Friday, July 27, 2007

இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை

சிபி இருக்காறே அவரு ஒரு கலாய்ச்சல் பார்ட்டி, எப்பவாவது ஒரு நல்ல பதிவு போடுவாரு, அதுவும் ஏதாவது ஒரு ஆடி அம்மாவாசையிலதான் நடக்கும். மத்த நாள்ல எல்லாம் "ஆல் மொக்கை போஸ்ட்ஸ்"தான். இதுல என்ன கொடுமைன்னா சிபிக்கு வெவ்வேற பேர்ல 10 பதிவுகள் இருக்கும்.

புதுசா யாராவது பேர் சொல்லாம பதிவுலகத்துக்கு வந்தா, சிங்கங்க எல்லாம் சேர்ந்த்து "அது சிபிதான்"னு கைப்புள்ள தலை மேல அடிச்சு, அடிச்சு சத்தியம் பண்ணுவோம். அவ்ளோ பதிவுகள் இருக்கும்.
"என்ன, டெய்லி ஒரு டொண்டி அவர்ஸ் தமிழ்மணம் பார்பேன்"னு சொல்லி எங்களுக்கு எல்லாம் பேதி புடுங்க வெச்சு இருக்காரு. அப்படியாப்பட்ட மனுஷன் எழுதுன ஒரு பதிவு பூங்காவுல வந்துருச்சு. ஹ்ம்ம் இந்த கொடுமைய என்ன சொல்றது.


இந்த சேதி கேட்டவுடனே பேதி வந்து, "உள்ளே" போன ராம் இன்னும் வெளியவே வரலே. கவுண்டர் மாதிரி வெளியே வந்துட்டு அட்டெண்டென்ஸ் குடுத்துட்டு போனாலும் கூட பரவாயில்லை.

இன்னைக்குதான் மொக்கை போஸ்ட் லாஸ்ட் டேட்Yaar(27-7-2007). அதான் மீண்டும் ஒரு மொக்கை போஸ்ட் போட்டு சொல்றோம், மறக்காம் எண்ட்ரீ குடுங்க.

சரி இருங்க, ராம் என்ன ஆனாருன்னு பார்ப்போம், ____ கதவைத் தட்டி "ராம் இருக்கீங்களா"

"ஆமாய்யா, இருக்கேன், இருந்துட்டே இருக்கேன். போய்த்தொலைங்கய்யா. இங்கே கூட ஃப்ரீயா "இருக்க" விடமாட்டீங்களா?"

நோ டிஸ்டர்ப் ப்ளீஸ் உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்

12 comments:

G.Ragavan said...

பிசி ள்கதுழ்வா தந்ர்மானம யடைனுனெ. கங்ருஇ லால்ந.

துளசி கோபால் said...

மொக்ஸ் கூடாதுன்னு யாரோ சொல்லிக்கிட்டு இருந்தாங்களே...............

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....பறந்து போயிட்டேன்:-)

முரளிகண்ணன் said...

மொக்கையை பற்றி ஒரு மொக்கை, மொக்கை பதிவெழுதி எல்லோரையும் மொக்கையாக்கியது

ALIF AHAMED said...

துபாய் பார்டிகள் ஒருபோதும் விட்டுகொடுக்காது பரிசு எங்களுக்குதான்


இல்லையெனில் தல ராமை கொளுத்துவோம்.. :)

Anonymous said...

Sibiya Kalaikurathunna Alva Sappidara maathiri Pola Irukku ?

ALIF AHAMED said...

புது மொக்கை போடகூட முடியாத மின்னலுக்கு பரிசு குடுக்க வேண்டும்



விவ் அக்கொண்ட் நம்பர் அனுப்பவும்

(இதை வெளியிட வேண்டாம்:)))

ILA (a) இளா said...

//(இதை வெளியிட வேண்டாம்:)))//
சரிங்க

வவ்வால் said...

இளா,

சிபி பதிவு பூங்காவில வரக்காரணமே நான் அதில் போட்ட பின்னுட்டம் தான் , என்னோட பின்னூட்டம் மட்டும் இல்லைனா அது 100 சதவீதம் மொக்கை தான்!:-))

நீங்க வேணா பாருங்க நான் பின்னூட்டம் போடுற பதிவு தான் பூங்காவில அதிகமா வந்து இருக்கும் , எல்லாப்பெருமையும் எனக்கே சொந்தமாக்கும்(நான் ரொம்ப தன்னடக்கமானவன் என்பதால் இதை வெளில சொல்லிக்கிறது இல்லை)

உங்க பதிவு எதையாவது இப்படி புரோமோட் செய்யனுமா செய்துடலாம்!(சர்வீஸ் சார்ஜ் தனி) :-))

கதிர் said...

கன்னா பின்னான்னு சிரிப்பு வருதுங்க இளா!

சிபி, நீங்க ரொம்ப அறிவாளியா இருக்கறது நிறைய பேருக்கு பிடிக்கல போலருக்கு. :)

Anonymous said...

/இதுல என்ன கொடுமைன்னா சிபிக்கு வெவ்வேற பேர்ல 10 பதிவுகள் இருக்கும்//

என்ன! வெறும் 10 தானா?

என்ன கொடுமை சார் இது?

எங்கள் சிபியை குறைத்து எடை போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சிபி கொலைவெறிப் படை said...
எங்கள் சிபியை குறைத்து எடை போட்ட இளா வை வன்மையாகக் கண்டிக்கிறோம்!//

அட இன்னாங்க...இதுக்காக சிபிய தூக்கிப் பாத்து எல்லாம் எடை போட முடியுங்களா? :-)
பாவங்க, எங்க இளா! அவரைப் போயி வன்மையாக் கண்டிக்கிறீங்களே!வேறு ஏதாச்சும் பண்ணுங்க! :-)

ஜொள்ளுப்பாண்டி said...

தளபதியின் யுத்த யுக்திகளையெல்லாம் இப்படி பப்ளிக்கா சொல்லீட்டீயலே இளா!!! :))))))))))

ராமு இன்னுமா இருக்கீங்க?? ;))))))