஷ்டம் புரியுது அங்கிள்//
ReplyDeleteஇந்தக் கவிதை(!?)ல வரிக்கு வரி சுட்டிக்காட்டி கலாய்க்க முடியும் நம்மால்!
Namakkal Shibi said...
ReplyDelete/உங்க கஷ்டம் புரியுது அங்கிள்//
இந்தக் கவிதை(!?)ல வரிக்கு வரி சுட்டிக்காட்டி கலாய்க்க முடியும் நம்மால்!//
இளையகவி டவுசர உருவ முடியும்னு சொல்ரிங்க கரைக்ட்டா!!
//ஆற்றோரம் நடைபயில அண்ணம் நீ எனை அழைக்க.//
ReplyDeleteவாத்துபாட்டுக்கு குவா குவான்னு கத்தும்,
அது உன்னைய தான் கூப்பிட்டுச்சுன்னு எப்படி சொல்ற
//உன் பின்னழகை கண்டு மனம் செத்து பிழைக்க.//
ReplyDeleteவாத்துதோட பின்னாடியை பார்த்து செத்து போறிங்கரயேடா படுபாவி
//கரையோர தென்றலிலே உன் மல்லிகை வாசம்//
ReplyDeleteமோகினி நடமாட்டம் அதிகமோ!
//மனம் போடத்துவங்கியது குரங்கென வேசம்//
ReplyDeleteவேசம் எங்கய்யா போட்டுச்சு,
அது சும்மாவே குரங்கு மாதிரி தானே இருக்கு!
//உன் இடையழகு கண்டு நான் சிதறி கிடக்க//
ReplyDeleteஉருட்டு கட்டையில தங்கிச்சிகிட்ட வாங்கின அடி பத்தலையா?
//உன் கொலுசொலியில் மனம் பதறி தவிக்க//
ReplyDeleteநல்லா பாருடே அது உன் செல்போன் ரிங்டோனு,
கொலுசொலின்னு எவ காலையும் புடிச்சு சொறிஞ்சிராத
//நடப்பது என்னவென்றே அறியாமல் நான்//
ReplyDeleteபோதையில இருந்தியாக்கும்
//என்னை கேலிசெய்து போனது ஒரு மீன்//
ReplyDeleteகன்பார்ம்டா போதை தான்
//புள்ளிமானை கண்டு பதைபதைத்த புலியாக//
ReplyDeleteநீ தங்கச்சிகிட்ட தினமும் அடிவாங்குறத இப்படி ஒப்பன் ஸ்டேண்ட்மெண்ட் கொடுக்கனுமா?
//உன் முன்னழகும் கண்டு நான் பலியாக//
ReplyDeleteகண்ணாடி போடுடா டே!
இப்ப பார்த்தீங்களா வால்பையன்! எத்தினி காமெடி இருக்கு இந்தக் கவிதைக்குள்ளேன்னு!
ReplyDelete:))
//இளையகவி டவுசர உருவ முடியும்னு சொல்ரிங்க கரைக்ட்டா!!//
எக்ஸாக்ட்லி!
//காளையடக்குதல் வீரமாம் இங்கே
ReplyDeleteகன்னியடக்குதலும் வீரம் தானே//
சபாஷ்! சூப்பர் லைன்ஸ்!
ரொம்ப நன்றி சித்தப்பா
// வால்பையன் said...
ReplyDelete//புள்ளிமானை கண்டு பதைபதைத்த புலியாக//
நீ தங்கச்சிகிட்ட தினமும் அடிவாங்குறத இப்படி ஒப்பன் ஸ்டேண்ட்மெண்ட் கொடுக்கனுமா?//
மச்சான் நான் சரண்டர் மச்சான். ஆயிரம் தான் இருந்தாலும் நீ கம்பெனி ரகசியத்த வெளில சொல்லியிருக்க கூடாது மச்சான்
:))
ReplyDeleteஆஹா...
ReplyDeleteமார்க்கமான கவிதானய்யா நீர்...:)
//தமிழன்-கறுப்பி... said...
ReplyDeleteஆஹா...
மார்க்கமான கவிதானய்யா நீர்...:)//
மிகவும் நன்றி ஐயா
சொற்பிழை:
ReplyDeleteஅண்ணம் அல்ல அன்னம்
// SP.VR. SUBBIAH said...
ReplyDeleteசொற்பிழை:
அண்ணம் அல்ல அன்னம்
//
அறியா சிறுவன் செய்த சொற்பிழையை பொருத்தருள்க.
///
ReplyDeleteகாளையடக்குதல் வீரமாம் இங்கே -
கன்னியடக்குதலும் வீரம் தானே
///
புலவரே, உமது bottle, மன்னிக்கவும் உமது பாட்டில் குறை இருக்கிறது.
கன்னியடக்குதல் என்பதை விடவும் கன்னிமடக்குதல் என்று வந்திருக்க வேண்டும். ஆகவே, உமக்கு பரிசாக வழங்குகிற எம்.சி. ஃபுல் பாட்டிலில் ஒரு 90 அபராதம்....